Powered by Blogger.

Sunday, June 24, 2012

நாம்தமிழர் கட்சி ஆவணமும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு போடப்பட்டிருக்கும் சுருக்கும்


முகநூல் மற்றும் இணைய தளங்களில் "நாம் தமிழர்" கட்சி ஆவணம் பற்றிய பல விமர்சனங்களும் ஆய்வுகளும் கருத்துரையாடல்களும் விதண்டாவாத வியாக்கியானங்களும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.
 தமிழீழ போராட்ட வலிகளினது ஆழம் தெரியாமல் ஈழ ஆதரவு அல்லது நடுநிலை என்ற பெயரில் அல்பத்தனமான விமர்சனங்களை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் "நாம் தமிழர்" கட்சி குறித்தும் தமிழீழ மக்கள் ஏன் அவதானமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தை நியாயமான முறையில் வைக்காமல் வெறுமனே தமிழீழ கொடியில் இருக்கும் புலியை தமது கொடியில் பாவித்திருக்கிறார்கள், பெரியாரை குறை சொல்லி இருக்கிறார்கள், தமிழீழ கருத்துகளை தமது ஆவணத்தில் உள்ளடக்கி தமிழ் நாட்டு அதிகார அரசியல் நோக்கி நகருகிறார்கள் என்ற ஆதங்க வெளிப்பாடுகளை மட்டுமே சொல்லியிருக்கிறார்களே தவிர ஆவணம் எந்த விதத்தில் போராட்டத்தை நசுக்க போகிறது என்று பேசவில்லை.
 கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தப்பி ஓடி சிங்கள துணைராணுவ குழுவாக உருவெடுத்து "தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்" என்ற கட்சியை ஆரம்பித்தது. அதன் கொடிக்கும் தமிழழீழ தேசிய கொடியில் இருக்கும் புலியையே பாவித்தது. அப்போது விடுதலைப்புலிகளின் தலமைச் செயலகம் அது பற்றி ஆட்சேபனை தெரிவிக்காது கணக்கில் எடுக்காமல் இருந்தது. காரணம் தமழீழ மக்கள் தெளிவான போராட்ட அரசியலில் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விடையம் அப்படியிருக்கையில் தேவையில்லாத விடையங்களிற்கு விளங்கங்கள் சொல்ல தேவையில்லை என்ற படியால்.

அப்படியிருக்கையில் "நாம் தமிழர்" கட்சிக் கொடியில் அதே புலியை பாவித்திருப்பது குறித்து நாங்கள் அலட்டிக் கொள்ள தேவையில்லை.
 விடுதலைப்புலிகளை தடை செய்திருக்கும் பல மேற்குலக நாடுகளில் இன்று தமிழீழ தேசிய கொடியையும் தமிழீழ தேசிய தலைவரையும் அணைத்தபடி வீதிகளில் மக்கள் போராட்டங்கள் செய்கிறார்கள். அதை அந்தந்த அரசாங்கங்கள் தடைசெய்யவில்லை காரணம் தமிழீழ தேசிய கொடியும் தமிழீழம தேசிய தலைவரும் தமிழர்களின் அடையாளம் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டு வருகிறது என்பதோடு தமிழீழம் தமிழர்களின் தாயகம் என்பதையும் ஏற்றுக் கொண்டு வருகிறது. அதை விரும்பியோ விரும்பாமலோ இந்திய வல்லரசும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு காலம் நெருக்கிக் கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழீழம் என்ற சொல்லோ மே..கு வே.பிரபாகரன் என்ற பெயரோ சட்டரீதியாக தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றாக இந்தியாவில் இல்லை என்ற நிலையும் உருவாகியிருக்கிறதென்றே சொல்லலாம்.
 இப்படிப்பட்ட நிலையில் "நாம் தமிழர்" கட்சி ஆவணம் எப்படி தமிழீழ போராட்டத்திற்கு சுருக்குப் போடுகிறது என்று எண்ணுவீர்கள்.
 ஆவணத்தின் 115ம் பக்கத்தில் மாவீரர் நாள் அன்று மாவீரத் தெய்வங்களின் கல்லறை மீது தமிழ் மக்கள் உறுதி எடுக்கும் பாடலின் உறுதி மொழிகளை "நாம் தமிழர்" கட்சி தனது உறுப்பினர்களுக்கான உறுதி மொழியாக அறிவித்திருக்கிறது.
தமிழ் மக்களின் (தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் காவியமாகியிருக்கிறார்கள்) உணர்வுகளிற்கு மதிப்பளிக்காமல் தெய்வமாக மதித்துவரும் மாவீர்களின் கல்லறைமேல் குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட மணித்துளியில் சத்தியம் செய்யும் ஒரு புனிதமான தருணத்தில் பாவிக்கப்படும் உறுதிமொழிக்கு மதிப்பளிக்காமல் அரசியல் உறுதிமொழியாக அதை பரிந்துரை செய்திருப்பது கீழ்த்தரமான செயல் என்பதற்கப்பால் இந்த உறுதி மொழியை தமது அரசியல் ஆவணத்தில் இணைத்து இந்தியாவில் மிகப்பெரிய சூழ்ச்சிச் சுருக்கை "நாம் தமிழர்" கட்சி போராட்டத்திற்கெதிராய் அரங்கேற்றியிருக்கிறதா என்ற அச்சம் இன்று தமிழீழ மக்களிடையில் பரவத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்வதற்கு வைக்கோஅய்யாவையும் நெடுமாறன் அய்யாவையும் காரணம் காட்டி வந்த இந்திய அரசின் கபடத்தனத்தை சட்டரீதியாக வென்று விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான முழுவீச்சான செய்பாடுகளை இந்தியாவில் மேற்கொண்டுவருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் "நாம் தமிழர்" கட்சி, மாவீரத் தெய்வங்கள் மேல் செய்யும் சத்தியபிரமானத்தை தமது கட்சி ஆவணத்தில் இணைத்து தம்மை விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி அதன் ஊடாக விடுதலைப்புலிகளை தொடரந்து இந்தியாவில் தடை செய்து தமிழீழ போராட்த்தை சிதைப்பதற்கான நடவடிக்கையா என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியாது.

மாவீர்கள் மேல் ஒரு புனிதமான தருணத்தில் செய்யப்படும் சத்தியத்தை தமது அரசியல் கட்சி ஆவணத்தில் இணைத்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமில்லாது இதன் பின்னணியில் இந்தியாவில் காலம்பூராகவும் விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கான வேலையை நாசுக்காக "நாம் தமிழர்" கட்சி செய்து வருகிறதா என்ற அதிரச்சிகரமான சந்தேகமும் எழுகிறது.

"நாம் தமிழர்" கட்சி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் "தமிழக அரசியல்" பற்றிய கருத்துக்கள் குறித்து எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் அது பரந்துபட்ட பல விருட்சங்களை கொண்ட அரசியல். அதன் ஆழம் எமக்கு தெரியாது. அதனால் "கட்சி ஆவணத்தை" வைத்துக் கொண்டு அதன் அரசியல் போக்கு குறித்து விவாதிக்க கூடிய அரசியல் அறிவு "தமிழீழ மக்களுக்கு" குறைவென்றே சொல்லலாம். அதனால் அதுபற்றி நாங்கள் எதையும் பேச விரும்பவில்லை.

"நாம் தமிழர்" கட்சி ஆவணமெங்கும் தமிழீழ போராட்ட ஆதரவுக் கருத்துக்களும் தேசிய தலைவருக்கு கொடுத்திருக்கும் போற்றுதலுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்.

ஆனாலும் 107 ம் பக்கத்தில் தேசியத்தலைவருக்கு "பெரும்பாகரன்" என்று "அடைப்புக் குறிக்குள்" விளக்கம் சொல்லப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடையம். காரணம் தேசிய விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்கள் அப்பெயரினூடே சொல்லப்பட வேண்டும். இந்த ஆவணத்தை வாசித்த தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது எதிர்காலத்தில் "மே..கு வே.பெரும்பாகரன்" என்று எழுதி குழப்பகரமான ஆவணங்களை உருவாக்கி வரலாற்று அழிப்பை மேற்கொள்ள கூடிய அபாயம் இருப்பதாகவே தெரிகிறது.பிரபாகரன் என்பதன் "அர்த்தம் இதுதான்" என்று எழுதுவது வேறு பிரபாகரன் என்ற பெருக்கு "அடைப்புக் குறிக்குள்" இன்னொரு பெயர் எழுதுவதன் அரத்தம் வேறு என்பதை "நாம் தமிழர்" கட்சி ஆவண உருவாக்கலில் ஈடுபட்டவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ போராட்டமும், விடுதலைப்புலிகள் அமைப்பும், தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்களின் மானம்,சொத்து,உயிர். அதனால் தான் இத்தனை தியாகங்களை செய்து வருகிறார்கள். தடைசெய்யப்பட்ட தேசங்கள் எங்கும் தமிழீழ வரைபடத்தையும், தமிழீழ தேசிய கொடியையும், தமிழீழ தேசியத் தலைவர் படத்தையும் தம்மோடு அணைத்தபடி போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொலிஸ் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்க கட்டுப்பாடுகளுக்குள்ளும் இதை செய்து வருகிறார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பை சார்ந்தது போன்றதான கட்சிகளை உருவாக்காமல் அது மக்களின் உணர்வாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு தமிழீழ தேசியம் அங்கிகரிக்கப்படும் என்ற நம்பிக்கையும் அதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன.

இப்படிப்பட்ட தருணத்தில் இந்தியாவிலும் அதை செய்வதற்கான வேலைகளை பல உணர்வாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் "நாம் தமிழர்" கட்சி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உறுதிமொழி இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்வதற்கான உத்தியாகவும் இருக்கலாம் என்ற அச்சம் எழுகிறது.

தமிழர்கள் எங்கெங்கு இருந்தாலும் மாவீரத்தெய்வங்களின் மேல் புனிதமான அந்த தருணத்தில் ஒட்டுமொத்த இனமாக உறுதியெடுக்கும் வாசகத்தை அரசியல் நோக்கத்திற்காக பாவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழனத்தின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவது என்பற்கப்பால் இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்து தமிழீழ விடுதலைப்போராட்த்திற்கு தடை ஏற்படுத்துவதுதான் காரணமென்றால் "நாம் தமிழர்" கட்சியிடம் மன்றாடிக் கேட்கிறோம் தயவு செய்து அதை செய்யாதீர்கள்.

================================================================
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போல் தமிழ் நாட்டை சேர்ந்த சிலர் "நாம் தமிழர்'" கட்சிக்கு எதிராக பேசி ஈழத்தமிழர் போராட்டத்திற்கு தாங்கள் எப்பொழும் ஆதரவு போன்றதான முகமூடி  அணிந்து கொண்டு கோமாளியாட்டம் போடுகிறார்கள்.
விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை பொறுத்தவரை, "தமிழீழம் தான் எங்கள் இலக்கு விடுதலைப்புலிகள்தான் எங்கள் அமைப்பு" என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினையை பேசி நாற்காலி அரசியல் செய்த,செய்யும் பல தமிழ்நாட்டு வல்லூறுகளை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைக்கோ அய்யா போன்றவர்களும் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் எடுத்த எடுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சில காழ்ப்புணர்ச்சிக் காரர்களின் கூச்சல்களுக்கமைவாக நாங்களும் சீமானை எதிர்ப்பது தேவையற்ற செயல் என்பதற்கப்பால் முட்டாள் தனம் என்று கூட சொல்லலாம்.

"நாம் தமிழர்" கட்சி உள்நோக்கோடு செயற்படுகிறாதா?? விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடை செய்வதற்கான உத்தியா இது??" என்ற எமது அச்சத்தை நாங்கள் முன் வைக்கலாம். அவர்களது "நியாயமான" பதில்களை பொறுத்து தமிழர்கள் நாங்கள் "சேர்ந்து நடப்பதா" அல்லது "விலகி நடப்பதா" என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

எதை நிராகரிப்பதற்கும் எங்களிடம் தீர்க்கமான காரணங்கள் இருக்க வேண்டும். (விடுதலைப்புலிகள் எழுந்தமானமாகவும், எடுத்த எடுப்பிலும், உறுதியான காரணங்கள் எதுவுமின்றியும்.. எவரையும், எந்த கட்சியையும் நிராகரித்தது கிடையாது. தமிழர்கள் எப்பொழும் தெளிவாக இருக்க வேண்டும்)


ஆதி

24-06-2012

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP