Powered by Blogger.

Thursday, December 15, 2011

திசைதிருப்பப்படும் தமிழர் கோரிக்கைகள்

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மெளனிக்க்பட்டதில் இருந்து தமிழ் மக்களின் உரிமைக்கோரிக்கை பலவழிகளிலும் திசைதிருப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழர் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துதல் அதனை முதன்மைப்படுத்தி ஊடகங்களீனூடாக மக்களை குழப்புதல் என்று ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா அரசுடன் இந்த விடையத்தில் இந்தியாவும் சேர்ந்துள்ளதாகவே தெரிகிறது.
புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசின் குற்றச்செயல்கள் குறித்து விசாரணைக்கான கோரிக்கைகள் பல அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் என்றுமில்லாதவாறு தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்காகன கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
 
தமிழகத்தில் வலுப்பெறும் தமிழீழ விடுதலைக்கான உணர்வலை ஒரு கட்டத்தில் இந்திய மற்றும் பிராந்திய அரசியல் நிலையில் மாற்றங்களை கொண்டுவரும் என்பது இந்திய வல்லரசிற்கு நன்கு தெரியும். இந்த நிலையில் தமிழக மக்களுக்கு இருக்க கூடிய தமிழீழ விடுதலை தொடர்பான நிலைப்பாடு தொடர்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்காக தமிழகத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது காங்கிரஸ் தலமையிலாக மத்திய அரசு.

தவிர ஈழத்தில் நல்லிணன்ன அறிக்கை, தமிழ்தேசிய கூட்டமைப்பினுடனான பேச்சுவார்த்தைகள், அரசியல் தீர்வு குறித்து விவாதிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு என்று தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினைகளை பல வடிவங்களில் சிதறடித்து திசைதிருப்பல்களை செய்து கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.
அரசியல் நிலைகளில் குழுப்பங்களை ஏறப்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசு சாமாந்தரமாக தமி்ழர் தாயகப்பகுதியை சிங்கள மயமாக்கல் அல்லது பெரும்பான்மை சிங்களவர்களின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டுவருதல் என்ற நடவடிக்கையை நாசுக்காக செய்துவருகிறது. தமிழர் தாயகப்பகுதியில் உள்ள அரச அலுவலகங்களிற்கு சிங்களவர்களை நியமித்தல், சிங்கள கலாச்சார நிகழ்வுகளை தமிழர் தாயகப்பகுதியில் பெருமெடுப்பாக செய்தல், தமிழர் தாயகப்பகுதி சிவில் நிர்வாக நடவடிக்கைகள் சிறிலங்கா ராணுவத்தின் கீழ் செயற்படுத்துதல் என பல வழிகளில் தமிழ் மக்களின் இருப்புகளை இல்லாது செய்துவருகிறது சிங்கள அரசு.

நிலங்கள பறிக்கப்படுவது குறித்த மக்களின் குரல்களும் சிறிலங்கா ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல் மற்றும் அத்துமீறல்கள் குறித்த பதிவுகளும் ஊடகங்களில் வருவதை தடுப்பதிலும் குறியாய் இருக்கிறது இந்த அரசு.
தம் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பிவரும் புலம்பெயர் அமைப்புகள் இந்த விடையங்கள் தொடர்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறது சிறிலங்கா அரசு. போர்குற்றங்கள் தொடரபில் இந்திய மற்றும் சீனாவின் உதவியுடன் எப்படியும் தப்பிவிடலாம் என்ற கனவில் சிறிலங்கா அரசு இருப்பதாகவேபடுகிறது.
 
தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் தொடர்பில் கடும்போக்கை வெளிப்படுத்திவந்த இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க அரசுகள் ஆயுதப்போராட்டம் மெளனிக்கட்ட நிலையில் தமிழ் மக்களின் உரிமை மற்றும் தீர்வு குறித்த விடையத்தில் கள்ள மெளனம் சாதித்து வருவது சந்தேகத்திற்குரியது.
 
புலம்பெயர்உறவுகளே!!!

ஆயதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில் எமக்கான உரிமை மற்றும் விடுதலை கேட்பது தொடர்பில் எந்த அரசும் எம்மை குற்றம் சொல்ல முடியாது. தமிழ் மக்களின் விடுதலை பற்றிய தேவையை உரத்து சொல்ல வேண்டும். ஈழத்தில் இருந்து தமிழின விடுதலை குறித்து பொதுமக்களால் எந்த குரலுலம் எழுப்ப முடியாது. அரசியல் வாதிகளின் நடவடிக்கைகள் பேச்சுகளோடு மட்டுப்படுத்தப்ட்டுள்ளது. எனவே புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கப்படல் வேண்டும். சிறிலங்கா அரசு செய்துவரும் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து வெளிநாடுகளுக்கு தொடர்ந்து சொல்லப்பட்ல் வேண்டும். தமிழ் மக்கள் இன்னமும் விடுதலை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி சர்வதேச காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். பிராந்திய வல்லாதிக்கங்கள் எமது விடுதலைத்கெதிராக நகர்த்திக் கொண்டிருக்க கூடிய அரசியல் சூழ்ச்சிகளை தகர்க்க கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

ஆதி
12-12-2011



No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP