Powered by Blogger.

Wednesday, March 6, 2013

அன்பான தமிழக உறவுகளே!!!

அன்பான தமிழக உறவுகளே!!!

2009 ற்கு பிறகு வரலாறு காணத அளவு தமிழகம் இன்று தமிழீழம் வேண்டி எழுச்சி கொண்டிருக்கிறது.

தமிழீழம் தான் இறுதி இலக்கு என்பதில் தமிழக மக்கள் கொண்டிருக்கும் உறுதியும் அதற்காக தமிழக மக்கள் கொடுத்திருக்கும் விலையும் செய்து கொண்டிருக்கும் உழைப்பும் இந்திய வல்லரசிற்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தமிழக மாற்றத்தையும் எழுச்சியையும் சிதைப்பதற்கு இந்திய மத்திய அரசு பாரிய வேலைத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறது. அதன் முதல் கட்டம் தான் "டெசோ" அமைப்பு தூசி தட்டப்பட்டது.

கருணாநிதி மதல்வராக இருக்கும் பொழுது 2009 இல் பல கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாது இந்திய ராணுவத்தை விடுதலைப்புலிகளுடனான நேரடி மோதலுக்கு நதமிழகம் ஊடாக சிங்கள தேசத்திற்கு அனுப்பி வைத்தவர் தான் கருணாநிதி. தவிர வன்னிக்கு கொண்டு செல்ல தமிழக மக்கள் கொடுத்த அத்தனை உணவுப் பொருட்களையும் தடுத்து பெரும் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி சிங்கள அரசிற்கு உதவி செய்தவர்.

கருணாநிதியின் உழைப்பிற்கு சிங்கள அரசு தேயிலைத் தோட்டங்களையும் பெற்றோலிய அகழ்வு நிறுவன ஒப்பந்தத்தையும் மற்றும் சில பெரும் வர்த்தக நடவடிக்கைகளையும் குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.

கருணாநிதி புலிகளை அழித்து தமிழர்களை அடிமைகளாக தன்னிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எப்படியெல்லாம் செயற்பட்டார்.. போர்க்காலத்தில் என்ன நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை விக்லீஸ் வெளிக் கொணர்ந்திருந்தது அனைவருக்கும் தெரியும்.

போர்க்காலத்தில், வைக்கோ அய்யா.. நெடுமாறன் அய்யா.. சீமான் உள்ளிட்ட பல தமிழீழ ஆதரவுச் சக்திகளை சிறையில் அடைத்து தமிழகத்தில் மக்கள் விழிப்படைந்து எழுச்சியுறும் நிலையை தடுத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அண்ணன் முத்துக்குமார் வைத்த தீயை தனது அதிகாரத்தால் அணைத்து மத்திய அரசின் இன அழிப்பு அத்தியாத்தில் முக்கிய இடம் பிடித்தவர் இந்த கருணாநிதி.

2009 இற்கு பிறகு தமிழீழ மக்கள் யாருமே கருணாநிதியிடம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தருமாறு கேட்கவேயில்லை. இந்த நிலையில் தமிழக மக்கள் கருணாநிதியை அரசியலில் இருப்பை இல்லாது செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இன்று என்றும் இல்லாதவாறு தமிழக இளைஞர்கள் தெளிவடைந்து எழுச்சியுற்று எதையும் எதிர்க்க கூடிய போராட்ட குணத்திற்கு மாறியிருக்கின்றனர். இதை சிதைத்து தமிழக மக்களை திசை திருப்புவதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் அங்கம் தான் "டெசோ" கூத்தடிப்புகள் என்பதை தமிழக மக்களுக்கு தெளிவடைய செய்யுங்கள்.


4 நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த தலைவர் என்று தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டிய கருணாநிதி பிரணாப் தவறான தகவல் தந்ததாக சொல்லியிருந்தார். இவர் போஸ்டர் அடித்து ஒட்டிய காலப்பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் லட்சக்கணக்கில் வீதியில் நின்று போராடிக் கொண்டிருந்தார்கள்.

தன்னைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள ஒரு குழுவோ அல்லது முகாமைத்துவமோ இல்லாத கருணாநிதிக்கு ஏன் முதலமைச்சர் பதவி?? நாளை தமிழக மக்களுக்கு எங்காவது ஒரு நாட்டில் பெரும் அழிப்பு நடந்தால்.. அப்படியொன்றும் நடக்கவில்லை என்று மத்திய அமைச்சர் சொன்னால் இந்த கருணாநிதி நம்புவாரா?? தமிழர்களை முட்டாள்களாகவும் வெறும் சினிமா ரசிகர்களாகவும் நினைத்து தொடர்ச்சியாக செய்யும் அயோக்கியத்தனத்தை தட்டிக் கேழுங்கள்.

தமது வியாபாரத்தையும்.. ராஜபக்ச குடும்பத்தையும் பார்க்க  தொடர்ச்சியாக கொழும்புவரை கருணாநிதியின் கும்பலை யாழ்ப்பாணம் வரை சிங்கள சிப்பாய்களினதோ சிங்கள பொலிசாரினதோ பாதுகாப்பில்லாமல் வரச்சொல்லுங்கள். நிட்சயமாக அடித்துக் கொல்வோம்!!

தமிழீழ பயணத்தில் ஒன்று திரண்ட பெரும் சக்தியாக தோள் கொடுக்கும் சக்தியாக ஒட்டு மொத்த இனத்தின் விடுதலைக்காக எழுச்சி கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களை சதிவலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த தமிழனத்தை முடமாக அடிமைகளாக மாற்றுவதற்கான பெரும் சதியில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.


போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு கருணாநிதி போட்ட பெரும் சதி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. அதாவது தமிழகத்தில் கருணா குழுவிற்கு அடைக்கலம் கொடுத்திருந்த கருணாநிதி ஜெயலலிதாவின் முக்கிய கட்சி உறுப்பினர்கள் சிலரை போட்டு தள்ளிவிட்டு அதை ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுவதனால் புலிகள் தான் செய்தனர் என்று கதையை மாற்றி தமிழகத்தில் புலிகள் மீதான ஆதரவை சிதைப்பது.
எது எப்படியோ இந்த கதை அம்பலமாகியது.


தமிழீழம் தேவையா இல்லையா என்பதை தமிழீழ மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணை சர்வதேச மனித உரிமை சரத்துக்களின் படி நடக்கட்டும். அதற்கான தண்டனையை சட்டம் செய்யட்டும். அது தமிழினத்தின் விடிவல்ல.

தமிழீழம் தான் இலக்கு. அதற்கு சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை எல்லா பக்கத்தாலும் வலியுறுத்துங்கள்.

டெசோ என்பது தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று தமிழக மக்கள் கொண்டிருக்கும் எழுச்சியை திசை திருப்புவதற்கான அல்லது தடை செய்வதற்கான மத்திய அரசின் செயற்திட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முடிந்தால் டெசோ தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பு அய்.நா முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கட்டும் பார்க்கலாம்.
கருணாநிதி தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை அய்.நா முன்னின்று நடாத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கட்டும் பார்க்கலாம்.

அன்பான தமிழக உறவுகளே!!

நாற்பதுனாயிரத்திற்கும் மேலான மாவீரர்களையும் லட்சக்கணக்கில் மக்களையும் இழந்து ரத்த சகதியில் எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அங்கங்களை இழந்து ஆயிரமாயிரம் போராளிகளும் மக்களும் இன்று வலிகளோடும் தமிழீழ கனவை சும்ந்து கொண்டிருக்கின்றனர்.

வாழ்வாதரங்களை இழந்தும் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பயம் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழீழம் முற்று முழுதாக அரச பயங்கரவாதத்திற்குள் சிக்குண்டு அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தமிழக மாற்றமும் எழுச்சியும் மிக முக்கியமான ஒன்று. சதிகளில் சிக்கிவிடாது போராடுங்கள்.
இதை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.


மே17 இயக்கம், நாம்தமிழர் கட்சி தொடர்பாக தமிழீழ மக்கள் ஆவலாக செய்தி படிக்கிறார்கள். வைகோ அய்யாவில் நீண்டகால மரியாதையும் உரிமையும் தொடர்ந்தும் இருக்கிறது.


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று உலகமெங்கும் ஒலிக்கட்டும்.


ஆதி
6-3-13

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP