Powered by Blogger.

Thursday, June 26, 2014

ஜெயபாலனின் முகநூல் பதிவிற்கான பதில்

வணக்கம் திரு ஜெயபாலன் அவர்களே

இது பெரிய பதிவு. பொறுமையாக வாசியுங்கள். 

என்னைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதியிருக்கும் முகநூல் குறிப்பு மற்றும் விவாதங்கள் தொடர்பில் தனியாக வகைபிரித்து கையாளுவதே வாசிப்பவர்களுக்கு உங்கள் பற்றியதான தெளிவு வரும் என்று நினைக்கிறேன்.

அதற்கு முதல், இது வரை எனது எந்தப் பதிவுகளும் சிங்கள மக்களையோ இசுலாமியர்களையோ தமிழினத்தின் எதிரியாக எழுதப்பட்டிருக்கவில்லை. தமிழீழத் தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழீழ சிங்களவர்கள் மற்றும் இசுலாமியர்கள் பங்கு பற்றுகிறார்கள் என்று கொண்டாடிய மண்ணைச் சேர்நதவன் நான். அது பற்றி நீங்கள் எனக்கு அதிகவகுப்பெடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

தவிர சிங்கள இலக்கிய மற்றும் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு எதிர்க்கோசம் எழுப்பும் சிறுபிள்ளைத்தனமும் இல்லை. படைப்பின் தார்பரியம் மற்றும் நோக்கம் கொண்டே அணுக வேண்டும் என்பது உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு  தெரியாத ஒன்றல்ல.

ஜெயபாலனின் முகநூல் பதிவு

ஆதி ஆதிதியன் அவர்களே எங்கள் மண் எங்கள் பிரச்சினைபற்றி ஒன்றும்தெரியாமல் எங்கள் ஆதரவு என வாழ்க வீழ்க கோசங்கள் போடுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு தெரியாதவற்றை நெடுமாறன் ஐயா போன்ற வ்டயம் தெரிந்த தமிழ் உணர்வாலர்களிடனமோ அல்லது ஈழம்பற்றிய அறிவுத் தேடல் உள்ள ஈழ ஆதரவு கல்லூரி மாணவர் இயக்க தலைவர்களிடம் இருந்தோ கற்றுக் கொள்ளுங்கள்.
இனியாவது களத்தில் இருக்கும் மக்களிடமிருந்து எங்கள் பிரச்சினைகளை அறிய முயற்ச்சி எடுங்கள். உங்கள் ஆதரவு எங்கள் மக்களுக்குத் தேவை. அதற்க்காக தமிழகத்தில் வைத்து எங்களை மிரட்ட முடியும் அதிகாரம் செய்ய முடியும் என கனவு கானாதீங்க. தமிழக மக்கள் ஈழத்து மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
என்னைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும். Please red atleast my interviews on military geography. of Eelam and South Asia. (<a>http://webcache.googleusercontent.com/search?q=cache%3Ahttp%3A%2F%2Fwww.thoguppukal.in%2F2011%2F02%2Fblog-post_9936.html</a>) (<a>https://groups.google.com/forum/#!msg/mintamil/SHJTipUQwnk/6XhzEIwp_2EJ</a>)

1996ல் விடுதலை அமைப்பு கேட்டுக்கொண்டதன் பெயரில் இராணுவபுவியியல் உட்பட பல பிரச்சினைகளில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்தவன் நான். இந்த பின்னணியால்தான் என்னை இலங்கையில் கைது செய்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் நோர்வே இலங்கை முஸ்லிம் தலைவர்களின் உடனடித் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் உலக தமிழக ஊடகங்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் என்னைக் கொன்றிருப்பார்கள். என்னைபற்றி 2006 தீராநதி பேட்டியையாவது வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்னர் நான் எழுதிய தோற்றுப்போனவர்களின் பாடல் கவிதையையாவது வாசியுங்க (<a>http://www.yarl.com/forum3/index.php?showtopic=66130</a>)

விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தில் களத்தில் வாழும் மக்கள் நலனே எனது நிலைபாடாக இருந்தது. புலிகளும் என் ஆதரவையும் விமர்சனங்களையும் அங்க்கீகரித்தார்கள். இயக்குனர் பிரசன்ன விதானகேயுக்கு வன்னியில் நல்ல மதிப்பிருந்தது. இதனை பலரும் அறிவார்கள். நானும் அறிவேன். எங்கள் எதிரிகளை விட்டு விட்டு நண்பர்களையே எதிர்ப்பதில் ஏன் குறியாக இருக்கிறீங்க? . ஈழத்தின் பெயரைச் சொல்லி தமிழகத்தில் வன்னியின் நண்பர்களை மிரட்டும் அதிகாரத்தை யார் உங்களுக்குத் தந்தார்கள்?
கல்லூரி மானவர்களது போராட்டங்கள் பல்வேறு தமிழ் உணர்வாலர்களின் போராட்டங்கள் எங்களுக்கு நிறைய பலத்தை தருகிறது. அவர்களிடமிருந்தாவது கற்றுக்கொள்ளுங்கள். - ஜெயபாலன் 26-06-2014
(இதை அழிக்கவோ ஏதும் மாற்றமோ செய்ய மாட்டார் என நம்புகிறேன்)

இனி விடையத்திற்கு வருகிறேன்.

1) சிங்கள இராணுவத்தால் பாதிக்கபட்ட தமிழ்ப் பெண்கள் உச்சக்கட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்ய வேண்டும் அல்லது அதை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் நுட்பமாக எடுக்கபட்டிருக்கும் இன அழிப்புக் கருவியான "With you Without You" வை நீங்கள் ஆதரிப்பதன் நோக்கம்

 2) விடுதலைப்புலிகளின் இராணுவ புவியல் தொடர்பில் ஆராய்ச்சி செய்த உங்களின் "இன்றைய" பின்னணி


"With you Without You" சொல்லவருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

சிங்கள இராணுவத்தால் பாதிக்கபட்ட தமிழீழ பெண் ஏன் சாகவேண்டும்?

தன் இனத்தை தன் குடும்பத்தை அழித்த சிங்கள இராணுவனை அந்தப் பெண் கொன்றாள் என அந்த படத்தை எடுத்திருக்கலாமே. அழித்து மிஞ்சியவர்கள் மன அழுத்தத்தில் சாக வேண்டும் என திரைப்படம் மூலம் சொல்லுவது இன அழிப்பின் கருவி இல்லையா?

இந்த இன அழிப்பு நுட்ப அரசியல் உங்களைப்போன்ற மேதாவிகளுக்கு விளங்கவில்லையா?

பெண்ணியம் ஆணாதிக்கம் பேசும் உங்களுக்கு இந்த படத்தில் இருக்கும் நட்பமான அடக்குமுறை புரியவில்லையா என்ன. அது லீனாமணிமேகலைக்கு தெரியாதா என்ன?

2009 இன அழிப்பிற்கு பிறகு போரால் பாதிக்கபட்ட பெண்கள் குறித்தான எந்வொரு உளவியல் ஆய்வுகளையும் சிறிலங்கா அரசோ வெளிநாடுகளோ ஏன் தமிழர் அமைப்புகளோ செய்யாத நிலையில், போரால் பாதிக்கபட்ட பெண் தற்கொலை செய்வதாக காட்டும் சினிமா எவ்வளவு பெரிய நுட்பமான இன அழிப்பு பாத்திரம் என புரியவில்லையா உங்களுக்கு

சிங்கள இராணுவத்தால் பாதிக்கபட்ட ஒரு தமிழ்ப் பெண் இராணுவ வன்முறைகளின் தாக்கத்தின் மன அழுத்தத்தால் தற்கொலை செய்கிறாள் என்ற செய்தியை எப்படியான மனநிலையில் ஆதரிக்கிறீர்கள்? திரைப்படம் ஒரு "கலை" என்று கன்றாவித்தனமாக பதில் சொல்லாமல் நேரடியாக பதில் சொல்லுங்கள். போரால் பாதிக்கபட்ட தமிழ்ப் பெண் அந்தத் தாக்கத்தால் என்றாவது ஒரு நாள் தற்கொலை செய்வாள் என்று சிங்கள திரைப்படம் சொல்லும் செய்தியை நீங்கள் ஆதரிப்பதன் நோக்கம் என்ன?

2009 இன அழிப்பு போருக்கு பிறகு செய்திகளிலோ காவல் நிலைய பதிவேடுகளிலோ வராமல் எமது எத்தனை பெண்கள் தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டார்கள் என்ற கணக்கு உங்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை.

முகாமில் இராணுவ பாலியல் சித்திரவதைகள். மீளக் குடியமர்த்தபட்ட பின்னர் ஆண் துணையின்றி வாழும் பெண்களுக்கு பல வகையாலும் பாலியல் கொடுமைகள் என வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரத்தை எனது நிலம் தாங்கிக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது.

பாடசாலைப் பெண்கள் இராணுவ காவலரன்களை ஒவ்வொரு தடவை கடந்து போகும் பொழும் கண்களாலும் வார்த்தைகளாலும் எப்படியெல்லாம் மானமங்கப்படுத்தப்படுகிறாள் என்பது உங்களைப் போன்றவர்களுக்கு விளங்கப்போவதில்லை.
போரால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் உளவியலை எதிர்கொள்ள முடியாது தற்கொலை செய்வார்கள் என்று சொல்லும் படத்திற்கு ஆதரவாக ஜெபாலனை கொம்புசீவி அனுப்பும் லீனாமணிமேகலை


விடுதலைப்புலிகளின் இராணுவபுவியியல் தகவல்களை யாரிம் கொடுத்தீர்கள்?

உயிரைப் பணயம் வைத்து நீங்கள் மாத்திரமல்ல கருணா உள்ளிட்ட பலர் வேலை செய்திருக்கிறார்கள். "இன்று" என்ன செய்கிறீர்கள் என்பதுதான் கேள்வி.

விடுதலைப்புலிகளின் இராணுவ புவியியல் சம்மந்தமான வேலை செய்த நீங்கள் அதன் தகவல்களை கைமாறியிருக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உறுதி. 2006 மற்றும் 2007 காலப் பகுதியில் நீங்கள் இந்தியாவில் றோ அதிகாரிகளை சந்தித்ததாக உங்கள் சகாக்களிடம் சொல்லியிருக்கிறீர்களே.

விடுதலைப்புலிகளின் இராணுவ புவியியல் கட்டமைப்பில் வேலை செய்ததாக பகிரங்கமாக சொல்லிய பின்னரும் சிறிலங்காவில் உங்களை எந்த விசாரணையுமின்றி வெளிவருவதற்கு அனுமதியளித்தார்கள் என்பதன் அர்த்தம் என்ன?

கடைசிநேரம் லைனுக்கு சாப்பாடு குடுத்தவனையே பிடிச்சு வருடக்கணக்கில் புனர்வாழ்வு என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கும் பொழுது உங்களை அதுவும் "இராணுவ புவியியலில்" வேலை செய்தவரை எப்படி எந்த சலனமும் இன்றி நடமாட விட்டார்கள்?

உங்கள் நண்பர் மற்றும் சிறிலங்கா அமைச்சாரக இருக்கும் ரஃப் ஹக்கீம் இந்த "இராணுவ புவியியல்" குறித்து எதுவும் வினவவில்லையா?

 விடுதலைப்புலிகளின் இராணுவ புவியயல் குறித்து நீங்கள் வைத்திருந்த தகவல்களை கட்டாயம் கைமாறியிருப்பீர்கள் என்பது வெளிப்படை உண்மை.

ஜெயபாலன் குறித்து அருள் எழிலன் அவிழ்த்திருக்கும் மிக முக்கியமான கருத்து


அருள் எழிலனின் கருத்துக்கு நாசுக்காக மழுப்பலுடன் வெளியேறும் ஜெயபாலன்


லீனாவின் ஆதரவு நிலைப்பாடு

லீனா மணிமேகலை தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராகவும் தமிழீழ மக்களின் நீதி வேண்டிய போராட்டங்கள் மற்றும் அணுகு முறைகளுக்கு எதிராகவும் மிக நுட்பமாக செயற்பட்டுவருகிறார்.

இன அழிப்பு போரில் தமிழ் மக்கள் எப்படி திட்டமிடப்பட்டு அழிக்கபட்டார்கள் என்று சனல்4 ஊடகம் ஆவணப்படம் தயாரித்து அய்.நாவில் வெளியிட அதற்கு போட்டியாக "இலங்கையில் தமிழர்கள் மட்டமல்ல எல்லோருமே கொல்லபட்டார்கள். நடந்தது தமிழர்களுக்கு மட்டும் எதிரான யுத்தமல்ல" என்று காட்டுவதற்கு அவசர அவசரமாக "வைட் வான்" என்ற ஆவணத்தை தயாரித்து நாசுக்காக அதை சனல்4 வரை கொண்டு போனார். இருந்தாலும் அதன் தாக்கத்தை தமிழீழ விடுதலை ஆர்வலர்கள் தடுத்திருக்கிறார்கள்.

குறிப்பு: ஈழத்தில் படமாக்கப்பட்டதாக லீனா சொல்லியிருப்பதன் பின்னணியில் அதில் பாவிக்கபட்ட சீருடைகள், ஆயுதங்கள் உட்பட பல விடையங்கள் அதன் பின்னணியையும் நோக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

நிலைப்பாடு

தமிழீழ விடுதலைப்போராட்டம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்தான ஆதரவு மற்றும் விமர்சனங்கள் கடந்த 2009 இற்கு பிறகு நிறையவே பல தரப்பிலிருந்து வெளிபட்டாகிவிட்டது.

வன்னியின் நண்பர்கள் வன்னியின் பெண்கள் தற்கொலை செய்ய வேண்டும் என்றோ தற்கொலை செய்வார்கள் என்றோ படம் எடுக்கப்போவதில்லை.

தமிழ் மக்களின் விடுதலையில் ஆத்ம ரீதியாக ஆதரவுடைய ஏராளமான சிங்கள நண்பர்கள் வன்னிக்கு இருக்கிறார்கள். இனம் அழியும் என்று சொல்லும் வியாபார புருசர்கள் உங்களுக்கு மட்டுமான நண்பர்களே தவிர இந்த புழுதியில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் சனங்களின் நண்பர்கள் அல்ல என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


உங்கள் போன்றவர்களை வாசிப்பதே போதுமான பாடம். இதில் புதிதாக யாரிடமும் கற்கவேண்டிய அவசியமில்லை.

ஆதி
26-06-2014



No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP