Powered by Blogger.

Sunday, November 20, 2011

இன அழிப்பின் பின் பறிக்கப்படும் எஞ்சியிருந்த அதிகாரங்களும்

சிறிலங்காவில் தமிழினித்தின் மீது இந்திய அரசின் முழு ஆதரவோடு சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இன அழிப்பின் பின் திரைமறைவில் எஞ்சியிருக்கும் அதிகாரங்கள் நிலங்கள் மற்றும் தமிழ் மக்களின் வரலாற்று இருப்புகளையும் மெதுமெதுவாக அழித்து வருகிறது சிறிலங்கா அரசு.

இந்த அரசியல் அழிப்பு பற்றி இந்திய தேசமோ மற்றைய தேசங்களோ அறிந்திராத விடையமல்ல ஆனால் இந்த வரலாற்று சிதைப்புக் குறித்து தமிழ் மக்கள் முழு வீச்சோடு இன்னமும் போராடவில்லை என்பதால் தான் சிறிலங்கா அரசிற்கு இலகுவாக தப்பித்து கொள்ளவும் தொடர்ந்து தமிழ்மக்கள் மீது அழிப்பை மேற்கொள்ளவும் இலகுவாக இருக்கின்றது என்பது வெளிப்படை உண்மை.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கோத்தாபாய, பசீல்ராஜபக்ஷ, நாமல்ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களினால் பறிக்கப்படும் தமிழர் நிலங்களும் இராணுவத்தினால் பலவந்தமாக கையகப்படுத்தப்படும் தமிழர் நிலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வளம் மிக்க பிரதேசங்களை அரச அமைச்சர்கள் தமது சொந்த நலனிற்காக கையகப்படுத்துவதும் முக்கியம் வாய்ந்த நிலங்களை ராணுவம் கையகப்படுத்துவதுமாய் தமிழர் நிலங்கள் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நிலத் துண்ணடாடலில் இறங்கிய சிங்கள அரசு தமிழர் வரலாற்றை கூறும் சமய தலங்கள் ஞாபக சின்னங்கள் பழமைவாய்ந்த கட்டிடங்கள் என எல்லாவற்றையும் அழித்து வருகிறது. எல்லா கிராமங்களிலும் புத்தருக்கான அடிக்கல்கள் நாட்டப்பட்டுவருகின்றன. தமிழ் மக்கள் பின்னபற்றாத அல்லது வெறுக்கும் ஒன்றை தமிழ் மக்கள் மீது திணித்து வருகிறது சிறிங்கா அரசு.

தமிழ் மக்கள் மீது நிலப்பறிப்பும் சிங்கள கலாச்சார திணிப்பும் மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசு சமாந்தரமாக தமிழர் தாயகப்பகுதியில் அரச அதிகாரிகளாக சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. திருகோணமலையில் தொடங்கி மட்டக்களப்பு அம்பாறை யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைதீவு வவுனியா என்று இன்று கடைசியாக மன்னார் வரை நீண்டிருக்கிறது சிங்கள அதிகாரிகளின் நியமனப்பட்டியல்.

தனிச்சிங்கள பிரதேசங்களாகிய காலி மாத்தறை அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் சாதாரண அரச வேலையாட்களாக கூட தமிழ் மக்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் தமிழர்தாயகப் பகுதியில் சிங்கள அதிகாரிகளின் நியமனத்தின் பின்னால் பெரும் எதிர்காலத்திட்டம் இருக்கிறது.
1) அந்த அதிகாரியுடன் உறவை பேணுவதற்கு அல்லது வேலையை இலகுவாக செய்வதற்கு கட்டாயம் சிங்கள மொழியை கற்க வேண்டும்.

2)அரச அதிகாரியாக சிங்களவர் இருக்கும் பட்சத்தில் அவர் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளை கட்டாயம் அலுவலகங்களில் கொண்டாட வேண்டும்.

இது போல் நிறைய. இவை பார்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இதன் தாக்கம் எதிர்காலத்தில் பெரும் விளைவை கொண்டுவரும். தமிழ் மக்கள் மீது கட்டாயம் சிங்களம் படித்தே ஆகவேண்டும் என்ற ஆதிக்க வெறியை காட்டுகிறது சிறிலங்கா அரசு.

வருடாவருடம் எத்தனையோ ஆயிரம் தமிழ் பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறியும் தமிழ் பிரசேங்களிற்கு சிங்களவர்களை நியமித்தல் என்பது அரச அடக்குமுறையின் வடிவம் ஒன்று.

தவிர யாழ்பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளையும் யாழ்பல்கலைக்கழகத்திற்கு தமிழ் சமூகத்தின் விடுதலை போராட்டத்தில் இருக்கும் பங்களிப்புகளையும் சிதைப்பதற்கு சிறிலங்கா அரசு இராணுவ புலனாய்வு துறையினர் மற்றும் ஈபிடிபி கருணாகுழு போன்ற துணைராணுவ குழுக்கள் மும்மரமாக செற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள சிங்கள மாணவ மாணவிகள் யாழ் படையதிகாரிகளின் உறவினர்களாகவோ அல்லது நெருங்கிய உறவு வைத்திருப்பவர்களாகவோ இருப்பது சந்தேகத்திற்குரியது. இவர்களின் உறவு நிலையினால் யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றி எப்பொழும் சிறிலங்கா ராணுவத்தின் பிரசன்னம் இருப்பது தமிழ் மாணவர்களை ஒருவித அச்ச சூழ்நிலையில் வைத்திருக்கின்றது என்றே சொல்லலாம். அது போக யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மிரட்டப்படுவதும் தாக்கப்படுவதுமாய் தொடர்கிறது சிறிலங்கா அரசின் அரசியல் இனவெறியாட்டம்.

தமிழ் அரசியல்வாதிகளின் பலமற்ற அரசியல்
சிறிங்காவை பொறுத்தவரை ஆழும்தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் தமிழ் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாராலும் தமிழ் மக்களை ஒழுங்குபடுத்தவா வழிகாட்டவோ பலமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

தமது அரசியல் இருப்பிற்காக அரசுடன் இணைந்து துணைராணுவ குழுக்களாக செற்படும் ஈபிடிபி டக்களஸ் தேவாந்தா உட்பட்ட அரச அமைச்சர்கள் தமிழ் மக்களின் உரிமைகள், பறிக்கப்படும் நிலங்கள், சிதைக்கபடும் வரலாறுகள் குறித்து எந்த விமர்சனமும் அற்று வழமைபோல் இருக்கிறார்கள் அல்லது வழமைபோல் இவர்களும் சேர்ந்து தான் எல்லா அழிப்புகளையும் இப்பொழும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பையோ அல்லது தமிழ் காங்கிரஸ்சையோ பொறுத்தவரையில் தமிழ் மக்களுடன் உறவுநிலை அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்கான போராட்டங்களை ஒழுங்குபடுத்த கூடிய நிலையில் இவர்கள் நிலை இல்லை.

ராஜதந்திர நிலைப்பாடுகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசும்விடையங்கள் குறித்து மக்களுக்கு வெளிப்படையாக சொல்லாது போனாலும் தமிழ் மக்களின் பிரைச்சனைகளுக்கு தொடர்ச்சியாக சட்ட ரீதியிலான அழுத்தங்களை கொடுக்க தவறுகிறது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. தவிர நாடாளுமன்ற தேர்தலில் பங்கெடுத்த தமிழ் காங்கிரஸ்சும் இன்று தமிழ் மக்கன் முன்னிலையில் தமிழ் மக்களுக்கான அரசியலையோ அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளை சட்டரீதியாக எப்படி கையாளலாம் என்பது குறித்தோ செயற்படுவதாக தெரியவில்லை.

இப்படிப்பட்ட பலமற்ற தமிழ் அரசியல் நிலமை காரணமாக சாதாரண சிங்கள அதிகாரிகளும் தமிழ் மக்களை மிரட்டி வைக்க கூடிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களே!!
சிறிலங்கவை பொறுத்தவரையில் சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதையும் எதிர்பார்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. தீர்ப்புகளை வழங்கிய பின் தமது தீர்ப்புகள் குறித்து தாமே ஆட்சேபனை தெரிவிக்கும் நிலையில் தான் நீதிபதிகள் கட்டுப்படுத்தபட்டுள்ளனர். பெயரளவில் கட்டப்பட்டுள்ள சிறிலங்கா நீதிமன்றங்களும் சிறிங்கா சட்டமும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று தரும் என்று நம்பவில்லை.

தமிழ் மக்கள் மீதான அரசியல் மற்றும் வரலாற்று அழிப்புகள் குறித்து சர்வதேச ரீதியில் பதிவு செய்து சர்வதேச மக்கள் முன்னிலையில் நீதி கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். சிங்கள அரசிடம் இருந்து ஏன் விடுதலை எமக்கு வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்வதற்கு சிறிலங்கா அரசு செய்துவரும் உரிமை மற்றும் வரலாற்று அழிப்புகள் குறித்து பதிவு செய்துவருவது கட்டாயமானது.

போர்க்குற்றங்கள், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போருக்கு பின் தமிழ் மக்கள் மீது கட்டவித்துவிடப்பட்டுள்ள அழிப்பு அரசியல்கள் குறித்து சர்வதேச ரீதியில் அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடம் முறைப்பாடுகள் செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக நாங்கள் செய்யும் முறைப்பாடுகளும் அழுத்தங்களும் நிட்சயமாக ஒரு முடிவை நோக்கி நகர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப்புலிகளை விமர்சித்தல் என்பதனூடாக சிறிலங்கா அரசின் அராஜகங்களை மறைத்துவரும் ஒரு சில தமிழ் அமைப்புகளும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இருப்பது கவலைக்குரியவிடையம். இது குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். வரலாற்று கடமையை ஏற்று ஒன்றுபட்ட தமிழ் இனமாக விடுதலைக்கான பணி செய்ய வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்கள் படும் துன்பங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காய் தமது இளமையை தொலைத்து உறவுகளை தொலைத்து  உயிர்களை ஆகுதியாக்கி மாவீரர்களாக கல்லறைகளில் தூங்கும் தெய்வங்களின் கனவுகள் நனவாகும் வரை நாங்கள் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.

பிராந்திய வல்லாதிக்கங்களின் சிங்கள பக்கச்சார்பு நிலை அதிகரித்துவரும் இந்நிலையில் புலம்பெயர் தமிழ்கள் ஒன்று திரண்டு தமிழ் இனமாக பெரும் பலத்தோடு போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் நிலைகளை ஆராய்ந்து சமகாலத்தில் தமிழ் மக்களின் பலம் எப்படியிருக்கிறது என்பதை உணர்ந்து ஒன்றுபட்ட இனமாக புலம்பெயர் தமிழ் மக்கள் செயற்பட வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்களின் நிலை எதுவென்று உங்களுக்கு தெரியும். இந்த நிலையில் ஈழத்து தமிழ் மக்களால் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு நொந்து கிடக்கின்றனர். தமிழ் தேசியத்திற்காக போராடும் எல்லா புலம்பெயர் தமிழ் மக்கள் அமைப்புகளும் குழு அரசியல்களை கடந்து ஒன்றுபட்ட இனமாக செயற்பட வேண்டும்.

மூலம் : http://aathithyank.blogspot.com/2011/11/blog-post.html
ஆதி
16-11-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP