Powered by Blogger.

Monday, November 25, 2013

புரட்சிகர தமிழீழச் சனம் சிங்கள இராணுவத்துடன் செய்யும் உளவியல் போர் உணர மறுக்கும் உலகம்

உலக வரலாற்றில் போராடும் மக்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் பலவிதமான போரைச் செய்வார்கள். பாலியல் வன்முறைகள், கொடூரமான படுகொலைகள் மற்றும் போராடுபவர்களின் இலக்கு குறித்த சந்தேகத்தை எழுப்பி பரப்புவது  என ஆக்கிரமிப்பாளர்களின் போர் விரிவடைந்து செல்லும்.

இப்படிப்பட்ட இன்னல்களையும் சோர்வடையச் செய்யக்கூடிய உளவியல் போரையும் வென்ற இனம் விடுதலை பெற்றுவிடும் இதுதான் உலக நியதி.

இப்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்று நீட்சியில் தமிழீழ மக்களின் போராட்டம் வித்தியாசமாக உருவெடுத்திருக்கிறது.

30 வருடங்களிற்கு மேல் தங்களை பாதுகாத்து வழிநடத்தி எதிரியிடம் போரிடக் கற்றுக்கொடுத்த அமைப்பும் அந்த மக்களின் தலமையும் இல்லாத நிலையில் தமிழீழ மக்கள் மண்ணில் செய்து கொண்டிருக்கும் பெரும் உளவியல் போர் சிங்கள அரசை மட்டுமல்ல அதன் இயந்த்திரமாக இருக்கும் சிங்கள கொலைவெறி இராணுவத்தையும் அசைத்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

2009 இல் தமிழீழ அரசு தனது ஆயுதங்களை மௌனித்து சர்வதேச சதியினால் சரணடைந்த பிறகு, இந்திய சிவசங்கர் மேனன் உள்ளிட்ட கும்பலால் பிரேரிக்கப்பட்ட முட்கம்பி வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட பின்பு நடந்த மாவீர்தினங்களையும் சம்பவங்களையும் அவதானமாக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய நிலையிலும் அதை சர்வதேசத்திடம் முறையாக கொண்டு சென்று எமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய நிலையிலும் தமிழீழ மக்கள் இருக்கிறார்கள்.


2009 மாவீரர் தினம் - மெனிக்பாம் மற்றும் சில முட்கம்பி முகாம்களுக்குள் விளக்கு கொழுத்தியதால் மக்கள் மீது சிங்கள இராணுவம் அடாவடி

2010 மாவீர்ர தினம் - மட்டக்களப்பு நகர் மத்தியில் மாவீரர் ஈகச்சுடர் ஏற்றும் நேரம் மாவீரர் கானம் இசைக்கப்பட்டது. மற்றும் சில இடங்களில் மாவீரர் படங்கள் வைக்கப்பட்டது தீபம் ஏற்றப்பட்டது.

2011 மாவீரர் தினம் - கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாவீரர் நாளை முன்னிட்டு தாக்க வருவதாக நினைத்து கிளிநொச்சியில் சிறுவனை இராணுவம் சுட்டுக் கொன்றது. கிளிநொச்சியில் பல கோயில்களில் ஒலிபெருக்கிகள் இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

2012 மாவீர் தினம் - தமிழீழத்தில் எல்லா மாவட்டத்திலுமே மாவீரர் தின எழுச்சி பதாதைகள் மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டன. யாழ் மற்றும் கிழக்கு  பல்கலைக்கழகத்தில் வெளிப்படையாகவே தீபங்கள் ஏற்றப்பட்டன. கோயில்களில் பிரார்த்தனைகள் நடந்தன. கார்த்திகை தீப நாளை சாக்காக வைத்து கிறிஸ்தவ மத்தை பின்பற்றும் தமிழர்களும்  வீதிகளில் தீபம் ஏற்றினர். வீதிகளுக்கு இறங்கி தீபங்களை காலால் மித்தது சிங்கள இராணுவம். யாழ் பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2013 மாவீரர் தினம் - மாவீர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்ய சனம் துயிலுமில்ல வாசல்வரை சென்றது. மக்களின் சின்ன சின்ன அமைப்புகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டது. சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பு மாவீரர் நினைவு நாள் மற்றும் மாவீரர் நினைவிடங்கள் பற்றி பேசியே ஆகவேண்டிய கட்டாய நிலையை மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.


தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தமிழீழ மக்களின் தலமை களத்தில் இல்லாத நேரத்தில் தமிழீழ விடுதலை குறித்து மக்கள் இந்த அளவிற்கு சிங்களத்துடன் மோதுவதென்பது சாதாரண விடையமல்ல. வெறுமனே இந்த மாதத்தில் மட்டுமல்லாது காணாமல் போனோர் மற்றும் நிலப்பறிப்புக்கு எதிராக சனங்களின் மூர்க்கம் அதிகரித்து வருவது சிங்களத்திற்கு விளங்குவது போல் உலகத்திற்கு விளங்கவில்லையா அல்லது அதை சரியான முறையில் உலக அரங்கில் கொண்டு சேர்கவில்லையா என்பது குறித்து கவனமெடுப்பது அவசியமான ஒன்று.


ஆதி
25-11-13

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP