Powered by Blogger.

Wednesday, September 14, 2011

இதற்கு யார் காரணம்??

தமிழர் தாயகப்பகுதியில் குறிப்பாக யாழ் சமூகத்தை மையப்படுத்தி பெருமெடுப்பிலான சமூக விரோத செயல்கள் கலாச்சார சீரழிப்புகள் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசின் மறைமுக ஊக்குவிப்புகள் இருந்தாலும் நேரடி ஊக்குவிப்புகள் அல்லது காரணிகள் தொடர்பில் அவசரமாக கவனம் செலுத்துவது இன்றியமையாதது.
இன்றைய சமூக சீரளிவுகளுக்கு முக்கிய காரணங்களாக
1)பணம்
2)பெற்றோர்களின் கட்டுப்பாடின்மை

இருக்கின்றன.

பெறறோர்களின் கட்டுப்பாடின்மை மற்றும் கவனிப்பின்மை

பாடசாலை மாணவர்கள் பாலியல் தவறுகள் இழைக்க கூடிய அளவிற்கு கட்டுப்பாடற்று செல்கிறது சமூகம்.

சில நாட்களின் முன் நடந்த சம்பவம் ஒன்று, சுண்ணாகம் பகுதியில் ஒரு மாணவி அவரது காதலருடன்  ஓடிச் சென்றார் 3 நாட்களின் பின் சில இளைஞர்களால் பலவந்தமாக அந்த மாணவியின் வீட்டுக்கருகில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.  இந்த மாணவி ரீயுசன் வகுப்பிற்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டுவிட்டு வீதியில் விளையாடிக் கொண்டு நின்ற சிறுவர்களிடம்  "நான் பத்து வருசத்திற்கு பிறகு தான் வீட்டுக்கு வருவேன்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை அந்த சிறுவர்களிடம் வீட்டில் கொடக்குமாறு கூறிவிட்டு அங்கு வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றிருக்கிறார். அதாவது அந்த மாணவியின் நடவடிக்கைகள் செயற்பாடுகளில் இருக்க கூடிய மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையுமற்று பெற்றோர்கள் இருந்திருக்கின்றனர்.

பாலியல் என்றால் என்ன என்பது பாலியல் உறவு என்றால் என்ன என்பது பதின்ம வயது சிறுவர்களுக்கு பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கப்படுவதால் அவர்கள் அதன் பால் ஈர்க்கப்படுகின்றனர். முந்தைய காலங்களில் ஆண்டு 11 விஞ்ஞானப்பாடப் புத்தகத்தில் பாலியல் சம்மந்தப்பட்ட ஒரு அத்தியாயம் இருந்தது. ஆனால் அது குறித்த தரவுகளையும் பாடத்தின் ஆளம் குறித்தும் ஆசிரியர்கள் அக்கறை காட்டுவது கிடையாது. அதனால் அந்த அத்தியாம் குறித்து பெரிதும் மாணவர்கள் அலட்டிக் கொள்வது இல்லை. ஆனால் இன்றைய நிலையில் ஆணுறை என்றால் என்ன ஏன் பாவிக்கப்படுகிறது உள்ளிட்ட பல பரீட்சைப்பாடத்திட்டத்திற்கு தேவையற்ற பாடப்பரப்புகளை மாணவர்களுக்கு பலவந்தமாக திணிக்கப்படுகிறது. பதின்ம வயதுகளின் உளவியல் தாக்கம் எதையும் செய்து பார்க்கத் தூண்டும். அந்த வகையில் இந்த பரீட்சைக்கு தேவையற்ற பாடப்பரப்பின் மீது அதிக அளவில் மாணவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
ஒரு மருந்தக நண்பர் சொன்னார் மாவட்ட ரீதியில் யாழ் மாவட்டத்தில் தான் அதிகளவு ஆணுறைகள் விற்பனையாகின்றன என்று.

தவிர பிள்ளைகள் பாடசாலை தவிர்த்து என்னென்ன செயற்பாடுகளில் நாட்டம் கொண்டுள்ளனர் என்பதை பெற்றோர்கள் கவனிப்பது கிடையாது.

விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் மாணவர்கள் பொதுவாக இரவுகளில் வீதிகளில் திரிவதோ பொது இடங்களில் கூடி நிற்பதோ கிடையாது. "இயக்கம் பிரச்சாரம் வைச்சு பிள்ளைகள இயக்கத்துக்கு கொண்டு போயிருவாங்கள்" என்று பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் போக்குவரத்து குறித்து அதிக அக்கறையில் இருந்தனர். மற்றது பொது இடங்களில் வீதிகளில் இடம் பெறக்கூடிய சமூக சீர்கேடுகளுக்கு விடுதலைப்புலிகள் வழங்கிய தண்டனைகள்.

இலகுவில் தவறான வழிகளில் செலுத்தப்படக்கூடியவர்களாக பள்ளிப்பருவத்தில் இருக்கும் மாணவர்களே. அதாவது பதின்ம வயது இளைஞர் யுவதிகள் புறச் சக்திகளால் இலகுவில் எந்த வழியிலும் வழிநடத்தப்படக் கூடிய அபாயம் இருக்கிறது. இது உளவியல். அந்த வகையில் பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் பாடசாலை தவிர்ந்த செயற்பாடுகளில் ரீயூசன் வகுப்புகள் மற்றும் மேலதிகள வகுப்புகள் பழகும் நண்பர்கள் நண்பர்கள் குழுமும் இடங்கள் உள்ளிட்ட பிள்ளைகளின் செயற்பாடுகளில் அக்கறையின்றி காணப்படுகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் எல்லோரும் தொலைபேசி பாவனையாளர்களாக இருக்கிறார்கள். இது கூட இன்றைய யாழ் சமூகத்தின் சமூக சீரளிவுகளிற்கு முக்கிய பங்காக இருக்கிறது.

எல்லா சீரளிவுகளுக்கும் முழுக் காரணம் பணம்.
பிள்ளைகளுக்கு செலவுக்கதிகமாக தாராளமாக பணம் கிடைப்பது சமூக சீர்கேடுகளிற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

இன்று வீதிகளில் சிகரட்பிடித்து தண்ணி அடித்துவிட்டு ரவுடித்தனம் பண்ணுபவர்களும் பெண்களுடன் சேட்டை விடுபவர்களும் எந்த வேலைகளும் செய்யாமல் வெட்டியாக வீடுகளில் இருப்பவர்களே தான். அவர்களைத் தவிர பாடசாலை மாணவர்கள். இப்படியானவர்களுக்கு வீடுகளில் தாராளமாக பணம் கிடைப்பதனால் தான் பல துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்.

ரீயுசன் வகுப்புகள் என்று சொல்லிவிட்டு பள்ளி மாணவர்கள் (ஆண் பெண் இருபாலாரும்) இன்று ராஜா மனோகரா திரையரங்குகளில் இரவு நேரக் காட்சிகளுக்கும் வருவதை காணமுடிகிறது. சிலர் பாடப்புத்தகங்களுடனேயே வருகின்ற கொடுமையும் நடக்கிறது. அருவருப்பூட்டும் விதமாக கண் முன்னாலையே சமூகம் கெடுக்கப்ட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று யாழில் இயங்கும் பல லொட்ஜ்கள் கணவன் மனைவி என்ற எந்த ஆதாரங்களும் இன்றி ஆண் பெண் தங்குவதற்கு சாதாரணமாக அறைகளை கொடுக்கின்றனர். பணத்தை மட்டுமே நோக்க மாக கொண்டு இயங்கும் இந்த லொட்ஜ் உரிமையாளர்களில் பெரும்பான்மை இனத்தவரும் இருக்கின்றனர். தென்னிலங்கை விலை மாதர்களும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கும் இவர்களில் பலர் ஏஜன்டுகளாக செயற்படுகின்றனர்.

திரையரங்குகளுக்கு செல்லவும், தண்ணியடிக்கவும், சிகரட் பிடிக்கவும், ஆணுறை வாங்கவும் சொந்தமாக உழைக்காத இவர்களுக்கு எப்படி பணம் வருகிறது?

பல்சர் உள்ளிட்ட பஷன் மோட்டார் சைக்கிள்களில் தங்கள் பிள்ளைகள திரிவதை பெருமையாக நினைக்கும் பெற்றோர் கலாச்சாரம் வெகு வீரியத்தோடு வளர்ந்து வருகிறது. வகுப்பு கட்டணங்களை தவிர பெரிய பணப்புளக்கங்கள் இருந்திராத தமிழ் மாணவர் சமூகத்திடம் இன்று ஆயிரக் கணக்கில் கைகளில் புரள்கிறது. மோட்டார் சைக்கிள்களில் வகுப்பிற்கு செல்லும் பஷன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கட்டாயம் காதலர் ஒருவர் இருந்தாக வேண்டும், கட்டாயம் காதலர்கள் சந்தித்தாக வேண்டும் என்பது போலான வளர்ச்சி பாரிய அளவில் பதிம்ம வயதுக் காரர்களிடம் ஊடுருவி வருகிறது.

இந்த பதிம்ம வயத்துக்காரர்களின் எதிர்பார்ப்பிற்கேற்றவாறு பெற்றோர்களும் பணங்களை இறைக்கின்றனர். பெற்றோர்கள் பணம் கொடுக்காவிடில் இவர்களின் தேவைக்கு  என்ன செய்வார்கள்??? சத்தம் போடாமல் வீட்டில் இருப்பார்கள் தானே!!!

முந்தித்தான் வீட்டில் ஏசினால், கேக்கிறது குடுக்காட்டி பெடி இயக்கத்துக்கு போயிருவான் என்பீர்களே இப்பொழு பெடி பெட்டையள கட்டுப்படுத்துறத்துக்கு என்ன பிரச்சினை என்று காவாலிகளின் பெற்றோர்களை கேட்க வேண்டும் போல் உள்ளது.

சொந்த வேலைகள் செய்யாமல் வீடுகளில் இருந்து பணம் கிடைப்பவர்கள் தான் இன்று சமூக சீரளிவுகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பதை என்னால் அடித்துச் சொல்ல முடியும். பதினொராம் ஆண்டு படிக்ககிற பெடியனுக்கு "கொண்டம்" எதற்கு?? கொண்டம் வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது. லொட்ஜில் ரூம் எடுப்பதற்கு எங்கிருந்து பணம் வருகிறது. 11ம் ஆண்டு பையனை காதலிக்கும் 10 ம் ஆண்டு பிள்ளைக்கு பாலியல் உறவு வைத்துக் கொள்ள துணிவு எப்படி வருகிறது. இவர்களை இந்த அளவுக்கு மாற்றிய வெளிச் சக்தி என்ன?? எல்லாமே யோசிக்க வேண்டிய விடையங்கள்.

"பேஸ்புக்" "ரக்ட்" போன்ற சமூக தளங்களில் தாராளமாக திசை மாறிச் செல்கிறது எமது சமூகம். பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் பெற்றோர்களது கடமை. சமூக ஆர்வலர்கள் இது குறித்து கடுமையான முடிவுகளை எடுத்தால் பாதிக்கப்படுவது இந்த பதின்ம வயது இளையவர்களே!!

புலம்பெயர் உறவுகளே!!!!
நீங்கள் இயந்திர வாழ்வில் செத்துச் செத்து உழைத்து இங்கு பணம் அனுப்புகிறீர்கள். இயந்திர வாழ்வின் இழைப்பாறும் நேரத்தில் இனத்தின் விடிவிற்கான போராட்டங்களில் பங்கெடுக்கிறீர்கள் ஆனால் நீங்கள் இங்கு அனுப்பும் பணம் தவறான வழிகளில் சமூகத்தை சென்றடைகிறதோ என்ற அச்சம் வருகிறது. படித்துக் கொண்டிருக்கும் உங்கள் சகோதரங்கள் குறித்து மிகுந்த கவனமாயிருங்கள்.  நீங்கள் அனுப்பும் பணத்தை அவளவுக்கதிகமாக இளையவர்களின் கைகளில் செல்வது குறித்து அவதானமாயிருங்கள். கண்டிப்பாக இருங்கள்.

வீதியில் தண்ணியடித்துவிட்டு பெண்பிள்ளைகளுடன் சேட்டைவிட்ட ஒரு இளைஞனை சமூக ஆர்வலர்கள் பொலிஸ் இல் கொடுத்தார்கள் ஆனால் அவன் பொலிஸ்க்கு பணம் கொடுத்துவிட்டு வெளியில் வந்து விட்டான். வெறும் 17 வயது இளைஞன். பாடசாலை மாணவன். இவனுக்கு எப்படி பணம் வருகிறது. "அவன்ர அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறான் அவனுக்கென்ன"  இப்படி பேசுகிறார்கள். குளிரில் உறைந்து வெயில் காய்ந்து உங்கள் சொந்தங்களுக்கு அனுப்பும் பணம் சரியான முறையில் கையாளப்படுகிறதா என்பது குறித்து அவதானமாயிருங்கள். "இந்த காவாலிய பொலிஸ்ல குடுக்காம ஒரு காலையும் கையையும் முறிச்சுப் போட்டு விட்டிருந்தா 6 மாசம் படுக்கையில கிடக்கேக்க திருந்தியிருக்கும்" இப்படி பேசுகிறார்கள் சமூக அக்கறையுள்ளவர்கள்.

சமூகத்தின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் ஆண் பெண் பிள்ளைகளின் விபரங்களை மருந்தகங்களில் ஆணுறை வேண்டும் பாடசாலை மாணவர்கள் குறித்த ஆதாரங்களை எடுத்து வெளியிடுவது பெரும் சிரமமானதல்ல ஆனால் அது எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டும்.

ஆதி
14-09-2011

2 comments:

  1. ஆதி! உங்கள் சமுதாயத்தின்மீதான நியாயமான கோபங்கள் புரிகிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு சமுதாயத்தில் திடீரெனக் கட்டுப்பாடுகள் விலகும்போது இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுவது சகஜம். இந்த நிலைமைகளை மாற்றுவதற்கான செயல்பாடுகளை முன் எடுக்கவேண்டிய பொறுப்பு சமூக ஆர்வலர்களிற்கும், புத்திஜீவிகளிற்கும், பெற்றோர்களிற்கும் முக்கியமாக இளைய சமுதாயத்துடன் பெரும்பொழுதைச் செலவிடும் ஆசிரியர்களிற்கும் உண்டு. செயற்பாடுகள் இவர்களிடமிருந்து ஆரம்பிக்கவேண்டும்

    ReplyDelete
  2. அம்பலத்தார்: உண்மைதான் தோழரே. பெற்றோர்கள் கவனம் எடுத்தாலே பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். பெரும்பாலானோர் அக்கறையின்றி இருப்பதாக தோன்றுகிறது.

    ReplyDelete

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP