Powered by Blogger.

Saturday, June 25, 2011

ஈழத்தமிழர் அரசியலில்; தமிழக அரசியலின் செல்வாக்கு





ஈழத்து அரசியலில் காலாகாலமாய் பிராந்திய வல்லாதிக்கங்களின் செல்வாக்கு இருந்து கொண்டேதான் வருகிறது. அதிலும் ஈழத்தமிழர் உரிமைப்பிரச்சினையை பொறுத்தவரையில் சிங்கள அரசுகளால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு அதை எதிர்த்து ஈழத்தமிழர் அரசியல் தலமைகள் போராட்டங்களை ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழக அரசியல் செல்வாக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தே வருகிறது.


தமிழக அரசியலின் துணையின்றி ஈழத்தமிழர் விடையத்தில் எந்த அரசியல் முடிவுகளையும் எடுக்க முடியாத மறைமுக அழுத்தங்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஈழத்தமிழர் நலன் தொடர்பில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்திய அரசிடம் நீதி கேட்டால் தமிழர் உரிமைப்பிரச்சினை தொடர்பில் சாதகமான முடிவுகளை இந்திய அரசு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற நிலை காணப்படுகிறது. காரணம் இந்திய ஆழும் அரசுகளுக்கு தமிழ் நாட்டு அரசியல் சக்தி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.


இங்கு சில விடையங்கழள நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று பிராந்திய வல்லாதிக்கங்களின் அரசியல் பரம்பல் எப்படி எமது உரிமைப்பிரச்சினையில் செல்வாக்கு செலுத்துகின்றன மற்றயது அந்த செல்வாக்கு எப்படி தமிழ் நாட்டினூடாக அமுல்படுத்தப்படுகின்றன என்பதேயாகும்.


பிராந்திய வல்லாதிக்கங்களின் அரசியல் பரம்பல் என்பது பெரும்பாலும் வர்த்தகத்தை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. தெற்காசியாவின் நுகர்வோர் சந்தையை கைப்பற்றுவதும் அதன் மீது தமது ஆதிக்கத்தை தக்கவைப்பதற்காகவுமே வல்லாதிக்க அரசுகள் முனைப்புக்காட்டி வருகின்றன. அந்த வர்த்தக போட்டியில் பிரந்தியா அரசியல் விடையங்களில் தமது செல்வாக்கை அதிகரித்து அதனூடாக வர்த்தக சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளில் தான் அனைத்து வல்லரசு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.


 தெற்காசியாவின் நுகர்வோர் சந்தையின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு சீனாவின் அதிகரித்துவரும் வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. ஆதனால் தெற்காசிய அரசியலில் குழப்ப நிலைகளை உருவாக்கி அதனூடு தனது செல்வாக்கை செலுத்த வேண்டிய தேவையும் அதற்கிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை நேரடியாக அமெரிக்காவிற்கெதிராக களத்தில் இறங்க முடியாதெனிலும் பிராந்திய அரசியல் நிலையை கட்டுப்பாட்டடில் தான தான்; வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறது. பல வர்த்தக உடன்படிக்கைகளை செய்து தனது; பல சந்தைகளை அமெரிக்காவிற்கு தாரைவார்த்துள்ள இந்தியாவிற்கு பரிசாக பிராந்திய அரசியலில் நேரடித்தலையீடு செய்வதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா வாய்ப்பளித்துள்ளது என்று கூட சொல்லக் சுடிய நிலை தான் காணப்படுகிறது.


தவிர தனது வர்த்தக செயற்பாடுகளுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா தெற்காசியா முழுவதும் தனது படையினரை பரப்பி வைத்துள்ளது. இலங்கையை பொறுத்த வரையில் அமெரிக்காவிற்கு இந்துமா சமுத்திரத்தில் தனது பாதுகாப்பு அணியினருக்கான தளம் அல்லது ஓய்வெடுக்க கூடிய தளம் அமைப்பதற்கு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இந்த நிலையில் தான் ஈழத்து அரசியல் நிலையை சாதகமாக பயன்படுத்தி தனது தலையீடுகளை விஸ்தரித்துள்ளது அமெரிக்கா.


அதே போல சீனாவினதும்; வர்த்தக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இப்படி பலதரப்பட்ட வல்லாதிக்கங்கள் மையம் கொண்டிருக்கும் நிலையில் தான் எமது உரிமைப்பிரச்சினைகளும் கையாளப்படுகின்றன.


ஈழத்தமிழர் பிரச்சினையை பொறுத்தவரையில் ஆரம்பம் தொடக்கமே இந்தியா நேரடியாக தலையீடு செய்து வந்துள்ளது. போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்தது மட்டுமல்லாது உரிமைப்பிரச்சினை தொர்பில் இலங்கை அரசை நேரடியாக கண்டித்தும் உள்ளது. இந்த நிலையில் போராளிக்குழுக்களின் மையமாக தமிழநாடு திகழ்ந்து வந்துள்ளது. காலப்போக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே சாதகமான தன்மை தமிழ் நாட்டு அரசியலில் புகுந்து கொண்டது. இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அச்சம் கொண்ட இந்திய அரசு தமிழீழ விடுதலை;புலிகள் பற்றிய நற்பெரை தமிழ் நாட்டடில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தது அதன் பிற்பாடுதான் விடுதலைப்புலிகளுக்கெதிரான சம்பவங்கள் சிலவற்றை தமிழ் நாட்டினூடாக செய்து முடித்தது இந்திய அரசு.


சில காலம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வெளிப்படை போக்கு இல்லாதிருந்த தமிழ் நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழத் தொடங்கின. அதை அடக்குவதற்கு காங்கிரஸ் அரசு பாவித்த மிகப்பெரிய ஆயுதம் தான் “கருணாநிதியின் அரசு”. குடும்ப அரசியலிலும் வியாபார நோக்கத்திலும் அதிக நாட்டம் காணப்பட்டவராக இருந்த கருணாநிதியை சாதகமாக பயன்படுத்திய இந்திய மத்திய அரசு அவரை சிறிலங்கா அரசிற்;கு நண்பராக அறிமுகப்படுத்தியதோடு அவருக்கு தனிப்பட்ட வியாபார ஒப்பந்தங்களையும் செய்வதற்கு ஊக்குவித்தது. ஈழத்தமிழர் விடையத்தில் அக்கறை உள்ளவர் போல் காட்டிக்கொண்டு ஈழத்தமிழருக்கான அனைத்து போராட்டங்களையும் தமிழகத்தில் நசுக்கிய கருணாநிதி சிறிலங்காவுடனான தனது நெருக்கத்தை அதிகரித்தார். இந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் எந்த கிளர்ச்சிகளுமின்றி விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை முறியடித்ததோடு பலலட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்து போரை நிறுத்திக் கொண்டது இந்திய அரசும் சிறிலங்கா அரசும்.


போர்ச் செல்வாக்குடன் தனது குடும்ப அரசியலை நிலை நாட்டுவதற்கு ராஜபக்ஷ போர் முடிந்த கையோடு தீவிரமாக இறங்கினார். ஆடிப்படையில் ராஜபக்ஷ சீன ஆதரவுப்போக்கு கொண்டவர் என்பதால் இலங்கையில் அவரின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை விஸ்தரிக்க முழு ஆதரவு இந்தியாவைவிட சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கிடைக்க ராஜபக்ஷ சிறிலங்காவின் பெரும் வர்த்தக பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு குடுத்ததுடன் சீனாவின் படைத்தளத்தை அமைப்பதற்காபன மறைமுக வேலைத்திட்டங்களிலும் இறங்கினார் ராஜபக்ஷ. இது இந்தியாவிற்கும் அதன் நட்பு நாடான அமெரிக்காவிற்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் ராஜபக்ஷவை அகற்ற வேண்டும் அல்லது அடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தள்ளப்படுகின்றன அமெரிக்காவும் இந்தியாவும்.


இந்த இறுக்கமான காலப்பகுதியில் தான் தமிழ்நாட்டு தேர்தல் மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சினை இந்த தேர்தலில் மிகத் தீவிரமாக்ப்ட்டது. தமிழர் போராட்டங்களை நசுக்கிய காங்கிரஸையும் கருணாநிதி அரசியலையும் இல்லாது செய்வதற்காக பிரச்சாரங்கள் வெளிப்படையாகவே பலதரப்பட்டோராலும் செய்யப்ட்டன. முடிவு ஈழத்தமிருக்கு துரோகமிழைத்த இரண்டு கட்சிகளும் தமிழக ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈழத்தமிழருக்கான  குரல்கள் தமிழக அரசிடம் இருந்து வருமானால் அதுவே “தனியரசு” பற்றிய தேவையை வலியுறுத்துமேயானால் இந்திய மத்திய அரசு அதை புறக்கணிக்க முடியாத நிலைக்கும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்படும்.


ஆனால் தற்போது ஆட்சிக்கு ஏறியுள்ள தமிழக அரசு தமிழக மக்களின் உணர்வை மதிக்காது இந்திய மத்திய அரசின் நிகழ்சி நிரலில் செயற்படுமேயானால் ஈழத்தமிழர் விடையத்தில் மாற்றம் ஏற்படப்போதில்லை. இந்தியஇ அமெரிக்க ராஜதந்திரம் ராஜபக்ஷவை அரசியலில் இருந்து தூக்கினாலும் தமிழக சட்டமன்றத்தில் ஈழத்தமிழருக்கான “தனி அரசு” கோரிக்கை நிறைவேற்றப்ட்டால்தான் அது ஈழத்தமிழர் விடையத்தில் செல்வாக்கு செலுத்தும். இந்தியாவின் உடன்பாடின்றி ஈழத்தமிழர் கோரிக்கையை மேற்குலகம் எவ்வளவு நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியே. இந்தியாவின் நிலைப்பாடு மாறுவதற்கு தமிழக அரசின் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.


சர்வதேச அரசியலில் எமக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும். அதனூடு தமிழக அரசிடமும் எமது கோரிக்கைக்கான சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எமது உரிமைப்பிரச்சினையில் பலதரப்பட்ட வல்லாதிக்க சக்திகள் பல்வேறு தேவைகளுக்கு மையம் கொண்டிருப்பதால் மிக அவதானமாக எமது ராஜதந்திர நகர்வுகளை செய்து எமது இலக்கை அடைய வேண்டிய கட்டாம் இருக்கிறது.


பலதரப்பட்ட ராஜதந்திரிகளோடும் எமக்கான உரிமைகளின் தேவைகள் பற்றியும் உரிமைகளை பெற்றுக் கொள்வது பற்றியும் எல்லோரும் பேசவேண்டும். எமது அபிலாசை குறித்த பிராந்திய வல்லாதிக்கங்களின் சந்தேகங்களை இல்லாது செய்து எமது விடுதலையை உறுதி செய்ய அனைவரும் பாடுபடவேண்டும்.
ஆதி
8-6-11

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP