Powered by Blogger.

Friday, June 1, 2012

தம்பி உங்களுக்கு என்ன தெரியும்... புலிய பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்..

தம்பி உங்களுக்கு என்ன தெரியும்... புலிய பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்.. நீங்க எல்லாம் வரி உடுப்போட றைபிள தூக்கி கொண்டு ரோட்டால புலி நடந்து போனதில இருந்து தான் நீங்க புலிய பாத்திருக்கிறியள். புள் கை சேட்ட முழங்கைக்கு மேல மடிச்சு விட்டிற்று சாரம் கட்டிக் கொண்டு திரிஞ்ச புலியில இருந்து ரோட்டில பிலைட்ட ஓட்டி மேல எழுப்பின புலிவரைக்கும் எனக்கு தெரியும் தம்பி என்று ஒரு ஜயா சொன்னார்.

"இயக்க பொடியன் ஒருத்தனை காப்பாத்திறத்துக்காகவே கன்னி பொம்பிள பொட்டு வச்சு தாலி கட்டின வரலாறெல்லாம் இருக்குது. சமைச்சு கோடிக்க சாப்பாடு வச்சு தமிழ் சனம் வளத்தெடுத்தது தான் புலிப்படை. யாரெண்டே தெரியா 2 புலிப்பெடியள இந்தியன் ஆமிட்ட இருந்து காப்பாத்த சட்டைய களட்டிற்று முத்தத்தில கிடந்து கத்தியிருக்கு என்ர மனிசி. அவங்கள் சாப்பிட்டிற்று குடுத்த கோப்பைய பாத்து எத்தின பெடியள் சாப்பிட்டிருப்பாங்கள்.. சாப்பாடு காணுமா என்டு பாத்து சமைச்சு குடுத்தது எங்கட சனம். இந்தியன் ஆமி நல்லவனா இருந்திருந்தா சனம் அண்டைக்கு புலிகள காட்டிக் குடுத்திருக்கும்.  பெரிய நாட்டோட சண்ட பிடிக்கிறாங்கள் எண்டு தெரிஞ்சும் புலிகள பொத்தி பொத்தி வளத்தது தான் தமிழ் சனம். பெடியள்ள அவளா நம்பிக்கை.

குடுத்த ஆயுதமெல்லாத்தையும் பறிச்ச பிறகும் இந்தியன் ஆமியோட அடிபர்ற தைரியம் வந்ததும் வெளிநாடுகளில இருந்து ஆயுதம் வாங்கிற அளவுக்கும் பெடியள் அப்பவே வளந்திட்டாங்கள் எண்டு சனம் பெருமைப்பட்டிச்சு. இப்ப பெரிய வியாக்கியானங்கள் பேசுற ஆக்களுக்கு தலைவற்ற அந்த வயசில இவ்வளவு துணிவு வந்திருக்குமா? எவ்வளா பெடியள கட்டியவுக்கணும்.. அவளாபேற்ற பிரச்சினையும் பாக்கணும்.. சண்டை பிடிக்கணும்.. எதிர்காலத்தில எப்பிடி நடக்கணும் எண்டு திட்டம் போடணும்.. எத்தின பிரச்சினை அவங்களுக்கு.. இப்ப நிறைய கதைக்கிற எவனாவது அந்த வயசில இவளாத்தையும் செய்திருப்பானா?? ஒரு மயிருக்கும் ஏலாது தம்பி. எத்தின பேர் இருந்தவங்கள் ஆனா பெடியள மட்டும் ஏன் சனம் பொத்தி பொத்தி வளத்திச்சு.

இண்டைக்கு எல்லா நாயும் காட்டிக் குடுக்கிறதும் காசடிக்கிறதுமா திரியுங்கள் எண்டு தெரிஞ்சுதான் அண்டைக்கே சனம் புலிகள மட்டும் தெரிஞ்செடுத்தது. சரி இண்டைக்கு புலி இல்லை எண்டா, சனத்துக்கு நல்லது செய்யதான் எல்லாரும் போராட்டம் தொடங்கினவே எண்டா.. டக்கன் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறான். காட்டிக் குடுக்கிறதும் கூட்டிக்குடுக்கிறதும் தானே செய்யிறான். சிங்களவன கண்டா சூத்துக்குள்ள கைய வச்சுக்கொண்டு திரியிறானுகள் இவங்கள்.

தம்பி யாழ்ப்பாணத்த ஆமி பிடிச்சா பிறகு அங்க நிண்ட பெடியள் சிலர பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளையளே காப்பாத்தி இருக்கு. சுற்றிவளைப்பு ஒண்டில ஒரு பெடியள் றிவோள்வரோட மாட்டுப்பட்டிருக்கிறான்.. அதை புரிஞ்சு கொண்ட பள்ளிக்கூட பிள்ளையொண்டு தன்னோட வரச்சொல்லி கேட்டிருக்கு.. "இல்ல நீ போ தங்கச்சி நான் பாத்துக்கொள்றன் எண்டு சொல்லி இருக்கிறான்". அதுக்கு அந்த பிள்ளை சொல்லி இருக்கு.. "இல்ல பருவாயில்ல என்னோட வாங்க ஆனா ரிவோல்வர சுடுற மாதிரி செய்திட்டு என்னட்ட தாங்க.. ஆமி பிடிச்சா நீங்க சயனைட் கடிச்சிருவீங்க.. ரிவோல்வர் என்னட்ட இருந்தா தான் நானும் சாகலாம்" எண்டு.

சனம் சாப்பாடு போட்டு பொத்திப் பொத்தி வளத்தது தான் புலி. சனம் புலிக்கு அடிக்கும், ஏசும்.. அந்தளா உரிமை இருக்கு. இவ்வளா உரிமையோட வேற யாருக்கும் ஏச முடியாது. வேற யாரோடையும் சண்ட பிடிக்க ஏலாது. இப்ப இருக்கிற இளந்தாரிகள் கெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டு இருக்குதுகள். உதுகளுக்கு அரசியல் செய்ய தெரியாது. உதுகள கட்டி மேய்க்கிறத்துக்கு இப்ப ஆள் கிடையாது. பெடியள் வருவாங்கள் பார் தம்பி. எந்த ரூபத்திலயாவது கட்டாயம் வருவாங்கள்.

வாற போற சிங்களவனெல்லாம் எங்கட பிள்ளையளோட சொறி தேய்க்குதுகள்.. நிலத்த பறிக்கிறாங்கள்.. யாவாரம் செய்ய முடியல.. கோயில்ல பெரிசா பாட்டு போட முடியல..பாதர்மார வெருட்டுறாங்கள்.. பெடியள் இருந்தா இந்த மசிராட்டம் ஆடுவாங்களா??

முந்தி கள்ளு குடிச்சா "என்ன தவறண பக்கம் போறியள்.. ஆச்சிட்ட போட்டுக் குடுக்கிறன்" எண்டு பெடியள் சொல்ல.. அதுக்கு ஏதாவது திருப்பி சொல்ல.. அப்ப எல்லாம் யோசிப்பன்.. எப்பிடி சிம்பிளா போறாங்கள். துவக்கையும் கட்டிக் கொண்டு சைக்கிள்ள போற பெடியள் யார் யாரெண்டே தெரியாது..  இப்ப எல்லாம் தவறண பக்கம் போறதில்ல.. தகரம் அடிச்சு வாங்கு போட்டிருக்கிறாங்களாம் தவறணைக்கு. வயசு போனதுகள் நிம்மதியா கள்ளு கூட குடிக்க ஏலாம கிடக்கு. ஒரே சிகட்டும் சாராய போத்திலுமா கிடக்கு.

புலிய விட யாரையும் நம்பேலாது. சம்மந்தர் என்ன கதைக்கிறாரெண்டே விளங்குதில்ல. சுமந்திரனாம்.. ஆர் தம்பி அது. சரி அத விடு.. என்ன நடக்குதெண்டே புரியல.
உம்மையிலேயே வெறுக்குது வாழ்கை. ஆயுதத்த மெளனிக்கிறம் எண்டு சொன்னவங்கள் அரசியல் ரீதியா இருக்கிறம் எண்டு சொல்லியிருந்தாலே இவ்வளவு மோசமான நிலைக்கு தமிழ்ச்சனம் போயிருக்காது. எண்டாலும் நம்பிக்கை இருக்கு தம்பி .. எப்பிடியாவது வருவாங்கள்"


தள்ளாடும் வயதிலையும் அவ்வளவு உறுதி.. நம்பிக்கை.. நிறையவே பேசினார்.. கடைசியா  சொன்னார்.. தம்பி "முள்ளிவாய்க்கால் வரைக்கும் போய் மொக்கு தனமாய் ஆயதத்த குடுக்கிறதுக்கும்.. முடிவில்லாம எல்லாத்தையும் முடிச்சு கொள்றத்துக்கும்.. பிரபாகரன் ஒண்டும் கோஸ்டி மோதல் செய்யிற குறூப் வச்சிருக்கல.. அது புலிப்படை... "

வயது போனவர்களுடன் பேசும் பொழுது.. நிறைய ஆர்வமாக இருக்கும். நினைவுகளை சுவாரஸ்யமாக மீட்பார்கள். இந்த ஜயாவுடன் பேசும் பொழுது.. அவர் ஒரு புலியாகவே மாறியிருந்தார்.

ஆதி
31-05-2012

இணைக்க தூண்டிய குறும்படம்
Part 1 http://www.youtube.com/watch?v=f9-92Swp-iw
Part 2 http://www.youtube.com/watch?v=j_QGvMj3H3g
Part 3 http://www.youtube.com/watch?v=bffjVCj3fyo

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP