Powered by Blogger.

Monday, November 12, 2012

இந்தியா ஒரு ஜனநாயக விரோத நாடு..தவிர செல்வாக்கை இழந்து வாய்வீரம் பேசும் ஒரு பயந்ததாங்கொள்ளி தேசம்


பர்மிய போராளிகளை இந்திய வஞ்சக அரசு ஏமாற்றியவிதமும் பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்கள் செய்த அட்டூளியங்களுக்கு எதிராக 2007 ம் ஆண்டு அய்.நாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக அதாவது இராணுவ கொடுங்கோலர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து அவர்களை காப்பாற்றியது. அதற்கு அவர்கள் சொல்லிய காரணமும்... தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள இராணுவ அட்டூழியங்களை இந்தியா காப்பாற்றுவதற்கு சொல்லும் காரணங்களும் ஒன்றுதான்.

சமகால நிகழ்வுகளும் கடந்தகால வரலாறுகளும் தெரியாத மடையர்கள் இந்தியாவை வல்லரசாக கனவு காணுகிறார்கள்.

இந்தியா என்பது காலாகாலமாக தெற்காசிய பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான சக்தியாக தன்னை தயார்ப்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்தியா என்பது ஒரு பயந்தாங்கொள்ளி நாடு என்பதற்கப்பால் நயவஞ்சகமான ஒரு தேசம்.

இந்தியாவை உடைத்து சிதறடிப்பதற்கு சீனாவோடு தெற்காசிய நாடுகள் உறவுகளை வலுப்படுத்துகின்றன என்றே தோணுகிறது.

இன்று இந்தியா தெற்காசிய பிராந்திய அரசியலில் நேரடியாக செல்வாக்கு செலுத்தக்கூடியதானதாகவோ அல்லது கட்டுப்படுத்தக் கூடியதானதாவோ இல்லாத நிலையை அடைந்திருக்கிறது.

சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவிடும் என்ற அச்சத்தில் சீனாவைவிட அதிகளவிலான உதவிகளை செய்ய நினைக்கிறது. அதாவது சின்னப்புள்ளத்தனமாக.

இந்தியா ஒரு அடிமைதேசம் என்பதற்கு கடந்த 10வருட நிகழ்வுகளே போதுமானது.

இந்திய சனங்கள் அடிமட்ட முட்டாள்களாக "ஹிந்தியா" என்று உணர்ச்சிகர கோசமிடுவதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது.

இந்தியா உண்மையிலேயே பிராந்திய செல்வாக்கு மிக்க நாடென்றால் சீனா ஆதரக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இந்தியாவால் ஒரு பிரேரணையிலாவது கையெழுத்து இடவோ அல்லது ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கவோ முடியுமா???

சீனாவிற்கு பயத்தில் இந்தியா வாய்திறக்கப்பயப்பிடுகிறது.

தனது நாட்டு எல்லைக்குள் மட்டும் வீரம் பேசும் இந்தியாவை அந்த நாட்டு மக்கள் பெரிதும் நம்புகிறார்கள்..

ஆதி
13-11-12

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP