Powered by Blogger.

Wednesday, September 7, 2011

புலம்பெயர் தமிழர் மத்தியில் மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஊதுகுழலாக மிருக வைத்தியர் நடேசன்

மிருக வைத்தியர் நடசேன் (அவுஸ்ரேலியா) அவர்கள் அண்மையில் "பிரபாகரனை கொன்று தமிழ் மக்களை காப்பறியதற்காக மகிந்தராஜபக்ஷவிற்கு நன்றி" என்பது போன்ற தொனிப்பொருளில் பெரிய கட்டுரை ஒன்றை எழுதிதத் தள்ளியிருந்தார்.
I am grateful to President Mahinda Rajapaksa for finishing Prabhakaran and saving my people
17 August 2011, 10:27 pm
by Dr.Noel Nadesan
இதற்கு பின்னணியில் இருக்க கூடிய சிங்கள அரசின் கபடத்தனம் மற்றும் மிருக வைத்தியர் நடேசனின் தமிழர்விரோதப்போக்கை நாங்கள் அவதானமாக அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இன்று சிறிலங்கா அரசானது சர்வதேச அளவில் மிகப்பொரிய அழுத்தங்களை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் உள்நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசை தேர்தல்களில் நிராகரித்துவருவது பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது ராஜபக்ஷவிற்கு. இந்த நிலையில் உள்நாட்டில் இருக்க கூடிய தமிழ் மக்கள் எப்பொழும் ராஜபக்ஷவை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற உண்மையை அறிந் மகிந்த ராஜபக்ஷவிற்கு புலம்பெயர்ந்து இருக்கும் தமிழ் மக்களின் ஆதரவை பெறவேண்டிய கட்டாம் ஏற்பட்டடுள்ளது. அதன் திட்டமிடல்களில் தான் தமிழ் மக்களிடையில் குழு பேதமைகளை உருவாக்கும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவரும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரும் சமாந்தரமாக மகிந்த ராஜபக்ஷவை சிறந்த மனிதராகவும் தமிழ் மக்கள் மேல் மதிப்பு வைத்திருப்பவர் போலவும் காட்ட சில தமிழ் அயோக்கியர்களை களம் இறக்கியிருக்கிறது சிங்கள அரசு.

அந்த நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் தான் இன்று இந்த மிருக வைத்தியர் நடேசன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். உள்நாட்டில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்ட்ட மகிந்தராஜபக்ஷ அரசிற்கு புலம்பெயர் தமிழர் மத்தியில் ஆதரவு திரட்டும் நோக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சிறிலங்கா அரசின் அத்தனை அராஜகங்களையும் எதிர்த்து அடக்குமுறைகளை சமாளித்து தான் தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்கள் வெற்றிபெறச் செய்திருந்தனர். தமிழ் மக்கள் பட்ட துன்பத்தை நேரில் நின்று அறியாமல் அறிவிலித்தனமாக அறிக்கைகள்விடுவதும் சிங்களை அரசை போற்றி துதிபாடுவதும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அசிங்கமாகதான் கருத வேண்டியிருக்கிறது.

மனிதகுலத்திற்கெதிராக பாரிய அளவில் உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் நடாத்திமுடித்திருக்கிற சிங்கள அரசை அதுவும் லட்சக்கணக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்திருக்கிற மகிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதாக மிருகவைத்தியர் சொல்லியிருப்பது மிருகத்தனமாக இருக்கிறது.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் தமி்ழ்மக்களை அடைத்துவைத்திருக்கிறது சிறிலங்கா அரசு. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகள் தான் பல வடிவங்களில் தமிழ் மக்களை சென்றடைந்து கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசு போரால்பாதிக்க்பட்டுள்ள மக்களுக்கென எந்த விசேட திட்டங்களையும் வைத்திருக்கவில்லை. இந்த நிலையில் போரை தமிழின படுகொலையாக நடாத்தி முடித்து 2 வருடங்கள் கடந்துவிட்ட பிறகும் எந்தவொரு அரசியல் தீர்வுக்குமான சமிஞ்சையையும் காட்டத சிங்கள அரசின் கபடத்தனதத்திற்கு ஓத்து ஊதுகிறார் இந்த மிருக வைத்தியர்.

புலம்பெயர் தமிழர்களே!!!
இந்த காலகட்டமானது மிக முக்கியமான காலகட்டம். சிங்கள அரசை பல வழிகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கி எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியில் ஜனநாயக வழியில் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உள்நாட்டு தமிழர்கள் அத்தனை வலிகளையும் பொறுத்துக் கொண்டு சிங்கள அரசை தொடரந்து நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை சலுகைகளையும் தூக்கியெறிந்து மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் சிங்கள அரசை நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் புலம்பெயர் தமிழர்கள் மிக அவதானமாகவும் வரைவாகவும் செயற்பட வேண்டும். சிங்கள அரசு பற்றிய மகிந்த ராஜபக்ஷ பற்றிய நல்ல அபிப்பிராய கருத்துகளை புலம்பெயர் தமிழ் மக்களிடையில் செலுத்தி புலம்பெயர் தமிழ் மக்களை தன்பக்கம் இழுத்து வெளி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு புலம்பெயர் தமிழ் மக்களினூடக உள்நாட்டு தமிழ் மக்களை தனது வழிக்கு கொண்டுவர முடியும் என்று சிங்கள அரசு கனவு காணுகிறது. அந்த வேலைத்திட்டங்களிற்கு தான் இன்று மிருகவைத்தியர் நடேசன் உள்ளிட்ட சிலர் களம் இறக்கப்ட்டுள்ளனர் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

சனல் 4 ஊடகம், இந்திய ஊடகம் என எமது மக்களின் அவலத்தை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்களை சந்தித்து நேரடி பதிவுகளை வெளியிட்டு தமிழ் மக்களின் நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சிங்கள அரசிடம் இருந்து கிடைக்க கூடிய அற்ப சுகங்களிற்காக ராஜபக்ஷவின் ஊதுகுழலாக மிருகவைத்தியர் நடேசன் மாறியிருப்பது கேவலமாக இருக்கிறது. எமது வலிகளை துன்பங்களை எமக்கான உரிமை மறுப்புகளை உலகமே பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் எமது இனத்துக்குள்ளேயே அதை மூடிமறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியை காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்குபவர்கள் இருப்பது வேதனைக்குரியது. இந்த மிருகவைத்தியர் போன்றோரை இனம் கண்டு அவதானமாக இருக்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பு.


ஆதி
03-09-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP