Powered by Blogger.

Thursday, March 28, 2013

எனக்கு சீமான் யார் என்று காட்டு# அடம்பிடித்த பாட்டி


தமிழ்நாடெங்கும் தமிழீழ விடுதலைத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 

தமிழீழ தனி அரசிற்கான பொது வாக்கெடுப்பை நடாத்தும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். நேர்த்தியாக ஒழுங்கமைக்கபட்டு உலக அரசியல் ராஜதந்திர தரத்தில் கோப்புகள் எழுதப்பட்டு தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்கிறது. 

கருணாநிதியின் அரசியல் நாடக வார்த்தைகள் போலல்லாமல் சிறந்த சட்டவாக்கல் மொழி மூலம் தீர்மானம் ஒழுங்கமைக்கபட்டிருப்பது ஜெயலலிதா அம்மையார் மீது நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

" இவ்வளவு நாளா ஜெயலலிதாவிற்கு பிழையான தகவல்களை வழங்கி தமிழீழ விடுதலை மீது வெறுப்பை ஏற்படுத்திய கள்ள வேலைகள் பார்த்தது கருணாநிதி போலத்தான் இருக்கு.. இப்பதான் ஜெயலலிதாவுக்கு உண்மைகள யாரோ சொல்லினம். ஆள் கெட்டிக்காரி லேசில இந்த பிரச்சினைய விடமாட்டா அதால நம்பிக்கை இருக்கு. கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றி இருந்தா தமிழ்ச் சனத்துக்கு ஏதோ பெரும் அழிவெண்டுதான் அர்த்தம்.. நல்லகாலம் தமிழ்நாட்டுச் சனம் அந்த தரித்திரத்த கலைச்சிட்டினம் " என்று தமிழீழ மக்களிடையில் பெரும் புத்ததுணர்ச்சி நிரம்பிய நிலையில் பேச்சுகள் பரவலாக அடிபடுகிறது. 

சரி இனி விடையத்துக்கு வருகிறேன். 

இன்று கடைக்கு வந்த பாட்டி ஒருவர் சீமானை பற்றி விசாரித்தார். அவருடைய பேரன்கள் பாடசாலையில் கற்பவர்கள். எப்பொழும் "சீமான் அப்பிடிக் கதைக்கிறார்.. சீமான் அங்க அப்பிடி கதைச்சிருக்கிறார்.. கருணாநிதி நாக்க புடுங்கிட்டு சாகலாம்" என்று சீமான் புராணம் பாடுறாங்கள். ஆரப்பன் அந்த சீமான் என்று கேட்டார். பாட்டியினுடைய பேரன்கள் இருவரும் போர் வலி காணதாவர்கள். வரிச் சீருடையணிந்த புலிகளை நேரில் காணதவர்கள். அந்த சிறுவர்கள் புலிகளை பற்றி தேடுகிறார்கள். நண்பர்களுடன் பேசுகிறார்கள். அதனால் தான் இத்தனை பேச்சுகள் வீடுகளில் அடிபடுகின்றன. 

பாட்டியை இருக்க சொல்லிவிட்டு "யூ டியுப்பில்" சீமானின் இரண்டு உரைகளை எடுத்து காட்டினேன். பாட்டி உணர்ச்சிவசப்பட்டிற்றா. மகன் இந்த பெடியன் "செல்வம் மாமா" ட்ட ரெயினிங் எடுத்துருக்கு. எல்லாராலையும் இப்பிடி கதைக்கேலாது. இண்டைக்கு தமிழகத்தில இவ்வளவு மாற்றம் நடந்திருக்கெண்டா இந்த மாதிரி கதைச்சதால தான் சாத்தியப்பட்டிருக்கும். என்று நிறைய கதைகள் சொன்னார்.  மே 17 இயக்க திருமுருகனுடைய ஒரு உரையையும் போராட்டம் ஒன்றின் போது பேசியவற்றையும் காட்டினேன். 

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம், முத்துக்குமார் அண்ணா, தங்கை செங்கொடியின் நடனம் என எல்லா வற்றையும் காட்டினேன். 

"செத்த சனம்.. பெடியளின்ட ஆவிதான் தமிழ்நாட்டு பிள்ளைகளுக்குள்ள புகுந்திருக்கு... தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ சிங்களவன் துலைஞ்சான்...  உந்த ஆணையிறவ பிடிக்கிற நேரத்தில இப்பிடி தமிழ்நாட்டில இருந்திருந்தா கட்டாயம் 2003க்குள்ள தம்பி தமிழீழத்த பிடிச்சிருப்பான்.  " என்று நிறைய சொன்னார். ஏனோ தெரியவில்லை உடம்பு புல்லரித்தது.

ஆணையிறவை பிடித்து யாழ்ப்பாண மீட்ப்பு போர் கைதடியையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் பொழுது இந்தியா தான் புலிகள் மீது அழுத்தம் பிரயோகித்து போரை நிறுத்தியது. இனியொரு தடவை இந்திய படைகளுடன் மோதல் வேணாம் என்ற நோக்கத்திற்காக தலைவர் போரை நிறுத்தி புலிகள் அணியை முகமாலைக்கு எடுத்திருந்தார் என்று அப்பொழுது பேசப்பட்டது. பாட்டி சொன்னவுடன் நினைத்துப் பார்த்தேன் உண்மைதான். இந்த எழுச்சி அன்று தமிழகத்தில் இருந்திருந்தால் அன்று இந்தியா சிங்கள ராணுவத்தை காப்பாற்ற தனது படையை அனுப்புவோம் என்ற எச்சரிக்கையை விடுத்திருக்க முடியாது. 


சரி செல்வம் மாமா யார் என்று சொல்லி விடுகிறேன். 

செல்வம் மாமா ஒரு பிரச்சார பீரங்கி. சம்பவங்களை தனது பேச்சாற்றலால் கண்முன் கொண்டுவரக்கூடிய அதி திறமைசாலி. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு பிரச்சாரங்களிற்கு "செல்வம் மாமா" போனால் அவர் பேசி முடிய நிறைப்பேர் தம்மை போராளிகளாக இணைப்பார்கள். 

யாழ்ப்பாணத்தில் "கிருசாந்தி" என்ற உயர்தர வகுப்பு மாணவி சிங்கள ராணுவத்தால் மிலேச்சத்தனமான பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டு படுகொலை செய்யப்ட்டார். தமிழீழ மக்களையே உலுக்கியெடத்த படு பயங்கரமான கற்பழிப்பு படுகொலை அது. அந்த சம்பவத்தை வன்னியில் இளைஞர் யுவதிகளுக்கு செல்வம் மாமா விளங்கப்படுத்த ஒரு வகுப்பில் இருந்த அத்தனை மாண மாணவியரும் போராட்டத்தில் இணைந்த சம்பவங்களும் இருக்கின்றது. 



எத்தனையோ வலிகளையும் கொடுமைகளையும் தாண்டி.. பேச முடியாத ஏராளமான கதைகளுடன் என்றோ ஒரு நாள் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையில் புலிகளின் வரவை மட்டுமே எதிர்பார்த்திருந்த சனங்களுக்கு தமிழக மாற்றம் பெரும் புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. எல்லா வீடுகளிலும் தமிழக மாணவர்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். 


ஆதி
28-3-13

Wednesday, March 6, 2013

அன்பான தமிழக உறவுகளே!!!

அன்பான தமிழக உறவுகளே!!!

2009 ற்கு பிறகு வரலாறு காணத அளவு தமிழகம் இன்று தமிழீழம் வேண்டி எழுச்சி கொண்டிருக்கிறது.

தமிழீழம் தான் இறுதி இலக்கு என்பதில் தமிழக மக்கள் கொண்டிருக்கும் உறுதியும் அதற்காக தமிழக மக்கள் கொடுத்திருக்கும் விலையும் செய்து கொண்டிருக்கும் உழைப்பும் இந்திய வல்லரசிற்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தமிழக மாற்றத்தையும் எழுச்சியையும் சிதைப்பதற்கு இந்திய மத்திய அரசு பாரிய வேலைத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறது. அதன் முதல் கட்டம் தான் "டெசோ" அமைப்பு தூசி தட்டப்பட்டது.

கருணாநிதி மதல்வராக இருக்கும் பொழுது 2009 இல் பல கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாது இந்திய ராணுவத்தை விடுதலைப்புலிகளுடனான நேரடி மோதலுக்கு நதமிழகம் ஊடாக சிங்கள தேசத்திற்கு அனுப்பி வைத்தவர் தான் கருணாநிதி. தவிர வன்னிக்கு கொண்டு செல்ல தமிழக மக்கள் கொடுத்த அத்தனை உணவுப் பொருட்களையும் தடுத்து பெரும் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி சிங்கள அரசிற்கு உதவி செய்தவர்.

கருணாநிதியின் உழைப்பிற்கு சிங்கள அரசு தேயிலைத் தோட்டங்களையும் பெற்றோலிய அகழ்வு நிறுவன ஒப்பந்தத்தையும் மற்றும் சில பெரும் வர்த்தக நடவடிக்கைகளையும் குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.

கருணாநிதி புலிகளை அழித்து தமிழர்களை அடிமைகளாக தன்னிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எப்படியெல்லாம் செயற்பட்டார்.. போர்க்காலத்தில் என்ன நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை விக்லீஸ் வெளிக் கொணர்ந்திருந்தது அனைவருக்கும் தெரியும்.

போர்க்காலத்தில், வைக்கோ அய்யா.. நெடுமாறன் அய்யா.. சீமான் உள்ளிட்ட பல தமிழீழ ஆதரவுச் சக்திகளை சிறையில் அடைத்து தமிழகத்தில் மக்கள் விழிப்படைந்து எழுச்சியுறும் நிலையை தடுத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அண்ணன் முத்துக்குமார் வைத்த தீயை தனது அதிகாரத்தால் அணைத்து மத்திய அரசின் இன அழிப்பு அத்தியாத்தில் முக்கிய இடம் பிடித்தவர் இந்த கருணாநிதி.

2009 இற்கு பிறகு தமிழீழ மக்கள் யாருமே கருணாநிதியிடம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தருமாறு கேட்கவேயில்லை. இந்த நிலையில் தமிழக மக்கள் கருணாநிதியை அரசியலில் இருப்பை இல்லாது செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இன்று என்றும் இல்லாதவாறு தமிழக இளைஞர்கள் தெளிவடைந்து எழுச்சியுற்று எதையும் எதிர்க்க கூடிய போராட்ட குணத்திற்கு மாறியிருக்கின்றனர். இதை சிதைத்து தமிழக மக்களை திசை திருப்புவதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் அங்கம் தான் "டெசோ" கூத்தடிப்புகள் என்பதை தமிழக மக்களுக்கு தெளிவடைய செய்யுங்கள்.


4 நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த தலைவர் என்று தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டிய கருணாநிதி பிரணாப் தவறான தகவல் தந்ததாக சொல்லியிருந்தார். இவர் போஸ்டர் அடித்து ஒட்டிய காலப்பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் லட்சக்கணக்கில் வீதியில் நின்று போராடிக் கொண்டிருந்தார்கள்.

தன்னைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள ஒரு குழுவோ அல்லது முகாமைத்துவமோ இல்லாத கருணாநிதிக்கு ஏன் முதலமைச்சர் பதவி?? நாளை தமிழக மக்களுக்கு எங்காவது ஒரு நாட்டில் பெரும் அழிப்பு நடந்தால்.. அப்படியொன்றும் நடக்கவில்லை என்று மத்திய அமைச்சர் சொன்னால் இந்த கருணாநிதி நம்புவாரா?? தமிழர்களை முட்டாள்களாகவும் வெறும் சினிமா ரசிகர்களாகவும் நினைத்து தொடர்ச்சியாக செய்யும் அயோக்கியத்தனத்தை தட்டிக் கேழுங்கள்.

தமது வியாபாரத்தையும்.. ராஜபக்ச குடும்பத்தையும் பார்க்க  தொடர்ச்சியாக கொழும்புவரை கருணாநிதியின் கும்பலை யாழ்ப்பாணம் வரை சிங்கள சிப்பாய்களினதோ சிங்கள பொலிசாரினதோ பாதுகாப்பில்லாமல் வரச்சொல்லுங்கள். நிட்சயமாக அடித்துக் கொல்வோம்!!

தமிழீழ பயணத்தில் ஒன்று திரண்ட பெரும் சக்தியாக தோள் கொடுக்கும் சக்தியாக ஒட்டு மொத்த இனத்தின் விடுதலைக்காக எழுச்சி கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களை சதிவலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த தமிழனத்தை முடமாக அடிமைகளாக மாற்றுவதற்கான பெரும் சதியில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.


போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு கருணாநிதி போட்ட பெரும் சதி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. அதாவது தமிழகத்தில் கருணா குழுவிற்கு அடைக்கலம் கொடுத்திருந்த கருணாநிதி ஜெயலலிதாவின் முக்கிய கட்சி உறுப்பினர்கள் சிலரை போட்டு தள்ளிவிட்டு அதை ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுவதனால் புலிகள் தான் செய்தனர் என்று கதையை மாற்றி தமிழகத்தில் புலிகள் மீதான ஆதரவை சிதைப்பது.
எது எப்படியோ இந்த கதை அம்பலமாகியது.


தமிழீழம் தேவையா இல்லையா என்பதை தமிழீழ மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணை சர்வதேச மனித உரிமை சரத்துக்களின் படி நடக்கட்டும். அதற்கான தண்டனையை சட்டம் செய்யட்டும். அது தமிழினத்தின் விடிவல்ல.

தமிழீழம் தான் இலக்கு. அதற்கு சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை எல்லா பக்கத்தாலும் வலியுறுத்துங்கள்.

டெசோ என்பது தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று தமிழக மக்கள் கொண்டிருக்கும் எழுச்சியை திசை திருப்புவதற்கான அல்லது தடை செய்வதற்கான மத்திய அரசின் செயற்திட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முடிந்தால் டெசோ தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பு அய்.நா முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கட்டும் பார்க்கலாம்.
கருணாநிதி தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை அய்.நா முன்னின்று நடாத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கட்டும் பார்க்கலாம்.

அன்பான தமிழக உறவுகளே!!

நாற்பதுனாயிரத்திற்கும் மேலான மாவீரர்களையும் லட்சக்கணக்கில் மக்களையும் இழந்து ரத்த சகதியில் எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அங்கங்களை இழந்து ஆயிரமாயிரம் போராளிகளும் மக்களும் இன்று வலிகளோடும் தமிழீழ கனவை சும்ந்து கொண்டிருக்கின்றனர்.

வாழ்வாதரங்களை இழந்தும் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பயம் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழீழம் முற்று முழுதாக அரச பயங்கரவாதத்திற்குள் சிக்குண்டு அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தமிழக மாற்றமும் எழுச்சியும் மிக முக்கியமான ஒன்று. சதிகளில் சிக்கிவிடாது போராடுங்கள்.
இதை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.


மே17 இயக்கம், நாம்தமிழர் கட்சி தொடர்பாக தமிழீழ மக்கள் ஆவலாக செய்தி படிக்கிறார்கள். வைகோ அய்யாவில் நீண்டகால மரியாதையும் உரிமையும் தொடர்ந்தும் இருக்கிறது.


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று உலகமெங்கும் ஒலிக்கட்டும்.


ஆதி
6-3-13

Sunday, March 3, 2013

நாம் தோற்றுக் கொண்டு இருக்கிறோமா!!!

முள்ளிவாய்க்கால் வரை நடந்த இன அழிப்பு ஆதாரத்தை மட்டும் எடுத்து அது குறித்து மட்டுமே பேசி நான்கு வருடங்களை வீணடித்துக் கொண்டும் சர்வதேசத்திற்கு 2009 ற்கு பிறகு தமிழர் தாயகத்தில் நடக்கும் இன அழிப்பு வடிவம் தெரியவில்லையா!!! ஆதாரங்கள் இல்லையா!!!

2009 ற்கு பிறகு நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பு பற்றி இது வரை ஏன் அய்.நா மன்றத்தில் பேசப்படவில்லை!!! அமெரிக்கா ஏன் கண்டு கொள்ளவில்லை!!!

தமிழரை மீண்டும் ஒரு பொறிக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழீழ தேசத்தை அணு அணுவாக தடயமற்று அழிப்பதற்கான கால அவகாசத்தை சிங்கள தேசத்திற்கு சர்வதேசம் திட்டமிட்டு வழங்கிக் கொண்டிருக்கிறதா!!

# தமிழினத்தின் மீதான இன அழிப்பு முள்ளிவாய்காலுடன் முடிவடைந்து போலும்.. அதற்கு தீர்வு கண்டால் எல்லாம் சரி என்பது போலும் ஏன் சோடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!!!

உலகத் தமிழினமே!!!! எமது விடுதலைப்போராட்ட சிந்தனைகள் குறுகிவிட்டதா!!! 2009 ற்கு பிறகும் மோசமான இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழீழம் தான் எமது இலக்கு என்றும் வீதிக்கு இறங்கி கத்து...
 
3-3-2013

தமிழீழத்தின் 2009 இல் இருந்து 2013 வரை # அழிப்புகளும் மாற்றங்களும்

உலக நாடுகள் இன அழிப்பை முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி நான்கு வருடங்கள் கடக்கவுள்ள நிலையில் தமிழீழ நிலப்பரப்பின் புவியியல் மற்றும் மக்கள் நிலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அழிப்புகளையும் மாற்றங்களையும் இந்தப்பதிவில் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதற்கு முதல் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதற்கு சமாதான காலத்தில் நோர்வே உள்ளிட்ட வெளிநாடுகள் போட்ட சதி பற்றி சற்று புரிந்து கொண்டு நகரவோம்.

விடுதலைப்புலிகள் தமது அமைப்பிற்கு ஆட்களை இணைக்கும் பொழுது மிகக்கவனமாக கையாளும் பொறிமுறையை ஆரம்பத்தில் இருந்தே வைத்திருந்தார்கள். யார் வேணும் என்றாலும் அமைப்பில் இணைய முடியாதவாறு இறுக்கமாக இருந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவுவது சிம்மசொப்பனமாக இருந்தது.

இதை நாடிபிடித்த உளவு நிறுவனங்கள் சமாதான காலத்தில் திட்டம் தீட்டின. தீர்வு எட்டப்படாமல் சமாதான ஒப்பந்தம் குழப்புப்பட வேண்டும் அதே நேரத்தில் போர் தொடங்க முன் புலிகளுக்குள் ஊடுருவ வேண்டும்.

சமாதான காலத்தில் வெளிநாட்டு அரச நிர்வாக அலுவல்கள் பற்றி விடுதலைப்புலிகள் அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தான் வெளிநாடுகளில் இருக்கும் "கட்டாய இராணுவ பயிற்சி" பற்றிய தகவல்களும் புலிகளுக்கு அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது.
கட்டாய ஆட்சேர்ப்பு இராணுவ நடைமுறையிலோ அரச நடைமுறையிலோ ஒரு குற்றமல்ல என்று அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை உறவு முறைகளில் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது ஏதாவது வன்முறை பாவிக்கப்படின் உணர்ச்சிவசப்பட்டு தமது எதிர்பபையும் வெறுப்பையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்துபவர்கள். அதனால் கட்டாய ஆட்சேர்ப்பு புலிகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் என்ற உளவியலை பெரிதும் நம்பியது வெளிநாட்டு நிறுவனங்கள்.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அண்ணையின் இழப்பிற்கு பின்னர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணையினூடாகவே விடுதலைப்புலிகள் வெளிநாட்டு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் உறவு நிலை பற்றி கவனம் செலுத்தி வந்தார்கள். இந்த நிலையில் தமிழ்ச் செல்வன் அண்ணையை கொலை செய்யும் படி ஆலாசனை வழங்கியதும் இந்த நோர்வே கூட்டம் தான் என்று தெரிகிறது.

உச்சக்கட்ட போர் தொடங்கப்பட முதல் தமிழ்ச்செல்வன் அண்ணை கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி விடையத்திற்கு வருகிறேன்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் முள்வேலி இன அழிப்பு முகாம்கள் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆதாரங்களுடன் பல மட்டங்களில் எழுதியாகிவிட்டது. தவிர சனல் 4 ஊடகம் இனப்படுகொலையை அக்குவேறாணிவேராக பிரி்த்து அம்பலப்படுத்திவிட்டது.

ஆனால் இன்று முகாம்களில் இருந்து காடுகளுக்கும் சில வீடுகளுக்கும் துரத்தப்பட்டிருக்கும் மக்கள், மக்களின் நிலங்கள், வாழ்வாதாரங்கள், இனத்தின் இருப்புகள் என்ன நிலையில் இருக்கின்றன.. எப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன பற்றி தமிழ் ஊடகங்களே தொடர்ச்சியாக பதிவு செய்ய மறுக்கின்றன.

ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இன்னமும் பிரிக்கப்ட்ட நிலையில் தான் இருக்கிறது. விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக சிங்கள தேசம் அறிவித்து நான்கு வருடம் ஆகியும் இன்னமும் புளியங்குளம் சோதனைச்சாவடி அதே இடத்தில் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

சிங்கள மயமாக்கல் உத்தி

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த புளியங்குளம், கனகராயன் குளம், மாங்குளம், முறுகண்டி, கிளிநொச்சி, பரந்தன், ஆணையிறவு, பளை,இயக்கச்சி, முகமாலை  வரையிலான ஏ9 பாதை அணு அணுவாக சிங்கள தேசமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.தவிர முகமாலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான ஏ9 பாதை ஏற்கனவே இராணுவ முகாம்களால் சிங்கள மயமாக்கப்பட்டிருக்கிறது.

புளியங்குளம் தொடக்கம் முகமாலை வரை ஏ9 பாதையை அண்டி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டு புத்தர் குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அரச காணிகள் ராணுவ முகாம்களாகவும் நிலத்தை பார்க்க வரமுடியாமல் இருக்கும் தனியார் காணிகள் புத்தர் விகாரைகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் குடியேற்றப்பட்ட கையுடன் இராணுவ குடும்பங்கள் குடியேற்றப்பட்டுகின்றன.

விரைவாக கட்டி முடிக்க கூடிய கட்டட தொழினுட்பத்திலான (டியுறா போட் வீடுகள்) வீடுகள் அவசர அவசரமாக கட்டப்பட்டு சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன. சிறிது காலத்தின் பின் அத்திவாரம் போட்டு நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன.


ஏன் ஏ9 பாதை சிங்கள மயமாக்கலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது

சந்திரிகா ஆட்சியில் அனுரத்த ரத்வத்தை தலமையிலான ராணுவம் "ஜெயசிக்குறு" ஆக்கிரமிப்பு போரை தொடங்கியிருந்தது. அதன் பிரதான நோக்கம் ஏ9 பாதையை கைப்பற்றுவது. காரணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை கூறுபோடுவது, விநியோக பாதையை பிளவுபடுத்துவது, ஆட்பலத்தை பிளவுபடுத்துவது, திசை திருப்பல் தாக்குதல்களை மேற்கொள்ளுவதன் மூலம் மக்களை குழப்புவது.

புலிகளின் முறியடிப்பு சமரில் தோற்றுப்போன அந்த திட்டத்தை இப்பொழுது கோத்தபாய தலமையிலான சிங்கள ராணுவம் விரைவாக நிறைவேற்றி வருகிறது.

ஏ9 பாதை முற்று முழுதாக சிங்களமயமாக்கப்படும் பட்சத்தில் வடக்கு மாகாண மக்கள் இரு பகுதியினராக பிரிக்கப்படுவார்கள். பெருமளவிலான கடற்கரைகள் இராணுவ முகாம்களாலும் சிங்கள மீனவ குடும்பங்களாலும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் ஏ9 பாதை நேர்த்தியான சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுவருகிறது.

இன்னமும் சிறிது காலத்தில் ஏ9 ற்கு கிழக்கே உள்ள மக்களை சுற்றி சிங்கள இராணுவமும் சிங்கள மக்களும் இருப்பார்கள் அதே போல் மேற்கிலும் இருப்பார்கள்.

இன்று ஏ9 கிழக்கில் இருந்து மேற்கிற்கு யார் செல்வதென்றாலும் ஒரு ராணுவ முகாமையாவது தாண்டித்தான் சென்றாக வேண்டிய நிலையிருக்கிறது.


தமிழர் காலாச்சார விழுமிய அழிப்புகள்

ஏ9 வீதியை அண்டி பெரிய அளவிலான கோயில்கள் குறைவு,தேவாலையங்கள் குறைவு . ஏ9 பாதையில் இருக்கும் கோயில்களின், தேவாலையங்களின் எண்ணிக்கையை விட புத்த விகாரைகளின் எண்ணிக்கையே அதிகம். ஏ9 வீதிக்கருகில் மக்கள் இருக்கும் வீடுகளைவிட இராணுவத்தின் முகாம்களும் இராணுவம் தங்கும் விடுதிகளும் தான் அதிகம்.

கட்டட அமைப்புகள், பெயர்பலகைகள், வர்ணப்பூச்சுகளின் நிறங்கள் எல்லாமே வேகமாக சிங்கள மயமாக்கபட்டுக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டப்படும் கட்டங்களில் சிங்கள கலாச்சார சாயல் கட்டாயமாக உருவாக்கப்படுகிறது.

அசோக சக்கரத்தையும் பெளத்த கொடியையும் கொண்ட துணிகளில் சிறிலங்கா தேசிய கொடி பொறிக்கப்பட்டு தமிழர் தேசமெங்கும் பறக்கவிடப்படுகிறது. பொதுமக்கள் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் வங்கிகள் கடைகள் என எல்லா இடங்களிலும் இது பறக்கவிடப்பட்டிருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் பேரூந்துகளில் சிங்களவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.. கட்டாயமாக சிங்கள பாடல்கள் ஒலிக்கவிடப்படுகிறது.


திட்டமிடப்பட்ட உளவியல் போர்

புலம்பெயர் தமிழர்கள் மட்டத்தில் இன்னமும் புரியப்படாத இந்தப் போர் தமிழீழ தாகயக்கில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது மற்றும் விடுதலை தொடர்பில் பகிரங்கமாக வெளிப்பட்ட இன ஒடுக்குமுறையை வெளிநாட்டு அமைப்புகள் திறம்பட கையாளத் தவறியிருக்கின்றன. அது பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.

யாழ் நகர் உள்ளிட்ட மாணவர்கள் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமான மலையாள திரைப்படங்களில் குறுந்தகடுகள் தாராளமாக கிடைக்கின்றன. வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகின்றன.

போராட்டம் பற்றியும் படிப்பை பற்றியும் பேசித்திரிந்த மாணவர்களிடையில் இன்று சினிமா பற்றி கதைக்கும் கலாச்சாரம் திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டிருக்கிறது.

இந்திய சாமிகளின் பெயரில் மக்களை வரவழைத்து சமூகம் பற்றிய அக்கறையை இல்லாது செய்து சுயநல போதனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தவிர அச்சமூட்டும் நடவடிக்கைகள், பழிவாங்கல்கள், பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் மிரட்டல்கள் என தமிழினம் தன்னை பலவற்றிற்கு தன்னை பாதுகாக்க வேண்டும் என்ற வெறுப்பு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.



தமிழீழ அடிப்படைப் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எப்படி தமிழனம் அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த முன் வடக்கு மாகாணத்தில் என்ன மாற்றத்தை செய்ய சிங்கள தேசம் அவசரமாக வேலை செய்கிறது என்பது பற்றியும் தொடரும் பதிவில் தருகிறேன்.


தொடரும்..


ஆதி
21-02-2013

Sunday, December 23, 2012

இறுதிப்போர் மூண்டது எப்படி!!!! இந்தியாவின் நயவஞ்சக பக்கங்கள்.


இறுதிப்போரை மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை.

மாவிலாறு ஏன் களமாக தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றியதான புவியியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றியதான பதிவு தான் இது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை ஆயுத வழங்கல், உணவு மற்றும் மருந்து வழங்கல் காயப்பட்ட மற்றும் வீரச்சாவடையும் போராளிகளை வெளியேற்றல் என்பவை சரியான முறையில் கட்டமைக்காமல் பெரும் போரை அவர்கள் தொடங்குவது கிடையாது. இது தான்  வரலாறு.

இனி விடையத்திற்கு வருவதற்கு முதல் சமாதான ஒப்பந்தம் முறிவடைய செய்யப்பட்டது எப்படி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

5 மாணவர் படுகொலை

2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் (வருகிற ஜனவரியுடன் 7 வருடங்கள் ஆகின்றன).

இந்த படுகொலை கோத்தபாய - பொன்சேகா கூட்டணியினால் நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. படுகொலை நடாத்தப்பட்ட அன்று மகிந்தராஜபக்ஷ மற்றும் கோத்தபாய நாட்டில் இருக்கவில்லை என்பது முக்கியமான விடையம்.

திருகோணமலை நகர்ப்புறத்தில் ரோந்துப்பணியில் ஈடுபடும் வழமையான காவல் துறை அகற்றபட்டு அன்று மாலை புதிதான கடற்படை அணியொன்று ரோந்தில் ஈடுபடுத்தபட்டிருந்தது. அந்த அணிதான் இந்த மாணவர்களை படுகொலை செய்திருந்தது.

தவிர வழமைக்கு மாறாக கடற்கரையில் கூடியிருந்த மக்களை வெளியேறும்படியும் இந்த கடற்படை கூறியிருக்கிறது.

மாணவர்கள் மீது கைக்குண்டை வீசிச் சென்ற ஆட்டோவை பிடிக்காமல் உடனடியாகவே மாணவர்கள் இருந்த இடத்தை சுற்றிவழைத்திருக்கிறது ராணுவம். அந்த இடத்தில் இன்னும் பல மக்களும் இருந்திருக்கிறார்கள். எல்லோரையும் வாகனத்தில் ஏற்றி அடையாள உறுதிப்படுத்தும் சோதனையை செய்து அனுப்பிவிட்டு இந்த மாணவர்களை நிலத்தில் படுக்க வைத்து கூட்டுக் கொன்றது இந்த காடையர் கூட்டம்.

சம நேரத்தில் திருகோணமலை நகர்ப்புற மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே கைக்குண்டு தாக்குதலில் காயமுற்று இரத்தப்பெருக்கினால் 2 மாணவர்கள் மயக்கமுற்றிருந்த நிலையில் அவர்கள் இறந்துவிட்டதாக கருதி மற்றைய மாணவர்களை படுகொலை செய்துவிட்டு வெளியேறியிருக்கிறது சிங்களப் படை.

இத்தனைக்கும் கொல்லப்ட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை வைத்தியர்.அவர் சம்பவ இடத்திற்கு வர அவரை பொலிசார் மறித்து வைத்திருக்கின்றனர். அந்த நேரத்தில்தான் சூட்டுச்சத்தம் கேட்கப்படுகிறது. பின்னர் மாணவரகள் சடலமாக இரத்தவெள்ளத்தில் கிடக்கின்றனர்.

அந்த கணத்தில் உடனடியாக சம்மபவ இடத்திற்கு வந்து எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்தவர்தான் பத்திரிகை நிருபர் சுகிர்தராஜன்.



5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடம்

சுகிர்தராஜன் படுகொலை

2006ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி இந்த சுகிர்தராஜன் படுகொலை செய்யப்படுகிறார். இங்குதான் இந்தியாவின் ஊடுருவல் வெளிப்படையாக தெரிகிறது.

பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்மந்தமான தகவல்கள் புகைப்படங்களை வெளியிட்ட பத்திரிகை நிருபர் சுகிர்தராஜன் (வீரகேசரி என்று நினைக்கிறேன்) புகைப்படத்தை வெளியட்டு சரியாக 20 நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாணவர்களின் படுகொலையை அம்பலப்படுத்தியதற்காக தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதைவிட மிக முக்கியமான காரணமாக அவர் இந்தியாவின் ஊடுருவல் பற்றி அம்பலப்படுத்தியருந்தமைதான்  என்பதை யாரும் விளங்கிக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை.

திருகோணமலை துறைமுக திணக்களத்தில் நடந்து கொண்டிருந்த இந்தியாவின் திட்டங்களை அம்பலப்படுத்தியவர்தான் சுகிர்தராஜன்.

எண்ணைவள ஆராய்ச்சி.. திருகோணமலையில் மேலதிக எண்ணைக் குதங்களை நிறுவுவது.. அனல் மின்னிலயத்தை திறப்பது போன்ற திட்டமிடல்களை  சமாதான காலத்தில் இந்தியா செய்து கொண்டிருந்தது. அதை சுகிர்தராஜன் வெளிபடுத்தியிருந்தார். அதைவிட தொடர்ச்சியாக சிங்கள மற்றும் இந்திய அரசாங்க சதிகளையும் படுகொலைகளையும் வெளிபடுத்தியமையினால் தான் படுகொலை செய்யபடுவேன் என சுகிர்தராஜன் தெரியப்படுத்தி இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

எண்ணை வள ஆராய்சி மற்றும் அகழ்வு வேலைகளில் அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி அதிக ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக தான் தமிழீழ மக்கள் மீதான போரை ஆதரித்துக் கொண்டிருந்தார்.

தமிழீழ மக்கள் மீதான் இன அழிப்பு போருக்கு எதிராக தமிழக மக்கள் மற்றும் சில கட்சி அமைப்புகள் வீதிக்கு இறங்கி போராட அவர்களை சிறைப்பிடித்து அடைத்து இன அழிப்பு போருக்கு எதிரான போராட்டங்களை நசுக்கினார் கருணாநிதி.

அவரது உதவிக்காக ராஜபக்ஷ அரசு மலையகத்தில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. தேயிலை தோட்டம் கனிமொழி பெயரில் தான் வழங்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. தவிர எண்ணைவள ஆராய்ச்சி மற்றும் அகழ்வு ஒப்பந்தங்கள் அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியின் பெயரிலும் பங்குகள் கருணாநிதிக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இனிமேல் அரசில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஒப்பந்தங்களில் எந்த பிரச்சினையும் வராதிருக்கும் படி மிக நேர்த்தியாக தொழில் நிறுவனங்களினூடாக ஓப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்று சம்பூர் மக்கள் துரத்தப்பட்டு அதில் இந்த அனல் மின்னிலையம் அமைக்கபடுகிறது. இது கூட கருணாநிதி சோனியா கூட்டணியால் செய்யப்படும் ஒரு வேலைத்திட்டம் என்றாலும் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான காரணங்களும் இருக்கின்றன. தொடரந்து வாசிக்கும் பொழுது உங்களுக்கு விளங்ககும்.


சுட்டு படுகொலை செய்யப்பட்ட சுகிர்தராஜன்


சுட்டு படுகொலை செய்யப்பட்ட சுகிர்தராஜன்

இந்தியா அவரச அவசரமாக போரை தொடக்கியதற்கான காரணம்

சமாதன ஒப்பந்தத்தை எப்படியாவது விடுதலைப்புலிகள் முறித்துவிடுவார்கள் என்று எண்ணியிருந்த இந்தியாவிற்கு விடுதலைப்புலிகளின் போக்கு மிக அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் பெரும் இழப்புக்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும் மிக பொறுமையாக இருந்தார்கள்.

இடைக்கால நிர்வாகத்தினூடாக சுயாட்சி உரிமையை பெற்றுவிடுவார்களோ என்று இந்தியா அச்சம் கொண்டது. இதனை இந்தியாவிரும்பவில்லை. சமாதான ஒப்பந்தத்திற்கு முதலிருந்தே இந்தியா சிறிலங்காவின் எண்ணை வளம் குறித்து அக்கறை செலுத்திக் கொண்டிருந்தது. அது போக திருகோணமலையில் "இந்தியன் ஓயில்" நிறுவனத்தையும் விரிவுபடுத்துவதற்கான முழு முயற்சியில் இறங்கியிருந்தது.

சமாதான காலத்தை பயன்படுத்தி திருகோணமலையில் தமது சாதகபாதக விடையங்கள் மற்றும் இந்தியன் ஒயிலை எப்படி நிரந்தரமாக கொண்டுவருவது இலங்கை எண்ணைவளம் (தமிழீழ பிரதேசத்தில் தான் காணப்படுகிறது) எப்படிப்பட்டது என்பது பற்றியதான புலனாய்வு மற்றும் ஆராய்ச்சி வேலைகளில் இறங்கியது இந்தியா.

தவிர திருகோணமலை என்பது புவியியல் ரீதியில் மிக பாதுகாப்பான துறைமுக தளம். திருகோணமலை துறைமுகத்திற்குள் இலகுவில் யாரும் நுழைந்து தாக்குதல் நடாத்திவிட முடியாது. இயற்கையான ஏராளமான காப்பரண்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் நேரடியாக சென்று தாக்குவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்று அல்ல. அதனால் தான் திருகோணமலை துறை முகத்திற்கு வல்லரசுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால் திருகோணமலை துறைமுகத்தை தாக்கி கைப்பற்றுவதற்கு விடுதலைப்புலிகள் பிறிதொரு வழியை கண்டுபடித்தார்கள். அதாவது எறிகணைகள் மூலம் துறைமுகத்தை கட்டுப்படுத்துவது.

திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு "குரங்குபாஞ்சான்" பகுதி அச்சுறுத்தலான பிரதேசம் என்று இந்தியா மற்றும் சிறிலங்கா படைகள் நினைத்துக் கொண்டிருக்க விடுதலைப்புலிகள் திருகோணமலை துறைமுகத்தை "சம்பூர்" இல் இருந்து தாக்கினார்கள். அதற்கு முதல் இந்திய சிங்கள அரசுகள் செய்த வேலை பார்ப்போம்.



ஜிகாத் குழுவை இறக்கிய சிறிலங்கா அரசு

திகோணமலை துறைமுக கடற்கரையை அண்டிய கிராமங்களை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டில் அல்லது தமக்கு சாதகமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது இந்தியா.

சமாதான ஒப்பந்தம் கைசாத்திட்ட காலப்பகுதிகளில் "ஜிஹாத்" என்ற முஸ்லீம் தீவிரவாதப் படையை மூதூருக்குள் செயற்பட இறக்கியது சிங்கள அரசு. "ஜிஹாத்" என்ற முஸ்லீம் தீவிரவாத அமைப்பு சிறிலங்காவில் செயற்படுவது இந்தியாவிற்கு நன்றாகவே தெரியும். மூதூருக்குள் "ஜிஹாத்" அமைப்பு பெருமெடுப்பில் செயற்பட ஆரம்பித்தது.  ஆயுத போக்குவரத்துகள் மற்றும் பயிற்சி முகாம்கள் என ஜிஹாத் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பிக்கும் பொழுது விடுதலைப்புலிகள் ஜிஹாத் அமைப்பின் முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட பலரை ஒரே நாளில் அழித்தார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்தது இந்திய மற்றும் சிங்கள அரசுகள். விடதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் இவ்வளவு நேரத்தியாக செயற்பட்டு கொண்டிருப்பது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் கொடுத்திருக்க வேண்டும்.

"ஜிஹாத்" அமைப்பின் அத்தனை விடையத்தையும் அலசி வைத்திருந்த விடுதலைப்புலிகள் நிட்சயமாக இந்தியாவின் நரித்தனம் பற்றி அறிந்தே வைத்திருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டது இந்தியா.

விடுதலைப்புலிகளை வலிய போருக்கு இழுக்கும் நோக்கில் கடற்புலிகள் மீது வலிந்த தாக்குதல்களும்..தரையில் ஏராளமான படுகொலைகளையும் செய்து கொண்டிருந்தனர் சிறிலங்கா படையினர்.

இதன் தொடர்ச்சியாக தான் மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களும் நிலத்தில் படுக்க வைத்து தலையில் சுடப்பட்டுத்தான் கொலை செய்யப்பட்டிருந்தனர்

இருந்தாலும் விடுதலைப்புலிகள் சமாதான ஒப்பந்தத்தை முறித்து களத்தை திறக்கும் நோக்கில் இருக்கவில்லை.


சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட Action Faim நிறுவன ஊழியர்களில் ஒரு பகுதியினர்

 சம்பூர், மூதூர், மாவிலாறு ஏன் முக்கியம்

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை இந்த சமாதான ஒப்பந்தத்தினூடாக தீர்வை பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். கட்டுப்பாட்டு பிரதேசங்கள் இயல்பு நிலையில் இருந்தது. மக்கள் போர் பற்றிய எந்தவொரு தெளிவுபடுத்தலுக்கும் உட்படுத்தப்படவில்லை. போராளிகள் பெருமளவானோர் அரசியல் களப்பணிகளில் இருந்தனர். தவிர தமிழீழ அரச கட்டுமாண பணிகள் தான் பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிர்வாக கட்டமைப்புகளை சரியான முறையில் நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகள் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இது தான் இந்தியாவை அச்சம் கொள்ள வைத்தது.

இந்தியாவை பொறுத்தவரை சம்பூர் மூதூர் பிரதேசங்கள் திருகோணமலை துறை முக பாதுகாப்பிற்காக தேவைப்படுகிறது. தவிர தனது எண்ணை போக்குவருத்துகளுக்கும் முக்கியமான பிரதேசம்.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை கடற்புலிகள் மிகப்பெரும் பலம் வாய்ந்த படை அமைப்பாக வளர்ச்சியடைந்திருந்தனர். திருகோணமலைத் தளம் மீது விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதலை தொடுத்தால் வட முனைகளில் இருந்து திருகோணமலைத் தளத்தை சுற்றி வளைக்க கூடிய பலமும் வளங்கல்களை சரியான முறையில் செய்ய கூடிய பலமும் கடற்புலிகளிடம் இருந்தது.

கிழக்கில் புலிகள் பலமாக இருக்கும் சந்தர்ப்பத்தில்  வட முனையில் சிறிலங்கா அரசால் களம் திறக்கபட்டால்  நிட்சயமாக யாழ்ப்பாணத்தில் இருக்க கூடிய ஒட்டுமொத்த சிங்கள படைகளும் பிணமாக வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆக திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்புதான் வடக்கில் நிலை கொண்டிருந்த அத்தனை சிங்கள இராணுவத்தினதும் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க கூடிய தளம். அதே நேரத்தில் திருகோணமலைத் தளத்தை விழடுதலைப்புலிகள் எறிகணை மூலம் கட்டுப்படுத்தும் வளர்சியை கண்டிருக்கிறார்கள். அதனால் திருகோணமலை தளத்தை சுற்றியுள்ள இடங்களில் இருந்து புலிகளை அகற்றியே ஆக வேண்டும் எனள்ற நிலையை இந்திய சிங்கள படைகள் எடுக்கின்றன.

கருணா சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தன் பின்னர் கருணாகுழுவின் தளம் தமிழ் நாட்டில் இருந்தது அனைவரும் அறிந்த விடையம். அதை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஒழுங்குபடுத்தி கொடுத்தார் அல்லது கண்டும் காணமல் இருந்தார் என்பது அப்பொழுது வந்திருந்த சலசலப்புகள்.

போரை அவசர அவசரமாக தயார்ப்படுத்திக் கொண்டிருந்த இந்திய சிங்களப் படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பம் தான் அமெரிக்க ராஜதந்திரி "ரொபேட் பிளேக்" இன் திருகோணமலை விஜயம்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்திய நயவஞ்சக படைகளால் சிங்களப் படைகளுக்கு சதி தீட்டிக் கொடுக்கப்படுகிறது. கருணா ஒட்டுக் குழுவை பாவித்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டுப்பகுதிக்குள் ஊடுருவி "ரொபேட் பிளேக்" திருகோணமலையில் வந்திறங்கும் சமயம் "ரொபேட் பிளேக்" வந்திறங்கிய மைதானத்திற்கு எறிகணைத் நடாத்தப்படுகிறது. அமெரிக்க அரசு அதிர்ச்சிக்குள்ளாகிறது. இதன் பின் என்னமாதிரயான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் என்று நீங்களே அறிவீர்கள்.

இது விடுதலைப்புலிகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. தமது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ஒட்டுக் குழுக்கள் தாக்குதலை நடாத்தியிருக்கின்றன என்று அறிவிக்க முடியாது. அதனால் "ரொபேட் பிளேக்" இன் திருகோணமலை விஜயம் பற்றி தமக்கு முன்கூட்டி அறிவித்திருக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டனர். ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.

புலிகள் மாவிலாற்று தண்ணீரை மூடிவைத்தது போருக்காக அல்ல. அந்த நேரத்தில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த சிங்களக் குடியேற்றங்கள் மீது நெருக்குவாரத்தை ஏற்படுத்த மட்டுமே.

மாவிலாற்றின் அமைவிடம்


போர் தொடங்கியதற்கு காரணமாக சொல்லப்படும் பூட்டப்பட்ட மாவிலாற்று அணை

போரை தொடக்கியவிதம்

அணையை திறப்பதற்கு என்று போரை தொடக்கி இருந்தாலும் அறிகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் எல்லாம் மக்கள் குடியிருப்புகள் மீது தான் நடாத்தப்பட்டன.

சிங்கள பிக்குகள் தலமையில் இந்த போர் தொடங்கும் பொழுது இந்திய மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகள் கொழும்பில் இருந்தனர். இந்திய படைகள் திருகோணமலையில் இறங்கியிருந்தது.

போர் முன்னேறியவிதமும் இறுதிப்போரில் வெளிப்பட்ட உண்மைகளும்

மூதூர் சம்பூர் உள்ளிட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு கடற்கரை கைப்பற்றப்பட்டது.

உண்மையில் விடுதலைப்புலிகள் போர் பற்றிய நிலைப்பாட்டிலோ அல்லது அதற்கான தயார்படுத்தலிலோ ஈடுபட்டிருந்தால் நிட்சயமாக ஆயுதங்களை முதலே இறக்கியிருப்பார்கள். கடலில் அழிக்கப்பட்டதாக கூறப்படும் 7 கப்பல்களும் சமாதான காலத்திலேயே இறங்கியிருக்கும்.

ரொபேட் பிளேக் பயணத்தின் போது நடாத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ராஜதந்திர மட்டத்தில் பெரும் நெருக்கடியை விடுதலைப்புலிகளுக்கு கொடுத்திருந்தது. அதை சிறந்த முறையில் கையாளக்கூடிய வகையில் யாரும் இருந்திருக்கவில்லை. அதன் பிறகு இருந்த விடுதலைப்புலிகளின் சிறந்த ராஜதந்திரியான அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீது படுகொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த இழப்புகளின் பின்னர் சர்வதேச மட்டத்தில் புலிகள் அரசியல் நகர்வுகளை சிறந்த முறையில் கொண்டுசெல்வதற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றுதான்.

சரி விடையத்திற்கு வருவோம்.
இறுதிக்கட்ட போரில் காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் புல்மோட்டை பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர்.அதாவது முல்லைத்தீவு கரையில் இருந்து புல்மோட்டைக்கு இலகுவாக காயப்பட்டவர்கள் கொண்டுவரப்பட்டனர். இது தான் காரணம். மாவிலாற்றை மையப்படுத்தி போரை தொடங்கிவிட்டு சம்பூர் உள்ளிட்ட கடற்கரைகளினூடாக எல்லா கிழக்கு கடற்கரைககளையும் கட்டப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டத்தை இந்தியாதான் கொடுத்தது.

காயப்பட்டவர்களை பராமரிக்கவென மருத்துவ குழுவொன்றை கருணாநிதி (இந்தியா) அனுப்புவதாக அறிவிக்கிறார். அதில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் பேசக்கூடியவர்கள். அவர்கள் புல்மோட்டையில் தான் செயற்படுகிறார்கள்.

புல்மோட்டைக்கு கொண்டுவரப்படும் காயப்பட்டவர்களில் பலர் கொல்லப்பட்டனர். சிறிய சிறிய காயங்களுக்கே அங்கங்களை அகற்றுகின்றனர் இந்த கருணாநிதியின் மருத்துவ குழு. தவிர இளம் வயதுடைய ஆண்கள் பெண்கள் பற்றிய தகவல்கள் எந்த இடத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்? எப்படியான தாக்குதல்கள் நடைபெறுகின்றன? இவர்களுக்கு என்ன என்ன தகவல்கள் தெரியும் என்ற அடிப்படையில் இந்த மருத்துவ குழு ஆட்களை இனம் காண்கிறது. அதன் பின் பலர் காணமல் போகிறார்கள். சிலர் அனுராதபுரம் இராணுவ முகாம்களுக்கு மாற்றப்படுகிறார்கள்.

இதே நிலைதான் வவுனியா வைத்தியசாலையிலும் நடந்தது.

கருணாநிதியின் சம்பவங்கள்

1. உண்ணாவிரம் இருக்கிறார்.. அன்று மாலையே அறிவிக்கிறார் ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று

2. தமிழீழமத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த படுகொலையை மறைப்பதற்கு அல்லது தமிழக மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு தொடர்ச்சியாக தனது தொலைக்காட்சிகளில் களியாட்ட நிகழ்வுகளை நடாத்துகிறார்.

3. இன அழிப்புக்கு எதிராக கியர்ந்தெழுந்த தமிழக உணர்வாளர்களை சிறையில் அடைக்கிறார்.

4. பின்னர் முதலமைச்சர் பதவி தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார்.

5. தமிழீழம் என்பது சாத்தியமில்லை என்று சொன்ன கருணாநிதி தமிழீழம் என்பதை அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு "டெசோ" மாநாடு பற்றி அறிக்கை விடுகிறார்.

6. மீண்டும் ஈழ ஆதரவு பற்றி அறிக்கை விடுகிறார்.

சினிமாக்களில் காட்டப்படும் அதே பாணியிலான அரசியல் பித்தலாட்டம் தான் இது.


தமிழீழத்தில் சமாதான முன்னெடுப்புக்கள் சிதைக்கபட்டு எப்படி போர் தொடங்கப்பட்டது என்பதும்.. போர் காலத்தில் எவ்வகைளான அழிவுகள் (கொத்துக் குண்டுகள் பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இரசாயண ஆயுத பாவனை) எப்படி ஏற்படுத்தப்பட்டன என்பதும் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும்.

இந்திய படைகள் நவீன தொழினுட்பத்துடன் நேரடியாக சிங்களப்படைகளுடன் களத்தில் இருந்திருக்காவிட்டால் இன்று தமிழீழம் கிடைத்திருக்கும் என்பது தான் உண்மை.

மிக மோசமான அழிவாயுதங்களுடன் சண்டையை செய்யும் உத்தியையும் அதை பயன்படுத்தும் முறையையும் இந்திய இராணுவம் தான் நேரடியாக செய்தது என்பது பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

ஆனந்தபுரச் சமரில் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் செத்துவிழ எஞ்சியவர்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள். அதன் பின்னர் இந்திய இராணுவம் தான் இரசாயண ஆயுத தாக்குதலை செய்தது என்று அதில் பங்குபற்றியிருந்த சிங்கள இராணுவத்தினன் ஒருவன் சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எது எப்படி இருப்பினும் இந்தியா ஒரு பெரும் படுகொலையை சிங்கள இராணுவத்தினூடாக நடாத்தி முடித்திருக்கிறது. இதில் கருணாநிதிக்கும் நேரடி பங்கிருக்கிறது.
காலம் இவற்றை கட்டாயம் அவிழ்க்கும். காலம் பிந்தினாலும் உண்மைகள் கட்டாயம் வெளிப்படும்.


பத்திரிகைச் செய்திகள்... நடந்த..நடக்கும் சம்பவங்களை வைத்து எந்தவொரு தமிழீழ பொதுமகனாலும் விளங்கிக் கொள்ளக் கூடிய விடையங்கள் தான் இவை. தவிர இப்படிப்பட்ட சம்பவங்களின் தொடர்ச்சியாக தான் தமிழீழ மக்கள் சிலரை இனம் கண்டுகொள்கிறார்கள்.

2009 ற்கு பிறகு தமிழ் நாட்டில் உருவாகிய தமிழீழ வேட்கை உணர்வும் தமிழீழ மக்கள் மீதான அளவு கடந்த அக்கறையும் இந்திய மற்றும் சிங்கள அரசுகளை கலகக்கம் கொள்ள செய்தது. அதை திசை திருப்புவதற்காக தான் தலைவரையும் விடுதலைப்போராட்டத்தையும் கருணாநிதி தன் வாயாலையே பல தடவைகள் பழித்திருக்கிறார்.. கேலி செய்திருக்கிறார்.

தமிழீழம் மீது இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது குரல் கொடுக்காத பல தமிழக ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் "புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின்" என்ற கருத்துப்பட கட்டுரைகளை எழுதினார்கள்.. பலர் "முன்னாள் போராளிகள்" என்ற அடை மொழியினூடாக புத்தகங்கள் அடித்து வெளியிட்டனர். கருத்தரங்குகளை நடாத்தினர்.

அந்த செயற்திட்டத்தில் சொல்லும் அளவிற்கு வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் உருவாகிய தமிழீழம் பற்றியதான உணர்வு வேறொரு தளத்திற்கு கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2009 ற்கு பிறகு தமிழீழ மக்களின் விடுதலை பற்றியோ அல்லது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை பற்றி கேள்வி எழுப்பியோ ஒட்டுமொத்த தமிழகம் திரண்டுவிடாமல் இருப்பதற்கு அத்தனை வேலைகளையும் கருணாநிதி-சோனியா அரசு தெளிவாக மேற்கொண்டது.

அது எப்படி என்றும் நான் எழுத தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இதைவிட விரிவாவும் சம்பவங்களை சுட்டிக் காட்டியும் தொடந்து விளங்கப்படுத்த வேண்டிய நிலை இல்லை என்று நினைக்கிறேன். அப்படி செய்தால் நாங்களெல்லாம் முட்டாள்கள் என்று அர்த்தம்.

குறிப்பு:-

இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூரகத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலா தூரம் வெறும் 200 மீட்டரும் இருக்காது.

தூதரகத்தில் வேலைசெய்பவர்கள் கருணாநிதி அரசுடன் சம்மந்தப்பட்டவர்கள். இங்கு நடக்கும் எல்லா அராஜகங்களும் கருணாநிதி கும்பலுக்கு தெரியும் .

சிங்கள இந்திய அரசு செய்த இனப் படுகொலையை அய்.நா தண்டிக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே. 2009 மே 18 ற்கு பிறகு இங்கு நடந்த எல்லா இன அழிப்பு கருவிகளும் இந்த உலகம் அறியும்.

ரொபேட் பிளேக்கின் மீது எறிகணைத்தாக்குதல் நடத்தியது புலிகள் இல்லை என்பதும் அவர்கள் இப்பொழுது அறிந்திப்பார்கள்.

கதைகள் இலக்கியம்,சினிமா,மாநாடு அது இது என்று உப்புச்சப்பற் விதத்தில் இதுவரை சுழன்று கொண்டிருக்கும் தமிழனம் ஒன்று திரண்டு எப்பொழுது வீதிக்கு இறங்கும்?? இந்த இலக்கிய தளம் என்ற போர்வையில் தமிழீழ அரசியலை பேசும் போக்கை உருவாக்கியதே இந்திய உளவுத்துறைதான்.

பர்மா போராட்டம் இப்படித்தான் நசுக்கப்பட்டது. இந்திய உளவுத்துறை பாவித்த உத்தி இது தான். தெரியாவிட்டால் வரலாற்றை எடுத்து படியுங்கள் .


ஈபிடிபியின் கொலை அச்சுறுத்தல் கடிதம் ஒன்று

ஆதி
23-12-12

Wednesday, December 12, 2012

இந்தியாவின் நேரடி வழிநடத்தலில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழனத்தின் மீதான அடுத்த இன அழிப்பு


தமிழர்களை எப்படி சித்திரவதை செய்து சிதைக்க வேண்டும் என்பதற்கான பிரதான பயிற்சியை சிங்கள ராணுவத்திற்கு இந்தியாதான் வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பலாத்காரமாக அச்சுறுத்தி கதறக்கதற இராணுவத்தில் இணைக்கபட்ட 100 பெண்களில் மூன்று நான்கு பேர் ஏற்கனவே தப்பி ஓடிவிட எஞ்சியவர்களில் 10 பேர்வரையில் மிக மோசமான உளவியல் பிரச்சினைகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபடப்டிருக்கின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் இராணுவத்திற்கென அச்சுறுத்தி கூட்டிச் சென்ற பெண்களுக்கே இந்த நிலை என்றால் கடத்தப்பட்டிருக்கும்.... கைது செய்யப்பட்டிருக்கும்.. அரசியல் கைதிகள்..விடுதலைப்புலி போராளிகளின் நிலை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தமிழர் தாயகத்தில் அடக்கு முறைக்கு எதிராக எப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தாலும் முன்னிற்பவர்களை படிப்படியாக கைது செய்தோ அல்லது கடத்தியோ வதை முகாம்களுக்கு அனுப்பும்படி கோத்தபாய உத்தரவிட்டிருப்பதாக அறியப்படுகிறது.

போர்க்காலத்தில் மக்களுக்கு முகம் தெரியாத ராணுவத்தினரை ராணுவ தளபதிகளை பிரதேசங்களில் நிறுத்தி இளைஞர் யுவதிகளை வேட்டையாடும் உத்தியை கோத்தபாய ஏற்கனவே கையாண்டிருந்தார். அதே போன்றதான வேட்டையாடும் நடவடிக்கைக்கு கோத்தபாய உத்தரவிட்டிருப்பதாக அறியப்படுகிறது.

அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று வழிநடத்த கூடியவர்களை விரைவாக வேட்டையாடி முடிக்குமாறு இந்தியா வழங்கி ஆலோசனைதான் இது என்று நீண்டகாலமாக அரசியல் ஆராய்பவர்கள் சொல்கிறார்கள். (பர்மாவிலும் இதே போன்றதான வெறியாட்டத்தை தான் இந்தியா நடத்தியிருந்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்)

புலிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி புத்தகம் புத்தகமாக எழுதி விற்பனை செய்த யாருமே இன்று வாய்திறகக்கவில்லை என்பதையும் ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள்.

உண்மையிலேயே தமிழீழ விடுதலைகுறித்து அதீத அக்கறை இருந்தால் தமிழக மக்கள்.. புலம்பெயர் தமிழர்கள் உடனடியாக களத்தில் இறங்கி தொடர் போராட்டங்களை செய்யுங்கள். இந்த வன்முறைகளை காரணம் காட்டி அய்.நாவிடமும் வல்லரசுகளிடம் கேள்வி கேழுங்கள்.

2009 ற்கு பிறகு நேரடியாக இந்தியாவின் வழிகாட்டலில் இந்த வன்முறைகள் இந்திய அதிகாரிகளின் பார்வையிலேயே நடைபெறுகிறது.

புலிகளை அழிப்பது என்ற பெயரில் 2009 இல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த சோனிய-கருணாநிதி கூட்டணி இன்று அரசாங்கத்திற்கு எதிராக போராடக் கூடியவர்களை வேட்டையாடும் ஓப்பரேசனை தொடங்கியிருக்கிறது.


எப்படி கையாளப்போகிறோம்?? இதை நின்று பேசி செய்ய முடியாது. இது அவசரமான அழைப்பு.. தயவு செய்து செயலில் இறங்குங்கள்.

எப்படிப்போராடுவது என்பது குறித்து 2009ற்கு பிறகு நிறைய விவாதம் நடத்திவிட்டீர்கள்.. தயவு செய்து இனியாவது செயலில் இறங்குங்கள்.


ஆதி
12-12-12

அவசரம் # நாட்டு நிலமை

யாழ்பல்கலைக்கழகத்தினுள் இதுவரைகாலம் இருந்த பொங்குதமிழ் நினைவுத்தூபி உள்ளிட்ட பல முக்கியமான சின்னங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கபட்டுள்ளன!!!

இன்னமும் பல மாணவர்களை தேடித்திரிகிறது புலனாய்வுத்துறை.. வீடுகள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விடுவிக்கப்பட்ட போராளிகள் பலர் விசாரணைக்கு அழைக்கபட்டிருக்கின்றனர்.

இந்த அவலத்தில் போராடாத எவனும்... இந்த அவலத்தை சர்வதேசப்படுத்தி சிங்கள அராஜகத்திற்கு எத

ிராக உடனடியாக சர்வதேசத்தை இறக்க முயற்சிக்காத எவனும்... இனிவரும் காலங்களில் "ஈழம் பெற்றுத்தருகிறோம்... இந்த படை வருகிறது" என்பது போன்று கதைத்து அவமானப்படாதீர்கள்.

இந்த பெரும் அவலத்தையே சரியான முறையில் சர்வதேசப்படுத்தி உடனடி நீதியை பெற முயற்சிச்காகத அல்லது முடியாத நீங்கள் தமிழீழ விடுதலைப்போர் என்று வரும் வேளையில் ஒன்றும் பிடுங்கப்போகிறவர்கள் இல்லை.

வெளிப்படையாக சிங்களம் செய்துவரும் இந்த அராஜகத்தை சர்வதேமயப்படுத்தி சிறிலங்காவை சர்வதேச நீதிக்குமுன் கொண்டுவர முடியாத நீங்கள் அண்ணனின் படத்தை தூக்கிக் கொண்டு அரசியல் செய்யாதீர்கள்.

இங்கு நடந்த ஒரு ஜனநாயகவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு வெறியாட்டம் ஆடியது மட்டுமல்லாமல் இன்று தொடர்ச்சியாக 12 நாட்களுக்கு மேல் வீடுபுகுந்தும் பல்கலைக்கழகம் புகுந்தும் வெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் சிங்களத்திற்கு எதிராக சர்வதேச அளவில் எந்தவொரு அழுத்தத்தையும் கொண்டுவர முடியாத நீங்கள் ....... ச்சி....

புலம்பெயர் தமிழர்களே!!!
உண்மையில் தமிழீழ விடுதலையில்.. இங்குள்ள மக்களில் அக்கறை இருந்தால்... நீங்களாக வீதிக்கு இறங்குங்கள்.. நண்பர்களை கூப்பிடுங்கள்.. அவர்கள்..அவர்களின் நண்பர்கள்.. இப்படி எல்லோரும் வீதிக்கு இங்குங்கள்.. அமைப்புகளை நம்பாதீர்கள்...காலவரையறையற்று மனித உரிமை அமைப்புகளையும் உங்கள் உங்கள் நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுகளையும் முற்றுகையிடுங்கள்...

அய்.நாவை முற்றுகையிடுங்கள்... இளையவர்களே!!! இங்கிருக்கும் சம்மந்தன் முதல் அங்கிருக்கும் அமைப்புகளில் பதவிகளில் இருப்பவர்களை வரை எல்லாருமே ஒருவித கள்ளனுகள் போலதான் தெரிகிறது.... யாரும் ஒழுங்குபடுத்துவார்கள்.. யாரும் கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்காமல் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுங்கள்.
 
11-12-12

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP