Powered by Blogger.

Wednesday, September 7, 2011

தமிழர் அகதி அந்தஸ்திற்காக போராடிய அவுஸ்ரேலியர் டேவிட் மான் (Devid Mann)

அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிய ஈழத்தமிழர்களை மலேசியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ள நிலையில் அவர்களை திருப்பி அனுப்புவது சட்டவிரோதம் என நீதிமன்றத்தில் வாதாடி வென்றிருக்கிறார் டேவிட்மான்.

திருப்பி அனுப்பும் நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சட்டத்தரணி டேவிட்மான் க்கு முதலில் எமது நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு இனத்தின் அகதி உரிமைக்காக இவர் வாதிட்டு வென்றிருப்பதென்பது நிட்சயமாக வாழ்ப்பட வேண்டியஒன்று.

சிறிலங்கா அரசு சிறிலங்காவில் சுமூக நிலை தோன்றிவிட்டதென்றும் தமிழர்கள் இயல்பாக இருக்க கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டதென்றும் பிரச்சாரப்படுத்திவரும் நிலையில் அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிய தமிழர்களை வேறு நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளதென்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.  பாதிக்கப்ட்ட இந்த தமிழ்மக்களுக்கு தமது சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்ற செய்தியை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளமை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு நற்செய்தி. இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்கள் கொடுக்கவும் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர் உரிமை மறுப்புகள் குறித்தும் கேள்வியெழுப்ப முடியும்.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் போக்குகளை சர்வதேச அளவில் வெளிக்காட்டுவதற்கு பலவழிகளிலும் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ் மக்களின் அகதி அந்தஸ்து கோரிக்கையை ஏற்றுள்ளமை அல்லது திருப்பி அனுப்பபடவிருந்த தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பாமல் தடுத்துள்ளமை என்பது தமிழ் மக்களின் நிலை குறித்த செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. தமிழ் மக்களின் அவலங்களை புரிந்து சிறிலங்காவில் இருக்க கூடிய பாதகத்தன்மையை புரிந்து திருப்பி அனுப்பப்பட இருந்த தமிழ் மக்களுக்காக சட்டத்தரணி டேவிட்மான் வாதாடியிருப்பதென்பது நிட்சயமாக தமிழர்கள் நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

பிரபலாமான இவ் சட்டத்தரணிகள் எமது உரிமை குறித்த விவாதங்களில் ஈடுபடுவதை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட சட்டத்தரணிகளை தொடர்ந்து ஊக்குவிப்பதன் மூலம் எமது உரிமைப்பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கும் அந்நதந்த நாட்டு அரசுகளுக்கு புரிய வைப்பதற்கும் இலகுவாக இருக்கும்.

தமிழ் மக்களே!! இந்த சட்டத்தரணிக்கு உங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுங்கள். மின்னஞ்சலூடாகவே அல்லது வேறு வழிகளிலோ உங்கள் நன்றிகளை தெரிவித்து தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். சிறிலங்காவில் இருக்க கூடிய தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை பேசக்கூடிய குரல்களை நாங்கள் வளப்படுத்த வேண்டும். எமது நன்றிகளையும் விருப்புகளையும் தெரியப்படுத்துமிடத்து  இவ்வாறான குரல்கள் எங்களுக்காக தொடர்ந்து ஒலிக்கும்.

ஆதி.

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP