Powered by Blogger.

Friday, December 16, 2011

காலம் எல்லாவற்றிக்கும் பதில் வைத்திருக்கிறது

இன்று உலகெங்கும் தமிழன் அடிவாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமது சுகபோக நலனுகளுக்காக தன்னினத்தையே காட்டிக் கொடுத்தும் அழித்தும் வரும் ஈனத்தனம் தமிழினத்தில் மட்டும் தான் நடக்கிறது.

ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் எதிரிகளோடு சேர்ந்து இனத்தை காட்டிக்கொடுத்த ஈனப்பிறவிகள் இன்று புலம்பெயர் தேசத்தில் வலுத்துவரும் தமிழர் உரிமைக் கோரிக்கைகளை சிதைப்பதற்காக பலவழிகளிலும் செயற்பட்டுவருகின்றனர்.

தமிழர் விடுதலைப்போராட்டத்தையும் உரிமைக் கோரிக்கைகளையும் திசைதிருப்பும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். துணைராணுவக் குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்களாய் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

சிறிலங்காராணுவத்தினால் இந்தனைவருட போராட்ட வரலாற்றில் கொன்றுகுவிக்க்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உயிர்களின் ஆத்மாவின் முன் இந்த பணம் தின்னி பிசாசுகளின் சோரம்போதலால் இன்னமும் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்ட்டுக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லமால் தமிழ் மக்களின் இருப்பு சிறுக சிறுக அரித்து அழிக்கப்ட்டடுக் கொண்டிருக்கிறது.

தமிழர் தரப்பு ஆயுதப்போராட்டத்தை மெளனித்த கையோடு தமிழ்ர் தாயகமெங்கும் சிங்கள அரசு ராணுவத்தையும் சிங்களவர்களையும் பெருமளவு குவித்துவரும் நிலையில் சமாந்தரமாக தமிழர்தாயக நிர்வாக அலகுகளில் சிங்கள இனத்தவர்களை திணித்துவருகிறது.

தமிழ் இளைஞர்களை முகாம்களில் அடைத்துவைத்துள்ளதோடு பேரால் இடம்பெயர்ந்து அடிப்படைவசதியின்றி மீளக்குடியமர்ந்திருக்கும் தமிழ் மக்கள் மீது ராணுவத்தை பயன்படுத்தி அடக்குமுறைகளை மேற்கொண்டுவருகிறது சிறிலங்கா அரசு.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.. கொள்ளைகள் உயிர் அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் உளவியல் மற்றும் அடக்குமுறைப் போர்களை வெவ்வேறு வடிவங்களில் சிறிலங்கா அரசு நடாத்திவருகின்றது. பாதிக்கப்படும் மக்கள் நீதிமன்றம் செல்ல முடியாத அளவிற்கு தமிழர் தாயகத்தில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

ஈபிடிபி துணைராணுவ குழு, கருணா துணைராணுவ குழு, ஜிகாத் துணைராணுவ குழுவை சேர்ந்தவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் பரவலாக களம் இறக்கப்ட்டுள்ளார்கள். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பெண்களை பாலியல் ரீதியாக கேலி செய்வது பெண்களை பாலியல் ரீதியாக ராணுவத்துடன் சேர்ந்து துன்புறுத்துவது.. கப்பம் கோருவது கொள்ளையிடுவது என சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் அடக்குமுறை வடிவங்களுக்கு இந்த துணைராணுவ குழுக்களின் செற்பாடுகள் இப்படி விரிந்து கிடக்கின்றன.

இந்த துணைராணுவ குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமிழ் நாட்டு கம்யூனிஸ்டுகள் சிலரை வலையில் விழுத்தி அவர்களுக்கூடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கெதிராக பாரிய பிரச்சாரம் ஒன்றை தமிழ்நாட்டில் 2008 2009 மற்றும் 2010 களில் அதிகளவில் செய்திருந்தார்கள். புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின் என்ற வார்ததைப்பிரயோகங்களினூடாக பெரும் அரசியலை தமிழ்நாட்டில் நகர்த்தியிருந்தார்கள். கருணாநிதி அரசு சிறிலங்கா அரசுடன் வைத்திருந்த உறவு நிலை இந்த துணை ராணுவக் குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு தளம் அமைத்து செயற்பட பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தது.

தவிர பிரான்ஸ் கனடா பிரித்தானியா மற்றும் நெதர்லாந்துகளிலும் இந்த துணைராணுவ குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமது நடவடிக்கைகளை விரிபுபடுத்தி மக்களை குழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். தாயக விடுதவைப்போரில் வீரகாவியமாக மாவீரர்களை கேலிசெய்வது விடுதலைப்போராட்டம் பற்றிய தவறான கருத்துகளை மக்களில் திணிப்பது என அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை நன்கு செய்கிறார்கள். இந்த எடுபிடிகளின் கேவல அரசியல் நிலை புரிந்து எப்பவோ இவர்களை மக்கள் விலத்தி வைத்திருக்கிறார்கள் என்பது இந்த தடவை நடந்த மாவீரர் தின நிகழ்வுகளில் இரந்த அனைவருக்கும் தெரியவந்திருக்கும்.

புலம்பெயர் தேசங்களில் தோல்வியை தழுவிக்கொண்ட இந்த துணைராணுவக்குழுக்களின் அரசியற்பிரிவினர் தமது கோபங்களை ஈழத்தில் கல்விகற்கும் மாணவர்கள் மீது திசைதிருப்பியிருப்பது ஒன்றும் வியக்கதக்கதல்ல.

ஈழத்தில் மக்களை ஆயுதமுனையில் அடக்குதல் கடத்துதல் கொலைசெய்தல் கொள்ளையடித்தல் கற்பழித்தல் என அனைத்து அராஜகங்களையும் புரிந்துவரும் இவர்கள் புலம்பெயர்தேசத்தில் மக்களை குழுப்புதல் விடுதலைப்போராட்டத்தின் மீது கேலிசெய்தல் என பல வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழகத்தில் தமிழீழபோராட்த்திற்கான இருக்கும் ஆதரவை எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து சிதைப்பதற்கு இந்த ஆயோக்கிய சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்ட்டு தமிழகம் எங்கும் தமிழின விடுதலைக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றிருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் தமிழினத்தின் உரிமையை எதிர்க்கும் வல்லூறுகள் இனம் காணப்பட்டுள்ளன.  இந்த வேளையில் பல புலம்பெயர் தேசங்களில் விரிந்து கிடக்கும் ஒருசில ஓட்டுக்குழுக்களின் அரசியற் பிரிவினரை இனம் கண்டு அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க ணே்டும். அனைத்து மக்களுக்கும் இவர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களே விழிப்பாய் இருங்கள்.

ஆதி
16-12-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP