Powered by Blogger.

Friday, December 16, 2011

காலம் எல்லாவற்றிக்கும் பதில் வைத்திருக்கிறது

இன்று உலகெங்கும் தமிழன் அடிவாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமது சுகபோக நலனுகளுக்காக தன்னினத்தையே காட்டிக் கொடுத்தும் அழித்தும் வரும் ஈனத்தனம் தமிழினத்தில் மட்டும் தான் நடக்கிறது.

ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் எதிரிகளோடு சேர்ந்து இனத்தை காட்டிக்கொடுத்த ஈனப்பிறவிகள் இன்று புலம்பெயர் தேசத்தில் வலுத்துவரும் தமிழர் உரிமைக் கோரிக்கைகளை சிதைப்பதற்காக பலவழிகளிலும் செயற்பட்டுவருகின்றனர்.

தமிழர் விடுதலைப்போராட்டத்தையும் உரிமைக் கோரிக்கைகளையும் திசைதிருப்பும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். துணைராணுவக் குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்களாய் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

சிறிலங்காராணுவத்தினால் இந்தனைவருட போராட்ட வரலாற்றில் கொன்றுகுவிக்க்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உயிர்களின் ஆத்மாவின் முன் இந்த பணம் தின்னி பிசாசுகளின் சோரம்போதலால் இன்னமும் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்ட்டுக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லமால் தமிழ் மக்களின் இருப்பு சிறுக சிறுக அரித்து அழிக்கப்ட்டடுக் கொண்டிருக்கிறது.

தமிழர் தரப்பு ஆயுதப்போராட்டத்தை மெளனித்த கையோடு தமிழ்ர் தாயகமெங்கும் சிங்கள அரசு ராணுவத்தையும் சிங்களவர்களையும் பெருமளவு குவித்துவரும் நிலையில் சமாந்தரமாக தமிழர்தாயக நிர்வாக அலகுகளில் சிங்கள இனத்தவர்களை திணித்துவருகிறது.

தமிழ் இளைஞர்களை முகாம்களில் அடைத்துவைத்துள்ளதோடு பேரால் இடம்பெயர்ந்து அடிப்படைவசதியின்றி மீளக்குடியமர்ந்திருக்கும் தமிழ் மக்கள் மீது ராணுவத்தை பயன்படுத்தி அடக்குமுறைகளை மேற்கொண்டுவருகிறது சிறிலங்கா அரசு.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.. கொள்ளைகள் உயிர் அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் உளவியல் மற்றும் அடக்குமுறைப் போர்களை வெவ்வேறு வடிவங்களில் சிறிலங்கா அரசு நடாத்திவருகின்றது. பாதிக்கப்படும் மக்கள் நீதிமன்றம் செல்ல முடியாத அளவிற்கு தமிழர் தாயகத்தில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

ஈபிடிபி துணைராணுவ குழு, கருணா துணைராணுவ குழு, ஜிகாத் துணைராணுவ குழுவை சேர்ந்தவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் பரவலாக களம் இறக்கப்ட்டுள்ளார்கள். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பெண்களை பாலியல் ரீதியாக கேலி செய்வது பெண்களை பாலியல் ரீதியாக ராணுவத்துடன் சேர்ந்து துன்புறுத்துவது.. கப்பம் கோருவது கொள்ளையிடுவது என சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் அடக்குமுறை வடிவங்களுக்கு இந்த துணைராணுவ குழுக்களின் செற்பாடுகள் இப்படி விரிந்து கிடக்கின்றன.

இந்த துணைராணுவ குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமிழ் நாட்டு கம்யூனிஸ்டுகள் சிலரை வலையில் விழுத்தி அவர்களுக்கூடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கெதிராக பாரிய பிரச்சாரம் ஒன்றை தமிழ்நாட்டில் 2008 2009 மற்றும் 2010 களில் அதிகளவில் செய்திருந்தார்கள். புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின் என்ற வார்ததைப்பிரயோகங்களினூடாக பெரும் அரசியலை தமிழ்நாட்டில் நகர்த்தியிருந்தார்கள். கருணாநிதி அரசு சிறிலங்கா அரசுடன் வைத்திருந்த உறவு நிலை இந்த துணை ராணுவக் குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு தளம் அமைத்து செயற்பட பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தது.

தவிர பிரான்ஸ் கனடா பிரித்தானியா மற்றும் நெதர்லாந்துகளிலும் இந்த துணைராணுவ குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமது நடவடிக்கைகளை விரிபுபடுத்தி மக்களை குழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். தாயக விடுதவைப்போரில் வீரகாவியமாக மாவீரர்களை கேலிசெய்வது விடுதலைப்போராட்டம் பற்றிய தவறான கருத்துகளை மக்களில் திணிப்பது என அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை நன்கு செய்கிறார்கள். இந்த எடுபிடிகளின் கேவல அரசியல் நிலை புரிந்து எப்பவோ இவர்களை மக்கள் விலத்தி வைத்திருக்கிறார்கள் என்பது இந்த தடவை நடந்த மாவீரர் தின நிகழ்வுகளில் இரந்த அனைவருக்கும் தெரியவந்திருக்கும்.

புலம்பெயர் தேசங்களில் தோல்வியை தழுவிக்கொண்ட இந்த துணைராணுவக்குழுக்களின் அரசியற்பிரிவினர் தமது கோபங்களை ஈழத்தில் கல்விகற்கும் மாணவர்கள் மீது திசைதிருப்பியிருப்பது ஒன்றும் வியக்கதக்கதல்ல.

ஈழத்தில் மக்களை ஆயுதமுனையில் அடக்குதல் கடத்துதல் கொலைசெய்தல் கொள்ளையடித்தல் கற்பழித்தல் என அனைத்து அராஜகங்களையும் புரிந்துவரும் இவர்கள் புலம்பெயர்தேசத்தில் மக்களை குழுப்புதல் விடுதலைப்போராட்டத்தின் மீது கேலிசெய்தல் என பல வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழகத்தில் தமிழீழபோராட்த்திற்கான இருக்கும் ஆதரவை எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து சிதைப்பதற்கு இந்த ஆயோக்கிய சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்ட்டு தமிழகம் எங்கும் தமிழின விடுதலைக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றிருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் தமிழினத்தின் உரிமையை எதிர்க்கும் வல்லூறுகள் இனம் காணப்பட்டுள்ளன.  இந்த வேளையில் பல புலம்பெயர் தேசங்களில் விரிந்து கிடக்கும் ஒருசில ஓட்டுக்குழுக்களின் அரசியற் பிரிவினரை இனம் கண்டு அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க ணே்டும். அனைத்து மக்களுக்கும் இவர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களே விழிப்பாய் இருங்கள்.

ஆதி
16-12-2011

Thursday, December 15, 2011

திசைதிருப்பப்படும் தமிழர் கோரிக்கைகள்

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மெளனிக்க்பட்டதில் இருந்து தமிழ் மக்களின் உரிமைக்கோரிக்கை பலவழிகளிலும் திசைதிருப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழர் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துதல் அதனை முதன்மைப்படுத்தி ஊடகங்களீனூடாக மக்களை குழப்புதல் என்று ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா அரசுடன் இந்த விடையத்தில் இந்தியாவும் சேர்ந்துள்ளதாகவே தெரிகிறது.
புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசின் குற்றச்செயல்கள் குறித்து விசாரணைக்கான கோரிக்கைகள் பல அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் என்றுமில்லாதவாறு தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்காகன கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
 
தமிழகத்தில் வலுப்பெறும் தமிழீழ விடுதலைக்கான உணர்வலை ஒரு கட்டத்தில் இந்திய மற்றும் பிராந்திய அரசியல் நிலையில் மாற்றங்களை கொண்டுவரும் என்பது இந்திய வல்லரசிற்கு நன்கு தெரியும். இந்த நிலையில் தமிழக மக்களுக்கு இருக்க கூடிய தமிழீழ விடுதலை தொடர்பான நிலைப்பாடு தொடர்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்காக தமிழகத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது காங்கிரஸ் தலமையிலாக மத்திய அரசு.

தவிர ஈழத்தில் நல்லிணன்ன அறிக்கை, தமிழ்தேசிய கூட்டமைப்பினுடனான பேச்சுவார்த்தைகள், அரசியல் தீர்வு குறித்து விவாதிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு என்று தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினைகளை பல வடிவங்களில் சிதறடித்து திசைதிருப்பல்களை செய்து கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.
அரசியல் நிலைகளில் குழுப்பங்களை ஏறப்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசு சாமாந்தரமாக தமி்ழர் தாயகப்பகுதியை சிங்கள மயமாக்கல் அல்லது பெரும்பான்மை சிங்களவர்களின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டுவருதல் என்ற நடவடிக்கையை நாசுக்காக செய்துவருகிறது. தமிழர் தாயகப்பகுதியில் உள்ள அரச அலுவலகங்களிற்கு சிங்களவர்களை நியமித்தல், சிங்கள கலாச்சார நிகழ்வுகளை தமிழர் தாயகப்பகுதியில் பெருமெடுப்பாக செய்தல், தமிழர் தாயகப்பகுதி சிவில் நிர்வாக நடவடிக்கைகள் சிறிலங்கா ராணுவத்தின் கீழ் செயற்படுத்துதல் என பல வழிகளில் தமிழ் மக்களின் இருப்புகளை இல்லாது செய்துவருகிறது சிங்கள அரசு.

நிலங்கள பறிக்கப்படுவது குறித்த மக்களின் குரல்களும் சிறிலங்கா ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல் மற்றும் அத்துமீறல்கள் குறித்த பதிவுகளும் ஊடகங்களில் வருவதை தடுப்பதிலும் குறியாய் இருக்கிறது இந்த அரசு.
தம் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பிவரும் புலம்பெயர் அமைப்புகள் இந்த விடையங்கள் தொடர்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறது சிறிலங்கா அரசு. போர்குற்றங்கள் தொடரபில் இந்திய மற்றும் சீனாவின் உதவியுடன் எப்படியும் தப்பிவிடலாம் என்ற கனவில் சிறிலங்கா அரசு இருப்பதாகவேபடுகிறது.
 
தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் தொடர்பில் கடும்போக்கை வெளிப்படுத்திவந்த இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க அரசுகள் ஆயுதப்போராட்டம் மெளனிக்கட்ட நிலையில் தமிழ் மக்களின் உரிமை மற்றும் தீர்வு குறித்த விடையத்தில் கள்ள மெளனம் சாதித்து வருவது சந்தேகத்திற்குரியது.
 
புலம்பெயர்உறவுகளே!!!

ஆயதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில் எமக்கான உரிமை மற்றும் விடுதலை கேட்பது தொடர்பில் எந்த அரசும் எம்மை குற்றம் சொல்ல முடியாது. தமிழ் மக்களின் விடுதலை பற்றிய தேவையை உரத்து சொல்ல வேண்டும். ஈழத்தில் இருந்து தமிழின விடுதலை குறித்து பொதுமக்களால் எந்த குரலுலம் எழுப்ப முடியாது. அரசியல் வாதிகளின் நடவடிக்கைகள் பேச்சுகளோடு மட்டுப்படுத்தப்ட்டுள்ளது. எனவே புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கப்படல் வேண்டும். சிறிலங்கா அரசு செய்துவரும் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து வெளிநாடுகளுக்கு தொடர்ந்து சொல்லப்பட்ல் வேண்டும். தமிழ் மக்கள் இன்னமும் விடுதலை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி சர்வதேச காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். பிராந்திய வல்லாதிக்கங்கள் எமது விடுதலைத்கெதிராக நகர்த்திக் கொண்டிருக்க கூடிய அரசியல் சூழ்ச்சிகளை தகர்க்க கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

ஆதி
12-12-2011



Tuesday, December 6, 2011

தமிழகத் தோழா!!!

எங்களுக்காய் அழுதீர்கள்...
எங்களுக்காய் வீதிகளில் போராடினீர்கள்...
எங்களுக்காய் தீக்குளித்தீர்கள்...
எங்களுக்காய் பட்டினி கிடந்தீர்கள்...
நாங்கள்
கண்ணீர் வற்றி
ரத்தம் வற்றி
வீழ்ந்து கிடக்கிறோம்...
உங்களில் சிலர் எங்களை கொல்கின்றனர்!!!
அது அகதிப் பெட்டை
இழுத்து வந்து இருக்கிறத குடுத்திட்டு
அலுவல முடி - என்று கூட
உங்களில் சிலர் சொன்னார்களாமே!!!

"ஒரு ஈழத்து அகதி முகாமில் பெண்களுக்கு நடந்த வன்முறை பற்றி நண்பன் ஒருவன் இன்று சொன்னான்... ஆத்திரம் வருகிறது.. அழுகை வருகிறது... பிணம் புணரும் பிசாசுகள் சிங்களத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் இருக்கிறார்கள்."

இங்கும் இருக்கிறார்கள். சிங்களத்தின் மலத்தை தின்றபடி துணை ராணுவ குழுக்களாக வலம்வரும் பிணம் புணரும் பிசாசுகள் இங்கும் இருக்கிறார்கள்!!!

எங்கள் உறவுகள் செத்து விழுந்து உயிர் தப்ப தானே தமிழகம் வந்தார்கள்!!!

எங்களுக்கும் ஒரு நாள் வாழ்வு விடியும்...


ஆதி
06-12-2011

Saturday, December 3, 2011

நினைத்தது நடந்ததா??? _ மாவீரர் நாள்

மாவீரர் நாள் என்பது மாவீரர்களுக்கான அனுஷ்டிப்பு மட்டுமன்றி ஈழப்போராட்டத்தின் ஆழத்தை தமிழினத்தின் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு நாளாக இன்று உருவெடுத்திருக்கிறது.

மாவீரர் நாள்... பத்திரிகைகளில் வரும் இந்த தினம் குறித்து பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பெற்றோர் பதிலளிக்கும் பெரும் உளவியல் இந்த நாட்களில் நடக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது ரீயுசனால் வந்த 5ம் ஆண்டு பெடியன் கேட்கிறான் மாவீரர் தினம் என்றால் என்ன அம்மா?? அவனின் அம்மா சொல்கிறாள் "ஆமிக்காரர இங்க இருந்து கலைக்கிறத்துக்கு அண்ணா அக்காமர் அடிபட்டு செத்தவே.. அவேக்கு விளக்கேத்திற நாள்தான் மாவீரர் நாள்" பெடியனின் அடுத்த கேள்வி "இயக்க அண்ணாஅக்காமாரோ!!"

இங்குதான் ஊடுகடத்தப்படும் உளவியல் இருக்கிறது.
1) இயக்க அண்ணாமார் அக்காமார் குறித்த தகவல்களை இவன் வயது பராயத்தினர் பேசிக் கொள்கின்றனர்
2) இயக்க அண்ணாமார் அக்காமார் ஆமிய எங்களது இடத்தில் இருந்து கலைப்பதற்கு தான் சண்டை பிடித்திருக்கிறீனம்
3) அம்மா கூட சொல்வதால் அவர்கள் செய்தது சரியானதே!!

இவை சாதாரணமான விடையங்களல்ல... பெற்றோர்களும் இதை சாதாரணமாக சொல்வது கிடையாது. எமது வரலாறுகளை பிள்ளைகளுக்கூடாகவே அந்த தலைமுறைக்கு கடத்தும் மிகச்சிறந்த சக்திகளாக இந்த பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

ஆணையிறவு முகாமில் இராணுவம் கட்டி வைத்திருக்கும் போர்ச்சினத்துடன் புகைப்படம் எடுக்க கேட்ட ஒரு 9ம் ஆண்டு மாணவனை அவனது தகப்பனார் " இது எங்களை  சிங்களவன் வென்றதெண்டு கட்டின ஒன்று இதில் நின்று நாங்கள் புகைப்படம் எடுக்க கூடாது" என்று சொன்னார். இப்படிதான் வரலாறு கடத்தப்படுகிறது.

அதே போல் தான் மாவீரர் நாள் உலகெங்கும் வாழும் தமிழினித்தின் அடுத்த தலைமுறைக்கு தமிழர்கள் யார் என்பதை வீரியமாக அவர்களுக்குள் இறக்கும் ஒரு நாளாக இருக்கிறது.

பாடசாலை சுற்றுலா ஒன்றிற்கு டக்ளசிடம் பணம் கேட்டால் ஒழுங்கு செய்வார் என்று யாரோ சொன்னார்கள்.. அவரிடம் போய் பார்ப்போம் என்று சில மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்... அந்த வகுப்பில் பலர் "டக்ளசிடம் பணம் வாங்கி தான் சுற்றுலா போக வேண்டுமென்றால் அப்படியொரு சுற்றுலா எமக்கு தேவையில்லை" என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த சிறுவர்களுக்கு பிரித்தறியும் அரசியல் எப்படி கிடைத்திருக்கும்? இனம் காணும் ஆற்றல் எப்படி கிடைத்திருக்கும்??? இது தான் இது வரை சிங்களம் அஞ்சிக் கொண்டிருப்பதற்கான காரணம்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் ஆயுதம் மெளனித்து போன பிற்பாடு இந்த வருடம் மாவீரர் நாள் குறித்து தமிழ் மக்களிடத்தில் மூர்க்கத்தனம் கிளம்பியிருக்கிறது. அளவுக்கு மிஞ்சிய அதட்டல்கள் மிரட்டல்களால் மக்களின் மனம் கொதிப்படையும் நிலைக்கு தள்ளப்ட்டிருக்கிறது. கடந்த வருடம் கிளிநொச்சி முழங்காவில் என பல இடங்களில் கோயில்களில் மணி அடிக்க தடை செய்தார்கள். அந்த தடை உத்தரவை 25ம் 26ம் திகதிகளில் பிறப்பித்தார்கள் இருந்தும் 27ம் திகதி பல கோயில்களில் மணியடிக்கப்ட்டது.

இந்த தடவை ஒரு வாரத்திற்கு முன்பே கோயில்களில் மணியடிக்க தடை, கோயில்கள் மற்றும் நிகழ்வுகளில் இசைக்கப்படும் பாடல்களள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும், 26ம் திகதி கடைகளில் கேக் அடிக்க கூடாது என அளவுக்கு மிஞ்சிய மிரட்டல்களை செய்திருந்தது சிறிலங்கா அரசு.

தனது பிள்ளைகளை தனது ரத்த உறவுகளை நினைந்து ஒரு தீபம் ஏற்றக் கூடவா எமக்கு உரிமை இல்லை என்று சிந்திக்கும் நிலையில் வயது கூடியவர்கள் தள்ளப்படும் போது அது இலகுவாக சிறுவர்களிடத்தில் ஊடுகடத்தப்படும். இது தான் இந்த மாவீரர் நாட்களில் தமிழர் தாயகமெங்கும் நடந்தது. வீதிகளில் இருந்த மாவீரர் தூபிகளுக்கு பூக்கள் போட்ட சம்பவமும், தீபமேற்றிய சம்பவமும் 2009 ஆயுத மெளனிப்பிற்கு பிறகு இந்த தடவைதான் அதிக அளவு நிகழ்ந்திருக்கிறது.

தவிர புலத்தில் பெரும் அசாதாரண சூழலை உருவாக்க நினைத்திருந்திருக்கிறது சிங்கள அரசு.

ஆனால் சிங்கள அரசின் எதிர்பார்ப்புக்கு மீறி வழமையை போலவே புலம்பெயர் தமிழ் மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் பரவலாக அனுஸ்டித்திருக்கிறார்கள். பிரான்ஸில் சிங்கள அரசால் ஏற்பாடு செய்யப்ட்ட குழப்பகர நிகழ்வை முறியடித்து ஒன்றாக திரண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

பிரித்தானியாவில் தமிழ் மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக களம் இறக்கப்ட்டுள்ளவர்கள் தம்மாலான குழப்பங்களை ஏற்படுத்தியும் தமிழ் மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஸ்டித்திருக்கிறார்கள்.

அதிர்வு போன்ற ஊடகங்கள் சின்ன சின்ன பிரச்சினைகளை பெரிதாக எழுதி மக்களிடத்தில் குழப்பங்களை உருவாக்க நினைத்திருந்த போதும் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட்டமை வரவேற்கதக்கது.

சிறிலங்கா அரசும் இந்திய வல்லாதிக்கமும் தமிழீழ மக்களை தவறாக எடை போட்டிருக்கலாம். விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாத வெளியில் தமிழ் மக்கள் தடுமாறுவார்கள் ஊடகங்களை வைத்து தமிழீழ மக்களையும் குழப்பிவிடலாம் என்று தவறாக எடை போட்டிருக்கலாம்.

மாவீரர்களின் ஆத்ம பலத்தோடு விடுதலை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தமிழ் இனத்தை அள்ளக்கை ஊடகங்களாலும் பணத்தினாலும் சிதறடித்துவிட முடியாதென்பதை இந்த ஆண்டு மாவீரர் தினம் இந்த அரசுகளிற்கு நன்றாகவே விளங்கப்படுத்தியிருக்கும்.

ஆதி
02-12-2011

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP