Powered by Blogger.

Wednesday, June 6, 2012

இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..

மகிந்தராஜபக்ஷவிற்கு எதிராக பிரித்தானியாவில் தமிழ் மக்கள் இந்த அளவு எதிர்ப்பையும் போராட்டத்தையும் இந்த காலப்பகுதியில் நடத்த இருந்திருப்பார்கள் என சிங்கள அரசோ இந்திய அரசோ சிந்தித்திருக்காது. பிரித்தானிய அரசு கூட இந்த போராட்டம் இந்த அளவு வீரியம் பெறும் என நினைத்திருக்கமாட்டார்கள்.

இந்த போராட்டங்களை திறம்பட ஒழுங்கமைப்பு செய்ய தமிழ் அமைப்புகளுக்கு நன்றிகளை சொல்வதோடு பதிவிற்குள் செல்கிறேன்.

தமிழ் தேசிய போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு எதிராக குறிப்பாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரலை குழப்பும் நோக்கோடு ஒட்டுக்குழுக்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கனடா லண்டன் பிரான்ஸ் நோர்வே என அனுப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை மற்றும் தனிநாட்டு கோரிக்கைகளை கைவிட்டுவிட்டார்கள் என்ற கருத்துப்பட திட்டமிட்ட அரசியல் பரப்புரையை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் செய்து வந்தன. குறிப்பாக தமிழீழ மக்கள் பற்றியதான அனைத்துலக கரிசனையை சிதைத்து சிறிலங்கா அரசின் இரண்டாம்தர மக்களாக தமிழ் மக்களை காட்டி கொடுப்பதை வாங்கி கொண்டு இறமையை தொலைத்துத்தான் தமிழ் மக்கள் வாழ்வது நல்லது என்ற தோற்றப்பாட்டில் இந்திய அரசால் அனுப்பட்ட குழுவும் செயற்பட்டது அனைவரும் அறிந்த விடையம்.

ஒருபக்கத்தில் தமிழர் போராட்ங்களை குழப்புதல் மறுபக்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் சிந்தனைகளுக்கு நெருக்கடியை கொடுத்து மக்களின் சிந்தனையில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் தறுவாயில் தாம் நினைக்கும் அரசியல் தீர்வை திணிப்பது என்ற உளவியல் அரசியலை இந்திய இலங்கை கூட்டணி நகர்ந்து வருகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழப்பகரமான அறிக்கைகள் என குழம்பியிருக்கும் மக்களை இலகுவில் அடக்கிவிடலாம் என்பது இந்த பயங்கரவாத அரசுகளின் கனவு. இப்படி உள்ளுக்குள்ளும் வெளியிலும் தமிழர்கள் குழம்பியிருக்கிறார்கள் ஆகவே இவர்களால் எதையும் ஒருமித்து செய்யமுடியாது என்று இந்த பயங்கரவாத அரசுகள் அளவுக்கு மீறிய நம்பிக்கையில் இருந்தன. அதனடிப்படையில் தான் முதல் பட்ட அவமானத்தையும் பொருட்படுத்தாது மகிந்தராஜபக்ஷ மீண்டும் லண்டன் புறப்பட்டார்.

பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தை அவமதிப்பு செய்து தவறான தகவலை ஸ்கொட்லண்ட் பொலிஸிற்கு கொடுத்து தன்னையும் அவமானப்படுத்தி ஸ்கொட்லண்ட் பொலிஸையும் அவமானப்படுத்தியிருந்தது சிறிலங்கா அரசு. அதன் பின் தமிழர்கள் ஏன் போராட்டம் செய்கிறார்கள்.. உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியது யார்.. தமிழர்களின் விடுதலை வேட்கை எப்படிப்பட்டது என்பதை ஸ்கொட்லண் பொலிஸ் நன்றாகவே உணர்ந்திருக்கும்.

பல குழப்பகரமான நிலமைகளை தமிழ் மக்களின் அரசியல் ரீதியில் உருவாக்கிவிட்டு (உருவாகியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்) அதற்குள் தன்னை ராஜாவாக காட்டிக் கொள்ளும் கனவோடு லண்டன் புகுந்திருந்த ராஜபக்ஷ மரண வேதனையை அனுபவத்திருப்பார் என்பது உண்மையே.

குறுகிய ஒழுங்குபடுத்தலில் இத்தனையாயிரம் தமிழ் மக்கள் லண்டன் மாநகரில் கூடியதும்.. முன்பைவிட ஆக்குரோசமாய் மக்கள் திரண்டிருப்பதும் இந்திய இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத நாடுகளுக்கு நிட்சயமாக ஆச்சரியமளித்திருக்கும்.


ராஜபக்ஷவின் கொடும்பாவியையும் சிறிலங்கா தேசிய கொடியையும் பிரித்தானிய காவல்துறையினருக்கு முன்பு வைத்தே தீயிட்டுக் கொழுத்தியுள்ளார்கள் தமிழீழ மக்கள். இந்த ஆக்குரோசம் முன்னயதைவிட பல மடங்கு அதிகமானது. பரமேஸ்வரன் உண்ணாவிரம் இருந்து மோசமான நிலையை அடைந்து கொண்டிருந்த பொழுதும் தமிழ் மக்களின் மீதான படுகொலையை நிறுத்தக்கோரி முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகள் தம்மைத்தாமே அழித்துக்கொண்ட போதிலும் அமைதியாக போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் பிரித்தானியாவின் ராணி வருகைக்கிருக்கும் நிகழ்வொன்றின் நாளில் சிறிலங்கா தேசிய கொடியையும் சிறிலங்கா ஜனாதிபதியின் கொடும்பாவியையும் தீயிட்டு கொழுத்தியது சாதாரணமான கருதிக்கொள்ளக் கூடிய விடையமல்ல என்பது அரசியல் ராஜதந்திரிகளுக்கு புரிந்திருக்கும்.

சமகாலத்தில் போர்க்குற்றவாளி ராஜபக்ஷவை பிரித்தானியா வெளியேற்றவேண்டும் என்ற தொனியில் பிரித்தானிய தூதரகத்தை தமிழகத்தில் தமிழர்கள் சூழ்ந்து கொண்டனர். கனடா உள்ளிட்ட நாடுகளில் கண்டன அறிக்கைகள் விடப்பட்டிருந்தன. தவிர யாழ்ப்பாணத்தில் இளைஞர்களால் அரசியல் சாசனம் தீயிட்டு கொழுத்தப்பட்டது.

அறிக்கைகளையும் கண்டனங்களையும் மட்டுமே தெரிவித்துக் கொண்டு தமிழினம் அடங்கிவிட்டது என்று தேனிலவு அரசியல் செய்து கொண்டிருந்த வல்லாதிக்கங்களுக்கு தமிழ் மக்களின் இந்த எழுச்சியும் கடந்தகாலங்களை விட ஆக்குரோசமாக மக்கள் போராட நினைக்கும் தன்மையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தம்மைத்தாமே எரித்து போராட்டம் நடாத்தியவர்கள் சிறிலங்கா தேசிய கொடியை ராஜதந்திரிகள் கூடுமிடத்தில் எரித்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மனதளவில் மாற்றமடைந்துவிட்டார்கள் என்பது சாதாரணமாக கடந்துவிடக்கூடிய விடையமில்லை என்பது உளவியல் தெரிந்த அரசியல் ஆர்வலர்களுக்கு புரியும்.

தமிழீழம் என்பது தமிழ்மக்களின் நாடு என்பதும் புலிக்கொடிதான் தமிழ் மக்களின் கொடி என்பதும் உலக அளவில் வேகமாக புரிந்துவருகிறது. தமிழர்களின் நாட்டை இலங்கை இந்திய பயங்கரவாத அரசுகள் ஆக்கிரமித்துள்ள உண்மை வேகமாக பரவிவருகிறது.

தமிழீழ தேசிய கொடியுடன் viva உலக கிண்ண போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்ட அணி பங்குபற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழர்கள் தமது இலட்சியத்தை கைவிட்டுவிட்டார்கள் என்று அரசியல் கனவு கண்டுகொண்டிருந்த பயங்கரவாத அரசுகள் சமகாலத்தில் இத்தனை மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆதி
07-06-2012


No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP