Powered by Blogger.

Wednesday, September 7, 2011

தமிழர் அகதி அந்தஸ்திற்காக போராடிய அவுஸ்ரேலியர் டேவிட் மான் (Devid Mann)

அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிய ஈழத்தமிழர்களை மலேசியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ள நிலையில் அவர்களை திருப்பி அனுப்புவது சட்டவிரோதம் என நீதிமன்றத்தில் வாதாடி வென்றிருக்கிறார் டேவிட்மான்.

திருப்பி அனுப்பும் நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சட்டத்தரணி டேவிட்மான் க்கு முதலில் எமது நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு இனத்தின் அகதி உரிமைக்காக இவர் வாதிட்டு வென்றிருப்பதென்பது நிட்சயமாக வாழ்ப்பட வேண்டியஒன்று.

சிறிலங்கா அரசு சிறிலங்காவில் சுமூக நிலை தோன்றிவிட்டதென்றும் தமிழர்கள் இயல்பாக இருக்க கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டதென்றும் பிரச்சாரப்படுத்திவரும் நிலையில் அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிய தமிழர்களை வேறு நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளதென்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.  பாதிக்கப்ட்ட இந்த தமிழ்மக்களுக்கு தமது சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்ற செய்தியை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளமை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு நற்செய்தி. இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்கள் கொடுக்கவும் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர் உரிமை மறுப்புகள் குறித்தும் கேள்வியெழுப்ப முடியும்.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் போக்குகளை சர்வதேச அளவில் வெளிக்காட்டுவதற்கு பலவழிகளிலும் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ் மக்களின் அகதி அந்தஸ்து கோரிக்கையை ஏற்றுள்ளமை அல்லது திருப்பி அனுப்பபடவிருந்த தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பாமல் தடுத்துள்ளமை என்பது தமிழ் மக்களின் நிலை குறித்த செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. தமிழ் மக்களின் அவலங்களை புரிந்து சிறிலங்காவில் இருக்க கூடிய பாதகத்தன்மையை புரிந்து திருப்பி அனுப்பப்பட இருந்த தமிழ் மக்களுக்காக சட்டத்தரணி டேவிட்மான் வாதாடியிருப்பதென்பது நிட்சயமாக தமிழர்கள் நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

பிரபலாமான இவ் சட்டத்தரணிகள் எமது உரிமை குறித்த விவாதங்களில் ஈடுபடுவதை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட சட்டத்தரணிகளை தொடர்ந்து ஊக்குவிப்பதன் மூலம் எமது உரிமைப்பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கும் அந்நதந்த நாட்டு அரசுகளுக்கு புரிய வைப்பதற்கும் இலகுவாக இருக்கும்.

தமிழ் மக்களே!! இந்த சட்டத்தரணிக்கு உங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுங்கள். மின்னஞ்சலூடாகவே அல்லது வேறு வழிகளிலோ உங்கள் நன்றிகளை தெரிவித்து தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். சிறிலங்காவில் இருக்க கூடிய தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை பேசக்கூடிய குரல்களை நாங்கள் வளப்படுத்த வேண்டும். எமது நன்றிகளையும் விருப்புகளையும் தெரியப்படுத்துமிடத்து  இவ்வாறான குரல்கள் எங்களுக்காக தொடர்ந்து ஒலிக்கும்.

ஆதி.

தூக்கு தண்டனையை எதிர்த்து மூண்டெழுந்த தமிழ் சமூகம்.

ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சோடிக்கப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் உள்ளிட்டோரினது கருணை மனுக்களை நிராகரித்த இந்திய ஜனாதிபதி அவர்களை தூக்கிலிடுமாறு பணித்திருந்தார். ஏறத்தாள இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் அனுபவித்த பின்னர் இவர்களின் கருணை மனுவை நிராகரித்திருக்கிறது இந்திய மத்திய அரசு.

செப்டம்பர் 9ம் திகதி தூக்கிலிடுமாறு வேலூர் சிறைக்கு கட்டளை வழங்களப்பட்டிருந்தது. தூக்கு மேடை தூசி தட்டப்பட்டது. வர்ணம் பூசப்பட்டது. தூக்கிற்கு தெரிவு செய்யப்ட்டு முறை குறித்து பேரறிவாளன் சாந்தன் முருகனுக்கு தெரிவிக்கப்ட்டது. 11 வருடங்கள் கிடப்பில் வைத்திருந்த கருணை மனுவை நிராகரித்த இந்திய மத்திய அரசு இவர்களை தூக்கிலேற்றுவதற்கு அவரசம் காட்டுகின்றமைக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ராஜீவ் காந்தி கொலை விசாரணை என்பது சந்தேகத்திற்கிடமான முறையில் நடாத்தப்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவில்லை. கொலை நடந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைக் குழுவிற்கு அரசியல் அழுத்தங்கள் இப்படி பல குழுறுபடிகளை கொண்ட விசாரணையைதான் ராஜிவ்காந்தி கொலை விசயத்தில் நடாத்தி முடித்திருக்கிறது இந்திய அரசு.

இந்திய பிரதமரின் கொலை சம்மந்தப்பட்ட விசாரணைகளை மிகச்சாதாரணமாகவும் அடிப்படை கண்டுபிடிக்காமலும் இந்திய புலனாய்வமைப்புகள் முடித்திருப்பது கேலிக்குரியதாக இருக்கிறது. இந்த கொலையில் பெரும் அரசியல் சதி இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் பற்றரி வாங்கி கொடுத்தவருக்கும் தற்கொலை குண்டுதாரி தங்க இடம் கொடுத்தவருக்கும் மரண தண்டனையை வழங்கியிருக்கிறது இந்திய நீதித்துறை. கொலையின் பின்னணியில் இருக்க கூடிய உள்நாட்டு அரசியல் சக்தி எது என்பதை கண்டுபிடிக்காமலே நேரடி தொடர்பில்லாத சந்தேக நபர்களை தூக்கிலிடும் அளவிற்கு இந்திய நீதித்துறையை அரசியல் அமைப்புகள் அழுத்தம் கொடுத்திருக்கின்றன என்றே நம்பப்படுகின்றது.

எது எப்படியிருப்பினும் தற்காலிகமாக தூக்கு தண்டனையை நிறுத்த வைத்திருக்கிறது தமிழகம்.

மூண்டெழுந்த தமிழகம்
இந்த விடையத்தில் என்றுமில்லாதவாறு தமிழகம் விழித்துக் கொண்டது. நாம்தமிழர் இயக்கம் மே.17 இயக்கம் மக்கள் மன்றம் எழுத்தாளர்கள் சமூக நலன்விரும்பிகள் மனித உரிமை ஆர்வலர்கள் தமிழ் உணர்வாளர்கள் என ஒட்டுமொத்த தமிழகமே மரண தண்டனைக்கு எதிராக களம் இறங்கியது என சொல்லலாம். ஊருராய் தெருத்தெருவாய் சென்று இந்த வழக்கில் இருக்கப்படக்கூடிய சோடிப்புகள் மற்றும் மரணதண்டனைக்கு அவசரம் காட்டும் இந்திய அரசின் கபடத்தனம் குறித்தும் மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது தோழர்களால். கல்லூரி மாணவர்கள் சட்டத்தரணிகள் என போராட்டங்களில் இறங்கினர். ஆங்காங்கே சிறு சிறு அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டங்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமாக உருவெடுத்திருந்தன. உளலுக்கெதிராக அன்னா வினுடைய உண்ணாவிரப்போராட்டம் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மரண தண்டனையை எதிர்த்து தமிழகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்திய அரச ஊடகங்கள் இந்த மரணதண்டனை போராட்டத்தை பெருமளவில் மறைத்தன என்றே சொல்லலாம். ஆனால் பல இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இந்த செய்தி மக்களை சென்றடைவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டனர். சைக்கிள் பயணம் மோட்டார் சைக்கிள் பயணம் என ஒரு வழியிலும் இணையத்தில் சமூக தளங்களினூடாக மாபெரும் போராட்டத்தை நகர்த்தியிருந்தனர் என்றே சொல்லலாம். தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் இந்த போராட்டம் நகர்வதற்கு சமூகதளங்களில் முன்னெடுக்கப்ட்ட பாரிய அளவிலான கோஷங்களும் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் அதிர்ச்சியழித்த விடையம் தியாகி செங்கொடியின் தற்கொலை. மக்கள் மன்ற உறுப்பினராக இருந்த 22 வயதே ஆன செங்கொடி மூன்று உறவுகளின் தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரிய எல்லா போராட்டங்களிலும் முழுமையாக இணைத்துக் கொண்டடிருந்தவர். இவர் மூன்று பேரினதும் தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி தீமூட்டி தன்னை மாய்த்துக் கொண்டது அனைவரையும் ஆதிர்ச்சியிலும் மீள முடியாத சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த நேரத்தில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தண்டனையை குறைக்கும்படி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். இந்த இடத்தில் தியாகி செங்கொடிக்கு வீரவணக்கங்களை தெரிவிப்பதோடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நன்றிகளையும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் நாம்.

சோர்ந்து போன புலம்பெயர் தமிழ் சமூகம்.
ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பொய்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப்ட்டுள்ள 3 தமிழ் உயிர்களை காக்க புலம்பெயர் தமிழ் சமூகம் இன்னமும் முழுவீச்சுடன் போராடவில்லை என்றே கூறலாம். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிற்கு முன்னால் பெருமளவில் போராட்டங்கள் நடைபெறவில்லை.  பெருமளவில் போராட்டங்களை நடாத்தி தூக்கு தண்டனையை நிறுத்தியது இது தான் முதல்தடவை என்று நினைக்கிறேன். அதாவது மக்கள் சக்தி வென்றிருக்கிறது. தற்காலிகமாக தான் இந்த தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே நிரந்தரமாக இந்த தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புலம்பெயர் தமிழர்களும் தமது மக்கள் பலத்துடன் இந்திய தூதரகங்களின் முன்னால் போராட வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஒட்டு மொத்த தமிழனம் போராடி தூக்கிலிருந்து 3 உயிர்களை காப்பாற்றியது என்று வரலாறு பதிவு செய்யட்டும்.

ஆதி
03-09-2011

புலம்பெயர் தமிழர் மத்தியில் மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஊதுகுழலாக மிருக வைத்தியர் நடேசன்

மிருக வைத்தியர் நடசேன் (அவுஸ்ரேலியா) அவர்கள் அண்மையில் "பிரபாகரனை கொன்று தமிழ் மக்களை காப்பறியதற்காக மகிந்தராஜபக்ஷவிற்கு நன்றி" என்பது போன்ற தொனிப்பொருளில் பெரிய கட்டுரை ஒன்றை எழுதிதத் தள்ளியிருந்தார்.
I am grateful to President Mahinda Rajapaksa for finishing Prabhakaran and saving my people
17 August 2011, 10:27 pm
by Dr.Noel Nadesan
இதற்கு பின்னணியில் இருக்க கூடிய சிங்கள அரசின் கபடத்தனம் மற்றும் மிருக வைத்தியர் நடேசனின் தமிழர்விரோதப்போக்கை நாங்கள் அவதானமாக அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இன்று சிறிலங்கா அரசானது சர்வதேச அளவில் மிகப்பொரிய அழுத்தங்களை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் உள்நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசை தேர்தல்களில் நிராகரித்துவருவது பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது ராஜபக்ஷவிற்கு. இந்த நிலையில் உள்நாட்டில் இருக்க கூடிய தமிழ் மக்கள் எப்பொழும் ராஜபக்ஷவை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற உண்மையை அறிந் மகிந்த ராஜபக்ஷவிற்கு புலம்பெயர்ந்து இருக்கும் தமிழ் மக்களின் ஆதரவை பெறவேண்டிய கட்டாம் ஏற்பட்டடுள்ளது. அதன் திட்டமிடல்களில் தான் தமிழ் மக்களிடையில் குழு பேதமைகளை உருவாக்கும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவரும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரும் சமாந்தரமாக மகிந்த ராஜபக்ஷவை சிறந்த மனிதராகவும் தமிழ் மக்கள் மேல் மதிப்பு வைத்திருப்பவர் போலவும் காட்ட சில தமிழ் அயோக்கியர்களை களம் இறக்கியிருக்கிறது சிங்கள அரசு.

அந்த நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் தான் இன்று இந்த மிருக வைத்தியர் நடேசன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். உள்நாட்டில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்ட்ட மகிந்தராஜபக்ஷ அரசிற்கு புலம்பெயர் தமிழர் மத்தியில் ஆதரவு திரட்டும் நோக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சிறிலங்கா அரசின் அத்தனை அராஜகங்களையும் எதிர்த்து அடக்குமுறைகளை சமாளித்து தான் தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்கள் வெற்றிபெறச் செய்திருந்தனர். தமிழ் மக்கள் பட்ட துன்பத்தை நேரில் நின்று அறியாமல் அறிவிலித்தனமாக அறிக்கைகள்விடுவதும் சிங்களை அரசை போற்றி துதிபாடுவதும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அசிங்கமாகதான் கருத வேண்டியிருக்கிறது.

மனிதகுலத்திற்கெதிராக பாரிய அளவில் உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் நடாத்திமுடித்திருக்கிற சிங்கள அரசை அதுவும் லட்சக்கணக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்திருக்கிற மகிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதாக மிருகவைத்தியர் சொல்லியிருப்பது மிருகத்தனமாக இருக்கிறது.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் தமி்ழ்மக்களை அடைத்துவைத்திருக்கிறது சிறிலங்கா அரசு. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகள் தான் பல வடிவங்களில் தமிழ் மக்களை சென்றடைந்து கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசு போரால்பாதிக்க்பட்டுள்ள மக்களுக்கென எந்த விசேட திட்டங்களையும் வைத்திருக்கவில்லை. இந்த நிலையில் போரை தமிழின படுகொலையாக நடாத்தி முடித்து 2 வருடங்கள் கடந்துவிட்ட பிறகும் எந்தவொரு அரசியல் தீர்வுக்குமான சமிஞ்சையையும் காட்டத சிங்கள அரசின் கபடத்தனதத்திற்கு ஓத்து ஊதுகிறார் இந்த மிருக வைத்தியர்.

புலம்பெயர் தமிழர்களே!!!
இந்த காலகட்டமானது மிக முக்கியமான காலகட்டம். சிங்கள அரசை பல வழிகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கி எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியில் ஜனநாயக வழியில் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உள்நாட்டு தமிழர்கள் அத்தனை வலிகளையும் பொறுத்துக் கொண்டு சிங்கள அரசை தொடரந்து நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை சலுகைகளையும் தூக்கியெறிந்து மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் சிங்கள அரசை நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் புலம்பெயர் தமிழர்கள் மிக அவதானமாகவும் வரைவாகவும் செயற்பட வேண்டும். சிங்கள அரசு பற்றிய மகிந்த ராஜபக்ஷ பற்றிய நல்ல அபிப்பிராய கருத்துகளை புலம்பெயர் தமிழ் மக்களிடையில் செலுத்தி புலம்பெயர் தமிழ் மக்களை தன்பக்கம் இழுத்து வெளி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு புலம்பெயர் தமிழ் மக்களினூடக உள்நாட்டு தமிழ் மக்களை தனது வழிக்கு கொண்டுவர முடியும் என்று சிங்கள அரசு கனவு காணுகிறது. அந்த வேலைத்திட்டங்களிற்கு தான் இன்று மிருகவைத்தியர் நடேசன் உள்ளிட்ட சிலர் களம் இறக்கப்ட்டுள்ளனர் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

சனல் 4 ஊடகம், இந்திய ஊடகம் என எமது மக்களின் அவலத்தை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்களை சந்தித்து நேரடி பதிவுகளை வெளியிட்டு தமிழ் மக்களின் நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சிங்கள அரசிடம் இருந்து கிடைக்க கூடிய அற்ப சுகங்களிற்காக ராஜபக்ஷவின் ஊதுகுழலாக மிருகவைத்தியர் நடேசன் மாறியிருப்பது கேவலமாக இருக்கிறது. எமது வலிகளை துன்பங்களை எமக்கான உரிமை மறுப்புகளை உலகமே பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் எமது இனத்துக்குள்ளேயே அதை மூடிமறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியை காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்குபவர்கள் இருப்பது வேதனைக்குரியது. இந்த மிருகவைத்தியர் போன்றோரை இனம் கண்டு அவதானமாக இருக்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பு.


ஆதி
03-09-2011

Monday, September 5, 2011

தமிழர்களாக ஒன்றிணைவோம் தமிழர்களாக போராடுவோம்,விடுதலை வேண்டி தொடரந்து போராடுவோம்.

இன்று தமிழ் நாட்டில் இருக்க கூடிய பள்ளி மாணவர்கள் முதல் எந்த அரசியல் சிந்தனையுமற்று இருந்த இளைஞர்கள் வரைக்கும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 நிரபராதிகளை இந்திய காங்கிரஸ் அரசு தூக்கிலேற்றி சாகடிப்பதற்கு பல வழிகளில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது என்ற செய்தியை கொண்டு செல்வதற்கும் அவர்களையும் இது குறித்து சிந்திக்க வைப்பதற்கும் இணைய தளங்கள் மற்றும் சமூக தளங்கள் பெரரிதும் உதவியிருக்கின்றன.

தொடர்ச்சியான ஞாபகப்படுத்தல்கள் செய்திப் பகிர்வுகள் என இடைவிடாது சமூகதளங்களை இந்த பிரச்சினை நிரப்பியிருந்தது இத்தனை சாதகங்களுக்கும் காரணம இருந்திருக்கிறது. அதே போல் தமிழ் நாட்டில் இருக்க கூடிய கிராமப்புறங்கள் தெருக்கள் என பல வழிகளில் மக்களை சென்றடைந்து இந்த தூக்கு தண்டனை என்றயெரில் நடைபெற இருந்த தமிழினப்படுகொலை பற்றிய வழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை உண்டுபண்யிருக்கிறது.

கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற மக்கள் வரைக்கும் சரியான முறையில் தகவல்கள் பரிமாறப்பட்டு ஒரு லட்சியத்தை நோக்கிய ஒருமித்த நகர்வு மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தரும். அந்த அரசியலும் புரட்சியும்தான் இன்று தேவைப்படுகிறது.

தற்காலிகமாக தடைவிதிக்கப்ட்டுள்ள தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு இந்திய காங்கிரஸ் அரசு  எந்த வழியிலும் நிறைவேற்ற முயற்சிக்கும் என மனம் ஒருவித பதட்டத்திற்குள்ளானாலும் இந்த தற்காலிக தடையை வாங்கிய தோழர்கள் மீது அதை விட நம்பிக்கை இருக்கிறது. இரவுபகலாக பாடுபட்ட இந்த தோழமைகளின் வலிமை மீது நம்பிக்கை இருக்கிறது.

எழுத்தாளர்களும் சமூகநலன்விரும்பிகளும் இளைஞர் இயக்கங்கள் ஒருபக்கத்தால் போராட்டங்களை ஒழுங்குபடுத்த மறுபுறத்தில் இளைஞர்களை ஒழுங்கமைத்து சமாந்தரமாய் சட்டரீதியாக கையாள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்த அண்ணன்கள் வைக்கோ மற்றும் சீமானின் செயற்பாடுகளின் பலம் வித்தியாசமாக இருந்தது. ஈழத்தில் இருந்து இதை உணரும் பொழுது உத்வேகம் அளிக்கிறது. பல நண்பர்கள் இந்த உணர்வை பகிர்ந்நிதருந்தார்கள். இங்குள்ள அதிகமான எல்லோருமே "2009 ல் கருணாநிதி இவர்களை விட்டிருந்தால் போராடி போரை நிறுத்தியிருப்பார்கள்" என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வீரப்புதல்வி செங்கொடியின் தியாகம் அளப்பெரியது. செங்கொடியின் வரலாறு குறித்த அத்தனை பதிவுகளையும் படித்துவிட்டேன். இத்தனை புரட்சி சிந்தனை கொண்டவள், இத்தனை விடுதலை வேட்கை கொண்டவள், இத்தனை ஆழுமை கொண்டவள், எமதருகில் இப்பொழுது இல்லையெனும் பொழுது மனம் கனக்கிறது.

இந்த தூக்கு தண்டனையை நிறுத்துவதற்கு வன்முறையைச் சரி பாவியுங்கள் என்று கத்துமளவிற்கு நாங்கள் இயலா நிலைக்கு தள்ளப்ட்டிருந்தோம். எமது இனத்தின் மீது அத்தனை அடக்குமுறையையும் அழிப்பையும் செய்திருந்த இந்த இந்திய காங்கிரஸ் அரசுமீது உச்சக்கட்ட வெறுப்பிலேயே இருக்கிறோம். வன்னிக்குள் போரை முடக்கி வெளி உலகத்திற்கு தெரியாத வகையில் இந்தி அரசின் பாதுகாப்புடன் சிறிலங்கா அரசு செய்த தமிழினத்தின் மீதான மிகப்பெரிய படுகொலையை கண்டித்து போராட முடியாத நிலைக்கு தள்ளிய கருணாநிதி அரசின் மீது வெறுப்பில் இருக்கிறோம். இந்த நிலையில் மீண்டும் 3 உறவுகளை இத்தனை கோடி தமிழர்களுக்கு முன்னால் அதுவும் தமிழ்நாட்டில் வைத்து படுகொலை செய்வதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என்ற மனநிலையில் வன்முறை குறித்து சிந்திக்கும் அளவிற்கு மாற்றப்ட்டிருக்கிறோம். எப்படி இருப்பினும் சட்டரீதியான ஜனநாயக வழிமுறைகளுக்கும் தமிழின உணர்விற்கும் மதிப்பளிப்பவராக முதலமைச்சர் ஜெயலலிதா செயற்பட்டிருப்பது அவரை இன்னமும் ஒருபடி மேலே உயர்த்தியிருக்கிறது.

தூக்கு தண்டனை ரத்து என்பது தற்காலகமாவே காணப்படுகிறது. எனவே அது நிதந்தரமாக நிறுத்தப்படும்வரை போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களே!!! பெருமளவில் இந்திய தூதரகங்களுக்கு முன்னால் போராட்டங்களில் ஈடுபடுங்கள். மனுக்களை கொடுங்கள்.

சர்வதேச அளவில் இருக்க கூடிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் அனுப்புங்கள்.


மர்மமனிதர்கள் என்ற பயங்கரத்தை உருவாக்கி அதன் மூலம் இங்கு தமிழ்கள் மீது கொலைவெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. அதே நேரத்தில் 3 தமிழர்களை தூக்கிலிட்டு படுகொலை செய்து ரசிக்க துடிக்கிறது இந்திய காங்கிரஸ் அரசு. எல்லா வழிகளிலும் தமிழ்கள் மீது வேதனைகளும் சோதனைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. காங்கிரஸை கொண்ட இந்தி வல்லாதிக்கமும் சிங்கள பேரினவாதமும் இயலுமான வழிகளில் தமிழர்கள் மேல் கொலைவெறியாட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம். இந்த நிலையில் எம் மீதான வன்முறை கட்டவிழ்ப்புகளை உலகம் பூராவும் தெரியப்படுத்த வேண்டும். மனித உரிமை குறித்து பேசப்படும் அத்தனை இடங்களிலும் எம்மீதான வன்முறைகள் குறித்து முறைப்பாடுகள் செய்ய வேண்டும். உங்களால் இயலுமான வழிகளில் இந்த பிரச்சினைகளை சர்வதேச அளவிற்கு கொண்டுவாருங்கள். எல்லா வழிகளிலும் இருந்து எம் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை எதிர்து எல்லோரும் போராடுவோம், ஒண்றியைவோம்.

சிங்கள அரசின் கூலிகளாக இருந்து கொண்டு தமிழர்கள் மீதான வன்முறைகள் குறித்து வாய்திறக்காதிருப்பவர்கள் குறித்து கணக்கில் எடுக்காதீர்கள். அவர்கள் மலம் இருந்தால் தின்று வாழத்தெரிந்தவர்கள். இங்கு தமிழர்கள் மீது செய்யப்படும் வன்முறைகளுக்கு சிங்கள இராணுவம் காரணம் இல்லை என்கிறார்கள் இவர்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 உறவுகள் தான் குற்றவாளிகள் என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மலம் தின்னும் மனநோயாளிகள் குறித்து எந்த அக்கறையும் தேவையில்லை எமக்கு.

சிங்கள அரசு, இந்திய காஸ்கிரஸ் அரசு, மற்றும் சிங்கள கூலிப்படைகளாலும் வரும் அராஜகங்களையும் எதிர்த்து தான் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. தமிழர்களாக ஒன்றிணைவோம் தமிழர்களாக போராடுவோம்.

ஆதி
04-09-11

Friday, September 2, 2011

கிறிஸ் பூதங்கள் என பெயர்வைத்து உலாவரும் சிறிலங்கா அரச மனித மிருகங்கள்.

சிங்கள அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் கீழ் தமிழர் பிரதேசத்திற்கு கிறிஸ்பூதங்கள் என்ற பெயரில் சிங்கள ராணுவத்தின் காடையர் தனத்தை நகர்த்தியிருக்கிறது. கிழக்கு மாகாண இயல்பு வாழ்க்கையை குலைத்த சிறிலங்கா அரசு இன்று வடக்கு மாகாணத்திற்கு சிங்கள காடையர்களை அனுப்பியிருக்கிறது. மக்களின் இயல்புநிலையை குழப்புதல் அதனூடாக ராணுவத்தின் அதிகாரத்தன்மையை பிரயோகித்து அச்சமுள்ள சுழ்நிலையில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருத்தல் என்ற அராஜக போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

பிடிபடும் மர்ம மனிதர்கள் இராணுவத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கூடிய வகையில் ஜி.பி.ஸ் தொழினுட்ப வசதி அல்லது தொலைபேசி வசதிகளுடன் காணப்படுகின்றனர். மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருமுன் இராணுவம் வந்துவிடுகிறது. ராணுவம் ஆயுதங்கள் சகிதம் சட்டத்தை கையில் எடுக்கிறது. மர்ம மனிதர்களை பிடித்த மக்கள் குறித்து நோட்டம்விட்ட அல்லது தகவல் சேகரித்த இராணுவம் மக்களை கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது சிறிது நேரத்தின் பின் அந்த மக்களின் வீடுகளுக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி அவர்களை நீமன்றத்திற்கு கொண்டு செல்கிறது.

பிடிபடும் மர்மனிதர்கள் எவரையுமே நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லாத சிங்கள ராணுவமும் பொலிசும் மர்ம மனிதர்களை பிடிக்கும் மக்களை தாக்கி நீமன்றிற்கு இழுத்துச் செல்லும் அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் கோண்டாவிலில் பிடிபட்ட மர்மமனிதனை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்கள் பொலிஸ் இல் ஒப்படைத்தனர். நீதிகிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பிடிபட்ட சிங்கள இளைஞன் பாலியல் மன நோயாளி எனவும். அதனால்தான் களவாக பெண்களை யன்னல் வழியாக பார்த்ததாகவும் பொலிஸ் தெரிவித்தது. தென்னிலங்கையில் இருந்து பெண்களை களவாக பார்ப்பதற்கு பாலியல் மனநோயாளி பஸ் ஏறி யாழ்ப்பாணம் வந்திருப்பது புதுமையாக இருக்கிறது. கேட்பதற்க யாருமற்ற நிலையில் சிங்கள அரசும் சிங்கள ராணுவமும் தமிழ் மக்களை முட்டாள்கள் என நினைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர்.

நேற்று இரவு கூட யாழ்பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் புக முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் பெண்கள் விடுதி மாணவிகள் ஆண் மாணவர்களிடம் சொல்ல ஆண்கள்விடுதியில் உள்ள மாணவர்கள் விடுதிடியில் கூடியபொழுது மரத்தில் இருந்து குதித்த மர்மமனிதர்கள் மாணவர்களை மிரட்டிக் கொண்டு ஓடியுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற மாணவர்களை ரயில் ரோட்டு கரையில் மறித்த ராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.

மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலெல்லாம் அவர்களை பாதுகாப்பதற்கு ராணுவம் உடனடியாக கூடிவிடுவது ஆச்சரியப்படுவதற்கில்லை. யாருடைய திட்டமிடல் என்பது இங்கு புலனாகிறது.

சிவில் நிர்வாகத்தை காட்டுமிராண்டித்ததனமான கையாண்டு கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்திற்கெராக சமூக அர்வலர்கள் மனத உரிமை ஆர்வலர்கள் சட்டரீதியில் கையாள முன்வர வேண்டும். சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனமான இந்த நிகழ்ச்சிநிரலிலின் பின்னணியில் இருக்க கூடிய அடக்குமுறையை சர்வதேச அளவில் பேசும்பொருளாக்கப்பட வேண்டும். ராஜபக்ஷ அரசு எதை வேண்டுமானாலும் மனிதகுலத்திற்கெதிராக செய்வோம் என கங்கணம்கட்டி நிற்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதோடு மனித உரிமைகள் மீறப்படுவதையும் இராணுவ அடக்கு முறைகளையும் எதிர்த்து ஜனநாயக வழியில் போராட வேண்டும். சர்வதேச அளவில் இதை கொண்டு போய் இலங்கை அரசுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்க கூடிய வழிகள் இருக்கின்றனவா என்பதை ஆராயவேண்டும்.

மனித உரிமை ஆர்வலர்களுக்கு இந்த பிரச்சினையை உடனடியாக கொண்டு செல்லுங்கள் தமிழர்களே.

ஆதி
03-09-11

Monday, August 22, 2011

கிறிஸ் பூதங்கள்_கலையரசன் என்ற கோமாளியும் யோ.கர்ணன் என்ற லவுட்ஸ்பீக்கரும்.

"கிறிஸ் பூதங்கள்" என்ற பெயரில் மலையகத்தில் ஆரம்பித்த சிங்கள ராணுவ நகர்வு குருணாகல் தம்புள்ள உள்ளிட்ட பிரதேசங்கள் வழியாக கிழக்குமாகாணத்திற்குள் நுழைந்து மன்னார் கிளிநொச்சி பிரதேசங்களுக்கும் பரவியிருக்கிறது. இராணுவத்தின் இரத்த வெறியின் இன்னொரு பாகம் தான் இந்த நடவடிக்கை என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். ஆனால் கலையரசன் என்ற அரச முகவர் "இதுக்கும் இராணுவத்திற்கும் சம்மந்தம் இல்லை... தமிழ் ஊடகங்கள் மக்களை ஏமாற்றுகின்றன என்று சொல்லியிருந்தார்" அதிகபட்சமாக சென்று "இராணுவம் தான் சம்மந்தப்பட்டிருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள் என கேட்டிருந்தார்" 

இந்த நிலையில் "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" என்ற அரசியல் கட்சியின் இணையத்தில் கிறிஸ் மனிதர்களுக்கும் இராணுவத்துக்குமிடையிலான தொடர்பு குறித்த செய்திகள் வரவே கலையரசன் தடுமாறிவிட்டார். உடனே ராணுவத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறி குறிப்பெழுதினார். "கிறிஸ் பூதங்கள்" பிரச்சினையை சரியாக கையாளதெரியாத அரசியல் இல்லை என்று சொன்னார். இங்கு நகைப்புக்குரியவிடையம் என்னவென்றால் "கிறிஸ் பூதங்கள்" தொடர்பாக மக்களிற்கு ஏற்பட்டிருக்கும் கோபம் அரசுக்கெதிராக திரும்பும் சாத்தியமமிருக்கிறது என்று நான் ஒரு இடத்தில் குறிப்பிடும் பொழுது அதை கேலி செய்திருந்தவர் இன்று இந்த கருத்து சம்மந்தமாக பதிவே எழுதியிருக்கிறார்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கள இனவெறியாட்டத்தை மறைப்பதற்கு பலவகையில் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. "கிறிஸ் பூதங்கள்" எனப்படுபவர்கள் சழூகவிரோதிகள் மட்டும்தானாம். அவர்களுக்கு இராணுவத்துடன் எந்த தொடர்புமில்லையாம் என்று இங்கிருந்து யோ.கர்ணன் சயந்தனுக்கு உறுதிப்படுத்தினாராம். அதை கலையரசன் நம்புகிறாராம்.

சிங்கள அரசின் வெறியாட்த்தை காப்பாற்ற தமிழர்கள்தான் இனவெறி பிடித்தவர்கள், என ஓதிக் கொண்டிருக்கும் கலையரசனுக்கு யோ.கர்ணன் என்ற ஊதுகுழல் பிரயோசனமாக பயன்படுகிறது. சிங்கள வெறியாட்டத்தை மறைப்பதற்கு, தடுமாற்றக் கருத்துகளையும் முன்னுக்கு பின் முரணான கருத்துகளையும் வெளியிட்டு வாசகர்களின் சிந்தனைகளை திசைதிருப்பி அதில் இருந்து சிங்கள ராணுவத்தின் மீதான பார்வையை விலக்குவதற்கான உளவியல் உத்தியைதான் கலையரசன் கையாண்டிருந்தார். ஆனால் அது எடுபடவில்லை.

மக்களின் கருத்துக்கள்
************************************************************************
இந்த பிசாசு கதைகளுக்கு முன் கத்தறகம பிரதேசத்தில் ஒரு யானைக்குட்டி பரிதாபமாக இறந்தது. அதற்கான காரணம் என்ன தெரியுமா??  மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏதோ வியாதியாம். அதனால் "பண்சல"விற்கு குட்டியீன்ற யானை ஒன்றை தானம் செய்ய வேண்டும் என்று பிக்குகள் கூறினராம். அதன் காரணமாக குட்டியீன்று சில நாட்களேயான தாய் யானையை குட்டியிடம் இருந்து பிரித்துச் சென்றது ராஜபக்சவின் அடியாள் கூட்டம். பால்குடிக்கும் யானைக்குட்டிக்கு சரியான உணவு வழங்கப்படாததால் குட்டி சில நாட்களில் இறந்து போனது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர் தான் "கிறிஸ் பூத" கதைகள் வெளியாகின. புதையல் எடுப்பதற்காக நாமல் ராஜபக்ஷ தலமையிலான குழு நாடுமுழுவதும் இறக்கப்ட்டுள்ளது என்றும் அதனால் ஏற்படப்போகும் தளம்பலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களை வீடுகளுக்குள் முடக்கவேண்டும் என்பதும் தேவையான ஒன்று என்றகாரணத்தால் தான் இந்த "கிறிஸ் பூதங்கள்" உருவாக்கப்ட்டன என்று ஒரு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் "கிறிஸ் பூதங்கள்" இன் செயற்பாடுகள் மாற மாறவே மக்களிடத்தில் வேறுவகையான அச்சங்கள் உருவாகின. மக்களை உடல் ரீதியாக துன்புறுத்தும் அளவிற்கு "கிறிஸ் பூதம்" வளர்ந்துவிட்டபின்னர் தான் இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கிறது என்ற உண்மை மக்களுக்கு தெளிவுபட்டது. குருணாகல் தம்புள்ள உள்ளிட்ட பிரதேசங்களில் சில "கிறிஸ் பூதங்கள்" ஊர்மக்களால் கொலை செய்யப்ட்டன. பெண்கள் மட்டும் உள்ள வீடொன்றில் புகுந்த "கிறிஸ் மனிதர்" ஒருவர் அங்கிருந்த தாய் மற்றும் 3 பிள்ளைகளால் கத்தியால் குத்தி செய்யப்ட்டார். பூதத்தின் பிணத்தை எடுத்த பொலிஸார் வழக்குப்பதிவின்றி மறைத்துள்ளார்களாம். இப்படியான சம்பவங்களிற்கு பின்னர்தான் "யானைக்குட்டி இறந்த சம்பவத்துடன்" மக்கள் தொடர்புபடுத்தி யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். 

கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார்ப்பகுதிகளில் மக்களிடையில் பேசப்படும் கதைகள் வித்தியாசமானது. மகிந்தவின் வியாதிக்கான ரத்தத்தை எடுப்பதற்காக தான் இந்'த பிசாசுகள் களமிறக்கப்ட்டுள்ளதாக இங்குள்ள மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். குறிப்பாக தமிழ் மக்களை துன்புறுத்தியபடி இலக்கு முஸ்லீம் மக்களாகவே இருக்கிறது என்று கூறுகிறார்கள். முஸ்லிம் மக்கள் "பன்றி" இறைச்சி சாப்பிடுவதில்லை எனவே முஸ்லிம் பெண்களின் "இரத்தம்" தான் மாந்திரிகத்திற்கு நல்லது என்ற அடிப்படையில் தான் வன்முறை இடம்பெறுகிறது என்று நம்புகிறார்கள்.

மன்னார் பகுதியில் முஸ்லிம் பெண்களின் மார்பகங்கள் கிழிக்கப்ட்டதாக சில மக்கள் சொல்கிறார்கள்.

இவையனத்தும் மக்களின் கருத்துக்கள்.  

இனி இதை அரசியல் ரீதியாக அணுகினால் காரணம் என்னவாக இருக்க கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்ற எனது கருத்துகளை பதிவு செய்கிறேன்.
***************************************************************************************
 இந்த கிறிஸ் பூதத்தின் பின்னணியில் இருக்க கூடிய அரசியல் மற்றும் ராணுவ முக்கியத்துவம் குறித்து பலர் பேசிவிட்டதால் பேசப்படாத சில விடையங்களை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன்.

சிறிலங்கா அரசைப்பொறுத்தவரை பலவகைப்பட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. தவிர உள்நாட்டு அரசியல் நெருக்கடியும் கூடிக் கொண்டுவருகிறது. குடும்ப அரசியலால் ஆழும் கட்சிக்குள்ளும் சிங்கள மக்கள் மத்தியிலும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இறுக்கமான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. மகிந்த ராஜபக்ஷ அரசால் சுரண்டப்படும் நாட்டின் வளங்கள் ஊழல்கள் குறித்த செய்திகள் மக்களிடையில் பரவ ஆரம்பித்திருக்கிறது. அரசு மீது அதிருப்தியடையும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களிற்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அரசை தக்க வைப்பதற்கும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அடக்கி வைப்பதற்கு அரசிற்கு தேவை ஏற்பட்டுள்ளது.

சிங்கள பிரதேசங்களில் ஆரம்பித்த இந்த வன்முறைக் குழு நாசுக்காக தமிழர் தாயகப்பகுதிக்கு பரவியிருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் காலக்கெடு முடியவும்.. அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்போம் எனவும் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஒருவேளை அந்த நடவடிக்கை மக்களை ஒன்றுதிரட்டி சாத்வீக போராட்டமாக கூட்டமைப்பு நடவடிக்கையில் இறங்கும் திட்டமேதும் இருக்குமோ என்ற அச்சத்திலும் தமிழ் மக்களை குழப்புவதற்காக வீடுகளில் அடக்குவதற்குவதற்காகவும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் கொண்டுவருவதற்கான உத்தியாகவும் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

தவிர இராணுவம் சோர்வடைந்த நிலையில் அரசு மீது அதிருப்தி அடையும் நிலைக்கு தள்ளப்ட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இனவெறியூட்டப்பட் ராணுவத்தை தமிழ் மக்கள் மீது சீண்டிக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கலாம். தமிழ் மக்கள் மீதான சீண்டல்களை சிங்கள ராணுவம் எப்பொழும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அரசு மீதான சிந்தனைகளை நீக்கி தமிழ் மக்கள் மீதான வெறித்தனத்திற்கு ராணுவத்திற்கு வடிகாலிட்டு கொடித்திருக்கிறது அரசு.

ஆனால் அரசு நினைத்தளவை விட மக்கள் ஆக்கிரோசமாக மாறியிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் அரசியல் செய்த காலத்தில் மக்கள் இராணுவத்தின் காவலரண்களையும் ராணுவ கடைகளையும் எரித்திருந்தனர். ஆனால் இன்று எந்த பக்க பலமும் இன்றி மக்கள் வெறித்தனமாகியது அரசிற்கு நிட்சயமாக அதிர்ச்சியளித்திருக்கும். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைப்பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ராணுவம் மற்றும் பொலிஸ் மீதான தாக்குதல்கள் பகிஸ்கரிப்புகளில் தமிழ் மக்களும் பெருமளவிலாக ஈடுபட்டதும் தமிழ் மக்கள் மீதான வன்முறையை கண்டித்து ராணுவம் மற்றும் பொலிஸ் மீதான தாக்குதல்கள் மற்றும் பகிஸ்கரிப்புகளில் முஸ்லீம் மக்கள் ஈடுபட்டதும் அரசிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இதன் காரணமாக தான் முஸ்லிம் அரச அதிகாரிகளை கொண்டு தமிழ் முஸ்லிம் மக்களிடையில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை முடக்கியிருந்தது. ஆனால் மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.

எது எப்படியிருப்பினும் மட்டக்களப்பில் இராணவ பதிவு ஆரம்பிக்கபட்டிருக்கிறது. இளைஞர்களை கண்காணிப்பதற்கான அரச முகவர்கள் விரிவாக்கப்ட்டுள்ளனர். இருந்தும் ராணுவம் மற்றும் பொலிஸ் மீது மக்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது சிங்கள அரசிற்கு மேலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ராணுவத்தினூடாக சிங்கள அரசு செய்துவரும் இந்த வெறித்தனத்தை வெளிக் கொணர அனைவரும் செயற்பட வேண்டும்.

வீடுகளில் ஆண்களற்ற குடும்பங்களிற்கு சென்று பெண்களோடு சீண்டும் வன்முறையில் ஈடுபடும் வெறிபிடித்த சிங்கள இராணுவம்தான் இந்த பிசாசுகள் என்பதை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். சிங்கள அரசின் இந்த ரத்த வேட்டைநாய்களை உலக அளவில் காட்டி சிங்கள அரசின் கொரூர முகத்தை வெளிக்காட்ட வேண்டும். அதற்கு இங்குள்ள மக்களை தொடர்பு கொண்டு கருத்துகளை பதிவு செய்து பதிவுகளை எழுதுங்கள்.

குறிப்பு: பாதிக்கப்ட்ட மக்களின் மனநிலையை புரியாமல் அவர்களின் கருத்துகளை அறியாமல் "துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்" என்று கதையெழுதி விடுதலை்பபோராட்ட தலைவரை கேவலப்படுத்திய யோ.கர்ணன் சொன்னார் அது சமூக விரோதிகள் மட்டும் தான் என்று என்பது போன்றானசாட்சியங்களை (!!!!)  வைத்து கட்டுரைகள் எழுதாதீர்கள். எட்டாம்கட்டை கோட்டைகட்டி அம்பலப்பெருமாள் பிரதேசங்களில் பூநகரி நாச்சிக்குடா முழங்காவில் போன்ற பிரதேசங்களில் ராணுவம் செய்துவரும் அட்டூழியம் இந்த யோ.கர்ணன்களுக்கு தெரியப்போவதில்லை. மல்லாவி உள்ளிட்ட பிரதேசங்களில் ராணுவத்தால் மக்கள்படும் துன்பங்கள் இந்த யோ.கர்ணன்களுக்கு தெரியப்போவதில்லை. ஷோபாசக்தி குழுமத்தினால் தனது கதைகள் புத்தகமடிக்கப்பட வேண்டும் என்பதற்காக கலையரசனும் யோ.கர்ணனும் பிதற்றும் அளவை சகிக்க முடியாமல் இருக்கிறது. மக்களின் மனநிலையை அறிவதற்கு எந்த முயற்சியும் இவர்கள் எடுப்பதாக தெரியவில்லை. இங்குள்ள மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு கலையரசன் யோ.கர்ணன் சொன்னதை கேட்பாராம்.. சனங்களின் சாட்சியாக யோ.கர்ணன் கதையெழுதி புத்தகமடிப்பாராம்.. 


ஆதி
22-08-2011


Tuesday, July 19, 2011

தமிழர்கள் மீதான கலாச்சார சிதைப்பு யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்_விளைவுகள்

http://aathithyank.blogspot.com/2010/11/blog-post_6803.html இது நான் கடந்த வருடம் எழுதிய பதிவு. அப்போது எதிர்வு கூறல்களை எழுதியிருந்தேன். இப்பொழுது நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருப்பவை பற்றி எழுத வேண்டிய கட்டாம் உள்ளது.

உலக வரலாற்றில் பல்கலைக்கழகங்கள் பலவிதமாக போராங்களில் சம்மந்தப்படுகிறது. இனம் ரீதியான விடுதலைப்போராட்டம் என்றாலும் சரி.. கிளர்ச்சிகள் என்றாலும் சரி பல்கலைக்கழகளங்களில் இருந்தே போராட்டங்களின் பரிமானங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன.

அந்த வகையில் தமிமீழ விடுதலைப்போராட்டத்தின் மிக முக்கியமான நகர்வுகள் கூட பல்கலைக்கழக மாணவர்களால் தான் முன்னெடுக்கப்ட்டன. பொங்குதமிழ் யாழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய பொழுது அத்தனை அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து அதிகாரத்திற்கு எதிராய் ஓங்கி ஒலித்தவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சிறிலங்கா அரசின் இராணுவ இயந்திரத்துக்குள் இருந்து எப்படி கிளர்ந்தெழுந்தார்கள் என்று உலக அரசியலே வியந்த நிகழ்வது.

இப்படி தமிழர் உரிமைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணிக்கும் மாணவர் சமுதாயம் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்பது சிறிலங்கா அரசின் நீண்டகால ஆசை. விடுதலைப்புலிகள் களத்தில் இருந்த காலப்பகுதியில் செய்ய முடியாததை இப்பொழுதான் சிறிலங்கா அரசு ஆமை்பித்திருக்கிறது.

கடந்தவருடம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். பாதுகாப்பு பிரச்சினை என சாக்கு சொல்லியபடி சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயிற்றுவிக்கப்ட்ட சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் இப்பொழு தான் செயற்பட தொடங்கியிருக்கிறார்கள். அதிகளவில் சிங்கள மாணவிகளை கொண்ட இந்த அணி இப்பொழுது செயற்பட ஆரம்பித்திருக்கிறது.

பெண்களின் மாணவிகள் விடுதிக்குள் அங்கிருக்கும் மாணவிகளின் ஆண் சகோதரர்கள் கூட நுழையமுடியாத நிலையில் முச்சரக்கர வண்டியில் வந்து சிறிலங்கா ராணுவத்தினர் வார இறுதி நாட்களில் சிங்கள மாணவிகளை தங்கள் முகாம்களுக்கு கூட்டிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அங்கிருக்கும் ஒட்டுமொத்த தமிழ் மாணவிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாது தற்போதுள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தின் பக்கச்சார்பு நிலையையும் சிறிலங்கா அரசின் தான்தோன்றித்தனமான அதிகார அடக்குமுறையையும் காட்டுகின்றது.

தவிர சிங்கள மாணவிகள் தமது காதலர்களுடன் ஒரே குடைக்குள் செல்லுதல் உள்ளாடைகள் தெரியும் வண்ணம் உடைகள் அணிந்து வருதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமது காதலர்களுடன் பின்னிப்பிணைந்த நிலையில் செல்லுதல் என தமிழ் மாணவ மாணவிகளை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். பெரும்பாலான சிங்கள மாணவர்கள் சட்டத்துறைக்கே உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த மாணவிகள் இராணுவ தலமைகளுடன் நெருங்க உறவை பேணிவருவதால் மற்றைய பீட மாணவர்கள் இது குறித்து பல்கலைக்கழ நிர்வாகத்திடம் விசனம் தெரிவிக்க கூட பயப்பிடுகிறார்கள்.

எந்தவொரு சமய நிகழ்ச்சியும் கொண்டாட அனுமதிக்காத யாழ்பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தடவை வெசாக் நிகழ்வை கொண்டா அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடையம்.

நேரடியாக யாழ் சமூகத்துடன் தொடர்புடைய யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சீர்குலைத்தல் மற்றும் தமிழர்களின் கலாச்சாத்திற்கு சவால்விடும் நிகழ்வுகளை பல்கலைக்கழகத்திற்குள் அரங்கேற்றல் என்பதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர்களின் கலாச்சார இருப்பை ஆட்டம் காண வைக்க முடியும் என்று நம்புகிறது சிறிலங்கா அரசும் சிறிலங்கா ராணுவமும்.

ஈபிபடிபியின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் இன்றைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உட்பட்ட இந்த நிகழ்வுகளை தமிழர் நலன் சார்ந்து ஈபிடிபி பேசாது என தெரிந்தும் மற்றய தமிழ் கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்கள மாணவர்கள் நேரடியாக அரச அமைச்சர்களையோ சிறிலங்கா ராணுவத்தையோ பல்கலைக்களகத்திற்குள் கொண்டுவர முடியுமென்றால் தமிழ் மாணவர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் அந்த மாணவர்களின் எதிர்கால இருப்பு குறித்து தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறை செலுத்த முடியாதா என்ன??

பெரும்பாலான சிங்கள மாணவர்கள் சட்டபீடத்திலேயே இருப்பதால் சட்டத்துறை மாணவர்கள் அது குறித்து சிந்தித்து விரைவில் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்த வேண்டும். 50 மாணவர்களே ஒரு கல்வியாண்டில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சட்த்துறைக்கு தெரிவு செய்யப்படும் நிலையில் அடுத்தவருடத்தில் இருந்து 50 இல் 30 மாணவர்கள் சிங்க மாணவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது இன்னும் இரண்டு வருடங்களில் யாழ் பல்கலைக்கழ சட்ட பீடத்தின் பெரும்பான்மை சிங்கள மாணவர்களாகவே இருக்க போகிறார்கள். வெறும் 30 மாணவர்களால் இப்பொழுதே நிர்வாகத்தையும் பல்கலைக்களக தமிழ் மாணவர் சமுதாயத்தையும் கட்டுப்படுத்த முடியுமென்றால் இன்னும் 2 வருடங்களில் ஏற்படப்போகும் நெருக்கடி அல்லது ஆபத்து மிக மோசமானதாக இருக்கும். இது குறித்து பெற்றோர்களும் ஆர்வலர்களும் கவனத்தில் எடுத்து விரைவாக செயற்பட வேண்டும்.

ஆதி
7-18-11

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP