Powered by Blogger.

Thursday, April 11, 2013

சீமானை அடுத்த கருணாநிதியாக்க திட்டமா!!! அம்பலமாகும் சதிகள்

நாம்தமிழர் கட்சி தலைவரும் தமிழீழ விடுதலைப்போராட்ட உணர்வாளருமான சீமானை "கருணாநிதி" செய்த செயற்திட்டங்களை செய்வதற்காக தயார்ப்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் பெரும் துரோக கும்பல்கள் கிளம்பி போராட்டத்தை சிதைத்திருந்தன. அதில் முக்கியமானவர் கருணாநிதி. இனி விடையத்திற்கு வருகிறேன்.

தமிழீழ விடுதலை தொடர்பில் இதுவரை சரியான நிலைப்பாட்டில் இருக்கும் சீமானை குழப்பும் நடவடிக்கையில் கருணாநிதி மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கும்பல் ஒன்றை என்றுமில்லாதவாறு முழுவீச்சுடன் செயற்படுவதற்கு சிங்கள - இந்திய புலனாய்வு அமைப்புகள் களம் இறக்கியிருப்பதாக தெரிகிறது.

அதன் உச்சகட்ட காய்நகர்த்தலாகவே சீமானை மலேசிய பெண்ணுடன் (அந்த பெண் பற்றி இன்னமும் தெளிவான நிலை தெரியவில்லை என்பதால் அது பற்றி பேசுவதை தவிர்த்துக் கொள்கிறேன்) தொடர்புபடுத்தி பதிவுகள் வெளியானதும் அதை மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிரும் இருக்கின்றன (இதயச்சந்திரனிடம் இருந்து எனக்கும் மெயில் வந்தது).

தமிழ்நாட்டில் "தமிழீழ ஆதரவு" நிலைப்பாடு பல வருடங்களுக்கு பிறகு என்றும் இல்லாதவாறு மையம் கொண்டிருக்கிறது. அதன் தாக்கமாக தமிழீழ துரோக கும்பல்கள் ஓரங்கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.  அதனால் அமை எப்படியாவது தகர்த்தெறியவேண்டும் என்ற நிலைக்கு இந்திய "றோ" வும் சிங்கள அரசும் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இன்று "நாம் தமிழர் கட்சி" தலைவர் சீமானின் மீது சதி பின்னபட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சதிக்கும்பல்கள்.
1. அதிர்வுக் கண்ணன் ( தமிழீழ ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்துலக செயலக அமைப்புக்குள் 2009 ற்கு பிறகு ஊடுருவியவர் : வெளிநாடுகளில் நேரடிக் களங்களை காணதவர்களால் நிர்வகிக்கப்ட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளில் சிபார்சுகளின் அடிப்படையில் நபர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது)

2. கருணாநிதி,"றோ" வைச் சேர்ந்த எழுத்தாளர்கள்/அல்லது ஊடக நிறுவனத்தார்


அதிர்வுக் கண்ணனும் அதன் சதி வலையமைப்பும்

அதிர்வுக் கண்ணன் என அறியப்படும் இந்திய உளவாளி 2009 ற்கு பிறகு தமிழீழ அமைப்புகளுக்குள் சிபார்சின் மூலம் உள் நுழைகிறார். தாயத்தில் உயிரிழப்பு அதிகரித்து மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகள் பின்வாங்கிக்கொண்டிருந்த நேரம் அது. புலத்தில் தமிழீழ மக்கள் அல்லோலப்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது. புலம்பெயர் வாழ் மக்களிடத்தில் நிர்வாகங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்த நேரம் அதிர்வுக் கண்ணன் போன்ற சிலர் தமிழீழ அமைப்புகளுக்குள் சிபார்சிகளினால் நிர்வாக மட்டம் வரை நுழைந்ததாக தெரியவருகிறது.

அதிர்வுக்கண்ணன் "தமிழீழ ஒருங்கிணைப்புக்குழு"விற்குள் நுழைந்து "அனைத்துலக செயலக" பிரிவின் வெளிநாட்டு உறுப்பினர்களுடன் பலருடனும் தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், தொடர்பில் இருந்த புலனாய்வுப்பிரிவு போராளிகள், தமிழ்நாட்டில் தொடர்பில் இருந்தவர்கள் என பல தகவல்களை சேகரித்த "கண்ணன்" குழுவினர் "றோ"வின் ஆலோசனைப்படி இணைய தளத்தினை ஆரம்பித்திருக்கின்றனர்.

அதிர்வு என்ற இணைய தளத்தை ஆரம்பித்து செய்த முதலாவது வேலை 2009ம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த இணையத்தினூடாக மக்களை குழப்பி 2010ம் ஆண்டு மாவீரர் தினத்திற்கு முன்னதாக தமிழீழ அமைப்புகளுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கியது. அதன் பின்னர் அவர்களிடம் இருந்து நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்த போராளிகள், இறுதிப்போரில் தப்பிய போராளிகள் என பல முக்கியமான போராளிகள், அவர்களின் குடும்பங்கள் பற்றிய தகவல்களை சேகரித்தார் கண்ணன்.

அந்த தகவல்களோடு கருணாநிதி காலத்தில் ஏராளமான தமிழீழ விடுதலைப்புலி போராளிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதும் பலர் நாடுகடத்தப்பட்டதும் செய்திகளில் வெளியாகியிருந்தது.

விழுப்புண் அடைந்து தப்பிய போராளிகள், விடுதலைப்புலிகளுக்கு தொடர்சியாக உதவியவர்கள், அவர்களின் புகைப்படங்கள், வசிக்கும் இடம், என எல்லா வற்றையும் இணையங்களில் வெளியிட்டு மக்களை தொடரச்சியாக குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்து அதிர்வு.

தமிழீழ தேசிய தலைவரிக் தாயாரை மருத்துவத்திற்கு கூட  அனுமதிக்காமல் விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பிய கருணாநிதியை 2012 ஆரம்பத்தில் அதிர்வுக் கண்ணன் சந்தித்திருக்கிறார்.
அதிர்வுக் கண்ணனும் கருணாநிதியும் 2012


அதிர்வின் முகநூல் அறிக்கை

இதில் என்ன காமடி என்றால் அதிர்வுக்கண்ணன் கொடுத்த அழுத்தத்தினால் தான் "டெசோ" மாநாட்டில் பல முக்கியமான தீர்மானங்கள் (என்னது என்று கேட்க கூடாது) நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல் மத்திய அரசில் இருந்தும் விலகியதாக அதிர்வு முகநூல் ஊடாக கருத்து தெரிவித்திருக்கிறார்.  
இதற்கு கருணாநிதியின் "டெசோ" கும்பல் கட்டாயம் பதில் தந்தே ஆக வேண்டும்.

தவிர அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய தமிழ்நாட்டு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு பற்றி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் சொல்லியிருக்கிறார் அதிர்வுக்கண்ணன்.

அதிர்வுக் கண்ணன் தன்னை தமிழீழ விடுதலைப்போராட்ட சக்தியாக பல தடவைகள் தன் வாயால் சொல்லி காட்டியிருக்கிறார். தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் என்ற காரணத்திற்காக தமிழழகத்திற்குள்ளேயே நுழைய விடாத கருணாநிதி கண்ணனை சந்தித்திருப்பதன் மர்மம் என்ன??

புலம்பெயர் தமிழீழ மக்கள் உடனடியாக செயற்பட்டு தமிழீழ ஒருங்கிணைப்புக்குழு லண்டன் தனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.

அது போக தமிழ்ச்தேசிய கூட்டமைப்பினையும் குறிப்பாக சிறிதரன் எம்.பி யையும் தரக்குறைவாக (சிறி வாத்தி என அதிர்வு எழுதியது) எழுதி புலம்பெயர் தமிழர்களிடையில் பெரும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதற்கு பல தடவைகள் முயற்சி செய்தது அதிர்வு. சிறிதரன் எம்.பி உடன் கூட நின்று செயற்படுபவர்கள் யார் யார் என்பதையெல்லாம் வெளியிட்டு அவர்களை சிங்களப் புலனாய்வுப்பிரிவினர் கடத்தும் அளவிற்கு தகவல்களை வழங்கியது கண்ணன் என்றே அறியப்படுகிறது.
அதிர்வினால் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்கும் பொன்காந்தன் சில மாதங்களில் காணமல் போய்விட்டார்.

தமிழீழ தாயகத்தில் நிலப்பறிப்புக்கு எதிராக போராடும் மக்கள் பற்றியோ அல்லது நீதி மன்றங்களில் செய்யப்படும் வழக்கு தாக்கல்கள் பற்றியோ அல்லது அல்லலுறும் போராளிகள் மற்றும் மக்கள் பற்றியோ எந்த தகவல்களையும் செய்தி வெளியிடாத அதிர்வு புலம்பெயர் அமைப்புகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டு வருகிறது.

அது போக இன்று "சூசை" அண்ணை பற்றிய தகவல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலையோ அல்லது நடந்த இறுதிப்போர் பற்றியோ எந்தவொரு பூரண அறிவுமின்றி அந்த கட்டுரை தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. கட்டுரையில் இருக்கும் மொழி நடை "ஈழத்தமிழரின்" மொழி நடையல்ல.  இறுதிப்போரில் ஒரே இடத்தில் குழுமியிருந்த மக்களிடம் "இரண்டாயிரம் மீனவ மக்கள் வாருங்கள்" என்று சூசையண்ணை கேட்டதாக தமிழ்நாட்டு சினிமா பாணியில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. சொல்லப்பட்டடிருக்கும் செய்தியின் சம்பவம் குறித்து பல தமிழீழ மக்களுக்கு தெரியும்.
தமிழீழ தமிழில் இது புதுசு

"விறுவிறுப்பு" என்ற பெயரில் ஏதோ தலைவருடன் இருந்தது போல எழுதும் அதே குழுமத்தை சேர்ந்த தமிழ்நாட்டு "ஆடு" ஒன்றினால் எழுதப்பட்ட கட்டுரைதான் சூசை அண்ணையின் கட்டுரை போன்ற பல கட்டுரைகள். அதிர்வு தன்னை தமிழீழ விடுதலைப்போராட்டுத்துடன் நெருங்கியவர் என்று காட்டுவதற்காகவும் தமிழ்நாட்டில் நிலையெடுக்கவும் நினிமா பாணியில் இது போன்ற பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.


சீமான் குறிவைக்கப்பட்டிருக்கிறாரா?

அண்மையில் சீமான் குறித்த செய்திகளை சில இணையங்களும் அதிர்வு தனது மின்னஞ்சலினூடாகவும் பலருக்கு அனுப்பியிருந்தது.

முதலில் சீமான் பற்றிய செய்தியை அனுப்பியதால் தனக்கு பெருமையாக இருக்கும் என நினைத்த அதிர்விற்கு ஏமாற்றம் மிஞ்சியதால் அதை தான் செய்யவில்லை என்றும் "சேவர்" கடவுச்சொல் உடைக்கப்பட்டு வேறு யாரோ பாவித்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டது.

பல தடவைகள் தனது "சேவர்" உடைக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வெளியிட்ட ஒரே இணையம் அதிர்வாகதான் இருக்க முடியும்.

Hotmail, Gmail என்பன முன்னணி தகவல் தொழினுட்ப நிறுவனங்கள்.  Hotmail என்பது Microsoft இன் மின்னஞ்சல். இவற்றை சாதாரணமாக முடக்குவது என்பது இயலாதகாரியம்.
இதே அதிர்வு சீமான் குறித்தும் நாம் தமிழர் கட்சி குறித்தும் பல மோசமான செய்திகளை வெளிட்டிருந்தது (அவை நீக்கப்பட்டிருக்கின்றன)
இதில் இருக்கும் ஆதே பாணியில் தான் அதிர்வின் செய்திகள் வெளியாவதை கவனித்துப் பாருங்கள்.
அதிர்வுதான் ஆர்வ கோளாறில் முதலில் மின்னஞ்சலை அனுப்பியது என்பதற்கான ஆதாரம்

சீமானின் வெளிநாட்டு பயணத்தின் போது அதிர்வுக் கண்ணன் அனைத்துலக செயல சில ஆடுகளை சீமானை சந்திக்க பண்ணியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் மூலம் சீமானை நெருங்குவதற்கான நாடகத்தின் முதல் கட்டம் தான் இந்த சீமான் பற்றிய செய்திகள் என்று தெரியவருகிறது. அதாவது சீமானைப் பற்றி பிழையான தகவல்களை பரப்ப வேண்டும் பின்னர் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டு சீமானிடம் நெருங்க வேண்டும்.

தமிழீழத்திற்கு மிக அண்மையில் இருக்கும் ஒரே மொழி பேசும் பெரும் நிலம் என்ற வகையில் தமிழக அரசியல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நிட்சயம் தாக்கத்தை செலுத்தும்.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் எதிர்காலத்தில் சீமானை பணத்தினாலும் செல்வாக்கினாலும் கட்டுப்படுத்தினால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டங்களை தமிழகத்தில் முடக்கிவிடலாம் என்று நினைத்து நீண்டகால சதித்திட்டத்தில் உளவு அமைப்புகள் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

 கருணாநிதியை எப்படி செயற்பட வைத்ததோ அதே கருவிதான் இன்று சீமான் மீதும் பொறி வைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுப்பியிருக்கிறது.

அதிர்வுக் கண்ணனின் நண்பர் ஒருவர் போதையில் உளறிய தகவல்களின் அடிப்படையிலும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை கவனித்து வருவதில் இருந்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

பருதி அண்ணை உட்பட பலரின் பின்னணியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்துலக செயலகத்தினுக்குள் நுழைந்திருக்கும் "ஆடு"களான அதிர்வுக் கண்ணன் கும்பல் தான் காரணம் என்று பலர் எழுதியிருக்க படித்திருக்கிறேன்.
வெளியாகிய செய்திகளையும் அதன் பிறகு நடந்தவற்றையும் வைத்து நீங்களே அறிந்து கொள்ளலாம்.

தவிர சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை புலம்பெயர் தமிழர்கள் செய்து வந்த நிலையில் தன்னை பெரும் செயற்பாட்டாளராக காட்டும் அதிர்வு தனது இணையத்தில் சிறிலங்காவிற்கான வர்த்தக விளம்பரங்களை தொடர்ச்சியாக வெளிட்டு வந்தது என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்.


ஆதி
11-4-2013

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP