Powered by Blogger.

Friday, December 16, 2011

காலம் எல்லாவற்றிக்கும் பதில் வைத்திருக்கிறது

இன்று உலகெங்கும் தமிழன் அடிவாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமது சுகபோக நலனுகளுக்காக தன்னினத்தையே காட்டிக் கொடுத்தும் அழித்தும் வரும் ஈனத்தனம் தமிழினத்தில் மட்டும் தான் நடக்கிறது.

ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் எதிரிகளோடு சேர்ந்து இனத்தை காட்டிக்கொடுத்த ஈனப்பிறவிகள் இன்று புலம்பெயர் தேசத்தில் வலுத்துவரும் தமிழர் உரிமைக் கோரிக்கைகளை சிதைப்பதற்காக பலவழிகளிலும் செயற்பட்டுவருகின்றனர்.

தமிழர் விடுதலைப்போராட்டத்தையும் உரிமைக் கோரிக்கைகளையும் திசைதிருப்பும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். துணைராணுவக் குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்களாய் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

சிறிலங்காராணுவத்தினால் இந்தனைவருட போராட்ட வரலாற்றில் கொன்றுகுவிக்க்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உயிர்களின் ஆத்மாவின் முன் இந்த பணம் தின்னி பிசாசுகளின் சோரம்போதலால் இன்னமும் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்ட்டுக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லமால் தமிழ் மக்களின் இருப்பு சிறுக சிறுக அரித்து அழிக்கப்ட்டடுக் கொண்டிருக்கிறது.

தமிழர் தரப்பு ஆயுதப்போராட்டத்தை மெளனித்த கையோடு தமிழ்ர் தாயகமெங்கும் சிங்கள அரசு ராணுவத்தையும் சிங்களவர்களையும் பெருமளவு குவித்துவரும் நிலையில் சமாந்தரமாக தமிழர்தாயக நிர்வாக அலகுகளில் சிங்கள இனத்தவர்களை திணித்துவருகிறது.

தமிழ் இளைஞர்களை முகாம்களில் அடைத்துவைத்துள்ளதோடு பேரால் இடம்பெயர்ந்து அடிப்படைவசதியின்றி மீளக்குடியமர்ந்திருக்கும் தமிழ் மக்கள் மீது ராணுவத்தை பயன்படுத்தி அடக்குமுறைகளை மேற்கொண்டுவருகிறது சிறிலங்கா அரசு.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.. கொள்ளைகள் உயிர் அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் உளவியல் மற்றும் அடக்குமுறைப் போர்களை வெவ்வேறு வடிவங்களில் சிறிலங்கா அரசு நடாத்திவருகின்றது. பாதிக்கப்படும் மக்கள் நீதிமன்றம் செல்ல முடியாத அளவிற்கு தமிழர் தாயகத்தில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

ஈபிடிபி துணைராணுவ குழு, கருணா துணைராணுவ குழு, ஜிகாத் துணைராணுவ குழுவை சேர்ந்தவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் பரவலாக களம் இறக்கப்ட்டுள்ளார்கள். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பெண்களை பாலியல் ரீதியாக கேலி செய்வது பெண்களை பாலியல் ரீதியாக ராணுவத்துடன் சேர்ந்து துன்புறுத்துவது.. கப்பம் கோருவது கொள்ளையிடுவது என சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் அடக்குமுறை வடிவங்களுக்கு இந்த துணைராணுவ குழுக்களின் செற்பாடுகள் இப்படி விரிந்து கிடக்கின்றன.

இந்த துணைராணுவ குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமிழ் நாட்டு கம்யூனிஸ்டுகள் சிலரை வலையில் விழுத்தி அவர்களுக்கூடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கெதிராக பாரிய பிரச்சாரம் ஒன்றை தமிழ்நாட்டில் 2008 2009 மற்றும் 2010 களில் அதிகளவில் செய்திருந்தார்கள். புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின் என்ற வார்ததைப்பிரயோகங்களினூடாக பெரும் அரசியலை தமிழ்நாட்டில் நகர்த்தியிருந்தார்கள். கருணாநிதி அரசு சிறிலங்கா அரசுடன் வைத்திருந்த உறவு நிலை இந்த துணை ராணுவக் குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு தளம் அமைத்து செயற்பட பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தது.

தவிர பிரான்ஸ் கனடா பிரித்தானியா மற்றும் நெதர்லாந்துகளிலும் இந்த துணைராணுவ குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமது நடவடிக்கைகளை விரிபுபடுத்தி மக்களை குழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். தாயக விடுதவைப்போரில் வீரகாவியமாக மாவீரர்களை கேலிசெய்வது விடுதலைப்போராட்டம் பற்றிய தவறான கருத்துகளை மக்களில் திணிப்பது என அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை நன்கு செய்கிறார்கள். இந்த எடுபிடிகளின் கேவல அரசியல் நிலை புரிந்து எப்பவோ இவர்களை மக்கள் விலத்தி வைத்திருக்கிறார்கள் என்பது இந்த தடவை நடந்த மாவீரர் தின நிகழ்வுகளில் இரந்த அனைவருக்கும் தெரியவந்திருக்கும்.

புலம்பெயர் தேசங்களில் தோல்வியை தழுவிக்கொண்ட இந்த துணைராணுவக்குழுக்களின் அரசியற்பிரிவினர் தமது கோபங்களை ஈழத்தில் கல்விகற்கும் மாணவர்கள் மீது திசைதிருப்பியிருப்பது ஒன்றும் வியக்கதக்கதல்ல.

ஈழத்தில் மக்களை ஆயுதமுனையில் அடக்குதல் கடத்துதல் கொலைசெய்தல் கொள்ளையடித்தல் கற்பழித்தல் என அனைத்து அராஜகங்களையும் புரிந்துவரும் இவர்கள் புலம்பெயர்தேசத்தில் மக்களை குழுப்புதல் விடுதலைப்போராட்டத்தின் மீது கேலிசெய்தல் என பல வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழகத்தில் தமிழீழபோராட்த்திற்கான இருக்கும் ஆதரவை எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து சிதைப்பதற்கு இந்த ஆயோக்கிய சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்ட்டு தமிழகம் எங்கும் தமிழின விடுதலைக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றிருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் தமிழினத்தின் உரிமையை எதிர்க்கும் வல்லூறுகள் இனம் காணப்பட்டுள்ளன.  இந்த வேளையில் பல புலம்பெயர் தேசங்களில் விரிந்து கிடக்கும் ஒருசில ஓட்டுக்குழுக்களின் அரசியற் பிரிவினரை இனம் கண்டு அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க ணே்டும். அனைத்து மக்களுக்கும் இவர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களே விழிப்பாய் இருங்கள்.

ஆதி
16-12-2011

Thursday, December 15, 2011

திசைதிருப்பப்படும் தமிழர் கோரிக்கைகள்

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மெளனிக்க்பட்டதில் இருந்து தமிழ் மக்களின் உரிமைக்கோரிக்கை பலவழிகளிலும் திசைதிருப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழர் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துதல் அதனை முதன்மைப்படுத்தி ஊடகங்களீனூடாக மக்களை குழப்புதல் என்று ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா அரசுடன் இந்த விடையத்தில் இந்தியாவும் சேர்ந்துள்ளதாகவே தெரிகிறது.
புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசின் குற்றச்செயல்கள் குறித்து விசாரணைக்கான கோரிக்கைகள் பல அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் என்றுமில்லாதவாறு தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்காகன கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
 
தமிழகத்தில் வலுப்பெறும் தமிழீழ விடுதலைக்கான உணர்வலை ஒரு கட்டத்தில் இந்திய மற்றும் பிராந்திய அரசியல் நிலையில் மாற்றங்களை கொண்டுவரும் என்பது இந்திய வல்லரசிற்கு நன்கு தெரியும். இந்த நிலையில் தமிழக மக்களுக்கு இருக்க கூடிய தமிழீழ விடுதலை தொடர்பான நிலைப்பாடு தொடர்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்காக தமிழகத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது காங்கிரஸ் தலமையிலாக மத்திய அரசு.

தவிர ஈழத்தில் நல்லிணன்ன அறிக்கை, தமிழ்தேசிய கூட்டமைப்பினுடனான பேச்சுவார்த்தைகள், அரசியல் தீர்வு குறித்து விவாதிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு என்று தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினைகளை பல வடிவங்களில் சிதறடித்து திசைதிருப்பல்களை செய்து கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.
அரசியல் நிலைகளில் குழுப்பங்களை ஏறப்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசு சாமாந்தரமாக தமி்ழர் தாயகப்பகுதியை சிங்கள மயமாக்கல் அல்லது பெரும்பான்மை சிங்களவர்களின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டுவருதல் என்ற நடவடிக்கையை நாசுக்காக செய்துவருகிறது. தமிழர் தாயகப்பகுதியில் உள்ள அரச அலுவலகங்களிற்கு சிங்களவர்களை நியமித்தல், சிங்கள கலாச்சார நிகழ்வுகளை தமிழர் தாயகப்பகுதியில் பெருமெடுப்பாக செய்தல், தமிழர் தாயகப்பகுதி சிவில் நிர்வாக நடவடிக்கைகள் சிறிலங்கா ராணுவத்தின் கீழ் செயற்படுத்துதல் என பல வழிகளில் தமிழ் மக்களின் இருப்புகளை இல்லாது செய்துவருகிறது சிங்கள அரசு.

நிலங்கள பறிக்கப்படுவது குறித்த மக்களின் குரல்களும் சிறிலங்கா ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல் மற்றும் அத்துமீறல்கள் குறித்த பதிவுகளும் ஊடகங்களில் வருவதை தடுப்பதிலும் குறியாய் இருக்கிறது இந்த அரசு.
தம் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பிவரும் புலம்பெயர் அமைப்புகள் இந்த விடையங்கள் தொடர்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறது சிறிலங்கா அரசு. போர்குற்றங்கள் தொடரபில் இந்திய மற்றும் சீனாவின் உதவியுடன் எப்படியும் தப்பிவிடலாம் என்ற கனவில் சிறிலங்கா அரசு இருப்பதாகவேபடுகிறது.
 
தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் தொடர்பில் கடும்போக்கை வெளிப்படுத்திவந்த இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க அரசுகள் ஆயுதப்போராட்டம் மெளனிக்கட்ட நிலையில் தமிழ் மக்களின் உரிமை மற்றும் தீர்வு குறித்த விடையத்தில் கள்ள மெளனம் சாதித்து வருவது சந்தேகத்திற்குரியது.
 
புலம்பெயர்உறவுகளே!!!

ஆயதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில் எமக்கான உரிமை மற்றும் விடுதலை கேட்பது தொடர்பில் எந்த அரசும் எம்மை குற்றம் சொல்ல முடியாது. தமிழ் மக்களின் விடுதலை பற்றிய தேவையை உரத்து சொல்ல வேண்டும். ஈழத்தில் இருந்து தமிழின விடுதலை குறித்து பொதுமக்களால் எந்த குரலுலம் எழுப்ப முடியாது. அரசியல் வாதிகளின் நடவடிக்கைகள் பேச்சுகளோடு மட்டுப்படுத்தப்ட்டுள்ளது. எனவே புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கப்படல் வேண்டும். சிறிலங்கா அரசு செய்துவரும் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து வெளிநாடுகளுக்கு தொடர்ந்து சொல்லப்பட்ல் வேண்டும். தமிழ் மக்கள் இன்னமும் விடுதலை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி சர்வதேச காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். பிராந்திய வல்லாதிக்கங்கள் எமது விடுதலைத்கெதிராக நகர்த்திக் கொண்டிருக்க கூடிய அரசியல் சூழ்ச்சிகளை தகர்க்க கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

ஆதி
12-12-2011



Tuesday, December 6, 2011

தமிழகத் தோழா!!!

எங்களுக்காய் அழுதீர்கள்...
எங்களுக்காய் வீதிகளில் போராடினீர்கள்...
எங்களுக்காய் தீக்குளித்தீர்கள்...
எங்களுக்காய் பட்டினி கிடந்தீர்கள்...
நாங்கள்
கண்ணீர் வற்றி
ரத்தம் வற்றி
வீழ்ந்து கிடக்கிறோம்...
உங்களில் சிலர் எங்களை கொல்கின்றனர்!!!
அது அகதிப் பெட்டை
இழுத்து வந்து இருக்கிறத குடுத்திட்டு
அலுவல முடி - என்று கூட
உங்களில் சிலர் சொன்னார்களாமே!!!

"ஒரு ஈழத்து அகதி முகாமில் பெண்களுக்கு நடந்த வன்முறை பற்றி நண்பன் ஒருவன் இன்று சொன்னான்... ஆத்திரம் வருகிறது.. அழுகை வருகிறது... பிணம் புணரும் பிசாசுகள் சிங்களத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் இருக்கிறார்கள்."

இங்கும் இருக்கிறார்கள். சிங்களத்தின் மலத்தை தின்றபடி துணை ராணுவ குழுக்களாக வலம்வரும் பிணம் புணரும் பிசாசுகள் இங்கும் இருக்கிறார்கள்!!!

எங்கள் உறவுகள் செத்து விழுந்து உயிர் தப்ப தானே தமிழகம் வந்தார்கள்!!!

எங்களுக்கும் ஒரு நாள் வாழ்வு விடியும்...


ஆதி
06-12-2011

Saturday, December 3, 2011

நினைத்தது நடந்ததா??? _ மாவீரர் நாள்

மாவீரர் நாள் என்பது மாவீரர்களுக்கான அனுஷ்டிப்பு மட்டுமன்றி ஈழப்போராட்டத்தின் ஆழத்தை தமிழினத்தின் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு நாளாக இன்று உருவெடுத்திருக்கிறது.

மாவீரர் நாள்... பத்திரிகைகளில் வரும் இந்த தினம் குறித்து பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பெற்றோர் பதிலளிக்கும் பெரும் உளவியல் இந்த நாட்களில் நடக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது ரீயுசனால் வந்த 5ம் ஆண்டு பெடியன் கேட்கிறான் மாவீரர் தினம் என்றால் என்ன அம்மா?? அவனின் அம்மா சொல்கிறாள் "ஆமிக்காரர இங்க இருந்து கலைக்கிறத்துக்கு அண்ணா அக்காமர் அடிபட்டு செத்தவே.. அவேக்கு விளக்கேத்திற நாள்தான் மாவீரர் நாள்" பெடியனின் அடுத்த கேள்வி "இயக்க அண்ணாஅக்காமாரோ!!"

இங்குதான் ஊடுகடத்தப்படும் உளவியல் இருக்கிறது.
1) இயக்க அண்ணாமார் அக்காமார் குறித்த தகவல்களை இவன் வயது பராயத்தினர் பேசிக் கொள்கின்றனர்
2) இயக்க அண்ணாமார் அக்காமார் ஆமிய எங்களது இடத்தில் இருந்து கலைப்பதற்கு தான் சண்டை பிடித்திருக்கிறீனம்
3) அம்மா கூட சொல்வதால் அவர்கள் செய்தது சரியானதே!!

இவை சாதாரணமான விடையங்களல்ல... பெற்றோர்களும் இதை சாதாரணமாக சொல்வது கிடையாது. எமது வரலாறுகளை பிள்ளைகளுக்கூடாகவே அந்த தலைமுறைக்கு கடத்தும் மிகச்சிறந்த சக்திகளாக இந்த பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

ஆணையிறவு முகாமில் இராணுவம் கட்டி வைத்திருக்கும் போர்ச்சினத்துடன் புகைப்படம் எடுக்க கேட்ட ஒரு 9ம் ஆண்டு மாணவனை அவனது தகப்பனார் " இது எங்களை  சிங்களவன் வென்றதெண்டு கட்டின ஒன்று இதில் நின்று நாங்கள் புகைப்படம் எடுக்க கூடாது" என்று சொன்னார். இப்படிதான் வரலாறு கடத்தப்படுகிறது.

அதே போல் தான் மாவீரர் நாள் உலகெங்கும் வாழும் தமிழினித்தின் அடுத்த தலைமுறைக்கு தமிழர்கள் யார் என்பதை வீரியமாக அவர்களுக்குள் இறக்கும் ஒரு நாளாக இருக்கிறது.

பாடசாலை சுற்றுலா ஒன்றிற்கு டக்ளசிடம் பணம் கேட்டால் ஒழுங்கு செய்வார் என்று யாரோ சொன்னார்கள்.. அவரிடம் போய் பார்ப்போம் என்று சில மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்... அந்த வகுப்பில் பலர் "டக்ளசிடம் பணம் வாங்கி தான் சுற்றுலா போக வேண்டுமென்றால் அப்படியொரு சுற்றுலா எமக்கு தேவையில்லை" என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த சிறுவர்களுக்கு பிரித்தறியும் அரசியல் எப்படி கிடைத்திருக்கும்? இனம் காணும் ஆற்றல் எப்படி கிடைத்திருக்கும்??? இது தான் இது வரை சிங்களம் அஞ்சிக் கொண்டிருப்பதற்கான காரணம்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் ஆயுதம் மெளனித்து போன பிற்பாடு இந்த வருடம் மாவீரர் நாள் குறித்து தமிழ் மக்களிடத்தில் மூர்க்கத்தனம் கிளம்பியிருக்கிறது. அளவுக்கு மிஞ்சிய அதட்டல்கள் மிரட்டல்களால் மக்களின் மனம் கொதிப்படையும் நிலைக்கு தள்ளப்ட்டிருக்கிறது. கடந்த வருடம் கிளிநொச்சி முழங்காவில் என பல இடங்களில் கோயில்களில் மணி அடிக்க தடை செய்தார்கள். அந்த தடை உத்தரவை 25ம் 26ம் திகதிகளில் பிறப்பித்தார்கள் இருந்தும் 27ம் திகதி பல கோயில்களில் மணியடிக்கப்ட்டது.

இந்த தடவை ஒரு வாரத்திற்கு முன்பே கோயில்களில் மணியடிக்க தடை, கோயில்கள் மற்றும் நிகழ்வுகளில் இசைக்கப்படும் பாடல்களள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும், 26ம் திகதி கடைகளில் கேக் அடிக்க கூடாது என அளவுக்கு மிஞ்சிய மிரட்டல்களை செய்திருந்தது சிறிலங்கா அரசு.

தனது பிள்ளைகளை தனது ரத்த உறவுகளை நினைந்து ஒரு தீபம் ஏற்றக் கூடவா எமக்கு உரிமை இல்லை என்று சிந்திக்கும் நிலையில் வயது கூடியவர்கள் தள்ளப்படும் போது அது இலகுவாக சிறுவர்களிடத்தில் ஊடுகடத்தப்படும். இது தான் இந்த மாவீரர் நாட்களில் தமிழர் தாயகமெங்கும் நடந்தது. வீதிகளில் இருந்த மாவீரர் தூபிகளுக்கு பூக்கள் போட்ட சம்பவமும், தீபமேற்றிய சம்பவமும் 2009 ஆயுத மெளனிப்பிற்கு பிறகு இந்த தடவைதான் அதிக அளவு நிகழ்ந்திருக்கிறது.

தவிர புலத்தில் பெரும் அசாதாரண சூழலை உருவாக்க நினைத்திருந்திருக்கிறது சிங்கள அரசு.

ஆனால் சிங்கள அரசின் எதிர்பார்ப்புக்கு மீறி வழமையை போலவே புலம்பெயர் தமிழ் மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் பரவலாக அனுஸ்டித்திருக்கிறார்கள். பிரான்ஸில் சிங்கள அரசால் ஏற்பாடு செய்யப்ட்ட குழப்பகர நிகழ்வை முறியடித்து ஒன்றாக திரண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

பிரித்தானியாவில் தமிழ் மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக களம் இறக்கப்ட்டுள்ளவர்கள் தம்மாலான குழப்பங்களை ஏற்படுத்தியும் தமிழ் மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஸ்டித்திருக்கிறார்கள்.

அதிர்வு போன்ற ஊடகங்கள் சின்ன சின்ன பிரச்சினைகளை பெரிதாக எழுதி மக்களிடத்தில் குழப்பங்களை உருவாக்க நினைத்திருந்த போதும் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட்டமை வரவேற்கதக்கது.

சிறிலங்கா அரசும் இந்திய வல்லாதிக்கமும் தமிழீழ மக்களை தவறாக எடை போட்டிருக்கலாம். விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாத வெளியில் தமிழ் மக்கள் தடுமாறுவார்கள் ஊடகங்களை வைத்து தமிழீழ மக்களையும் குழப்பிவிடலாம் என்று தவறாக எடை போட்டிருக்கலாம்.

மாவீரர்களின் ஆத்ம பலத்தோடு விடுதலை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தமிழ் இனத்தை அள்ளக்கை ஊடகங்களாலும் பணத்தினாலும் சிதறடித்துவிட முடியாதென்பதை இந்த ஆண்டு மாவீரர் தினம் இந்த அரசுகளிற்கு நன்றாகவே விளங்கப்படுத்தியிருக்கும்.

ஆதி
02-12-2011

Wednesday, November 30, 2011

பொதுநலவாய மாநாடும் தமிழர் தரப்பின் நடவடிக்கைகளும்


நடநத்து முடிந்த பொதுநலவாய மாநாடு தமிழர் தரப்பிற்கு எந்த அளவிற்கு வெற்றியளித்தது என்பதை பார்பதற்கு முன் இந்த மாநாடு சிறிலங்கா அரசிற்கு அரசியல் சங்கடங்களை உருவாக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும் அது குறித்த எதிர்வினை நிலைப்பாடுகளும் நிட்சயமாக ராஜதந்திர ரீதியிலான சங்கடங்களை சிறிலங்கா அரசிற்கு ஏற்படுத்தியிருக்கும். சிறிலங்காவில் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டில் கனடா பங்குபற்றாது என வெளிப்படையாக அறிவிக்கப்ட்டது ராஜதந்திர ரீதியில் சிறிலங்காவிற்கு ஏற்பட்ட ஒருவித பின்னடைவென்றே சொல்லலாம்.

இங்கிலாந்து மகாராணிக்கு கைகுலுக்குவது போன்ற புகைப்படம் எடுக்க முடியாது போனதால் போட்டோ எடிட்டிங் மூலம் ராஜபக்ஷ இங்காலந்து மகாராணிக்கு கைகொடுப்பது போன்று புகைப்பட்ம் உருவாக்கப்ட்டு உள்ளுர் ஊடகங்களில் வெளியிட்டமையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது நடந்து முடிந்த பொதுநலவாய மாநாட்டில் தமக்கு எவ்விதமாக பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்று  காட்டுவதில் சிறிலங்கா அரசு பல வழிகளிலும் முயன்றிருந்தது.

தமிழர் தரப்பு திறந்த பாதைகள்
பொதுநலவாயா நாடு நடந்து கொண்டிருந்த காலப்பகுதிகளில் தமிழர் தரப்புகள் மேற்கொண்ட அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் மற்றும் உலக தமிழர் பேரவையும் இணைந்து மேற்கொண்டிருந்த கூட்டத்தொடரானது பல ஊடகங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

சிறிலங்கா அரசானது தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளி என்பதையும் ஈழத்தமிழர்களுக்கு இருக்க கூடிய உரிமைப்பிரச்சினையையும் இந்த கூட்டத்தொடர் பேசியிருந்தது. பலதரப்பட்ட சமூக பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தமை மற்றும் பலதரப்பட்ட ஊடகங்களில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் பெற்றிருந்தமை என்பது தமிழர்களின் நகர்வுகளிற்கு கிடைத்த வெற்றியாகும்.

சிறிலங்கா அரசு போர்குற்றவாளி என்றும் அது நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டிய அரசென்றும் வலியுறுத்தி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவுஸ்ரேலியர்களும் பங்கெடுத்திருந்தமை என்பது தமிழர்களின் நியாயத்திற்கான போராட்டம் பன்முகப்படுத்தப்படுகின்றது என்பதற்கான எடுத்துக்காட்டு.

வெளிநாட்டு அரசுகளின் நிலைப்பாடு
சிறிலங்கா என்பது தெற்காசிய பிராந்தியத்தில் பல்வேறு காரணங்களிற்காக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தமது வல்லாதிக்க அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சிறிலங்காவை பகைத்துக் கொள்வோ அல்லது காட்டிக் கொடுக்கவோ வெளிப்படையாக கடுமையாக செயற்படுமா என்பது கேள்விக் குறியாக இருந்தாலும் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் சட்ட அழுத்தங்கள் அந்த நாடுகளை நீதியின்பால் கடுமையாக நிற்க தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அவுஸ்ரேலியாவில் போடபட்ட வழக்கை அவுஸ்ரேலிய தடுத்திருந்தது என்றே சொல்லலாம். மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் இடத்து அது பொதுநலவாய நாடுகளின் மத்தியில் தனது நிலை கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் அவுஸ்ரேலிய அரசை இந்த முடிவை எடுக்க தூண்டியிருக்கலாம். ஆனால் சிறிலங்கா அரசானது போர்க்குற்றவாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு அரசே தான் என்ற செய்தி அவுஸ்ரேலிய உள்ளூர் ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் இடம் பிடித்திருந்தமை இனிவரும் காலங்களில் தமிழர்களின் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்க உதவியாக இருக்கும்.
சர்வதேச நாடுகளிற்கு எமது போராட்டத்தின் தேவையை இன்னமும் ஆளமாக புரியவைக்க வேண்டிய தேவையில் தமிழ் மக்கள் இருப்பதாகவே எண்ண தோணுகிறது. போர்க் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி நியாயம் கேட்க வேண்டிய வேளையில் சமாந்தரமாக எமது உரிமைகளை பெற்று சுயாட்சியை நிறுவுவதற்கான வேலைகளிலும் சட்ட ரீதியாக மும்மரமாக ஈடுபடவேண்டும்.

தமிழ் மக்களை செயற்பாட்டு ரீதியில் பிளவுபடுத்தி உரிமைகளை கேட்கும் ஒட்டுமொத்த குரலில் பலத்தை சிதறடிப்பதற்கு சிறிலங்கா அரசு முனைப்புக்காட்டிவருகிறது. தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும். செயற்பாட்டு ரீதியில் பிளவுபடாமல் ஒன்றுபட்ட இனமாக விடுதலைக்கு பாடுபடவேண்டும். எல்லாவழிகளிலும் தொடர்ந்து சட்ட ரீதியான அழுத்தங்களையும் உரிமைகளை பெறுவதற்கு சட்டரீதியான முனைப்புகளையும் வேகப்படுத்த வேண்டும். அரசியல் ரீதியிலான சட்ட ரீதியிலான உரிமைகோரிய அணுகுமுறைகளை சாதாரணமாக தட்டிக்கழித்துவிட முடியாத நிலைக்கு சர்வதேசம் தள்ளப்படும். 

போர்க்குற்றவாளிகளை நீதிக்கு முன் தண்டிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கும் அதேவேளை எமது நிலத்தில் நடந்துவரும் உரிமை மறுப்புகள் அடக்கு முறைகள் குறித்தும் தொடர்ந்து பதிவு செய்து வர வேண்டும்.
 பொதுநலவாய மாநாடு சிறிலங்கா அரசு குறித்த பல செய்திகளை பலதரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. இனிவரும் காலங்களில் சிறிலங்கா அரசை ஏன் தண்ணடிக்க வேண்டும் என்பதற்கான  காரணங்களோடு நாங்கள் ஏன் விடுதலை வேண்டி நிற்கிறோம் என்ற செய்தியையும் ஆழமாக பதிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் தமிழினம் ஒன்றுபட்ட இனமாக பலத்தோடு எழுவது தேவை.

ஆதி
17-11-2011


மாவீரர் நாள் கார்த்திகை 27

விடுதலை வீச்சோடு தமிழின விடிவிற்காய் களம் கண்டு மாண்ட மாவீர்ர்களை  தாயகம் எங்கும் நினைவேந்தும் நாட்கள் இவை.

வெளித்திக்கிடக்கும் வானம் இழுத்துப் போர்த்திய கறுத்தப் புகார்களோடு மெளனமாய் தூறி கல்லறைகளை நனைத்துக் கொண்டிருக்கும். கார்த்திகை மலர்கள் வீதியெங்கும் பூத்துத் தொங்கும். தமிழின விடுதலைக்காய் களமுனை சென்று காவியமாகி கனவுகளோடு கல்லறைகளில் உறங்கும் தெய்வங்களை மலர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கும். இது கார்த்திகை மாதம். மாவீரர் தெய்வங்களை ஒரே நாட்களில் நினைவேந்தும் உத்தம மாதம் இது.

இன்று தமிழீழ விடுதலைப்போராட்டமானது பலவகை பரிமானங்களை தாண்டி சர்வதேசமயப்படுத்தப்ட்டுள்ளது. உலகளவில் பல்வேறு தரப்ட்ட இன மக்களும் பேசும் விடையமாக உருவெடுத்துள்ளது தமிழீழ போராட்டம்.சிறிலங்கா அரசுடன் மட்டுமன்றி இந்திய வல்லரசின் இராணுவத்துடனும் மோதி தமிழழீழ மக்களின் சுதந்திர வேட்கையை உலகிற்க உணர்த்தியவர்கள் எமது மாவீரர்கள். இன்று தமிழீழ மக்களின் போராட்டமானது சர்வதேச அங்கிகாரத்திற்கு காத்து நிக்கிறது அல்லது சர்வதேச அரங்கில் இடம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அது இத்தனையாயிரம் மாவீரர்களின் தியாகத்தின்பால் தான் என்பதை தவிர வேறெதுவுமாய் இருக்க முடியாது.

போராட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களிலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மாவீரர்களின் உயிர்த்தியாகங்களை கொடுத்து நகர்ந்து வந்திருக்கிறது தமிழீழ விடுதலைப்போராட்டம்.
பலதரப்பட்ட துரோகங்களினால் தமிழழீழ போராட்டத்தின் ஆயுத வடிவம் மெளனித்து போனாலும் இலட்சியம் நோக்கிய போராட்டாம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சற்றும் குறையாத வீரியத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் பயணத்திற்கு மாவீரர்களின் ஆத்ம பலம் தான் காரணமாக இருக்கிறது.

அடக்கு முறைகளுக்கெதிராக உரிமைக்கான இந்த போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களினோடு தம்மையும் போராட்டத்தின்பால் அர்ப்பணித்துள்ள நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மக்களையும் இந்த நாட்களில் நாங்கள் நினைவுகூர்ந்தேயாக வேண்டும்.

அன்பான தமிழ் மக்களே!!
இன்றைய நாட்களில் நாங்கள் ஒரு விடையத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உயிர் அர்ப்பணிப்புகள், உடல் அர்ப்பணிப்புகள் என தியாகங்களின் உச்சக்கட்டங்களுக்கு சென்று எமது விடுதலைப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலட்சியம் நோக்கிய பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த காலகட்டத்தில் பல தரப்பட்ட வெளிச் சக்திகளால் தமிழினத்தை பிளவு படுத்தப்படுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழினம் துண்டாடப்பட்டு அதனூடாக இலட்சிய வேட்கையை இல்லாது செய்துவிட முடியும் என்று நம்புகின்றன அந்த சக்திகள். அந்த சக்திகள் சிறிலங்கா அரசுடன் இந்திய மற்றும் வேறு சில சக்திகளாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் நிதானமாக செயற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இத்தனை இழப்புகளை சந்தித்த எமது இனத்தின் வீரியத்தையும், நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் சிதைத்துவிடும் நடவடிக்கைகளில் பல சக்திகள் ஈடுபட்லாம் ஆனால் தமிழ் மக்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டும்.

கந்தகம் சுமந்து உடல் கூட மிஞ்சாது விடுதலைக்காய் துகள் துகள்களாகிப் போன மாவீரர்கள் மேல் இலட்சியம் நோக்கி பயணித்துக் கொண்டே இருப்போம் என்று சத்தியம் செய்ய வேண்டும்.

பசி மறந்து, நீர் மறந்து, தூக்கம் துறந்து, களமுனைகளில் காவல் கிடந்து விடுதலைக்காய் மரணம் கொண்ட மாவீரத் தெய்வங்கள் மீது எமது இலட்சியப்பயத்தில் இருந்து விலக மாட்டோம் என்று சத்தியம் செய்து கொள்ள வேண்டும்.


இறுதிக்கட்ட போரில் ஆவணப்படுத்தப்படாத அளவிற்கு மாவீரச்செல்வங்களையும் குழந்தைகளையும் பெரியோர்களையும் இழந்துள்ளோம். எல்லாருடைய தியாகங்களும் கனவுகளும் நனவாவதற்கு நாங்கள் இடைவிடாது பயணிக்க வேண்டும். மாவீர்கள் மேல் சத்தியம் செய்வோம். தமிழீழமே எங்கள் மூச்சென்று உரக்க கத்துவோம்.

மாவீரர்களின் கனவு நனவாக்க நாங்கள் எல்லோரும் இலட்சியம் நோக்கிய பயணத்தில் தீவிரமாக இறங்க வேண்டும். தேசிய விடுதலையை மையப்படுத்தி அறவளிப் போராட்டங்களில் சட்டரீதியான அணுகுமுறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்களின் குரல் வலுவானதாக சர்வதேச அரங்கில் ஒலிக்க வேண்டும். எமது நோக்கமும் விடுதலைக்கான தேவையும் சிறந்த வழியில் சர்வதேச அரங்கில் சொல்லப்ட்டடு பிராந்திய அரசுகளின் வல்லாதிக்க போக்கிற்கும் சிறிலங்கா அரசின் காட்டுமிராண்டித்தனமான போக்கிற்கும் முடிவுகட்டப்பட வேண்டும். பிரந்தியத்தில் தேவைப்படும் எமக்கான விடுதலை குறித்து முக்கியமான அனைத்து நாடுகளுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் ரரஜதந்திர ரீதியிலாக சட்டரீதியிலாக எமது போராட்ட முனைப்புகளை நகர்த்த வேண்டும்.தமிழ் தேசியத்திற்கான அணுகுமுறைகளை செய்து கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளை இனம் கண்டு மக்கள் அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கி சர்வதேச ரீதியில் சட்டரீதியாக எமது விடுதலைப்போராட்டத்தின் தேவையை சென்றடைவதற்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும்.

விடுதலைக்காய் தமது வாழ்வைத் தொலைத்து இத்தனை தூரம் விடுதலைப்பயணத்தை கொண்டு வந்துள்ள மாவீரச் செல்வங்கள் மீது சத்தியம் செய்வோம்... நாங்கள் எமது விடுதலை நோக்கிய பணயத்தில் இருந்து எள்ளளவும் விலகமாட்டோம் என்று.

விடுதலை வேண்டிய போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கி கல்லறைகளில் உறங்கும் மாவீரத் தெய்வங்களிற்கு இந் நாளில் எமது வீரவணக்கங்களை செலுத்துவதோடு மாவீர்களின் கனவு நனவாக தொடர்ந்தும் பயணிப்போம் என உறுதி எடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

ஆதி
16-11-2011

Sunday, November 20, 2011

இன அழிப்பின் பின் பறிக்கப்படும் எஞ்சியிருந்த அதிகாரங்களும்

சிறிலங்காவில் தமிழினித்தின் மீது இந்திய அரசின் முழு ஆதரவோடு சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இன அழிப்பின் பின் திரைமறைவில் எஞ்சியிருக்கும் அதிகாரங்கள் நிலங்கள் மற்றும் தமிழ் மக்களின் வரலாற்று இருப்புகளையும் மெதுமெதுவாக அழித்து வருகிறது சிறிலங்கா அரசு.

இந்த அரசியல் அழிப்பு பற்றி இந்திய தேசமோ மற்றைய தேசங்களோ அறிந்திராத விடையமல்ல ஆனால் இந்த வரலாற்று சிதைப்புக் குறித்து தமிழ் மக்கள் முழு வீச்சோடு இன்னமும் போராடவில்லை என்பதால் தான் சிறிலங்கா அரசிற்கு இலகுவாக தப்பித்து கொள்ளவும் தொடர்ந்து தமிழ்மக்கள் மீது அழிப்பை மேற்கொள்ளவும் இலகுவாக இருக்கின்றது என்பது வெளிப்படை உண்மை.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கோத்தாபாய, பசீல்ராஜபக்ஷ, நாமல்ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களினால் பறிக்கப்படும் தமிழர் நிலங்களும் இராணுவத்தினால் பலவந்தமாக கையகப்படுத்தப்படும் தமிழர் நிலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வளம் மிக்க பிரதேசங்களை அரச அமைச்சர்கள் தமது சொந்த நலனிற்காக கையகப்படுத்துவதும் முக்கியம் வாய்ந்த நிலங்களை ராணுவம் கையகப்படுத்துவதுமாய் தமிழர் நிலங்கள் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நிலத் துண்ணடாடலில் இறங்கிய சிங்கள அரசு தமிழர் வரலாற்றை கூறும் சமய தலங்கள் ஞாபக சின்னங்கள் பழமைவாய்ந்த கட்டிடங்கள் என எல்லாவற்றையும் அழித்து வருகிறது. எல்லா கிராமங்களிலும் புத்தருக்கான அடிக்கல்கள் நாட்டப்பட்டுவருகின்றன. தமிழ் மக்கள் பின்னபற்றாத அல்லது வெறுக்கும் ஒன்றை தமிழ் மக்கள் மீது திணித்து வருகிறது சிறிங்கா அரசு.

தமிழ் மக்கள் மீது நிலப்பறிப்பும் சிங்கள கலாச்சார திணிப்பும் மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசு சமாந்தரமாக தமிழர் தாயகப்பகுதியில் அரச அதிகாரிகளாக சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. திருகோணமலையில் தொடங்கி மட்டக்களப்பு அம்பாறை யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைதீவு வவுனியா என்று இன்று கடைசியாக மன்னார் வரை நீண்டிருக்கிறது சிங்கள அதிகாரிகளின் நியமனப்பட்டியல்.

தனிச்சிங்கள பிரதேசங்களாகிய காலி மாத்தறை அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் சாதாரண அரச வேலையாட்களாக கூட தமிழ் மக்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் தமிழர்தாயகப் பகுதியில் சிங்கள அதிகாரிகளின் நியமனத்தின் பின்னால் பெரும் எதிர்காலத்திட்டம் இருக்கிறது.
1) அந்த அதிகாரியுடன் உறவை பேணுவதற்கு அல்லது வேலையை இலகுவாக செய்வதற்கு கட்டாயம் சிங்கள மொழியை கற்க வேண்டும்.

2)அரச அதிகாரியாக சிங்களவர் இருக்கும் பட்சத்தில் அவர் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளை கட்டாயம் அலுவலகங்களில் கொண்டாட வேண்டும்.

இது போல் நிறைய. இவை பார்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இதன் தாக்கம் எதிர்காலத்தில் பெரும் விளைவை கொண்டுவரும். தமிழ் மக்கள் மீது கட்டாயம் சிங்களம் படித்தே ஆகவேண்டும் என்ற ஆதிக்க வெறியை காட்டுகிறது சிறிலங்கா அரசு.

வருடாவருடம் எத்தனையோ ஆயிரம் தமிழ் பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறியும் தமிழ் பிரசேங்களிற்கு சிங்களவர்களை நியமித்தல் என்பது அரச அடக்குமுறையின் வடிவம் ஒன்று.

தவிர யாழ்பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளையும் யாழ்பல்கலைக்கழகத்திற்கு தமிழ் சமூகத்தின் விடுதலை போராட்டத்தில் இருக்கும் பங்களிப்புகளையும் சிதைப்பதற்கு சிறிலங்கா அரசு இராணுவ புலனாய்வு துறையினர் மற்றும் ஈபிடிபி கருணாகுழு போன்ற துணைராணுவ குழுக்கள் மும்மரமாக செற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள சிங்கள மாணவ மாணவிகள் யாழ் படையதிகாரிகளின் உறவினர்களாகவோ அல்லது நெருங்கிய உறவு வைத்திருப்பவர்களாகவோ இருப்பது சந்தேகத்திற்குரியது. இவர்களின் உறவு நிலையினால் யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றி எப்பொழும் சிறிலங்கா ராணுவத்தின் பிரசன்னம் இருப்பது தமிழ் மாணவர்களை ஒருவித அச்ச சூழ்நிலையில் வைத்திருக்கின்றது என்றே சொல்லலாம். அது போக யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மிரட்டப்படுவதும் தாக்கப்படுவதுமாய் தொடர்கிறது சிறிலங்கா அரசின் அரசியல் இனவெறியாட்டம்.

தமிழ் அரசியல்வாதிகளின் பலமற்ற அரசியல்
சிறிங்காவை பொறுத்தவரை ஆழும்தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் தமிழ் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாராலும் தமிழ் மக்களை ஒழுங்குபடுத்தவா வழிகாட்டவோ பலமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

தமது அரசியல் இருப்பிற்காக அரசுடன் இணைந்து துணைராணுவ குழுக்களாக செற்படும் ஈபிடிபி டக்களஸ் தேவாந்தா உட்பட்ட அரச அமைச்சர்கள் தமிழ் மக்களின் உரிமைகள், பறிக்கப்படும் நிலங்கள், சிதைக்கபடும் வரலாறுகள் குறித்து எந்த விமர்சனமும் அற்று வழமைபோல் இருக்கிறார்கள் அல்லது வழமைபோல் இவர்களும் சேர்ந்து தான் எல்லா அழிப்புகளையும் இப்பொழும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பையோ அல்லது தமிழ் காங்கிரஸ்சையோ பொறுத்தவரையில் தமிழ் மக்களுடன் உறவுநிலை அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்கான போராட்டங்களை ஒழுங்குபடுத்த கூடிய நிலையில் இவர்கள் நிலை இல்லை.

ராஜதந்திர நிலைப்பாடுகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசும்விடையங்கள் குறித்து மக்களுக்கு வெளிப்படையாக சொல்லாது போனாலும் தமிழ் மக்களின் பிரைச்சனைகளுக்கு தொடர்ச்சியாக சட்ட ரீதியிலான அழுத்தங்களை கொடுக்க தவறுகிறது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. தவிர நாடாளுமன்ற தேர்தலில் பங்கெடுத்த தமிழ் காங்கிரஸ்சும் இன்று தமிழ் மக்கன் முன்னிலையில் தமிழ் மக்களுக்கான அரசியலையோ அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளை சட்டரீதியாக எப்படி கையாளலாம் என்பது குறித்தோ செயற்படுவதாக தெரியவில்லை.

இப்படிப்பட்ட பலமற்ற தமிழ் அரசியல் நிலமை காரணமாக சாதாரண சிங்கள அதிகாரிகளும் தமிழ் மக்களை மிரட்டி வைக்க கூடிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களே!!
சிறிலங்கவை பொறுத்தவரையில் சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதையும் எதிர்பார்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. தீர்ப்புகளை வழங்கிய பின் தமது தீர்ப்புகள் குறித்து தாமே ஆட்சேபனை தெரிவிக்கும் நிலையில் தான் நீதிபதிகள் கட்டுப்படுத்தபட்டுள்ளனர். பெயரளவில் கட்டப்பட்டுள்ள சிறிலங்கா நீதிமன்றங்களும் சிறிங்கா சட்டமும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று தரும் என்று நம்பவில்லை.

தமிழ் மக்கள் மீதான அரசியல் மற்றும் வரலாற்று அழிப்புகள் குறித்து சர்வதேச ரீதியில் பதிவு செய்து சர்வதேச மக்கள் முன்னிலையில் நீதி கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். சிங்கள அரசிடம் இருந்து ஏன் விடுதலை எமக்கு வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்வதற்கு சிறிலங்கா அரசு செய்துவரும் உரிமை மற்றும் வரலாற்று அழிப்புகள் குறித்து பதிவு செய்துவருவது கட்டாயமானது.

போர்க்குற்றங்கள், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போருக்கு பின் தமிழ் மக்கள் மீது கட்டவித்துவிடப்பட்டுள்ள அழிப்பு அரசியல்கள் குறித்து சர்வதேச ரீதியில் அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடம் முறைப்பாடுகள் செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக நாங்கள் செய்யும் முறைப்பாடுகளும் அழுத்தங்களும் நிட்சயமாக ஒரு முடிவை நோக்கி நகர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப்புலிகளை விமர்சித்தல் என்பதனூடாக சிறிலங்கா அரசின் அராஜகங்களை மறைத்துவரும் ஒரு சில தமிழ் அமைப்புகளும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இருப்பது கவலைக்குரியவிடையம். இது குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். வரலாற்று கடமையை ஏற்று ஒன்றுபட்ட தமிழ் இனமாக விடுதலைக்கான பணி செய்ய வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்கள் படும் துன்பங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காய் தமது இளமையை தொலைத்து உறவுகளை தொலைத்து  உயிர்களை ஆகுதியாக்கி மாவீரர்களாக கல்லறைகளில் தூங்கும் தெய்வங்களின் கனவுகள் நனவாகும் வரை நாங்கள் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.

பிராந்திய வல்லாதிக்கங்களின் சிங்கள பக்கச்சார்பு நிலை அதிகரித்துவரும் இந்நிலையில் புலம்பெயர் தமிழ்கள் ஒன்று திரண்டு தமிழ் இனமாக பெரும் பலத்தோடு போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் நிலைகளை ஆராய்ந்து சமகாலத்தில் தமிழ் மக்களின் பலம் எப்படியிருக்கிறது என்பதை உணர்ந்து ஒன்றுபட்ட இனமாக புலம்பெயர் தமிழ் மக்கள் செயற்பட வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்களின் நிலை எதுவென்று உங்களுக்கு தெரியும். இந்த நிலையில் ஈழத்து தமிழ் மக்களால் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு நொந்து கிடக்கின்றனர். தமிழ் தேசியத்திற்காக போராடும் எல்லா புலம்பெயர் தமிழ் மக்கள் அமைப்புகளும் குழு அரசியல்களை கடந்து ஒன்றுபட்ட இனமாக செயற்பட வேண்டும்.

மூலம் : http://aathithyank.blogspot.com/2011/11/blog-post.html
ஆதி
16-11-2011

Tuesday, October 4, 2011

அவுஸ்ரேலியா வரவிருக்கும் மகிந்த


அக்டோபர் மாதமளவில் மகிந்த ராஜபக்ஷ அவுஸ்ரேலியா வரவிருப்பதாக அறியப்படுகிறது. தன் நாட்டு சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கும் ஒரு அரச  தலைவர் மகிந்த ராஜபக்ஷ என்பதற்கப்பால் இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கு எதிராக பாரிய அளவிலான உரிமை மீறல்களையும் பயங்கரவாதங்களையும்  மேற் கொண்ட ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கெதிராக திட்டமிட்ட வகையில் பாரிய படுகொலைகளை செய்து முடித்த மகிந்தராஜபக்ஷ அது குறித்த விசாரணைகளுக்கும் எதிர்ப்பு  தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. போர்க்குற்ற ஆதாரங்கள் பல வழிகளிலும் வெளிவந்த வண்ணம் இருக்க சனல் 4 இன் போர்க்குற்றம் தொடர்பான  ஆவணப்படம் மேலும் சிறிலங்கா அரசின் இனப்படுகொலை குறித்த ஆதாரத்தை வலுவாக்கியுள்ளது. அய்.நாவின் நிபுணர்குழு அறிக்கையின் பிரகாரம் சிறிலங்கா  அரசு திட்டமிட்ட வகையில் இனப்படுகொலையை நடாத்தி முடித்திருப்பது புரியும்.

மனித நேயம் மற்றும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகளுக்கு சென்று தன்னை ஒரு நிரபராதி என்று வெளி உலகிற்கு காட்டுவதற்கு சிறிலங்கா  அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ பல வழிகளிலும் முயன்று வருகிறார். இதை தமிழ் மக்கள் சாதகமாக பயன் படுத்தி மனித எனத்திற்கு எதிரான தமிழ்  மக்கள் மீது இனப் படுகொலையை நடாத்தி முடித்த நபர்தான் இந்த சிறிலங்கா அரச தலைவர் என்பதை உலகத்திற்கு சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் மீது பாரிய  அளவிலான இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிற ராஜபக்ஷ தலமையிலான அரசு இன்று தமிழ் மக்களை ராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்குள்  உரிமை மறுப்புகளோடு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

தமிழரர் தாயகப்பகுதியில் அனைத்து சிவில் நிர்வாகங்களும் ராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதோடு தமிழ் மக்கள் மீது பாரிய குற்றச் செயல்கள் கட்டவிழ்த்து  விடப்பட்டுள்ளது. தாங்கள் நினைத்தபாட்டிற்கு சிவில் நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தி முடக்க கூடிய அளவிற்கு ராணுவத்திற்கும் துணை ராணுவ குழுக்கழுக்கும்  அதிகாரங்களை வழங்கியிருக்கிறது மகிந்தராஜபக்ஷ அரசு.

இப்படிப்பட்ட மகிந்தராஜபக்ஷ தான் இந்த மாதம் அவுஸ்ரேலியாவரவிருக்கிறார். கடந்த முறை லண்டன் சென்ற மகிந்தராஜபக்ஷவை தமிழ் மக்கள் சட்டரீதியில்  அவரை அச்சுறுத்தி நாட்டைவிட்டு வெளியேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டிய அவுஸ்ரேலிய தமிழர் அமைப்புகள்.
அவுஸ்ரேலியாவரவிருக்கும் மகிந்த ராஜபக்ஷ யார் என்பதை சர்வதேசத்திற்கு மீண்டும் ஒருமுறை உரத்து சொல்ல கூடிய சந்தர்ப்பமாக இதை தமிழ் மக்கள்  பயன்படுத்த வேண்டும். அவுஸ்ரேலிய சட்டவரையறைக்குள் போர்க்குற்றவாளிமேல், மனித குலத்தின் மீது பாரிய குற்றச் செயல்களை புரிந்தவர்கள் மேல்  எப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து விரைவாக செயற்பட வேண்டும். மகிந்த  அவுஸ்ரேலியா வரவிருக்கும் திகதி நேரம்  என்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்களை விரைவாக ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழினத்தின் மீது இனப்படுகொலையை  செய்த மகிந்த ராஜபக்ஷ தண்டனை பெறும்வரை தமிழ் மக்கள் சும்மா விடப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் மீண்டும்  ஒருமுறை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கெதிராக நடந்த இனப்படுகொலை குறித்து அவுஸ்ரேலிய மக்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பம் இது. மகிந்தராஜபக்ஷ அரசை  ஏன் நிராகரிக்கிறோம் என்பதையும் அவுஸ்ரேலிய அரசு இந்த இனப்படுகொலையாளிக்கு தண்டனை ஏன பெற்றுத்தரவேண்டும் என்பதையும்  தெளிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பமாக நாங்கள் இதை பயன்படுத்த வேண்டும். ஒன்றுபட்ட தமிழினமாக போர்க் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரி  அவுஸ்ரேலிய அரசிடம் கேட்க  வேண்டும்.

தமிழர் அமைப்புகள் சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து அவுஸ்ரேலியாவில் மனிதஉரிமை மீறல் குற்றவாளிக்கு போர்க்குற்றவாளிக்கு எப்படியான சட்ட அழுத்தங்களை கொடுக்க முடியும் என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மகிந்த ராஜபக்ஷவின் நகர்வுகளுக்கேற்றவாறு தமிழ் மக்கள் முற்றுகைகளை செய்ய வேண்டும்.

லண்டனில் இருந்து தமிழின படுகொலையாளி மகிந்த ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டது போல் அவுஸ்ரேலியாவிலும் நடக்க வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்கிளினதும் எதிர்பார்ப்பு.

ஆதி
30-09-2011

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP