Powered by Blogger.

Wednesday, December 18, 2013

இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டமும் அரசின் சூழ்ச்சியும்.

இதன் பின்னணியில் குறுகியகால மற்றும் நீண்டகால பெரும் சதித் திட்டங்கள் இருக்கலாம். முழுமையான தகவல்கள் இன்னமும் ஊடகப்படுத்தப்படாத நிலையில் இன்று ஊகிக்க கூடிய சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர்வழங்கல் திட்டத்தை கொண்டுவந்தது தற்போதைய யாழ் அரச அதிபர் தலமையிலான குழு என்று அறியப்படுகிறது.

மட்டக்களப்பில் இருந்து ராஜபக்சவால் யாழிற்கு இடமாற்றம் பெற்ற கணேஸ் யாழ்மாவட்ட நிலமைகள் மற்றும்நிர்வாக செயற்பாடுகளில் பரீட்சையமாவதற்கு முன்னரே அவசர அவசரமாக இரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார்.

இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டத்திற்கு இருபதினாயிரம் மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கபட்டிருப்தாகவும் சொல்லப்படுகிறது.


இரணமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குளத்து நீரை கொண்டு செல்வதற்கும் அதற்கான வழங்கல் வடிகாலமைப்புகளை நிர்மாணிப்பதற்கும் இருக்க கூடிய பொறியியல் மற்றும் சட்டவாக்கல் செலவுகளுக்கு யாழ்ப்பாணத்திலேயே நிரந்தர மழைநீர் சேகரிப்பு திட்டங்களையும் தரவை உள்ளிட்ட நீர்தேங்கல் நிலங்களை புனரமைக்கவும் முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தில் நீர் சேகரிப்பு நிலங்களை இனம் கண்டு அதை புனரமைப்பதைவிடுத்து இரணைமடுவில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டும் என விடுக்கபட்டிருக்கும் யாழ் "அரசாங்க" அதிபரின் கோரிக்கைக்கு பின்னால் இராணுவ மற்றும் அரசியல் நலன்கள் இருப்பதை யாழ் மற்றும் கிளிநொச்சி மக்கள் நன்கறிவார்கள்.

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு நீர்வழங்கல் பொறிமுறைகளை அமைப்பதென்பது ஏராளமான நீர் நிலைகள் மற்றும் தனியார் காணிகள், வீதிகளை ஊடறுத்து செல்ல வேண்டும். இருக்க கூடிய சட்டப் பிரச்சினைகளை ஆழும் அரசு என்ற ரீதியில் அதிகாரப்போக்கில் வென்றாலும் கண்மூடித்தனமானக யாழ் மக்களிற்காக இருபதினாயிரிம் மில்லியனை முதலீடு செய்ய சிறிலங்கா அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மிக அவதானமாக அணுக வேண்டும்.

இருபதினாயிரம் மில்லியன் ரூபாய்களை இலாபத்துடன் சிறிலங்கா அரசு எப்படி மீளப் பெற திட்டமிட்டுருக்கிறது என்பதை புத்திஜீவிகள் ஆய்வு செய்ய வேண்டும். இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் சிறிலங்கா அரசு எப்படியான திட்டத்தை வைத்திருந்திருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டியது தமிழர்களுக்கு மிகப்பெரிய சவால்.

முதலீடு செய்த பணத்தை இலாபத்துடன் மீளப்பெறுவதற்கு தமிழர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படலாம் அல்லது சிங்களவர்கள் குடியேற்றப்படலாம்.

இரப்பர் போன்ற "பணப்பயிர்" விவசாயத்தை ஊக்குவித்தல் எனும்பெயரில் சிங்களவர்கள் குடியேற்றப்படலாம்.

இதனால் அரசாங்கத்தின் முதலீட்டு சிந்தனையும் அதன் எதிர்கால குறிக்கோளும் பற்றி ஆய்வு செய்ய வேண்டியது தமிழீழ பொருளியலாளர்களின் கட்டாயக் கடமையாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருக்க கூடிய பேராசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தர மழைநீர் சேகரிப்புத்திட்டங்கள் குறித்தும் அதனை எப்படி கட்டியெழுப்புவது குறித்தும் ஆய்வு செய்துபிரேரிக்க வேண்டும்.



இரணைமடு நீரை வெளியேற்ற வேண்டும் என்ற சிறிலங்கா யாழ் "அரச" அதிபரின் கோரிக்கையின் பின்னால் இருக்க கூடிய இராணுவ மற்றும் அரசியல் தேவைகள் குறித்து பார்ப்போம்.

சிறிலங்காவின் நீண்டகால இராணுவ மற்றும் அரசியல் திட்டம்:

இரணைமடு-யாழ்ப்பாண நீர்வழங்கல் திட்டம் நிறைவேற்றப்படுமானால் அதன் பிற்பாடு இரணைமடுவின் நீர்மட்ட அளவு குறித்து யாரும் பேசப்போவதில்லை. நீர்வழங்கல் திட்டம் சீரானதாக நடைபெறுகிறதா என்பதை மட்டுமே கண்காணிப்பார்கள்.  இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தபடுமானால் அதனால் தொடங்கப்படும் அத்தனை வர்த்தகங்களும் சரியானதாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதே முக்கிய நோக்கமாக கண்காணிக்கப்படும். இருபதினாயிரம் மில்லியனை எந்தவொரு வருமானமும் இன்றி வடக்கில் முதலீடு செய்ய அரசு ஆர்வமாக இருக்கப்போவதில்லை.

இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் ஆரம்பிக்கபட்டு,
ஒருவேளை இரணைமடுவின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நீர்போதுமானதாக இல்லை எனவே யாழ்ப்பாணத்திற்கு நீர் வழங்கலை நிறுத்தி வையுங்கள் என கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை எழலாம் அப்பிடியான ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் மிகப்பெரிய பிரதேசவாத பிரித்தாளும் நிலையை உருவாக்க முடியும் என சிறிலங்கா மற்றும் இந்திய அரசு திட்டம் தீட்டியிருப்பதாகவே தெரிகிறது.

தமிழர் பிரதேசங்களை பிரித்தாள வேண்டும் என்ற திட்டம் இந்திய அரசினால் திட்டமிடப்பட்ட ஒன்று என்பது மாவிலாற்று அணை மூடப்பட்டு போர் தொடங்கி வைக்கபட்டதில் இருந்து புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று.

ஏற்கனவே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் தமிழர் தாயகங்களை சாதுர்யமாக கூறுபோட்டிருக்கிறது இந்தியா. திருகோணமலை துறைகமுகம் உள்ளிட்ட பகுதி சம்பூர் மற்றும் மட்டக்களப்பின் சில பிரதேசங்களையும் இந்தியா அபிவிருத்தி எனும் பெயரில் தன்னகப்படுத்தி தமிழ் மக்களை வெளியேற்றியிருக்கிறது.

மக்களிடத்தில் இடைவெளியையும் ஒருவித பதட்டத்தையும் உருவாக்கி வைத்திருப்பதால் தமது ஊடுருவல்களை இலகுவாக செய்யலாம்என்பது இராணுவ உத்தியாகும்.

இரணைமடு ஏன் கருப்பொருளானது.

இரணைமடுவில் விடுதலைப்புலிகளால் "இலகு ரக" விமானங்களிற்கான இறங்குதளம் ஒன்று காணப்பட்டதும் அதை சிறிலங்கா அரசு புனரமைத்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதும் யாவரும் அறிந்த விடையம்தான்.

இன்று சிறிலங்கா அரசால் புனரமைக்கபட்டு பெரிய விமானங்களுக்கான தளமாகவும் அதாவது அதிவே இராணுவ விமானங்களுக்கான தளமாகவும் உருவாக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

அதிவேக விமானங்களுக்கான தளமாக அது மாற்றபடப்டிருந்தால் அது இரணைமடு குள அணைக்கட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும்.

இரணைமடு நீர்மட்டத்தை எப்போதும் குறைவாகவே வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அதிவேக விமானங்களின் தேவைகளுக்கு இறங்கு தளம் பாவிக்கப்படும் போது நிலத்தில் ஏற்படக்கூடிய அதிர்வானது பெரும் நீர் அழுத்தத்தினால் காணப்படும் அணைக்கட்டை உடைக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் நீர்மட்டத்தை வழமையை விட மிகக் குறைவாகவே இராணுவம் வைத்திருக்க விரும்பும்.


சிறிலங்கா அரசின் பெருமெடுப்பிலான முதலீட்டு சிந்தனையின் பின்னணியில் வடக்கைப்பொறுத்தவரை இராணுவ நலன்கள் இருக்காமல் இருக்க முடியாது.


இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் குறித்து மக்களிடத்திலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடையேயும் பேசப்படும் அழவிற்கு வடக்கில் இருக்க கூடிய அரச ஆதரவு கட்சிகளிடமிருந்தோ நேரடி அரச அமைப்புகளிடமிருந்தோ எந்த கருத்துக்களும் வெளிப்படாமல் இருக்கிறது.


அவதானித்துக் கொண்டே இருப்போம்.


ஆதி
19-12-13















Tuesday, December 10, 2013

தாய்லாந்து போராட்டம் சீனாவின் நேரடிப்பலப்பரீட்சையா!! #தெற்காசிய சமகால அரசியல்

தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் பின்னணியில் சீனா இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மத்தியகிழக்கில் மேற்குலகின் ஆதிக்கம் அல்லது கைப்பொம்மை ஆட்சிகள் உருவாக்கபட்டுவரும் நிலையில் தெற்காசியாவில் சீனா தனது பலத்தை பரிசோதிக்கும் களமாக தாய்லாந்து இருக்கலாம்.

தாய்லாந்து அரசியல் போராட்டத்தின் பின்னணியில் சீனா இருக்கிறது எனக் கூறப்படும் கருத்து உண்மையாயின் எதிர்காலத்தில் தெற்காசியாவில் பெரும் அரசியல் மாற்றங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே பர்மாவில் சீன - அமெரிக்க - இந்திய அரசியல் இழுபறிகளில் பலப்பரீட்சைகள் செல்வாக்கு செலுத்திவரும் நிலையில் தாய்லாந்தில் சீனாவின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்படுமாயின் அண்டைநாடான மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வெளிப்படையான சீன ஆதிக்கத்தை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் சிறிலங்காவை சீனா தனது கட்டுப்பாட்டில் அல்லது சீனாவிரும்பும் ஆட்சிமாற்றங்களை உருவாக்கும் வல்லமை பொருந்திய நாடாக மாற்றுவதற்கான சாதகங்கள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

இந்தியம் மற்றும் இந்தியத்தின் பிராந்திய ஆதிக்கம் ஏற்கனவே ஆட்டம் காணும்  நிலையில் இருப்பதால் இந்தியாவில் இருக்க கூடிய தனிப்பெரும் இனங்கள் தமது சுய விடுதலைகுறித்து சிந்திக்க வேண்டிய காலம் உருவாகி இருக்கிறது.

இந்தியம் என்ற மாயைக்குள் சிக்கி இருக்கும் பெரும் இனங்களுக்கு சுய விடுதலை குறித்து சிந்திப்பதற்கோ அல்லது போராடுவதற்கோ இன்றைய காலங்களில் துணிவும் செய்ற்பாட்டு பொறிமுறையும் இல்லாது இருப்பினும் கட்டாயம் இந்திய மாயையை உடைத்தெறிய வேண்டிய நிலையை காலம் விரைவில் உருவாக்கும் என்றே தெரிகிறது.


ஆதி
10-12-13

Monday, November 25, 2013

புரட்சிகர தமிழீழச் சனம் சிங்கள இராணுவத்துடன் செய்யும் உளவியல் போர் உணர மறுக்கும் உலகம்

உலக வரலாற்றில் போராடும் மக்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் பலவிதமான போரைச் செய்வார்கள். பாலியல் வன்முறைகள், கொடூரமான படுகொலைகள் மற்றும் போராடுபவர்களின் இலக்கு குறித்த சந்தேகத்தை எழுப்பி பரப்புவது  என ஆக்கிரமிப்பாளர்களின் போர் விரிவடைந்து செல்லும்.

இப்படிப்பட்ட இன்னல்களையும் சோர்வடையச் செய்யக்கூடிய உளவியல் போரையும் வென்ற இனம் விடுதலை பெற்றுவிடும் இதுதான் உலக நியதி.

இப்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்று நீட்சியில் தமிழீழ மக்களின் போராட்டம் வித்தியாசமாக உருவெடுத்திருக்கிறது.

30 வருடங்களிற்கு மேல் தங்களை பாதுகாத்து வழிநடத்தி எதிரியிடம் போரிடக் கற்றுக்கொடுத்த அமைப்பும் அந்த மக்களின் தலமையும் இல்லாத நிலையில் தமிழீழ மக்கள் மண்ணில் செய்து கொண்டிருக்கும் பெரும் உளவியல் போர் சிங்கள அரசை மட்டுமல்ல அதன் இயந்த்திரமாக இருக்கும் சிங்கள கொலைவெறி இராணுவத்தையும் அசைத்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

2009 இல் தமிழீழ அரசு தனது ஆயுதங்களை மௌனித்து சர்வதேச சதியினால் சரணடைந்த பிறகு, இந்திய சிவசங்கர் மேனன் உள்ளிட்ட கும்பலால் பிரேரிக்கப்பட்ட முட்கம்பி வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட பின்பு நடந்த மாவீர்தினங்களையும் சம்பவங்களையும் அவதானமாக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய நிலையிலும் அதை சர்வதேசத்திடம் முறையாக கொண்டு சென்று எமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய நிலையிலும் தமிழீழ மக்கள் இருக்கிறார்கள்.


2009 மாவீரர் தினம் - மெனிக்பாம் மற்றும் சில முட்கம்பி முகாம்களுக்குள் விளக்கு கொழுத்தியதால் மக்கள் மீது சிங்கள இராணுவம் அடாவடி

2010 மாவீர்ர தினம் - மட்டக்களப்பு நகர் மத்தியில் மாவீரர் ஈகச்சுடர் ஏற்றும் நேரம் மாவீரர் கானம் இசைக்கப்பட்டது. மற்றும் சில இடங்களில் மாவீரர் படங்கள் வைக்கப்பட்டது தீபம் ஏற்றப்பட்டது.

2011 மாவீரர் தினம் - கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாவீரர் நாளை முன்னிட்டு தாக்க வருவதாக நினைத்து கிளிநொச்சியில் சிறுவனை இராணுவம் சுட்டுக் கொன்றது. கிளிநொச்சியில் பல கோயில்களில் ஒலிபெருக்கிகள் இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

2012 மாவீர் தினம் - தமிழீழத்தில் எல்லா மாவட்டத்திலுமே மாவீரர் தின எழுச்சி பதாதைகள் மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டன. யாழ் மற்றும் கிழக்கு  பல்கலைக்கழகத்தில் வெளிப்படையாகவே தீபங்கள் ஏற்றப்பட்டன. கோயில்களில் பிரார்த்தனைகள் நடந்தன. கார்த்திகை தீப நாளை சாக்காக வைத்து கிறிஸ்தவ மத்தை பின்பற்றும் தமிழர்களும்  வீதிகளில் தீபம் ஏற்றினர். வீதிகளுக்கு இறங்கி தீபங்களை காலால் மித்தது சிங்கள இராணுவம். யாழ் பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2013 மாவீரர் தினம் - மாவீர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்ய சனம் துயிலுமில்ல வாசல்வரை சென்றது. மக்களின் சின்ன சின்ன அமைப்புகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டது. சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பு மாவீரர் நினைவு நாள் மற்றும் மாவீரர் நினைவிடங்கள் பற்றி பேசியே ஆகவேண்டிய கட்டாய நிலையை மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.


தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தமிழீழ மக்களின் தலமை களத்தில் இல்லாத நேரத்தில் தமிழீழ விடுதலை குறித்து மக்கள் இந்த அளவிற்கு சிங்களத்துடன் மோதுவதென்பது சாதாரண விடையமல்ல. வெறுமனே இந்த மாதத்தில் மட்டுமல்லாது காணாமல் போனோர் மற்றும் நிலப்பறிப்புக்கு எதிராக சனங்களின் மூர்க்கம் அதிகரித்து வருவது சிங்களத்திற்கு விளங்குவது போல் உலகத்திற்கு விளங்கவில்லையா அல்லது அதை சரியான முறையில் உலக அரங்கில் கொண்டு சேர்கவில்லையா என்பது குறித்து கவனமெடுப்பது அவசியமான ஒன்று.


ஆதி
25-11-13

Monday, November 18, 2013

இந்தியப் புற்று நோயால் செயலிழந்துவரும் தமிழினம்

இந்தியா என்பது புற்றுநோய்.

இந்தியப் புற்றுநோய் குறித்து 25 வருடங்களுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதுகுறித்து அதிக கவனம் செலுத்தாததால் இன்று தமிழினம் தனது இருப்பைத் தொலைத்து அழிவடையும் உச்சத்தை எட்டியிருக்கிறது.

மன்னர்கள் ஆட்சிக்காலத்திற்கு பின்னர் ஏராளமான வரலாற்று படிப்பினைகளையும் நமது மூதாதேயரின் வாழ்வு பற்றியதுமான ஏராளமான பொக்கிசங்கள் இருந்தும் அதை தூசுதட்டி தலைமுறை தலைமுறையாக சொல்லிக் கொடுப்பதைவிடுத்து சினிமா ரசிகர்களாகவும் கிரிக்கட் ரசிகர்களாகவும் மாற்றப்பட்டனர் தமிழர்கள்.

விதிவிலக்காக உரிமை மறுப்பை எதிர்த்து வீட்டுக்கு வீடு ஆயுதம் தூக்கி எதிரியை களத்தில் சந்தித்தது தமிழீழம். இருந்தாலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை மூடி மறைத்து எவ்வளவு விரைவாக தமிழகத்தை சல்லடைபோட்டு செயலிழக்க செய்ய முடியுமோ அவ்வளவிற்கு செயலிழக்க பண்ணிவிட்டு தமிழீழத்தை சூறையாடியிருக்கிறது இந்தியப் புற்று நோய்.

கல்வெட்டுக்களில் இருக்கும் தமிழ் மன்னர்களின் வீர வரலாறு தமிழீழ தாயமெங்கும் வியாபித்து நிற்கும் பொழுது திரைச்சீலைகளுக்கு பின்னால் கவர்ச்சி நடிகைகளின் நடனங்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழகம் இன்று தன்னை சுதாகரித்துக் கொள்ள முயற்சித்தாலும் இந்தியப் புற்று நோயால் முழுமையாக பீடிக்கப்பட்டு எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்வதென்று தெரியாமல் திணறுகிறது.

இந்த பூமிப்  பந்தில் எட்டுக் கோடிக்கு மேல் ஒரே மொழிபேசும் இனமாக, ஒரே இலக்கணம் கொண்ட சனமாக, ஒரே இலக்கியத்தை படிக்கும் மக்களாக இருந்தும் தனக்கென்று சொந்த நிலமும் அதற்கொரு கொடியும் தனியொரு படையும் கொண்ட அரசாக, தன்னைத்தானே ஆழும் இனமாக தமிழினம் இல்லாததற்கு காரணம் இந்தியப் புற்றுநோய்தான் என்றால் மிகையாகாது.

சாதிபேதங்கள் இன்றி, வரட்டுக் கௌரவங்கள் இன்றி, ஊழல் இன்றி இன விடுதலையை மட்டுமே இலட்சியமாக கொண்டு தங்களால் தனிப்பெரும் படையை கட்டியெழுப்பவோ அல்லது ஆழும் அந்திய சக்திகளுக்கு எதிராக போரிடவோ தெரியாத அல்லது முடியாத தமிழகம் ஆகக்குறைந்தது இந்திய வல்லூறுகளை தமது சொந்த நாட்டுக்குள் முடக்க தெரிந்திருந்தால் கூட இன்று "தமிழீழம்" என்ற தனிப்பெரும் தமிழர் நாடு மலர்ந்திருக்கும்.


சொல்வதற்கு கடினமானதென்றாலும் ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டும். தன்னைத்தானே வருத்தும் தியாக மனப்பாண்மை கொண்ட தமிழக வீரர்களால் எதிரியை திணறடிக்கவோ அல்லது எதிரியின் சூழ்ச்சியை புரிந்து அதற்கேற்போல் போராடவோ தெரியாது.


இன உணர்வுடன் தன் சொந்த மக்களை மட்டுமே நம்க கூடியதும் தன் சொந்த மக்களை வைத்து எந்தப்பெரும் அரசையும் ஆட்டம் காண வைக்க முடியும் என்ற நம்பிக்கை வைத்து ஒரே இலட்சிய கொள்கையுடன் களத்தில் இறங்கி மக்களை வழிநடத்தக் கூடிய தலமை தமிழகத்திற்கு அவசரமாக தேவைப்படுகிறது.

தமிழ் மன்னர்களின் வீர வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட வகையில் வரலாறுகள் அழிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

சொந்த நிலமும் தன்னைத்தானே ஆழும் ஆட்சியும் என்பது ஒரு இனத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு. தமிழீழத்தை சுவம்சம் செய்து பறித்து  சிங்களத்திடம் கொடுத்த இந்தியம் தமிழகத்தை நாசுக்காக கூறுபோட்டுவிட்டது.

இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தமக்காக போராட முடியாத அடிமை நிலமை ஏற்படுத்தியாகிவிட்டது. அடக்கு முறைக்களுக்கு எதிராக தொடர்ச்சப் போராட்டங்களை செய்யவும் சூழ்நிலைக்கேற்றவாறு அதன் வடிவத்தை மாற்றவும் முடியா நிலை உருவாக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.


தமிழகமே!!!!

இனிவரும் தமிழனத்தின் சந்ததிக்காகவேனும் உனக்கென்றொரு செங்கோல் ஆட்சியை உருவாக்கு. சாதிகளால் பிளவுண்டுகிடக்கும் முட்டாள்களே!!!! உங்கள் பெற்றோர்களையும் பெற்றோரின் பெற்றோர்களையும் திட்டமிட்டு சகதிக்குள் தள்ளியிருக்கிறான் எதிரி அதன் தொடரச்சியாக அந்த சகதிதான் உங்கள் வாழ்கை என்று உங்கள் தலைமுறையையும் அந்த சகதி நாற்றத்திற்குள் வைத்திருக்காதீர்கள்.

தனி இனமாக தமிழ் இனமாக இந்த ராஜ்ஜியத்தை ஆண்டது தான் தமிழினம். தமிழினமாக உருவெடுங்கள். தமிழனத்திற்கு எதிராக பேசுபவர்கள் முதல் செயற்படுபவர்களை உங்கள் மண்ணில் இருந்து விரட்டுங்கள். இறுக்கமாகவே இருங்கள். இறுக்கம் இனத்தை காக்கும்.


ஆதி
18-11-13

Thursday, November 7, 2013

"தோற்றுப் போகிறோம் போராட வா" என்று கூப்பிடுங்கள் #புலிகள் இல்லாத வெளி

இன்று முகப்புத்தகத்தில் நண்பர் பரணி அவர்கள் எழுதியிருந்த குறிப்பொன்றை பார்க்க கிடைத்தது.

" 2009 ற்கு பிறகு இதுவரை நடந்த எல்லாப்போராட்டங்களும் தோற்றுவிட்டதாக பேசுகிறார்கள் ஆனால் வன்னியில் இருந்த சனங்களையும் எராளமான போராளிகளையும் இந்த போராட்டங்கள் காப்பாற்றியது" என்ற பொருள் பட எழுதியிருந்தார்.

இதை முற்றிலும் மறுக்கிறேன். அதுபோக 2009 ற்கு பிறகு வெல்வதற்காக போராட்டங்களை சரிவர நாங்கள் நடாத்தவில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எனது அபிப்பிராயத்தை முன்வைக்கிறேன்.

விடுதலைப்புலிகள் போராட்டத்தை கட்டியெழுப்பி அதை பெரும் மரபுவழி இராணுவமாகவும் பல்துறை கட்டுமானங்களைக் கொண்ட அரசாகவும் நடாத்துவதற்கு ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் புலிகள் வகுத்த வியூகங்கள்தான் காரணம்.

தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் அதிகமான போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். வீரச்சாவடைந்தவர்களை விதைப்பதற்கு விதைகுழிகள் மாவீரர் துயிலுமில்லங்களில் வெட்டப்பட்டன. அதை வெட்டியவர்கள் பொதுசனங்களாக இருந்த இளைவர்கள்தான். இத்தனை போராளிகளை இழந்துவிட்டோம் என்ற செய்தி ஆழமாக பதியப்பட ஏராளமானவர்கள் வீரச்சாவடைந்தவர்களை இடங்களை நிரப்புவதற்காக போராளிகளாக மாறினார்கள்.

யாழ்ப்பாண குடாநாடு சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போது யாழ்குடாநாட்டில் ஏற்பட்டுவரும் தோல்வியை வன்னியில், மட்டக்களப்பில் மக்களிடம் பிரச்சாரப்படுத்தினார்கள். போராடவேண்டிய தேவையை சொன்னார்கள். அதன் தொடர்ச்சியாக புதிய அணிகள் இணைக்கப்பட்டு பயிற்சிக்கு செல்ல தயாராக இருந்த அணிகள் முல்லைத்தீவை கைப்பற்றின.

முல்லைத்தீவில் இருந்து இராணுவதளபாடங்கள் முதல் அந்த முகாமை இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்துவதற்கு மக்களிடமே விட்டார்கள்.

அதே போல்தான் ஜெயசிக்குறு ஆக்கிரமிப்புச் சமர் வன்னியை பிழந்து முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது சந்தித்துவரும் தோல்வியை மக்களிடம் சொன்னார்கள் புலிகள். தோல்வியில் இருந்து மீண்டெழுவதற்கு சனம் புலிகளுடனேயே நின்றது.
எல்லைப்படை, துணைப்படை, விழிப்புக்குழு, மாணவர் விழிப்புக்குழு, மாணவர் படை, என சனங்கள் எல்லா வழியிலும் போராடத்துணிந்தன.

போராளிகளுக்கு உலர் உணவு சேகரிப்பதில் இருந்து காயப்பட்டுவரும் போராளிகளை பராமரிப்பது வரைக்கும் சனங்கள்தான் நின்றார்கள்.

தமிழீழத்தில் புலிகளுடனையே இருந்த சனங்களுக்கு புலிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியை எதிர்மறையாக காட்டியது கிடையாது. "தோற்கிறோம் போராடவா" என்றுதான் அழைப்புவிடுத்திருக்கிறார்கள்.

புலம்பெயர் கட்டமைப்பு

புலம்பெயர்கட்டமைப்பை பொறுத்தவரை சனங்கள் போராட்டங்களை செய்திகளில் படிப்பவர்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.

2009 இல் இலட்சக்கணக்கில் வீதிக்கு இறங்கி போராடிய சனங்கள் எங்கே!! அவர்களை ஏன் இப்பொழுது போராட அழைக்க முடியவில்லை!!!

"தோற்றுப்போகிறோம் போராட வா" என்று வீட்டைத் தட்டுங்கள். படிக்கும் மாணவ மாணவிகளுடன் பேசுங்கள்.

இது நிரந்தர தோல்வியானால் எங்கள் சரித்திரம் ஈழத்தில் அழிந்துவிடும் என்ற பயங்கரமான உண்மையை சொல்லுங்கள்.

தோற்கிறோம் என்ற உண்மையை விளங்கி போராட வருபவன்தான் கடைசிவரை இலட்சியத்திற்காக போராடுவான்.

இரண்டாயிரம் பேர் போராடி தோற்றுப்போனால் தோற்றுவிட்டோமே என்ற இன உணர்வு மூவாயிரம் பேரை கூட்டி போராடத் தூண்டவேண்டும். அது தான் நிலைத்து நிற்க கூடியதும் இலக்குவரை செல்லக் கூடியதுமான போராட்டம்.



தமிழக கட்டமைப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரை இலட்சியத்திற்கா போராடக்கூடியவர்கள் அதிகம் இருக்கும் இடம். ஆனால் சாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் பிழவுபட்டு நிற்கும் தேசம்.

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து, அணு உலை குறித்து இதுவரை போராடிக் கொண்டிருப்பதை மத்திய அரசு கண்டு கொள்வதாக இல்லை.

போராட்ட வழிமுறைகளை மாற்ற வேண்டும். காந்தி நடாத்திய போராட்டம் வெற்றியளித்தது உண்மையென்றால் அதே போராட்டத்தை செய்ய தமிழிகத்தில் விடுதலை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தன்னைத்தானே எரிக்கும் தியாக போராட்டங்களை கைவிட்டு எதிரியை அழிக்கும் விடுதலைப்போராட்டத்தை தமிழகம் தொடங்க வேண்டும். தமிழகத்தில் அப்படியொரு அமைப்பு உருவாக வேண்டும்.

வெறும் மேடை அரசியல் எதையம் பெற்றுத்தராது என்ற உண்மையை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒடுக்கபட்டுகிடக்கும் சனங்கள், ஊழல் அரசியல்வாதிகளால் தமது உரிமைகள் மற்றும் வாழ்வாதார பலன்களையே இழந்து கொண்டிருக்கும் தமிழக மக்களுக்காக தமிழனாக போராடக்கூடிய  அமைப்பு உருவாக வேண்டும்.

தமிழீழ விடுதலை குறித்து தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் உணர்வு மிக்க போராட்டங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.

ஒட்டு மொத்த இனமாக ஒருவிடுதலைக்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் தமிழினம் எப்போது ஒரே அமைப்பாக போராடப்போகிறது!!!!


போராட்ட வடிவத்தை மாற்றுங்கள்.

ஆதி
07-11-2013

Monday, October 28, 2013

சிங்களத்தை காப்பாற்ற லீனாவை அனுப்பியது இந்தியா!! # வெள்ளைவானின் ரகசியம்

உலகளவில் தமிழீழ விடுதலைக்கான நீதி கோரி போராட்டங்கள் பல தளங்களில் முடக்கிவிடப்பட்டு நகர்ந்து கொண்டிருக்க மனிதாபிமானஅடிப்படையில் பல மேற்கத்தைய ஊடகங்கள் சிங்கள இராணுவத்தின் படுகொலைகளை அப்பட்டமாகி சர்வதேசத்தின் முன்னிலையில் தொங்க விட்டிருக்கின்றன.

விரும்பியோ விரும்பாமலோ படுகொலைகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலையில் சிறிலங்காவும் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்கா இந்தியாவும் விழிபிதிங்கி நிற்கும் இவ்வேளையில் சிறிலங்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து கூனிக்குறிகி நிக்றிது இந்தியா.

சிறிலங்காவுடன் ராஜதந்திர ரீதயில் மோதி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலையில் சிறிலங்காவை மனிதஉரிமை கண்டனங்களில் இருந்து மீட்டெடுத்து தன்னையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் தள்ளபட்டிருக்கிறது இந்தியா என்ற அரக்க தேசம்.

சனல் 4 மற்றும் பிபிசி தொலைக்காட்சிகளில் மிக அப்பட்டமாக சிங்களத்தின் கொடுமைகள் சொல்லப்பட்டிருக்கும் இந்த நிலையில் இதுவரை இந்திய தேசத்தில் இருந்து தமிழர்களின் துயரங்களை வெளிகொண்டுவருவதற்கு யாரும் முன்வரவில்லை அல்லது விரும்பவில்லை. இந்தலையில் லீனாமணிமேகலை என்ற அந்தோனியின் படுக்கையறைத்தோழிக்கு என்ன அக்கறை இருக்கிறது என்று யாரும் நினைக்கலாம்.

இந்தியாவின் திட்டமிடலும் லீனாவின் சதியும்

இந்தியாவைப் பொறுத்தவரை சிறிலங்கா மீது மனிதஉரிமைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்து ஒட்டுமொத்த பார்வையும் குவிவதை விரும்பவில்லை.

முள்ளிவாய்க்காலில் படுகொலையை முடித்த கையுடன் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளைப்பற்றி படுமோசமான விமர்சனங்களை முடக்கிவிடுவதற்காக பலநாடுகளில் இருக்க கூடிய புலியெதிர்பாளர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த புலியெதிர்பாளர்களை ஒருமித்திருந்தது இந்திய ரோ அமைப்பு. இதே போன்றதான செய்பாட்டைத்தான் பர்மா விடுதலைப்போராட்டம் நசுக்கப்பட்ட பின் ரோ செய்திருந்ததை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இந்த நிலையில் இந்தியாவின் சதியை புலம்பெயர் தமிழீழ அமைப்புகள் தகர்த்திருந்தன. சிங்கள இராணுவத்தின் மிலேச்சத்தனமான படுகொலை வீடியோக்களை ஆவணமாக்கி சிங்கள இராணுவ மற்றும் சிறிலங்கா அரசின் கொடூர முகம் உலகிற்கு காட்டப்பட்டது. இதனால் மூக்குடைபட்டுப்போன இந்தியா செய்வதறியாது தவித்தது. மிக வேகமாக புலிகளை பற்றிய விமர்சனங்களை பரப்புவதில் குறியாக இருந்தது இந்திய அரசு.

சோபாசக்திி, லீனாமணிமேகலை, ஆதவன்தீட்ண்யா, கவின்மலர், த.அகிலன் மற்றும் இன்னபிற ஊடகவியலாளர்களுடன் மிக கேவலமான பிரச்சாரங்களை முடக்கியிருந்தது யாவரும் அறிந்தவிடையம்.

சிங்கள அரசுமீதான குற்றங்களை மூடிமறைத்து தமிழீழவிடுதலைப்போராட்டம் மற்றும் புலிகள் மீதான காழ்ப்புணர்ச்சி பரப்புரைகளே இந்தியாவில் அதிகளவில் செய்யப்பட்டன. இந்த நிலையில் லீனாவின் வெள்ளைவானின் பின்னணி என்ன என்பது உங்களால் ஊகிக்க முடிந்தாலும் அதற்கு பின்னணியில் இருக்க கூடிய சதியை தெளிவாக புரிந்து கொண்டு ஊடக மட்டத்தில் பரப்புரைகளை செய்வது அவசியமான ஒன்றாக கருதவேண்டியிருக்கிறது.


லீனாவின் சதி

நீதி கோரிய ஆர்ப்பாட்டம் என சொல்லி அதை தனது செங்கடல் படத்திற்கான காட்சியாக மாற்றிய லீனாவின் பின்னணி பின்னர் "டாடா" நிறுவன விளம்பரப் பட தயாரிப்பிற்கு பின் வெளிச்சமானது.

இன்னல் படும் மக்களின் துயரத்தை பணமாக்கும் தந்திரத்தை அறிந்துவைத்திருக்கும் விபச்சாரியான லீனா ஏற்கனவே தனது தேவைக்காக எப்படியெப்படியெல்லாம் பாலியல் லஞ்சம் வழங்கினார் என்று அனைவரும் அறிந்தவிடையம். இது குறித்து இதில் பேசதேவையில்லை.

வெள்ளைவான் ரகசியம் என்ன!!!

சிறிலங்கா அரசுமீதான கண்டனங்கள் எழும்போது "காத்தான் குடி படுகொலை" என தலைப்பை உருவாக்கி புலிகள் மீது கவனத்தை திரைதிருப்பி சிங்கள அரசின் மீதான் விமர்சனங்களை முக்கியத்துவமற்றதாக்கும் நிகழ்ச்சி நிரலை ஷோபாசக்தி குழுவினர் கையாள்வது அனைவரும் அறிந்ததே.

ஈபிடிபி கருணாகரன் தலமையில் சிறிலங்கா அரசினால் அழைத்துவரப்பட்ட இந்திய எழுத்ததாளர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்கரித்த விடையங்களும் விடுதலைப்புலிகள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என்று கூவிய விதமும் அதன் தொடர்ச்சியாக இந்திய பெண் அதிகாரி ஒருவர் விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் மீது வைத்த மிருகத்தனமான விமர்சனமும் ஒரே நிகழ்ச்சி நிரல் என்பதை இத்தனை ஆண்டுகால தமிழீழ அரசியல் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடக்க இருக்கும் பொதுநலவாய மாநாடு மற்றும் அடுத்தவருடம் கூட இருக்கும் மதிர உரிமைகள் பேரவை மாநாட்டில் சிறிலங்காவிற்கு அதிஉச்ச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கும் இந்த நிலையில் சிறிலங்காவில் ராஜபக்‌ஷ அரசு மட்டுமே மனித உரிமைகளை மீறவில்லை என்றும் போரினால் தமிழீழ மக்கள் மீது மட்டும் மனித உரிமைகள் மீறப்பட வில்லை என்றும் பெரும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு ராஜபக்‌ஷ கும்பலை காப்பாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை "ரோ"வின் அனுசரணையுடன் லீனா வெள்ளைவானாக தயாரித்திருப்பதாகவே தெரிகிறது.

ஆண்டாண்டுகாலமாக சிறிலங்காவில் எல்லா மக்களுமே பாதிக்கட்டிருக்கிறார்கள் எல்லா அரசுகளுமே குற்றங்கள் செய்திருக்கின்றன எனவே இந்த அரசை மட்டும் குற்றம் சொல்வது சரியாகாது. என்று சொல்வதனூடாக இந்தியா மீதான வெறுப்புணர்வு குறைக்கப்படும் என்ற மோட்டுத்தனமான எதிர்பார்ப்பும் லீனா என்ற விபச்சாரியிடம் காணப்படுகிறது.

ஈபிடிபி கருணாகரனின் ஆதரவில் லீனா வருகைதந்தது சிறிலங்கா இராணுவத்திற்கு தெரியாது என்று அதியுச்ச காமடியை அவிழ்த்து விட்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

லீனாவை மக்களுக்கு தெரியாது என்ற படியால் மக்கள் தமது வலிகளை சொல்லியிருக்கிறார்கள். ஈபிடிபி கருணாகரனினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிலரும் புலிகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருப்பதாக அறிய முடிகிறது.

இத்தனை வலிக்குள்ளும் சிங்கள அரசு மீதான எதிர்ப்பை பதிவு செய்த பல பெண்கள் லீனா என்பவள் விபச்சாரி மற்றும் இந்திய உளவுத்துறையை சேர்ந்தவள் என்பது மட்டுமல்லாது ஈபிடிபி ஆதரவில் சிறிலங்காவில் உலாவருகிறாள் என்று தெரிந்தவுடன் பதறிப்போய் இருக்கின்றனர்.

தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட விடப்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கரமான படுகொலைகளை வெளிக் கொணர்ந்த சனல் 4 ஊடகத்தின் ஆவணப்படம் சிறிலங்கா அரசுமீது வைத்த குற்றச்சாட்டுக்களின் தாக்கத்தை தணிக்கும் விதமாக புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை வைத்து உலக பார்வையின் தாக்கத்தை குறைப்பதற்கான வேலையை லீனா திறம்படச் செய்திருப்பதாக அறிய முடிகிறது.

அந்தோனயின் அந்தப்புர ராணிகளான கவினடமலர், லீனா என தமிழ்நாட்டிலும் சிலர் கனடா உள்ளிட்ட சில இடங்களிலும் நன்றாகவே வேலைசெய்கிறார்கள்.


பார்ப்போம்!!!!

காலம் எங்களை விடுவிக்கும்.


ஆதி
28-10-13

Friday, October 25, 2013

கூட்டமைப்பு அரசியல் யாருக்கு அஞ்சுகிறது!!! # மக்கள் தடைகளை உடைத்தெறிவார்கள்

வடமாகாண தேர்தலுக்குப்பின் வடக்கைப் பொறுத்தவரை மக்களின் நடவடிக்கைகளில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக மாவீரர்கள் மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக மக்கள் திடுக்கிட்டு விழித்ததைப்போல் விழித்திருக்கிறார்கள்.

தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இல்லாது செய்யபட்டபின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் நிழலில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர். விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில்நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித்தேர்தலை மக்கள் சந்தித்திருந்தாலும் வடமாகாணத் தேர்தல் என்பது வடக்கைப்பொறுத்தவரை மக்களை உசாரடையச்செய்திருக்கிறது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நரித்தனமான அரசியல்

இதுவரைகாலமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது தாங்கள் செய்யும் அரசியலை மக்களிடம் சொல்லியது கிடையாது. கிழக்குமாகாணத் தேர்தலில் " தேர்தல் புறக்கணிப்பு" கருத்து பரவலாக மக்கள் மத்தியில் காணப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளை வைத்து தேர்தல் பிரச்சாரம் பெருமளவில் முடக்கிவிடப்பட்டிருக்கவில்லை. அது போக கிழக்கு மாகாண அதிகாரத்தை முஸ்லிம்காங்கிரஸ் உடன் சேர்ந்து கைப்பற்றுவது தான் என்று சம்மந்தர் தலமையிலான குழு திட்டமிட்டு செயற்பட்டிருந்தாலும் இறுதி நேரத்தில் சலுகைகளுக்காக முஸ்லீம் சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டது வரலாற்றில் எழுதப்பட்டுவிட்ட பெரும் கதை.

தவிர கிழக்கு மாகாண தேர்தலைப்பொறுத்தவரை ஒப்பீட்டளவில் பெருமளவான தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்னமாதிரியான அரசியலை செய்கிறது என்று இதுவரை மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டவும் இல்லை அது சம்மந்தமான பொதுக்கூட்டங்களும் நடாத்தப்பட்டவில்லை.

தேர்தல் விஞ்ஞாபத்தில் ஒரு விதமாகவும் கொழும்பு மற்றும் இந்தியாவுடன் இன்னொருமாதிரியாகவும் நரித்தனமான தமிழ்மக்களுக்கு வாழ்நாள் சிறையாக வரக்கூடிய நரித்தனமான அரசியலை சம்மந்தன் குழுவினர் செய்கின்றனர் என்ற சந்தேகம் பலமாகவே எழுந்திருக்கிறது. 

கூட்டமைப்பை மீண்டும் தக்கவைத்த புலிகள்

இந்த நிலையில் வடமாகாண தேர்தலைப்பொறுத்தவரை இறுதிக் கணம் வரை மக்கள் மாகாண அரசியலில் எந்த அக்கறையுமற்று இருந்ததைதே காண முடிந்தது.  மக்கள் எதற்காக இந்த மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட கூட்டமைப்பு அரசியல் தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து பகிரமங்கமாக மேடைகளில் பேசுவதற்கு தீர்மானித்தது. மாவீர்ரகளுக்கான வீர வணக்கங்கள் செலுத்தப்பட்டன.

இந்த நிலையில் தான் மக்கள் தேர்தலில் எப்படியாவது வாக்களிக்க வேண்டும் என்ற நிலைக்குஉளவியல் ரீதியாக தள்ளப்பட்டனர்.

மக்களின் மாற்றங்கள்.

நீண்டகாலத்திற்கு பிறகு தமிழீழ மண்ணில் மாவீர்ரகளுக்கு வீரவணக்கம் பகிரங்கமாக செலுத்தப்பட்டது மக்களை பொறுத்தவரை இழந்த ஏதோ ஒன்றை திரும்ப பெற்றுவிட்டடோம் என்பது போன்றதான உணர்வு பொங்கி எழுந்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் தங்களை பாதுகாக்க வருவார்கள் போன்றதான ஒருவித வீராப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

பொது இடங்களில் புலிகளைப் பற்றி பேசுவது சட்டத்திற்கு முரணானது அல்ல என்ற சட்ட வெளிகள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்தின் பின் மக்களுக்கு புலப்பட்டிருக்கிறது. ஆகக்குறைந்தத அரசியல் தீர்வாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி பற்றி மட்டும்தான் பேச முடியுமே தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்க கூட முடியாது என்ற அரசியல் பார்வை மக்களிடத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.


கூட்டமைப்பின் அரசியல் யாருக்கு அஞ்சுகிறது!!!

சிறிலங்கா இராணுவம் செய்யும் அத்துமீறல்களுக்கு எதிராக நேரடியாக களத்தில் இறங்கி போராட்டங்களை செய்ய மக்கள் தயார் நிலையில் இருப்பது போன்றதான சலசலப்புகள் பரவலாக எல்லா இடங்களிலும் புலப்படுகிறது.

அண்மைக்காலங்களில் சில பிரதேச சபைகளில் (சாவகச்சேரி மற்றும் கரைச்சி) மாவீரர் துயிலுமில்ல புணரமைப்புக் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்படுபவர்கள் மக்கள் மத்தியில் இருக்கும் சராசரி மனிதர்களே. கிராம மக்களுடன் நல்லது கெட்டதுகளில் பங்கேற்கும் சராசரி மனிதர்கள் தான் பிரதேச சபை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். (மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சராசரிபொதுவாழ்வில் இருந்து சற்று விலகியிருப்பவர்கள்).

பிரதேச சபைஉறுப்பினர்களின் தீர்மானம் என்பது அரசியல் தலமைகளால் ஆலோசிக்கபட்டு பிரேரிக்கபட்டதல்ல. அது அந்தந்த உறுப்பினர்கள் வாழும் கிராம மக்களின் விரும்பம் தான் தீர்மானமாக நிறைவேற்றபடப்டது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பழுத்த தலைகளுக்கு தெரியும். இருந்தாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் செல்வாக்குச் செலுத்தும் புறக்காரணிகளுக்காக இன்று தீர்மானத்திற்கும் தமக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார்கள்.

மக்களே தாங்கள் போராட தயாராக இருக்கும் போது, வீதிக்கு இறங்க தயாராக இருக்கும் போது கூட்டமைப்பின் அரசியல் எதற்கு அஞ்சுகிறது??

கரைச்சிப்பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இருந்த பல மாவீரர் நினைவகங்களை மக்கள் துப்பரவு செய்துவிட்டார்கள். உருமறைப்புச் செய்து அதற்கான மரியாதையுடன் வைத்திருக்கிறார்கள்.

கனகபுரம் மாவீர்ர துயிலுமில்லத்தை துப்பரவு செய்வதற்காக விளக்குமாறு, மண்வெட்டி, கத்தி, கோடாரி, குப்பைவிறாண்டி என பல ஆயுதங்களுடன் சனம் தயாரான செய்தி சம்மந்தர் தலமையிலான கூட்டமைப்பினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மக்களைப்பொறுத்தவரை "ஒருத்தன் செய்தா குற்றம் அதையே நூறுபேர் சேர்ந்து செய்தா போராட்டம்" என்ற நிலையில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அரசியல் வழிகாட்டிகளாகவும் சட்டத்தையும் சட்டத்தால் எப்படி எப்போது தோற்கடிக்கப்படுவோம் என்பதையும் சரியான முறையில் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அரசியல் தலைவர்(கள்) இருந்தால் இன்று வடபகுதியென்ன கிழக்கிலும் மக்கள் வீதிக்கிறங்கி பெரும் செய்தியை சர்வதேசத்திற்கு கொடுக்க தயாராகவே இருக்கிறார்கள்.

கூட்டமைப்பை அச்சுறுத்தும் சக்தி எது என்பதை மக்களிடம் நேரடியாக பேச வேண்டும். கூட்டமைப்பு எவ்வாறான பேச்சுக்களில் ஈடுபடுகிறது என்பதை மக்களிடம் நேரடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

சம்மந்தர் தலமையிலான சில குழுவினர் அடிவருடித்தனமான அரசியலை செய்கிறார்கள் என்று நினைக்கும் பட்டத்தில் மக்கள் பாராளுமன்றம் அனுப்பிய மற்றையவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் அரசியலில் இருந்து விலகி இந்தியா மற்றும் கனடாவில் இருக்கும் தத்தம் குடும்பங்களுடன் இணைந்து குடும்ப வாழ்வில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

மக்களைப்பொறுத்தவரை விடுதலைதான் முக்கியம். அதற்காக எந்தப் போராட்டத்தையும் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். புலிகள் இல்லாத இந்த நிலையில் சரியான வழிகாட்டலுடன் மக்களை போராடச் செய்ய வேண்டியது தமிழீழ மக்களுக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.


ஆதி
26-10-2013

Monday, September 23, 2013

தமிழீழ மக்களுக்கு முதலாவது ஆப்பு வைக்க தயாராகிறதா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!

நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில் மக்கள் விடுதலைப்புலிகளின் அபிமானிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கருத்தில் கொண்டு பெரு வெற்றியீட்டச் செய்திருக்கிறார்கள்.

மாகாண அரசியல் என்பது பூச்சாண்டி என நன்கு அறிந்து வைத்திருந்தும் சர்வதேச அரசியல் அரங்கிற்கு தமது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லும் ஒரு சந்தர்ப்பமாக மாத்திரமே இதை தமிழீழ மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிப்பவர்கள் மீதான தனிப்பட்ட நம்பிக்கையில் வாக்குகள் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

தனியே சிங்கள பேரினவாத்தை மட்டும் அகற்றியது மட்டுமல்லாது கூட்டமைப்புக்குள் ஒழிந்திருக்கும் குள்ள நரிகளையும் இனங்கண்டு துரத்தியிருக்கிறார்கள் தமிழீழ மக்கள்.

குறிப்பாக இந்திய வல்லாதிக்க வற்புறுத்தலினால் கூட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஆனந்த சங்கரியை தமிழீழ மக்கள் கிளிநொச்சி அரசியலில் இருந்து வெளியேறும்படி சொல்லியிருக்கிறார்கள். (2,500 வாக்குகள் விழுந்தனதானே என்று எண்ணுபவர்களுக்கு தொடரந்து வாசிக்க விளங்கும்).

கிளிநொச்சி மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஆனந்தசங்கரிக்கு இந்திய சிங்கள வல்லாதிக்க வற்புறுத்தலில் மேலதிக ஆசனத்தில் ஒன்றை வழங்குவதற்கு சம்மந்தர் அவர்கள் தயாராகிவருவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.

புலிகள் நிர்வாகத்தில் இருந்த வேளை நடந்த தேர்தலில் சங்கரிக்கு கிளிநொச்சியில் இருந்து விழுந்த அந்த ஒரே ஒரு ஓட்டுப் போட்ட கந்தப்பு (பசுமாடு வாங்க காசு தாறன் என்று ஆளுக்கு சங்கரி கடிதம் போட்டது அப்ப) கூட இன்று வெளியாகியிருக்கும் செய்தி கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

சங்கரி அப்படி என்ன செய்தார்!!!

சம்மந்தர் அய்யா போல் சங்கரியும் ஒரு இந்திய விசுவாசி என்பதற்கப்பால் சிங்கள அரசுகளின் நிரந்தர நண்பர். அமைச்சுப்பதவியில் இல்லாத ஒரு கதிர்காமர்தான் சங்கரி.

சங்கரியில் கடந்த 6 வருட (அதற்கு முற்பட்டவை பற்றி எல்லோருக்கும் பொதுவாக தெரியும்) அரசியல் செயற்பாடுகள் குறித்து நுணுக்கமாக பார்த்தால் எல்லாம் புரியும்.

அன்ரன் பாலசிங்கண்ணை மற்றும் தமிழ்ச்செல்வண்ணையின் இழப்புகளை தொடர்ந்து தமிழீழ சர்வதேச அரசியல் செயற்பாட்டில் பெரும் பின்னடைவு ஏற்பட்டமை வெளிப்படையானது. இந்த நேரத்தில் தான் சங்கரி மிக கேவலமான தனது அரசியலை முழு மூச்சுடன் செய்ய ஆரம்பித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராகவும் பல மோசமான பொய்க்குற்றச்சாட்டுகளை சர்வதேச அரசியல் தலைவர்களுக்கு வழங்கியதில் சங்கரியின் பங்கு பெரிது.

இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்குமாக மாறி மாறி ஓடி ஏராளமான சதிகளை செய்தவர்தான் சங்கரி. இந்தியாவின் சுப்ரமணியசுவாமியாகவும் சிங்களத்தின் கதிர்காமராகவும் செயற்பட்டார்.

இனப்படுகொலைப்போரை பயங்கரவாதத்திற்கெதிரான போர் சிங்கள விசுவாசம் செய்த ஆனந்தசங்கரி இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகிறார்.

2008 இல் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாமல் தங்கியிருந்த குடும்பங்களை சந்திக்க வந்த சங்கரி "எனக்கு வன்னி உடும்பு இறச்சியும் புட்டும் சாப்பிட ஆசை.. எங்க பிரபாகரன் விட்டாத்தானே" என்று கதையளந்து சனம் வெளில போக சொல்லி அனுப்பின சம்பவம் நடந்தது.


சங்கரியை அரசியலுக்குள் கொண்டுவர நினைப்பது யார்!!

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிரான ஆனந்த சங்கரியை மக்கள் திட்டமிட்டு நிராகரித்த பின்னரும் ஆனந்தசங்கரியை மாகாணசபை உறுப்பினராக்கி அழகு பார்க்க நினைக்கிறது இந்திய சிங்கள அரசியல் கூட்டு சதிகள்.

இத்தனை நாளாக தமது அராஜகங்களுக்கு துணை போய் தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை காட்டிக் கொடுத்தமைக்காக மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் தமது அழுத்தங்களினால் அப்படியாவது பலவந்தமாக ஆனந்தசங்கரிக்கு ஒரு அரசியல் இருப்பை செய்து கொடுப்பதற்காகவே முயற்சிக்கின்றன என்று தெரிகிறது.


தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள்

மேலதிக ஆசனத்தில் மக்களால் முழுமையாக நிராகரிக்கபட்ட ஆனந்த சங்கரி  மக்களுக்கான அரசியலில் பலவந்தமாக திணித்து உங்கள் இந்திய அடிமைத்தனத்தை எமது குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டாம்.

இந்திய வல்லாதிக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்த தேர்தல் நடாத்தப்பட்டதும் அதற்காக பிரச்சினைகள் சிங்கள பேரினவாத அறிக்கைகள் சோடிக்கப்பட்டதும் அனைவரும் அறிவோம். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் விடுதலைவீரர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்கள் என்றும் விடுதலைப்புலிகளால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்றும் நீங்கள் ஏற்றுக் கொண்டு சிங்கள இராணுவத்தின் முன் நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்காக மாத்திரம் தான் எங்கள் சனம் அடக்குமுறைகளையும் உடைத்து வாக்களிப்பு நிலையம் வந்தது.

சனம் எப்படி ஓட்டுப்போட்டது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கூட்டமைப்பை தெரிவு செய்யும் அதே வேளை தவறானவர் தெரிவு செய்யப்படக் கூடாது என்பதில் மிகத் தெளிவாகவே சனம் இருந்தது.

முதன் முறையாக ஓட்டுப்போட வந்த சனமும்.. பதட்டத்தில் தாங்கள் பிழையாக ஓட்டுப்போடக் கூடாது என்று எப்படி ஓட்டுப் போடுவது என்று கேட்டறிந்து வந்த சனமும் கூட்டமைப்பிற்காக வரவில்லை. புலிகளுக்காக தான் வந்தார்கள் என்பதை நினைவல் வைத்து மக்களால் நிராகரிப்பட்டவர்களை நிராகரிக்கப்பட்டவர்களாகவே கருதும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக ஆசனத்தில் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.

ஆனந்தசங்கரி என்ற நரியைவிட ஈபிடிபி கும்பலில் போட்டியிட்டவர்கள் சிலருக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கட்டுரை சங்கரியை மேலதிக ஆசனத்தில் வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்ய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யோசனை வைத்திருப்பதாக வெளியாகிய செய்தியை அடிப்படையாக வைத்து சங்கரி குறித்த அரசிலையும் நிராகரிப்பையும் பேசுவதற்காய் எழுதப்பட்டது.


ஆதி
கிளிநொச்சி.
23-09-13






















































Saturday, July 6, 2013

அவர்கள் வழமைக்கு திரும்பிவிடுவார்கள் ஆனால் உங்களை நம்ப முடியாது.


தலைப்பு ஒரு சிங்கள அதிகாரி சொன்ன வசனம்.
இன்று வடமாகாண தேர்தல் தொடர்பாக பல விவாதங்கள்.. சந்திப்புகள் அரசியல் காரசாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை வெறும் மாகாண அதிகாரங்களுக்குள் அடக்கிவிட நினைத்த இந்திய வல்லாதிக்கத்தின் நயவஞ்சகத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு எப்பொழுதோ தேவையற்றது என தூக்கி எறிந்த பிறகு தமிழீழ மக்கள் தமது இரத்தத்தை சிந்தி வலிகளை சுமந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் மாகாண சபை அதிகாரம் குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது.

இது கூட இந்திய காங்கிரஸின் நாடகம் என்பதை எல்லா தமிழீழ மக்களும் அறிவார்கள்.

சிங்களம் எதிர்ப்பதாய் எதிர்க்கும்.. அதை இந்தியம் வாங்கித் தருவதாய் தரும்... எல்லாவற்றையும் தமிழீழம் நம்பும் என்பது அவர்களின் கணக்கு.
இந்தியம் எப்படிக் கணக்குப் போட்டாலும் சிங்களத்திற்கு தமிழீழம் குறித்த பதட்டம் ஒரு துளியும் குறையவில்லை.

இந்தியத்தின் கணக்குப்படி வடமாகாண தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுஆட்சியமைக்க வேண்டும் அத்துடன் தமது வேலை முடிந்துவிடும் தமிழீழ மக்கள் இந்தியாவை நம்புவார்கள் என்ற சராசரி சினிமா அரசியல் சிந்தனையுடன் செயற்படுகிறது. ஆனால் சிங்களம் தமிழீழ மக்களை நம்பத்தயாராக இல்லை.

வடமாகாண தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட பல பிராதான நகரங்களில் சிங்கள அதிகாரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளின் ஊடுருவல் வழமைக்கு மாறாக அதிகரித்திருக்கிறது.
இவர்களில் பலர் தமிழ் தமிழ் உள்ளுர் அமைப்புகளினூடாக தகவல்கள்திரட்டுவது மற்றும் வாக்கு மோசடிக்கான வேலைத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் சந்திக்கும் சிலருடன் பேசிய விடையம் தான் இந்த பதிவின் தலைப்பு.


தமிழீழ மக்கள் குறித்து அச்சத்துடன் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு போராட்டங்கள் என்பது ஆளும் அரசியல் தேவைகளுக்காக நடாத்தப்படுவதொன்று. அது எப்பொழும் வழமைக்கு திரும்பிவிடும் போக்கை உடையது அல்லது அதை கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசாங்கத்தை நாடினால் போதுமானது என்பது சிங்களத்தின் நிலைப்பாடு.
ஆனால் தமிழீழ மக்களின்போராட்டங்கள் என்பது தமது சர்வதேச அரசியலை குடைந்து சீரழிக்கிறது என்ற அச்சம் மேலோங்கிக்கிடக்கிறது.

தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்..உரக்க குரல் கொடுப்பார்கள் ஆனால் நிஜமான களம் என்று வரும்பொழுது சமூக வர்கங்களாக (சாதிகளாக என்பது அவர் குறிப்பிடுவது) பிரிந்துவிடுவார்கள். அதே நேரத்தில் தமிழீழ போராட்டக்காரர்களை பொறுத்தவரை களம் தமக்கானது என்று தீர்மானித்துவிட்டால் மூர்க்கத்தனமானமாக போராடுவார்கள். எனவே தமிழீழ போராட்டக்காரர்களுக்கான களத்தை இயலுமானவரை சிங்கள அரசாங்கம் தடுக்கும் என்பதே சிங்கள அரசியல்வாதிகளின் நிலைப்பாடாக காணப்படுகிறது.

அதனால் தான் "அவர்கள் வழமைக்கு திரும்பிவிடுவார்கள் உங்களை நம்ப முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்"

லண்டன் கிரிக்கட் மைதானத்தில் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பெண்களை சிங்கள இளைஞர்கள்  ஆக்குரோசமாக தாக்கிய போது அமைதியாக இருந்தவர்கள் இறுதிப் போட்டியில் புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் புகுந்தார்கள்.
பிரித்தானிய பொலிசார் அது குறித்த விசாரணைகள் செய்து கொண்டிருக்கும் வேளையில் சிறிலங்கா அரசானது சிறுபிள்ளைத்தனமாக சர்வதேச பிடிவிராந்து ரேஞ்சிற்கு சென்றிருக்கிறது. (சர்வதேச பிடிவிராந்து ஏன் எதற்கு எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்).

பசீல்ராஜபக்‌ஷ அமைதியாக இந்தியா வந்து திரும்பியதும் கருணாநிதி+காங்கிரஸ் கும்பலில் சாமர்த்தியமும்

மகிந்தராஜபக்ச மற்றும் வேறு சில சிறிலங்கா அமைச்சர்கள் இந்தியாவரும்பொழுது கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அமைப்புகள் சிறங்காவின் மிக முக்கியமான அமைச்சர் மிக முக்கியமான விடையம் குறித்து பேச வரும்பொழுது பெரும் அடக்கத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்கள்.

கருணாநிதி கும்பல் மத்திய அரசியல் இருந்து விலகியிருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்ட கருணாநிதி மகள் கனிமொழியை அரசியல் அதிகாரியாக்குவதற்கு மும்மரமாக செயற்பட்டு அண்மையில் தெரிவுசெய்யபட்டிருந்தார்.

சாதிக்கட்சி தலைவர் ராமதாஸ் கைது தொடர்பில் தனது எதிர்ப்பையும் அனுதாபத்தையும் வெளிட்டு வந்த கருணாநிதி ராமதாஸை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார். அந்த நிலையில் தான் பசீலீன் இந்திய வருகைக்கு ராமதாஸ் பயன்படுத்தபட்டிருக்கிறார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் பசீல் ராஜபக்‌ஷ இன அழிப்பு போர் குறித்த சர்வதேச அரசியலில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார். பசீல் ராஜபக்‌ஷவினூடாக தான் கருணாநிதி கும்பல் சிறிலங்காவில் ஏராளமான முதலீடுகள் மற்றும் குத்தகைகளை வாங்கி குவித்திருக்கிறது.

என்தான் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தாலும் கருணாநிதி காங்கிரஸ் கும்பலின் ஆட்டங்களை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை ஜெயலலிதாவிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குரிய விடையமே!!.
வலுவற்ற சிங்கள அமைச்சர்களுக்கு மாநிலம் கடந்து எதிர்ப்பு வெளியிட்ட தமிழக அமைப்புகள் பசீலின் வருகை குறித்து திசைதிருப்பப்பட்டதும்.. வல்லரசான (!!) இந்தியாவின் மீனவ சமூகம் பசீல் ராஜபக்சவிடம் உயிர்ப்பிச்சை கேட்டதும் இந்த காலப்பகுதியில் தான் நடந்தேறியது.

காங்கிரஸ் கருணாநிதி மற்றும் ராமதாஸ் திட்டப்படி "இளமாறன்" என்ற இளைஞன் படுகொலை செய்யபட்டு புகைரத தண்டவாளத்தருகில் வீசப்பட்டு தமிழக அமைப்புகளை திசைதிருப்பிவிட்டு பசீல் ராஜபக்சவை ராஜ மரியாதையுடன் அழைத்து பேசிவிட்டு அனுப்பிவிட்டார்கள்.

அதற்கு ஏற்றாற் போல் தமிழீழ விடுதலை குறித்து போராடுபவர்கள் ஏன் "இளமாறன்" படுகொலை குறித்து போராடக் கூடாது என்று ஊடகங்கள் மற்றும் எழுத்துவெளியில் பரப்புரையை மேற்கொண்டு பசீல் ராஜபக்சவிற்கு எதிரான போராட்டங்களை தணித்துவிட்டார்கள்.

சமாந்தரமாக இன மற்றும் சமூக விடுதலை குறித்து போராடும் மனநிலையை தமிழக அமைப்புகள் கட்டியெழுப்பவில்லை என்பதே இங்குள்ள உண்மையாகும்.

சாதிப் பெயரில் இடம்பெற்ற மிகப்பெரும் படுகொலைக்கு (அரசியல் படுகொலை) நீதிவேண்டி தமிழக அமைப்புகள் தொடர் போராட்ட களத்தில் குதிக்கும் அதேவேளை தமிழ; இன அழிப்பு முக்கிய அரசியல்வாதியை எதிர்த்தும் போராட்டத்தில் இறங்கியிருக்க வேண்டும். தமிழக மீனவ அமைப்புகள் சிங்களத்திடம் உயிர்ப்பிச்சைகேட்பதற்கு பதிலாக இந்திய அரசு சிங்கள மந்திரியை எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும் என்று போராட்டம் நடாத்தியிருக்க வேண்டும்.

இனம் குறித்த அத்தனை போராட்டங்களையும் முடக்கி சாதி வெறிக்குள் லாவகமாக தமிழக அமைப்புகளை திசை திருப்ப முடியும் என்ற சாமர்த்தியத்தை கருணாநிதி காங்கிரஸ் கும்பல் தெளிவாக புரிந்து வைத்துள்ளது.

சமாந்தரமாக போராடத்தெரியாத அல்லது சமாந்தரமாக போராட பயிற்சிகளை அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்ய கூடிய வலுவற்ற தமிழக அமைப்புகள் இருக்கும் வரை "ஒட்டு மொத்த தமிழனம்" என்ற வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமே.

உலக வரலாற்றில் தமிழீழ மக்களின் போராட்டம் குறித்தும்.. தமிழீழ விடுதலைப்புலிகளின் மெனம் குறித்தும் இன்னமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சம் போல் ஒன்றுபட்ட தமிழனத்தின் போராட்டம் குறித்து அச்சம் வரவேண்டுமென்றால், ஒன்றுபட்ட தமிழின விடுதலை குறித்து உலகம் கவனம் செலுத்த வேண்டுமென்றால் தமிழக அமைப்புகளுக்கிடையில் மாற்றங்கள் வரவேண்டும். எல்லா வகையான போராட்டங்களையும் ஓரே நேரத்தில் கையாளக்கூடிய வகையில் மக்களை ஒழுங்குபடுத்த கூடிய அமைப்புகள் உருவாக வேண்டும்.



புரட்சி என்பது மாற்றம். மாற்றம் நிகழ வேண்டுமென்றால் அதற்கான களமும் தளமும் விரிவாக்கப்பட வேண்டும்.






ஆதி
07-07-13

Thursday, April 11, 2013

சீமானை அடுத்த கருணாநிதியாக்க திட்டமா!!! அம்பலமாகும் சதிகள்

நாம்தமிழர் கட்சி தலைவரும் தமிழீழ விடுதலைப்போராட்ட உணர்வாளருமான சீமானை "கருணாநிதி" செய்த செயற்திட்டங்களை செய்வதற்காக தயார்ப்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் பெரும் துரோக கும்பல்கள் கிளம்பி போராட்டத்தை சிதைத்திருந்தன. அதில் முக்கியமானவர் கருணாநிதி. இனி விடையத்திற்கு வருகிறேன்.

தமிழீழ விடுதலை தொடர்பில் இதுவரை சரியான நிலைப்பாட்டில் இருக்கும் சீமானை குழப்பும் நடவடிக்கையில் கருணாநிதி மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கும்பல் ஒன்றை என்றுமில்லாதவாறு முழுவீச்சுடன் செயற்படுவதற்கு சிங்கள - இந்திய புலனாய்வு அமைப்புகள் களம் இறக்கியிருப்பதாக தெரிகிறது.

அதன் உச்சகட்ட காய்நகர்த்தலாகவே சீமானை மலேசிய பெண்ணுடன் (அந்த பெண் பற்றி இன்னமும் தெளிவான நிலை தெரியவில்லை என்பதால் அது பற்றி பேசுவதை தவிர்த்துக் கொள்கிறேன்) தொடர்புபடுத்தி பதிவுகள் வெளியானதும் அதை மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிரும் இருக்கின்றன (இதயச்சந்திரனிடம் இருந்து எனக்கும் மெயில் வந்தது).

தமிழ்நாட்டில் "தமிழீழ ஆதரவு" நிலைப்பாடு பல வருடங்களுக்கு பிறகு என்றும் இல்லாதவாறு மையம் கொண்டிருக்கிறது. அதன் தாக்கமாக தமிழீழ துரோக கும்பல்கள் ஓரங்கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.  அதனால் அமை எப்படியாவது தகர்த்தெறியவேண்டும் என்ற நிலைக்கு இந்திய "றோ" வும் சிங்கள அரசும் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இன்று "நாம் தமிழர் கட்சி" தலைவர் சீமானின் மீது சதி பின்னபட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சதிக்கும்பல்கள்.
1. அதிர்வுக் கண்ணன் ( தமிழீழ ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்துலக செயலக அமைப்புக்குள் 2009 ற்கு பிறகு ஊடுருவியவர் : வெளிநாடுகளில் நேரடிக் களங்களை காணதவர்களால் நிர்வகிக்கப்ட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளில் சிபார்சுகளின் அடிப்படையில் நபர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது)

2. கருணாநிதி,"றோ" வைச் சேர்ந்த எழுத்தாளர்கள்/அல்லது ஊடக நிறுவனத்தார்


அதிர்வுக் கண்ணனும் அதன் சதி வலையமைப்பும்

அதிர்வுக் கண்ணன் என அறியப்படும் இந்திய உளவாளி 2009 ற்கு பிறகு தமிழீழ அமைப்புகளுக்குள் சிபார்சின் மூலம் உள் நுழைகிறார். தாயத்தில் உயிரிழப்பு அதிகரித்து மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகள் பின்வாங்கிக்கொண்டிருந்த நேரம் அது. புலத்தில் தமிழீழ மக்கள் அல்லோலப்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது. புலம்பெயர் வாழ் மக்களிடத்தில் நிர்வாகங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்த நேரம் அதிர்வுக் கண்ணன் போன்ற சிலர் தமிழீழ அமைப்புகளுக்குள் சிபார்சிகளினால் நிர்வாக மட்டம் வரை நுழைந்ததாக தெரியவருகிறது.

அதிர்வுக்கண்ணன் "தமிழீழ ஒருங்கிணைப்புக்குழு"விற்குள் நுழைந்து "அனைத்துலக செயலக" பிரிவின் வெளிநாட்டு உறுப்பினர்களுடன் பலருடனும் தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், தொடர்பில் இருந்த புலனாய்வுப்பிரிவு போராளிகள், தமிழ்நாட்டில் தொடர்பில் இருந்தவர்கள் என பல தகவல்களை சேகரித்த "கண்ணன்" குழுவினர் "றோ"வின் ஆலோசனைப்படி இணைய தளத்தினை ஆரம்பித்திருக்கின்றனர்.

அதிர்வு என்ற இணைய தளத்தை ஆரம்பித்து செய்த முதலாவது வேலை 2009ம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த இணையத்தினூடாக மக்களை குழப்பி 2010ம் ஆண்டு மாவீரர் தினத்திற்கு முன்னதாக தமிழீழ அமைப்புகளுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கியது. அதன் பின்னர் அவர்களிடம் இருந்து நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்த போராளிகள், இறுதிப்போரில் தப்பிய போராளிகள் என பல முக்கியமான போராளிகள், அவர்களின் குடும்பங்கள் பற்றிய தகவல்களை சேகரித்தார் கண்ணன்.

அந்த தகவல்களோடு கருணாநிதி காலத்தில் ஏராளமான தமிழீழ விடுதலைப்புலி போராளிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதும் பலர் நாடுகடத்தப்பட்டதும் செய்திகளில் வெளியாகியிருந்தது.

விழுப்புண் அடைந்து தப்பிய போராளிகள், விடுதலைப்புலிகளுக்கு தொடர்சியாக உதவியவர்கள், அவர்களின் புகைப்படங்கள், வசிக்கும் இடம், என எல்லா வற்றையும் இணையங்களில் வெளியிட்டு மக்களை தொடரச்சியாக குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்து அதிர்வு.

தமிழீழ தேசிய தலைவரிக் தாயாரை மருத்துவத்திற்கு கூட  அனுமதிக்காமல் விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பிய கருணாநிதியை 2012 ஆரம்பத்தில் அதிர்வுக் கண்ணன் சந்தித்திருக்கிறார்.
அதிர்வுக் கண்ணனும் கருணாநிதியும் 2012


அதிர்வின் முகநூல் அறிக்கை

இதில் என்ன காமடி என்றால் அதிர்வுக்கண்ணன் கொடுத்த அழுத்தத்தினால் தான் "டெசோ" மாநாட்டில் பல முக்கியமான தீர்மானங்கள் (என்னது என்று கேட்க கூடாது) நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல் மத்திய அரசில் இருந்தும் விலகியதாக அதிர்வு முகநூல் ஊடாக கருத்து தெரிவித்திருக்கிறார்.  
இதற்கு கருணாநிதியின் "டெசோ" கும்பல் கட்டாயம் பதில் தந்தே ஆக வேண்டும்.

தவிர அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய தமிழ்நாட்டு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு பற்றி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் சொல்லியிருக்கிறார் அதிர்வுக்கண்ணன்.

அதிர்வுக் கண்ணன் தன்னை தமிழீழ விடுதலைப்போராட்ட சக்தியாக பல தடவைகள் தன் வாயால் சொல்லி காட்டியிருக்கிறார். தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் என்ற காரணத்திற்காக தமிழழகத்திற்குள்ளேயே நுழைய விடாத கருணாநிதி கண்ணனை சந்தித்திருப்பதன் மர்மம் என்ன??

புலம்பெயர் தமிழீழ மக்கள் உடனடியாக செயற்பட்டு தமிழீழ ஒருங்கிணைப்புக்குழு லண்டன் தனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.

அது போக தமிழ்ச்தேசிய கூட்டமைப்பினையும் குறிப்பாக சிறிதரன் எம்.பி யையும் தரக்குறைவாக (சிறி வாத்தி என அதிர்வு எழுதியது) எழுதி புலம்பெயர் தமிழர்களிடையில் பெரும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதற்கு பல தடவைகள் முயற்சி செய்தது அதிர்வு. சிறிதரன் எம்.பி உடன் கூட நின்று செயற்படுபவர்கள் யார் யார் என்பதையெல்லாம் வெளியிட்டு அவர்களை சிங்களப் புலனாய்வுப்பிரிவினர் கடத்தும் அளவிற்கு தகவல்களை வழங்கியது கண்ணன் என்றே அறியப்படுகிறது.
அதிர்வினால் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்கும் பொன்காந்தன் சில மாதங்களில் காணமல் போய்விட்டார்.

தமிழீழ தாயகத்தில் நிலப்பறிப்புக்கு எதிராக போராடும் மக்கள் பற்றியோ அல்லது நீதி மன்றங்களில் செய்யப்படும் வழக்கு தாக்கல்கள் பற்றியோ அல்லது அல்லலுறும் போராளிகள் மற்றும் மக்கள் பற்றியோ எந்த தகவல்களையும் செய்தி வெளியிடாத அதிர்வு புலம்பெயர் அமைப்புகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டு வருகிறது.

அது போக இன்று "சூசை" அண்ணை பற்றிய தகவல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலையோ அல்லது நடந்த இறுதிப்போர் பற்றியோ எந்தவொரு பூரண அறிவுமின்றி அந்த கட்டுரை தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. கட்டுரையில் இருக்கும் மொழி நடை "ஈழத்தமிழரின்" மொழி நடையல்ல.  இறுதிப்போரில் ஒரே இடத்தில் குழுமியிருந்த மக்களிடம் "இரண்டாயிரம் மீனவ மக்கள் வாருங்கள்" என்று சூசையண்ணை கேட்டதாக தமிழ்நாட்டு சினிமா பாணியில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. சொல்லப்பட்டடிருக்கும் செய்தியின் சம்பவம் குறித்து பல தமிழீழ மக்களுக்கு தெரியும்.
தமிழீழ தமிழில் இது புதுசு

"விறுவிறுப்பு" என்ற பெயரில் ஏதோ தலைவருடன் இருந்தது போல எழுதும் அதே குழுமத்தை சேர்ந்த தமிழ்நாட்டு "ஆடு" ஒன்றினால் எழுதப்பட்ட கட்டுரைதான் சூசை அண்ணையின் கட்டுரை போன்ற பல கட்டுரைகள். அதிர்வு தன்னை தமிழீழ விடுதலைப்போராட்டுத்துடன் நெருங்கியவர் என்று காட்டுவதற்காகவும் தமிழ்நாட்டில் நிலையெடுக்கவும் நினிமா பாணியில் இது போன்ற பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.


சீமான் குறிவைக்கப்பட்டிருக்கிறாரா?

அண்மையில் சீமான் குறித்த செய்திகளை சில இணையங்களும் அதிர்வு தனது மின்னஞ்சலினூடாகவும் பலருக்கு அனுப்பியிருந்தது.

முதலில் சீமான் பற்றிய செய்தியை அனுப்பியதால் தனக்கு பெருமையாக இருக்கும் என நினைத்த அதிர்விற்கு ஏமாற்றம் மிஞ்சியதால் அதை தான் செய்யவில்லை என்றும் "சேவர்" கடவுச்சொல் உடைக்கப்பட்டு வேறு யாரோ பாவித்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டது.

பல தடவைகள் தனது "சேவர்" உடைக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வெளியிட்ட ஒரே இணையம் அதிர்வாகதான் இருக்க முடியும்.

Hotmail, Gmail என்பன முன்னணி தகவல் தொழினுட்ப நிறுவனங்கள்.  Hotmail என்பது Microsoft இன் மின்னஞ்சல். இவற்றை சாதாரணமாக முடக்குவது என்பது இயலாதகாரியம்.
இதே அதிர்வு சீமான் குறித்தும் நாம் தமிழர் கட்சி குறித்தும் பல மோசமான செய்திகளை வெளிட்டிருந்தது (அவை நீக்கப்பட்டிருக்கின்றன)
இதில் இருக்கும் ஆதே பாணியில் தான் அதிர்வின் செய்திகள் வெளியாவதை கவனித்துப் பாருங்கள்.
அதிர்வுதான் ஆர்வ கோளாறில் முதலில் மின்னஞ்சலை அனுப்பியது என்பதற்கான ஆதாரம்

சீமானின் வெளிநாட்டு பயணத்தின் போது அதிர்வுக் கண்ணன் அனைத்துலக செயல சில ஆடுகளை சீமானை சந்திக்க பண்ணியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் மூலம் சீமானை நெருங்குவதற்கான நாடகத்தின் முதல் கட்டம் தான் இந்த சீமான் பற்றிய செய்திகள் என்று தெரியவருகிறது. அதாவது சீமானைப் பற்றி பிழையான தகவல்களை பரப்ப வேண்டும் பின்னர் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டு சீமானிடம் நெருங்க வேண்டும்.

தமிழீழத்திற்கு மிக அண்மையில் இருக்கும் ஒரே மொழி பேசும் பெரும் நிலம் என்ற வகையில் தமிழக அரசியல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நிட்சயம் தாக்கத்தை செலுத்தும்.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் எதிர்காலத்தில் சீமானை பணத்தினாலும் செல்வாக்கினாலும் கட்டுப்படுத்தினால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டங்களை தமிழகத்தில் முடக்கிவிடலாம் என்று நினைத்து நீண்டகால சதித்திட்டத்தில் உளவு அமைப்புகள் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

 கருணாநிதியை எப்படி செயற்பட வைத்ததோ அதே கருவிதான் இன்று சீமான் மீதும் பொறி வைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுப்பியிருக்கிறது.

அதிர்வுக் கண்ணனின் நண்பர் ஒருவர் போதையில் உளறிய தகவல்களின் அடிப்படையிலும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை கவனித்து வருவதில் இருந்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

பருதி அண்ணை உட்பட பலரின் பின்னணியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்துலக செயலகத்தினுக்குள் நுழைந்திருக்கும் "ஆடு"களான அதிர்வுக் கண்ணன் கும்பல் தான் காரணம் என்று பலர் எழுதியிருக்க படித்திருக்கிறேன்.
வெளியாகிய செய்திகளையும் அதன் பிறகு நடந்தவற்றையும் வைத்து நீங்களே அறிந்து கொள்ளலாம்.

தவிர சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை புலம்பெயர் தமிழர்கள் செய்து வந்த நிலையில் தன்னை பெரும் செயற்பாட்டாளராக காட்டும் அதிர்வு தனது இணையத்தில் சிறிலங்காவிற்கான வர்த்தக விளம்பரங்களை தொடர்ச்சியாக வெளிட்டு வந்தது என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்.


ஆதி
11-4-2013

Thursday, March 28, 2013

எனக்கு சீமான் யார் என்று காட்டு# அடம்பிடித்த பாட்டி


தமிழ்நாடெங்கும் தமிழீழ விடுதலைத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 

தமிழீழ தனி அரசிற்கான பொது வாக்கெடுப்பை நடாத்தும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். நேர்த்தியாக ஒழுங்கமைக்கபட்டு உலக அரசியல் ராஜதந்திர தரத்தில் கோப்புகள் எழுதப்பட்டு தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்கிறது. 

கருணாநிதியின் அரசியல் நாடக வார்த்தைகள் போலல்லாமல் சிறந்த சட்டவாக்கல் மொழி மூலம் தீர்மானம் ஒழுங்கமைக்கபட்டிருப்பது ஜெயலலிதா அம்மையார் மீது நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

" இவ்வளவு நாளா ஜெயலலிதாவிற்கு பிழையான தகவல்களை வழங்கி தமிழீழ விடுதலை மீது வெறுப்பை ஏற்படுத்திய கள்ள வேலைகள் பார்த்தது கருணாநிதி போலத்தான் இருக்கு.. இப்பதான் ஜெயலலிதாவுக்கு உண்மைகள யாரோ சொல்லினம். ஆள் கெட்டிக்காரி லேசில இந்த பிரச்சினைய விடமாட்டா அதால நம்பிக்கை இருக்கு. கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றி இருந்தா தமிழ்ச் சனத்துக்கு ஏதோ பெரும் அழிவெண்டுதான் அர்த்தம்.. நல்லகாலம் தமிழ்நாட்டுச் சனம் அந்த தரித்திரத்த கலைச்சிட்டினம் " என்று தமிழீழ மக்களிடையில் பெரும் புத்ததுணர்ச்சி நிரம்பிய நிலையில் பேச்சுகள் பரவலாக அடிபடுகிறது. 

சரி இனி விடையத்துக்கு வருகிறேன். 

இன்று கடைக்கு வந்த பாட்டி ஒருவர் சீமானை பற்றி விசாரித்தார். அவருடைய பேரன்கள் பாடசாலையில் கற்பவர்கள். எப்பொழும் "சீமான் அப்பிடிக் கதைக்கிறார்.. சீமான் அங்க அப்பிடி கதைச்சிருக்கிறார்.. கருணாநிதி நாக்க புடுங்கிட்டு சாகலாம்" என்று சீமான் புராணம் பாடுறாங்கள். ஆரப்பன் அந்த சீமான் என்று கேட்டார். பாட்டியினுடைய பேரன்கள் இருவரும் போர் வலி காணதாவர்கள். வரிச் சீருடையணிந்த புலிகளை நேரில் காணதவர்கள். அந்த சிறுவர்கள் புலிகளை பற்றி தேடுகிறார்கள். நண்பர்களுடன் பேசுகிறார்கள். அதனால் தான் இத்தனை பேச்சுகள் வீடுகளில் அடிபடுகின்றன. 

பாட்டியை இருக்க சொல்லிவிட்டு "யூ டியுப்பில்" சீமானின் இரண்டு உரைகளை எடுத்து காட்டினேன். பாட்டி உணர்ச்சிவசப்பட்டிற்றா. மகன் இந்த பெடியன் "செல்வம் மாமா" ட்ட ரெயினிங் எடுத்துருக்கு. எல்லாராலையும் இப்பிடி கதைக்கேலாது. இண்டைக்கு தமிழகத்தில இவ்வளவு மாற்றம் நடந்திருக்கெண்டா இந்த மாதிரி கதைச்சதால தான் சாத்தியப்பட்டிருக்கும். என்று நிறைய கதைகள் சொன்னார்.  மே 17 இயக்க திருமுருகனுடைய ஒரு உரையையும் போராட்டம் ஒன்றின் போது பேசியவற்றையும் காட்டினேன். 

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம், முத்துக்குமார் அண்ணா, தங்கை செங்கொடியின் நடனம் என எல்லா வற்றையும் காட்டினேன். 

"செத்த சனம்.. பெடியளின்ட ஆவிதான் தமிழ்நாட்டு பிள்ளைகளுக்குள்ள புகுந்திருக்கு... தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ சிங்களவன் துலைஞ்சான்...  உந்த ஆணையிறவ பிடிக்கிற நேரத்தில இப்பிடி தமிழ்நாட்டில இருந்திருந்தா கட்டாயம் 2003க்குள்ள தம்பி தமிழீழத்த பிடிச்சிருப்பான்.  " என்று நிறைய சொன்னார். ஏனோ தெரியவில்லை உடம்பு புல்லரித்தது.

ஆணையிறவை பிடித்து யாழ்ப்பாண மீட்ப்பு போர் கைதடியையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் பொழுது இந்தியா தான் புலிகள் மீது அழுத்தம் பிரயோகித்து போரை நிறுத்தியது. இனியொரு தடவை இந்திய படைகளுடன் மோதல் வேணாம் என்ற நோக்கத்திற்காக தலைவர் போரை நிறுத்தி புலிகள் அணியை முகமாலைக்கு எடுத்திருந்தார் என்று அப்பொழுது பேசப்பட்டது. பாட்டி சொன்னவுடன் நினைத்துப் பார்த்தேன் உண்மைதான். இந்த எழுச்சி அன்று தமிழகத்தில் இருந்திருந்தால் அன்று இந்தியா சிங்கள ராணுவத்தை காப்பாற்ற தனது படையை அனுப்புவோம் என்ற எச்சரிக்கையை விடுத்திருக்க முடியாது. 


சரி செல்வம் மாமா யார் என்று சொல்லி விடுகிறேன். 

செல்வம் மாமா ஒரு பிரச்சார பீரங்கி. சம்பவங்களை தனது பேச்சாற்றலால் கண்முன் கொண்டுவரக்கூடிய அதி திறமைசாலி. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு பிரச்சாரங்களிற்கு "செல்வம் மாமா" போனால் அவர் பேசி முடிய நிறைப்பேர் தம்மை போராளிகளாக இணைப்பார்கள். 

யாழ்ப்பாணத்தில் "கிருசாந்தி" என்ற உயர்தர வகுப்பு மாணவி சிங்கள ராணுவத்தால் மிலேச்சத்தனமான பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டு படுகொலை செய்யப்ட்டார். தமிழீழ மக்களையே உலுக்கியெடத்த படு பயங்கரமான கற்பழிப்பு படுகொலை அது. அந்த சம்பவத்தை வன்னியில் இளைஞர் யுவதிகளுக்கு செல்வம் மாமா விளங்கப்படுத்த ஒரு வகுப்பில் இருந்த அத்தனை மாண மாணவியரும் போராட்டத்தில் இணைந்த சம்பவங்களும் இருக்கின்றது. 



எத்தனையோ வலிகளையும் கொடுமைகளையும் தாண்டி.. பேச முடியாத ஏராளமான கதைகளுடன் என்றோ ஒரு நாள் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையில் புலிகளின் வரவை மட்டுமே எதிர்பார்த்திருந்த சனங்களுக்கு தமிழக மாற்றம் பெரும் புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. எல்லா வீடுகளிலும் தமிழக மாணவர்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். 


ஆதி
28-3-13

Wednesday, March 6, 2013

அன்பான தமிழக உறவுகளே!!!

அன்பான தமிழக உறவுகளே!!!

2009 ற்கு பிறகு வரலாறு காணத அளவு தமிழகம் இன்று தமிழீழம் வேண்டி எழுச்சி கொண்டிருக்கிறது.

தமிழீழம் தான் இறுதி இலக்கு என்பதில் தமிழக மக்கள் கொண்டிருக்கும் உறுதியும் அதற்காக தமிழக மக்கள் கொடுத்திருக்கும் விலையும் செய்து கொண்டிருக்கும் உழைப்பும் இந்திய வல்லரசிற்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தமிழக மாற்றத்தையும் எழுச்சியையும் சிதைப்பதற்கு இந்திய மத்திய அரசு பாரிய வேலைத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறது. அதன் முதல் கட்டம் தான் "டெசோ" அமைப்பு தூசி தட்டப்பட்டது.

கருணாநிதி மதல்வராக இருக்கும் பொழுது 2009 இல் பல கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாது இந்திய ராணுவத்தை விடுதலைப்புலிகளுடனான நேரடி மோதலுக்கு நதமிழகம் ஊடாக சிங்கள தேசத்திற்கு அனுப்பி வைத்தவர் தான் கருணாநிதி. தவிர வன்னிக்கு கொண்டு செல்ல தமிழக மக்கள் கொடுத்த அத்தனை உணவுப் பொருட்களையும் தடுத்து பெரும் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி சிங்கள அரசிற்கு உதவி செய்தவர்.

கருணாநிதியின் உழைப்பிற்கு சிங்கள அரசு தேயிலைத் தோட்டங்களையும் பெற்றோலிய அகழ்வு நிறுவன ஒப்பந்தத்தையும் மற்றும் சில பெரும் வர்த்தக நடவடிக்கைகளையும் குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.

கருணாநிதி புலிகளை அழித்து தமிழர்களை அடிமைகளாக தன்னிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எப்படியெல்லாம் செயற்பட்டார்.. போர்க்காலத்தில் என்ன நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை விக்லீஸ் வெளிக் கொணர்ந்திருந்தது அனைவருக்கும் தெரியும்.

போர்க்காலத்தில், வைக்கோ அய்யா.. நெடுமாறன் அய்யா.. சீமான் உள்ளிட்ட பல தமிழீழ ஆதரவுச் சக்திகளை சிறையில் அடைத்து தமிழகத்தில் மக்கள் விழிப்படைந்து எழுச்சியுறும் நிலையை தடுத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அண்ணன் முத்துக்குமார் வைத்த தீயை தனது அதிகாரத்தால் அணைத்து மத்திய அரசின் இன அழிப்பு அத்தியாத்தில் முக்கிய இடம் பிடித்தவர் இந்த கருணாநிதி.

2009 இற்கு பிறகு தமிழீழ மக்கள் யாருமே கருணாநிதியிடம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தருமாறு கேட்கவேயில்லை. இந்த நிலையில் தமிழக மக்கள் கருணாநிதியை அரசியலில் இருப்பை இல்லாது செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இன்று என்றும் இல்லாதவாறு தமிழக இளைஞர்கள் தெளிவடைந்து எழுச்சியுற்று எதையும் எதிர்க்க கூடிய போராட்ட குணத்திற்கு மாறியிருக்கின்றனர். இதை சிதைத்து தமிழக மக்களை திசை திருப்புவதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் அங்கம் தான் "டெசோ" கூத்தடிப்புகள் என்பதை தமிழக மக்களுக்கு தெளிவடைய செய்யுங்கள்.


4 நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த தலைவர் என்று தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டிய கருணாநிதி பிரணாப் தவறான தகவல் தந்ததாக சொல்லியிருந்தார். இவர் போஸ்டர் அடித்து ஒட்டிய காலப்பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் லட்சக்கணக்கில் வீதியில் நின்று போராடிக் கொண்டிருந்தார்கள்.

தன்னைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள ஒரு குழுவோ அல்லது முகாமைத்துவமோ இல்லாத கருணாநிதிக்கு ஏன் முதலமைச்சர் பதவி?? நாளை தமிழக மக்களுக்கு எங்காவது ஒரு நாட்டில் பெரும் அழிப்பு நடந்தால்.. அப்படியொன்றும் நடக்கவில்லை என்று மத்திய அமைச்சர் சொன்னால் இந்த கருணாநிதி நம்புவாரா?? தமிழர்களை முட்டாள்களாகவும் வெறும் சினிமா ரசிகர்களாகவும் நினைத்து தொடர்ச்சியாக செய்யும் அயோக்கியத்தனத்தை தட்டிக் கேழுங்கள்.

தமது வியாபாரத்தையும்.. ராஜபக்ச குடும்பத்தையும் பார்க்க  தொடர்ச்சியாக கொழும்புவரை கருணாநிதியின் கும்பலை யாழ்ப்பாணம் வரை சிங்கள சிப்பாய்களினதோ சிங்கள பொலிசாரினதோ பாதுகாப்பில்லாமல் வரச்சொல்லுங்கள். நிட்சயமாக அடித்துக் கொல்வோம்!!

தமிழீழ பயணத்தில் ஒன்று திரண்ட பெரும் சக்தியாக தோள் கொடுக்கும் சக்தியாக ஒட்டு மொத்த இனத்தின் விடுதலைக்காக எழுச்சி கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களை சதிவலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த தமிழனத்தை முடமாக அடிமைகளாக மாற்றுவதற்கான பெரும் சதியில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.


போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு கருணாநிதி போட்ட பெரும் சதி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. அதாவது தமிழகத்தில் கருணா குழுவிற்கு அடைக்கலம் கொடுத்திருந்த கருணாநிதி ஜெயலலிதாவின் முக்கிய கட்சி உறுப்பினர்கள் சிலரை போட்டு தள்ளிவிட்டு அதை ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுவதனால் புலிகள் தான் செய்தனர் என்று கதையை மாற்றி தமிழகத்தில் புலிகள் மீதான ஆதரவை சிதைப்பது.
எது எப்படியோ இந்த கதை அம்பலமாகியது.


தமிழீழம் தேவையா இல்லையா என்பதை தமிழீழ மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணை சர்வதேச மனித உரிமை சரத்துக்களின் படி நடக்கட்டும். அதற்கான தண்டனையை சட்டம் செய்யட்டும். அது தமிழினத்தின் விடிவல்ல.

தமிழீழம் தான் இலக்கு. அதற்கு சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை எல்லா பக்கத்தாலும் வலியுறுத்துங்கள்.

டெசோ என்பது தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று தமிழக மக்கள் கொண்டிருக்கும் எழுச்சியை திசை திருப்புவதற்கான அல்லது தடை செய்வதற்கான மத்திய அரசின் செயற்திட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முடிந்தால் டெசோ தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பு அய்.நா முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கட்டும் பார்க்கலாம்.
கருணாநிதி தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை அய்.நா முன்னின்று நடாத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கட்டும் பார்க்கலாம்.

அன்பான தமிழக உறவுகளே!!

நாற்பதுனாயிரத்திற்கும் மேலான மாவீரர்களையும் லட்சக்கணக்கில் மக்களையும் இழந்து ரத்த சகதியில் எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அங்கங்களை இழந்து ஆயிரமாயிரம் போராளிகளும் மக்களும் இன்று வலிகளோடும் தமிழீழ கனவை சும்ந்து கொண்டிருக்கின்றனர்.

வாழ்வாதரங்களை இழந்தும் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பயம் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழீழம் முற்று முழுதாக அரச பயங்கரவாதத்திற்குள் சிக்குண்டு அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தமிழக மாற்றமும் எழுச்சியும் மிக முக்கியமான ஒன்று. சதிகளில் சிக்கிவிடாது போராடுங்கள்.
இதை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.


மே17 இயக்கம், நாம்தமிழர் கட்சி தொடர்பாக தமிழீழ மக்கள் ஆவலாக செய்தி படிக்கிறார்கள். வைகோ அய்யாவில் நீண்டகால மரியாதையும் உரிமையும் தொடர்ந்தும் இருக்கிறது.


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று உலகமெங்கும் ஒலிக்கட்டும்.


ஆதி
6-3-13

Sunday, March 3, 2013

நாம் தோற்றுக் கொண்டு இருக்கிறோமா!!!

முள்ளிவாய்க்கால் வரை நடந்த இன அழிப்பு ஆதாரத்தை மட்டும் எடுத்து அது குறித்து மட்டுமே பேசி நான்கு வருடங்களை வீணடித்துக் கொண்டும் சர்வதேசத்திற்கு 2009 ற்கு பிறகு தமிழர் தாயகத்தில் நடக்கும் இன அழிப்பு வடிவம் தெரியவில்லையா!!! ஆதாரங்கள் இல்லையா!!!

2009 ற்கு பிறகு நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பு பற்றி இது வரை ஏன் அய்.நா மன்றத்தில் பேசப்படவில்லை!!! அமெரிக்கா ஏன் கண்டு கொள்ளவில்லை!!!

தமிழரை மீண்டும் ஒரு பொறிக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழீழ தேசத்தை அணு அணுவாக தடயமற்று அழிப்பதற்கான கால அவகாசத்தை சிங்கள தேசத்திற்கு சர்வதேசம் திட்டமிட்டு வழங்கிக் கொண்டிருக்கிறதா!!

# தமிழினத்தின் மீதான இன அழிப்பு முள்ளிவாய்காலுடன் முடிவடைந்து போலும்.. அதற்கு தீர்வு கண்டால் எல்லாம் சரி என்பது போலும் ஏன் சோடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!!!

உலகத் தமிழினமே!!!! எமது விடுதலைப்போராட்ட சிந்தனைகள் குறுகிவிட்டதா!!! 2009 ற்கு பிறகும் மோசமான இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழீழம் தான் எமது இலக்கு என்றும் வீதிக்கு இறங்கி கத்து...
 
3-3-2013

தமிழீழத்தின் 2009 இல் இருந்து 2013 வரை # அழிப்புகளும் மாற்றங்களும்

உலக நாடுகள் இன அழிப்பை முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி நான்கு வருடங்கள் கடக்கவுள்ள நிலையில் தமிழீழ நிலப்பரப்பின் புவியியல் மற்றும் மக்கள் நிலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அழிப்புகளையும் மாற்றங்களையும் இந்தப்பதிவில் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதற்கு முதல் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதற்கு சமாதான காலத்தில் நோர்வே உள்ளிட்ட வெளிநாடுகள் போட்ட சதி பற்றி சற்று புரிந்து கொண்டு நகரவோம்.

விடுதலைப்புலிகள் தமது அமைப்பிற்கு ஆட்களை இணைக்கும் பொழுது மிகக்கவனமாக கையாளும் பொறிமுறையை ஆரம்பத்தில் இருந்தே வைத்திருந்தார்கள். யார் வேணும் என்றாலும் அமைப்பில் இணைய முடியாதவாறு இறுக்கமாக இருந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவுவது சிம்மசொப்பனமாக இருந்தது.

இதை நாடிபிடித்த உளவு நிறுவனங்கள் சமாதான காலத்தில் திட்டம் தீட்டின. தீர்வு எட்டப்படாமல் சமாதான ஒப்பந்தம் குழப்புப்பட வேண்டும் அதே நேரத்தில் போர் தொடங்க முன் புலிகளுக்குள் ஊடுருவ வேண்டும்.

சமாதான காலத்தில் வெளிநாட்டு அரச நிர்வாக அலுவல்கள் பற்றி விடுதலைப்புலிகள் அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தான் வெளிநாடுகளில் இருக்கும் "கட்டாய இராணுவ பயிற்சி" பற்றிய தகவல்களும் புலிகளுக்கு அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது.
கட்டாய ஆட்சேர்ப்பு இராணுவ நடைமுறையிலோ அரச நடைமுறையிலோ ஒரு குற்றமல்ல என்று அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை உறவு முறைகளில் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது ஏதாவது வன்முறை பாவிக்கப்படின் உணர்ச்சிவசப்பட்டு தமது எதிர்பபையும் வெறுப்பையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்துபவர்கள். அதனால் கட்டாய ஆட்சேர்ப்பு புலிகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் என்ற உளவியலை பெரிதும் நம்பியது வெளிநாட்டு நிறுவனங்கள்.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அண்ணையின் இழப்பிற்கு பின்னர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணையினூடாகவே விடுதலைப்புலிகள் வெளிநாட்டு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் உறவு நிலை பற்றி கவனம் செலுத்தி வந்தார்கள். இந்த நிலையில் தமிழ்ச் செல்வன் அண்ணையை கொலை செய்யும் படி ஆலாசனை வழங்கியதும் இந்த நோர்வே கூட்டம் தான் என்று தெரிகிறது.

உச்சக்கட்ட போர் தொடங்கப்பட முதல் தமிழ்ச்செல்வன் அண்ணை கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி விடையத்திற்கு வருகிறேன்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் முள்வேலி இன அழிப்பு முகாம்கள் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆதாரங்களுடன் பல மட்டங்களில் எழுதியாகிவிட்டது. தவிர சனல் 4 ஊடகம் இனப்படுகொலையை அக்குவேறாணிவேராக பிரி்த்து அம்பலப்படுத்திவிட்டது.

ஆனால் இன்று முகாம்களில் இருந்து காடுகளுக்கும் சில வீடுகளுக்கும் துரத்தப்பட்டிருக்கும் மக்கள், மக்களின் நிலங்கள், வாழ்வாதாரங்கள், இனத்தின் இருப்புகள் என்ன நிலையில் இருக்கின்றன.. எப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன பற்றி தமிழ் ஊடகங்களே தொடர்ச்சியாக பதிவு செய்ய மறுக்கின்றன.

ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இன்னமும் பிரிக்கப்ட்ட நிலையில் தான் இருக்கிறது. விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக சிங்கள தேசம் அறிவித்து நான்கு வருடம் ஆகியும் இன்னமும் புளியங்குளம் சோதனைச்சாவடி அதே இடத்தில் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

சிங்கள மயமாக்கல் உத்தி

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த புளியங்குளம், கனகராயன் குளம், மாங்குளம், முறுகண்டி, கிளிநொச்சி, பரந்தன், ஆணையிறவு, பளை,இயக்கச்சி, முகமாலை  வரையிலான ஏ9 பாதை அணு அணுவாக சிங்கள தேசமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.தவிர முகமாலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான ஏ9 பாதை ஏற்கனவே இராணுவ முகாம்களால் சிங்கள மயமாக்கப்பட்டிருக்கிறது.

புளியங்குளம் தொடக்கம் முகமாலை வரை ஏ9 பாதையை அண்டி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டு புத்தர் குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அரச காணிகள் ராணுவ முகாம்களாகவும் நிலத்தை பார்க்க வரமுடியாமல் இருக்கும் தனியார் காணிகள் புத்தர் விகாரைகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் குடியேற்றப்பட்ட கையுடன் இராணுவ குடும்பங்கள் குடியேற்றப்பட்டுகின்றன.

விரைவாக கட்டி முடிக்க கூடிய கட்டட தொழினுட்பத்திலான (டியுறா போட் வீடுகள்) வீடுகள் அவசர அவசரமாக கட்டப்பட்டு சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன. சிறிது காலத்தின் பின் அத்திவாரம் போட்டு நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன.


ஏன் ஏ9 பாதை சிங்கள மயமாக்கலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது

சந்திரிகா ஆட்சியில் அனுரத்த ரத்வத்தை தலமையிலான ராணுவம் "ஜெயசிக்குறு" ஆக்கிரமிப்பு போரை தொடங்கியிருந்தது. அதன் பிரதான நோக்கம் ஏ9 பாதையை கைப்பற்றுவது. காரணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை கூறுபோடுவது, விநியோக பாதையை பிளவுபடுத்துவது, ஆட்பலத்தை பிளவுபடுத்துவது, திசை திருப்பல் தாக்குதல்களை மேற்கொள்ளுவதன் மூலம் மக்களை குழப்புவது.

புலிகளின் முறியடிப்பு சமரில் தோற்றுப்போன அந்த திட்டத்தை இப்பொழுது கோத்தபாய தலமையிலான சிங்கள ராணுவம் விரைவாக நிறைவேற்றி வருகிறது.

ஏ9 பாதை முற்று முழுதாக சிங்களமயமாக்கப்படும் பட்சத்தில் வடக்கு மாகாண மக்கள் இரு பகுதியினராக பிரிக்கப்படுவார்கள். பெருமளவிலான கடற்கரைகள் இராணுவ முகாம்களாலும் சிங்கள மீனவ குடும்பங்களாலும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் ஏ9 பாதை நேர்த்தியான சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுவருகிறது.

இன்னமும் சிறிது காலத்தில் ஏ9 ற்கு கிழக்கே உள்ள மக்களை சுற்றி சிங்கள இராணுவமும் சிங்கள மக்களும் இருப்பார்கள் அதே போல் மேற்கிலும் இருப்பார்கள்.

இன்று ஏ9 கிழக்கில் இருந்து மேற்கிற்கு யார் செல்வதென்றாலும் ஒரு ராணுவ முகாமையாவது தாண்டித்தான் சென்றாக வேண்டிய நிலையிருக்கிறது.


தமிழர் காலாச்சார விழுமிய அழிப்புகள்

ஏ9 வீதியை அண்டி பெரிய அளவிலான கோயில்கள் குறைவு,தேவாலையங்கள் குறைவு . ஏ9 பாதையில் இருக்கும் கோயில்களின், தேவாலையங்களின் எண்ணிக்கையை விட புத்த விகாரைகளின் எண்ணிக்கையே அதிகம். ஏ9 வீதிக்கருகில் மக்கள் இருக்கும் வீடுகளைவிட இராணுவத்தின் முகாம்களும் இராணுவம் தங்கும் விடுதிகளும் தான் அதிகம்.

கட்டட அமைப்புகள், பெயர்பலகைகள், வர்ணப்பூச்சுகளின் நிறங்கள் எல்லாமே வேகமாக சிங்கள மயமாக்கபட்டுக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டப்படும் கட்டங்களில் சிங்கள கலாச்சார சாயல் கட்டாயமாக உருவாக்கப்படுகிறது.

அசோக சக்கரத்தையும் பெளத்த கொடியையும் கொண்ட துணிகளில் சிறிலங்கா தேசிய கொடி பொறிக்கப்பட்டு தமிழர் தேசமெங்கும் பறக்கவிடப்படுகிறது. பொதுமக்கள் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் வங்கிகள் கடைகள் என எல்லா இடங்களிலும் இது பறக்கவிடப்பட்டிருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் பேரூந்துகளில் சிங்களவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.. கட்டாயமாக சிங்கள பாடல்கள் ஒலிக்கவிடப்படுகிறது.


திட்டமிடப்பட்ட உளவியல் போர்

புலம்பெயர் தமிழர்கள் மட்டத்தில் இன்னமும் புரியப்படாத இந்தப் போர் தமிழீழ தாகயக்கில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது மற்றும் விடுதலை தொடர்பில் பகிரங்கமாக வெளிப்பட்ட இன ஒடுக்குமுறையை வெளிநாட்டு அமைப்புகள் திறம்பட கையாளத் தவறியிருக்கின்றன. அது பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.

யாழ் நகர் உள்ளிட்ட மாணவர்கள் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமான மலையாள திரைப்படங்களில் குறுந்தகடுகள் தாராளமாக கிடைக்கின்றன. வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகின்றன.

போராட்டம் பற்றியும் படிப்பை பற்றியும் பேசித்திரிந்த மாணவர்களிடையில் இன்று சினிமா பற்றி கதைக்கும் கலாச்சாரம் திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டிருக்கிறது.

இந்திய சாமிகளின் பெயரில் மக்களை வரவழைத்து சமூகம் பற்றிய அக்கறையை இல்லாது செய்து சுயநல போதனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தவிர அச்சமூட்டும் நடவடிக்கைகள், பழிவாங்கல்கள், பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் மிரட்டல்கள் என தமிழினம் தன்னை பலவற்றிற்கு தன்னை பாதுகாக்க வேண்டும் என்ற வெறுப்பு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.



தமிழீழ அடிப்படைப் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எப்படி தமிழனம் அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த முன் வடக்கு மாகாணத்தில் என்ன மாற்றத்தை செய்ய சிங்கள தேசம் அவசரமாக வேலை செய்கிறது என்பது பற்றியும் தொடரும் பதிவில் தருகிறேன்.


தொடரும்..


ஆதி
21-02-2013

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP