Powered by Blogger.

Tuesday, October 16, 2012

வலி தெரியாமல் அழிக்கப்படும் தமிழ் இனம்

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய சிங்கள பெளத்த கலாச்சார மண்டபத்தை கட்டுவதற்கான இந்தியாவின் திட்டங்கள் திரை மறைவில் மிக விரைவாக நடந்தேறியிருப்பதாகவே தெரிகிறது... இதை சும்மா விட்டால் அப்துல் கலாம் வந்து திறக்கும் பொழுது எல்லோரும் "ஆ..." என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்துல் கலாமின் ஆலோசனையில் ஏங்கனவே பெளத்த பாடசாலை ஆரம்பிக்கபட்டு சிங்கள கலாச்சார உடையில் தமிழ்ச்சிறுவர்களுக்கு "சிங்கள பெளத்தம்"

கற்பிக்கப்படுகிறது. (சிங்கள பெளத்தத்தின் அடிப்படையே திரிக்கப்பட்ட அரசியல் கதைகள் தான்).

யாழில் சிங்கள பெளத்த கலாச்சார மண்டபத்தை கட்டும் இந்தியா அம்பாந்தோட்டையில் "தமிழ் இந்து கலாச்சார" மண்டபத்தையும் பேருவளையில் "தமிழ் இஸ்லாம் கலாச்சார" மண்டபத்தையும் கண்டியில் "தமிழ் கிரிஸ்தவ" கலாச்சார மண்டபத்தையும் இதே பிரமாண்டத்துடன் கட்டுமா??

திரை மறைவில் செய்வது ஒன்று... த.தே.கூட்டமைப்பை கூப்பிட்டு சொல்வது ஒன்று.. புலனாய்வுப்பிரிவினரை வைத்து கதைகள் அவிழ்த்துவிடுவது இன்னொன்றுமென இந்திய காட்டேறி அரசு தமிழினத்தின் இருப்பை தமிழீழத்தில் இல்லாது செய்வதற்கான பல வழிகளை திறந்துவிட்டிருக்கிறது.

தமிழனம் வித்தியாசமான அரசியல் போருக்குள் சிக்குண்டுகிடக்கிறது. வலி தெரியாமல் தமிழினம் கூறுபோட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புலம்பெயர் இளையோர்களே!!! இன்று உண்மையாக செயற்படும் தமிழர் அமைப்புகளே!!!!

எப்படிக் கையாளப்போகிறீர்கள். இவற்றை இங்கிருந்து கொண்டு கையாள முடியாது. காணிப்பறிப்பிற்கெதிராக வன்னயில் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.. யாழ்ப்பாணம் அமைதியாக இருக்கிறது!!! மட்டக்களப்பில் அத்துமீறல்கள் நடக்கிறது.. திருகோணமலை அமைதியாக இருக்கிறது.... இது தான் நிலை. அச்சம் சூழ்ந்து கிடக்கிறது. வலி தெரியாமல் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படியான நிகழ்வுகளை விரைவாக ஆவணப்படுத்தி சர்வதேசப்படுத்துங்கள். பிரச்சினைகளை ஆறவிடாதீர்கள்.

ஆதி


16-10-2012

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP