Powered by Blogger.

Tuesday, December 6, 2011

தமிழகத் தோழா!!!

எங்களுக்காய் அழுதீர்கள்...
எங்களுக்காய் வீதிகளில் போராடினீர்கள்...
எங்களுக்காய் தீக்குளித்தீர்கள்...
எங்களுக்காய் பட்டினி கிடந்தீர்கள்...
நாங்கள்
கண்ணீர் வற்றி
ரத்தம் வற்றி
வீழ்ந்து கிடக்கிறோம்...
உங்களில் சிலர் எங்களை கொல்கின்றனர்!!!
அது அகதிப் பெட்டை
இழுத்து வந்து இருக்கிறத குடுத்திட்டு
அலுவல முடி - என்று கூட
உங்களில் சிலர் சொன்னார்களாமே!!!

"ஒரு ஈழத்து அகதி முகாமில் பெண்களுக்கு நடந்த வன்முறை பற்றி நண்பன் ஒருவன் இன்று சொன்னான்... ஆத்திரம் வருகிறது.. அழுகை வருகிறது... பிணம் புணரும் பிசாசுகள் சிங்களத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் இருக்கிறார்கள்."

இங்கும் இருக்கிறார்கள். சிங்களத்தின் மலத்தை தின்றபடி துணை ராணுவ குழுக்களாக வலம்வரும் பிணம் புணரும் பிசாசுகள் இங்கும் இருக்கிறார்கள்!!!

எங்கள் உறவுகள் செத்து விழுந்து உயிர் தப்ப தானே தமிழகம் வந்தார்கள்!!!

எங்களுக்கும் ஒரு நாள் வாழ்வு விடியும்...


ஆதி
06-12-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP