Powered by Blogger.

Tuesday, July 19, 2011

தமிழர்கள் மீதான கலாச்சார சிதைப்பு யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்_விளைவுகள்

http://aathithyank.blogspot.com/2010/11/blog-post_6803.html இது நான் கடந்த வருடம் எழுதிய பதிவு. அப்போது எதிர்வு கூறல்களை எழுதியிருந்தேன். இப்பொழுது நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருப்பவை பற்றி எழுத வேண்டிய கட்டாம் உள்ளது.

உலக வரலாற்றில் பல்கலைக்கழகங்கள் பலவிதமாக போராங்களில் சம்மந்தப்படுகிறது. இனம் ரீதியான விடுதலைப்போராட்டம் என்றாலும் சரி.. கிளர்ச்சிகள் என்றாலும் சரி பல்கலைக்கழகளங்களில் இருந்தே போராட்டங்களின் பரிமானங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன.

அந்த வகையில் தமிமீழ விடுதலைப்போராட்டத்தின் மிக முக்கியமான நகர்வுகள் கூட பல்கலைக்கழக மாணவர்களால் தான் முன்னெடுக்கப்ட்டன. பொங்குதமிழ் யாழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய பொழுது அத்தனை அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து அதிகாரத்திற்கு எதிராய் ஓங்கி ஒலித்தவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சிறிலங்கா அரசின் இராணுவ இயந்திரத்துக்குள் இருந்து எப்படி கிளர்ந்தெழுந்தார்கள் என்று உலக அரசியலே வியந்த நிகழ்வது.

இப்படி தமிழர் உரிமைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணிக்கும் மாணவர் சமுதாயம் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்பது சிறிலங்கா அரசின் நீண்டகால ஆசை. விடுதலைப்புலிகள் களத்தில் இருந்த காலப்பகுதியில் செய்ய முடியாததை இப்பொழுதான் சிறிலங்கா அரசு ஆமை்பித்திருக்கிறது.

கடந்தவருடம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். பாதுகாப்பு பிரச்சினை என சாக்கு சொல்லியபடி சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயிற்றுவிக்கப்ட்ட சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் இப்பொழு தான் செயற்பட தொடங்கியிருக்கிறார்கள். அதிகளவில் சிங்கள மாணவிகளை கொண்ட இந்த அணி இப்பொழுது செயற்பட ஆரம்பித்திருக்கிறது.

பெண்களின் மாணவிகள் விடுதிக்குள் அங்கிருக்கும் மாணவிகளின் ஆண் சகோதரர்கள் கூட நுழையமுடியாத நிலையில் முச்சரக்கர வண்டியில் வந்து சிறிலங்கா ராணுவத்தினர் வார இறுதி நாட்களில் சிங்கள மாணவிகளை தங்கள் முகாம்களுக்கு கூட்டிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அங்கிருக்கும் ஒட்டுமொத்த தமிழ் மாணவிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாது தற்போதுள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தின் பக்கச்சார்பு நிலையையும் சிறிலங்கா அரசின் தான்தோன்றித்தனமான அதிகார அடக்குமுறையையும் காட்டுகின்றது.

தவிர சிங்கள மாணவிகள் தமது காதலர்களுடன் ஒரே குடைக்குள் செல்லுதல் உள்ளாடைகள் தெரியும் வண்ணம் உடைகள் அணிந்து வருதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமது காதலர்களுடன் பின்னிப்பிணைந்த நிலையில் செல்லுதல் என தமிழ் மாணவ மாணவிகளை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். பெரும்பாலான சிங்கள மாணவர்கள் சட்டத்துறைக்கே உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த மாணவிகள் இராணுவ தலமைகளுடன் நெருங்க உறவை பேணிவருவதால் மற்றைய பீட மாணவர்கள் இது குறித்து பல்கலைக்கழ நிர்வாகத்திடம் விசனம் தெரிவிக்க கூட பயப்பிடுகிறார்கள்.

எந்தவொரு சமய நிகழ்ச்சியும் கொண்டாட அனுமதிக்காத யாழ்பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தடவை வெசாக் நிகழ்வை கொண்டா அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடையம்.

நேரடியாக யாழ் சமூகத்துடன் தொடர்புடைய யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சீர்குலைத்தல் மற்றும் தமிழர்களின் கலாச்சாத்திற்கு சவால்விடும் நிகழ்வுகளை பல்கலைக்கழகத்திற்குள் அரங்கேற்றல் என்பதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர்களின் கலாச்சார இருப்பை ஆட்டம் காண வைக்க முடியும் என்று நம்புகிறது சிறிலங்கா அரசும் சிறிலங்கா ராணுவமும்.

ஈபிபடிபியின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் இன்றைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உட்பட்ட இந்த நிகழ்வுகளை தமிழர் நலன் சார்ந்து ஈபிடிபி பேசாது என தெரிந்தும் மற்றய தமிழ் கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்கள மாணவர்கள் நேரடியாக அரச அமைச்சர்களையோ சிறிலங்கா ராணுவத்தையோ பல்கலைக்களகத்திற்குள் கொண்டுவர முடியுமென்றால் தமிழ் மாணவர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் அந்த மாணவர்களின் எதிர்கால இருப்பு குறித்து தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறை செலுத்த முடியாதா என்ன??

பெரும்பாலான சிங்கள மாணவர்கள் சட்டபீடத்திலேயே இருப்பதால் சட்டத்துறை மாணவர்கள் அது குறித்து சிந்தித்து விரைவில் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்த வேண்டும். 50 மாணவர்களே ஒரு கல்வியாண்டில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சட்த்துறைக்கு தெரிவு செய்யப்படும் நிலையில் அடுத்தவருடத்தில் இருந்து 50 இல் 30 மாணவர்கள் சிங்க மாணவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது இன்னும் இரண்டு வருடங்களில் யாழ் பல்கலைக்கழ சட்ட பீடத்தின் பெரும்பான்மை சிங்கள மாணவர்களாகவே இருக்க போகிறார்கள். வெறும் 30 மாணவர்களால் இப்பொழுதே நிர்வாகத்தையும் பல்கலைக்களக தமிழ் மாணவர் சமுதாயத்தையும் கட்டுப்படுத்த முடியுமென்றால் இன்னும் 2 வருடங்களில் ஏற்படப்போகும் நெருக்கடி அல்லது ஆபத்து மிக மோசமானதாக இருக்கும். இது குறித்து பெற்றோர்களும் ஆர்வலர்களும் கவனத்தில் எடுத்து விரைவாக செயற்பட வேண்டும்.

ஆதி
7-18-11

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP