Powered by Blogger.

Sunday, December 23, 2012

இறுதிப்போர் மூண்டது எப்படி!!!! இந்தியாவின் நயவஞ்சக பக்கங்கள்.


இறுதிப்போரை மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை.

மாவிலாறு ஏன் களமாக தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றியதான புவியியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றியதான பதிவு தான் இது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை ஆயுத வழங்கல், உணவு மற்றும் மருந்து வழங்கல் காயப்பட்ட மற்றும் வீரச்சாவடையும் போராளிகளை வெளியேற்றல் என்பவை சரியான முறையில் கட்டமைக்காமல் பெரும் போரை அவர்கள் தொடங்குவது கிடையாது. இது தான்  வரலாறு.

இனி விடையத்திற்கு வருவதற்கு முதல் சமாதான ஒப்பந்தம் முறிவடைய செய்யப்பட்டது எப்படி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

5 மாணவர் படுகொலை

2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் (வருகிற ஜனவரியுடன் 7 வருடங்கள் ஆகின்றன).

இந்த படுகொலை கோத்தபாய - பொன்சேகா கூட்டணியினால் நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. படுகொலை நடாத்தப்பட்ட அன்று மகிந்தராஜபக்ஷ மற்றும் கோத்தபாய நாட்டில் இருக்கவில்லை என்பது முக்கியமான விடையம்.

திருகோணமலை நகர்ப்புறத்தில் ரோந்துப்பணியில் ஈடுபடும் வழமையான காவல் துறை அகற்றபட்டு அன்று மாலை புதிதான கடற்படை அணியொன்று ரோந்தில் ஈடுபடுத்தபட்டிருந்தது. அந்த அணிதான் இந்த மாணவர்களை படுகொலை செய்திருந்தது.

தவிர வழமைக்கு மாறாக கடற்கரையில் கூடியிருந்த மக்களை வெளியேறும்படியும் இந்த கடற்படை கூறியிருக்கிறது.

மாணவர்கள் மீது கைக்குண்டை வீசிச் சென்ற ஆட்டோவை பிடிக்காமல் உடனடியாகவே மாணவர்கள் இருந்த இடத்தை சுற்றிவழைத்திருக்கிறது ராணுவம். அந்த இடத்தில் இன்னும் பல மக்களும் இருந்திருக்கிறார்கள். எல்லோரையும் வாகனத்தில் ஏற்றி அடையாள உறுதிப்படுத்தும் சோதனையை செய்து அனுப்பிவிட்டு இந்த மாணவர்களை நிலத்தில் படுக்க வைத்து கூட்டுக் கொன்றது இந்த காடையர் கூட்டம்.

சம நேரத்தில் திருகோணமலை நகர்ப்புற மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே கைக்குண்டு தாக்குதலில் காயமுற்று இரத்தப்பெருக்கினால் 2 மாணவர்கள் மயக்கமுற்றிருந்த நிலையில் அவர்கள் இறந்துவிட்டதாக கருதி மற்றைய மாணவர்களை படுகொலை செய்துவிட்டு வெளியேறியிருக்கிறது சிங்களப் படை.

இத்தனைக்கும் கொல்லப்ட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை வைத்தியர்.அவர் சம்பவ இடத்திற்கு வர அவரை பொலிசார் மறித்து வைத்திருக்கின்றனர். அந்த நேரத்தில்தான் சூட்டுச்சத்தம் கேட்கப்படுகிறது. பின்னர் மாணவரகள் சடலமாக இரத்தவெள்ளத்தில் கிடக்கின்றனர்.

அந்த கணத்தில் உடனடியாக சம்மபவ இடத்திற்கு வந்து எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்தவர்தான் பத்திரிகை நிருபர் சுகிர்தராஜன்.



5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடம்

சுகிர்தராஜன் படுகொலை

2006ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி இந்த சுகிர்தராஜன் படுகொலை செய்யப்படுகிறார். இங்குதான் இந்தியாவின் ஊடுருவல் வெளிப்படையாக தெரிகிறது.

பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்மந்தமான தகவல்கள் புகைப்படங்களை வெளியிட்ட பத்திரிகை நிருபர் சுகிர்தராஜன் (வீரகேசரி என்று நினைக்கிறேன்) புகைப்படத்தை வெளியட்டு சரியாக 20 நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாணவர்களின் படுகொலையை அம்பலப்படுத்தியதற்காக தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதைவிட மிக முக்கியமான காரணமாக அவர் இந்தியாவின் ஊடுருவல் பற்றி அம்பலப்படுத்தியருந்தமைதான்  என்பதை யாரும் விளங்கிக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை.

திருகோணமலை துறைமுக திணக்களத்தில் நடந்து கொண்டிருந்த இந்தியாவின் திட்டங்களை அம்பலப்படுத்தியவர்தான் சுகிர்தராஜன்.

எண்ணைவள ஆராய்ச்சி.. திருகோணமலையில் மேலதிக எண்ணைக் குதங்களை நிறுவுவது.. அனல் மின்னிலயத்தை திறப்பது போன்ற திட்டமிடல்களை  சமாதான காலத்தில் இந்தியா செய்து கொண்டிருந்தது. அதை சுகிர்தராஜன் வெளிபடுத்தியிருந்தார். அதைவிட தொடர்ச்சியாக சிங்கள மற்றும் இந்திய அரசாங்க சதிகளையும் படுகொலைகளையும் வெளிபடுத்தியமையினால் தான் படுகொலை செய்யபடுவேன் என சுகிர்தராஜன் தெரியப்படுத்தி இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

எண்ணை வள ஆராய்சி மற்றும் அகழ்வு வேலைகளில் அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி அதிக ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக தான் தமிழீழ மக்கள் மீதான போரை ஆதரித்துக் கொண்டிருந்தார்.

தமிழீழ மக்கள் மீதான் இன அழிப்பு போருக்கு எதிராக தமிழக மக்கள் மற்றும் சில கட்சி அமைப்புகள் வீதிக்கு இறங்கி போராட அவர்களை சிறைப்பிடித்து அடைத்து இன அழிப்பு போருக்கு எதிரான போராட்டங்களை நசுக்கினார் கருணாநிதி.

அவரது உதவிக்காக ராஜபக்ஷ அரசு மலையகத்தில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. தேயிலை தோட்டம் கனிமொழி பெயரில் தான் வழங்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. தவிர எண்ணைவள ஆராய்ச்சி மற்றும் அகழ்வு ஒப்பந்தங்கள் அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியின் பெயரிலும் பங்குகள் கருணாநிதிக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இனிமேல் அரசில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஒப்பந்தங்களில் எந்த பிரச்சினையும் வராதிருக்கும் படி மிக நேர்த்தியாக தொழில் நிறுவனங்களினூடாக ஓப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்று சம்பூர் மக்கள் துரத்தப்பட்டு அதில் இந்த அனல் மின்னிலையம் அமைக்கபடுகிறது. இது கூட கருணாநிதி சோனியா கூட்டணியால் செய்யப்படும் ஒரு வேலைத்திட்டம் என்றாலும் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான காரணங்களும் இருக்கின்றன. தொடரந்து வாசிக்கும் பொழுது உங்களுக்கு விளங்ககும்.


சுட்டு படுகொலை செய்யப்பட்ட சுகிர்தராஜன்


சுட்டு படுகொலை செய்யப்பட்ட சுகிர்தராஜன்

இந்தியா அவரச அவசரமாக போரை தொடக்கியதற்கான காரணம்

சமாதன ஒப்பந்தத்தை எப்படியாவது விடுதலைப்புலிகள் முறித்துவிடுவார்கள் என்று எண்ணியிருந்த இந்தியாவிற்கு விடுதலைப்புலிகளின் போக்கு மிக அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் பெரும் இழப்புக்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும் மிக பொறுமையாக இருந்தார்கள்.

இடைக்கால நிர்வாகத்தினூடாக சுயாட்சி உரிமையை பெற்றுவிடுவார்களோ என்று இந்தியா அச்சம் கொண்டது. இதனை இந்தியாவிரும்பவில்லை. சமாதான ஒப்பந்தத்திற்கு முதலிருந்தே இந்தியா சிறிலங்காவின் எண்ணை வளம் குறித்து அக்கறை செலுத்திக் கொண்டிருந்தது. அது போக திருகோணமலையில் "இந்தியன் ஓயில்" நிறுவனத்தையும் விரிவுபடுத்துவதற்கான முழு முயற்சியில் இறங்கியிருந்தது.

சமாதான காலத்தை பயன்படுத்தி திருகோணமலையில் தமது சாதகபாதக விடையங்கள் மற்றும் இந்தியன் ஒயிலை எப்படி நிரந்தரமாக கொண்டுவருவது இலங்கை எண்ணைவளம் (தமிழீழ பிரதேசத்தில் தான் காணப்படுகிறது) எப்படிப்பட்டது என்பது பற்றியதான புலனாய்வு மற்றும் ஆராய்ச்சி வேலைகளில் இறங்கியது இந்தியா.

தவிர திருகோணமலை என்பது புவியியல் ரீதியில் மிக பாதுகாப்பான துறைமுக தளம். திருகோணமலை துறைமுகத்திற்குள் இலகுவில் யாரும் நுழைந்து தாக்குதல் நடாத்திவிட முடியாது. இயற்கையான ஏராளமான காப்பரண்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் நேரடியாக சென்று தாக்குவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்று அல்ல. அதனால் தான் திருகோணமலை துறை முகத்திற்கு வல்லரசுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால் திருகோணமலை துறைமுகத்தை தாக்கி கைப்பற்றுவதற்கு விடுதலைப்புலிகள் பிறிதொரு வழியை கண்டுபடித்தார்கள். அதாவது எறிகணைகள் மூலம் துறைமுகத்தை கட்டுப்படுத்துவது.

திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு "குரங்குபாஞ்சான்" பகுதி அச்சுறுத்தலான பிரதேசம் என்று இந்தியா மற்றும் சிறிலங்கா படைகள் நினைத்துக் கொண்டிருக்க விடுதலைப்புலிகள் திருகோணமலை துறைமுகத்தை "சம்பூர்" இல் இருந்து தாக்கினார்கள். அதற்கு முதல் இந்திய சிங்கள அரசுகள் செய்த வேலை பார்ப்போம்.



ஜிகாத் குழுவை இறக்கிய சிறிலங்கா அரசு

திகோணமலை துறைமுக கடற்கரையை அண்டிய கிராமங்களை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டில் அல்லது தமக்கு சாதகமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது இந்தியா.

சமாதான ஒப்பந்தம் கைசாத்திட்ட காலப்பகுதிகளில் "ஜிஹாத்" என்ற முஸ்லீம் தீவிரவாதப் படையை மூதூருக்குள் செயற்பட இறக்கியது சிங்கள அரசு. "ஜிஹாத்" என்ற முஸ்லீம் தீவிரவாத அமைப்பு சிறிலங்காவில் செயற்படுவது இந்தியாவிற்கு நன்றாகவே தெரியும். மூதூருக்குள் "ஜிஹாத்" அமைப்பு பெருமெடுப்பில் செயற்பட ஆரம்பித்தது.  ஆயுத போக்குவரத்துகள் மற்றும் பயிற்சி முகாம்கள் என ஜிஹாத் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பிக்கும் பொழுது விடுதலைப்புலிகள் ஜிஹாத் அமைப்பின் முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட பலரை ஒரே நாளில் அழித்தார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்தது இந்திய மற்றும் சிங்கள அரசுகள். விடதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் இவ்வளவு நேரத்தியாக செயற்பட்டு கொண்டிருப்பது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் கொடுத்திருக்க வேண்டும்.

"ஜிஹாத்" அமைப்பின் அத்தனை விடையத்தையும் அலசி வைத்திருந்த விடுதலைப்புலிகள் நிட்சயமாக இந்தியாவின் நரித்தனம் பற்றி அறிந்தே வைத்திருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டது இந்தியா.

விடுதலைப்புலிகளை வலிய போருக்கு இழுக்கும் நோக்கில் கடற்புலிகள் மீது வலிந்த தாக்குதல்களும்..தரையில் ஏராளமான படுகொலைகளையும் செய்து கொண்டிருந்தனர் சிறிலங்கா படையினர்.

இதன் தொடர்ச்சியாக தான் மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களும் நிலத்தில் படுக்க வைத்து தலையில் சுடப்பட்டுத்தான் கொலை செய்யப்பட்டிருந்தனர்

இருந்தாலும் விடுதலைப்புலிகள் சமாதான ஒப்பந்தத்தை முறித்து களத்தை திறக்கும் நோக்கில் இருக்கவில்லை.


சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட Action Faim நிறுவன ஊழியர்களில் ஒரு பகுதியினர்

 சம்பூர், மூதூர், மாவிலாறு ஏன் முக்கியம்

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை இந்த சமாதான ஒப்பந்தத்தினூடாக தீர்வை பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். கட்டுப்பாட்டு பிரதேசங்கள் இயல்பு நிலையில் இருந்தது. மக்கள் போர் பற்றிய எந்தவொரு தெளிவுபடுத்தலுக்கும் உட்படுத்தப்படவில்லை. போராளிகள் பெருமளவானோர் அரசியல் களப்பணிகளில் இருந்தனர். தவிர தமிழீழ அரச கட்டுமாண பணிகள் தான் பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிர்வாக கட்டமைப்புகளை சரியான முறையில் நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகள் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இது தான் இந்தியாவை அச்சம் கொள்ள வைத்தது.

இந்தியாவை பொறுத்தவரை சம்பூர் மூதூர் பிரதேசங்கள் திருகோணமலை துறை முக பாதுகாப்பிற்காக தேவைப்படுகிறது. தவிர தனது எண்ணை போக்குவருத்துகளுக்கும் முக்கியமான பிரதேசம்.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை கடற்புலிகள் மிகப்பெரும் பலம் வாய்ந்த படை அமைப்பாக வளர்ச்சியடைந்திருந்தனர். திருகோணமலைத் தளம் மீது விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதலை தொடுத்தால் வட முனைகளில் இருந்து திருகோணமலைத் தளத்தை சுற்றி வளைக்க கூடிய பலமும் வளங்கல்களை சரியான முறையில் செய்ய கூடிய பலமும் கடற்புலிகளிடம் இருந்தது.

கிழக்கில் புலிகள் பலமாக இருக்கும் சந்தர்ப்பத்தில்  வட முனையில் சிறிலங்கா அரசால் களம் திறக்கபட்டால்  நிட்சயமாக யாழ்ப்பாணத்தில் இருக்க கூடிய ஒட்டுமொத்த சிங்கள படைகளும் பிணமாக வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆக திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்புதான் வடக்கில் நிலை கொண்டிருந்த அத்தனை சிங்கள இராணுவத்தினதும் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க கூடிய தளம். அதே நேரத்தில் திருகோணமலைத் தளத்தை விழடுதலைப்புலிகள் எறிகணை மூலம் கட்டுப்படுத்தும் வளர்சியை கண்டிருக்கிறார்கள். அதனால் திருகோணமலை தளத்தை சுற்றியுள்ள இடங்களில் இருந்து புலிகளை அகற்றியே ஆக வேண்டும் எனள்ற நிலையை இந்திய சிங்கள படைகள் எடுக்கின்றன.

கருணா சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தன் பின்னர் கருணாகுழுவின் தளம் தமிழ் நாட்டில் இருந்தது அனைவரும் அறிந்த விடையம். அதை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஒழுங்குபடுத்தி கொடுத்தார் அல்லது கண்டும் காணமல் இருந்தார் என்பது அப்பொழுது வந்திருந்த சலசலப்புகள்.

போரை அவசர அவசரமாக தயார்ப்படுத்திக் கொண்டிருந்த இந்திய சிங்களப் படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பம் தான் அமெரிக்க ராஜதந்திரி "ரொபேட் பிளேக்" இன் திருகோணமலை விஜயம்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்திய நயவஞ்சக படைகளால் சிங்களப் படைகளுக்கு சதி தீட்டிக் கொடுக்கப்படுகிறது. கருணா ஒட்டுக் குழுவை பாவித்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டுப்பகுதிக்குள் ஊடுருவி "ரொபேட் பிளேக்" திருகோணமலையில் வந்திறங்கும் சமயம் "ரொபேட் பிளேக்" வந்திறங்கிய மைதானத்திற்கு எறிகணைத் நடாத்தப்படுகிறது. அமெரிக்க அரசு அதிர்ச்சிக்குள்ளாகிறது. இதன் பின் என்னமாதிரயான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் என்று நீங்களே அறிவீர்கள்.

இது விடுதலைப்புலிகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. தமது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ஒட்டுக் குழுக்கள் தாக்குதலை நடாத்தியிருக்கின்றன என்று அறிவிக்க முடியாது. அதனால் "ரொபேட் பிளேக்" இன் திருகோணமலை விஜயம் பற்றி தமக்கு முன்கூட்டி அறிவித்திருக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டனர். ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.

புலிகள் மாவிலாற்று தண்ணீரை மூடிவைத்தது போருக்காக அல்ல. அந்த நேரத்தில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த சிங்களக் குடியேற்றங்கள் மீது நெருக்குவாரத்தை ஏற்படுத்த மட்டுமே.

மாவிலாற்றின் அமைவிடம்


போர் தொடங்கியதற்கு காரணமாக சொல்லப்படும் பூட்டப்பட்ட மாவிலாற்று அணை

போரை தொடக்கியவிதம்

அணையை திறப்பதற்கு என்று போரை தொடக்கி இருந்தாலும் அறிகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் எல்லாம் மக்கள் குடியிருப்புகள் மீது தான் நடாத்தப்பட்டன.

சிங்கள பிக்குகள் தலமையில் இந்த போர் தொடங்கும் பொழுது இந்திய மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகள் கொழும்பில் இருந்தனர். இந்திய படைகள் திருகோணமலையில் இறங்கியிருந்தது.

போர் முன்னேறியவிதமும் இறுதிப்போரில் வெளிப்பட்ட உண்மைகளும்

மூதூர் சம்பூர் உள்ளிட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு கடற்கரை கைப்பற்றப்பட்டது.

உண்மையில் விடுதலைப்புலிகள் போர் பற்றிய நிலைப்பாட்டிலோ அல்லது அதற்கான தயார்படுத்தலிலோ ஈடுபட்டிருந்தால் நிட்சயமாக ஆயுதங்களை முதலே இறக்கியிருப்பார்கள். கடலில் அழிக்கப்பட்டதாக கூறப்படும் 7 கப்பல்களும் சமாதான காலத்திலேயே இறங்கியிருக்கும்.

ரொபேட் பிளேக் பயணத்தின் போது நடாத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ராஜதந்திர மட்டத்தில் பெரும் நெருக்கடியை விடுதலைப்புலிகளுக்கு கொடுத்திருந்தது. அதை சிறந்த முறையில் கையாளக்கூடிய வகையில் யாரும் இருந்திருக்கவில்லை. அதன் பிறகு இருந்த விடுதலைப்புலிகளின் சிறந்த ராஜதந்திரியான அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீது படுகொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த இழப்புகளின் பின்னர் சர்வதேச மட்டத்தில் புலிகள் அரசியல் நகர்வுகளை சிறந்த முறையில் கொண்டுசெல்வதற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றுதான்.

சரி விடையத்திற்கு வருவோம்.
இறுதிக்கட்ட போரில் காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் புல்மோட்டை பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர்.அதாவது முல்லைத்தீவு கரையில் இருந்து புல்மோட்டைக்கு இலகுவாக காயப்பட்டவர்கள் கொண்டுவரப்பட்டனர். இது தான் காரணம். மாவிலாற்றை மையப்படுத்தி போரை தொடங்கிவிட்டு சம்பூர் உள்ளிட்ட கடற்கரைகளினூடாக எல்லா கிழக்கு கடற்கரைககளையும் கட்டப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டத்தை இந்தியாதான் கொடுத்தது.

காயப்பட்டவர்களை பராமரிக்கவென மருத்துவ குழுவொன்றை கருணாநிதி (இந்தியா) அனுப்புவதாக அறிவிக்கிறார். அதில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் பேசக்கூடியவர்கள். அவர்கள் புல்மோட்டையில் தான் செயற்படுகிறார்கள்.

புல்மோட்டைக்கு கொண்டுவரப்படும் காயப்பட்டவர்களில் பலர் கொல்லப்பட்டனர். சிறிய சிறிய காயங்களுக்கே அங்கங்களை அகற்றுகின்றனர் இந்த கருணாநிதியின் மருத்துவ குழு. தவிர இளம் வயதுடைய ஆண்கள் பெண்கள் பற்றிய தகவல்கள் எந்த இடத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்? எப்படியான தாக்குதல்கள் நடைபெறுகின்றன? இவர்களுக்கு என்ன என்ன தகவல்கள் தெரியும் என்ற அடிப்படையில் இந்த மருத்துவ குழு ஆட்களை இனம் காண்கிறது. அதன் பின் பலர் காணமல் போகிறார்கள். சிலர் அனுராதபுரம் இராணுவ முகாம்களுக்கு மாற்றப்படுகிறார்கள்.

இதே நிலைதான் வவுனியா வைத்தியசாலையிலும் நடந்தது.

கருணாநிதியின் சம்பவங்கள்

1. உண்ணாவிரம் இருக்கிறார்.. அன்று மாலையே அறிவிக்கிறார் ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று

2. தமிழீழமத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த படுகொலையை மறைப்பதற்கு அல்லது தமிழக மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு தொடர்ச்சியாக தனது தொலைக்காட்சிகளில் களியாட்ட நிகழ்வுகளை நடாத்துகிறார்.

3. இன அழிப்புக்கு எதிராக கியர்ந்தெழுந்த தமிழக உணர்வாளர்களை சிறையில் அடைக்கிறார்.

4. பின்னர் முதலமைச்சர் பதவி தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார்.

5. தமிழீழம் என்பது சாத்தியமில்லை என்று சொன்ன கருணாநிதி தமிழீழம் என்பதை அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு "டெசோ" மாநாடு பற்றி அறிக்கை விடுகிறார்.

6. மீண்டும் ஈழ ஆதரவு பற்றி அறிக்கை விடுகிறார்.

சினிமாக்களில் காட்டப்படும் அதே பாணியிலான அரசியல் பித்தலாட்டம் தான் இது.


தமிழீழத்தில் சமாதான முன்னெடுப்புக்கள் சிதைக்கபட்டு எப்படி போர் தொடங்கப்பட்டது என்பதும்.. போர் காலத்தில் எவ்வகைளான அழிவுகள் (கொத்துக் குண்டுகள் பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இரசாயண ஆயுத பாவனை) எப்படி ஏற்படுத்தப்பட்டன என்பதும் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும்.

இந்திய படைகள் நவீன தொழினுட்பத்துடன் நேரடியாக சிங்களப்படைகளுடன் களத்தில் இருந்திருக்காவிட்டால் இன்று தமிழீழம் கிடைத்திருக்கும் என்பது தான் உண்மை.

மிக மோசமான அழிவாயுதங்களுடன் சண்டையை செய்யும் உத்தியையும் அதை பயன்படுத்தும் முறையையும் இந்திய இராணுவம் தான் நேரடியாக செய்தது என்பது பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

ஆனந்தபுரச் சமரில் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் செத்துவிழ எஞ்சியவர்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள். அதன் பின்னர் இந்திய இராணுவம் தான் இரசாயண ஆயுத தாக்குதலை செய்தது என்று அதில் பங்குபற்றியிருந்த சிங்கள இராணுவத்தினன் ஒருவன் சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எது எப்படி இருப்பினும் இந்தியா ஒரு பெரும் படுகொலையை சிங்கள இராணுவத்தினூடாக நடாத்தி முடித்திருக்கிறது. இதில் கருணாநிதிக்கும் நேரடி பங்கிருக்கிறது.
காலம் இவற்றை கட்டாயம் அவிழ்க்கும். காலம் பிந்தினாலும் உண்மைகள் கட்டாயம் வெளிப்படும்.


பத்திரிகைச் செய்திகள்... நடந்த..நடக்கும் சம்பவங்களை வைத்து எந்தவொரு தமிழீழ பொதுமகனாலும் விளங்கிக் கொள்ளக் கூடிய விடையங்கள் தான் இவை. தவிர இப்படிப்பட்ட சம்பவங்களின் தொடர்ச்சியாக தான் தமிழீழ மக்கள் சிலரை இனம் கண்டுகொள்கிறார்கள்.

2009 ற்கு பிறகு தமிழ் நாட்டில் உருவாகிய தமிழீழ வேட்கை உணர்வும் தமிழீழ மக்கள் மீதான அளவு கடந்த அக்கறையும் இந்திய மற்றும் சிங்கள அரசுகளை கலகக்கம் கொள்ள செய்தது. அதை திசை திருப்புவதற்காக தான் தலைவரையும் விடுதலைப்போராட்டத்தையும் கருணாநிதி தன் வாயாலையே பல தடவைகள் பழித்திருக்கிறார்.. கேலி செய்திருக்கிறார்.

தமிழீழம் மீது இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது குரல் கொடுக்காத பல தமிழக ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் "புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின்" என்ற கருத்துப்பட கட்டுரைகளை எழுதினார்கள்.. பலர் "முன்னாள் போராளிகள்" என்ற அடை மொழியினூடாக புத்தகங்கள் அடித்து வெளியிட்டனர். கருத்தரங்குகளை நடாத்தினர்.

அந்த செயற்திட்டத்தில் சொல்லும் அளவிற்கு வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் உருவாகிய தமிழீழம் பற்றியதான உணர்வு வேறொரு தளத்திற்கு கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2009 ற்கு பிறகு தமிழீழ மக்களின் விடுதலை பற்றியோ அல்லது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை பற்றி கேள்வி எழுப்பியோ ஒட்டுமொத்த தமிழகம் திரண்டுவிடாமல் இருப்பதற்கு அத்தனை வேலைகளையும் கருணாநிதி-சோனியா அரசு தெளிவாக மேற்கொண்டது.

அது எப்படி என்றும் நான் எழுத தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இதைவிட விரிவாவும் சம்பவங்களை சுட்டிக் காட்டியும் தொடந்து விளங்கப்படுத்த வேண்டிய நிலை இல்லை என்று நினைக்கிறேன். அப்படி செய்தால் நாங்களெல்லாம் முட்டாள்கள் என்று அர்த்தம்.

குறிப்பு:-

இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூரகத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலா தூரம் வெறும் 200 மீட்டரும் இருக்காது.

தூதரகத்தில் வேலைசெய்பவர்கள் கருணாநிதி அரசுடன் சம்மந்தப்பட்டவர்கள். இங்கு நடக்கும் எல்லா அராஜகங்களும் கருணாநிதி கும்பலுக்கு தெரியும் .

சிங்கள இந்திய அரசு செய்த இனப் படுகொலையை அய்.நா தண்டிக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே. 2009 மே 18 ற்கு பிறகு இங்கு நடந்த எல்லா இன அழிப்பு கருவிகளும் இந்த உலகம் அறியும்.

ரொபேட் பிளேக்கின் மீது எறிகணைத்தாக்குதல் நடத்தியது புலிகள் இல்லை என்பதும் அவர்கள் இப்பொழுது அறிந்திப்பார்கள்.

கதைகள் இலக்கியம்,சினிமா,மாநாடு அது இது என்று உப்புச்சப்பற் விதத்தில் இதுவரை சுழன்று கொண்டிருக்கும் தமிழனம் ஒன்று திரண்டு எப்பொழுது வீதிக்கு இறங்கும்?? இந்த இலக்கிய தளம் என்ற போர்வையில் தமிழீழ அரசியலை பேசும் போக்கை உருவாக்கியதே இந்திய உளவுத்துறைதான்.

பர்மா போராட்டம் இப்படித்தான் நசுக்கப்பட்டது. இந்திய உளவுத்துறை பாவித்த உத்தி இது தான். தெரியாவிட்டால் வரலாற்றை எடுத்து படியுங்கள் .


ஈபிடிபியின் கொலை அச்சுறுத்தல் கடிதம் ஒன்று

ஆதி
23-12-12

Wednesday, December 12, 2012

இந்தியாவின் நேரடி வழிநடத்தலில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழனத்தின் மீதான அடுத்த இன அழிப்பு


தமிழர்களை எப்படி சித்திரவதை செய்து சிதைக்க வேண்டும் என்பதற்கான பிரதான பயிற்சியை சிங்கள ராணுவத்திற்கு இந்தியாதான் வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பலாத்காரமாக அச்சுறுத்தி கதறக்கதற இராணுவத்தில் இணைக்கபட்ட 100 பெண்களில் மூன்று நான்கு பேர் ஏற்கனவே தப்பி ஓடிவிட எஞ்சியவர்களில் 10 பேர்வரையில் மிக மோசமான உளவியல் பிரச்சினைகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபடப்டிருக்கின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் இராணுவத்திற்கென அச்சுறுத்தி கூட்டிச் சென்ற பெண்களுக்கே இந்த நிலை என்றால் கடத்தப்பட்டிருக்கும்.... கைது செய்யப்பட்டிருக்கும்.. அரசியல் கைதிகள்..விடுதலைப்புலி போராளிகளின் நிலை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தமிழர் தாயகத்தில் அடக்கு முறைக்கு எதிராக எப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தாலும் முன்னிற்பவர்களை படிப்படியாக கைது செய்தோ அல்லது கடத்தியோ வதை முகாம்களுக்கு அனுப்பும்படி கோத்தபாய உத்தரவிட்டிருப்பதாக அறியப்படுகிறது.

போர்க்காலத்தில் மக்களுக்கு முகம் தெரியாத ராணுவத்தினரை ராணுவ தளபதிகளை பிரதேசங்களில் நிறுத்தி இளைஞர் யுவதிகளை வேட்டையாடும் உத்தியை கோத்தபாய ஏற்கனவே கையாண்டிருந்தார். அதே போன்றதான வேட்டையாடும் நடவடிக்கைக்கு கோத்தபாய உத்தரவிட்டிருப்பதாக அறியப்படுகிறது.

அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று வழிநடத்த கூடியவர்களை விரைவாக வேட்டையாடி முடிக்குமாறு இந்தியா வழங்கி ஆலோசனைதான் இது என்று நீண்டகாலமாக அரசியல் ஆராய்பவர்கள் சொல்கிறார்கள். (பர்மாவிலும் இதே போன்றதான வெறியாட்டத்தை தான் இந்தியா நடத்தியிருந்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்)

புலிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி புத்தகம் புத்தகமாக எழுதி விற்பனை செய்த யாருமே இன்று வாய்திறகக்கவில்லை என்பதையும் ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள்.

உண்மையிலேயே தமிழீழ விடுதலைகுறித்து அதீத அக்கறை இருந்தால் தமிழக மக்கள்.. புலம்பெயர் தமிழர்கள் உடனடியாக களத்தில் இறங்கி தொடர் போராட்டங்களை செய்யுங்கள். இந்த வன்முறைகளை காரணம் காட்டி அய்.நாவிடமும் வல்லரசுகளிடம் கேள்வி கேழுங்கள்.

2009 ற்கு பிறகு நேரடியாக இந்தியாவின் வழிகாட்டலில் இந்த வன்முறைகள் இந்திய அதிகாரிகளின் பார்வையிலேயே நடைபெறுகிறது.

புலிகளை அழிப்பது என்ற பெயரில் 2009 இல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த சோனிய-கருணாநிதி கூட்டணி இன்று அரசாங்கத்திற்கு எதிராக போராடக் கூடியவர்களை வேட்டையாடும் ஓப்பரேசனை தொடங்கியிருக்கிறது.


எப்படி கையாளப்போகிறோம்?? இதை நின்று பேசி செய்ய முடியாது. இது அவசரமான அழைப்பு.. தயவு செய்து செயலில் இறங்குங்கள்.

எப்படிப்போராடுவது என்பது குறித்து 2009ற்கு பிறகு நிறைய விவாதம் நடத்திவிட்டீர்கள்.. தயவு செய்து இனியாவது செயலில் இறங்குங்கள்.


ஆதி
12-12-12

அவசரம் # நாட்டு நிலமை

யாழ்பல்கலைக்கழகத்தினுள் இதுவரைகாலம் இருந்த பொங்குதமிழ் நினைவுத்தூபி உள்ளிட்ட பல முக்கியமான சின்னங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கபட்டுள்ளன!!!

இன்னமும் பல மாணவர்களை தேடித்திரிகிறது புலனாய்வுத்துறை.. வீடுகள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விடுவிக்கப்பட்ட போராளிகள் பலர் விசாரணைக்கு அழைக்கபட்டிருக்கின்றனர்.

இந்த அவலத்தில் போராடாத எவனும்... இந்த அவலத்தை சர்வதேசப்படுத்தி சிங்கள அராஜகத்திற்கு எத

ிராக உடனடியாக சர்வதேசத்தை இறக்க முயற்சிக்காத எவனும்... இனிவரும் காலங்களில் "ஈழம் பெற்றுத்தருகிறோம்... இந்த படை வருகிறது" என்பது போன்று கதைத்து அவமானப்படாதீர்கள்.

இந்த பெரும் அவலத்தையே சரியான முறையில் சர்வதேசப்படுத்தி உடனடி நீதியை பெற முயற்சிச்காகத அல்லது முடியாத நீங்கள் தமிழீழ விடுதலைப்போர் என்று வரும் வேளையில் ஒன்றும் பிடுங்கப்போகிறவர்கள் இல்லை.

வெளிப்படையாக சிங்களம் செய்துவரும் இந்த அராஜகத்தை சர்வதேமயப்படுத்தி சிறிலங்காவை சர்வதேச நீதிக்குமுன் கொண்டுவர முடியாத நீங்கள் அண்ணனின் படத்தை தூக்கிக் கொண்டு அரசியல் செய்யாதீர்கள்.

இங்கு நடந்த ஒரு ஜனநாயகவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு வெறியாட்டம் ஆடியது மட்டுமல்லாமல் இன்று தொடர்ச்சியாக 12 நாட்களுக்கு மேல் வீடுபுகுந்தும் பல்கலைக்கழகம் புகுந்தும் வெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் சிங்களத்திற்கு எதிராக சர்வதேச அளவில் எந்தவொரு அழுத்தத்தையும் கொண்டுவர முடியாத நீங்கள் ....... ச்சி....

புலம்பெயர் தமிழர்களே!!!
உண்மையில் தமிழீழ விடுதலையில்.. இங்குள்ள மக்களில் அக்கறை இருந்தால்... நீங்களாக வீதிக்கு இறங்குங்கள்.. நண்பர்களை கூப்பிடுங்கள்.. அவர்கள்..அவர்களின் நண்பர்கள்.. இப்படி எல்லோரும் வீதிக்கு இங்குங்கள்.. அமைப்புகளை நம்பாதீர்கள்...காலவரையறையற்று மனித உரிமை அமைப்புகளையும் உங்கள் உங்கள் நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுகளையும் முற்றுகையிடுங்கள்...

அய்.நாவை முற்றுகையிடுங்கள்... இளையவர்களே!!! இங்கிருக்கும் சம்மந்தன் முதல் அங்கிருக்கும் அமைப்புகளில் பதவிகளில் இருப்பவர்களை வரை எல்லாருமே ஒருவித கள்ளனுகள் போலதான் தெரிகிறது.... யாரும் ஒழுங்குபடுத்துவார்கள்.. யாரும் கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்காமல் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுங்கள்.
 
11-12-12

Friday, November 16, 2012

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீது இந்தியா செய்யப்போகும் அடுத்த தாக்குதல் # சம்பவங்களை ஆராய்தல்

பிராந்தியத்தில் இந்தியாவின் நயவஞ்சக போக்கு குறித்த முதல் பதிவை இந்த இணைப்பில் பார்க்கலாம் சொடுக்குக

பிராந்திய அரசியலை இந்தியா ------->சீனா ----> அமெரிக்கா என்ற மூன்று அரசுகளின் நிலைப்பாட்டை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.


குறிப்பு : மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் நத்திதா ஹக்சர் எழுதிய "வஞ்சக உளவாளி" _ பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம் என்ற நூலை படித்துப் பாருங்கள் இந்தியாவின் கோரமுகம் தெரியும்.


பிராந்தியத்தில் தோற்றுப்போன இந்தியா

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளும் இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசாங்கமும் இந்தியாவை பிராந்திய அரசியல் செல்வாக்கில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கின்றன என்றே சொல்லலாம்.

தனது நாட்டு மக்களுக்கு தன்னை வல்லரசாக சுயபிரகடனம் செய்திருக்கும் இந்தியா தனது அயல்நாடுகள் எதனுடனும் உளப்பூர்வமான நட்பு நாடாக கொண்டிருக்கவில்லை என்பதற்கு அப்பால் இந்தியாவின் அரசியல் அழுத்தங்களுக்கு அவை ஒரு போதும் அடிபணிந்ததோ பயப்பிட்டதோ கிடையாது.

இந்திய அரசியல்வாதிகள் பணம்புரட்டுவதில் மட்டுமே அக்கறை செலுத்திவருவது போல் இந்திய இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் இந்திய அரசியல்வாதிகளின் கூலி ஆட்களாகவே பெரும்பாலும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்பிற்கேற்ப வழக்குகளும் விசாரணைகளும் குழப்பிக்கொண்டே இருக்கின்றன.

வல்லரசாக இருக்கும் அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் என்பது வெறுமனே ஒரு தலைவனையும் சில முடிவுகளை எடுக்க கூடிய அதிகார நபரையும் தேர்ந்தெடுப்பதுதான். மற்றப்படி அவர்களின் பொருளாதார கூட்டி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் ஒரே மாதிரியான கொள்கைளின் கீழ்தான் செயற்படும்.

விடையத்திற்கு வருவோம்.

ராஜதந்திர ரீதியில் சிறிலங்காவே இந்தியாவை மிரட்டும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதாவது பிராந்தியத்தில் ஒரு அரசிற்கு எதிராக முடிவுகளை எடுக்க கூடியதாகவோ அல்லது ராஜதந்திர ரீதியில் பணிய வைக்க கூடிய அளவிற்கோ இந்தியாவின் பலம் இல்லை என்றே சொல்லலாம்.

தெற்காசிய நாடுகளில் சீனா இன்று தனது நேரடி பிரசன்னத்தை அதிகரித்திருக்கிறது. இதனால் பதறிப்போயிருக்கும் இந்தியா பிராந்தியத்தில் அரசுகளுக்கு சார்பாகவே தானும் நடந்துகொள்ளும் முறமையை கடைப்பிடிக்கிறது. மனித உரிமைகளையோ அல்லது அநியாயங்களையோ கண்டுகொள்ளாமல், பிராந்தியத்தில் அரசுகளுக்கு சீனாவிடம் இருந்து கிடைக்கும் உதவிகளை விட தான் உதவிகளை அதிகம் வழங்கி தனது இருப்பை உறுதிப்படுத்த துடிக்கிறது இந்தியா.

இந்தியாவின் இந்த கேவல நிலையை புரிந்து கொண்ட அரசுகள் இந்தியாவை மிரட்டி தமக்கு சாதகமாக பணிய வைத்துள்ளன.

பர்மாவிலோ, பாகிஸ்தானிலோ, சிறிலங்காவிலோ, சீனாவிலோ, பங்களாதேஸிலோ இந்தியாவின் பேச்சு எடுபடாது என்ற நிலை முடிவாகிவிட்டது.

சீனா யார் மீதும் போர் தொடுக்காது

சீனாவை பொறுத்தவரை அதன் எல்லாச் செயற்பாடுகளுமே நீண்டகால திட்டத்திலானது. உலக அரசியலை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்றால் முதலில் உலக பொருளாதாரத்தை கையிற்குள் கொண்டுவரவேண்டும். அதற்கு முதல் பிராந்தியத்தில் மிக வலுவான சக்தியா உருவெடுக்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் இன்று சீனா இந்தியாவிற்குள் தனது பொருளாதாரத்தை விரிபுபடித்தியிருக்கிறது. இந்தியா என்பது மிகப்பெரிய சந்தை என்பதால் இந்திய சந்தையை இழக்க சீனா முயற்சிக்காது. தனது ராணுவ கட்டுமானங்களை காட்டி இந்தியாவை பயமுறுத்தினாலும் சீனா இந்தியாமீது போர் தொடக்க வேண்டிய தேவைகள் ஏதும் இப்போதைக்கு இல்லை.

தவிர சிறிலங்கா நிலைப்பாட்டிலும் சீனாவின் கொள்கை வெளிப்படையானது. சிறிலங்காவை தனது நட்பு நாடு என்றும் அதற்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டால் தான் காப்பாற்றும் என்றும்சீனா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

அது போக சிறிலங்காவின் அரசியல் சமரசங்கள் குறித்து எந்த கவலையும் இன்றி சீனா தனது வணிகத்தையும் பொருளாதார கட்டுமானங்களையும் வேகமாக ஏற்படுத்திவருகிறது.

சீனாவின் பெரும் கட்டுமானங்கள் தென்னிலங்கையை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது அரசியல் சூழ்நிலைகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டாலும் தனது பொருளாதார கட்டுமானங்களுக்கோ அல்லது தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கோ பாதிப்பு வராமல் இருக்க தென்னிலங்கை பொருத்தமானது என்று சீனா நினைப்பதாகவே தெரிகிறது.

அதே போல் மீண்டும் ஒருதடவை போர்ச்சூழல் ஏற்பட்டாலும் சீனா நேரடியாக தனது படைகளை இந்தியா போல் அனுப்பப்போவதில்லை என்பதும் வெளிப்படை.

தவிர இன்று தென்னிலங்கை பொருளாதாரத்தின் ஏறத்தாள பெரும்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.

ஆக இப்பொழுது இந்தியா எதை செய்ய வேண்டும்.. எது சரி எது தவறு... எது தனக்கு சாதகம்.. எது பாதகம் என்று ஒரு உறுதியான முடிவை எடுத்து தனது கொள்கைகளை மாற்றியே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படிருக்கிறது.


இந்தியா செய்யப்போகும் அடுத்த தாக்குதல் என்ன

தெற்காசிய பிராந்தியத்தில் விடுதலை இயக்கங்கள் மீது இந்தியா செய்த அத்தனை அட்டூழியங்களும் ஒரே மாதிரியானவை. அந்தந்த மக்களின் மனநிலைகள் களநிலமைகளை கருத்தில் கொள்ளாது இந்தியா ஒரே மாதிரியான அணுகுமுறைகளையும் தாக்குதலையும் தான் மேற்கொண்டிருக்கிறது.

கடந்தகால வரலாறுகளை புரட்டிப்பாருங்கள் புரியும்.

இந்தியாவின் நிலைப்பாட்டை ஆராய்வது கொஞ்சம் சிக்கலான விடையம். அதாவது மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் சண்டையை தொடங்கியிருக்கவில்லை என்பது அதன் பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். மற்றையது வன்னிக்குள் விடுதலைப்புலிகள் பின்வாங்கிய விதம்.

இந்த இரண்டிற்குள்ளும் ஆயிரமாயிரம் சர்வதேச சதிகள் இருக்கின்றன என்பதற்கப்பால் இந்தியாவின் நரித்தனமும் இருக்கிறது.

ஓயாத அலைகள் 3 மற்றும் தீச்சுவாலை எதிர்தாக்குதல் சமர்களில் பெரும் வெற்றியையும் பெரும் உற்சாகத்துடனும் இருந்த புலிகளின் யாழ்ப்பாணம் கைப்பற்றுவதற்கான தாக்குதலை நிறுத்தியது இந்தியா தான் என்பது அப்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்ட விடையம்.

இப்படிப்பட்ட தாக்குதல் திறன் அதிகரித்திருந்த காலத்தில் ஆயுதப்போராட்டத்திற்கும் அப்பால் எமது விடுதலை இலட்சியத்தை சமாதானமாக பெற்றுக் கொள்வதாயின் அதற்கும் நாங்கள் சம்மதம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லவே விடுதலைப்புலிகள் சமாதான மேடைக்கு போயினர்.

அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும்.

இப்படி இருக்க வன்னிப்போரில் விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு எப்படி இந்தியா காரணமாயிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?? விடுதலைப்புலிகள் போரில் பின்வாங்கிக் கொண்டிருந்தாலும் பாரிய ஊடுருல் தாக்குதல்களை செய்யாமல் பேச்சுவார்த்தை குறித்தும் அத்துமீறல்கள் குறித்தும் பேசினர். மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடந்துகொண்டிருப்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகள் தமது கைப்பொம்மைகளாக இருக்காமல் தனிநாட்டு கோரிக்கையில் மிக உறுதியாக இருப்பது இந்தியாவிற்கு பெரும் ஆத்திரத்தை ஊட்டியிருக்கிறது. அதனால் எப்படியாவது விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நேரடியாகவே தனது படைகளை வன்னிக் களங்களுக்கு அனுப்பியது இந்தியா.

ஒரு கட்டத்தில் அமெரிக்கா போரை நிறுத்துவதற்கு முனைப்புக் காட்டியும் அதை தட்டிக்கழித்தது இந்தியா. சீனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பிராந்தியத்தில் இந்தியா சண்டியர் போல் இருப்பது அமெரிக்காவிற்கு சாதகம். இதனால் இந்தியாவிடம் இதை விட்டுவிட்டது.

இருந்தாலும் விடுதலைப்புலிகளை அழித்தவுடன் தமிழ் மக்களுக்கு தன்னால் நிதந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்று இந்தியா சொன்னதை அமெரிக்கா நம்பியிருக்கலாம். ஆனால் இன்று நிலமை தலைகீழாகிவிட்டது.

இதனால் மீண்டும் சிறிலங்காவில் குழப்பங்களை ஏற்படுத்தி அதனூடாக சிறிலங்காவை தனது கட்டுப்பாட்டிற்குளன் கொண்டுவருவதற்கு தீவிரமாக இறங்கியிருக்கிறது இந்தியா.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் "தமிழீழம்" என்ற இலட்சியத்தை தவிர எந்தவொரு தீர்விற்கும் அவர்கள் இறங்கிப்போவதற்கு தயாராக இல்லை. அதனால்தான் ஆயுதங்களை மெளனித்து இது வரையில் தமது மெளனத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை முற்று முழுதாக அழிவித்துவிட்டதாக தனது நாடாளுமன்றில் அறிவித்து வெற்றிவிழாக்களை இன்னமும் கொண்டாடிவருகின்றன. உண்மையில் விடுதலைப்புலிகளின் தலமை முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டதா அல்லது ஏதாவது நீண்டகால திட்டத்துடன் மெனமாகி இருக்கிறார்களா என்ற குழுப்பத்தில்தான் இதுவரையில் தடை செய்து வைத்திருக்கிறது.

தலைவர் வே.பிரபாகரனின் இரத்த மாதிரி இந்திய அரசிடம் இருந்தும் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்படிருக்கும் தலைவர் வே.பிரபாகரன் இந்துவிட்டார் அதனால் அவரை வழக்கில் இருந்து நீக்குகி றாம் என்று அறிவிப்பதற்கு 1 வருடத்திற்கு மேல் எடுத்தது இந்தியா.  இப்படிப்பட்ட குழப்பகர நிலமைகள் தொடர்ந்த வண்ணம் இருக்க இனி இந்தியா என்ன செய்யப்போகிறது என்று அனைவருக்குள்ளும் தளம்பல் நிலை ஏற்பட்டிருக்கிறது.



விடுதலைப்புலிகள் மீண்டும் வந்தாலும் அவர்கள் தமிழீழ கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள் என்பதுதான் உறுதி. சிறிலங்காவை கட்டுப்பாட்டில் வைக்க இது இந்தியாவிற்கு சரியானதல்ல இதனால் றோவின் கைப்பொம்மைகளாகிய "ரெலோ" அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சில அமைப்பை சேர்ந்தவர்களை உள்ளடக்கிய சிறு குழுவை உருவாக்கி சிறிலங்காவில்  இராணுவத்தின் மீது "சொறி தேய்ப்பதற்கு" அனுப்புவதற்கான தீவிர முயற்சிகளில் இந்தியா இறங்கியிருப்பதாக தெரிகிறது.

இந்த றோவின் எடுபிடிகள் இப்படியான சிறுபிள்ளைத்தனமாக வேலைகளில் ஈடுபடும்பொழுது போர்க்குற்ற அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவும் இந்தியாவும் தப்பித்துக் கொள்வதோடு சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தையும் ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்லாது சிறிலங்காவை தனது கைக்குள் கொணடுவந்த மாதிரியும் இருக்கும் தமிழீழ போராட்டமும்  நசுக்கப்பட்டுவிடும் என்பது இந்தியாவின் தந்திரமாக தெரிகிறது.


இதற்கு ஏற்றதாற் போலதான் இந்திய மற்றும் சிறிலங்கா எழுத்தாளர்களையும் இலக்கியம் சம்மந்தப்பட்டவர்களையும் உள்ளடக்கிய குழு தீரிவமாக புலிகள் மீது அரசியல்பார்வை மீது அவதூறுகளையும் சினிமாத்தனமான போர் விமர்கனங்களையும் எழுதி வந்தனர் வருகின்றனர்.

( சிங்கள ஒட்டுக்குழுக்களின் புலம்பெயர் செயற்பாட்டாளராகவும் றோவின் ஊதுகுழுலாகளும் செயற்படும் ஷோபாசக்தி, புலிகளின் செயலகத்தில் சம்மபளத்திற்கு வேலை செய்து இன்று அதிர்வு ஊடகம் நடாத்தும் கண்ணன், கனடாவை சேர்ந்த சுமதி என்ற கறுப்பி நவா, இன்று வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவில் வசிக்கும் ஹரி, றோவின் ஏஜன்டுகளான தமிழகத்தை சேர்ந்த கவின்மலர், ஆதவன்தீட்சண்யா, லீனாமணிமேகலை...  இன்னும் பலர் இருக்கிறார்கள்).

குறிப்பாக இரண்டுபக்கமும் டபுள் கேம் விளையாடும் நபர்களும் அதிகம்.

குறிப்பு : மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் நத்திதா ஹக்சர் எழுதிய "வஞ்சக உளவாளி" _ பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம் என்ற நூலை படித்துப் பாருங்கள் இந்தியாவின் கோரமுகம் தெரியும்.

--------------------------------------------------------------------------------

இன்னொரு முக்கியமான விடையம்... விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா அமெரிக்காவிற்கு சில வாக்குறுதிகை கொடுத்து தோற்றுப்போயிருக்கிறது என்று வைத்துக் கொண்டால் இனிவரும் காலங்களில் அமெரிக்காவின் ராஜதந்திர அழுத்தங்கள் அதிகரிக்கும்.

ஓபாமாவின் ஆட்சிக்காலத்தில் இதுவரையில் அமெரிக்கா நேரடியாக தனது படைகளை இறக்கி போர் செய்திருக்கவில்லை. (ஓசாமைவை போட்டது சின்ன அசைன்ட்மன்ட் மட்டுமே). இனியும் நேரடியாக இறங்கி போர் செய்ய மாட்டார் என்ற கொள்கையில்தான் அமெரிக்கர்கள் அவருக்கு வாக்களித்ததாக சொல்கிறார்கள். எது எப்படி இருப்பினும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க ராஜதந்திர அழுத்தங்கள் அதிகரிக்க போகிறது என்பது உண்மையாகவே தெரிகிறது.

இதுபற்றி பிறதொரு பதிவில் பார்ப்போம்.



ஆதி
17-11-12


































































































































































































































































































































































































































































































































































































சிறிலங்காவை அடுத்த பர்மாவாக மாற்ற பெரும் வேலைத்திட்டங்களில் ஈடுபடுகிறது இந்தியா # தமிழீழ மக்களுக்கு எச்சரிக்கை _ பகுதி 1

அன்பான தமிழீழ உறவுகளே!!

இது ஒரு அவசரமான எச்சரிக்கைப்பதிவு தயவு செய்து விழிப்பாய் இருப்பதுடன் இலட்சியம் தவாறாது இயன்ற வழிகளில் போராடுங்கள். சோர்ந்து கிடப்போரை தட்டி எழுப்புங்கள். ஏறத்ததாள பெருமளவு இந்தியர்கள் ஊடுருவிட்டார்கள்.

1989ம் ஆண்டு பர்மா என்ற பெயரை மியான்மர் என்று மாற்றியது இராணுவ அரசு.

முதலில் பர்மாவில் நிகழ்ந்த விடுதலைப்போராட்டங்கள் எப்பிடி நசுக்கப்பட்டு இன்று இராணுவ ஆட்சிக்கு அங்கிகாரம் அளிக்கபட்டிருக்கிறது என்பதை "சுருக்கமாக" பார்ப்போம்.

பர்மாவில் தேசிய சிறுபான்மை இனங்களாக இருக்க கூடிய
1) கரேன்
2) ஆரக்கான்

என்ற இனங்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காக தனிநாட்டு போராட்டங்களை நடாத்திவந்தன. (இந்த இனங்களின் தேசிய வரலாறு குறித்து நான் இங்கு பேசப்போதில்லை)

இந்த இனங்களின் போராட்ட அமைப்புகளிற்கு தனித்தனியாக இந்திய அரசு பயிற்சிகளையும் இராணுவ தளபாடங்களையும் சீருடைகளையும் உணவுப்பொருட்களையும் ஏன் அலுவலகங்களை கூட இந்தியாவில் அமைத்துக் கொடுத்தது.
பர்மாவை சுற்றியிருக்க கூடிய எரிவாயு வளத்தை சுரண்டுவதற்கு தான் நினைக்கும் அரசு பர்மாவில் அமைய வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதற்காக போராட்ட இயக்கங்களை ஆதரித்து தான் நினைக்கும் அரசை நிறுவிவிடலாம் என்று நம்பியது.

இந்தியாவின் நயவஞ்சக போக்கை காலம் தாழ்த்தி உணர்ந்து கொண்ட போராளிக் குழுக்கள் விழிப்படைய ஆரம்பித்தன. அதே சமயம் சீனா பர்மாவின் இராணுவ ஆட்சி அரசுடன் நெருங்கத் தொடங்கியது.

உடனே போராளிக் குழுக்களின் தலைவர்களை பேச்சுவாரத்தைக்கு என்று அழைத்து முக்கிய தலைவர்களை சுட்டுக் கொன்றது இந்திய அரசு. ஏனைய போராளிகளை அந்தமான் உள்ளிட்ட பல தேசங்களில் சிறைவைத்தது. இன்னும் பலரை பர்மா இராணுவ அரசிடம் கொடுத்தது.

இருந்தாலும் போராட்ட குழுக்கள் மீண்டும் தலைப்பட்டது. உடனே தனக்கு சாதகக இருந்த போமாராளிகளை ஒழுங்கமைத்து விடுதலைக்காக போராடிய குழுக்கள் சிதைக்கப்பட்டது. போராட்ட குழுக்கள் தமது தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு ஒன்றிணைந்த பர்மாவிற்கான விடுதலைப்போராட்டம் என்று செயற்பட்டார்கள்.

அந்த மக்களின் சுயநிர்ணய விடதலைப்போராட்டத்தை நிதந்தரமாக அழிப்பதற்கு இந்திய வல்லாதிக்கம் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பல ஆயிரக்கணக்கான போராளிகள் இன்னமும் இந்திய மற்றும் அந்தமான் தீவுகளின் வதைமுகாம் சிறைக்கூடங்களில் இந்திய வல்லாதிக்கத்தால் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

இந்த விடுதலைப்போராட்டங்களை அழிப்பதில் இந்திய ஊடகங்கள் பெரும் பங்காற்றயிருப்பதாக பதிவுகள் சொல்கின்றன.

விடுதலைப்போராட்ட தலைவர்கள் அழிக்கப்ட்ட பின் அடுத்த போராட்டத்திற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் கால இடைவெளியில் "இந்த போராட்டம் சரியா தவறா" என்பது போன்றதான விவாதங்களை இந்திய பத்திரிகைகள ஊடாக இந்திய அரசு மற்றும் புலனாயய்வுப்பிரிவினர் செய்ததாகவும் அதனால் மக்கள் ஒரு குழுப்ப நிலையை அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களினூடாக பர்மிய ஊடகங்னளுக்கு இப்படிப்பட்ட நயவஞ்சக பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் மக்களை குழப்படைய செய்து இன்று சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் கைவிடப்படும் அளவிற்கு மாற்றியிருக்கிறது இந்திய வல்லாதிக்கம்.

பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லபட்டும் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் பெரும் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பர்மிய இராணுவ அரசுக்கு எதிராக அய்.நாவில் கொண்டுவரப்பட்ட பிரரேணைக்கு எதிர்த்து வாக்களித்து பர்மிய இராணுவ கொடுங்கோலரசை காப்பாற்றியது இந்தியா.

பர்மிய இராணுவ அரசிற்கு எதிராக தான் இருந்தால் அங்கு சீனாவின் ஆதிக்கம் வந்துவிடும் என்று நயவஞ்சக சாக்கு சொல்லிய இந்திய அரசு  கரேன் ஆரக்கான் இனங்களின் பூர்வீகத்தையே அழித்தது. கரேன் , மொழியை பர்மிய இராணுவ அரசு தடை செய்ததை இந்தியா ஆதரித்தது.

இராணுவ அதிகாரத்துடன் பெளத்த தீவிரவாதத்தை அதிகரித்த பர்மிய இராணுவ அரசு முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை கொன்று குவித்தது. சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டன. எல்லாவற்றையும் ஆதரித்து இராணுவ அரசிற்கு இன்றளவிலும் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருப்பது இந்திய இரத்த வெறி அரசுதான்.

பர்மிய விடுதலைப்போராட்டங்களை சிதைத்த அதே வழிமுறையை இம்மியளவும் பிசகாமல் தமிழீழ போராட்டத்திலும்  நடைமுறைப்படுத்த எண்ணியது இந்திய வல்லாதிக்கம்.

விடுதலைக்காக போராட புறப்பட்ட அத்தனை இயக்கங்களும் இந்திய அரசின் எடுபிடியாக மாற "தமிழீழ விடுதலைப்புலிகள்" அமைப்பு மாத்திரம் "தமிழீழ போராட்டத்திற்கு எதிராக வந்தால் இந்தியாவையே எதிர்ப்போம்" என மூர்க்கத்தனமாக திரண்டது.
அதனால்தான் நேரடியாக இராணுவத்தால் அடக்க நினைத்தது இந்தியா ஆனால் அதற்குள் விடுதலைப்புலிகள் ஆழமாக நிலையெடுத்துவிட்டனர்.

நயவஞ்சக திட்டத்தை சரிவர அரசியல் ரீதியாக வெல்ல முடியாமல், இராணுவத்தை அனுப்பி இந்தியாவிற்கு அவமானத்தை தேடித்தந்தவர் என்பதாலேயே  தோற்றுப்போன ராஜீவ்காந்தியை இந்திய உளவுத்துறையே பலியெடுத்தது என்று சொல்கிறார்கள். அதனால்தான் வழக்கு விசாரயையை கூட நேர்த்தியாக செய்யமுடியாமல் இந்திய வல்லாதிக்கம் திணறுகிறது.


எப்படி இருப்பினும் ராஜீவ்காந்தி அப்புறப்படுத்தப்பட வேண்டியவர். அவ்வளவே.

இன்றளவும் விடுதலைப்புலிகளை இந்தியா தடைசெய்து வைத்திருப்பதும் உச்ச கோபத்திலும் இருப்பதற்கு ராஜீவ்காந்தி கொலை காரணம் அல்ல.

ஏன் எப்படி என்பதை அடுத்த பகுதியில் தருகிறேன்.


நிராஜ் டேவிட் எழுதியிருக்கும் "இந்த கட்டுரையை"(  http://www.tamilwin.com/show-RUmqzBSZOdgw2.html) கட்டாயம் வாசித்துவிட்டு காத்திருங்கள் இந்தியா எப்பிடி செயற்பட்டது அடுத்தகட்டமாக எதை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அடுத்த பகுதியில் தருகிறேன்.

---------------------------------------------------------------------------------
இந்திய நயவஞ்சகத்தை மோப்பம்பிடித்து குறிப்பிட்ட ஒருசில வருடங்களுக்குள் இந்தியாவிற்கு எதிராகவே தமிழீழமக்களை தயார்ப்படுத்திய "அண்ணன்" எங்களின் வாழ்வு.

ஆதி
16-11-12

Monday, November 12, 2012

இந்தியா ஒரு ஜனநாயக விரோத நாடு..தவிர செல்வாக்கை இழந்து வாய்வீரம் பேசும் ஒரு பயந்ததாங்கொள்ளி தேசம்


பர்மிய போராளிகளை இந்திய வஞ்சக அரசு ஏமாற்றியவிதமும் பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்கள் செய்த அட்டூளியங்களுக்கு எதிராக 2007 ம் ஆண்டு அய்.நாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக அதாவது இராணுவ கொடுங்கோலர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து அவர்களை காப்பாற்றியது. அதற்கு அவர்கள் சொல்லிய காரணமும்... தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள இராணுவ அட்டூழியங்களை இந்தியா காப்பாற்றுவதற்கு சொல்லும் காரணங்களும் ஒன்றுதான்.

சமகால நிகழ்வுகளும் கடந்தகால வரலாறுகளும் தெரியாத மடையர்கள் இந்தியாவை வல்லரசாக கனவு காணுகிறார்கள்.

இந்தியா என்பது காலாகாலமாக தெற்காசிய பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான சக்தியாக தன்னை தயார்ப்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்தியா என்பது ஒரு பயந்தாங்கொள்ளி நாடு என்பதற்கப்பால் நயவஞ்சகமான ஒரு தேசம்.

இந்தியாவை உடைத்து சிதறடிப்பதற்கு சீனாவோடு தெற்காசிய நாடுகள் உறவுகளை வலுப்படுத்துகின்றன என்றே தோணுகிறது.

இன்று இந்தியா தெற்காசிய பிராந்திய அரசியலில் நேரடியாக செல்வாக்கு செலுத்தக்கூடியதானதாகவோ அல்லது கட்டுப்படுத்தக் கூடியதானதாவோ இல்லாத நிலையை அடைந்திருக்கிறது.

சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவிடும் என்ற அச்சத்தில் சீனாவைவிட அதிகளவிலான உதவிகளை செய்ய நினைக்கிறது. அதாவது சின்னப்புள்ளத்தனமாக.

இந்தியா ஒரு அடிமைதேசம் என்பதற்கு கடந்த 10வருட நிகழ்வுகளே போதுமானது.

இந்திய சனங்கள் அடிமட்ட முட்டாள்களாக "ஹிந்தியா" என்று உணர்ச்சிகர கோசமிடுவதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது.

இந்தியா உண்மையிலேயே பிராந்திய செல்வாக்கு மிக்க நாடென்றால் சீனா ஆதரக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இந்தியாவால் ஒரு பிரேரணையிலாவது கையெழுத்து இடவோ அல்லது ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கவோ முடியுமா???

சீனாவிற்கு பயத்தில் இந்தியா வாய்திறக்கப்பயப்பிடுகிறது.

தனது நாட்டு எல்லைக்குள் மட்டும் வீரம் பேசும் இந்தியாவை அந்த நாட்டு மக்கள் பெரிதும் நம்புகிறார்கள்..

ஆதி
13-11-12

Friday, November 9, 2012

களம் திறக்கபட்டுவிட்டது... உங்களுக்கு தெரியுமா?? # பாவனைக்கு வந்திருக்கும் துப்பாக்கிகள்

இன்றைய சம்பவங்கள்.

1. விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் தளபதி பரிதி மீதான படுகொலைத் தாக்குதல்
2. ராஜபக்ஷவின் பட்ஜட் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
3. வெலிக்கடைச் சிறையில் கைதிகளின் கையில் ஏகே.47 (பொலிசாரால் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இராணுவம்தான்    கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மோதலை செய்வதாக அவசர செய்திகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன)

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மெளனித்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் "வெளிப்படையாக" விடுதலைப்புலிகளின் தளபதி நிலை செயற்பாட்டாளர் மீது பிரன்ஸில் வைத்து தாக்குதல் நடாத்தப்ட்டிருக்கிறது. படுகொலையில் முடிந்திருக்கம் இந்த தாக்குதலை எந்த இராணுவம் செய்தது?? செய்ய வேண்டிய தேவை என்ன?? என்பவற்றோடு தாக்குதல் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நேரமும் முக்கியமானவிடையம்.

தமிழீழ மக்களே!!!
எம்மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளை தமிழக நாளேடுகளின் கருப்பொருள்போல் வெறுமனே செய்தியாகவும் சம்பவங்களாகவும் பார்க்காமல் அரசியல் ரீதியாகவும் தர்க்கரீதியான புலனாய்வுச் சிந்தனையோடும் அணுகுங்கள்.

தளபதி பரிதி அண்ணருக்குக்கு எனது வீரவணக்கங்களை தெரிவித்துக் கொண்டு இந்த சமகால பார்வையை தொடர்கிறேன்.

தளபதி பரிதி அண்ணர் மீதான தாக்குதலானது "றோ" உளவுப்பிரிவினதும் சிங்கள ஒட்டுக்குளுக்களினதும் திட்டமிட்ட தாக்குதலாக இருந்தாலும் இருவரினதும் நோக்கம் வெவ்வேறானதாகவே தெரிகிறது.

இந்தியாவிற்கு தலையிடிகொடுக்கும் புலிகளின் நிலை.

விடுதலைப்புலிகள் ஆயதங்களை மெளனிப்பதாக அறிவித்து ஆயிரக்கணக்கான போராளிகளும் சரணடைந்தனர். முக்கியமாக அரசியல் மற்றும் ஆவணப் பிரவுகளின் மூத்த தளபதிகள் போராளிகள் உட்பட பல இராணுவ மட்ட தளபதி நிலைப்போராளிகளும் ஏனைய போராளிகளுமாக ஆயிரக்கணக்கில் சரணடைந்திருந்தனர். இருந்தாலும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சர்வதேச மட்டத்தில் ஊடுருவிவிட்டதாகவும் சிலர் உள்நாட்டில் இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அடிக்கடி சொல்லிவருவது யாவரும் அறிந்ததே.

இந்திய இராணுவத்தினுடனான மோதல் மற்றும் சிறிலங்கா ராணுவத்தின் மிலேச்சத்தனமான நிலப்பிரிப்பு இராணுவ நடவடிக்டகைகளையும் சாதுர்யமாக கடந்துவந்த விடுதலைப்புலிகள்...  2009ற்கு பிறகு தமிழ் மக்கள் மீது எத்தனையோவிதமான அடககு முறைகளை சிங்கள அரசு மேற்கொண்டும் ஏன் இன்னமும் எந்தவித பதில் நடவடிக்கைகளையும் உள்நாட்டில் செய்யவில்லை என்பது பலருக்கு பீதியை உருவாக்கியிருக்கிறது.

தவிர இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறும் தொடர்ச்சியான அழுத்தங்கள் எழுந்தவண்ணமே இருக்கின்றன.  சமாந்தரமாக தெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக சிறிலங்கா ஒரு நச்சுக்களைகளைக் கொண்ட நடாக உருவெடுத்துவருகிறது.

இதனால் சிங்கள தேசத்தை அடக்குவதற்கு கட்டாயமாக இந்தியாவிற்கு தமிழீழ மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தமிழீழத்தையும் தமிழ் மக்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் இந்தியா குறியாக இருக்கின்றனர். முதலாவதற்கு புலிகளின் மீள் வருகையும் இரண்டாவதற்கு புலிகள் மீதான தொடர்ச்சியான தடையும் தேவைப்படுகிறது. அதாவது புலிகள் மீள்வருகை உறுதிப்படுத்ப்படால் புலிகள் மீதான தடையை எடுக்க தேவையிலடலை. புலிகள் மீதான தடையிருக்கும் பட்சத்தில் அதை தமிழீழத்திற்கு பெரும் தடையாக பயன்படுத்டதலாம் என்பது இந்திய பெருச்சாளிகளின் நிலைப்பாடு.

இதனால் புலிகளை சீண்டி எப்படியாவது களத்திற்குள் இழுக்க வேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு. அதற்காக சர்வதேச செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களை இனிவரும் நாட்களில் "றோ" மேலுவும் தீவிரப்படுத்தலாம்.

ராஜபக்ஷவுக்கும் புலிகள் தேவை

புலிகளை மாத்திரமே காரணம் காட்டி இன்று சிறிலங்காவை குடும்பகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் ராஜபக்ஷவிற்கு உள்நாட்டில் என்றுமில்லாதவாறு சதிகள் உருவாகிக் கொண்டிருப்பதாக அச்சம் கொண்டிருப்பதாகப்படுகிறது. ஒருவை அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் அது ராஜபக்ஷ பரம்பரையே அழித்துவிடும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. அதனால் புலம்பெயர் தமிழர் செயற்பாட்டாளர்பகளை முடக்குவது. அங்கும் விடுதலைப்புலிகளை தாக்கி அழிக்க முடியும் என்பது போன்றதான "சிங்களச் செய்திகளை" வெளியிடுவது ராஜபக்ஷ குடும்பத்திற்கு கட்டாய தேவையாக இருக்கிறது.

அது போக உள்நாட்டில் விடதலைப்புலிகளின் ராணுவ செயற்பாடுகள் ஆரம்பித்தால் அதைக் காரணம் காட்டி சர்வதேச அழுத்தங்களில் இருந்தும் அரசியல் எதிர்பைக்கிளப்பும் எதிர்சாராரிடம் இருந்தும் தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பது ராஜபக்ஷவின் நினைப்பு.

இவை அனைத்தும் நடைபெற வேண்டும் என்றால் புலிகளின் மெளனம் கலையவேண்டும்.

இப்படி தத்தமது நலன்களின் அடைப்படையில் விடுதலைப்புலிகளின் மெளனத்தை  சோதித்துப்பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

எத்தனையோ வருடங்கள்... எத்தனையோ வலிகள்.. எத்தனையோ இழப்புகளுக்குள் மத்தியில் கள முனைகளில் நின்ற போராளிகள் அதே எதிரியிடம் சரணடையும் முடிவை புலிகளின் தலமை எடுக்க முதல் எத்தனையாயிரம் தடவை என்னென்னவற்றையெல்லாம் யோசித்திருக்கும் என்பது தமிழீழ மக்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய ஆத்ம உறவு அது.

என்னதான் இருந்தாலும் சொல்லணாத்துன்பங்களையும்... எழுத்தில் கொட்டிவிட முடியாத வலிகளையும்.. மரணங்களையும் கொடுத்து போராடிக் கொண்டிருக்கம் தமிழீழ மக்களின் பொறுமை தொடர்ந்து இப்படியே இருக்கும் என்று யாரேனும் நினைப்பார்களாக இருந்தால்  அவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்று அர்த்தம்..

http://aathithyank.blogspot.de/2012/11/blog-post_9.html
ஆதி
09-11-12

Friday, November 2, 2012

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்# ஒரு வாக்கு மூலம்


"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் அருளினியனால் எழுதப்பட்டு விகடனில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் முழுக்க முழுக்க போர்க்குற்ற ஆதார வாக்கு மூலம் இருந்தும் அதை மனித உரிமை அமைப்புகளுக்கோ சம்மந்தப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கோ அனுப்பாமல் வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி விகடன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறது. 

சனல் 4 உட்பட எத்தனையோ ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக பல வழிகளிலும் தமிழ் மக்களின் நியாயத்திற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க விகடனோ ஒரு போராளியை விபச்சாரியாக்கி பணம் சம்பாதிக்கிறது. 

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்

உண்மையாகவே இந்த வாக்கு மூலம் எடுக்கப்பட்டிருந்தால் அதை மனித உரிமை அமைப்புகளுக்கு போர்க்குற்ற ஆதாரா வாக்கு மூங்களாக அனுப்புங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் அனுப்புகிறேன் என்று விகடன் "திருமாவேலனிற்கு" இன்று நண்பகல் முதல் இது வரை ஏராளமான அழைப்புகளை எடுத்துவிட்டேன். 

முதல் தடவை எனது அழைப்பை ஏற்ற அவர் "நான் ஆதி பேசுகிறேன்.... அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை சம்மந்தமாக.." என்று உரையாடலை தொடரும் பொழுது "ஹலோ..ஹலோ... " என்ற படி அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு எல்லா அழைப்புகளையும் துண்டித்துக் கொண்டே இருக்கிறார்.

தவிர அருளினியனுக்கு அழைப்பை எடுத்து கேட்டேன்.. அவர் தான் விகடனின் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு வேலையாள் மட்டுமே என்று சொல்லியிருந்தார். 

"உங்களிடம் போர்க்குற்ற ஆதாரம் இருந்தும் அதை வெறும் சம்பளத்திற்காகவா மறைக்கிறீர்கள்" என்று கேட்டேன்... தன்னிடம் எதுவும் இல்லை நீங்கள் விகடன் அலுவலகத்திலேயே கேளுங்கள் என்று சொன்னார்.


ஆக பேட்டி உண்மை என்றால் சிறிலங்கா அரை காப்பாற்றுவதற்காகவா விகடன் போர்க்குற்ற ஆதாராங்களை சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்காமல் மறைக்கிறது??? சிறிலங்கா அமச்சர் ஒருவரும் பெண்கள் மீதான வன்முறையில் நேரடியாக ஈடுபட்டார் என்று பாதிக்கபட்ட பெண் கொடுத்திருக்கும் வாக்கு மூலத்தை விகடன் என்ன நோக்கத்திற்காக மறைக்கிறது??

அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இதை எழுதியிருக்கிறார்கள். 


தவிர..
சுதந்திர மற்றும் ஆனந்தபுரச் சமர்களில் தனது பிள்ளைகளை தன் தாய் தகப்பனிடம் கொடுத்துவிட்டு களமாடியதாக சொல்லியிருக்கும் பெண் 3 வருடங்கள் கழித்து வந்து பிள்ளைக்கு பாலூட்டுவதற்காக பாலற்ற முலையை கொடுத்தாள் என்று அருளினியன் எழுதியிருப்பது அருளினியனின் கற்பனை வளத்தையும் விகடனின் காம வெறியையும் காட்டுகிறது. 

அது போக யோ.கர்ணனை முள்ளிவாய்க்கால் வரை போராடிய முன்னாள் போராளி என்று எழுதியவர்தான் அருளினியன். ஆனால் யோ. கர்ணன் ஏற்கனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி பிரில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பொம்பிளைப் பிள்ளைகளோடு அநாகரிகமாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்ட்டவர் என்பது ஊரறிந்த விடையம். இது புதுசாக முழைத்திருக்கும் அருளினியனுக்கோ விகடனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அதுபோக தமிழ்நாட்டு ஊடகங்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வெறும் வியாபார நோக்கமே. தனது சொந்த சம்பள உயர்விற்காக, வலிகளை தாங்கி ஊமைகளாக போயிருக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தவும்.. தமிழீழ பெண்களை இழிவுபடுத்தவும் அருளினியன் ஆரம்பித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. 

வாழ்நாளில் போர்களையோ அல்லது களம் நின்ற போராளிகளையோ சந்தித்திராத அருளினியனுக்கு எல்லாமே சினிமாவாகதான் தெரியும். 

போராளிகள் வறுமையில் இருக்கிறார்கள் ஆனால் யாரும் பிச்சையெடுக்கவில்லை. வாழ்வை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது!!!! 

பேட்டி உண்மையென்றால்!!

தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட மிகக் கொடுமையான இன அழிப்பு போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஆதாரங்களை சேகரித்து ஆனால் தனது வேலை மற்றும் சம்பளத்தை தக்க வைத்து கொள்ளவதற்காக, அதை பகிரங்கப்படுத்தி நியாம் கேட்க வக்கில்லாத அருளினியனும் ஆதாரங்களை ஒளித்து வைத்து சிங்கள அரசிற்கும் இந்திய அரசிற்கும் சலியூட் அடிக்கும் விகடனும் தமிழீழ போர் பற்றியோ தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ கதைக்க அருகதையற்றவர்கள். 


வெறும்  பணத்திற்காக சொந்த இன அழிப்பு ஆதாரத்தையே மறைக்கும் இவர்கள் இனிமேல் நடைப் பிணங்கள் தான்... 


உண்மையிலேயே இனப் பற்று இருந்தால்... ஒடுக்கப்படும் இனத்திற்கான ஊடக நேர்மை இருந்தால் ஆதாரங்களை வெளிப்படுத்தி நியாயம் கேட்கட்டும்.. இல்லையேல் எம்மிடம் தரட்டும் அதை நாங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து நியாயம் கேட்போம்.



ஆதி
02-11-2012

Thursday, November 1, 2012

விகடனும் அருளினியனும் தம் வரலாற்றுக் கடமையை செய்வார்களா!!


"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் கட்டுரையை (பேட்டியை) எழுதி பிரசுரித்திருக்கும் விகடன் மற்றும் விகடன் நிரூபர் அருளினியன் இன்று மிக முக்கியமான வரலாற்றுக் கடமையை செய்யக் கூடிய வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

போர்க்குற்ற வீடியோக்கள், புகைப்படங்கள், மற்றும் உரையாடல்களை வெளியிட்டு சனல் 4 என்ற ஆங்கில ஊடகம் தமிழருக்கான நீதிவேண்டி இன்றுவரை தனது பங்கிற்கு போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விகடனின் அருளினியன் போர்க்குற்ற மற்றும் தமிழ் பெண்கள் மீது சிங்கள அரசின் கோர தாண்டவத்தை வாக்கு மூலமாக பெற்றிருக்கிறார்.

இந்த வாக்குமூலமானது எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னதான அய்.நா மன்றம் மற்றும் மனித உரிமை காப்பகம் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தூரகங்களுக்கு அனுப்பபட்டு சிறிலங்காவிற்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.

இந்த பேட்டியில் சொல்லப்பட்டிருக்கிற தமிழ் பெண்களை கற்றபழித்த அமைச்சரை ஊகிக்க கூடியதாக இருகக்கிறது. அதாவது சிறிலங்கா அரமச்சரவையில் இருக்க கூடியவர்களே தமிழினத்தின் மீது நேரடி இன அழிப்பில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட ஆதாரமான வாக்குமூலங்களை இந்த நேரத்தில் எடுப்பது கடினம். எனவே இந்த வாக்குமூலமானது தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

வெறுமனே வியாபார நோக்கத்திற்காக இந்த பேட்டிக் கட்டுரையை விகடனும் அருளினியனும் பிரசுரித்திராமல் தமிழனித்தின் மீதான பற்ருறுதியில் செய்திருந்தால் உடனடியாகவே விரைந்து செயற்படுமாறு வேண்டுகிறோம். 

எதிர்வரும் 5ம் திகதி சிறிலங்கா தொடர்பான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த வாக்கு மூலம் பெரும் செல்வாக்கை செலுத்தும். இந்த வரலாற்றுக் கடமையை உணர்ந்து விகடனும் அருளினியனும் செயற்படுவார்களா!!!

தமிழர்களுக்காக இந்த தடவையாவது ஒரு "தமிழ் ஊடகம்" உரத்து குரல்கொடுக்குமா?? அல்லது விகடன் அருளினியனால் வியாபார நோக்கிற்காக வன்முறைக்குள்ளான பெண் விபச்சாரியாக்கப்பட்டாளா!!

இந்த வாக்கு மூலம் மிக முக்கியமானது. காரணம் சிறிலங்கா அமைச்சர் நேரடியாக இதில் பங்கெடுத்திருக்கிறார். விகடன் ஒரு ஊடகமாக இந்த வாக்கு மூலத்தை அய்.நாவிற்கோ அல்லது மனித உரிமை அமைப்புகளுக்கோ கொடுக்கலாம். தவிர அருளினியன் இந்த வாக்மூலத்தை பெற்றவர் என்ற வகையில் அவரே இதை அனுப்பலாம். 

அருளினியனுக்கு இதில் சங்கடங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.. அதை வேகமாக சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பக்கூடிய ஏற்பாடுகளை செய்வதற்கு நிறைப்பேர் இருக்கிறார்கள்.

ஆதி
11-1-2012

Tuesday, October 16, 2012

வலி தெரியாமல் அழிக்கப்படும் தமிழ் இனம்

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய சிங்கள பெளத்த கலாச்சார மண்டபத்தை கட்டுவதற்கான இந்தியாவின் திட்டங்கள் திரை மறைவில் மிக விரைவாக நடந்தேறியிருப்பதாகவே தெரிகிறது... இதை சும்மா விட்டால் அப்துல் கலாம் வந்து திறக்கும் பொழுது எல்லோரும் "ஆ..." என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்துல் கலாமின் ஆலோசனையில் ஏங்கனவே பெளத்த பாடசாலை ஆரம்பிக்கபட்டு சிங்கள கலாச்சார உடையில் தமிழ்ச்சிறுவர்களுக்கு "சிங்கள பெளத்தம்"

கற்பிக்கப்படுகிறது. (சிங்கள பெளத்தத்தின் அடிப்படையே திரிக்கப்பட்ட அரசியல் கதைகள் தான்).

யாழில் சிங்கள பெளத்த கலாச்சார மண்டபத்தை கட்டும் இந்தியா அம்பாந்தோட்டையில் "தமிழ் இந்து கலாச்சார" மண்டபத்தையும் பேருவளையில் "தமிழ் இஸ்லாம் கலாச்சார" மண்டபத்தையும் கண்டியில் "தமிழ் கிரிஸ்தவ" கலாச்சார மண்டபத்தையும் இதே பிரமாண்டத்துடன் கட்டுமா??

திரை மறைவில் செய்வது ஒன்று... த.தே.கூட்டமைப்பை கூப்பிட்டு சொல்வது ஒன்று.. புலனாய்வுப்பிரிவினரை வைத்து கதைகள் அவிழ்த்துவிடுவது இன்னொன்றுமென இந்திய காட்டேறி அரசு தமிழினத்தின் இருப்பை தமிழீழத்தில் இல்லாது செய்வதற்கான பல வழிகளை திறந்துவிட்டிருக்கிறது.

தமிழனம் வித்தியாசமான அரசியல் போருக்குள் சிக்குண்டுகிடக்கிறது. வலி தெரியாமல் தமிழினம் கூறுபோட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புலம்பெயர் இளையோர்களே!!! இன்று உண்மையாக செயற்படும் தமிழர் அமைப்புகளே!!!!

எப்படிக் கையாளப்போகிறீர்கள். இவற்றை இங்கிருந்து கொண்டு கையாள முடியாது. காணிப்பறிப்பிற்கெதிராக வன்னயில் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.. யாழ்ப்பாணம் அமைதியாக இருக்கிறது!!! மட்டக்களப்பில் அத்துமீறல்கள் நடக்கிறது.. திருகோணமலை அமைதியாக இருக்கிறது.... இது தான் நிலை. அச்சம் சூழ்ந்து கிடக்கிறது. வலி தெரியாமல் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படியான நிகழ்வுகளை விரைவாக ஆவணப்படுத்தி சர்வதேசப்படுத்துங்கள். பிரச்சினைகளை ஆறவிடாதீர்கள்.

ஆதி


16-10-2012

Saturday, September 22, 2012

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஞாபகப்படுத்துகிறோம்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் தமிழ் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்பதை த.தே.கூ ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியம்.

யாரும் எமக்கு பிச்சை போடத்தேவையில்லை..  உலக அரங்கில் எல்லோருக்குமான நீதியை எமக்கு தந்தால் போதும். சிங்களனுக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு ஒரு சட்டம் போதிக்கும் இந்திய வல்லூறுகளுக்கு கூட்டமைப்பு இனியும் தீனிபோட்டால் சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பை தமிழ் மக்களிடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் தீவிர வேலைகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டிவரும்.

அய்.நா மன்றம் பக்கச்சார்பாக செயற்றபடுகிறது என்பதையும்... அய்.நா மன்றத்தின் சட்டதிட்டத்திற்கமைய தமிழ் மக்களின் இறையாண்மை நிலத்தை பிரித்து தர வேண்டும் என்பதை த.தே.கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும். மாறாக தேசிய அரசியல் என்றும் சந்தர்ப்பவாத அரசியல் பற்றியோ அடிபணிவு அரசியலையோ தமிழ் மக்கள் மேல் திணிக்கும் வேலையை சம்மந்தன் அவர்கள் செய்ய கூடாது.

அமெரிக்க கோபுர தகர்ப்பிற்கு பின்னரான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இறையாண்மையை கருத்தில் கொண்டு மக்களின் விடுதலை விருப்பை ஏற்று நாடுகள் உருவாகியிருக்கின்றன. தவிர இன்று அரசியல் சமநிலை மற்றும் மக்களின் கொந்தளிப்பு நிலை உலகில் பெரும் மாற்றத்தை கண்டிருக்கிறது.

தமிழ்மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு சொல்வதும் அதன்பால் அரசியலை செய்வதும் தான் கூட்டமைப்பினது கடமை. தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேச சட்டத்தின் ஊடாக எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பதில்தான் கூட்டமைப்பு முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டுமே தவிர இந்திய ஊழல் வல்லூறுகளின் நலனிற்கேற்ப தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிக்க  கூட்டமைப்பு மக்கள் அதிகாரத்தை கொடுக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்திருக்க வேண்டும் சம்மந்தன் அய்யா அவர்களே!!.

அடிபணிவு அரசியலையும் பிராந்திய வல்லாதிக்கங்களின் திணிப்பு அரசியலையும் த.தே.கூட்டமைப்பு செய்யுமானால் தமிழ் மக்கள் தமக்கு தேவையானதை வேறுவழிகளில் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை கடந்தகால வரலாறுகளை வைத்து கூட்டமைப்பு அறிந்து கொள்ள வேண்டும்.


சாத்தியப்படாத ஒன்றையோ, உலக நீதியில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றையோ தமிழீழ மக்கள் கேட்கவில்லை என்பதை த.தே.கூட்டமைப்பு தெளிவுபடுத்தி தமிழ் மக்களின் விடுதலை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு.
இநத்தியா என்பது சாக்கடை. தமது சொந்த மக்கள் மீது அக்கறையற்று மக்களின் பணங்களை சுரண்டி அதை வெளிநாடுகளில் வைப்பில் இட்டிருப்பவர்களும்... ஊழல் செய்து பெருத்துப் போய் இருப்பவர்களும்தான் இந்திய அரசியல். இந்த வல்லூறுகளுக்கு தமிழீழ மக்களுக்கு எது வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை கிடையாது. அது தேவையும் இல்லை.

சட்டத்தின்பால் பிரிந்து சென்று தனி அரசு அமைக்கும் உரிமை நூற்றாண்டு வரலாறுகளை கொண்ட தமிழீழ மக்களுக்கு இருக்கிறது.
இதன் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு சர்வதேச அரசியல் செய்ய வேண்டும். மாறாக மகிந்தருடன் தேசிய அரசியல் அமைப்பது.. இந்தியா சொல்லுது என்பதற்காக ஊப்புச் சப்பற்ற அதிகாரங்களுக்காக கதிரைகளை பெறுவது..  போன்ற சிந்தனைகளை தவிர்த்து கொள்ளுதல் தமிழ் மக்களின் அரசியலுக்கு ஆரோக்கிறமாக இருக்கும்.


ஆதி
23-9-12

தியாக தீபம் அண்ணன் லெப்.கேணல் திலீபன் # மீண்டும் மீண்டும் கற்பிக்கும் பாடங்கள்.


25 வருடங்களுக்கு முன், தமிழீழ போராட்டம் ஆயதப் போராட்டமாக முழு மூச்சாக தீவிரப்படுத்துவதற்கு முன்னர்  அகிம்சை தேசம் என்று எழுத்துவடிவில் இருக்கும் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக, தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ மக்களின் விடுதலைக்காக மிகப்பெரிய அகிம்சைப் போராட்டத்தை தமிழ் மக்கள் முன்னிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியில் நடாத்தியிருந்தனர்.

ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் தமிழீழ மக்களின் விடுதலைக்காக வீதியில் தவம் கிடந்தான் அண்ணன் திலீபன். குழந்தைகள் முதல் முதியவர் வரை அவனது இந்த உச்ச கட்ட போராட்டத்தை கைவிடும்படி வற்புறுத்தியிலும் தனது இலட்சியத்தில் இருந்து இம்மியளவும் விலகாது தமிழீழ மக்களின் கண்முன்னாலேயே தனது உயிரை சொட்டு சொட்டாக மாய்த்துக் கொண்டான்.

சாத்வீக போராட்டங்களால் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் போராடி தோற்றுப்போன தமிழீழ மக்களுக்கு ஆயுதப்போராட்டத்தைத் தவிர வேறெந்த தெரிவும் இருந்திருக்கவில்லை. எல்லைகளை மீட்க இளைஞர் யுவதிகள் ஆயுதங்களுடன் களத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை காலம் தமிழர்களுக்கு வழங்கியிருந்தது.

விரும்பியோ விரும்பாமலோ ஆயுதங்களை ஏந்தி தமிழின விடுதலைக்காக போராடிய அமைப்புகள் நாளடைவில் தமது சொந்த நலனை பாதுகாப்பதற்கே அந்த ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த நேரத்தில்தான் தமிழீழ மக்களின் தெரிவு "தமிழீழ விடுதலைப் புலிகள்" ஆக தோற்றம் பெறுகிறது. ஆரம்ப காலங்களில் உருவான அனைத்து இயக்கங்களையும் புறந்தள்ளிவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை பொத்தி பொத்தி பாதுகாக்க ஆரம்பித்தனர் தமிழீழ மக்கள். அதற்கான காரணங்கள் இவை தான்.

மற்றைய இயக்க தலைவர்களை தமது கட்டுப்பாட்டில் பொம்மையாக மாற்றி வைத்திருந்த இந்திய வல்லாதிக்கத்திற்கு தமிழீழ தேசிய தலைவர் மே.த.கு வே.பிரபாகரன் அவர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. அவரது இலக்கும் பயணமும் முழு வீச்சுடன் தமிழீழம் நோக்கியதாகவே இருந்தது. இதனால் எப்படியாவது விடுதலைப்புலிகளை அழித்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்திய காட்டுமிராண்டி இராணுவத்தை தமிழீழத்திற்குள் நுழைத்திருந்தார் ராஜீவ்காந்தி.

தமிழீழ மக்களுக்கு ஆரம்ப காலங்களில் இந்தியா மீது நம்பிக்கையும் மதிப்பும் அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் நம்பிக்கையுடன் விளையாடக் கூடாது என்பதற்காக மக்கள் முன்னிலையிலேயே தமது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தனர் புலிகள். இந்திய காட்டுிராண்டி இராணுவத்தின் நோக்கத்தை விடுதலைப்புலிகள் அனுமானித்திருந்தாலும் மக்களின் நம்பிக்கைகாக தமது ஆயுதங்களை ஒப்படைந்திருந்தனர். ஆனால் சிறுது காலத்திலேயே ராஜீவ்காந்தியின் உத்தரவுக்கமைய இந்திய காட்டுமிராண்டி இராணுவம் தனது வேலை தொடங்கியது.

அமெரிக்க ராணுவம் "பிலிப்பைன்ஸ்" நாட்டை  எப்படி, ஏன் சீரழித்ததோ அதே நோக்கத்திலேய (பிறிதொரு பதிவில் இதுபற்றி ஒப்பிடுவோம்) இந்திய ராணுவம் தமிழீழ மக்கள் நிலத்தில் இறக்கபட்டிருந்த உண்மை அனைவருக்கும் புரிந்தது. இதனால் தமிழீழ மக்களுக்கு "தமிழீழ விடுதலைப்புலிகள்" என்ற தமது அமைப்பு ஆயுதம் ஏந்தியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.  ஆனாலும் விடுதலைப்புலிகள் அனை நிதானமாகவே கையாண்டிருந்தனர்.

இந்தியா பிரித்தானிய அரசிற்கெதிராக தான் எப்படி விடுதலை அடைந்ததாக சொல்கிறோ அதே வழியில் இந்திய வல்லாதிக்கத்திடம் இருந்து விடுதலைபெற புலிகள் தீர்மானிக்கின்றனர். ஆனால் அண்ணன் திலீபன் தியாக அகிம்சைப் போராட்டத்தின் உச்சத்திற்கே சென்றுவிடும் முடிவை எடுக்கிறான்.

உலக வரலாற்றில்  இன விடுதலைக்காக நீராகாரம் எதுவுமின்றி அகிம்சைப் போராட்டம் நடாத்திய மக்கள் தமிழீழ மக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் அகிம்சையால் விடுதலையடைந்ததாக பீற்றிக் கொள்ளும் இந்திய வல்லாதிக்கம் நீராகாரம் இன்றி அகிம்சைப்போராட்டம் நடாத்தி அணுவணுவாக உயிரை மாய்த்துக் கொண்ட தமிழீழ மக்களின் தியாக தீபம் அண்ணன் திலீபனின் குரலை செவிமடுக்கவில்லை. மாறாக தான் தமிழீழத்திற்குள் நுழைந்த நோக்கத்தை செயற்படுத்துவதிலேயே குறியாக இருந்தது.

இந்த நிலையில்தான் தமிழீழ மக்கள் இந்திய வல்லாதிக்கப்படையை சிதைத்தழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றர். சாத்தவீக போராட்டம், அகிம்சைப் போராட்டம் தோற்றுப்போன நிலையில் தமிழீழ மக்கள் ஆயுதப் போராட்டத்தை முழு மூச்சாக செயற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு காலம் தள்ளுகிறது.

தமிழீழ மக்களின் இன இருப்பையும் கலாச்சார விழுமியங்களையும் சிதைத்து ஒரு இனக் கலப்பையும் இன அழிப்பையும் உருவாக்க வந்த இந்திய பிசாசுகள் மீது முழுவீச்சான போராட்த்தை ஆயுதப்போராட்டமாக மாற்றியிருந்தனர் தமிழீழ மக்கள்.

தமிழீழ மண்ணில் கோரதாண்டவம் ஆடிய இந்திய பிசாசுகளை வேட்டையாடியதோடு இல்லாமல் அதை எய்தவனையும் பலி எடுத்தனர் தமிழீழ மக்கள்.

காந்தியம் என்பது ஒரு போலி என்பதையும் அகிம்சைவழி போராட்டங்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு ஒரு பொருட்டல்ல என்பதையும் தமிழீழ மக்கள் 25 வருடங்களுக்கு முன்னரே உலகத்திற்கு தெரியப்படுத்தினர்.

இந்திய விசுவாசிகளே!!!!

இந்தியா என்பது அகிம்சையால் விடுதலைபெற்றது என்றால் திலீபனை என் இந்தியா சாகடித்தது?? இந்திய அரசிற்கெதிராய் அண்ணன் திலீபன் செய்த வன்முறையென்ன??
சுபாஸ்சந்திரபோஸ் ஆயுதத்தோடு போராடியும் காந்தியின் போராட்டத்திற்கு பிரித்தானியா மதிப்பளித்து வெளியேறிது என்று நம்பும் நீங்கள் 25 வருடத்திற்கு முன்பு இந்தியாவிற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை நடாத்திய திலீபனை இந்தியா சாகடித்ததை எப்படி கருதுகிறீர்கள்!!!

தமிழ்நாட்டில் இன்னமும் வெறித்தனமாக இந்தியத்தை நம்பும் சகோதர்களே!!!

25 வருடத்திற்கு முன்பு இந்திய அரசிற்கு எதிராக எந்த வன்முறையிலும் இறங்கியிருக்காத மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஒரு போராளியின் அகிம்சைப் போராட்டத்தை அணுவணுவாக ரசித்து சாகடித்தது காந்தியின் இந்திய தேசம் என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.

மக்களின் விடுதலை என்ற பெயரில் இறங்கி தமிழீழ மக்கள் மீது பாலியல் தாக்குதல்கள், கடத்தி கொலை செய்தல், வீதிகளில் சுட்டுக் கொல்லுதல், என பெரும் இன அழிப்பிற்காக கோரதாண்டவம் ஆடிய இந்திய வல்லாதிக்க பிசாசுகள் தான் உங்கள் ராணுவம் என்பதை ஞாகம் வைத்திருங்கள்.

ராஜீவ்காந்தி அன்றே பலியெடுக்கபடாமல் இருந்திருந்தால் 18 வருடங்கள் கழித்து தமிழீழ மக்களில் யாராவது ராஜீவ்காந்தியை பலி எடுத்திருப்பார்கள் என்பதுதான் உண்மை. ராஜீவ்காந்தி உலகில் இருந்து அகற்றப்பட வேண்டிய அசுரன்.

இந்தியா என்ற அராஜக நாடு மக்களின் அகிம்சைப் போராட்டங்களுக்கு எதிரான ஒன்று என்பதை 25 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ மக்கள் உலகிற்கு நிரூபித்து காட்டியிருந்தார்கள். ஆனாலும் அப்பாவி ஹிந்திய கோசக்காரர்கள் அதை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை இருந்தாலும் 25 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் மக்களின் அகிம்சை போராட்டத்தை திலீபனின் இதே நாட்களில் அராஜக கரம் கொண்டு நசுக்கியிருக்கிறது இந்திய வல்லாதிக்கம்.

கூடம்குள அணு உலைக்கு எதிரான மக்களின் அகிம்சைப் போராட்டத்தின் மீது அதிகாரவெறித் தாக்குதல்களை நடாத்தி மக்களின் கோரிக்கைகளை சிறைவைத்துவிட்டு தனது வழமையான அராஜக பணிகளை இந்திய வல்லாதிக்க அரசு நிழ்த்திவருகிறது. அதே இந்திய காட்டுமிராண்டி அரசியல்வாதிகளும் இராணுவமும் காவல் துறையும் மக்களின் அகிம்சை போராட்டத்தை கேலி செய்வதோடு காறி உமிழ்ந்திருக்கிறார்கள். இந்த அவமானத்தை தமிழக மக்கள் எப்படி கையாளப்போகிறார்கள் என்பது எதிர்வரும் காலத்திற்கு தான் தெரியும்.

எது எப்படி இருப்பினும்,
காந்தியம் என்ற போலி அகிம்சை முகமூடி தரிந்த ,இந்தியம் என்ற மனித குலத்திற்கு எதிரான தேசத்தின் உண்மை முகம் பற்பல சந்தர்ப்பங்களில் வெளிப்படிருந்தாலும் இதே நாட்களில் 25 வருடங்கள் கழித்து தமிழ்மக்களின் அகிம்சைப்போராட்டம் ஒன்று இந்திய அராஜக சக்திகளால் நசுக்கப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றுப் பதிவாகிறது.. காரணம் தமிழகத்தில் இன்னமும் போலிகளை நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் அதிகம் என்பதே தான்.
போலி ஹிந்தியத்தை உடைத்தெறிந்து தன்னலமிக்க இனமாக தமிழக மக்கள் திரள வேண்டும்.

தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டம் தொடரும்... சாத்வீக போராட்டம் தோற்கடிப்பட்ட பின் அகிம்சை போராட்டமாக மாற்றம் எடுத்தது... அகிம்சைப் போராட்டம் நசுக்கப்பட்ட பின் ஆயுதப் போராட்டமாக பரினாமம் அடைந்தது... ஆயுதப்போராட்டத்தை சூழ்ச்சிகளால் அழித்திருந்தாலும் ஆயுதப்போராட்டம் அதிபயங்கர ஆயுதப்போராட்டமாகவோ... அதிபயங்கர தமிழீழ விடுதலைப்போராட்டமாகவோ மாற்றமெறடுக்கும்... இதை காலம் உருவாக்கும் என்பதே புரட்சிகளின் வரலாறு.

அண்ணன் திலீபன் மேல் சத்தியம் செய்வோம்.. "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

ஆதி
22-09-12

Wednesday, August 22, 2012

கவின் மலர் அந்தோனியின் இன்னொரு லீனாமணிமேகலை

"கவின்மலருடன் பழகினாலும் நாங்கள் அவதானமாகதான் இருக்கிறோம்" என்று தமிழ்நாட்டை சேர்ந்த சில எழுத்தாளர்கள் சொன்ன பிறகே எழுதி வைத்திருந்த இந்த பதிவை வெளியிட முடிவு செய்திருக்கிறேன்.


தமிழ்நாடு என்பது சிறிலங்காவை விட பெரியதும் தமிழீழத்தைவிட எத்தனையோ மடங்கு பெரியதும் கூட. இந்த பெரும் நிலப்பரப்பிற்குள் ஆயிரம் சாதிகள்.. சாதிக் கட்சிகள்.. இதுவரை அறிந்திராத பிரிவினைகள் வகுப்புகள்... தமிழ்நாட்டின் உள் சித்தார்ந்தம் தெரியாததால் அங்கு நடக்கும் அநியாயங்களை போக்கை கண்டுபிடிப்பது சிரமம். தெரியாத ஒன்றை விமர்சனத்திற்குள்ளாக்குவதும் ஆபத்து என்ற காரணத்தால் இதுவரை தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களிற்கு பெரியளவில் முன்னிநிலைப்படுத்த முடியாமல் போய்விட்டது.

இருப்பினும்.. இன்று தமிழ்நாடு "நாம் தமிழர்கள்" என்ற உத்வேகத்தோடு புரட்சிக்கு வெடித்தெழும் நிலை எல்லா மட்டங்களிலும் ஊடறுத்து பரவுவதாகவே தெரிகிறது. இந்த நிலையில் தமிழர் இன இருப்பிற்கு எதிராக தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒட்டியிருக்கும் இந்திய ஏஜன்டுகளை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் எழுந்துள்ளது.

எங்களை பொறுத்தவரை தமிழகத்திற்குள் ஒட்டியபடி ஈழ ஆதரவு சக்திகளுக்குள் ஊடுருவி ஈழவிடுதலைப் போராட்டத்த சக்திகளுக்குள் பிழவுகளை ஏற்படுத்த அல்ல ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஈகப்பிறவிகளை எங்களால் இலகுவாக இனம் காட்ட முடியும்.

இது முற்று முழுதாக கவின்மலர் என்ற ஈனப்பிறவியை இனம் காட்டுவதற்காக எழுதும் பதிவே!!


லீனாமணிமேகலை என்ற ஷோபாசக்தியின் ஊதுகுழுல் பற்றி ஏற்கனவே நிறைய பதிவுகள் வெளியாகிவிட்டன. இலக்கிய மட்டத்தில் கவருவதற்கு ஒன்றும் தனிப்பட்ட முறையில் வசதி கொள்ள இன்னொன்றுமாய் செய்து பிழைப்பு நடத்தும் லீனாமணிமேகலையின் முகமூடி கிழிக்கபட்டுவிட்டது. பெண்ணியம் என்று நிமிடத்திற்கு நிமிடம் பேசும் இவர் "ஈழத்து தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்படுவதை ஒரு வன்முறையாக பார்க்காமல் உளவியல் ரீதியாக அணுக வேண்டும்" என்று சொன்ன கறுப்பி நவா என்ற அவரின் நண்பரின் கருத்தை ஏற்றுக் கொண்டவர்.மிக மோசமான ஆபாச கவிதைகளை எழுதும் இவர் உண்மையில் பெண்ணியவாதியா என்பதும்.. இவருடைய தனிப்பட்ட வாழ்விலும் எப்படிப்பட்ட கேவலமானவர் எனவும் தமிழக இலக்கிய மட்டம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது என்று தெரியும்.



இந்த வரிசையில் இருந்த ஷோபாசக்தியின் மற்றொரு ஊதுகுழலான கவின்மலரின் உண்மை முகமும் ஒவ்வொரு சம்பவங்களிலும் கிழிந்து கிழிந்து இன்று முற்றாக கிழிக்பட்டுவிட்டது.. அல்லது எஞ்சியிருக்கும் முகமூடியின் மிச்சத்தையும் முழுமையாக கிழித்தெறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவரும் பெண்ணியம் ஆணாதிக்கம் குறித்து அதிகளவில் பேசுபவர். ஆனால் இவரது உயிர் நட்புகளை பார்த்தீர்களேயானால் ஈழத்தை சேர்ந்த ஷோபாசக்தி உள்ளிட்ட சிலர். இவர்கள் யார்!!!
ஷோபாசக்தி என்பவர் எந்த வயிதிலான பெண்களையும் விட்டுவைத்ததில்லை. திருமணமான திருமணமாகி கணவரை பிரிந்த இப்படி பல பெண்களோடு பழகி அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த (சிலர் தாமாகவே போனதாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்) ஒரு அயோக்கிய ராஸ்கல். இதே போன்ற ஒரு பேர்வழிகள் தான் மற்றையவர்களும்.
ஆணாதிக்கம் என புலம்பும் கவின்மலர் பெண்களை சீரழித்தவர்களின் நட்பாயும் அவர்களின் ஊதுகுழலாயும் இருப்பது அவர்பற்றிய சந்தேகத்திற்கு முதலாவது காரணம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கெதிராக பல வகையான ஒட்டுக் குழுக்கள் பணத்தை கொடுத்து களம் இறக்கட்டுள்ளன. இதே போல் தமிழ்நாட்டிலும் எழுச்சிகளை தடுக்கவும் எழுச்சிகளை உருவாக்க கூடிய தரப்புக்களிற்குள் குழப்பற்களை உருவாக்குவதற்கும் என பலர் இந்திய புலனாய்வு அமைப்புகளாலும் களம் இறக்கபட்டுள்ளன.

எழுத்தாளர் குழுமங்கள் சமூக செயற்பாட்டாளர் குழுமங்கள் என மக்களுடன் சம்மந்தப்பட்ட பல குழுமங்களுக்குள் கவின்மலர் போன்ற பணத்திற்காகவோ பிழைப்பிற்காகவோ வேலை செய்யக் கூடிய புல்லுருவிகள் களம் இறக்கட்டுள்ளன.

இவர் போன்றவர்களால் புரட்சிகளை தடுக்க முடியாது என்ற போதும், ஒன்றுபட்ட இலட்சியத்திற்காய் போராடுபவர்களுக்கிடையில் பிழவுகளை ஏற்படுத்துவது.. அதனூடாக அவர்களின் திட்டங்களை கண்டறித்து புலனாய்வு அமைப்புகளிற்கு தெரியப்படுத்துவது போன்றவையே இவர்களின் செயற்பாடுகள்.

தன்னை பெரும் சமூக செயற்பாட்டாளராக காட்டிற்க கொள்வதற்கு பல வகையான உத்திகளை கவின்மலர் மேற்கொண்டுவருவது நீங்கள் அறிந்திருப்பீர்கள். வீதிகளில் விழிப்புணர்வு செய்வது போன்று.. மேம்பாட்டு திட்டங்களில் பங்குகொள்வது போன்றதான புகைப்படங்களை பக்காவக பிரசுரித்து தன்மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்வதற்கு அவர் பல வழிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு விடையத்தில் இவர் நடந்து கொண்ட விதத்தை ஞாபகப்படுத்தி பாருங்கள்.. முல்லைப்பெரியாறு அணை விடையத்தில் கேரளாவில் இருந்து தமிழர்கள் துரத்தப்படுவதற்கு எதிராக தமிழகத்தில் இளைஞர்கள் திரண்டனர். மலையாளிகளை துரத்த வேண்டும் என்ற ஆக்குரோத்தில் அவர்கள் ஈடுபட்டதை கவின் மலர் "காட்டுமிராண்டித் தனம்" என்று சொன்னதோடு அதை மிகப்பெரிய வன்முறையாக எழுதினார் அதற்கு ஒத்து ஊதுவதற்கு ஒரு 100 பேர் கூடினார்கள்.. ஆனால் கேரளாவில் தமிழர் ஒருவர் படுகொலை செய்யபட்ட போது எந்த எதிர்பபையுமோ அல்லது அதற்கு எதிரான கோசங்களையோ கவின் மலர் கூவவில்லை. அவர் அதை செய்ய முடியாத அளவிற்கு செயற்பாட்டளவில் கட்டுப்படுத்தபட்டிருக்கிறார் என்பதே உண்மை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 3 அப்பாவிகளை இவர் "இவர்கள் கொலையாளிகள் தான் ஆனால் 20 வருடங்களின் பின் மரண தண்டனை பெரும் தண்டனை" என்ற தொனிப்பொருளில் ஷோபாசக்தி கொன்னதை ஆதரித்ததோடு அதை பகிர்ந்து ம் இருந்தார். இந்த பிரச்சினையில் தமிழகமே உணர்ச்சி பொங்க எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் உண்ணாவிரதங்களிலும் ஈடுபட்டிருந்த நேரம்.. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இவர் ஒரு பதிவு எழுதி பிரச்சினைக்குள்ளாகியவர் என்று கேள்ளிப்பட்டேன்.

இப்படி கவின் மலர் யார் என்பது பல சந்தர்பங்களில் சாதுவாக வெளியாகியிருக்கிறது.

******************************************

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து சிறிது காலத்திலேயே மண்கடத்தல், பெண்களுடனான பிரச்சினைகள், மற்றும் மாற்று இயக்க பரப்புரைகளை விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் செய்தல் என ஈடுபட்ட ஷோபாசக்தியில் புலிகளுக்கு சந்தேகம் வரவே அவர் இங்கிருந்து தப்பி வெளிநாட்டிற்கு ஓடியவர். வேறொரு அமைப்பின் புல்லுருவியாக இணைந்து, தான் இணைக்கட்டிருந்த அணிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி சமனிநிலையை குழப்புவதே ஷோபாசக்தியின் நோக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட புல்லுருவி இன்று தனது முகவரியாக "முந்நாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்" என்று போடுவதன் உள்நோக்கமும் அதை கவின்மலர் தூக்கிப்படித்தபடி தமிழகம் எங்கும் அலையும் நோக்கமும் அனைவருக்கும் இலகுவாக விளங்கும்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தப்பியோடிய காலத்தில் இருந்தே சிங்கள அரச ஒட்டுக்குழுக்களுடன் நேரடி வழிகாட்டலில் இயங்கிவருபவர் ஷோபாசக்தி. குறிப்பாக முஸ்லீம் ஜிகாத் அமைப்புடன் நேரடி தொடர்பில் இருப்பவர். தமிழமெங்கும் முஸ்லீம் ஜிகாத் அமைப்புகள் செய்த படுகொலைகளை மறைத்து முஸ்லீம்கள் வெளியேற்றபட்டதையும் காத்தான் குடிபடுகொலையையும் இவர் பல மட்டங்களில் பரப்புரை செய்துவந்துள்ளார் (இந்த பரப்புரையை யார் கணக்கிலெடுத்தார் என்பதற்கப்பால் இவர் யார் என்பதை சொல்ல வேண்டி தேவை இருக்கிறது)
இதே போல் தான் கவின் மலரும்... இந்துத்துவாதத்தை எதிர்ததல் எனும் பெயரில் பல இடங்களில் முஸ்லீம் ஜிகாத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்.
இந்துக்களிடையில் சாதிகள் அதிகம் என்று தொனிப்பட இவர் ஒரு இடத்தில் கருத்துப் பதிவு செய்திருந்தார் ஆனால் முஸ்லிம்களுக்கிடையில் இருக்கும் சாதியை பற்றி ஏற்றத்தாள்வுகளை பற்றி வாய்திறக்கவே இல்லை.

நான் மதங்களை ஆதரிப்பவன் அல்ல ஆனால் ஒரு மத்ததை எதிர்தத்தல் டஎனும் பெயரில் இன்னொரு மதத்தை ஆதரிக்க முடியாது. (சிறிலங்காவில் கரையோர முஸ்லீம், கண்டி முஸ்லீம், காத்தாங்குடி முஸ்லீம், அம்பாறை முஸ்லீம், படித்த முஸ்லீம், படிக்காத முஸ்லீம், என பல தரப்பட்ட ஏற்றத்தாள்வுகள் அவர்களுக்கிடையில் இருக்கிறது என்பது வேறு விடையம்)

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களால் சோடிக்கட்டு மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் 3 அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற சொல்லி இயலா கட்டத்தில் தன்னை ஆகுதியாக்கினாள் தியாகி செங்கொடி. அவளை இன்று தமிழனம் புலிக் கொடி போர்த்தி வணங்கி வருகிறது.
இப்படிப்பட பெண் தியாகியை "யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் அவள் இருளர் பெண்தான்" என்று ஆதிக்க சாதி வெறிச் கூச்சல் போட்டிருக்கிறார் கவின்மலர்.
தான் இன்ன சாதி என்று தனது அடையாளமாக போட மறைத்தபடி செங்கொடியை இந்த சாதிப் பெண் என்று தனிமைப்படுத்தும் முயற்சியில் கவின்மலர் வெறித்தனமாக ஈடுபட்டதன் நோக்கம் ஏன் என்பது வெளிப்படை உண்மை.

முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளின் உயிர் வேள்விக்கு பின் தமிழகத்தில் அதிகளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஒரு ஆட்சியே தூக்கி வீசப்பட்டிருக்கிறது என்பதை தாண்டி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்திய அரசை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. அந்த வகையில் செங்கொடியின் மிகப்பெரிய உயிர்த்தியாகம் தமிழர்களிடையில் என்றுமில்லாத அளவு அரசை எதிர்க்கும் வைராக்கியத்தை தூண்டியிருக்கிறது. ( "இது போன்ற" தற்கொடைகளை நான் ஏற்கவில்லை ஆனாலும் இந்த தியாகத்தின் பின் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை பேச வேண்டியதாக இருக்கிறது).இந்த நிலையில் செங்கொடியை வணங்கும் அல்லது செங்கொடியை ஒரு ஆயுதமாக ஏந்தியபடி தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும், போராடப் போகும் தமிழர்களிடத்தில் சாதிவாரியான பிரிவினையை ஏற்படுத்தி அவர்கிளின் பலத்தை சிதறடிக்க வேண்டிய தேவை இந்திய அரசின் புலனாய்வு ஏஜன்டுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை எந்த மட்டத்தில் இருந்து செயற்படுத்துவது என்பதையே கவின்மலர் போன்ற சில புல்லுருவிகள் செய்வதாகபடுகிறது.
காரணம் செங்கொடி தலைவர் பிரபாகரனையும் புலிக் கொடியையும் நெஞ்சினில் குத்தியபடி நடனம் ஆடியவள். தமிழீழ தேசிய தலைவரை மிக ஆழமாக நேசித்தவள் என்பது அவளை பற்றிய குறிப்பு ஒன்றில் படித்திருக்கிறேன். இப்படியிருக்க விடுதலைப்புலிகளை தாறுமாறாக விமர்சித்துவரும் கவின்மலர் செங்கொடி குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதாகவே தெரிகிறது. எது எப்படி இருப்பினும் கவின் மலரின் நோக்கம், ஒன்று திரழும், சாதியின்றி மதபேதமின்றி அடிமைத்தனமான மாற்றான் அரசியல் இன்றி  தமிழின உணர்வோடு சிறுக சிறுக ஒன்று திரண்டு கொண்டிருக்கும், ஒன்று திரட்டிக் கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளுக்கிடையில் குழப்பங்களையும் மக்களுக்கிடையில் குழப்பங்களையும் ஏற்படுத்துவதே.



இன்று உலக அளவில் தமிழனத்தின் பலத்தை அடக்குவதற்கு பல வழிகள் திறக்கப்ட்டுள்ளன. ஆட்பலம் பெரும் பணப்பலம் கொண்ட இனத்திற்கு ஒரு தனிநாடே இல்லை. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக எப்படி பல புல்லுருவிகள் இறக்பட்டுள்ளனவோ அதே போல் தமிழக எழுச்சியை அடக்குவதற்கும்.. அதை வேவு பார்த்து குழப்புவதற்கும் இந்திய மற்றும் தமிழக புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் களம் இறக்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

எழுத்தாளர் மட்டத்தில் ஒட்டியிருக்கும் கவின்மலர் போன்ற புல்லுருவிகளை அப்புறப்படுத்துங்கள்.



ஆதி
22-08-12

இந்த பதிவிற்கு பின் என்னை முகப்புத்தகத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு கவின்மலரே அல்லது அவரை சார்ந்த புல்லுருவிக் கூட்டங்களோ முனையலாம். எப்படி இருப்பினும் முகப்புத்தகத்தில் நான் பதிவு செய்தவையின் Backup எடுத்து வைத்திருக்கிறேன் . பதிவுகளை எனது வலைப்பதிவிலும் பார்க்கலாம்.

Sunday, June 24, 2012

நாம்தமிழர் கட்சி ஆவணமும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு போடப்பட்டிருக்கும் சுருக்கும்


முகநூல் மற்றும் இணைய தளங்களில் "நாம் தமிழர்" கட்சி ஆவணம் பற்றிய பல விமர்சனங்களும் ஆய்வுகளும் கருத்துரையாடல்களும் விதண்டாவாத வியாக்கியானங்களும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.
 தமிழீழ போராட்ட வலிகளினது ஆழம் தெரியாமல் ஈழ ஆதரவு அல்லது நடுநிலை என்ற பெயரில் அல்பத்தனமான விமர்சனங்களை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் "நாம் தமிழர்" கட்சி குறித்தும் தமிழீழ மக்கள் ஏன் அவதானமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தை நியாயமான முறையில் வைக்காமல் வெறுமனே தமிழீழ கொடியில் இருக்கும் புலியை தமது கொடியில் பாவித்திருக்கிறார்கள், பெரியாரை குறை சொல்லி இருக்கிறார்கள், தமிழீழ கருத்துகளை தமது ஆவணத்தில் உள்ளடக்கி தமிழ் நாட்டு அதிகார அரசியல் நோக்கி நகருகிறார்கள் என்ற ஆதங்க வெளிப்பாடுகளை மட்டுமே சொல்லியிருக்கிறார்களே தவிர ஆவணம் எந்த விதத்தில் போராட்டத்தை நசுக்க போகிறது என்று பேசவில்லை.
 கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தப்பி ஓடி சிங்கள துணைராணுவ குழுவாக உருவெடுத்து "தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்" என்ற கட்சியை ஆரம்பித்தது. அதன் கொடிக்கும் தமிழழீழ தேசிய கொடியில் இருக்கும் புலியையே பாவித்தது. அப்போது விடுதலைப்புலிகளின் தலமைச் செயலகம் அது பற்றி ஆட்சேபனை தெரிவிக்காது கணக்கில் எடுக்காமல் இருந்தது. காரணம் தமழீழ மக்கள் தெளிவான போராட்ட அரசியலில் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விடையம் அப்படியிருக்கையில் தேவையில்லாத விடையங்களிற்கு விளங்கங்கள் சொல்ல தேவையில்லை என்ற படியால்.

அப்படியிருக்கையில் "நாம் தமிழர்" கட்சிக் கொடியில் அதே புலியை பாவித்திருப்பது குறித்து நாங்கள் அலட்டிக் கொள்ள தேவையில்லை.
 விடுதலைப்புலிகளை தடை செய்திருக்கும் பல மேற்குலக நாடுகளில் இன்று தமிழீழ தேசிய கொடியையும் தமிழீழ தேசிய தலைவரையும் அணைத்தபடி வீதிகளில் மக்கள் போராட்டங்கள் செய்கிறார்கள். அதை அந்தந்த அரசாங்கங்கள் தடைசெய்யவில்லை காரணம் தமிழீழ தேசிய கொடியும் தமிழீழம தேசிய தலைவரும் தமிழர்களின் அடையாளம் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டு வருகிறது என்பதோடு தமிழீழம் தமிழர்களின் தாயகம் என்பதையும் ஏற்றுக் கொண்டு வருகிறது. அதை விரும்பியோ விரும்பாமலோ இந்திய வல்லரசும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு காலம் நெருக்கிக் கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழீழம் என்ற சொல்லோ மே..கு வே.பிரபாகரன் என்ற பெயரோ சட்டரீதியாக தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றாக இந்தியாவில் இல்லை என்ற நிலையும் உருவாகியிருக்கிறதென்றே சொல்லலாம்.
 இப்படிப்பட்ட நிலையில் "நாம் தமிழர்" கட்சி ஆவணம் எப்படி தமிழீழ போராட்டத்திற்கு சுருக்குப் போடுகிறது என்று எண்ணுவீர்கள்.
 ஆவணத்தின் 115ம் பக்கத்தில் மாவீரர் நாள் அன்று மாவீரத் தெய்வங்களின் கல்லறை மீது தமிழ் மக்கள் உறுதி எடுக்கும் பாடலின் உறுதி மொழிகளை "நாம் தமிழர்" கட்சி தனது உறுப்பினர்களுக்கான உறுதி மொழியாக அறிவித்திருக்கிறது.
தமிழ் மக்களின் (தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் காவியமாகியிருக்கிறார்கள்) உணர்வுகளிற்கு மதிப்பளிக்காமல் தெய்வமாக மதித்துவரும் மாவீர்களின் கல்லறைமேல் குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட மணித்துளியில் சத்தியம் செய்யும் ஒரு புனிதமான தருணத்தில் பாவிக்கப்படும் உறுதிமொழிக்கு மதிப்பளிக்காமல் அரசியல் உறுதிமொழியாக அதை பரிந்துரை செய்திருப்பது கீழ்த்தரமான செயல் என்பதற்கப்பால் இந்த உறுதி மொழியை தமது அரசியல் ஆவணத்தில் இணைத்து இந்தியாவில் மிகப்பெரிய சூழ்ச்சிச் சுருக்கை "நாம் தமிழர்" கட்சி போராட்டத்திற்கெதிராய் அரங்கேற்றியிருக்கிறதா என்ற அச்சம் இன்று தமிழீழ மக்களிடையில் பரவத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்வதற்கு வைக்கோஅய்யாவையும் நெடுமாறன் அய்யாவையும் காரணம் காட்டி வந்த இந்திய அரசின் கபடத்தனத்தை சட்டரீதியாக வென்று விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான முழுவீச்சான செய்பாடுகளை இந்தியாவில் மேற்கொண்டுவருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் "நாம் தமிழர்" கட்சி, மாவீரத் தெய்வங்கள் மேல் செய்யும் சத்தியபிரமானத்தை தமது கட்சி ஆவணத்தில் இணைத்து தம்மை விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி அதன் ஊடாக விடுதலைப்புலிகளை தொடரந்து இந்தியாவில் தடை செய்து தமிழீழ போராட்த்தை சிதைப்பதற்கான நடவடிக்கையா என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியாது.

மாவீர்கள் மேல் ஒரு புனிதமான தருணத்தில் செய்யப்படும் சத்தியத்தை தமது அரசியல் கட்சி ஆவணத்தில் இணைத்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமில்லாது இதன் பின்னணியில் இந்தியாவில் காலம்பூராகவும் விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கான வேலையை நாசுக்காக "நாம் தமிழர்" கட்சி செய்து வருகிறதா என்ற அதிரச்சிகரமான சந்தேகமும் எழுகிறது.

"நாம் தமிழர்" கட்சி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் "தமிழக அரசியல்" பற்றிய கருத்துக்கள் குறித்து எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் அது பரந்துபட்ட பல விருட்சங்களை கொண்ட அரசியல். அதன் ஆழம் எமக்கு தெரியாது. அதனால் "கட்சி ஆவணத்தை" வைத்துக் கொண்டு அதன் அரசியல் போக்கு குறித்து விவாதிக்க கூடிய அரசியல் அறிவு "தமிழீழ மக்களுக்கு" குறைவென்றே சொல்லலாம். அதனால் அதுபற்றி நாங்கள் எதையும் பேச விரும்பவில்லை.

"நாம் தமிழர்" கட்சி ஆவணமெங்கும் தமிழீழ போராட்ட ஆதரவுக் கருத்துக்களும் தேசிய தலைவருக்கு கொடுத்திருக்கும் போற்றுதலுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்.

ஆனாலும் 107 ம் பக்கத்தில் தேசியத்தலைவருக்கு "பெரும்பாகரன்" என்று "அடைப்புக் குறிக்குள்" விளக்கம் சொல்லப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடையம். காரணம் தேசிய விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்கள் அப்பெயரினூடே சொல்லப்பட வேண்டும். இந்த ஆவணத்தை வாசித்த தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது எதிர்காலத்தில் "மே..கு வே.பெரும்பாகரன்" என்று எழுதி குழப்பகரமான ஆவணங்களை உருவாக்கி வரலாற்று அழிப்பை மேற்கொள்ள கூடிய அபாயம் இருப்பதாகவே தெரிகிறது.பிரபாகரன் என்பதன் "அர்த்தம் இதுதான்" என்று எழுதுவது வேறு பிரபாகரன் என்ற பெருக்கு "அடைப்புக் குறிக்குள்" இன்னொரு பெயர் எழுதுவதன் அரத்தம் வேறு என்பதை "நாம் தமிழர்" கட்சி ஆவண உருவாக்கலில் ஈடுபட்டவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ போராட்டமும், விடுதலைப்புலிகள் அமைப்பும், தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்களின் மானம்,சொத்து,உயிர். அதனால் தான் இத்தனை தியாகங்களை செய்து வருகிறார்கள். தடைசெய்யப்பட்ட தேசங்கள் எங்கும் தமிழீழ வரைபடத்தையும், தமிழீழ தேசிய கொடியையும், தமிழீழ தேசியத் தலைவர் படத்தையும் தம்மோடு அணைத்தபடி போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொலிஸ் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்க கட்டுப்பாடுகளுக்குள்ளும் இதை செய்து வருகிறார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பை சார்ந்தது போன்றதான கட்சிகளை உருவாக்காமல் அது மக்களின் உணர்வாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு தமிழீழ தேசியம் அங்கிகரிக்கப்படும் என்ற நம்பிக்கையும் அதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன.

இப்படிப்பட்ட தருணத்தில் இந்தியாவிலும் அதை செய்வதற்கான வேலைகளை பல உணர்வாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் "நாம் தமிழர்" கட்சி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உறுதிமொழி இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்வதற்கான உத்தியாகவும் இருக்கலாம் என்ற அச்சம் எழுகிறது.

தமிழர்கள் எங்கெங்கு இருந்தாலும் மாவீரத்தெய்வங்களின் மேல் புனிதமான அந்த தருணத்தில் ஒட்டுமொத்த இனமாக உறுதியெடுக்கும் வாசகத்தை அரசியல் நோக்கத்திற்காக பாவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழனத்தின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவது என்பற்கப்பால் இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்து தமிழீழ விடுதலைப்போராட்த்திற்கு தடை ஏற்படுத்துவதுதான் காரணமென்றால் "நாம் தமிழர்" கட்சியிடம் மன்றாடிக் கேட்கிறோம் தயவு செய்து அதை செய்யாதீர்கள்.

================================================================
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போல் தமிழ் நாட்டை சேர்ந்த சிலர் "நாம் தமிழர்'" கட்சிக்கு எதிராக பேசி ஈழத்தமிழர் போராட்டத்திற்கு தாங்கள் எப்பொழும் ஆதரவு போன்றதான முகமூடி  அணிந்து கொண்டு கோமாளியாட்டம் போடுகிறார்கள்.
விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை பொறுத்தவரை, "தமிழீழம் தான் எங்கள் இலக்கு விடுதலைப்புலிகள்தான் எங்கள் அமைப்பு" என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினையை பேசி நாற்காலி அரசியல் செய்த,செய்யும் பல தமிழ்நாட்டு வல்லூறுகளை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைக்கோ அய்யா போன்றவர்களும் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் எடுத்த எடுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சில காழ்ப்புணர்ச்சிக் காரர்களின் கூச்சல்களுக்கமைவாக நாங்களும் சீமானை எதிர்ப்பது தேவையற்ற செயல் என்பதற்கப்பால் முட்டாள் தனம் என்று கூட சொல்லலாம்.

"நாம் தமிழர்" கட்சி உள்நோக்கோடு செயற்படுகிறாதா?? விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடை செய்வதற்கான உத்தியா இது??" என்ற எமது அச்சத்தை நாங்கள் முன் வைக்கலாம். அவர்களது "நியாயமான" பதில்களை பொறுத்து தமிழர்கள் நாங்கள் "சேர்ந்து நடப்பதா" அல்லது "விலகி நடப்பதா" என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

எதை நிராகரிப்பதற்கும் எங்களிடம் தீர்க்கமான காரணங்கள் இருக்க வேண்டும். (விடுதலைப்புலிகள் எழுந்தமானமாகவும், எடுத்த எடுப்பிலும், உறுதியான காரணங்கள் எதுவுமின்றியும்.. எவரையும், எந்த கட்சியையும் நிராகரித்தது கிடையாது. தமிழர்கள் எப்பொழும் தெளிவாக இருக்க வேண்டும்)


ஆதி

24-06-2012

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP