Powered by Blogger.

Wednesday, November 30, 2011

மாவீரர் நாள் கார்த்திகை 27

விடுதலை வீச்சோடு தமிழின விடிவிற்காய் களம் கண்டு மாண்ட மாவீர்ர்களை  தாயகம் எங்கும் நினைவேந்தும் நாட்கள் இவை.

வெளித்திக்கிடக்கும் வானம் இழுத்துப் போர்த்திய கறுத்தப் புகார்களோடு மெளனமாய் தூறி கல்லறைகளை நனைத்துக் கொண்டிருக்கும். கார்த்திகை மலர்கள் வீதியெங்கும் பூத்துத் தொங்கும். தமிழின விடுதலைக்காய் களமுனை சென்று காவியமாகி கனவுகளோடு கல்லறைகளில் உறங்கும் தெய்வங்களை மலர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கும். இது கார்த்திகை மாதம். மாவீரர் தெய்வங்களை ஒரே நாட்களில் நினைவேந்தும் உத்தம மாதம் இது.

இன்று தமிழீழ விடுதலைப்போராட்டமானது பலவகை பரிமானங்களை தாண்டி சர்வதேசமயப்படுத்தப்ட்டுள்ளது. உலகளவில் பல்வேறு தரப்ட்ட இன மக்களும் பேசும் விடையமாக உருவெடுத்துள்ளது தமிழீழ போராட்டம்.சிறிலங்கா அரசுடன் மட்டுமன்றி இந்திய வல்லரசின் இராணுவத்துடனும் மோதி தமிழழீழ மக்களின் சுதந்திர வேட்கையை உலகிற்க உணர்த்தியவர்கள் எமது மாவீரர்கள். இன்று தமிழீழ மக்களின் போராட்டமானது சர்வதேச அங்கிகாரத்திற்கு காத்து நிக்கிறது அல்லது சர்வதேச அரங்கில் இடம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அது இத்தனையாயிரம் மாவீரர்களின் தியாகத்தின்பால் தான் என்பதை தவிர வேறெதுவுமாய் இருக்க முடியாது.

போராட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களிலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மாவீரர்களின் உயிர்த்தியாகங்களை கொடுத்து நகர்ந்து வந்திருக்கிறது தமிழீழ விடுதலைப்போராட்டம்.
பலதரப்பட்ட துரோகங்களினால் தமிழழீழ போராட்டத்தின் ஆயுத வடிவம் மெளனித்து போனாலும் இலட்சியம் நோக்கிய போராட்டாம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சற்றும் குறையாத வீரியத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் பயணத்திற்கு மாவீரர்களின் ஆத்ம பலம் தான் காரணமாக இருக்கிறது.

அடக்கு முறைகளுக்கெதிராக உரிமைக்கான இந்த போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களினோடு தம்மையும் போராட்டத்தின்பால் அர்ப்பணித்துள்ள நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மக்களையும் இந்த நாட்களில் நாங்கள் நினைவுகூர்ந்தேயாக வேண்டும்.

அன்பான தமிழ் மக்களே!!
இன்றைய நாட்களில் நாங்கள் ஒரு விடையத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உயிர் அர்ப்பணிப்புகள், உடல் அர்ப்பணிப்புகள் என தியாகங்களின் உச்சக்கட்டங்களுக்கு சென்று எமது விடுதலைப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலட்சியம் நோக்கிய பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த காலகட்டத்தில் பல தரப்பட்ட வெளிச் சக்திகளால் தமிழினத்தை பிளவு படுத்தப்படுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழினம் துண்டாடப்பட்டு அதனூடாக இலட்சிய வேட்கையை இல்லாது செய்துவிட முடியும் என்று நம்புகின்றன அந்த சக்திகள். அந்த சக்திகள் சிறிலங்கா அரசுடன் இந்திய மற்றும் வேறு சில சக்திகளாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் நிதானமாக செயற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இத்தனை இழப்புகளை சந்தித்த எமது இனத்தின் வீரியத்தையும், நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் சிதைத்துவிடும் நடவடிக்கைகளில் பல சக்திகள் ஈடுபட்லாம் ஆனால் தமிழ் மக்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டும்.

கந்தகம் சுமந்து உடல் கூட மிஞ்சாது விடுதலைக்காய் துகள் துகள்களாகிப் போன மாவீரர்கள் மேல் இலட்சியம் நோக்கி பயணித்துக் கொண்டே இருப்போம் என்று சத்தியம் செய்ய வேண்டும்.

பசி மறந்து, நீர் மறந்து, தூக்கம் துறந்து, களமுனைகளில் காவல் கிடந்து விடுதலைக்காய் மரணம் கொண்ட மாவீரத் தெய்வங்கள் மீது எமது இலட்சியப்பயத்தில் இருந்து விலக மாட்டோம் என்று சத்தியம் செய்து கொள்ள வேண்டும்.


இறுதிக்கட்ட போரில் ஆவணப்படுத்தப்படாத அளவிற்கு மாவீரச்செல்வங்களையும் குழந்தைகளையும் பெரியோர்களையும் இழந்துள்ளோம். எல்லாருடைய தியாகங்களும் கனவுகளும் நனவாவதற்கு நாங்கள் இடைவிடாது பயணிக்க வேண்டும். மாவீர்கள் மேல் சத்தியம் செய்வோம். தமிழீழமே எங்கள் மூச்சென்று உரக்க கத்துவோம்.

மாவீரர்களின் கனவு நனவாக்க நாங்கள் எல்லோரும் இலட்சியம் நோக்கிய பயணத்தில் தீவிரமாக இறங்க வேண்டும். தேசிய விடுதலையை மையப்படுத்தி அறவளிப் போராட்டங்களில் சட்டரீதியான அணுகுமுறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்களின் குரல் வலுவானதாக சர்வதேச அரங்கில் ஒலிக்க வேண்டும். எமது நோக்கமும் விடுதலைக்கான தேவையும் சிறந்த வழியில் சர்வதேச அரங்கில் சொல்லப்ட்டடு பிராந்திய அரசுகளின் வல்லாதிக்க போக்கிற்கும் சிறிலங்கா அரசின் காட்டுமிராண்டித்தனமான போக்கிற்கும் முடிவுகட்டப்பட வேண்டும். பிரந்தியத்தில் தேவைப்படும் எமக்கான விடுதலை குறித்து முக்கியமான அனைத்து நாடுகளுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் ரரஜதந்திர ரீதியிலாக சட்டரீதியிலாக எமது போராட்ட முனைப்புகளை நகர்த்த வேண்டும்.தமிழ் தேசியத்திற்கான அணுகுமுறைகளை செய்து கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளை இனம் கண்டு மக்கள் அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கி சர்வதேச ரீதியில் சட்டரீதியாக எமது விடுதலைப்போராட்டத்தின் தேவையை சென்றடைவதற்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும்.

விடுதலைக்காய் தமது வாழ்வைத் தொலைத்து இத்தனை தூரம் விடுதலைப்பயணத்தை கொண்டு வந்துள்ள மாவீரச் செல்வங்கள் மீது சத்தியம் செய்வோம்... நாங்கள் எமது விடுதலை நோக்கிய பணயத்தில் இருந்து எள்ளளவும் விலகமாட்டோம் என்று.

விடுதலை வேண்டிய போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கி கல்லறைகளில் உறங்கும் மாவீரத் தெய்வங்களிற்கு இந் நாளில் எமது வீரவணக்கங்களை செலுத்துவதோடு மாவீர்களின் கனவு நனவாக தொடர்ந்தும் பயணிப்போம் என உறுதி எடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

ஆதி
16-11-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP