Powered by Blogger.

Tuesday, April 7, 2015

ஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கன் எப்படி தமிழ்நாட்டில் பெரியாரானான்!!!

காந்தி எப்படி பிரித்தானியரால் உருவாக்கபட்டானோ அதே போல் ஆரம்பத்தில் உருவாக்கபட்டவன்தான் ஈ.வே.இராமசாமி.

பெண் அடிமைத்தனம் சாதியம் பற்றி பேசிய இராமசாமி நாயக்கர் தன் சாதியை சேர்ந்த 13 வயது சிறுமியைதான் கலியாணம் கட்டினான். ஒரு பெண் தன் இளமைப்பருவத்தை அனுபவிக்க விடாமல் தனது இச்யையை தீர்ப்பதற்காய் 13 வயது சிறுமியை மூளைச்சலவை செய்து திருமணம் செய்து கொண்டான். 13 வயது சிறுமியை மனைவியாக்கி 15 வயதில் கர்ப்பமாக்கிய கபோதி தான் இந்த ஈ.வெ.இராமசாமி நாயக்கர்.

இனி விடையத்திற்கு வருவோம். தெலுங்கனான ஈ.வெ.இராமசாமி நாயக்கர் எதற்காக திராவிடர் கழகம் உருவாக்க தமிழ்நாட்டை தேர்வு செய்தான் என்பதில் தான் பிரித்தானிய அரசின் சூழ்ச்சி மறைக்கபட்டிருக்கிறது.


பிரித்தானியருக்கு பாரத தேசத்தில் போராட்டங்கள் ஆங்காங்கே சூடுபடித்திருந்தது. பார்ரபானர்கள் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்பவர்களாக இருந்தார்கள். அதே நேரத்த்தில் பார்பனர்களும் சில நாயக்கர்களும் வசதிபடைத்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் வெள்ளையர்களுக்கு அடிவருடிகளாக இருந்தார்கள்.

பார்பனர்கள் எவ்வளவுதான் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் தமிழர்களிடம் இருந்து வெள்ளையர்கள் மீது கிளம்பும் எதிர்பை தடுக்க முடியவில்லை. நாள் ஆக ஆக தமிழர்கள் தீரமாக போராட ஆரம்பித்தார்கள். தமிழர்களின் வீரம் வேறு மாநிலங்களுக்கும் பரவத்தொடங்கியது. இந்த நேரத்தில் தமிழர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று பிரித்தானிய கம்பனிகள் சிந்தித்தன. நேரடியாக தமிழர்களுடன் மோதுதல் தமது சொத்துக்களுக்கு அதிக சேதம் வரும் என்பதால் தமிழர்களை தங்களுக்குள்  அடிபட தூண்ட வேண்டும் என்று வெள்ளையர்கள் சிந்தித்தார்கள்.

வெள்ளையர்கள் எடுத்த முடிவு:

1) தமிழர்களை பார்ப்பனுக்கு எதிராக திருப்பி தம்மீதான கவனத்தை திசை திருப்புதல்

2) தமிழர்கள் முட்டாள்கள் என்றும் தமிழர் பாரம்பரியங்கள் மூட நம்பிக்கைகள் என்றும் கதையை பரப்பி தமிழர் கலாச்சாரத்தை சிதைக்க தூண்டுவதன் மூலம் தமிழர்களின் சிந்தனையை குழப்புதல்

3) இந்துத்துவம் மூடநம்பிக்கை மற்றும் சலுகையற்றது என ஆசையை காட்டி தமிழர்களிடத்தில் வேற்று மதங்களை ஆழமாக பரப்பி எதிர்காலத்தில் தமிழர்களை மத ரீதியாக பிரித்தல்

தமிழர்கள் ஆட்சியில் இருந்தால் பார்பானர்கள் இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிடுவார்கள்.

இதில் ஒருவிடையத்தை ஆழமாக அவதானித்தால், 1900களின் ஆரம்பங்களில் ஆங்கிலேயர்கள் இந்திய கண்டத்தை சூறையாடிக் கொண்டிருந்த போது  ஈ. வெ. இராமசாமி நாயக்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் ஆங்கிலேயர்களோடு பயங்கரமாய் மோதிக் கொண்டிருந்த தமிழர்களுக்கிடையில் நாசுக்காக புகுந்து கொண்டான். 

தமிழர்களின் பாரம்பரியம் வீர கலாச்சாரம் தொடர்ந்தால் தமது இருப்பிற்கு மிக இடைஞ்சலாக இருக்கும் என்று கருதிய வெள்ளையன் அண்டை மாநிலங்களில் இருந்த மலையாளிகள் கன்னடர்கள் தெலுங்கர்கள் ஆந்திரர்களை தமிழர்களிடத்தில் தலைவர்களாக்கி தமிழர்களை அவர்களுக்கு தெரியாமலே அடிமைகளாக் வேண்டும் என்று முடிவெடுத்தான்.

இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழர்களின் பாரம்பரிய கல்விமுறை சிதைக்கபட்டு ஆசிரியர்களாக தமிழ் அல்லாதவர்கள் சிறுக சிறுக புகுந்தார்கள்.
வெள்ளையர்களோடு சுற்றுப்பயணம் போன இராமசாமி நாயக்கர்


இனி ஈ. வெ. இராமசாமி நாயக்கர் எப்படி வெள்ளையருக்கு கூலியாளாக வேலை செய்தான் என்று பார்ப்போம்.

தமிழர்கள் ஆங்கிலேயனுக்கு எதிராக போராடுவதிலும் பார்க்க முதலில் பார்ப்பனுக்கு எதிராகதான் போராட வேண்டும் என்று நாசுக்காக ஊரூராக சென்று விதைத்தான் இராமசாமி நாயக்கர். அது போக தமிழ் பெண்கள் முட்டான்கள் என்றும் அடிமைகள் என்றும் தாலி குங்குமம் சேலை எல்லாமே அடிமைச் சின்னம் என்றும் கதைகளை பரப்பினான்.

வெள்ளையர்களின் ஆதரவுடன் இராமசாமி நாயகக்கர் தொலை தூர ஊர்களுக்கும் சென்று தமிழர்கள் மூட நம்பிக்கையாளர்கள் என்று கதைகளை பரப்பி மக்களை குழப்பினான்.

வசதி படைத்த தெலுங்கர்கள் மூலமாக தனக்கு தானே பெரியார் என்று பட்டம் சூட்டிய இராமசாமி நாயக்கர் தனது பண பலத்தால் பெரியார் என்ற பட்டத்தை தமிழ்நாட்டு மூலை முடுக்கு எங்கும் பரப்பினான்.

தெலுங்கர்களின் கடைகள் ஆசிரியர்கள் மூலம் பெரியார் என்ற பட்டம் பரப்பப்பட்டது. எல்லாமே வெள்ளையர்களின் திட்டத்தின் மூலம் நடாத்தப்பட்டது. 

தனித் தமிழ் போராட்டத்தை சிதைத்த இராமசாமி நாயக்கர்

இந்த நேரத்தில்தான் தமிழ் பற்றிய தீரிவ வெறி தமிழர்களிடத்தில் உருவாகியது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்றும் தனத் தமிழ் நாடு போராட்டங்களும் உருவெடுத்தன. 

இதனால் பதட்டமடைந்த வெள்ளையர்கள் அவசர அவசரமாக இராமசாமி நாயக்கர் உள்ளிட்ட பல தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளை சந்தித்து ஆலோசனை நடாத்தினார்கள். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும் தமிழர்களை தமிழர்கள் ஆழ விடக்கூடாது என்றும் தமிழர்களின் வீரம் மற்றும் அறிவியல் அது ஒரு காலத்தில் தமது பிராந்தியத்தில் தமது செல்வாக்கை இல்லாது செய்துவிடும் என்றும் அஞ்சினர்.

தவிர தமிழ்நாடு தமிழர்களின் ஆட்சியில் இருக்குமானால் இலங்கையையும் தமிழர்களே கட்டுப்படுத்துவார்கள் என்ற அச்சமும் பிரித்தானியர்கள் இடத்தில் காணப்பட்டது.

இதற்கமைய வெள்ளையர்களின் ஆலாசனைப்படி அவசர அவசரமாக "திராவிடர் கழகம்" என்ற பெயரில் பணபலம் படைத்த தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் கட்சியை உருவாக்கி தமிழ்நாட்டை அடிமையாக்கினர்.

தமிழர்களுக்கு ஆட்சியியலைத் தவிர அத்தனை வெறியையும் ஊட்டினர். தமிழன் தமிழ் நாட்டை ஆழ மட்டும் கேட்க கூடாது வேறு என்னவென்றாலும் செய்யலாம் என வரையறுக்கபட்டனர்.

அதிக அளவு உணர்ச்சிவசப்படும் தமிழ்நாட்டுக் காரனை "தமிழன்" என்று சொல்ல வெறியேற்றப்படும் அதே வேளை அவன் தமி் நாட்டை ஆழ வேண்டும் என்று நினைத்தால் எல்லாப் பக்கத்தாலும் அடித்து அமத்தப்படுத்தப்பட்டுவிடுவான்.

இந்தியா சுதந்திரம் கிடைத்ததில் இருந்து தமிழ்நாட்டை சொல்லும்படியாக தமிழர்கள் ஆண்டதாய் வரலாறில்லை. திராவிடர்கள் என்ற பெயரில் குடியேற்றபட்ட தெலுங்கர்கள் மலையாளிகள் கன்னடர்கள்தான் தமிழனை ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.


இதன் தொடர்ச்சிதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அழித்ததன் காரணமும்.

இரண்டு கடல் எல்லைகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தோடு இருந்தால் தென் பிராந்தியம் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்ற சிந்தனையில்தான் தமிழ்நாட்டை தெலுங்கு கன்னட மலையாளிகளும் தமிழீழ பிரதேசத்தை சிங்களவர்களும் ஆழ வேண்டும் என்று வெள்ளையர்கள் முடிவெடுத்தார்கள்.


தமிழ்நாடு எப்போது தமிழர்களின் கைகளுக்கு போகும்!!! இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர் ஆட்சி பறிக்கட்டும் இன்னமும் ஆறு கோடிச் சனம் அடிமைகளாக கிடப்பதற்கு என்ன காரணம்!!!



ஆதி

07-04-2015 






Sunday, January 18, 2015

தனது அரசியல் தாண்டி, இனம் என்று எவர் செயற்பட்டாலும் தமிழரசுக் கட்சி தடை செய்யும்.




நான் எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளன். 

குறிப்பு : தமிழரசுக் கட்சியோ எந்தவொரு தனிக் கட்சி ஆதரவாளனோ அல்ல. தமிழ்ச் சனத்திற்காக எல்லா தமிழ்க் கட்சிகளும் இணைக்கப்பட்ட கூட்டமைப்பின் ஆதரவாளன்.

செய்தி: "த.தே.கூட்டமைப்பு" பெயரில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அனந்தியை "தமிழரசுக் கட்சி" உறுப்புரிமையில் இருந்து நீக்கியது.
‪#‎தனிக்‬ கட்சியாக பதிவு செய்யாத த.தே.கூ உடையும் என்பது எனது எதிர்வு கூறல்.

இன்று தமிழரசுக் கட்சியில் இருப்பவர்களில் சம்மந்தர் தவிர்ந்த எல்லோரும் த.தே.கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாகிய பின்னர் உள்வாங்கப்பட்டவர்களே.

---------------------------------------------------------------------------------------------
-சின்ன வரலாற்றுக் குறிப்பு:

ஆயுதப் போராட்டம் தொடங்கியதற்கும் அது பின்னர் அழிந்ததற்கும் மிக மூல காரணம் தமிழரசுக் கட்சி என்ற மேட்டுக்குடிக் கும்பல்.

எப்போதும் தனது "கொழும்புச் சொத்து" மற்றும் "தன் சார்ந்த" என்று இயங்கும் இந்த கும்பல்கள் தான் தமிழினத்தின் எல்லா இருப்புகளையும் அழித்தன.

1.இராமநாதன் தனது கொழும்பு சொத்தை காப்பதற்காக தமிழனத்தை அடகு வைத்து "தமிழ் பேசும்" இனத்தை பிரித்தான்.

2.அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் பின்னர் த.விடுதலை கூட்டணி பின்னர் தமிழரசுக் கட்சி என அரசியல் கட்சிகள் தோன்றின. மலையக மக்களின் பிராஜா உரிமையை பறித்தார்கள் (தனி மனித அரசியல் செல்வாக்கிற்காக எடுக்கபட்ட பிரஜா உரிமை பறிப்பின் முடிவின் போது, வடகிழக்கு மக்களின் கருத்து கேட்கப்படவில்லை)

3.இந்திய சார்பு தமிழரசுக் கட்சி தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய இளைஞர்களை உசுப்பியது. பண்டாரநாயக்கா காலத்திலிருந்து, சிங்களவாதத்தை போல் தமிழ் தேசிய வாதத்தை ஊட்டியது. இந்தியா தான் எல்லாம் போதனையை ஊட்டியது.

4. இளைஞர்கள் அரசியல் நோக்கி சிந்திக்க தூண்டப்பட்டார்கள்.. அரசியல் வாதிகளின் நோக்கங்களை தெரிந்து இளைஞர்கள் தமக்கான பாதையை தேர்வு செய்தார்கள். இயக்கங்கள் உருவாகின.

5.தன் அரசியல் நோக்கத்திற்காக பிரசாரம் செய்த தமிழரசுக் கட்சி, விழிப்படைந்த இளைஞர்கள் சுயமாக செயற்பட ஆரம்பிப்பதை விரும்பவில்லை. அதனால் இந்தியாவிடம் முறையிடுகிறது. இளைஞர் குழுக்கள் எப்போதும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற உறுதியை இந்தியா வழங்குகிறது.

6. கால ஓட்டம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. ஆயுதப் பயிற்சி எடுத்து அரசியல் பாதையை தெரிவு செய்த இளைஞர் குழு ஒன்று தன்னை முழுமையாக பலப்படுத்தி இந்திய-தமிழரசுக் கட்சி என்ற வளையத்திற்குள் இருந்து வெளியே வருகிறது. அது இந்தியா என்ற வல்லரசை எதிர்க்கவும் தயாராகிறது.

7. தனது அரசியல் இருப்பை உறுதி செய்வதற்காக பேசியவை தனி அரசியலாக உருவெடுக்கும் என்று கற்பனையிலும் நினைத்திராத தமிழரசுக் கட்சி இளைஞர் குழுக்களை அழிக்க என்னவும் செய்ய தயாராகிறது.

8. இந்தியாவுடன் இணைந்து எல்லா குழுக்களுக்குள்ளும் ஊடுருவி அழிக்கிறது.

9. எல்லோர் மீதும் சந்தேகத்துடனும் பாதுகாப்புடனும் இருந்த புலிகள் அணிக்குள் தமிழரசுக் கட்சியும் இந்தியாவும் ஊடுருவ முடியாமல் 30 வருடங்கள் கடக்கின்றன.

10. ரணிலுடனான சமாதான காலம் உருவாகிறது. இந்தியாவுடன் இணைந்து செயல்பட புலிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

11. இந்தியா வெறுப்புக் காட்டினாலும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இந்தியா புலிகளுக்குள் ஊடுருவுகிறது. அரசியல் பக்கத்தில் தமிழசுக் கட்சி ஊடுருவுகிறது.

12. 35 வருடகால பழியை தீர்த்துக் கொள்ளதமிழரசுக் கட்சி முடிவெடுக்கிறது. புலிகளை அழிப்பதற்கான அத்தனை அரசியல் வேலைகளையும் செய்கிறது. சம்மந்தன் வயசாகி அதற்கு பொறுப்பும் எடுக்கிறார்.

13. பேச்சு வார்த்தைகளில் தம்மை உள்வாங்காமையால் ஏமாற்றம் அடைந்த தமிழரசுக் கட்சி இந்தியாவுடன் இணைந்து புலிகளை அழிக்க திட்டம் போடுகிறது.

14. இதனை புரிந்து கொண்ட புலிகள் ஆயுதப் பயிற்சியில் இருந்த மற்றைய குழுக்களையும் தமிழரசுக் கட்சியோடு இணைத்து அரசியல் ரீதியாக தமிழீழத்திற்கு இருந்த அச்சத்திற்கு "சிறிய" தடுபரணை உருவாக்குகிறார்கள்.

15. இருந்தாலும் தமிழரசுக் கட்சி, தன் கட்டுப்பாட்டில் இருக்க முடியாத புலிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கதிர்காமருடன் இணைந்து எல்லா இடங்களிலும் புலிகளை அழிக்க தடை செய்ய கோருகிறது.

16. உச்சக் கட்டமாக போர் காலத்தில் "இன அழிப்பு" பருவாயில்லை புலிகளை எப்படியாவது அழித்து விடுங்கள் என்ற உடன் படிக்கைக்கு சம்மந்தர் உப்புதல் அளிக்கிறார்.

17. புலிகள் நிர்வாக கட்டமைப்பில் இருந்து மௌனித்த பின்னர் இன்று புலிகளால் உருவாக்கபட்ட த.தே.கூட்டமைப்பு செயல்படுகிறது.

18. தமிழரசுக் கட்சி சுயமாக இயங்கினால் மக்களால் புறக்கணிக்கபடும் என்று தெரிந்த சம்மந்தர் தலமையிலான தமிழரசுக் கட்சி தன்னைப் பலப்படுத்துவதற்காக த.தே.கூட்மைப்பை தனிக் கட்சியாக பதியாமல் இழுத்தடிக்கிறது.

19. தனது அரசியல் தாண்டி இனம் என்று எவர் செயற்பட்டாலும் தமிழரசுக் கட்சி தடை செய்யும்.

ஆதி
18-01-2015

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP