Powered by Blogger.

Friday, June 20, 2014

தமிழினமாக ஒன்றுதிரண்டுபார். அறிவு பணம் பலம் எல்லாமே எங்களிடம் மட்டும்தான் இருக்கிறது.

ஈழத்து தமிழ் இசுலாமியர்களே ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களின் தேவை சிங்களத்திற்கு மடிந்துவிட்டது. தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை நியாயப்படுத்தி சிங்கள அரசுக்கு எதிராக அரபுநாடுகளின் வாக்கை பெற்றதோடு சிங்கள அரசின் தேவையும் முடிந்துவிட்டது.

வடக்கில் இருந்து புலிகள் வெளியேற்றினார்கள் என்ற ஒன்றைத்தான் இதுவரை முசுலீம் அரசியல்வாதிகள் வெறியாக அப்பாவி தமிழ் இசுலாமியர்களுக்கு ஊட்டி வந்தார்கள்.

வடக்கில் இருந்து வெளியேற்றியது தவறு என்பதற்காக அதற்கு எல்லா இசுலாமியர்களிடமும் புலிகள் அமைப்பு மன்னிப்புக் கோரியிருந்தது.

தவிர
1) விடுதலைப்புலிகள் அமைப்பில் தமிழ் இசுலாமியர்கள் இராணுவமாக இருந்திருக்கிறார்கள். வீரச்சாவைத் தழுவியிருக்கிறார்கள்.

2) விடுதலைப்புலிகள் இசுலாமியர்களின் கல்வியை அழிக்கும் இந்த இழி வேலையையும் செய்யவில்லை. இசுலாமிய மார்க்கத்தை அழிக்கும் எந்த இழிவேலையையும் செய்யவில்லை.

3)விடுதலைப்புலிகள் இசுலாமியர்களின் வர்த்தக நிலையங்களை அழிக்கும் இழி வேலைகளை செய்யவில்லை.


அது போக; காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலை தொடர்பில் இதுவரை புலிகள் மீது குற்ம்சாட்டப்பட்டு வந்தாலும் அந்த காலப்பகுதியில் அங்கு தளபதியாக இருந்த கருணாவை விசாரிக்கும் படி இசுலாமிய அமைச்சர்கள் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. இசுலாமிய அமைப்புகள் கோரிக்கை வைக்கவில்லை காரணம் என்ன!!!!

பிரித்தாழும் நுட்பத்தை சிங்கள முசுலீம் அரசியல் தலமைகள் திட்டமிட்டே செய்கின்றன. காத்தான்குடிக்கு கருணாவை விசாரித்தால் சத்திருக்கொண்டானுக்கு ஹிஸ்புல்லாவை விசாரிக்க வேண்டி வரும் என்று சிங்கள முசுலீம் தலமைகள் அஞ்சுகின்றன.

எல்லா அச்சமும் அரசியல் தலமைகளுக்கு தான். அப்பாவி தமிழ் இசுலாமிகள் தங்களை உணர வேண்டும். தமிழ் இசுலாமிகளின் பிரச்சினையை தமிழினம் இனப்பிரச்சினையாக கையாழும் என்ற நம்பிக்கை வரவேண்டும். தமிழின பிரச்சினையாக கையாள வேண்டும் என்று தமிழ் இசுலாமிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழினமாக ஒன்றுதிரண்டுபார். அறிவு பணம் பலம் எல்லாமே எங்களிடம் மட்டும்தான் இருக்கிறது. பள்ளிவாயல்களும் கோவில்களும் தேவாலையங்களும் தமிழீழப் பரப்பெங்கும் தமிழினமான போதனை செய்யும்.

தமிழ் இசுலாமிகளின் பிரச்சினையை தமிழின பிரச்சினையாக மாற்றுங்கள். முசுலீம் அரசியல்வாதிகளின் அரசியல் நாடகங்களை நம்பாதீர்கள்.

ஆதி
21-06-2014

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP