Powered by Blogger.

Saturday, June 25, 2011

ஈழத்தமிழர் அரசியலில்; தமிழக அரசியலின் செல்வாக்கு





ஈழத்து அரசியலில் காலாகாலமாய் பிராந்திய வல்லாதிக்கங்களின் செல்வாக்கு இருந்து கொண்டேதான் வருகிறது. அதிலும் ஈழத்தமிழர் உரிமைப்பிரச்சினையை பொறுத்தவரையில் சிங்கள அரசுகளால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு அதை எதிர்த்து ஈழத்தமிழர் அரசியல் தலமைகள் போராட்டங்களை ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழக அரசியல் செல்வாக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தே வருகிறது.


தமிழக அரசியலின் துணையின்றி ஈழத்தமிழர் விடையத்தில் எந்த அரசியல் முடிவுகளையும் எடுக்க முடியாத மறைமுக அழுத்தங்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஈழத்தமிழர் நலன் தொடர்பில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்திய அரசிடம் நீதி கேட்டால் தமிழர் உரிமைப்பிரச்சினை தொடர்பில் சாதகமான முடிவுகளை இந்திய அரசு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற நிலை காணப்படுகிறது. காரணம் இந்திய ஆழும் அரசுகளுக்கு தமிழ் நாட்டு அரசியல் சக்தி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.


இங்கு சில விடையங்கழள நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று பிராந்திய வல்லாதிக்கங்களின் அரசியல் பரம்பல் எப்படி எமது உரிமைப்பிரச்சினையில் செல்வாக்கு செலுத்துகின்றன மற்றயது அந்த செல்வாக்கு எப்படி தமிழ் நாட்டினூடாக அமுல்படுத்தப்படுகின்றன என்பதேயாகும்.


பிராந்திய வல்லாதிக்கங்களின் அரசியல் பரம்பல் என்பது பெரும்பாலும் வர்த்தகத்தை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. தெற்காசியாவின் நுகர்வோர் சந்தையை கைப்பற்றுவதும் அதன் மீது தமது ஆதிக்கத்தை தக்கவைப்பதற்காகவுமே வல்லாதிக்க அரசுகள் முனைப்புக்காட்டி வருகின்றன. அந்த வர்த்தக போட்டியில் பிரந்தியா அரசியல் விடையங்களில் தமது செல்வாக்கை அதிகரித்து அதனூடாக வர்த்தக சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளில் தான் அனைத்து வல்லரசு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.


 தெற்காசியாவின் நுகர்வோர் சந்தையின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு சீனாவின் அதிகரித்துவரும் வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. ஆதனால் தெற்காசிய அரசியலில் குழப்ப நிலைகளை உருவாக்கி அதனூடு தனது செல்வாக்கை செலுத்த வேண்டிய தேவையும் அதற்கிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை நேரடியாக அமெரிக்காவிற்கெதிராக களத்தில் இறங்க முடியாதெனிலும் பிராந்திய அரசியல் நிலையை கட்டுப்பாட்டடில் தான தான்; வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறது. பல வர்த்தக உடன்படிக்கைகளை செய்து தனது; பல சந்தைகளை அமெரிக்காவிற்கு தாரைவார்த்துள்ள இந்தியாவிற்கு பரிசாக பிராந்திய அரசியலில் நேரடித்தலையீடு செய்வதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா வாய்ப்பளித்துள்ளது என்று கூட சொல்லக் சுடிய நிலை தான் காணப்படுகிறது.


தவிர தனது வர்த்தக செயற்பாடுகளுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா தெற்காசியா முழுவதும் தனது படையினரை பரப்பி வைத்துள்ளது. இலங்கையை பொறுத்த வரையில் அமெரிக்காவிற்கு இந்துமா சமுத்திரத்தில் தனது பாதுகாப்பு அணியினருக்கான தளம் அல்லது ஓய்வெடுக்க கூடிய தளம் அமைப்பதற்கு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இந்த நிலையில் தான் ஈழத்து அரசியல் நிலையை சாதகமாக பயன்படுத்தி தனது தலையீடுகளை விஸ்தரித்துள்ளது அமெரிக்கா.


அதே போல சீனாவினதும்; வர்த்தக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இப்படி பலதரப்பட்ட வல்லாதிக்கங்கள் மையம் கொண்டிருக்கும் நிலையில் தான் எமது உரிமைப்பிரச்சினைகளும் கையாளப்படுகின்றன.


ஈழத்தமிழர் பிரச்சினையை பொறுத்தவரையில் ஆரம்பம் தொடக்கமே இந்தியா நேரடியாக தலையீடு செய்து வந்துள்ளது. போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்தது மட்டுமல்லாது உரிமைப்பிரச்சினை தொர்பில் இலங்கை அரசை நேரடியாக கண்டித்தும் உள்ளது. இந்த நிலையில் போராளிக்குழுக்களின் மையமாக தமிழநாடு திகழ்ந்து வந்துள்ளது. காலப்போக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே சாதகமான தன்மை தமிழ் நாட்டு அரசியலில் புகுந்து கொண்டது. இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அச்சம் கொண்ட இந்திய அரசு தமிழீழ விடுதலை;புலிகள் பற்றிய நற்பெரை தமிழ் நாட்டடில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தது அதன் பிற்பாடுதான் விடுதலைப்புலிகளுக்கெதிரான சம்பவங்கள் சிலவற்றை தமிழ் நாட்டினூடாக செய்து முடித்தது இந்திய அரசு.


சில காலம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வெளிப்படை போக்கு இல்லாதிருந்த தமிழ் நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழத் தொடங்கின. அதை அடக்குவதற்கு காங்கிரஸ் அரசு பாவித்த மிகப்பெரிய ஆயுதம் தான் “கருணாநிதியின் அரசு”. குடும்ப அரசியலிலும் வியாபார நோக்கத்திலும் அதிக நாட்டம் காணப்பட்டவராக இருந்த கருணாநிதியை சாதகமாக பயன்படுத்திய இந்திய மத்திய அரசு அவரை சிறிலங்கா அரசிற்;கு நண்பராக அறிமுகப்படுத்தியதோடு அவருக்கு தனிப்பட்ட வியாபார ஒப்பந்தங்களையும் செய்வதற்கு ஊக்குவித்தது. ஈழத்தமிழர் விடையத்தில் அக்கறை உள்ளவர் போல் காட்டிக்கொண்டு ஈழத்தமிழருக்கான அனைத்து போராட்டங்களையும் தமிழகத்தில் நசுக்கிய கருணாநிதி சிறிலங்காவுடனான தனது நெருக்கத்தை அதிகரித்தார். இந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் எந்த கிளர்ச்சிகளுமின்றி விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை முறியடித்ததோடு பலலட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்து போரை நிறுத்திக் கொண்டது இந்திய அரசும் சிறிலங்கா அரசும்.


போர்ச் செல்வாக்குடன் தனது குடும்ப அரசியலை நிலை நாட்டுவதற்கு ராஜபக்ஷ போர் முடிந்த கையோடு தீவிரமாக இறங்கினார். ஆடிப்படையில் ராஜபக்ஷ சீன ஆதரவுப்போக்கு கொண்டவர் என்பதால் இலங்கையில் அவரின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை விஸ்தரிக்க முழு ஆதரவு இந்தியாவைவிட சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கிடைக்க ராஜபக்ஷ சிறிலங்காவின் பெரும் வர்த்தக பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு குடுத்ததுடன் சீனாவின் படைத்தளத்தை அமைப்பதற்காபன மறைமுக வேலைத்திட்டங்களிலும் இறங்கினார் ராஜபக்ஷ. இது இந்தியாவிற்கும் அதன் நட்பு நாடான அமெரிக்காவிற்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் ராஜபக்ஷவை அகற்ற வேண்டும் அல்லது அடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தள்ளப்படுகின்றன அமெரிக்காவும் இந்தியாவும்.


இந்த இறுக்கமான காலப்பகுதியில் தான் தமிழ்நாட்டு தேர்தல் மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சினை இந்த தேர்தலில் மிகத் தீவிரமாக்ப்ட்டது. தமிழர் போராட்டங்களை நசுக்கிய காங்கிரஸையும் கருணாநிதி அரசியலையும் இல்லாது செய்வதற்காக பிரச்சாரங்கள் வெளிப்படையாகவே பலதரப்பட்டோராலும் செய்யப்ட்டன. முடிவு ஈழத்தமிருக்கு துரோகமிழைத்த இரண்டு கட்சிகளும் தமிழக ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈழத்தமிழருக்கான  குரல்கள் தமிழக அரசிடம் இருந்து வருமானால் அதுவே “தனியரசு” பற்றிய தேவையை வலியுறுத்துமேயானால் இந்திய மத்திய அரசு அதை புறக்கணிக்க முடியாத நிலைக்கும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்படும்.


ஆனால் தற்போது ஆட்சிக்கு ஏறியுள்ள தமிழக அரசு தமிழக மக்களின் உணர்வை மதிக்காது இந்திய மத்திய அரசின் நிகழ்சி நிரலில் செயற்படுமேயானால் ஈழத்தமிழர் விடையத்தில் மாற்றம் ஏற்படப்போதில்லை. இந்தியஇ அமெரிக்க ராஜதந்திரம் ராஜபக்ஷவை அரசியலில் இருந்து தூக்கினாலும் தமிழக சட்டமன்றத்தில் ஈழத்தமிழருக்கான “தனி அரசு” கோரிக்கை நிறைவேற்றப்ட்டால்தான் அது ஈழத்தமிழர் விடையத்தில் செல்வாக்கு செலுத்தும். இந்தியாவின் உடன்பாடின்றி ஈழத்தமிழர் கோரிக்கையை மேற்குலகம் எவ்வளவு நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியே. இந்தியாவின் நிலைப்பாடு மாறுவதற்கு தமிழக அரசின் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.


சர்வதேச அரசியலில் எமக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும். அதனூடு தமிழக அரசிடமும் எமது கோரிக்கைக்கான சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எமது உரிமைப்பிரச்சினையில் பலதரப்பட்ட வல்லாதிக்க சக்திகள் பல்வேறு தேவைகளுக்கு மையம் கொண்டிருப்பதால் மிக அவதானமாக எமது ராஜதந்திர நகர்வுகளை செய்து எமது இலக்கை அடைய வேண்டிய கட்டாம் இருக்கிறது.


பலதரப்பட்ட ராஜதந்திரிகளோடும் எமக்கான உரிமைகளின் தேவைகள் பற்றியும் உரிமைகளை பெற்றுக் கொள்வது பற்றியும் எல்லோரும் பேசவேண்டும். எமது அபிலாசை குறித்த பிராந்திய வல்லாதிக்கங்களின் சந்தேகங்களை இல்லாது செய்து எமது விடுதலையை உறுதி செய்ய அனைவரும் பாடுபடவேண்டும்.
ஆதி
8-6-11

Sunday, June 19, 2011

பாதைகளை உருவாக்குவோம்


இன்று நாம் வித்தியாசமான அரசியல் சூழலில் இருக்கிறோம். பலவிதமான உலக அரசியல் மாற்றங்களுக்கு நடுவே எமது உரிமைப் பிரச்சினையை நகர்த்தியிருக்கிறோம்.இன்று தமிழர்களுக்கான இராணுவ தலமையோ குறிப்பிடத்தக்க அரசியல் தலமையோ இன்றி உலக அரங்கில் உரிமைப்பிரச்சினையை பேச வேண்டிய கட்டாய அரசியல் நிலமைக்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்ட்டிருக்கிறோம் என்பதை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனத்தின் தேசிய உரிமைப்பிரச்சினையை உலக அரங்கில் எமக்கு சாகமாக பல வழிகளிலும் நகர்த்த வேண்டிய கட்டாயமும் நகர்த்தப்பட்டுள்ள பல விடையங்களை இன்னமும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டிய தேவையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழர்களுக்கான விடுதலைப்போராட்டம் ஏன் ஆரம்பித்தது என்ற தார்ப்பரியத்தை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். அகிம்சைப் போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து இன்று முற்றுமுழுதான அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு பரிணமித்திருக்கிறது.

அகிம்சை போராட்டங்கள் தொடக்கம் ஆயுதப்போராட்ட முடிவு வரைக்கும் வெளிப்படையான தலமைகளை நாங்கள் கொண்டிருந்ததும் இன்றைய அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு வெளிப்படையான பொதுவான தலமையின்றி முற்று முழுதாக மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக மாறியுள்ளதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இன்றை நிலையில் சர்வதேச பார்வைகளை தமிழர் உரிமைப்பிரச்சினை மேல் தெளிந்த நிலையில் குவிக்க ஒட்டு மொத்த தமிழினமும் ஒன்றுபடவேண்டிய கட்டாயம் இப்பொழுது உருவாகியிருக்கிறது. உரிமைப்பிரச்சினைகளைஇ எமது தேவைகளை சர்வதேச மயப்படுத்துதல் என்பது புலம்பெயர் தமிழர்களின் கையில் தான் பெரிதும் தங்கியிருக்கிறது.

1976ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அடிப்படைக் கொள்கையாகிய “தமிழீழத்தனியரசு”  என்ற கொள்கையை வலியுறித்தி வட்டுக்கோட்டையில் நிகழ்த்தப்ட்ட தீர்மானத்திற்கு உலகெங்கும் நடாத்தப்ட்ட வாக்கெடுப்பில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்து தமிழ் மக்களின் அபிலாசையை உலகிற்கு வெளிப்படுத்தினர் என்பது மட்டுமல்லாது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை தெளிவாக சிறிலங்கா அரசிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்தியிருந்தனர். இதன் அடிப்படையில் தான் தமிழ் மக்களின் சிறிலங்கா அரசுடனான ஆயுதப்போராட்டமும் சர்வதேச முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாரத்தைகளும் நடைபெற்றன. அதாவது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்கு போராடிய வழிகள் பலவகைப்பட்டாலும் குறிக்கோள் இன்றுவரை ஒன்றாகதான் இருந்து வந்துள்ளது.

அகிம்சை மற்றும் ஆயுதப்போராட்ட காலப்பகுதிகளில் கொள்கைவேறுபாடுகள் மற்றும் ஆயுதபோராட்ட எதிர்ப்பு போக்கு காரணங்களால் தமிழ் மக்களில் சில பிரிவினர் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கிய நிலைப்பாடும் அவர்களால் தமிழ் மக்களின் போராட்டங்களிற்கு முட்டுக்கட்டை ஏற்படும் சந்தப்பங்களும் பெருமளவில் உருவாகியிருந்தது. ஆனால் இன்றய நிலை என்பது முற்றிலும் மாறுபட்ட அரசில் சூழ்நிலை. இராணுவ கட்டமைப்போ அல்லது அமைப்பு ரீதியான அரசில் தலமையோ இன்றி ஈழத்தில் நேரடியாக எமது அபிலாசைகளை சிறிலங்கா அரசிற்கு வெளிப்படுத்தும் சூழ்நிலையும் சர்வதேசத்திற்கு நேரடியாக எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பலி கொடுத்து, உலகிலேயே நடந்தேறாத பல வகையிலான அத்துமீறல்களையும் அராஜகங்களையும் சந்தித்து, இராணுவ தலமைகளையும் இழந்து இக்கட்ட நிலையில் இன்று தமிழினம் இருக்கிறது. இந்த நிலையிலே தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து செயல்ப்பட வேண்டிய கட்டாம் இருக்கிறது. எமது அரசியல் இலக்கை அடைவதற்கு புதிய பாதைகளை உருவாக்கி ஒருமித்த இலக்கிற்காக பயணிக்க வேண்டிய மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் அனைவரும் இருக்கிறோம்.
முந்தயை காலப்பகுதிகளில் நடந்த போராட்டங்களில் இருந்த கருத்துவேறுபாடுகள், வறட்டுக்கௌரவ நிலைப்பாடுகள் மற்றும் தேவைகள் என பல வழிகளில் தமிழ் மக்களின் விடுதலைப்பயணத்தில் இருந்து விலகி நின்றவர்களும் சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து நின்று இன்று தமிழ் மக்களின் மிகப்பெரிய அழிவிற்கு விரும்பியோ விரும்பாமலோ காரணமாகிவிட்ட தமிழர்களும் இன்று நிதானமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சுயநலக்கோட்பாடுகளுக்கப்பால் தமிழ் இனம் என்ற ஒற்றை மொழியில் பயணித்து ஒட்டுமொத்த இனத்தின் சுதந்திரத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டளை அனைவருக்கும் திணிக்கப்ட்டுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமகாலத்தில் அந்நிய அராஜகங்களால் எம் தமிழ் உறவுகள் படும் சொல்லணாத்துன்பங்களும் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலில் சிக்கி தவிக்கும் ஈழத்து உறவுகளையும் கருத்தில் கொண்டு வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் இனமாக சிந்திக்க வேண்டி கட்டாயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் என்ற பெயரில் தமிழ் இனத்தின் தேசிய விடுதலையை எதிர்ப்பவர்களாயும், பிரதேசவாரிய பிரிவுபட்டு நிப்பவர்களும், சொந்த சொந்த தேவைகளுக்காய் தமிழ் தேசிய விடுதலைப் பணயத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போடுபவர்களும், இன்று சிந்திக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் இன அழிப்பும், தமிழ் இனச்சிதைப்பும,இ தமிழ் இன விடுதலைப்பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்களின் எதிர்காலத்தையும் இருப்பையும் கூட இல்லாது செய்யும் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனமே பெரும் அழிவுக்கு உட்பட்டு நிக்கும் இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கிடையில் உள்ள கருத்துவேறுபாடுகள் மற்றும் காழ்ப்புணர்வுகளை கழைந்து ஒன்றுபட்ட இனமாக எமது இனத்தை கருவறுத்த சிறிலங்கா அரசை நீதிக்கு முன் நிறுத்த பாடுபட வேண்டும். சர்வதேச சட்டத்தின் வரையறைக்குட்பட்டு இனத்தின் தேசிய விடுதலைக்காய் பயணிக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை மற்றும் போர்க்குற்ற ஆய்வியலாளர்கள்இ ராஜதந்திரிகள் என பலதரப்பட்டோரையும் அணுகி எமது இனத்தின் மீது நடந்தேறிய இன அழிப்புக் குறித்தும் எமது இனத்திற்கு தேவையான விடுதலை குறித்தும் பேச வேண்டும். எமது ராஜதந்திர நகர்வுகளுக்கு நாங்களே பாதைகளை உருவாக்க வேண்டும். உலக ராஜதந்திரிளை அணுகி எமது பிரச்சினைகளை பேசுவதற்குரிய வெளியை நாங்களே கண்டுபிடிக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட. சிறிலங்கா அரசுக்கெதிராய் தமிழ் மக்களின் நலனிற்காய் செய்யப்டும் அந்தனை விடையங்களையும் நாம் ஒருமித்த தமிழ் இனமாக ஆதரிக்க வேண்டும்.

சிறிலங்காவில் தமிழ் மக்களின் இருப்பை சிதைத்து சிங்களமயமாக்கும் அரசின் முகமூடி அரசியலை கிழித்தெறிய வேண்டும். தமிழ் மக்களின் கலாச்சார மற்றும் கல்வி பலத்தை ஆட்டம் காண வைப்பதோடு தமிழ் மக்களை அரசியல் அடிமைகளாக்க தனது அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசின் போக்கை தெளிவாக விளங்கி ஒன்றுபட்ட இனமாக விடுதலைக்குபாடுபடுவதுதான் இன்று தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ள அவசரமான தேவை.

ஆதி
3-6-11

Thursday, June 16, 2011

ஈழத்தில் தற்கொலைகளாகும் படுகொலைகள்


இன அழிப்பு நடந்தேறி முடிந்த ஈழத்தில் குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளில் நாளுக்குநாள் தற்கொலைச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான பின்னணி என்ன, காரணங்கள் என்னவாயிருக்க முடியும் என்பது பற்றியதான ஒரு ஆய்வுதான் இந்த கட்டுரை.

பலதரப்பட்ட நாடுகளின் உதவியுடன் போர்விதிமுறைகளுக்கப்பாற்பட்டு இரண்டு நாடுகள் சண்டையிடும் போது பாவிக்கக் கூடிய அனைத்து ஆயுதங்களை பாவித்து மனத உரிமைகளை மீறி தமிழினத்தின் மீது மாபெரும் இனப்படுகொலையை கனகச்சிதமாக முடித்துவிட்டு எந்த சலனமும் இன்றி இலங்கை அரசு உலக அரங்கில் உலா வருகிறது.

மனிதாபிமான போர் என்று அட்டைப்படம் கட்டிய இனப்படுகொலைiயின் மற்றய பக்கங்களை புரட்டிப்பார்ப்பதற்கும் தட்டிக்கேட்பதற்கும் உலக அரங்கில் இருந்து வலுவான குரல்கள் எதுவுமே இன்னமும் எழவில்லை. போர்தின்ற மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள எந்த நாடுகளுமே சிறிலங்கா அரசை அதட்டிக்கேட்கவில்லை. வேரோடு பிடுங்கி எறிப்பட்ட மக்களாய் அவர்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருப்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. உரிமைகளை இழந்தும் எல்லா உடமைகளை இழந்தும் உறவுகளை இழந்தும் வாழ்வின் கிழிந்து போன பக்கங்களுடன் இந்த மக்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சங்கீதங்கள் மரத்துப்போய் மௌனம் நீண்டுகிடக்கும் வெளியில் இவர்களின் மனங்களும் சிந்தனைகளும் வெறுமையாய் கிடக்கிறது. எல்லாம் இழந்து விட்ட இவர்களின் மனங்களை செழிப்படைய செய்து வாழ்வியல் குறித்து சிந்திக்க வைக்க யாருமே இதுவரை களத்திற்கு வரவில்லை. உளவியல் ரீதியில் நொந்துபோய் கிடக்கும் இந்த மக்களை உளமேற்ற சிறிலங்கா அரசு ஒருபோதும் நினைக்காது. ஆவர்களின் உள ரீதியான பலத்தை அதிகரிக்க செய்து வாழ்வின் வரப்போகும் நாட்களை நம்பிக்கை தரக்கூடியவையாக அவர்களுக்கு செய்து கொடுக்க வெளிநாட்டு அமைப்புகளை இந்த நிலத்திற்கு அனுமதிக்கும் படி சர்வதேசம் சிறிலங்கா அரசை அதட்டவில்லை.

ஏன் உளவியல் பலம் அவசியம்?
ஏல்லா துயரத்தையும் நேரில் கண்டமக்கள்.. எல்லா உடமைகளையும் இழந்த மக்கள் உறவுகள் பலதை இழந்த மக்கள் வாழ்வது குறித்த வெறுப்பில் இருக்கிறார்கள். குழந்தைகள் எதையுமே அச்சத்துடன் பார்க்கிறார்கள். இரவுகளில் திடுக்கிட்டு கதறுகிறார்கள். போரின் சத்தமும் அச்சமும் இன்னமும் இவர்களின் பொழுதுகளை தின்றபடிதான் உள்ளது. ஒரு இனத்தின் விடிவிற்காய் இறுதிவரை ஆயுதமெடுத்து போராடிய மக்கள் இவர்கள். இறுதிவரை அத்தனை வலிகளையும் போரின் ரணங்களையும் அனுபவித்த மக்கள் இவர்கள். அந்த வலியும் ரணமும் மரணத்தின் வாயில்வரை சென்றுவந்த தருணங்களும் இவர்களை இன்னமும் வதைத்துக் கொண்டே இருக்கிறது.

சிந்தனைகள் இறந்தகாலத்தின் மீதும் நிகழ்காலத்தின் மீதும் அடிக்கடி அலைபாய்ந்து நிமிடங்களை கொன்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் சிந்தனைகளை எந்தவழியிலும் திசை திருப்பிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. வாழமுடியும் என்ற நம்பிக்கையையும் வாழ்வதில் இனி எதுவுமே இல்லை என்ற வெறுப்பையும் இலகுவாக குழந்தைகளுக்கு கூட புகுத்திவிடக்கூடிய அபாயகரமான தருணம் இது. இந்த தருணத்தில் தான் நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ரீதியிலான பலத்தை இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இந்த உளவியல் பின்னணிகளில் தான் வாழ்வியல் மீதான் வெறுப்புகளை உருவாக்கி இளம் தலைமுறையினருக்கு தற்கொலை மீதான தூண்டுதலை செய்து கொண்டிருக்கிறான் எதிரி. இது வரை எத்தனையோ தற்கொலைகள் நடந்துவிட்ட பின்னும் அதன் பின்னணி அல்லது தற்கொலை தூண்டுதலுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கு தீர்வுகாணும் வழிமுறைளை சிறிலங்கா அரசு மேற்கொள்ளாதிருப்பதற்கான காரணம் என்ன? குறிப்பிட்ட ஒரு சில மாதங்களுக்குள் 30ற்கும் மேற்பட்ட சம்பவங்கள் தற்கொலைச்சம்பவங்கள் என வைத்திய அறிக்கைகள் தெரிவித்தும் அதுகுறிதது எந்த அக்கறையும் எடுக்கப்படாமைக்கான காரணம் என்ன? குறிப்பிட்ட ஒரு பிரதேச எல்லைகளுக்குள் மாத்திரம் அல்லது குறிப்பிட்ட ஒரு இனக்குழுமத்திடையில் மாத்திரம் குறுகிய காலப்பகுதிகளில் இதத்தனை தற்கொலைச்சம்பவங்கள் நடைபெற்றிருக்குமேயானால் எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் இத்தனை அசமந்தப்போக்கை கடைப்பிடித்திருக்காது. ஆனால் சிறிலங்கா அரசு அது குறித்து அக்கறையிற்று இருப்பதன் பின்னணி என்னவாயிருக்க முடியும் என்பதை நீங்களாகவே ஊகிக்க முடியும்.


இனப்படுகொலைப்போர் முடிவுற்று ஏ9 பாதை திறந்த கையோடு நடந்தேறிய முதலாவது சம்பவம் மருத்துவமாது தர்ஷிகாவினுடையது. தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தை உடனடியாகவே அது தற்கொலை என அறிவித்தது யாழ் பொலிஸ் மற்றும் இராணுவம். ஆனால் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொண்ட சந்தேகத்தால் அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கியதால் பிரேத பரிசோதை அறிக்கையின் உண்மைத் தன்மையை கட்டாயம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆதனடிப்படையில் அது ஒரு படுகொலை என்றே நிரூபணமானது. குற்றபழிப்பிற்கு பின் படுகொலை செய்யப்ட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஆதனடிப்படையில் சிங்கள வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்ட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார். ஆனால் அவரை சிறிலங்கா ராணுவமும் அரசும் காப்பாற்றி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதாக கூறி பிணையில் விடுதலை செய்தது.

இந்தச் சம்பவம் தொடக்கம் இன்று இளம் பாடசாலை ஆசிரியைகள் தற்கொலை என்று வரும் செய்திகள் வரைக்கும் இதுவரை எந்த முழுமையான வைத்திய அறிக்கைகளோ காரணங்களோ வெளியிட்படவில்லை. இதன் பின்னணியில் கொலைகளும் தற்கொலைத்தூண்டுதல்களும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்கொலைக்கு தூண்டுதலும் அதை ஊக்குவித்தலும் கொலை என்றே கருத்தப்படும். இதுவரை தற்கொலை என்று வந்த அத்தனை பெண்களின் உடல்களிலும் காயங்களும் வன்முறை அடையாளங்களும் இருந்தான் இருக்கின்றன. ஆனால் அதுகுறித்த விசாரணைகளோ விசாரணை அறிக்கைகளோ இதுவரை சமர்ப்பிக்கப்பட்வில்லை. வெறுமனே தற்கொலை என்று சொல்லி கவனமற்று விடமுடியாது. துற்கொலைக்கான காரணங்களை சமுகத்திற்கு சொல்லவேண்டிய கட்டாயம் நீதித்துறைக்கு இருக்கிறது.

இப்படி தமிழ் இளம் சமுதாயத்தின் மீது கொலைகளை செய்து தற்கொலைகள் என பெயர்சூட்டி தூக்குகளில் தொங்கவிடுவதும் உண்மையாகவே தற்கொலைகளாக இருப்பவற்றின் காரணங்களை மறைப்பதும் ஒருவிதமான இன அழிப்புத்தான். உளவியல் ரீதியிலான இன அழிப்பு இது. இது குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.


அரச பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறிலங்கா நீதித்துறையிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதென்பது இயலாத ஒன்றாக மாறியுள்ளது. புhலியல் ரீதியாக வன்முறைகளுக்கு உள்ளாகும் தமிழ் உறவுகள் நீதிமன்றங்களை நம்பி நீதிகேட்டுச் செல்லமுடியாத நிலை தோன்றியுள்ளது. புhலியல் வன்முறைக்குட்படுத்தியரை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினாலும் அவர்கள் இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குடன் வெளியில் வந்துவிடுகிறார்கள். பின் வழக்கை வாபஸ்வாங்குமாறும் அல்லது அதுகுறித்து இனிமேல் அக்கறை செலுத்தாது இருக்குமாறும் மிரட்டப்படுகிறார்கள். அதன் உச்சக்கட்டமாக பாதிக்கப்ட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இப்படியான சம்பவங்கள் ஊடகங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள மக்களிடையில் காணப்படுகிறது. இப்படியான சம்பவங்கள் குறித்து ஊடகங்களுடனோ அல்லது வெளி அமைப்புகளுடனோ பேச அஞ்சுகிறர்கள் இந்த மக்கள்.

இந்த மக்களுக்கு உளவியல் ரீதியிலான பலம் கொடுக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உளவியல் அமைப்புகளை நாடி தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை செய்யவேண்டும். ஆலோசனைகளை பெறவேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த வன்மத்தை நேரடியாக கண்காணித்து தமிழர் தாயகப்பகுதிகளில் உளவியல் பலத்தை அதிகரிக்க சர்வதேசத்தை உதவுமாறு வற்புறுத்த வேண்டும். இது குறித்தும் புலம்பெயர் தமிழ் மக்கள் அவசரமாக செயற்படுவது இன்றியமையாதது.

ஆதி
10-06-11

Thursday, June 9, 2011

மெளனத்தின் போராட்டம்



மனிதம் தீர்ந்துவிட்ட
இந்த மண்ணில் இருந்து
இன்னமும் இன்னமும்
எப்படித்தான்
நாங்கள் கத்துவது..
எனது குரல்வளையை
நசுக்கி
பிய்த்தெறிய
இந்த அரச இயந்திரத்தின்
கரங்கள் மிகப்போதுமானவையே!!
வீட்டுவாசலில்
துப்பாக்கியை சொருவியபடி
அங்கும் இங்குமாய்
அலைந்து திரியும்
இந்த சிப்பாயின்
துப்பாக்கிச் சன்னம்
என்னில் பாய்ந்துவிட
சில நொடிகளுக்கு மேல் ஆகாது...


புழுதி மாறாத
என் வீதிகளில்
புதிதாய்
ராணுவத்தை தவிர
எதையுமே தருவிக்கவில்லை
இந்த சிங்கள அரசு...
பலவந்தமாய் திணிக்கப்படும்
பெரும்பான்மை மொழியும்
அதன் பால் கொண்ட
சமய நெறியும்
என்னை மீண்டும் மீண்டும்
சுதந்திரத்திற்கான போராட்டம்
பற்றியதாய்
சிந்திக்கத் தூண்டுகிறது..
ஆனால்
வீட்டுவாசலில்
துப்பாக்கியை சொருவியபடி
அங்கும் இங்குமாய்
அலைந்து திரியும்
இந்த சிப்பாயின்
துப்பாக்கிச் சன்னம்
என்னில் பாய்ந்துவிட
சில நொடிகளுக்கு மேல் ஆகாது...

ஆதி
6-6-2011

Thursday, May 26, 2011

ஈழப்பிரச்சினையில் உலகத்தின் பார்வையும் புலம்பெயர் தமிழரின் தேவையும்.



ஈழப்பிரச்சினையை பொறுத்தவரை உலக அரசியல் தளம் பல்வேறு வழி முறைகளில் இதை கையாள்கிறது. மேற்குலகம் தனியொரு பார்வையையும் தெற்காசியா பிறிதொரு பார்வையினூடாகவும் இதை அணுகுகிறது எனலாம். தெற்காசிய “அரசியல் செல்வாக்கு” நாடுகளை பொறுத்தவரை வெளிப்படையாக அமெரிக்க எதிர்ப்பு போக்கை வெளிப்படுத்துகின்றன. அதாவது அமெரிக்கா தெரிவிக்கும் எதற்கும் எதிர்மறையான செயற்பாட்டை வெளிப்படுத்துவதையே இந்த அரசுகள் விரும்புகின்றன எனக் கூட கூறலாம். ஆனால் இந்த நாடுகள் எந்த அளவிற்கு அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும் என்பது சந்தேகத்திற்குரியதே.

இலங்கையில் நடந்த போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30ற்கு மேற்பட்ட நாடுகள் செல்வாக்கை செலுத்தியிருந்தன என விமர்சனங்கள் இருக்கின்றன. அதாவது தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு 30 நாடுகளை களம் இறக்கியிருந்தது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் ஆயுத போராட்ட வடிவை பயங்கரவாதமாக சித்தரித்து தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு போரிற்கு சிறிலங்கா அரசு மற்றைய நாடுகளையும் உதவிக்கு இழுத்திருந்தது.

தமிழ் மக்களின் போராட்டத்தின் தார்ப்பரியம் அதன் பின்னணி அதன் தேவை சிங்கள பயங்கரவாதத்தின் ஆழம் குறித்து போதியளவு அறிந்திராத நாடுகள் சிறிலங்கா அரசின் இன அழிப்பு போருக்கு ஆதரவு செய்திருந்தன. போருக்கு ஆதரவு செய்த நாடுகளுக்கு போரிற்கு பின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. போருக்கு எந்த வழியிலும் உதவிய அத்தனை நாடுகளும் சிறிலங்காவில் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆதை தட்டிக் கேட்க கூடிய உரிமை தமிழ் மக்களிற்கு இருக்கிறது.

மேற்குலகத்தின் போக்கு
மேற்குலகத்தை பொறுத்தவரை தமது தெற்காசிய ராஜதந்திர நகர்வுகளிற்கு மற்றும் வர்த்தக ஊடுருவல்களுக்கு சிறிலங்கா என்பது இன்றியமையாத தேவையாக இருந்து வருகிறது. தமது ஊடுருவல்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசின் பேச்சிற்கேற்ப சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நிரலில் தான் தம்மோடு எந்த தொடர்புமற்ற தமிழ் மக்களின் விடுதலை அமைப்பை தடைசெய்தது. தடை செய்தது மட்டுமல்லாது விடுதலைப்புகளுக்கெதிரான போரில் தொழினுட்ப ரீதியிலான உதவிகளை வழங்கி விடுதலைப்புலிகளின் நகர்வுகளை சிறிலங்கா அரசிற்கு கொடுத்தது. மேற்குலகின் இந்த செயற்பாடுகள் தான் இன்று தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் ஈழத்தில் முடங்கி தமிழ் மக்கள் சிங்கள அரசின் அடிமைகளாகக்ப்ட்டுள்ளனர்.

இப்போது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் விடையத்தில் நடந்து கொள்ளும் முறைகளில் அதிர்ப்தி அடைந்த மேற்குலகம் சிறிலங்கா அரசை தண்டித்து வரப்போகும் சிறிலங்காவின் அரசுகளிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற கொள்கையில் இருப்பது போல் இருக்கிறது. தமிழ் மக்கள் பல லட்சக்கணக்கில் வெளிநாடுகளில் பரந்து கிடப்பதால் அவர்கள் ஒரே நேரம் திரண்டெழுந்து தம்மிடம் நீதி கேட்டால் தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த வஞ்சகப்போக்கு உலகத்தாருக்கு தெரிந்து விடும் என்ற ரீதியில் இதை கையாள்கிறது. தவிர முதலாளித்துவ போக்கு கொண்ட சீன அரசாங்கத்தின் தலையீட்டையும் கட்டுப்படுத்த நினைக்கிறது மேற்குலகம்.

தெற்காசியாவின் போக்கு 
தெற்காசியா எனப்படும் போது இங்கு வல்லரசுக்கனவோடு இருக்கும் இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்கமே அதிகம். சீனாவை பொறுத்தவரை இந்தியாவை கண்காணிப்பதற்கும் தனது வர்த்தக வலயங்களை உருவாக்குவதற்கும் மட்டுமே சிறிலங்கா தேவை. அதே போல் தனது அரசியல் பலத்தை பரிசீலிப்பதற்கான தளமாகவும் ஈழப்பிரச்சினையை பார்க்கிறது சீனா. சுpறிலங்காவின் பிரச்சினைகளில் மற்றய நாடுகள் தலையிட வேண்டாம் என்பது போன்றான எச்சரிக்கைகளும் இதன் தொடர்களே.
ஏல்லாவற்றிற்கும் அப்பால் வல்லாதிக்க திமிரின் திரை மறைவில் ஒழிந்து நிற்கும் போர்க் குற்றவாளி இந்தியாவே. இன்று தமிழ் மக்கின் விடுதலைப்போராட்டத்திற்கு அனைத்து வழிகளிலும் சிங்கள அரசிற்கு உதவியளித்து தமிழர் போராட்டத்தை நசுக்கியது இந்த இந்தியா தான் என்பது வெளிப்படை உண்மை. சிறிலங்கா அரசு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டால் இந்தியாவின் போர்க்குற்றத்திற்கெதிரான சாட்சியமாக அது மாறிவிடும் என்று அஞ்சுகிறது இந்தியா.

சிறிலங்கா அரசிற்கெதிரான அத்தனை குற்றச்சாட்டுகளையும் தனது ராஜதந்திர மற்றும் ஊழல் அரசியலினூடாக மறைத்துக் கொள்கிறது இந்தியா. சிறிலங்காவில் இப்போது சீனாவின் ஆதிக்கம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலும் சிறிலங்காவிற்கு ஒரு எச்சரிக்கை கூட விடமுடியாத நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது இந்திய வல்லாதிக்கம். குடும்ப பழிவாங்கலுக்காக தமிழீழ மண்ணையே சுடுகாடாக்கிய சோனியாவின் அரசு சிறிலங்கா அரசினால் குற்றவாளிக் கூண்டுக்கு கூட்டிச் செல்லப்படக் கூடிய நிலை காணப்படுவதனால் சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்கான முழு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது இந்திய வல்லாதிக்கம்..

புலம்பெயர் தமிழர்களின் தேவை
இந்த உலகமயப்படுத்தப்பட்ட எமது போராட்டத்தில் இனிவரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு முற்று முழுதாக தேவைப்படும். எமது உரிமைப் பிரச்சினையை பொறுத்தவரை நாங்கள் கேட்டு இந்தியா எமக்கு நேரடியாக உதவப்போவதில்லை. ஆனால் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்குலக நாடுகளில் இருந்து எமது போராட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் இந்த நாடுகளாலையே முன்வைக்கப்பட்டது. எமது பிரச்சினைகளை நிதானமாக உள்வாங்கக் கூடியவர்களாக இருப்பவர்கள் மேற்குலகத்தினர் மட்டுமே.
சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ள ஜ.நா வின் அறிக்கை தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்தும் பேசியிருந்தது. எனவே சிறிலங்காவில்; எமக்கான உரிமைகள் மறுப்பு குறித்து மேற்குலகம் தெளிவடையத் தொடங்கியிருக்கிறது என்ற முடிவிற்கு நாம் தாராளமாக வரலாம்.

சனல் 4 மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சியகள் காட்டிய வீடியோ குறிப்பிட்ட ஒருசில சம்பவங்கள் மட்டுமே. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கிடைக்காமலும் எந்த தடயமுமின்றி சிங்கள அரசால் நடாத்தப்ட்ட கொடுரங்கள் நிறைய என்பதை எல்லாத்தமிழர்களும் அறிவார்கள்.
எம்மீதான அழிப்பை எவ்வளவு கொடுரமாய் சிறிலங்கா அரசு நடாத்தி முடித்தது என்று இன்று உலகம் பூராவும் பார்க்க கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் நாங்கள் இந்த சிறிலங்கா அரசிற்கு எதிராக எமது விடுதலைக்காக எமது தாயக உறவுகளிற்க்காக எதை செய்தோம் என்று யாராவது சிந்தித்துண்டா??

ராஜதந்திர வழியிலான போராட்டங்களை முன்னெடுக்க ஒவ்வொரு தமிழரும் ஒன்றிணைய வேண்டும். குழுக்களாக பிரிந்து கிடக்கும் தமிழர்கள் தமிழினமாக ஒன்றுபட்டு ஒட்டுமொத்த இனத்தின் விடுதலைக்கு பாடுபடவேண்டும். அந்ததந்த நாடுகளில் அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் அரசியல் கட்சிகள் சர்வதேச அமைப்புகள் என எல்லாவற்றுடனும் தொடர்புளை ஏற்படுத்தி தமிழினத்திற்கெதிராய் நடந்தேறிய போர்க்குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தெளிவுபடுத்துவதோடு தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்விற்கான நியாயத்தையும் தெளிவு படுத்தவேண்டும்.
மேற்குலகம் எமது பிரச்சினையை சரியான முறையில் அணுகுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்குலகத்தை பலமாக வைத்து இந்தியாவை அடக்க வேண்டும் அல்லது எமது பக்கம் உள்ள பிரச்சிகைகளுக்கு தீர்வு காண வலியுத்த வேண்டும். போராட்டங்களிற்கான புதிய வழிகளை திறப்போம். சுpறிலங்கா அரசின் நடவடிக்கைகளை முறியடிக்க கூடியவகையில் ராஜதந்திர நகர்வுகளினூடாக போராடுவோம். வீடுகளில் முடங்கிக்கிடப்பதால் எமக்கு விடுதலை கிடைக்க போவதில்லை.

உலகே எமது பிரச்சினை தொடர்பில் பார்வையை செலுத்தியுள்ள நிலையில் எமது போராட்த்தின் தேவையை உலகிற்கு உணர்த்த வேண்டியது கட்டாயமாகும் நேரமும் இதுவாகும்.
ஆதி
10-05-2011

Monday, May 23, 2011

புத்தருக்கு முதலில் மூத்திரம் அடிப்பது யார்??

இன்று தமிழ் மக்களை பொறுத்தவரை புத்தரை ஒரு ஞானியாகவும் பெளத்தத்தை ஒரு மதமாகவும் பார்க்கும் மனநிலை தாண்டி "பெளத்தம்" என்பது ஒரு இன அழிப்பு குறியீடாகவே பார்க்கின்றனர்.

வன்னியில் புத்த சிலைகளை கண்டால் குழந்தைகள் மிரளுகிறார்கள்...அரச மரங்களை கண்டால் "எப்ப இதில புத்தர கொண்டுவந்து வைக்கப்போறாங்களோ!!!" என்ற வெறுப்பு ஏக்கம் மக்களிடத்தில் பரவிக்கிடக்கிறது. சிங்கள அரசானது இன அழிப்பை ஆயுதத்தாலும் இனக்கலப்பு மற்றும் இனப்பரம்பல் சிதைப்பை பெளத்த்தாலும் செய்து வருகிறது.

கட்டாய கொண்டாட்டங்களும் உயர் நீதிமன்ற விதிகளை தாண்டிய ஒலிபரப்புகளும் ஆயுதப்படையின் பாதுகாப்புமென பெளத்தம் தமிழ் மக்களின் மீதான இனச்சிதைப்பை செய்யும் மிகப்பெரிய அரச இயந்திரமாக உருவெடுத்துள்ளது...அதில் புத்தன் அரக்கனாகவும் சிங்கள சிப்பாய்கள் அரக்கனின் பாதுகாவலர்களாகவும் மாற்றம் பெற்றுள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பிக்குவை கண்டால் "சிங்கள மொட்டையன்"  என்று காறி உமிழ்கிறார்கள். இது யாராலும் பயிற்றிவிக்கப்ட்டதல்ல.. பெற்றோர்கள் வீடுகளில் பேசுவதை அவர்கள் பெளத்தத்தின் மீது காட்டும் வெறுப்பை சிறுவர்கள் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தவிர அண்மையில் ஒரு இளைஞர் கூட்டம் இப்படி ஒரு பந்தையம் கட்டியது "இண்டைக்கு அதில இருக்கிற புத்தருக்கு முதலில் மூத்திரம் அடிக்கிறதாரு??"

தங்களின் இயலாமை காட்டுவதற்கு சிறுவர்களும் இளைஞர்களும் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்.

பெளத்தம் என்ற தியான நெறியை மதம் ஆக்கியதும்  அந்த மத வெறியால் இன்னொரு இனத்தை அழிப்பதும் சிங்களம் தான்...  சிறிலங்காவை பொறுத்தவரை பெளத்தம் ஒரு என்பது ஒரு மத தீவிரவாத அமைப்பு...

ஆதி
22-5-2011


 முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட கருத்தூட்டல்கள் கீழே..


· · Share · Delete
    • Pathinathan Arulnesan
      உங்களுக்கு யார் இதெல்லாம் வந்து சொல்றாங்கள்?...ஹா ஹா ஆ,

      இதுகளை பெருமையா வேற சொல்லிக்கொள்ள முடிகிறது உங்களால்....இவற்றை வைத்துக்கொண்டு பார்த்தால் உங்களைச் சுற்றிய சூளலை மட்டும்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர இது தமிழர்களின் புரட்சியாக தெரியா...து நண்பரே.

      இவற்றையெல்லாம் (அசிங்கங்களை) எழுதிதான், தமிழர்கள் மீண்டும் தங்கள் புரட்சியை ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டுமா? தமிழர்கள் அவ்வளவு முட்டாள்களா? - ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள்.

      இதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற வேலைகள், இந்த நாட்டில் மட்டுமல்ல உலகம் முளுவது பயன்படுத்தப்படும் கொலையாயுதம் மதம். சிங்கள அரசியல்வாதிகள் பௌத்தத்தை வைத்துக்கொண்டு மக்களை தமிழர்களுக்கெதிராக தூண்டினால் - அதே பௌத்தத்தை அசிங்கப்படுத்தி அவர்களுக்கெதிராக தமிழ் அரசியல்வாதிகள் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனடிப்படையில் உருவான போராட்டம் இறுதியில் கொலைவெறிபிடித்து தனது இனத்தையே தின்று அழிந்துவிட்டது. இப்போது எந்த நோக்கத்திற்காக அதே தூண்டல்களை தொடர்கிறீர்கள். நீங்கள் முதலில் யாருக்காக எழுதுகிறீர்கள்?...வரப்போகிற அடுத்த மெசியா யார்?

      தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை செய்ய சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்" இவ்வளவுதானே இங்கே நீங்கள் சொல்ல வருவது. அதை தடுக்க சந்தியில் நின்று புத்தனை மல்லுக்கிளுத்தால் சரிவருமா?

      நடுனிலையாய் நின்று எழுதுங்கள். உங்களுடைய வார்த்தைகள் , கோபங்களாகவும் அவலங்களாகவும் மட்டுமே தெரிகிறது...வீட்டுக்குள் நின்றுகொண்டு வீட்டின் குறை நிறைகளை சொல்ல முடியாது, அப்படிச் சொன்னால அது வெறும் பொறுக்காமல் வருகிற புலம்பலாகவே தோன்ன்றும். வெளியிலிருந்து பாருங்கள். அப்போது அதன் குறை நிறைகள் சரியாகத் தெரியும். அப்போது அதை சரியாக சொல்லமுடியும், எங்கள் நியாயங்கள் நீதியானதாக இருக்கும் அப்போதுதான் எங்களுக்கான நியாயமான நீதியை எதிர்பார்க்கமுடியும். நண்பனாக, வழ்த்துக்களுடன் - ப. அருள்நேசன்
      See More
    • ஆதி ஆதித்யன்
      இது யார் சார்பான தூண்டுதலோ போராட்டத்திற்கான அறைகூவலோ கிடையாது நண்பரே!!! எங்களை சுற்றி நடக்கும் அக்கிரமங்களும் சமூகத்தில் நடக்கும் அதன் பிரதிபலிப்பும் மட்டும் தான் இந்த பதிவு. இனி வரும் காலங்களில் வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களிற்கு மக்களுக...்கு யாரும் அறை கூவல் விடுக்க வேண்டிய தேவைகள் இல்லை. மாறாக மக்களின் இயலாத்தன்மையும் அதனால் அதிகாரங்களுக்கெதிராய் மக்கள் கூனிக்குறுகி சிந்திக்கும் முறைகளையும் நாங்கள் பேசியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது... இங்கு நான் எழுதி அத்தனை விடையங்களும் இப்பொழுது எமது சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பவை மட்டுமே!!! ....See More
      Yesterday at 12:20pm · · 1 personVasudevan Kanagasabai likes this.
    • ஆதி ஆதித்யன் இங்கு எந்த அசிங்கங்களினூடாகவும் பிரச்சினைகளை சொல்லவில்லை..... அன்றாட எமது வாழ்வில் பாவிக்கும் சொற்பிரயோகங்கள் மட்டுமே பாவித்திருக்கிறேன்... ....
      Yesterday at 12:24pm ·
    • Pathinathan Arulnesan ம்ம் :)
      Yesterday at 12:36pm · · 1 personLoading...
    • Ajith Sajith sariyaga sonnirkal aathi
      Yesterday at 3:42pm ·
    • Kirishanth Selvanayagam
      சரியாக சொன்னீர்கள் அண்ணா.. உங்களின் இந்தப் பதிவு நிச்சயம் தேவை.. சிறுவர்கள் தங்கள் இயலாமையை இப்படியாவது காட்டுகிறார்கள்.. இது ஒரு அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் நடக்கும் வழமையான ஒன்று தான்... இதே போலத் தான் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெர...ிக்கப்படைகள் மீது சிறுவர்கள் கல்லால் எரிந்து தங்கள் எதிர்ப்பைக் கட்டுகிறார்கள்.., இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீனியச் சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது ஒளிந்து நின்று கவண் மூலம் கல்வீச்சு நடாத்துகிறார்கள்... விடுதலை மறுக்கப்பட்ட ஒரு தேசத்தில் தங்கள் வெறுப்பை எங்களின் தம்பிகளும் இப்படிக் காட்டுகிறார்கள்... அதில் தப்பில்லையே..........!See More
      Yesterday at 5:47pm · · 1 person

Thursday, May 19, 2011

ஈழத்தில் ராஜபக்ஷ செய்து கொண்டிருக்கும் அரசியல் நகர்வுகள்



போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு சர்வதேச அழுத்தங்கள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் திரை மறைவில் தனது தொடர்ச்சியான இருப்பிற்கான அடித்தளங்களை ராஜபக்ச கச்சிதமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார். 

ஏதிர்க்கட்சிகளின் வலுவை சிதைப்பதுஇ சிறுபான்மையினரின் குரலை அடக்குவது என்று பல நிகழ்ச்சி நிரல்களின் கீழ் அவரின் நடவடிக்கைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. “ஒரு கட்சி ஆட்சி” அதாவது “மன்னராட்சி” முறையிலான நடவடிக்கைகளுக்கு மகிந்த ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. இன்றுள்ள அரசியல் அமைப்பின்பிரகாரம் முழுஅதிகாரமும் மத்திய அராங்கத்திடமே குவிந்துள்ளது. அதிலும் ஜனாதிபதிக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆதிகாரமிக்க நீதிமன்றங்களின் தீர்ப்பில் கூட தலையிடக்கூடிய வகையில் ராஜபக்ஷவின் கையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மகிந்த தலமையிலான ராஜபக்ஷ குடும்பம் இன்று சிறிலங்காவின் முக்கிய வர்த்தக மையங்கள் உட்பட உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக கேந்திர மையங்களை  தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பெரும் பணப்புழக்கத்தில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தை எதிர்த்து ஒரு பெட்டிக்கடை கூட நடாத்த முடியாத நிலையில் சிறிலங்காவின் நிலை மாறிவருகிறது.

வௌ;வேறு கட்சிகளில் மக்களால் தெரிவு செய்யப்ட்டவர்கள் கூட இன்று ராஜபக்ஷவின் அதிகாரத்தாலும் பணத்தாலும் விலைக்கு வாங்கப்பட்டு ராஜபக்ஷ கட்டுப்பாட்டில் வைக்கப்ட்டுள்ளனர். இதனால் பலம் மிக்க எதிர்க்கட்சிகள் எதுவுமற்று மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குடும்ப ஆட்சியை வலுவாக நிறுவியுள்ளது. 

சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் நட்ப்பு வைத்துள்ள மகிந்த ராஜபக்ஷ மன்னராட்சி தொடர்பில் அரபு நாடுகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மன்னராட்சியை உருவாக்குவதற்கு தேவையான காரணிகள் மற்றும் அதிலுள்ள சிக்கல்கள்இ சட்ட தேவைகள் குறித்தும் தமது அதிகாரிகளை அரபு நாடுகளுக்கு அனுப்பி ஆராய்ந்து வருகிறார்.
எப்படியான அரசியல் முறமையை அவர் கையாண்டாலும் தமிழர்களின் உரிமைப்பிரச்சினை அவருக்கு மிகப்பெரிய தலையிடியாக தொர்ந்து கொண்டே இருக்கும் என்று நன்கறிந்த மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினரின் அரசியல் குரலை நசுக்கும் நடவடிக்கைகளிலும் மிக மும்மரமாக ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆழும் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை தேர்தலினூடாக தெரிந்து கொண்ட மகிந்த ராஜபக்ஷஇ வடக்கு கிழக்கு பகுதிகளில் தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்கு துணை ராணுவக் குழுக்களை களம் இறக்கியுள்ளார். இவர்களுக்கு பக்கபலமாக ஆயுதம் தாங்கிய படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். போர்க்குற்றம் தொடர்பில் ஜ.நா அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை எப்படியும் சிதைத்துவிடவேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் மகிந்த ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. இந்தியாவினூடாக தமிழ் தேசியக் சுட்டமைப்பிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பது அல்லது நேரடியாக தமிழ் தேசிய சுட்டமைப்பு ஊறுப்பினர்களை அச்சுறுத்தி அடக்குவது என்ற நிலைப்பாட்டில் ராஜபக்ஷ இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆதன் தொடர்ச்சியாகதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் உதவியாளர்கள் தாக்கப்படுவதும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதும்.

தவிர இன்று தமிழ் மக்களின் கலாச்சார நிகழ்வென்றாலும் சரி நிறுவன நிகழ்ச்சிகள் என்றாலும் சரி ராணுவத்தின் பிரசன்னம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுpறிலங்கா ராணுவத்தின் பிரசன்னம் இன்றி எந்த நிகழ்ச்சிகளும் தமிழர் தாயகப்பகுதிகளில் நடாத்த முடியாது என்ற நிர்ப்பந்தம் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் திணிக்கப்பட்டுள்ளது. தமது சுய அரசியல் லாபத்திற்காக தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து எந்த பிரச்சினையுமின்றி ராஜபக்ஷ தாளத்திற்கு ஆடும் ஈ.பி.டி.பி கட்சிஇ தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிஇ கருணாகுழு உட்பட அத்தனை துணை ராணுவக் குழுக்கழுமே தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ் மக்களின் அரசியல் குரலை அடக்குவதற்கு மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் தாயகப்பிரதேசங்களில் இருந்து மண் உட்பட அத்தனை வளங்களையும் தென்னிலங்கைக்கு பலவந்தமாக திருடி அனுப்புவதில் இந்த துணை ராணுவ குழுக்கள் இயங்குவதோடு பாதுகாப்பிற்கு சிறிலங்காவின் ஆயுதம் தாங்கிய படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுபோக கல்வி நடவடிக்கைகள்இ அதிகாரிகள் இடமாற்றங்கள்இ அரச அலுவலகங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களிலும் இந்த துணைராணு குழுக்களின் பிரசன்னத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு தமிழ் மக்களின் நலன் குறித்து பேசும் அத்தனை குரல்களும் முடக்கப்ட்டு வருகிறது.
தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும் உள்ளுராட்சி மன்றங்கள் நேரடியாக மாகாண ஆளுனரினதும் மத்திய அரசாங்கத்தினதும் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசாங்கம் தான் நினைப்பதை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது. அதை தட்டிக்கேட்கும் நிலை யாருக்கும் வழங்கப்படுவதில்லை. அதுபோக யாழ்ப்பாணத்தின் நிலை மிக மோசமாக காணப்படுகிறது. என்னதான் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி அரச அதிகாரியாக இருந்தாலும் சரி யாழ்ப்பாண ராணுவ தளபதியின் அனுமதியின்றி ஒரு பட்டம் கூட பறக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்ட்டுள்ளது. அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசக்கூடிய அத்தனை வழிகளும் ராணுவ இயந்திரத்தால் அடைக்கப்ட்டுள்ளது. 

சிறுபான்மையினரின் குரலை அடக்குவதன் மூலம் ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி நகர்வுகளை தீவிரப்படுத்தலாம் என நம்புகிறது அரசு. போர் முடிந்து 2 வருடங்கள் கடந்து வரும் நிலையில் அவரகாலச்சட்டம் உட்பட பல கெடுபடிகள் நீங்கப்படாமைக்கான காரணம் ராஜபக்ஷ தலமையிலான குடும்பாட்சியை உறுதிப்படுத்துவதற்கே.

புலம்பெயர் தமிழர்களின் கைகளில் வழங்கப்ட்டுள்ள தமிழர் போராட்டங்கள்           
ஈழத்தில் தமிழ் மக்களின் குரல்கள் அத்தனையும் ராணுவ இயந்திரத்தால் அடக்கப்ட்டுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தான் முழுவீச்சுடன் தமிழர் உரிமைப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கெதிரான பாரிய மனித படுகொலையை சிறிலங்கா அரசு செய்து முடித்து இன்று 2 வருடங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிறிலங்காவின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க கூடிய பாரிய போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் இன்னமும் செய்யவில்லை என்றே தெரிகிறது. ஜ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஆதாரமாக வைத்து சிறிலங்கா அரசிற்கெதிரான போராட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசிற்கெதிரான கோஷங்கள் எழுப்பப்பட வேண்டும். இராணுவ அதிகாரிகளாக இருந்து இன்று சிறிலங்காவின் ராஜதந்திரிகளாக முகமூடி தரித்துள்ளவர்களை இனங்கண்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு தமிழர் உரிமைப்பிரச்சினையில் நேரடியாக சர்வதேசத்தை தலையிடும் படி கோரி போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் நடாத்துவதினூடுதான் எமது விடுதலைப்போராட்டம் இன்னமும் முடியவில்லை என்று உலகிற்கு எடுத்துக்காட்ட முடியும். எம்மீதான கொடூர இனப்படுகொலையை சிறிலங்கா அரசு நிகழ்த்தி இரண்டு வருடங்கள் கழியும் இந்த நிலையில் விடுதலை பெறும் வரை போராடுவோம் என சபதம் எடுப்போம் உறவுகளே!!   


ஆதி
10-05-2011


Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP