Powered by Blogger.

Monday, September 5, 2011

தமிழர்களாக ஒன்றிணைவோம் தமிழர்களாக போராடுவோம்,விடுதலை வேண்டி தொடரந்து போராடுவோம்.

இன்று தமிழ் நாட்டில் இருக்க கூடிய பள்ளி மாணவர்கள் முதல் எந்த அரசியல் சிந்தனையுமற்று இருந்த இளைஞர்கள் வரைக்கும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 நிரபராதிகளை இந்திய காங்கிரஸ் அரசு தூக்கிலேற்றி சாகடிப்பதற்கு பல வழிகளில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது என்ற செய்தியை கொண்டு செல்வதற்கும் அவர்களையும் இது குறித்து சிந்திக்க வைப்பதற்கும் இணைய தளங்கள் மற்றும் சமூக தளங்கள் பெரரிதும் உதவியிருக்கின்றன.

தொடர்ச்சியான ஞாபகப்படுத்தல்கள் செய்திப் பகிர்வுகள் என இடைவிடாது சமூகதளங்களை இந்த பிரச்சினை நிரப்பியிருந்தது இத்தனை சாதகங்களுக்கும் காரணம இருந்திருக்கிறது. அதே போல் தமிழ் நாட்டில் இருக்க கூடிய கிராமப்புறங்கள் தெருக்கள் என பல வழிகளில் மக்களை சென்றடைந்து இந்த தூக்கு தண்டனை என்றயெரில் நடைபெற இருந்த தமிழினப்படுகொலை பற்றிய வழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை உண்டுபண்யிருக்கிறது.

கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற மக்கள் வரைக்கும் சரியான முறையில் தகவல்கள் பரிமாறப்பட்டு ஒரு லட்சியத்தை நோக்கிய ஒருமித்த நகர்வு மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தரும். அந்த அரசியலும் புரட்சியும்தான் இன்று தேவைப்படுகிறது.

தற்காலிகமாக தடைவிதிக்கப்ட்டுள்ள தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு இந்திய காங்கிரஸ் அரசு  எந்த வழியிலும் நிறைவேற்ற முயற்சிக்கும் என மனம் ஒருவித பதட்டத்திற்குள்ளானாலும் இந்த தற்காலிக தடையை வாங்கிய தோழர்கள் மீது அதை விட நம்பிக்கை இருக்கிறது. இரவுபகலாக பாடுபட்ட இந்த தோழமைகளின் வலிமை மீது நம்பிக்கை இருக்கிறது.

எழுத்தாளர்களும் சமூகநலன்விரும்பிகளும் இளைஞர் இயக்கங்கள் ஒருபக்கத்தால் போராட்டங்களை ஒழுங்குபடுத்த மறுபுறத்தில் இளைஞர்களை ஒழுங்கமைத்து சமாந்தரமாய் சட்டரீதியாக கையாள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்த அண்ணன்கள் வைக்கோ மற்றும் சீமானின் செயற்பாடுகளின் பலம் வித்தியாசமாக இருந்தது. ஈழத்தில் இருந்து இதை உணரும் பொழுது உத்வேகம் அளிக்கிறது. பல நண்பர்கள் இந்த உணர்வை பகிர்ந்நிதருந்தார்கள். இங்குள்ள அதிகமான எல்லோருமே "2009 ல் கருணாநிதி இவர்களை விட்டிருந்தால் போராடி போரை நிறுத்தியிருப்பார்கள்" என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வீரப்புதல்வி செங்கொடியின் தியாகம் அளப்பெரியது. செங்கொடியின் வரலாறு குறித்த அத்தனை பதிவுகளையும் படித்துவிட்டேன். இத்தனை புரட்சி சிந்தனை கொண்டவள், இத்தனை விடுதலை வேட்கை கொண்டவள், இத்தனை ஆழுமை கொண்டவள், எமதருகில் இப்பொழுது இல்லையெனும் பொழுது மனம் கனக்கிறது.

இந்த தூக்கு தண்டனையை நிறுத்துவதற்கு வன்முறையைச் சரி பாவியுங்கள் என்று கத்துமளவிற்கு நாங்கள் இயலா நிலைக்கு தள்ளப்ட்டிருந்தோம். எமது இனத்தின் மீது அத்தனை அடக்குமுறையையும் அழிப்பையும் செய்திருந்த இந்த இந்திய காங்கிரஸ் அரசுமீது உச்சக்கட்ட வெறுப்பிலேயே இருக்கிறோம். வன்னிக்குள் போரை முடக்கி வெளி உலகத்திற்கு தெரியாத வகையில் இந்தி அரசின் பாதுகாப்புடன் சிறிலங்கா அரசு செய்த தமிழினத்தின் மீதான மிகப்பெரிய படுகொலையை கண்டித்து போராட முடியாத நிலைக்கு தள்ளிய கருணாநிதி அரசின் மீது வெறுப்பில் இருக்கிறோம். இந்த நிலையில் மீண்டும் 3 உறவுகளை இத்தனை கோடி தமிழர்களுக்கு முன்னால் அதுவும் தமிழ்நாட்டில் வைத்து படுகொலை செய்வதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என்ற மனநிலையில் வன்முறை குறித்து சிந்திக்கும் அளவிற்கு மாற்றப்ட்டிருக்கிறோம். எப்படி இருப்பினும் சட்டரீதியான ஜனநாயக வழிமுறைகளுக்கும் தமிழின உணர்விற்கும் மதிப்பளிப்பவராக முதலமைச்சர் ஜெயலலிதா செயற்பட்டிருப்பது அவரை இன்னமும் ஒருபடி மேலே உயர்த்தியிருக்கிறது.

தூக்கு தண்டனை ரத்து என்பது தற்காலகமாவே காணப்படுகிறது. எனவே அது நிதந்தரமாக நிறுத்தப்படும்வரை போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களே!!! பெருமளவில் இந்திய தூதரகங்களுக்கு முன்னால் போராட்டங்களில் ஈடுபடுங்கள். மனுக்களை கொடுங்கள்.

சர்வதேச அளவில் இருக்க கூடிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் அனுப்புங்கள்.


மர்மமனிதர்கள் என்ற பயங்கரத்தை உருவாக்கி அதன் மூலம் இங்கு தமிழ்கள் மீது கொலைவெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. அதே நேரத்தில் 3 தமிழர்களை தூக்கிலிட்டு படுகொலை செய்து ரசிக்க துடிக்கிறது இந்திய காங்கிரஸ் அரசு. எல்லா வழிகளிலும் தமிழ்கள் மீது வேதனைகளும் சோதனைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. காங்கிரஸை கொண்ட இந்தி வல்லாதிக்கமும் சிங்கள பேரினவாதமும் இயலுமான வழிகளில் தமிழர்கள் மேல் கொலைவெறியாட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம். இந்த நிலையில் எம் மீதான வன்முறை கட்டவிழ்ப்புகளை உலகம் பூராவும் தெரியப்படுத்த வேண்டும். மனித உரிமை குறித்து பேசப்படும் அத்தனை இடங்களிலும் எம்மீதான வன்முறைகள் குறித்து முறைப்பாடுகள் செய்ய வேண்டும். உங்களால் இயலுமான வழிகளில் இந்த பிரச்சினைகளை சர்வதேச அளவிற்கு கொண்டுவாருங்கள். எல்லா வழிகளிலும் இருந்து எம் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை எதிர்து எல்லோரும் போராடுவோம், ஒண்றியைவோம்.

சிங்கள அரசின் கூலிகளாக இருந்து கொண்டு தமிழர்கள் மீதான வன்முறைகள் குறித்து வாய்திறக்காதிருப்பவர்கள் குறித்து கணக்கில் எடுக்காதீர்கள். அவர்கள் மலம் இருந்தால் தின்று வாழத்தெரிந்தவர்கள். இங்கு தமிழர்கள் மீது செய்யப்படும் வன்முறைகளுக்கு சிங்கள இராணுவம் காரணம் இல்லை என்கிறார்கள் இவர்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 உறவுகள் தான் குற்றவாளிகள் என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மலம் தின்னும் மனநோயாளிகள் குறித்து எந்த அக்கறையும் தேவையில்லை எமக்கு.

சிங்கள அரசு, இந்திய காஸ்கிரஸ் அரசு, மற்றும் சிங்கள கூலிப்படைகளாலும் வரும் அராஜகங்களையும் எதிர்த்து தான் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. தமிழர்களாக ஒன்றிணைவோம் தமிழர்களாக போராடுவோம்.

ஆதி
04-09-11

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP