Powered by Blogger.

Friday, November 16, 2012

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீது இந்தியா செய்யப்போகும் அடுத்த தாக்குதல் # சம்பவங்களை ஆராய்தல்

பிராந்தியத்தில் இந்தியாவின் நயவஞ்சக போக்கு குறித்த முதல் பதிவை இந்த இணைப்பில் பார்க்கலாம் சொடுக்குக

பிராந்திய அரசியலை இந்தியா ------->சீனா ----> அமெரிக்கா என்ற மூன்று அரசுகளின் நிலைப்பாட்டை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.


குறிப்பு : மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் நத்திதா ஹக்சர் எழுதிய "வஞ்சக உளவாளி" _ பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம் என்ற நூலை படித்துப் பாருங்கள் இந்தியாவின் கோரமுகம் தெரியும்.


பிராந்தியத்தில் தோற்றுப்போன இந்தியா

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளும் இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசாங்கமும் இந்தியாவை பிராந்திய அரசியல் செல்வாக்கில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கின்றன என்றே சொல்லலாம்.

தனது நாட்டு மக்களுக்கு தன்னை வல்லரசாக சுயபிரகடனம் செய்திருக்கும் இந்தியா தனது அயல்நாடுகள் எதனுடனும் உளப்பூர்வமான நட்பு நாடாக கொண்டிருக்கவில்லை என்பதற்கு அப்பால் இந்தியாவின் அரசியல் அழுத்தங்களுக்கு அவை ஒரு போதும் அடிபணிந்ததோ பயப்பிட்டதோ கிடையாது.

இந்திய அரசியல்வாதிகள் பணம்புரட்டுவதில் மட்டுமே அக்கறை செலுத்திவருவது போல் இந்திய இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் இந்திய அரசியல்வாதிகளின் கூலி ஆட்களாகவே பெரும்பாலும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்பிற்கேற்ப வழக்குகளும் விசாரணைகளும் குழப்பிக்கொண்டே இருக்கின்றன.

வல்லரசாக இருக்கும் அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் என்பது வெறுமனே ஒரு தலைவனையும் சில முடிவுகளை எடுக்க கூடிய அதிகார நபரையும் தேர்ந்தெடுப்பதுதான். மற்றப்படி அவர்களின் பொருளாதார கூட்டி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் ஒரே மாதிரியான கொள்கைளின் கீழ்தான் செயற்படும்.

விடையத்திற்கு வருவோம்.

ராஜதந்திர ரீதியில் சிறிலங்காவே இந்தியாவை மிரட்டும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதாவது பிராந்தியத்தில் ஒரு அரசிற்கு எதிராக முடிவுகளை எடுக்க கூடியதாகவோ அல்லது ராஜதந்திர ரீதியில் பணிய வைக்க கூடிய அளவிற்கோ இந்தியாவின் பலம் இல்லை என்றே சொல்லலாம்.

தெற்காசிய நாடுகளில் சீனா இன்று தனது நேரடி பிரசன்னத்தை அதிகரித்திருக்கிறது. இதனால் பதறிப்போயிருக்கும் இந்தியா பிராந்தியத்தில் அரசுகளுக்கு சார்பாகவே தானும் நடந்துகொள்ளும் முறமையை கடைப்பிடிக்கிறது. மனித உரிமைகளையோ அல்லது அநியாயங்களையோ கண்டுகொள்ளாமல், பிராந்தியத்தில் அரசுகளுக்கு சீனாவிடம் இருந்து கிடைக்கும் உதவிகளை விட தான் உதவிகளை அதிகம் வழங்கி தனது இருப்பை உறுதிப்படுத்த துடிக்கிறது இந்தியா.

இந்தியாவின் இந்த கேவல நிலையை புரிந்து கொண்ட அரசுகள் இந்தியாவை மிரட்டி தமக்கு சாதகமாக பணிய வைத்துள்ளன.

பர்மாவிலோ, பாகிஸ்தானிலோ, சிறிலங்காவிலோ, சீனாவிலோ, பங்களாதேஸிலோ இந்தியாவின் பேச்சு எடுபடாது என்ற நிலை முடிவாகிவிட்டது.

சீனா யார் மீதும் போர் தொடுக்காது

சீனாவை பொறுத்தவரை அதன் எல்லாச் செயற்பாடுகளுமே நீண்டகால திட்டத்திலானது. உலக அரசியலை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்றால் முதலில் உலக பொருளாதாரத்தை கையிற்குள் கொண்டுவரவேண்டும். அதற்கு முதல் பிராந்தியத்தில் மிக வலுவான சக்தியா உருவெடுக்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் இன்று சீனா இந்தியாவிற்குள் தனது பொருளாதாரத்தை விரிபுபடித்தியிருக்கிறது. இந்தியா என்பது மிகப்பெரிய சந்தை என்பதால் இந்திய சந்தையை இழக்க சீனா முயற்சிக்காது. தனது ராணுவ கட்டுமானங்களை காட்டி இந்தியாவை பயமுறுத்தினாலும் சீனா இந்தியாமீது போர் தொடக்க வேண்டிய தேவைகள் ஏதும் இப்போதைக்கு இல்லை.

தவிர சிறிலங்கா நிலைப்பாட்டிலும் சீனாவின் கொள்கை வெளிப்படையானது. சிறிலங்காவை தனது நட்பு நாடு என்றும் அதற்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டால் தான் காப்பாற்றும் என்றும்சீனா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

அது போக சிறிலங்காவின் அரசியல் சமரசங்கள் குறித்து எந்த கவலையும் இன்றி சீனா தனது வணிகத்தையும் பொருளாதார கட்டுமானங்களையும் வேகமாக ஏற்படுத்திவருகிறது.

சீனாவின் பெரும் கட்டுமானங்கள் தென்னிலங்கையை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது அரசியல் சூழ்நிலைகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டாலும் தனது பொருளாதார கட்டுமானங்களுக்கோ அல்லது தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கோ பாதிப்பு வராமல் இருக்க தென்னிலங்கை பொருத்தமானது என்று சீனா நினைப்பதாகவே தெரிகிறது.

அதே போல் மீண்டும் ஒருதடவை போர்ச்சூழல் ஏற்பட்டாலும் சீனா நேரடியாக தனது படைகளை இந்தியா போல் அனுப்பப்போவதில்லை என்பதும் வெளிப்படை.

தவிர இன்று தென்னிலங்கை பொருளாதாரத்தின் ஏறத்தாள பெரும்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.

ஆக இப்பொழுது இந்தியா எதை செய்ய வேண்டும்.. எது சரி எது தவறு... எது தனக்கு சாதகம்.. எது பாதகம் என்று ஒரு உறுதியான முடிவை எடுத்து தனது கொள்கைகளை மாற்றியே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படிருக்கிறது.


இந்தியா செய்யப்போகும் அடுத்த தாக்குதல் என்ன

தெற்காசிய பிராந்தியத்தில் விடுதலை இயக்கங்கள் மீது இந்தியா செய்த அத்தனை அட்டூழியங்களும் ஒரே மாதிரியானவை. அந்தந்த மக்களின் மனநிலைகள் களநிலமைகளை கருத்தில் கொள்ளாது இந்தியா ஒரே மாதிரியான அணுகுமுறைகளையும் தாக்குதலையும் தான் மேற்கொண்டிருக்கிறது.

கடந்தகால வரலாறுகளை புரட்டிப்பாருங்கள் புரியும்.

இந்தியாவின் நிலைப்பாட்டை ஆராய்வது கொஞ்சம் சிக்கலான விடையம். அதாவது மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் சண்டையை தொடங்கியிருக்கவில்லை என்பது அதன் பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். மற்றையது வன்னிக்குள் விடுதலைப்புலிகள் பின்வாங்கிய விதம்.

இந்த இரண்டிற்குள்ளும் ஆயிரமாயிரம் சர்வதேச சதிகள் இருக்கின்றன என்பதற்கப்பால் இந்தியாவின் நரித்தனமும் இருக்கிறது.

ஓயாத அலைகள் 3 மற்றும் தீச்சுவாலை எதிர்தாக்குதல் சமர்களில் பெரும் வெற்றியையும் பெரும் உற்சாகத்துடனும் இருந்த புலிகளின் யாழ்ப்பாணம் கைப்பற்றுவதற்கான தாக்குதலை நிறுத்தியது இந்தியா தான் என்பது அப்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்ட விடையம்.

இப்படிப்பட்ட தாக்குதல் திறன் அதிகரித்திருந்த காலத்தில் ஆயுதப்போராட்டத்திற்கும் அப்பால் எமது விடுதலை இலட்சியத்தை சமாதானமாக பெற்றுக் கொள்வதாயின் அதற்கும் நாங்கள் சம்மதம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லவே விடுதலைப்புலிகள் சமாதான மேடைக்கு போயினர்.

அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும்.

இப்படி இருக்க வன்னிப்போரில் விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு எப்படி இந்தியா காரணமாயிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?? விடுதலைப்புலிகள் போரில் பின்வாங்கிக் கொண்டிருந்தாலும் பாரிய ஊடுருல் தாக்குதல்களை செய்யாமல் பேச்சுவார்த்தை குறித்தும் அத்துமீறல்கள் குறித்தும் பேசினர். மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடந்துகொண்டிருப்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகள் தமது கைப்பொம்மைகளாக இருக்காமல் தனிநாட்டு கோரிக்கையில் மிக உறுதியாக இருப்பது இந்தியாவிற்கு பெரும் ஆத்திரத்தை ஊட்டியிருக்கிறது. அதனால் எப்படியாவது விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நேரடியாகவே தனது படைகளை வன்னிக் களங்களுக்கு அனுப்பியது இந்தியா.

ஒரு கட்டத்தில் அமெரிக்கா போரை நிறுத்துவதற்கு முனைப்புக் காட்டியும் அதை தட்டிக்கழித்தது இந்தியா. சீனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பிராந்தியத்தில் இந்தியா சண்டியர் போல் இருப்பது அமெரிக்காவிற்கு சாதகம். இதனால் இந்தியாவிடம் இதை விட்டுவிட்டது.

இருந்தாலும் விடுதலைப்புலிகளை அழித்தவுடன் தமிழ் மக்களுக்கு தன்னால் நிதந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்று இந்தியா சொன்னதை அமெரிக்கா நம்பியிருக்கலாம். ஆனால் இன்று நிலமை தலைகீழாகிவிட்டது.

இதனால் மீண்டும் சிறிலங்காவில் குழப்பங்களை ஏற்படுத்தி அதனூடாக சிறிலங்காவை தனது கட்டுப்பாட்டிற்குளன் கொண்டுவருவதற்கு தீவிரமாக இறங்கியிருக்கிறது இந்தியா.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் "தமிழீழம்" என்ற இலட்சியத்தை தவிர எந்தவொரு தீர்விற்கும் அவர்கள் இறங்கிப்போவதற்கு தயாராக இல்லை. அதனால்தான் ஆயுதங்களை மெளனித்து இது வரையில் தமது மெளனத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை முற்று முழுதாக அழிவித்துவிட்டதாக தனது நாடாளுமன்றில் அறிவித்து வெற்றிவிழாக்களை இன்னமும் கொண்டாடிவருகின்றன. உண்மையில் விடுதலைப்புலிகளின் தலமை முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டதா அல்லது ஏதாவது நீண்டகால திட்டத்துடன் மெனமாகி இருக்கிறார்களா என்ற குழுப்பத்தில்தான் இதுவரையில் தடை செய்து வைத்திருக்கிறது.

தலைவர் வே.பிரபாகரனின் இரத்த மாதிரி இந்திய அரசிடம் இருந்தும் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்படிருக்கும் தலைவர் வே.பிரபாகரன் இந்துவிட்டார் அதனால் அவரை வழக்கில் இருந்து நீக்குகி றாம் என்று அறிவிப்பதற்கு 1 வருடத்திற்கு மேல் எடுத்தது இந்தியா.  இப்படிப்பட்ட குழப்பகர நிலமைகள் தொடர்ந்த வண்ணம் இருக்க இனி இந்தியா என்ன செய்யப்போகிறது என்று அனைவருக்குள்ளும் தளம்பல் நிலை ஏற்பட்டிருக்கிறது.



விடுதலைப்புலிகள் மீண்டும் வந்தாலும் அவர்கள் தமிழீழ கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள் என்பதுதான் உறுதி. சிறிலங்காவை கட்டுப்பாட்டில் வைக்க இது இந்தியாவிற்கு சரியானதல்ல இதனால் றோவின் கைப்பொம்மைகளாகிய "ரெலோ" அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சில அமைப்பை சேர்ந்தவர்களை உள்ளடக்கிய சிறு குழுவை உருவாக்கி சிறிலங்காவில்  இராணுவத்தின் மீது "சொறி தேய்ப்பதற்கு" அனுப்புவதற்கான தீவிர முயற்சிகளில் இந்தியா இறங்கியிருப்பதாக தெரிகிறது.

இந்த றோவின் எடுபிடிகள் இப்படியான சிறுபிள்ளைத்தனமாக வேலைகளில் ஈடுபடும்பொழுது போர்க்குற்ற அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவும் இந்தியாவும் தப்பித்துக் கொள்வதோடு சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தையும் ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்லாது சிறிலங்காவை தனது கைக்குள் கொணடுவந்த மாதிரியும் இருக்கும் தமிழீழ போராட்டமும்  நசுக்கப்பட்டுவிடும் என்பது இந்தியாவின் தந்திரமாக தெரிகிறது.


இதற்கு ஏற்றதாற் போலதான் இந்திய மற்றும் சிறிலங்கா எழுத்தாளர்களையும் இலக்கியம் சம்மந்தப்பட்டவர்களையும் உள்ளடக்கிய குழு தீரிவமாக புலிகள் மீது அரசியல்பார்வை மீது அவதூறுகளையும் சினிமாத்தனமான போர் விமர்கனங்களையும் எழுதி வந்தனர் வருகின்றனர்.

( சிங்கள ஒட்டுக்குழுக்களின் புலம்பெயர் செயற்பாட்டாளராகவும் றோவின் ஊதுகுழுலாகளும் செயற்படும் ஷோபாசக்தி, புலிகளின் செயலகத்தில் சம்மபளத்திற்கு வேலை செய்து இன்று அதிர்வு ஊடகம் நடாத்தும் கண்ணன், கனடாவை சேர்ந்த சுமதி என்ற கறுப்பி நவா, இன்று வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவில் வசிக்கும் ஹரி, றோவின் ஏஜன்டுகளான தமிழகத்தை சேர்ந்த கவின்மலர், ஆதவன்தீட்சண்யா, லீனாமணிமேகலை...  இன்னும் பலர் இருக்கிறார்கள்).

குறிப்பாக இரண்டுபக்கமும் டபுள் கேம் விளையாடும் நபர்களும் அதிகம்.

குறிப்பு : மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் நத்திதா ஹக்சர் எழுதிய "வஞ்சக உளவாளி" _ பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம் என்ற நூலை படித்துப் பாருங்கள் இந்தியாவின் கோரமுகம் தெரியும்.

--------------------------------------------------------------------------------

இன்னொரு முக்கியமான விடையம்... விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா அமெரிக்காவிற்கு சில வாக்குறுதிகை கொடுத்து தோற்றுப்போயிருக்கிறது என்று வைத்துக் கொண்டால் இனிவரும் காலங்களில் அமெரிக்காவின் ராஜதந்திர அழுத்தங்கள் அதிகரிக்கும்.

ஓபாமாவின் ஆட்சிக்காலத்தில் இதுவரையில் அமெரிக்கா நேரடியாக தனது படைகளை இறக்கி போர் செய்திருக்கவில்லை. (ஓசாமைவை போட்டது சின்ன அசைன்ட்மன்ட் மட்டுமே). இனியும் நேரடியாக இறங்கி போர் செய்ய மாட்டார் என்ற கொள்கையில்தான் அமெரிக்கர்கள் அவருக்கு வாக்களித்ததாக சொல்கிறார்கள். எது எப்படி இருப்பினும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க ராஜதந்திர அழுத்தங்கள் அதிகரிக்க போகிறது என்பது உண்மையாகவே தெரிகிறது.

இதுபற்றி பிறதொரு பதிவில் பார்ப்போம்.



ஆதி
17-11-12


































































































































































































































































































































































































































































































































































































No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP