Powered by Blogger.

Thursday, May 26, 2011

ஈழப்பிரச்சினையில் உலகத்தின் பார்வையும் புலம்பெயர் தமிழரின் தேவையும்.



ஈழப்பிரச்சினையை பொறுத்தவரை உலக அரசியல் தளம் பல்வேறு வழி முறைகளில் இதை கையாள்கிறது. மேற்குலகம் தனியொரு பார்வையையும் தெற்காசியா பிறிதொரு பார்வையினூடாகவும் இதை அணுகுகிறது எனலாம். தெற்காசிய “அரசியல் செல்வாக்கு” நாடுகளை பொறுத்தவரை வெளிப்படையாக அமெரிக்க எதிர்ப்பு போக்கை வெளிப்படுத்துகின்றன. அதாவது அமெரிக்கா தெரிவிக்கும் எதற்கும் எதிர்மறையான செயற்பாட்டை வெளிப்படுத்துவதையே இந்த அரசுகள் விரும்புகின்றன எனக் கூட கூறலாம். ஆனால் இந்த நாடுகள் எந்த அளவிற்கு அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும் என்பது சந்தேகத்திற்குரியதே.

இலங்கையில் நடந்த போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30ற்கு மேற்பட்ட நாடுகள் செல்வாக்கை செலுத்தியிருந்தன என விமர்சனங்கள் இருக்கின்றன. அதாவது தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு 30 நாடுகளை களம் இறக்கியிருந்தது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் ஆயுத போராட்ட வடிவை பயங்கரவாதமாக சித்தரித்து தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு போரிற்கு சிறிலங்கா அரசு மற்றைய நாடுகளையும் உதவிக்கு இழுத்திருந்தது.

தமிழ் மக்களின் போராட்டத்தின் தார்ப்பரியம் அதன் பின்னணி அதன் தேவை சிங்கள பயங்கரவாதத்தின் ஆழம் குறித்து போதியளவு அறிந்திராத நாடுகள் சிறிலங்கா அரசின் இன அழிப்பு போருக்கு ஆதரவு செய்திருந்தன. போருக்கு ஆதரவு செய்த நாடுகளுக்கு போரிற்கு பின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. போருக்கு எந்த வழியிலும் உதவிய அத்தனை நாடுகளும் சிறிலங்காவில் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆதை தட்டிக் கேட்க கூடிய உரிமை தமிழ் மக்களிற்கு இருக்கிறது.

மேற்குலகத்தின் போக்கு
மேற்குலகத்தை பொறுத்தவரை தமது தெற்காசிய ராஜதந்திர நகர்வுகளிற்கு மற்றும் வர்த்தக ஊடுருவல்களுக்கு சிறிலங்கா என்பது இன்றியமையாத தேவையாக இருந்து வருகிறது. தமது ஊடுருவல்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசின் பேச்சிற்கேற்ப சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நிரலில் தான் தம்மோடு எந்த தொடர்புமற்ற தமிழ் மக்களின் விடுதலை அமைப்பை தடைசெய்தது. தடை செய்தது மட்டுமல்லாது விடுதலைப்புகளுக்கெதிரான போரில் தொழினுட்ப ரீதியிலான உதவிகளை வழங்கி விடுதலைப்புலிகளின் நகர்வுகளை சிறிலங்கா அரசிற்கு கொடுத்தது. மேற்குலகின் இந்த செயற்பாடுகள் தான் இன்று தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் ஈழத்தில் முடங்கி தமிழ் மக்கள் சிங்கள அரசின் அடிமைகளாகக்ப்ட்டுள்ளனர்.

இப்போது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் விடையத்தில் நடந்து கொள்ளும் முறைகளில் அதிர்ப்தி அடைந்த மேற்குலகம் சிறிலங்கா அரசை தண்டித்து வரப்போகும் சிறிலங்காவின் அரசுகளிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற கொள்கையில் இருப்பது போல் இருக்கிறது. தமிழ் மக்கள் பல லட்சக்கணக்கில் வெளிநாடுகளில் பரந்து கிடப்பதால் அவர்கள் ஒரே நேரம் திரண்டெழுந்து தம்மிடம் நீதி கேட்டால் தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த வஞ்சகப்போக்கு உலகத்தாருக்கு தெரிந்து விடும் என்ற ரீதியில் இதை கையாள்கிறது. தவிர முதலாளித்துவ போக்கு கொண்ட சீன அரசாங்கத்தின் தலையீட்டையும் கட்டுப்படுத்த நினைக்கிறது மேற்குலகம்.

தெற்காசியாவின் போக்கு 
தெற்காசியா எனப்படும் போது இங்கு வல்லரசுக்கனவோடு இருக்கும் இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்கமே அதிகம். சீனாவை பொறுத்தவரை இந்தியாவை கண்காணிப்பதற்கும் தனது வர்த்தக வலயங்களை உருவாக்குவதற்கும் மட்டுமே சிறிலங்கா தேவை. அதே போல் தனது அரசியல் பலத்தை பரிசீலிப்பதற்கான தளமாகவும் ஈழப்பிரச்சினையை பார்க்கிறது சீனா. சுpறிலங்காவின் பிரச்சினைகளில் மற்றய நாடுகள் தலையிட வேண்டாம் என்பது போன்றான எச்சரிக்கைகளும் இதன் தொடர்களே.
ஏல்லாவற்றிற்கும் அப்பால் வல்லாதிக்க திமிரின் திரை மறைவில் ஒழிந்து நிற்கும் போர்க் குற்றவாளி இந்தியாவே. இன்று தமிழ் மக்கின் விடுதலைப்போராட்டத்திற்கு அனைத்து வழிகளிலும் சிங்கள அரசிற்கு உதவியளித்து தமிழர் போராட்டத்தை நசுக்கியது இந்த இந்தியா தான் என்பது வெளிப்படை உண்மை. சிறிலங்கா அரசு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டால் இந்தியாவின் போர்க்குற்றத்திற்கெதிரான சாட்சியமாக அது மாறிவிடும் என்று அஞ்சுகிறது இந்தியா.

சிறிலங்கா அரசிற்கெதிரான அத்தனை குற்றச்சாட்டுகளையும் தனது ராஜதந்திர மற்றும் ஊழல் அரசியலினூடாக மறைத்துக் கொள்கிறது இந்தியா. சிறிலங்காவில் இப்போது சீனாவின் ஆதிக்கம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலும் சிறிலங்காவிற்கு ஒரு எச்சரிக்கை கூட விடமுடியாத நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது இந்திய வல்லாதிக்கம். குடும்ப பழிவாங்கலுக்காக தமிழீழ மண்ணையே சுடுகாடாக்கிய சோனியாவின் அரசு சிறிலங்கா அரசினால் குற்றவாளிக் கூண்டுக்கு கூட்டிச் செல்லப்படக் கூடிய நிலை காணப்படுவதனால் சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்கான முழு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது இந்திய வல்லாதிக்கம்..

புலம்பெயர் தமிழர்களின் தேவை
இந்த உலகமயப்படுத்தப்பட்ட எமது போராட்டத்தில் இனிவரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு முற்று முழுதாக தேவைப்படும். எமது உரிமைப் பிரச்சினையை பொறுத்தவரை நாங்கள் கேட்டு இந்தியா எமக்கு நேரடியாக உதவப்போவதில்லை. ஆனால் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்குலக நாடுகளில் இருந்து எமது போராட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் இந்த நாடுகளாலையே முன்வைக்கப்பட்டது. எமது பிரச்சினைகளை நிதானமாக உள்வாங்கக் கூடியவர்களாக இருப்பவர்கள் மேற்குலகத்தினர் மட்டுமே.
சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ள ஜ.நா வின் அறிக்கை தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்தும் பேசியிருந்தது. எனவே சிறிலங்காவில்; எமக்கான உரிமைகள் மறுப்பு குறித்து மேற்குலகம் தெளிவடையத் தொடங்கியிருக்கிறது என்ற முடிவிற்கு நாம் தாராளமாக வரலாம்.

சனல் 4 மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சியகள் காட்டிய வீடியோ குறிப்பிட்ட ஒருசில சம்பவங்கள் மட்டுமே. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கிடைக்காமலும் எந்த தடயமுமின்றி சிங்கள அரசால் நடாத்தப்ட்ட கொடுரங்கள் நிறைய என்பதை எல்லாத்தமிழர்களும் அறிவார்கள்.
எம்மீதான அழிப்பை எவ்வளவு கொடுரமாய் சிறிலங்கா அரசு நடாத்தி முடித்தது என்று இன்று உலகம் பூராவும் பார்க்க கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் நாங்கள் இந்த சிறிலங்கா அரசிற்கு எதிராக எமது விடுதலைக்காக எமது தாயக உறவுகளிற்க்காக எதை செய்தோம் என்று யாராவது சிந்தித்துண்டா??

ராஜதந்திர வழியிலான போராட்டங்களை முன்னெடுக்க ஒவ்வொரு தமிழரும் ஒன்றிணைய வேண்டும். குழுக்களாக பிரிந்து கிடக்கும் தமிழர்கள் தமிழினமாக ஒன்றுபட்டு ஒட்டுமொத்த இனத்தின் விடுதலைக்கு பாடுபடவேண்டும். அந்ததந்த நாடுகளில் அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் அரசியல் கட்சிகள் சர்வதேச அமைப்புகள் என எல்லாவற்றுடனும் தொடர்புளை ஏற்படுத்தி தமிழினத்திற்கெதிராய் நடந்தேறிய போர்க்குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தெளிவுபடுத்துவதோடு தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்விற்கான நியாயத்தையும் தெளிவு படுத்தவேண்டும்.
மேற்குலகம் எமது பிரச்சினையை சரியான முறையில் அணுகுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்குலகத்தை பலமாக வைத்து இந்தியாவை அடக்க வேண்டும் அல்லது எமது பக்கம் உள்ள பிரச்சிகைகளுக்கு தீர்வு காண வலியுத்த வேண்டும். போராட்டங்களிற்கான புதிய வழிகளை திறப்போம். சுpறிலங்கா அரசின் நடவடிக்கைகளை முறியடிக்க கூடியவகையில் ராஜதந்திர நகர்வுகளினூடாக போராடுவோம். வீடுகளில் முடங்கிக்கிடப்பதால் எமக்கு விடுதலை கிடைக்க போவதில்லை.

உலகே எமது பிரச்சினை தொடர்பில் பார்வையை செலுத்தியுள்ள நிலையில் எமது போராட்த்தின் தேவையை உலகிற்கு உணர்த்த வேண்டியது கட்டாயமாகும் நேரமும் இதுவாகும்.
ஆதி
10-05-2011

Monday, May 23, 2011

புத்தருக்கு முதலில் மூத்திரம் அடிப்பது யார்??

இன்று தமிழ் மக்களை பொறுத்தவரை புத்தரை ஒரு ஞானியாகவும் பெளத்தத்தை ஒரு மதமாகவும் பார்க்கும் மனநிலை தாண்டி "பெளத்தம்" என்பது ஒரு இன அழிப்பு குறியீடாகவே பார்க்கின்றனர்.

வன்னியில் புத்த சிலைகளை கண்டால் குழந்தைகள் மிரளுகிறார்கள்...அரச மரங்களை கண்டால் "எப்ப இதில புத்தர கொண்டுவந்து வைக்கப்போறாங்களோ!!!" என்ற வெறுப்பு ஏக்கம் மக்களிடத்தில் பரவிக்கிடக்கிறது. சிங்கள அரசானது இன அழிப்பை ஆயுதத்தாலும் இனக்கலப்பு மற்றும் இனப்பரம்பல் சிதைப்பை பெளத்த்தாலும் செய்து வருகிறது.

கட்டாய கொண்டாட்டங்களும் உயர் நீதிமன்ற விதிகளை தாண்டிய ஒலிபரப்புகளும் ஆயுதப்படையின் பாதுகாப்புமென பெளத்தம் தமிழ் மக்களின் மீதான இனச்சிதைப்பை செய்யும் மிகப்பெரிய அரச இயந்திரமாக உருவெடுத்துள்ளது...அதில் புத்தன் அரக்கனாகவும் சிங்கள சிப்பாய்கள் அரக்கனின் பாதுகாவலர்களாகவும் மாற்றம் பெற்றுள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பிக்குவை கண்டால் "சிங்கள மொட்டையன்"  என்று காறி உமிழ்கிறார்கள். இது யாராலும் பயிற்றிவிக்கப்ட்டதல்ல.. பெற்றோர்கள் வீடுகளில் பேசுவதை அவர்கள் பெளத்தத்தின் மீது காட்டும் வெறுப்பை சிறுவர்கள் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தவிர அண்மையில் ஒரு இளைஞர் கூட்டம் இப்படி ஒரு பந்தையம் கட்டியது "இண்டைக்கு அதில இருக்கிற புத்தருக்கு முதலில் மூத்திரம் அடிக்கிறதாரு??"

தங்களின் இயலாமை காட்டுவதற்கு சிறுவர்களும் இளைஞர்களும் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்.

பெளத்தம் என்ற தியான நெறியை மதம் ஆக்கியதும்  அந்த மத வெறியால் இன்னொரு இனத்தை அழிப்பதும் சிங்களம் தான்...  சிறிலங்காவை பொறுத்தவரை பெளத்தம் ஒரு என்பது ஒரு மத தீவிரவாத அமைப்பு...

ஆதி
22-5-2011


 முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட கருத்தூட்டல்கள் கீழே..


· · Share · Delete
    • Pathinathan Arulnesan
      உங்களுக்கு யார் இதெல்லாம் வந்து சொல்றாங்கள்?...ஹா ஹா ஆ,

      இதுகளை பெருமையா வேற சொல்லிக்கொள்ள முடிகிறது உங்களால்....இவற்றை வைத்துக்கொண்டு பார்த்தால் உங்களைச் சுற்றிய சூளலை மட்டும்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர இது தமிழர்களின் புரட்சியாக தெரியா...து நண்பரே.

      இவற்றையெல்லாம் (அசிங்கங்களை) எழுதிதான், தமிழர்கள் மீண்டும் தங்கள் புரட்சியை ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டுமா? தமிழர்கள் அவ்வளவு முட்டாள்களா? - ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள்.

      இதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற வேலைகள், இந்த நாட்டில் மட்டுமல்ல உலகம் முளுவது பயன்படுத்தப்படும் கொலையாயுதம் மதம். சிங்கள அரசியல்வாதிகள் பௌத்தத்தை வைத்துக்கொண்டு மக்களை தமிழர்களுக்கெதிராக தூண்டினால் - அதே பௌத்தத்தை அசிங்கப்படுத்தி அவர்களுக்கெதிராக தமிழ் அரசியல்வாதிகள் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனடிப்படையில் உருவான போராட்டம் இறுதியில் கொலைவெறிபிடித்து தனது இனத்தையே தின்று அழிந்துவிட்டது. இப்போது எந்த நோக்கத்திற்காக அதே தூண்டல்களை தொடர்கிறீர்கள். நீங்கள் முதலில் யாருக்காக எழுதுகிறீர்கள்?...வரப்போகிற அடுத்த மெசியா யார்?

      தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை செய்ய சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்" இவ்வளவுதானே இங்கே நீங்கள் சொல்ல வருவது. அதை தடுக்க சந்தியில் நின்று புத்தனை மல்லுக்கிளுத்தால் சரிவருமா?

      நடுனிலையாய் நின்று எழுதுங்கள். உங்களுடைய வார்த்தைகள் , கோபங்களாகவும் அவலங்களாகவும் மட்டுமே தெரிகிறது...வீட்டுக்குள் நின்றுகொண்டு வீட்டின் குறை நிறைகளை சொல்ல முடியாது, அப்படிச் சொன்னால அது வெறும் பொறுக்காமல் வருகிற புலம்பலாகவே தோன்ன்றும். வெளியிலிருந்து பாருங்கள். அப்போது அதன் குறை நிறைகள் சரியாகத் தெரியும். அப்போது அதை சரியாக சொல்லமுடியும், எங்கள் நியாயங்கள் நீதியானதாக இருக்கும் அப்போதுதான் எங்களுக்கான நியாயமான நீதியை எதிர்பார்க்கமுடியும். நண்பனாக, வழ்த்துக்களுடன் - ப. அருள்நேசன்
      See More
    • ஆதி ஆதித்யன்
      இது யார் சார்பான தூண்டுதலோ போராட்டத்திற்கான அறைகூவலோ கிடையாது நண்பரே!!! எங்களை சுற்றி நடக்கும் அக்கிரமங்களும் சமூகத்தில் நடக்கும் அதன் பிரதிபலிப்பும் மட்டும் தான் இந்த பதிவு. இனி வரும் காலங்களில் வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களிற்கு மக்களுக...்கு யாரும் அறை கூவல் விடுக்க வேண்டிய தேவைகள் இல்லை. மாறாக மக்களின் இயலாத்தன்மையும் அதனால் அதிகாரங்களுக்கெதிராய் மக்கள் கூனிக்குறுகி சிந்திக்கும் முறைகளையும் நாங்கள் பேசியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது... இங்கு நான் எழுதி அத்தனை விடையங்களும் இப்பொழுது எமது சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பவை மட்டுமே!!! ....See More
      Yesterday at 12:20pm · · 1 personVasudevan Kanagasabai likes this.
    • ஆதி ஆதித்யன் இங்கு எந்த அசிங்கங்களினூடாகவும் பிரச்சினைகளை சொல்லவில்லை..... அன்றாட எமது வாழ்வில் பாவிக்கும் சொற்பிரயோகங்கள் மட்டுமே பாவித்திருக்கிறேன்... ....
      Yesterday at 12:24pm ·
    • Pathinathan Arulnesan ம்ம் :)
      Yesterday at 12:36pm · · 1 personLoading...
    • Ajith Sajith sariyaga sonnirkal aathi
      Yesterday at 3:42pm ·
    • Kirishanth Selvanayagam
      சரியாக சொன்னீர்கள் அண்ணா.. உங்களின் இந்தப் பதிவு நிச்சயம் தேவை.. சிறுவர்கள் தங்கள் இயலாமையை இப்படியாவது காட்டுகிறார்கள்.. இது ஒரு அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் நடக்கும் வழமையான ஒன்று தான்... இதே போலத் தான் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெர...ிக்கப்படைகள் மீது சிறுவர்கள் கல்லால் எரிந்து தங்கள் எதிர்ப்பைக் கட்டுகிறார்கள்.., இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீனியச் சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது ஒளிந்து நின்று கவண் மூலம் கல்வீச்சு நடாத்துகிறார்கள்... விடுதலை மறுக்கப்பட்ட ஒரு தேசத்தில் தங்கள் வெறுப்பை எங்களின் தம்பிகளும் இப்படிக் காட்டுகிறார்கள்... அதில் தப்பில்லையே..........!See More
      Yesterday at 5:47pm · · 1 person

Thursday, May 19, 2011

ஈழத்தில் ராஜபக்ஷ செய்து கொண்டிருக்கும் அரசியல் நகர்வுகள்



போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு சர்வதேச அழுத்தங்கள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் திரை மறைவில் தனது தொடர்ச்சியான இருப்பிற்கான அடித்தளங்களை ராஜபக்ச கச்சிதமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார். 

ஏதிர்க்கட்சிகளின் வலுவை சிதைப்பதுஇ சிறுபான்மையினரின் குரலை அடக்குவது என்று பல நிகழ்ச்சி நிரல்களின் கீழ் அவரின் நடவடிக்கைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. “ஒரு கட்சி ஆட்சி” அதாவது “மன்னராட்சி” முறையிலான நடவடிக்கைகளுக்கு மகிந்த ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. இன்றுள்ள அரசியல் அமைப்பின்பிரகாரம் முழுஅதிகாரமும் மத்திய அராங்கத்திடமே குவிந்துள்ளது. அதிலும் ஜனாதிபதிக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆதிகாரமிக்க நீதிமன்றங்களின் தீர்ப்பில் கூட தலையிடக்கூடிய வகையில் ராஜபக்ஷவின் கையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மகிந்த தலமையிலான ராஜபக்ஷ குடும்பம் இன்று சிறிலங்காவின் முக்கிய வர்த்தக மையங்கள் உட்பட உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக கேந்திர மையங்களை  தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பெரும் பணப்புழக்கத்தில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தை எதிர்த்து ஒரு பெட்டிக்கடை கூட நடாத்த முடியாத நிலையில் சிறிலங்காவின் நிலை மாறிவருகிறது.

வௌ;வேறு கட்சிகளில் மக்களால் தெரிவு செய்யப்ட்டவர்கள் கூட இன்று ராஜபக்ஷவின் அதிகாரத்தாலும் பணத்தாலும் விலைக்கு வாங்கப்பட்டு ராஜபக்ஷ கட்டுப்பாட்டில் வைக்கப்ட்டுள்ளனர். இதனால் பலம் மிக்க எதிர்க்கட்சிகள் எதுவுமற்று மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குடும்ப ஆட்சியை வலுவாக நிறுவியுள்ளது. 

சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் நட்ப்பு வைத்துள்ள மகிந்த ராஜபக்ஷ மன்னராட்சி தொடர்பில் அரபு நாடுகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மன்னராட்சியை உருவாக்குவதற்கு தேவையான காரணிகள் மற்றும் அதிலுள்ள சிக்கல்கள்இ சட்ட தேவைகள் குறித்தும் தமது அதிகாரிகளை அரபு நாடுகளுக்கு அனுப்பி ஆராய்ந்து வருகிறார்.
எப்படியான அரசியல் முறமையை அவர் கையாண்டாலும் தமிழர்களின் உரிமைப்பிரச்சினை அவருக்கு மிகப்பெரிய தலையிடியாக தொர்ந்து கொண்டே இருக்கும் என்று நன்கறிந்த மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினரின் அரசியல் குரலை நசுக்கும் நடவடிக்கைகளிலும் மிக மும்மரமாக ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆழும் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை தேர்தலினூடாக தெரிந்து கொண்ட மகிந்த ராஜபக்ஷஇ வடக்கு கிழக்கு பகுதிகளில் தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்கு துணை ராணுவக் குழுக்களை களம் இறக்கியுள்ளார். இவர்களுக்கு பக்கபலமாக ஆயுதம் தாங்கிய படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். போர்க்குற்றம் தொடர்பில் ஜ.நா அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை எப்படியும் சிதைத்துவிடவேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் மகிந்த ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. இந்தியாவினூடாக தமிழ் தேசியக் சுட்டமைப்பிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பது அல்லது நேரடியாக தமிழ் தேசிய சுட்டமைப்பு ஊறுப்பினர்களை அச்சுறுத்தி அடக்குவது என்ற நிலைப்பாட்டில் ராஜபக்ஷ இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆதன் தொடர்ச்சியாகதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் உதவியாளர்கள் தாக்கப்படுவதும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதும்.

தவிர இன்று தமிழ் மக்களின் கலாச்சார நிகழ்வென்றாலும் சரி நிறுவன நிகழ்ச்சிகள் என்றாலும் சரி ராணுவத்தின் பிரசன்னம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுpறிலங்கா ராணுவத்தின் பிரசன்னம் இன்றி எந்த நிகழ்ச்சிகளும் தமிழர் தாயகப்பகுதிகளில் நடாத்த முடியாது என்ற நிர்ப்பந்தம் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் திணிக்கப்பட்டுள்ளது. தமது சுய அரசியல் லாபத்திற்காக தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து எந்த பிரச்சினையுமின்றி ராஜபக்ஷ தாளத்திற்கு ஆடும் ஈ.பி.டி.பி கட்சிஇ தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிஇ கருணாகுழு உட்பட அத்தனை துணை ராணுவக் குழுக்கழுமே தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ் மக்களின் அரசியல் குரலை அடக்குவதற்கு மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் தாயகப்பிரதேசங்களில் இருந்து மண் உட்பட அத்தனை வளங்களையும் தென்னிலங்கைக்கு பலவந்தமாக திருடி அனுப்புவதில் இந்த துணை ராணுவ குழுக்கள் இயங்குவதோடு பாதுகாப்பிற்கு சிறிலங்காவின் ஆயுதம் தாங்கிய படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுபோக கல்வி நடவடிக்கைகள்இ அதிகாரிகள் இடமாற்றங்கள்இ அரச அலுவலகங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களிலும் இந்த துணைராணு குழுக்களின் பிரசன்னத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு தமிழ் மக்களின் நலன் குறித்து பேசும் அத்தனை குரல்களும் முடக்கப்ட்டு வருகிறது.
தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும் உள்ளுராட்சி மன்றங்கள் நேரடியாக மாகாண ஆளுனரினதும் மத்திய அரசாங்கத்தினதும் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசாங்கம் தான் நினைப்பதை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது. அதை தட்டிக்கேட்கும் நிலை யாருக்கும் வழங்கப்படுவதில்லை. அதுபோக யாழ்ப்பாணத்தின் நிலை மிக மோசமாக காணப்படுகிறது. என்னதான் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி அரச அதிகாரியாக இருந்தாலும் சரி யாழ்ப்பாண ராணுவ தளபதியின் அனுமதியின்றி ஒரு பட்டம் கூட பறக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்ட்டுள்ளது. அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசக்கூடிய அத்தனை வழிகளும் ராணுவ இயந்திரத்தால் அடைக்கப்ட்டுள்ளது. 

சிறுபான்மையினரின் குரலை அடக்குவதன் மூலம் ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி நகர்வுகளை தீவிரப்படுத்தலாம் என நம்புகிறது அரசு. போர் முடிந்து 2 வருடங்கள் கடந்து வரும் நிலையில் அவரகாலச்சட்டம் உட்பட பல கெடுபடிகள் நீங்கப்படாமைக்கான காரணம் ராஜபக்ஷ தலமையிலான குடும்பாட்சியை உறுதிப்படுத்துவதற்கே.

புலம்பெயர் தமிழர்களின் கைகளில் வழங்கப்ட்டுள்ள தமிழர் போராட்டங்கள்           
ஈழத்தில் தமிழ் மக்களின் குரல்கள் அத்தனையும் ராணுவ இயந்திரத்தால் அடக்கப்ட்டுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தான் முழுவீச்சுடன் தமிழர் உரிமைப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கெதிரான பாரிய மனித படுகொலையை சிறிலங்கா அரசு செய்து முடித்து இன்று 2 வருடங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிறிலங்காவின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க கூடிய பாரிய போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் இன்னமும் செய்யவில்லை என்றே தெரிகிறது. ஜ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஆதாரமாக வைத்து சிறிலங்கா அரசிற்கெதிரான போராட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசிற்கெதிரான கோஷங்கள் எழுப்பப்பட வேண்டும். இராணுவ அதிகாரிகளாக இருந்து இன்று சிறிலங்காவின் ராஜதந்திரிகளாக முகமூடி தரித்துள்ளவர்களை இனங்கண்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு தமிழர் உரிமைப்பிரச்சினையில் நேரடியாக சர்வதேசத்தை தலையிடும் படி கோரி போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் நடாத்துவதினூடுதான் எமது விடுதலைப்போராட்டம் இன்னமும் முடியவில்லை என்று உலகிற்கு எடுத்துக்காட்ட முடியும். எம்மீதான கொடூர இனப்படுகொலையை சிறிலங்கா அரசு நிகழ்த்தி இரண்டு வருடங்கள் கழியும் இந்த நிலையில் விடுதலை பெறும் வரை போராடுவோம் என சபதம் எடுப்போம் உறவுகளே!!   


ஆதி
10-05-2011


Tuesday, May 17, 2011

மே18 – தமிழினத்தின் மீது நடந்தேறிய மாபெரும் இனப்படுகொலை



இந்த உலக வரலாற்றில் 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாக ஈழத்தில் தமிழினித்தில் மேல் நடைபெற்று மே18ல் முடிவடைந்த இனப்படுகொலையே பதிவாகியுள்ளது. 


தமிழினத்தின் மேல் நடைபெற்ற இந்த இனப் படுகொலையின் முக்கிய குற்றவாளியாக சிறிலங்கா அரசு இனங்காணப்பட்டுள்ள நிலையில் பங்காளிகள் இன்னமும் தலைமறைவாகவே இருக்கின்றனர். உரிமைக்காகவும் தமது பாதுகாப்பிற்காகவும் தமது சுதந்திரத்திற்காகவும் போராட ஒரு இனத்திற்கு முழுஉரிமையும் சட்டத்தின்பாபல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமது பிராந்திய வல்லாதிக்கங்களை உறுதிப்படுத்துவதற்காய் தமிழின படுகொலையை நடாத்துவதற்கு சிறிலங்கா அரசிற்கு முழு உந்து சக்தியாக இருந்தது இந்த தலைமறைவாக இருக்கும் பங்காளிகளே. தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமிழின படுகொலைப்பங்காளிகள் இன்னமும் வெளிப்படையாக இனங்காட்டப்படவில்லை என்பது தான் உண்மை.

மாவிலாற்றில் தொடங்கப்ட்ட போர் முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எதிரியாலும் பிராந்திய வல்லாதிக்கங்களாலும் நகர்த்தப்ட்ட ராஜதந்திரங்களும் தமிழ் இனத்திற்கு எதிரான போரிற்கு அவர்கள் செய்த ஊக்கிவிப்பும் சாதாரணமானவையல்ல. மனிதாபிமான போர் என்று வாய்கூசாமல் சிங்கள அரசால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இனஅழிப்பு போரை இந்த வேளையில் அதன் உண்மையை நிலையை வெளிப்படுத்துவதற்கு போதிய அளவு ஆதாரங்கள் இருந்தும் பிராந்திய வல்லாதிக்கத்தின் இருப்புக்கருதி பல வல்லரசு நாடுகள் மௌனமாக இருப்பதன் பின்னணி தமிழினப்படுகொலைக்கான போரில் அவர்களுக்கிருக்கும் முக்கியத்துவமே. 


இந்த நிலையில் தமிழர்களாகிய நாங்கள் சிந்தித்து செயற்படவேண்டும். கொலையாளியை முதலில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும். அதன் பின் பங்காளிகளின் பொய் முகமூடிகள் தானாகவே கிழிக்கப்படும்.

இனப்படுகொலை
இனப்படுகொலை என்றால் என்ன? இனப்படுகொலை நடாத்திய அரசை எப்படி சட்டத்தின் முன் கையாளலாம்?; என்ற தெளிவான சிந்தனை எமக்கு இருக்கவேண்டும். ஒரு தேசிய இனம்இவகுப்புஇ மதம் சார்ந்Nhதரை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்யப்படும் அத்தனை வன்செயலும் இனப்படுகொலை என்ற வட்டத்திற்குள் அடங்கும். இந்த வன்செயல் எப்படிபட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்றில்லை எத்தனைபேர் பாதிக்கப்பட வேண்டும் என்றில்லைஇ சாமாதான காலத்திலும் நடைபெறலாம் போர்க்காலத்திலும் இந்தவன்முறை நடைபெறலாம். ஆக ஒரு இனக்குழுமத்தின் மேல் அந்த மக்களை அழிப்பதற்கு செய்யும் அத்தனை வன்முறைகளும் இனப்படுகொலை என்ற சட்ட சொல்லாடலினுள் தான் அடக்கப்படும். “உலக நீதிமன்று” என அழமக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2007 பெப்ரவரி 26ம் நாள் பொஸ்னியா தொடர்பான தீர்ப்பின் 293இ294 பந்திகளில் ஜெனோசைட் போன்ற இனப்படுகொலைக் குற்றத்திற்கு மில்லியன் கணக்கானோரை கொல்லவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. சிறேபிறேனிக்காவில் கொல்லப்பட்ட 7இ000 பொஸ்னிய முஸ்லிம்கள் இனப்படுகொலை குற்றமாக கணிப்பிடுவதற்கு போதுமானவர்கள் என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.


தமிழர் மீது நடந்த படுகொலைகள்
இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சிங்கள அரசின் கைகளில் வழங்கப்பட்ட பின் படிப்படியாக தமிழர்களின் உரிமைப்பறிப்றிப்பும் தமிழர்கள் மீதான வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. 50 களில் நடந்த கலவரங்களும் 83 காலப்பகுதிகளில் நடந்த கலவரங்களும் இனப்படுகொலையின் ஒரு அங்கமே. இந்த படுகொலைகளில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் சரியான எண்ணிக்கை இது வரை வெளிவரவில்லை என்பதோடு அது சம்மந்தமாக நியாயமான விசாரணைகள் நடைபெறவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தவிர இந்தி ராணுவத்தின் வருகையும் அதன்பின் இந்திய மற்றும் சிறிலங்கா ராணுவத்தாலும் பல வழிகளில் கொலைசெய்யப்ட்ட மக்கள் தொடர்பில் புள்ளிவிரங்களினூடான ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் 4இ000 ஆயிரத்திற்கும்  அதிகமான மக்கள் படுகொலை செய்யப்ட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த காலப்பகுதிளில் காணாமற்போன பல நூறு இளைஞர்கள் யுவதிகள் குறித்த தகவல்களும் இதுவரை இல்லை.
இரண்டு அரசாங்களினால் தமிழ் இனக்குழுமத்தின்; மீது நடாத்தப்ட்ட பல படுகொலைகளின் பின் தமிழர்கள் மீதான இன அழிப்பை சிறிலங்கா அரசு தனது கையில் எடுப்பதான செயற்பாடுகள் நடக்கின்றன. அதாவது தமிழர்கள் மீதான எல்லாவழியிலான இன அழிப்பையும் சிறிலங்கா அரசு முன்னின்று செய்ய அவர்களுக்கு பின்புல பலமான பங்காளிகள் இருக்கின்றனர்.

யுhழ்ப்பாணம் மீதான சிறிலங்கா ராணுவத்தின் படையெடுப்பின் போது நடைபெற்ற மக்கள் அவலம் என்பது தெற்காசியாவில் 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மக்கள் அவலம் என்று சொன்னால் மிகையாகாது. யாழ்ப்பாணம் மீது செய்யப்ட்ட மாபெரும் படையெடுப்பில் மக்கள் ஆங்காங்கே செத்துவீழ்ந்தனர். பாடசாலைகள் இ தேவாலையங்கள் இ கோயில்களஇ;; மக்கள் கூடும் இடங்கள் என எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசு குண்டுவீசி மக்களை கொன்று குவித்தது. போதிய அளவு தொழினுட்ப வசதியின்மைஇ தொடர்பாடல் வசதியின்மையால் யாழ்ப்பாணத்தின் மீது செய்யப்பட்ட படையெடுப்பில் நடந்தேறிய இனப்படுகொலை பற்றிய தரவுகள் போதிய அளவு உலகத்திற்கு தெரியவரவில்லை. கொலைசெய்யப்ட்டோர் இ காணாமல் போனோர் இ படுகாயமடைந்தோர் என எண்ணுக் கணக்கற்று தமிழர்கள் பாதிக்கப்ட்டனர். தமிழ்ர்கள் மேல் நடந்தேறிய இனப்படுகொலைகளில் யாழ்ப்பாணத்தின் மீது சிறிலங்கா அரசு செய்த போரும் ஒன்று. 
இந்த நிலையில் தமிழ்ர்கள் மீதான முழுவீச்சுடனான இனப்படுகொலைக்கான போர் மீண்டும் மாவிலாற்றில் இருந்து ஆரம்பிப்பட்டது. மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான போரில் மாத்திரம் 100இ000 ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காரணம் உக்கிர போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் கொல்லப்பட்டவர்கள் குறித்த எல்லா தகவல்களும் தகவல்கள் சேகரிக்கும் குழுவினருக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தவிர இந்த போரில் கொல்லப்ட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். அங்கங்களை இழந்தனர்.


காயமடைந்தவர்களையும் கடத்திக்கொன்ற சிறிலங்கா அரசு
போர் முல்லைத்தீவுக்குள் குறுகிக்கிடந்த காலப்பகுதிகளில் கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவை சங்க உள்ளுர்பிரதிநிதிகளின் உதவியுடன் காயப்படும் ஒரு தொகுதியினர் திருகோணமலை புல்மோட்டைக்கும் மற்ற ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கும் அனுப்பப்ட்டனர். ஏராளமானோர் வெளியேற்றப்படுவதற்கான வாகன வசதியோ பாதுகாப்பு வசதியோ எதுவுமின்றி செத்துக் கொண்டே இருந்தனர். இந்த காலப்பகுதிகளில் காயமடைந்து வந்தவர்களையும் சிறிலங்கா அரசு தரம் பிரித்தது. வயது பாகுபாட்டில் தரம்பிரித்த அரசு பின் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்ற வகையில் தரம்பிரித்தது. தரம்பிரிக்கப்ட்டவர்கள் மேலதிக சிகிச்சை என்ற பெயரில் அனுராதபுரம் மற்றும் சிங்கள பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்ட்டனர். அப்படி மாற்றப்ட்ட யாருமே அந்த காலப்பகுதிகளில் திரும்பிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயப்பட்டு வருபவர்களுடன் உறவினர்கள் பெரும்பாலும் வருவதில்லை. உறவினர்கள் வருவதற்கு வாகனத்தில் இடம் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படி யாருமற்று காயப்பட்டு வந்த  உறவுகள் குறித்த தகவல்கள் யாருக்கும் தெரியாது. அதனால் சிங்கள அரசு கச்சிதமாக தனது படுகொலை நடாத்தியது.

காயப்பட்டு மக்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் சிறிலங்கா ராணுவம் வவுனியா பிரதேசத்தில் மணல் ஏற்றும் டிப்பர் உரிமையார்கள் சிலரை தமக்கு சில பொருட்கள் ஏற்றுவதற்கென்று அவர்களை அழைத்துச் சென்றனர். கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் பின் இரவு நேரங்களில் காடுகளுக்கூடாக தமது டிப்பர் பணயித்ததாகவும் தாம் சொன்ன அவர்கள் தாம் வீடு திரும்பி டிப்பரை பார்த்த போது டிப்பரில் இருந்த மணலில் எல்லாம் ரத்தம் இருந்ததாக அந்த வாகன உரிமையாளர்கள் சொன்னார்கள். ஆக படுகொலை செய்யப்ட்ட பலர் காடுகளுக்குள் எரித்து அழிக்கப்ட்டுள்ளனர். 

தவிர சிறு காயப்பட்டு வந்த பலரின் அங்கங்கள் முழுமையாக அகற்றப்ட்டன. வவுனியா மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் அப்போது வெளிடப்பட்டபோதும் ஓரிரு நாட்களில் பலர் அந்த வைத்தியசாலைகளில் இருக்கவில்லை. பலரை சிவில் உடையில் வந்து அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதை பார்த்தாக வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தார்கள். தமிழ் மக்கள் மீது நாடாத்தப்பட்ட இன அழிப்பின் உச்சக்கட்டம் இப்படி பல வழிகளிலும் நடந்தேறியிருக்கிறது.

முகாம்களின் நிலை
எந்த வசதியுமற்று வெட்டவெளிப்பிரதேசத்தில் முட்கம்பிகளால் வேலியிடப்பட்டு முழுநேர ஆயுதப் படையினரின் பாதுகாப்புடன் மக்கள் அடைக்ப்பட்டனர். வெளிமக்களின் நேரடித் தொடர்பை துண்டித்து இடம்பெயர்ந்து வந்த மக்களை தனிமைப்படுத்துவதில் சிறிலங்கா படையினர் முழுநேர கண்காணிப்பில் இருந்தனர். இராணுவ துணைக்குழுக்களின் உதவியுடன் இடம்பெர்ந்து வந்த மக்களை வடிகட்டிபிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா புலானாய்வுப் பிரிவினர் பகிரங்கமாக ஒலிபெருக்கிகளில் புலிகளின் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் சரணடையுமாறும் ஒரிரு நாட்களில் விசாரணை முடிந்துவிடும் என்றும் பின் அனைவரும் விடுவிக்கப்டுவர் என்றும் அறிவித்தனர். இதை நம்பிய மக்கள் மாணவர் முதலுதவிப் படையில் இருந்து எல்லைப்படைவரை அனைவரும் சரணடைந்தனர். ஏறத்தாள எல்லா இளைஞர் யுவதிகளுமே சிறிலங்கா புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு தம்மை பதிவு செய்தனர்.
தம்மை முதலே விடுதலைப்புலிகள் என இனம்காட்டிய ஒரு தொகுதியினரை சிறிலங்கா ராணுவம் பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி வளாகத்தில் இருந்த முகாமில் அடைத்து வைத்திருந்தது. மற்றய ஒரு தொகுதியினரை ரஜரட்ட பிரதேச காட்டுப்பகுதிக்கு சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் மாற்றியதாக அங்கிருந்த சில பொலிஸ் அதிகாரிகள் கூறினர் ஆனால் அப்படி மாற்றப்பட்டவர்களின் பெயர்விபரங்களோ எண்ணிக்கையோ யாருக்கும் தெரியாது. 

தவிர முகாம்களில் தமது பெயரை பதிவு செய்தவர்களை கைது செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறை அதில் இனங்காணப்பட்ட சில ஆயிரக்கணக்கானோரை ரகசிய முகாம்களுக்கு மாற்றியதோடு மிகுதி ஆயிரக்கணக்கானோரை புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் சிறைவைத்தனர். இதில் ரகசிய முகாம்களுக்கு மாற்றப்ட்டவர்கள் குறித்த எந்த தகவல்களும் இப்போது இல்லை. 

இப்படி இடம்பெயர்ந்து வந்த மக்களை பல வழிகளில் பிரித்துவிட்டு தனது அழிப்பு வேலையை முடக்கிவிட்டது சிறிங்கா அரசு. வுpசாரணை என்ற பெயரில் இளைஞர் யுவதிகளை கைது செய்வதும் பின் “அவர்கள் கைது செய்யப்படவில்லை”இ “நாங்கள் அவர்களை காணவே இல்லையே” என்று சொல்வதுமாய் பல சம்பவங்கள் நடந்தேறியது இந்த முட்கம்பி முகாம்களில்.

முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு வந்த நண்பனொருவனோடு பேசும் போது முகாமிற்குள் நடக்கும் பல வன்முறைகள் பற்றி சொன்னான். ஒரு நாள் இரவு கடும் வெட்கையாக இருந்ததால் தான் நீர்த்தொட்டியடிக்கு சென்றதாகவும் அப்போது இரண்டு கொட்டகைகள் கழித்து ஒரு கொட்டகையில் அழுகுரல் கேட்டதாகவும் தான் குளிக்கும் நீர்த்தொட்டியை மறைத்து கட்டப்பட்டிருந்த கிடுகுவேலிக்குள் ஒழிந்து நின்றதாகவும் அந்த நேரம் அந்த கொட்டகைக்குள் இருந்து ஒரு பெண்ணை ஆயுதம் தாங்கிய இரண்டு படையினர் கையை பிடித்து கொண்டு சென்றதாகவும் சொன்னான். ஆனால் கொண்டு செல்லப்பட்ட பெண் யார் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்று மற்றவர்களிடம் விசாரிக்க முடியாதெனவும் அப்படி விசாரித்தால் தனக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும் சொன்னான். இப்படி முகாம்களுக்குள் நடந்தேறிய பல வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளும் வெளி உலகிற்கு தெரியவரவில்லை. 
ஒருதடவை சிறிலங்கா துணைராணுவக் குழுவொன்றால் முகாமிலிருந்து கூட்டிச்செல்லப்பட்ட இரண்டு தமிழ் பெண்கள் இரண்டு நாட்களின் பின் விடுவிக்கப்ட் நிலையில் அவர்கள் முகாமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரையும் விசாரணை என்று அழைத்துச் சென்ற அந்த துணைராணுவக் குழு சிறிலங்கா புலனாய்வு படையதிகாரிகளுடன் இணைந்து அவர்களை கற்பழித்து அதை வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த தகவலை தமக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு சொல்லிவிட்டு தற்கொலை செய்துள்ளனர் அந்த யுவதிகள்.
நீதி கேட்டு முறையிட எந்த இடமும் இல்லாமலும் மீறி வெளியுலகத்திற்கு நடந்தஇ நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை வெளிப்படுத்தினால் அதனால் தமது குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய உயிர் அச்சுறுத்தலாலும் பல உண்மைகள் வெளிப்படாமல் இந்த மக்களுக்குள் புதைந்து கிடக்கிறது.




போர்க்குற்றம் தொடர்பான அறிக்கைகளும் உலகத்தின் பார்வையும்
சிறிலங்கா அரசானது ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நடாத்தி முடித்துள்ள இனப்படு கொலையானது இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மேல் மேற்கொள்ளப்ட்ட மினப்பெரிய படுகொலை நிகழச்சி என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மாறிவருகிறது என்பதே இந்த ஜ.நா நிபுணர்குழு அறிக்கை.

உலகத்தின் ஓர் மூலையில் நடந்தேறிய மிகப்பெரிய படுகொலையின் ஆதாராங்களை திரட்டி பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் வெளியிட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பியதில் சனல்4 மற்றும் அல்ஜசீரா ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது என்றே கூறலாம். கூப்பிடு தூரத்தில் இருக்கும் இந்தியாவின் ஊடகங்களுக்கு தெரியாத பல உண்மைகளை இந்த ஊடகங்கள் வெளிப்படுத்தி தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு நடாத்திய படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

வெளி அழுத்தங்கங்கள் அதிகரிக்கவே பெயரளவில் ஜ.நா செயலாளரால் உருவாக்கப்ட்ட நிபுணர்குழு சில விடையங்களை மிக தெளிவாக ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டிருந்தது. பாரபட்சமற்று வெளிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையானது சிறிலங்காவிற்கு பலவழிகளிலும் அழுத்தத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்த நிபுணர்குழு அறிக்கையானது முழுமையானதல்ல என்பதை தமிழர்கள் ஆகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் ஆரம்பமே. இந்த நல்ல ஆரம்பத்தினூடாக எல்லாவற்றையும் வெளிப்படுத்தக்கூய சந்தர்ப்பம் பிறந்துள்ளது. போர்ப்பிரதேசத்தில் நடந்த சில குற்றங்களை மட்டுமே பேசியுள்ள நிபுணர்குழு அறிக்கை போர்க்காலங்களில் கைது செய்யப்ட்டவர்கள் காணமல் போனவர்கள் பற்றி பேசவேயில்லை என்றேபடுகிறது. ரகசிய முகாம்களில் சிறைவைக்கப்ட்டவர்கள் குறித்த வாதங்களை இந்த நிபுணர்குழு வைக்கவில்லை என்றே தெரிகிறது. தவிர 40 000 ற்கும் அதிகமாவர்கள் இறுதிக்கட்ட போரில் கொல்லப்ட்டிருக்கலாம் என கூறியிருக்கும் நிபுணர்குழு அறிக்கை அதை இனப்படுகொலை என்ற சொல்லினூடாக வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டியுள்ளது.

பிராந்திய வல்லாதிக்கங்களின் மீது ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே “இனப்படுகொலை” என்ற சொல்லாடலை நிபுணர்குழு தவிர்த்திருப்பதாக தெரிகிறது. 
மேற்குலகினால் சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான ராஜதந்திர முரண்பாடுகள் மற்றும் போர்க்குற்ற நிலைப்பாடு தொடர்பான பனிப்போரும் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. 


சிறிலங்காவில்  விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதோடு சிறிலங்காவை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என இந்தியா வெகுவாகவே நம்பி இருந்தது. அதனால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்பாக எழுத்த அத்தனை அழுத்தங்களையும் போர்க்காலத்தில் சமாளித்து சிறிலங்காவின் இனப்படுகொலைப் போரை விரைவுபடுத்தியிருந்தது இந்தியா. தனது முகவர்கள் ஊடாக தமிழினத்தின் மீதான போரை கண்காணித்து கொண்டிருந்த இந்தியா தொழினுட்ப மற்று சிறப்பு படைப்பிரிவின் உதவியையும் நேரடியாக சிறிலங்காவிற்கு வழங்கியிருந்தது. அது போக போர் தொடர்பான சில கட்டளைகளையும் தனது முகவர்களினூடாக சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கியிருந்தது. இதன் வெளிப்பாடாகவே போர் முடிந்தவுடன் ஒரு செவ்வியில் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ “நாங்கள் இந்தியாவின் போரையே செய்து முடித்திருக்கிறோம்” என்று சொல்லியிருந்தார்.


இப்படி இந்தியாவின் மேற்பார்வையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை செய்து முடித்துவிட்ட சிறிலங்கா ராஜதந்திர ரீதியில் இந்தியாவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது. போர் முடிந்த கையுடன் போர்க்குற்றவாளி என்ற பெயரில் மகிந்தவை கூண்டில் ஏற்றிவிட்டு இலங்கையை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பெரிதும் தீர்மானித்திருந்ததாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் போர்க்குற்ற ஆதாரங்களைவிட பல போர்க்குற்ற ஆதாரங்கள் இந்திய அரசிடம் இருப்பதாகவும் ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்த முடியாத நிலையில் இந்தியா இருப்பதாகலுவம் சொல்லப்படுகிறது. இந்திய அரசு சிறிலங்காவிற்கு போர்க்காலத்தில் வழங்கிய கட்டளைகள் அறிவுறுத்தல்கள் என்பவற்றை சிறிலங்கா அரசு வைத்திருப்பதாகவும் இந்திய அரசு சிறிலங்கா மீது போர்க்குற்ற குற்றச்சாட்டை வைக்குமிடத்து தமிழினப்படுகொலையில் இந்தியாவிற்கிருக்கும் பங்கை சிறிலங்கா வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தினாலையே இந்தியா இன்று சிறிலங்காவை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்தியா தொடரந்து இருக்கவிரும்புமா என்பது சந்தேகத்திற்குரியதே. சிறிலங்காவிற்கெதிரான போக்கை கடைப்பிடிக்காவிட்டாலும் சிறிலங்கா மீதான அழுத்தங்களுக்கெதிராய் இந்தியா செயற்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும.
  

புலம்பெயர்தமிழர்களின் போராட்டங்களின் வெற்றியும் தொடரந்து செய்ய வேண்டியவையும்  
சிறிலங்கா மீது மேற்குலகத்தின் பார்வையை இயன்ற அளவு தெளிய வைத்ததோடு கடும் தொனியிலான நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள வைத்ததில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பென்பது அழப்பரியது. சுpறிலங்கா அரசுக்கெதிரான பிரச்சாரங்கள் போர்க்குற்றங்களை சேகரித்து சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தமை அரசியல் அதிகாரிகளை தெளிவடைய வைத்தமை இப்படி புலம்பெயர் தமிழர்கள் இன்றுவரை செய்த போராட்டங்களின் ஒரு பலன்தான் இந்த ஜ.நா அறிக்கை என்று சொன்னால் மிகையாகாது.


இந்திய புலனாய்வு துறையினரின் கண்காணிப்பு சிறிலங்கா புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இப்படி பல தடைகளை வென்று புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் நகர்ந்து இன்று ஜ.நா அறிக்கை வெளியிடக்கூடிய அழுத்தங்ளை பிரயோகிக்க கூடிய பெரும் சக்தியாக வளர்ந்து நிக்கிறது. 


ஓன்றுபட்ட தமிழினமாய் புலம்பெயர்தமிழர்கள் ஒருங்கிணைந்து ராஜதந்திர ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அரசியல் ரீதியான விடுதலைக்கு தொடர்ந்து போராடுவதுதான் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்ட்ட இனப்படுகொலையில் படுகொலை செய்யப்ட் உறவுகளுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும். ஓன்று திரண்ட மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் உணர்த்துவோம்…. தமிழினமாய் எல்லோரும் ஒன்றுபடுவோம் தமிழர்களே.


ஆதி
 13-06-2011

    


Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP