Powered by Blogger.

Friday, June 20, 2014

தமிழினமாக ஒன்றுதிரண்டுபார். அறிவு பணம் பலம் எல்லாமே எங்களிடம் மட்டும்தான் இருக்கிறது.

ஈழத்து தமிழ் இசுலாமியர்களே ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களின் தேவை சிங்களத்திற்கு மடிந்துவிட்டது. தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை நியாயப்படுத்தி சிங்கள அரசுக்கு எதிராக அரபுநாடுகளின் வாக்கை பெற்றதோடு சிங்கள அரசின் தேவையும் முடிந்துவிட்டது.

வடக்கில் இருந்து புலிகள் வெளியேற்றினார்கள் என்ற ஒன்றைத்தான் இதுவரை முசுலீம் அரசியல்வாதிகள் வெறியாக அப்பாவி தமிழ் இசுலாமியர்களுக்கு ஊட்டி வந்தார்கள்.

வடக்கில் இருந்து வெளியேற்றியது தவறு என்பதற்காக அதற்கு எல்லா இசுலாமியர்களிடமும் புலிகள் அமைப்பு மன்னிப்புக் கோரியிருந்தது.

தவிர
1) விடுதலைப்புலிகள் அமைப்பில் தமிழ் இசுலாமியர்கள் இராணுவமாக இருந்திருக்கிறார்கள். வீரச்சாவைத் தழுவியிருக்கிறார்கள்.

2) விடுதலைப்புலிகள் இசுலாமியர்களின் கல்வியை அழிக்கும் இந்த இழி வேலையையும் செய்யவில்லை. இசுலாமிய மார்க்கத்தை அழிக்கும் எந்த இழிவேலையையும் செய்யவில்லை.

3)விடுதலைப்புலிகள் இசுலாமியர்களின் வர்த்தக நிலையங்களை அழிக்கும் இழி வேலைகளை செய்யவில்லை.


அது போக; காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலை தொடர்பில் இதுவரை புலிகள் மீது குற்ம்சாட்டப்பட்டு வந்தாலும் அந்த காலப்பகுதியில் அங்கு தளபதியாக இருந்த கருணாவை விசாரிக்கும் படி இசுலாமிய அமைச்சர்கள் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. இசுலாமிய அமைப்புகள் கோரிக்கை வைக்கவில்லை காரணம் என்ன!!!!

பிரித்தாழும் நுட்பத்தை சிங்கள முசுலீம் அரசியல் தலமைகள் திட்டமிட்டே செய்கின்றன. காத்தான்குடிக்கு கருணாவை விசாரித்தால் சத்திருக்கொண்டானுக்கு ஹிஸ்புல்லாவை விசாரிக்க வேண்டி வரும் என்று சிங்கள முசுலீம் தலமைகள் அஞ்சுகின்றன.

எல்லா அச்சமும் அரசியல் தலமைகளுக்கு தான். அப்பாவி தமிழ் இசுலாமிகள் தங்களை உணர வேண்டும். தமிழ் இசுலாமிகளின் பிரச்சினையை தமிழினம் இனப்பிரச்சினையாக கையாழும் என்ற நம்பிக்கை வரவேண்டும். தமிழின பிரச்சினையாக கையாள வேண்டும் என்று தமிழ் இசுலாமிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழினமாக ஒன்றுதிரண்டுபார். அறிவு பணம் பலம் எல்லாமே எங்களிடம் மட்டும்தான் இருக்கிறது. பள்ளிவாயல்களும் கோவில்களும் தேவாலையங்களும் தமிழீழப் பரப்பெங்கும் தமிழினமான போதனை செய்யும்.

தமிழ் இசுலாமிகளின் பிரச்சினையை தமிழின பிரச்சினையாக மாற்றுங்கள். முசுலீம் அரசியல்வாதிகளின் அரசியல் நாடகங்களை நம்பாதீர்கள்.

ஆதி
21-06-2014

மதம் உனது கலாச்சாரம் இனம் உனது அடையாளம்

மதம் உனது கலாச்சாரம் இனம் உனது அடையாளம்

ஈராக்கில சுன்னி முசுலீம் சீய்யா முசுலீம் என்று ஆளையாள் இறைச்சியடிச்சு சாப்புடுறாங்கள் இந்த கோவணத்தில சிறிலங்காவில் முசுலீமுகள் தாக்கபட்டால் உலகத்தில் உள்ள 178 கோடி முசுலீமுகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமாம் என்று தமிழ்நாட்டில் ஒருவர் கொக்கரிக்க எல்லோரும் அல்வாவு அக்குபர் என்று சத்தமிடுகிறார்கள்.

டேய் பரதேசி பயலுகளே. முசுலீம் முசுலீம் என்று வெறிபிடித்து அலையிறதால தானடா உங்கள எல்லாரும் ஒதுக்கிறானுகள்.

இந்தியாவில் மசூதியை இடிச்சுப் போட்டங்கள் என்பதற்காக உங்களுக்கு இசுலாமிய அரபு நாடுகள் அகதி அந்தஸ்து தரப்போவதில்லை. அல்லாவை தொழும் முசுலீம் தானே என்று அரபு நாட்டிற்கு செல்லும் இந்திய இலங்கை முசுலீமுகளை அரேபிகள் பாவம் பார்ப்பதில்லை.

குற்றச்சாட்டுகளில் சிக்குண்டு இந்திய சிறிலங்கா இசுலாமிகளை முசுலீம்தானே என்று அவர்கள் விடுதலை செய்வதில்லை. அவர்களை விடுதலை செய்யும் படி முசுலீம் அமைப்புகள் அரபு அரசுகளிடம் பேசுவதும் இல்லை.

இந்த கோவணத்தில் என்ன மயிருக்கடா முசுலீம் முசுலீம் என்று தொண்டைத்தண்ணி வற்றுமளவிற்கு கத்தி அல்லாவையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்துகிறீர்கள்?

தமிழ்பேசும் இசுலாமியனுக்கு பிரச்சினை வந்தால் அதை தமிழினம் தேசிய பிரச்சினையாக கையாளும் என்ற நம்பிக்கைக்கு வாருங்கள்.

மதம் உனது கலாச்சாரம் இனம் உனது அடையாளம். இன்று இசுலாமியனாக இருந்து இந்துவாகவோ இந்துவாக இருந்து இசுலாமியனாகவோ மாறலாம் ஆனால் தமிழனாக இருந்து உன்னால் அரேபியாக மாற முடியாது என்ற உண்மையை ஞாபகம் வைத்திருங்கள்.

ஆதி
20-06-2014

Thursday, June 12, 2014

பிராந்திய அரசியலை தவறவிடுகிறோமா!!

தமிழீழ விடுதலைப்போராட்டமானது என்றுமில்லாத அளவிற்கு முற்று முழுதான இராஜதந்திர வலைப்பின்னலுக்குள் சிக்குண்டுகிடக்கிறது.

தமிழீழ மக்களின் அரசியலானது இரண்டு எதிர்மறையான தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
1) ஈழத்து அரசியல் - ஆசிய அரசியல் தளம்
2) புலம்பெயர் தமிழர் அரசியல் - மேற்கத்தைய அரசியல் தளம்

இந்த இரண்டு தளங்களிலும் தத்தமது பிராந்திய ஆதிக்க சக்திகளாக வல்லரசுகள் காணப்படுகின்றன.

ஆசிய அரசியல் தளத்தில் மாற்றத்தினை மேற்கத்தைய அரசியல் பின்புலங்களால் ஏற்படுத்தமுடியுமா என்பது சட்ட ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் ஆரயப்பட வேண்டிய முக்கியமான கருப்பொருள்.

2009 இனப்படுகொலையோடு தமிழீழ போராட்டத்தை பேரினவாத சிங்கள அரசும் வல்லாதிக்கங்களும் தமிழீழத்தில் இல்லாது செய்து 5 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழீழ விடுதலை சக்திகள் எவ்வகையான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குட்படுத்த வேண்டிய விடையம்.

விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்தை மண்ணில் நடாத்திக்கொண்டிருந்தாலும் பிராந்திய அரசியல் மாற்றங்களை மிக அவதானமாக அவதானித்து ஆய்வுகளை மேற்கொண்டுவந்திருந்தமை தமிழீழ தேசியத்தலைவர் மற்றும் தளபதிகள் பொறுப்பாளர்களின் உரைகளில் இருந்து அவதானித்துக் கொள்ளலாம்.

விடுதலைப்புலிகள் மண்ணில் செயற்பாட்டுத் தளத்தில் இருந்த வேளையில் தமிழீழ விடுதலைக்கனா பிராந்திய ராஜதந்திரப் பலத்தை வல்லரசுகள் பல கோணங்களில் முடக்கியிருந்தாலும் மேற்கத்தைய அரசியல் தளத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்ட பலர் வலுவான ராஜதந்திர தொடர்புகளை வைத்திருந்தனர் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்று.


தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் மேற்குலக நாடுகளை இலக்கு வைத்தே நகர்ந்திருக்கிறார்கள். அகதி அந்தஸ்தை வழங்க கூடிய நாடுகள் மேற்குலகில் இருப்பது மற்றும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள் அதிகம் மேற்குலகில் காணப்படுவதே அதற்கான காரணம். இதனையொற்றியே புலம்பெயர் தமிழர் அரசியல் கட்டுமானங்கள் விரிபுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த சக்தி ஆசிய தளத்தில் எவ்வகையான தாக்கங்களை அல்லது ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் என்பது கேள்விக்குறியே.

ராஜதந்திரம் என்பது வெறுமனே எமக்கு என்ன தேவை என்று சொல்வதன்று. எமக்கு தேவையானதை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆராய வேண்டும், அதற்காக நாங்கள் இழக்க வேண்டிவருவதை ஆராய வேண்டும், அதற்காக நாங்கள் அடைமானம் வைக்க வேண்டியதை ஆராய வேண்டும். கடந்த 5 வருடங்களில் தமிழர் தரப்பில் இப்படிப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளபட்டதா என்பது சந்தேகமே.

பிராந்தியத்தை பொறுத்தவரையில் தமிழீழ நிலப்பரப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் நீட்சியானது மட்டுப்படத்தப்பட்ட ஒன்று. தமது அபிலாசைகளை மக்கள் தேர்தலோடு மட்டுப்படுத்தவேண்டிய அடக்கு முறைக்குள் இருக்கிறார்கள். அடுத்த சக்தியாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தங்களால் முடிந்த அளவு ஏன் உச்சக்கட்டமான போராட்டங்களை தொடர்ச்சியாக செய்கிறார்கள். ஆனால் இது தமிழீழ போராட்டத்தில் ராஜதந்திர ரீதியில் எமது இலக்கை நோக்கி எந்த அளவு தூரம் நகர்த்தியிருக்கிறது என்பதை தமிழீழ மக்கள் ஆய்வு செய்யவேண்டியது கட்டாயம்.

பிராந்திய வல்லரசுகள் ஏதாவது ஒன்றுடனாவது எமது நிலைப்பாட்டை, எமது விடுதலையின் தேவையை, புதிய நாடு உருவாகுவதில் உள்ள தாக்கங்கள் புதிதாக நாடு உருவாவதில் இருக்க கூடிய நன்மைகள் குறித்து பேசியிருக்கிறோமா!! என்பது குறித்து அக்கறை செலுத்துவது தமிழீழ விடுதலைப்போராட்ட அரசியல் தளத்தை விரிவுபடுத்தும் என்பதோடு நாம் எங்கே நிக்கிறோம் என்று எம்மை நாமே அளவீடு செய்யவும் உதவும்.

ஆசிய அரசியல் தளம் என்பது அரேபிய அரசியல் தளம் போல் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆதி
12-06-2014

























Thursday, January 30, 2014

காட்டிக் கொடுப்பாளர்கள்

காட்டிக் கொடுப்பாளர்கள்.
பகிரங்க இன அழிப்பை சிங்கள அரசு முள்ளிவாய்க்காலில் நடாத்தி முடித்து 5 வருடங்கள் கழியும் நிலையில் பல காட்டிக் கொடுப்பாளர்களை இனம் காண முடிந்திருக்கிறது.
விடுதலைப்புலிகளுக்கு உதவியவர்கள் முன்னாள் போராளிகள் என காட்டிக் கொடுக்கபட்டவர்கள் ஒருபுறம் இருக்க தனித்து நிற்கும் தமிழீழ மக்களின் அரசியலையும் தாறுமாறாக காட்டிக் கொடுப்பு செய்யும் எழுத்தாளர்கள் பகிரங்கமாகவும் நாசுக்காகவும் இழையோடியிருக்கிறார்கள்.
துணைராணுவக் குழுக்களின் அரசியல் பரப்புரைப்பிரிவாக செயற்படக்கூடிய சோபாசக்தி கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு புறமும் தங்களை பெரும் உணர்ச்சியாளர்களாகவும் புரட்சியாளர்களாகவும் காட்டும் சில புலம்பெயர் கும்பலும் சோபாசக்தி கும்பலுடன் இயங்க கூடிய தமிழ்நாட்டு கும்பலுமாக மூன்று தரப்பட்ட தளங்களில் இந்த இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனந்தி அக்காவிற்கு புனர்வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதற்கு முதலும் சமகாலத்திலும் இந்த கும்பல்கள் எப்படி எழுதியிருந்தன என்பதை வைத்து இந்த கும்பல்களை புரிந்து கொள்ளுங்கள்.
வீதியில் இறங்கி மக்களோடு நின்று போராடுவதால் அனந்தி அக்காவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளின் பார்வை வளையத்திற்குள்ளும் வந்ததால் யோ.கர்ணன் அனந்தி அக்காவை புலிமுகப்பெண் என்ற கட்டுரையில் பயங்கரவாதி முத்திரை குத்துவதற்கு படாத பாடுபட்டிருப்பது தெரியும்.
இதே தொடர்ச்சியாக தங்களை தமிழீழ உணர்வாளர்களாக காட்டிக் கொள்ளும் சில புலம்பெயர் கும்பல் அனந்தி அக்காவை தாங்கள் தான் அரசியலுக்கு கொண்டு வந்தது போலவும் அவர்களால் தான் அனந்தி அக்காவால் இவ்வளவு செயற்பட முடிகிறது போலவும் பினாத்தல் கதைகளை அவிட்டுவிட்டு சிக்கலில் அனைவரையும் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதியிருப்பவர்கள் புலம்பெயர் தேசங்களில்நடக்கும் எந்தவொரு போராட்டங்களிலும் பங்கெடுப்பது கிடையாது. அதேபோல் யோ.கர்ணன் உள்ளிட்ட கும்பலும் இங்குள்ள மக்களின் போராட்டங்களில் பங்கெடுப்பது கிடையாது.
அனந்தி அக்காவை சிக்கலில் மாட்டுவதற்கு யோ.கர்ணன் கும்பல் எடுத்த முயற்சியும் இந்த புலம்பெயர் கும்பல் ஒன்றின் செய்திக் குறிப்பின் நோக்கமும் ஒன்றாகவே காணப்படுகிறது.
எப்படா எதாவது துப்பு கிடைக்கும் என்று ஏக்கத்தோடு இருக்கும் எதிரிக்கு பல்லவியை எடுத்துக் கொடுக்கும் இந்த கும்பல்கள் குறித்து மிக அவதானமாக இருக்க வேண்டும்.
கடந்த 2012ம் ஆண்டு மாவீரர் தினம் நடைபெற்ற போது ஏற்பட்ட சிங்களத்தின் அத்து மீறல்கள் மற்றும் அடாவடித்தனத்திற்கும் இந்த கும்பல் ஒன்றுதான் காரணமாக இருப்பதாக அறியமுடிகிறது. தாங்கள் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்னமாதிரியான வேலைகளை செய்கிறார்கள் என்பதை முகநூல் மற்றும் இணையங்களில் வர்ணனை போல் செய்து எதிரியின் கண்காணிப்பை இலகுபடுத்திய கும்பலும் இதுதான் என்று அறியமுடிகிறது.
இணைய பிரபலத்திற்காக எதையும் எழுதாதீர்கள். எழுதும் போது யோசியுங்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாமே சினிமாவும் இலக்கியமும்தான். 30 வருடத்திற்கு மேலாக போராட்டம் செய்யும் சனங்களின் ரகசியமும் அதன் வினைத்திறனையும் போராட்ட கண்ணினூடாக பார்ப்பதற்கு பரீட்சயமற்றவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அது அவர்களின் தவறு அல்ல.
எமது போராட்டம் இன்னமும் முடிந்துவிடவில்லை. எமக்காக சர்வதேச அரங்கில் குரல்கொடுக்க நாடுகள் இல்லை. வெறுமனே இந்த மக்களின் ரத்தம் கண்ணீர் துயரம் மற்றும் விடுதலை வேட்கையில்தான் இத்தனை ஆண்டுகால போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் போராட்டம் தலமைகள் குறித்து எழுதும் போது பேசும் போது மிக அவதானமாக இருக்க வேண்டியது எல்லோருடைய கடமை.


Wednesday, December 18, 2013

இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டமும் அரசின் சூழ்ச்சியும்.

இதன் பின்னணியில் குறுகியகால மற்றும் நீண்டகால பெரும் சதித் திட்டங்கள் இருக்கலாம். முழுமையான தகவல்கள் இன்னமும் ஊடகப்படுத்தப்படாத நிலையில் இன்று ஊகிக்க கூடிய சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர்வழங்கல் திட்டத்தை கொண்டுவந்தது தற்போதைய யாழ் அரச அதிபர் தலமையிலான குழு என்று அறியப்படுகிறது.

மட்டக்களப்பில் இருந்து ராஜபக்சவால் யாழிற்கு இடமாற்றம் பெற்ற கணேஸ் யாழ்மாவட்ட நிலமைகள் மற்றும்நிர்வாக செயற்பாடுகளில் பரீட்சையமாவதற்கு முன்னரே அவசர அவசரமாக இரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார்.

இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டத்திற்கு இருபதினாயிரம் மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கபட்டிருப்தாகவும் சொல்லப்படுகிறது.


இரணமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குளத்து நீரை கொண்டு செல்வதற்கும் அதற்கான வழங்கல் வடிகாலமைப்புகளை நிர்மாணிப்பதற்கும் இருக்க கூடிய பொறியியல் மற்றும் சட்டவாக்கல் செலவுகளுக்கு யாழ்ப்பாணத்திலேயே நிரந்தர மழைநீர் சேகரிப்பு திட்டங்களையும் தரவை உள்ளிட்ட நீர்தேங்கல் நிலங்களை புனரமைக்கவும் முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தில் நீர் சேகரிப்பு நிலங்களை இனம் கண்டு அதை புனரமைப்பதைவிடுத்து இரணைமடுவில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டும் என விடுக்கபட்டிருக்கும் யாழ் "அரசாங்க" அதிபரின் கோரிக்கைக்கு பின்னால் இராணுவ மற்றும் அரசியல் நலன்கள் இருப்பதை யாழ் மற்றும் கிளிநொச்சி மக்கள் நன்கறிவார்கள்.

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு நீர்வழங்கல் பொறிமுறைகளை அமைப்பதென்பது ஏராளமான நீர் நிலைகள் மற்றும் தனியார் காணிகள், வீதிகளை ஊடறுத்து செல்ல வேண்டும். இருக்க கூடிய சட்டப் பிரச்சினைகளை ஆழும் அரசு என்ற ரீதியில் அதிகாரப்போக்கில் வென்றாலும் கண்மூடித்தனமானக யாழ் மக்களிற்காக இருபதினாயிரிம் மில்லியனை முதலீடு செய்ய சிறிலங்கா அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மிக அவதானமாக அணுக வேண்டும்.

இருபதினாயிரம் மில்லியன் ரூபாய்களை இலாபத்துடன் சிறிலங்கா அரசு எப்படி மீளப் பெற திட்டமிட்டுருக்கிறது என்பதை புத்திஜீவிகள் ஆய்வு செய்ய வேண்டும். இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் சிறிலங்கா அரசு எப்படியான திட்டத்தை வைத்திருந்திருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டியது தமிழர்களுக்கு மிகப்பெரிய சவால்.

முதலீடு செய்த பணத்தை இலாபத்துடன் மீளப்பெறுவதற்கு தமிழர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படலாம் அல்லது சிங்களவர்கள் குடியேற்றப்படலாம்.

இரப்பர் போன்ற "பணப்பயிர்" விவசாயத்தை ஊக்குவித்தல் எனும்பெயரில் சிங்களவர்கள் குடியேற்றப்படலாம்.

இதனால் அரசாங்கத்தின் முதலீட்டு சிந்தனையும் அதன் எதிர்கால குறிக்கோளும் பற்றி ஆய்வு செய்ய வேண்டியது தமிழீழ பொருளியலாளர்களின் கட்டாயக் கடமையாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருக்க கூடிய பேராசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தர மழைநீர் சேகரிப்புத்திட்டங்கள் குறித்தும் அதனை எப்படி கட்டியெழுப்புவது குறித்தும் ஆய்வு செய்துபிரேரிக்க வேண்டும்.



இரணைமடு நீரை வெளியேற்ற வேண்டும் என்ற சிறிலங்கா யாழ் "அரச" அதிபரின் கோரிக்கையின் பின்னால் இருக்க கூடிய இராணுவ மற்றும் அரசியல் தேவைகள் குறித்து பார்ப்போம்.

சிறிலங்காவின் நீண்டகால இராணுவ மற்றும் அரசியல் திட்டம்:

இரணைமடு-யாழ்ப்பாண நீர்வழங்கல் திட்டம் நிறைவேற்றப்படுமானால் அதன் பிற்பாடு இரணைமடுவின் நீர்மட்ட அளவு குறித்து யாரும் பேசப்போவதில்லை. நீர்வழங்கல் திட்டம் சீரானதாக நடைபெறுகிறதா என்பதை மட்டுமே கண்காணிப்பார்கள்.  இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தபடுமானால் அதனால் தொடங்கப்படும் அத்தனை வர்த்தகங்களும் சரியானதாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதே முக்கிய நோக்கமாக கண்காணிக்கப்படும். இருபதினாயிரம் மில்லியனை எந்தவொரு வருமானமும் இன்றி வடக்கில் முதலீடு செய்ய அரசு ஆர்வமாக இருக்கப்போவதில்லை.

இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் ஆரம்பிக்கபட்டு,
ஒருவேளை இரணைமடுவின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நீர்போதுமானதாக இல்லை எனவே யாழ்ப்பாணத்திற்கு நீர் வழங்கலை நிறுத்தி வையுங்கள் என கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை எழலாம் அப்பிடியான ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் மிகப்பெரிய பிரதேசவாத பிரித்தாளும் நிலையை உருவாக்க முடியும் என சிறிலங்கா மற்றும் இந்திய அரசு திட்டம் தீட்டியிருப்பதாகவே தெரிகிறது.

தமிழர் பிரதேசங்களை பிரித்தாள வேண்டும் என்ற திட்டம் இந்திய அரசினால் திட்டமிடப்பட்ட ஒன்று என்பது மாவிலாற்று அணை மூடப்பட்டு போர் தொடங்கி வைக்கபட்டதில் இருந்து புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று.

ஏற்கனவே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் தமிழர் தாயகங்களை சாதுர்யமாக கூறுபோட்டிருக்கிறது இந்தியா. திருகோணமலை துறைகமுகம் உள்ளிட்ட பகுதி சம்பூர் மற்றும் மட்டக்களப்பின் சில பிரதேசங்களையும் இந்தியா அபிவிருத்தி எனும் பெயரில் தன்னகப்படுத்தி தமிழ் மக்களை வெளியேற்றியிருக்கிறது.

மக்களிடத்தில் இடைவெளியையும் ஒருவித பதட்டத்தையும் உருவாக்கி வைத்திருப்பதால் தமது ஊடுருவல்களை இலகுவாக செய்யலாம்என்பது இராணுவ உத்தியாகும்.

இரணைமடு ஏன் கருப்பொருளானது.

இரணைமடுவில் விடுதலைப்புலிகளால் "இலகு ரக" விமானங்களிற்கான இறங்குதளம் ஒன்று காணப்பட்டதும் அதை சிறிலங்கா அரசு புனரமைத்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதும் யாவரும் அறிந்த விடையம்தான்.

இன்று சிறிலங்கா அரசால் புனரமைக்கபட்டு பெரிய விமானங்களுக்கான தளமாகவும் அதாவது அதிவே இராணுவ விமானங்களுக்கான தளமாகவும் உருவாக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

அதிவேக விமானங்களுக்கான தளமாக அது மாற்றபடப்டிருந்தால் அது இரணைமடு குள அணைக்கட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும்.

இரணைமடு நீர்மட்டத்தை எப்போதும் குறைவாகவே வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அதிவேக விமானங்களின் தேவைகளுக்கு இறங்கு தளம் பாவிக்கப்படும் போது நிலத்தில் ஏற்படக்கூடிய அதிர்வானது பெரும் நீர் அழுத்தத்தினால் காணப்படும் அணைக்கட்டை உடைக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் நீர்மட்டத்தை வழமையை விட மிகக் குறைவாகவே இராணுவம் வைத்திருக்க விரும்பும்.


சிறிலங்கா அரசின் பெருமெடுப்பிலான முதலீட்டு சிந்தனையின் பின்னணியில் வடக்கைப்பொறுத்தவரை இராணுவ நலன்கள் இருக்காமல் இருக்க முடியாது.


இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் குறித்து மக்களிடத்திலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடையேயும் பேசப்படும் அழவிற்கு வடக்கில் இருக்க கூடிய அரச ஆதரவு கட்சிகளிடமிருந்தோ நேரடி அரச அமைப்புகளிடமிருந்தோ எந்த கருத்துக்களும் வெளிப்படாமல் இருக்கிறது.


அவதானித்துக் கொண்டே இருப்போம்.


ஆதி
19-12-13















Tuesday, December 10, 2013

தாய்லாந்து போராட்டம் சீனாவின் நேரடிப்பலப்பரீட்சையா!! #தெற்காசிய சமகால அரசியல்

தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் பின்னணியில் சீனா இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மத்தியகிழக்கில் மேற்குலகின் ஆதிக்கம் அல்லது கைப்பொம்மை ஆட்சிகள் உருவாக்கபட்டுவரும் நிலையில் தெற்காசியாவில் சீனா தனது பலத்தை பரிசோதிக்கும் களமாக தாய்லாந்து இருக்கலாம்.

தாய்லாந்து அரசியல் போராட்டத்தின் பின்னணியில் சீனா இருக்கிறது எனக் கூறப்படும் கருத்து உண்மையாயின் எதிர்காலத்தில் தெற்காசியாவில் பெரும் அரசியல் மாற்றங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே பர்மாவில் சீன - அமெரிக்க - இந்திய அரசியல் இழுபறிகளில் பலப்பரீட்சைகள் செல்வாக்கு செலுத்திவரும் நிலையில் தாய்லாந்தில் சீனாவின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்படுமாயின் அண்டைநாடான மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வெளிப்படையான சீன ஆதிக்கத்தை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் சிறிலங்காவை சீனா தனது கட்டுப்பாட்டில் அல்லது சீனாவிரும்பும் ஆட்சிமாற்றங்களை உருவாக்கும் வல்லமை பொருந்திய நாடாக மாற்றுவதற்கான சாதகங்கள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

இந்தியம் மற்றும் இந்தியத்தின் பிராந்திய ஆதிக்கம் ஏற்கனவே ஆட்டம் காணும்  நிலையில் இருப்பதால் இந்தியாவில் இருக்க கூடிய தனிப்பெரும் இனங்கள் தமது சுய விடுதலைகுறித்து சிந்திக்க வேண்டிய காலம் உருவாகி இருக்கிறது.

இந்தியம் என்ற மாயைக்குள் சிக்கி இருக்கும் பெரும் இனங்களுக்கு சுய விடுதலை குறித்து சிந்திப்பதற்கோ அல்லது போராடுவதற்கோ இன்றைய காலங்களில் துணிவும் செய்ற்பாட்டு பொறிமுறையும் இல்லாது இருப்பினும் கட்டாயம் இந்திய மாயையை உடைத்தெறிய வேண்டிய நிலையை காலம் விரைவில் உருவாக்கும் என்றே தெரிகிறது.


ஆதி
10-12-13

Monday, November 25, 2013

புரட்சிகர தமிழீழச் சனம் சிங்கள இராணுவத்துடன் செய்யும் உளவியல் போர் உணர மறுக்கும் உலகம்

உலக வரலாற்றில் போராடும் மக்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் பலவிதமான போரைச் செய்வார்கள். பாலியல் வன்முறைகள், கொடூரமான படுகொலைகள் மற்றும் போராடுபவர்களின் இலக்கு குறித்த சந்தேகத்தை எழுப்பி பரப்புவது  என ஆக்கிரமிப்பாளர்களின் போர் விரிவடைந்து செல்லும்.

இப்படிப்பட்ட இன்னல்களையும் சோர்வடையச் செய்யக்கூடிய உளவியல் போரையும் வென்ற இனம் விடுதலை பெற்றுவிடும் இதுதான் உலக நியதி.

இப்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்று நீட்சியில் தமிழீழ மக்களின் போராட்டம் வித்தியாசமாக உருவெடுத்திருக்கிறது.

30 வருடங்களிற்கு மேல் தங்களை பாதுகாத்து வழிநடத்தி எதிரியிடம் போரிடக் கற்றுக்கொடுத்த அமைப்பும் அந்த மக்களின் தலமையும் இல்லாத நிலையில் தமிழீழ மக்கள் மண்ணில் செய்து கொண்டிருக்கும் பெரும் உளவியல் போர் சிங்கள அரசை மட்டுமல்ல அதன் இயந்த்திரமாக இருக்கும் சிங்கள கொலைவெறி இராணுவத்தையும் அசைத்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

2009 இல் தமிழீழ அரசு தனது ஆயுதங்களை மௌனித்து சர்வதேச சதியினால் சரணடைந்த பிறகு, இந்திய சிவசங்கர் மேனன் உள்ளிட்ட கும்பலால் பிரேரிக்கப்பட்ட முட்கம்பி வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட பின்பு நடந்த மாவீர்தினங்களையும் சம்பவங்களையும் அவதானமாக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய நிலையிலும் அதை சர்வதேசத்திடம் முறையாக கொண்டு சென்று எமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய நிலையிலும் தமிழீழ மக்கள் இருக்கிறார்கள்.


2009 மாவீரர் தினம் - மெனிக்பாம் மற்றும் சில முட்கம்பி முகாம்களுக்குள் விளக்கு கொழுத்தியதால் மக்கள் மீது சிங்கள இராணுவம் அடாவடி

2010 மாவீர்ர தினம் - மட்டக்களப்பு நகர் மத்தியில் மாவீரர் ஈகச்சுடர் ஏற்றும் நேரம் மாவீரர் கானம் இசைக்கப்பட்டது. மற்றும் சில இடங்களில் மாவீரர் படங்கள் வைக்கப்பட்டது தீபம் ஏற்றப்பட்டது.

2011 மாவீரர் தினம் - கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாவீரர் நாளை முன்னிட்டு தாக்க வருவதாக நினைத்து கிளிநொச்சியில் சிறுவனை இராணுவம் சுட்டுக் கொன்றது. கிளிநொச்சியில் பல கோயில்களில் ஒலிபெருக்கிகள் இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

2012 மாவீர் தினம் - தமிழீழத்தில் எல்லா மாவட்டத்திலுமே மாவீரர் தின எழுச்சி பதாதைகள் மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டன. யாழ் மற்றும் கிழக்கு  பல்கலைக்கழகத்தில் வெளிப்படையாகவே தீபங்கள் ஏற்றப்பட்டன. கோயில்களில் பிரார்த்தனைகள் நடந்தன. கார்த்திகை தீப நாளை சாக்காக வைத்து கிறிஸ்தவ மத்தை பின்பற்றும் தமிழர்களும்  வீதிகளில் தீபம் ஏற்றினர். வீதிகளுக்கு இறங்கி தீபங்களை காலால் மித்தது சிங்கள இராணுவம். யாழ் பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2013 மாவீரர் தினம் - மாவீர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்ய சனம் துயிலுமில்ல வாசல்வரை சென்றது. மக்களின் சின்ன சின்ன அமைப்புகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டது. சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பு மாவீரர் நினைவு நாள் மற்றும் மாவீரர் நினைவிடங்கள் பற்றி பேசியே ஆகவேண்டிய கட்டாய நிலையை மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.


தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தமிழீழ மக்களின் தலமை களத்தில் இல்லாத நேரத்தில் தமிழீழ விடுதலை குறித்து மக்கள் இந்த அளவிற்கு சிங்களத்துடன் மோதுவதென்பது சாதாரண விடையமல்ல. வெறுமனே இந்த மாதத்தில் மட்டுமல்லாது காணாமல் போனோர் மற்றும் நிலப்பறிப்புக்கு எதிராக சனங்களின் மூர்க்கம் அதிகரித்து வருவது சிங்களத்திற்கு விளங்குவது போல் உலகத்திற்கு விளங்கவில்லையா அல்லது அதை சரியான முறையில் உலக அரங்கில் கொண்டு சேர்கவில்லையா என்பது குறித்து கவனமெடுப்பது அவசியமான ஒன்று.


ஆதி
25-11-13

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP