Powered by Blogger.

Friday, September 2, 2011

கிறிஸ் பூதங்கள் என பெயர்வைத்து உலாவரும் சிறிலங்கா அரச மனித மிருகங்கள்.

சிங்கள அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் கீழ் தமிழர் பிரதேசத்திற்கு கிறிஸ்பூதங்கள் என்ற பெயரில் சிங்கள ராணுவத்தின் காடையர் தனத்தை நகர்த்தியிருக்கிறது. கிழக்கு மாகாண இயல்பு வாழ்க்கையை குலைத்த சிறிலங்கா அரசு இன்று வடக்கு மாகாணத்திற்கு சிங்கள காடையர்களை அனுப்பியிருக்கிறது. மக்களின் இயல்புநிலையை குழப்புதல் அதனூடாக ராணுவத்தின் அதிகாரத்தன்மையை பிரயோகித்து அச்சமுள்ள சுழ்நிலையில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருத்தல் என்ற அராஜக போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

பிடிபடும் மர்ம மனிதர்கள் இராணுவத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கூடிய வகையில் ஜி.பி.ஸ் தொழினுட்ப வசதி அல்லது தொலைபேசி வசதிகளுடன் காணப்படுகின்றனர். மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருமுன் இராணுவம் வந்துவிடுகிறது. ராணுவம் ஆயுதங்கள் சகிதம் சட்டத்தை கையில் எடுக்கிறது. மர்ம மனிதர்களை பிடித்த மக்கள் குறித்து நோட்டம்விட்ட அல்லது தகவல் சேகரித்த இராணுவம் மக்களை கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது சிறிது நேரத்தின் பின் அந்த மக்களின் வீடுகளுக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி அவர்களை நீமன்றத்திற்கு கொண்டு செல்கிறது.

பிடிபடும் மர்மனிதர்கள் எவரையுமே நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லாத சிங்கள ராணுவமும் பொலிசும் மர்ம மனிதர்களை பிடிக்கும் மக்களை தாக்கி நீமன்றிற்கு இழுத்துச் செல்லும் அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் கோண்டாவிலில் பிடிபட்ட மர்மமனிதனை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்கள் பொலிஸ் இல் ஒப்படைத்தனர். நீதிகிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பிடிபட்ட சிங்கள இளைஞன் பாலியல் மன நோயாளி எனவும். அதனால்தான் களவாக பெண்களை யன்னல் வழியாக பார்த்ததாகவும் பொலிஸ் தெரிவித்தது. தென்னிலங்கையில் இருந்து பெண்களை களவாக பார்ப்பதற்கு பாலியல் மனநோயாளி பஸ் ஏறி யாழ்ப்பாணம் வந்திருப்பது புதுமையாக இருக்கிறது. கேட்பதற்க யாருமற்ற நிலையில் சிங்கள அரசும் சிங்கள ராணுவமும் தமிழ் மக்களை முட்டாள்கள் என நினைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர்.

நேற்று இரவு கூட யாழ்பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் புக முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் பெண்கள் விடுதி மாணவிகள் ஆண் மாணவர்களிடம் சொல்ல ஆண்கள்விடுதியில் உள்ள மாணவர்கள் விடுதிடியில் கூடியபொழுது மரத்தில் இருந்து குதித்த மர்மமனிதர்கள் மாணவர்களை மிரட்டிக் கொண்டு ஓடியுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற மாணவர்களை ரயில் ரோட்டு கரையில் மறித்த ராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.

மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலெல்லாம் அவர்களை பாதுகாப்பதற்கு ராணுவம் உடனடியாக கூடிவிடுவது ஆச்சரியப்படுவதற்கில்லை. யாருடைய திட்டமிடல் என்பது இங்கு புலனாகிறது.

சிவில் நிர்வாகத்தை காட்டுமிராண்டித்ததனமான கையாண்டு கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்திற்கெராக சமூக அர்வலர்கள் மனத உரிமை ஆர்வலர்கள் சட்டரீதியில் கையாள முன்வர வேண்டும். சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனமான இந்த நிகழ்ச்சிநிரலிலின் பின்னணியில் இருக்க கூடிய அடக்குமுறையை சர்வதேச அளவில் பேசும்பொருளாக்கப்பட வேண்டும். ராஜபக்ஷ அரசு எதை வேண்டுமானாலும் மனிதகுலத்திற்கெதிராக செய்வோம் என கங்கணம்கட்டி நிற்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதோடு மனித உரிமைகள் மீறப்படுவதையும் இராணுவ அடக்கு முறைகளையும் எதிர்த்து ஜனநாயக வழியில் போராட வேண்டும். சர்வதேச அளவில் இதை கொண்டு போய் இலங்கை அரசுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்க கூடிய வழிகள் இருக்கின்றனவா என்பதை ஆராயவேண்டும்.

மனித உரிமை ஆர்வலர்களுக்கு இந்த பிரச்சினையை உடனடியாக கொண்டு செல்லுங்கள் தமிழர்களே.

ஆதி
03-09-11

1 comment:

  1. உங்கள் ஆணித்தரமான பதிவுகளிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP