Powered by Blogger.

Tuesday, May 17, 2011

மே18 – தமிழினத்தின் மீது நடந்தேறிய மாபெரும் இனப்படுகொலை



இந்த உலக வரலாற்றில் 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாக ஈழத்தில் தமிழினித்தில் மேல் நடைபெற்று மே18ல் முடிவடைந்த இனப்படுகொலையே பதிவாகியுள்ளது. 


தமிழினத்தின் மேல் நடைபெற்ற இந்த இனப் படுகொலையின் முக்கிய குற்றவாளியாக சிறிலங்கா அரசு இனங்காணப்பட்டுள்ள நிலையில் பங்காளிகள் இன்னமும் தலைமறைவாகவே இருக்கின்றனர். உரிமைக்காகவும் தமது பாதுகாப்பிற்காகவும் தமது சுதந்திரத்திற்காகவும் போராட ஒரு இனத்திற்கு முழுஉரிமையும் சட்டத்தின்பாபல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமது பிராந்திய வல்லாதிக்கங்களை உறுதிப்படுத்துவதற்காய் தமிழின படுகொலையை நடாத்துவதற்கு சிறிலங்கா அரசிற்கு முழு உந்து சக்தியாக இருந்தது இந்த தலைமறைவாக இருக்கும் பங்காளிகளே. தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமிழின படுகொலைப்பங்காளிகள் இன்னமும் வெளிப்படையாக இனங்காட்டப்படவில்லை என்பது தான் உண்மை.

மாவிலாற்றில் தொடங்கப்ட்ட போர் முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எதிரியாலும் பிராந்திய வல்லாதிக்கங்களாலும் நகர்த்தப்ட்ட ராஜதந்திரங்களும் தமிழ் இனத்திற்கு எதிரான போரிற்கு அவர்கள் செய்த ஊக்கிவிப்பும் சாதாரணமானவையல்ல. மனிதாபிமான போர் என்று வாய்கூசாமல் சிங்கள அரசால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இனஅழிப்பு போரை இந்த வேளையில் அதன் உண்மையை நிலையை வெளிப்படுத்துவதற்கு போதிய அளவு ஆதாரங்கள் இருந்தும் பிராந்திய வல்லாதிக்கத்தின் இருப்புக்கருதி பல வல்லரசு நாடுகள் மௌனமாக இருப்பதன் பின்னணி தமிழினப்படுகொலைக்கான போரில் அவர்களுக்கிருக்கும் முக்கியத்துவமே. 


இந்த நிலையில் தமிழர்களாகிய நாங்கள் சிந்தித்து செயற்படவேண்டும். கொலையாளியை முதலில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும். அதன் பின் பங்காளிகளின் பொய் முகமூடிகள் தானாகவே கிழிக்கப்படும்.

இனப்படுகொலை
இனப்படுகொலை என்றால் என்ன? இனப்படுகொலை நடாத்திய அரசை எப்படி சட்டத்தின் முன் கையாளலாம்?; என்ற தெளிவான சிந்தனை எமக்கு இருக்கவேண்டும். ஒரு தேசிய இனம்இவகுப்புஇ மதம் சார்ந்Nhதரை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்யப்படும் அத்தனை வன்செயலும் இனப்படுகொலை என்ற வட்டத்திற்குள் அடங்கும். இந்த வன்செயல் எப்படிபட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்றில்லை எத்தனைபேர் பாதிக்கப்பட வேண்டும் என்றில்லைஇ சாமாதான காலத்திலும் நடைபெறலாம் போர்க்காலத்திலும் இந்தவன்முறை நடைபெறலாம். ஆக ஒரு இனக்குழுமத்தின் மேல் அந்த மக்களை அழிப்பதற்கு செய்யும் அத்தனை வன்முறைகளும் இனப்படுகொலை என்ற சட்ட சொல்லாடலினுள் தான் அடக்கப்படும். “உலக நீதிமன்று” என அழமக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2007 பெப்ரவரி 26ம் நாள் பொஸ்னியா தொடர்பான தீர்ப்பின் 293இ294 பந்திகளில் ஜெனோசைட் போன்ற இனப்படுகொலைக் குற்றத்திற்கு மில்லியன் கணக்கானோரை கொல்லவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. சிறேபிறேனிக்காவில் கொல்லப்பட்ட 7இ000 பொஸ்னிய முஸ்லிம்கள் இனப்படுகொலை குற்றமாக கணிப்பிடுவதற்கு போதுமானவர்கள் என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.


தமிழர் மீது நடந்த படுகொலைகள்
இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சிங்கள அரசின் கைகளில் வழங்கப்பட்ட பின் படிப்படியாக தமிழர்களின் உரிமைப்பறிப்றிப்பும் தமிழர்கள் மீதான வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. 50 களில் நடந்த கலவரங்களும் 83 காலப்பகுதிகளில் நடந்த கலவரங்களும் இனப்படுகொலையின் ஒரு அங்கமே. இந்த படுகொலைகளில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் சரியான எண்ணிக்கை இது வரை வெளிவரவில்லை என்பதோடு அது சம்மந்தமாக நியாயமான விசாரணைகள் நடைபெறவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தவிர இந்தி ராணுவத்தின் வருகையும் அதன்பின் இந்திய மற்றும் சிறிலங்கா ராணுவத்தாலும் பல வழிகளில் கொலைசெய்யப்ட்ட மக்கள் தொடர்பில் புள்ளிவிரங்களினூடான ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் 4இ000 ஆயிரத்திற்கும்  அதிகமான மக்கள் படுகொலை செய்யப்ட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த காலப்பகுதிளில் காணாமற்போன பல நூறு இளைஞர்கள் யுவதிகள் குறித்த தகவல்களும் இதுவரை இல்லை.
இரண்டு அரசாங்களினால் தமிழ் இனக்குழுமத்தின்; மீது நடாத்தப்ட்ட பல படுகொலைகளின் பின் தமிழர்கள் மீதான இன அழிப்பை சிறிலங்கா அரசு தனது கையில் எடுப்பதான செயற்பாடுகள் நடக்கின்றன. அதாவது தமிழர்கள் மீதான எல்லாவழியிலான இன அழிப்பையும் சிறிலங்கா அரசு முன்னின்று செய்ய அவர்களுக்கு பின்புல பலமான பங்காளிகள் இருக்கின்றனர்.

யுhழ்ப்பாணம் மீதான சிறிலங்கா ராணுவத்தின் படையெடுப்பின் போது நடைபெற்ற மக்கள் அவலம் என்பது தெற்காசியாவில் 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மக்கள் அவலம் என்று சொன்னால் மிகையாகாது. யாழ்ப்பாணம் மீது செய்யப்ட்ட மாபெரும் படையெடுப்பில் மக்கள் ஆங்காங்கே செத்துவீழ்ந்தனர். பாடசாலைகள் இ தேவாலையங்கள் இ கோயில்களஇ;; மக்கள் கூடும் இடங்கள் என எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசு குண்டுவீசி மக்களை கொன்று குவித்தது. போதிய அளவு தொழினுட்ப வசதியின்மைஇ தொடர்பாடல் வசதியின்மையால் யாழ்ப்பாணத்தின் மீது செய்யப்பட்ட படையெடுப்பில் நடந்தேறிய இனப்படுகொலை பற்றிய தரவுகள் போதிய அளவு உலகத்திற்கு தெரியவரவில்லை. கொலைசெய்யப்ட்டோர் இ காணாமல் போனோர் இ படுகாயமடைந்தோர் என எண்ணுக் கணக்கற்று தமிழர்கள் பாதிக்கப்ட்டனர். தமிழ்ர்கள் மேல் நடந்தேறிய இனப்படுகொலைகளில் யாழ்ப்பாணத்தின் மீது சிறிலங்கா அரசு செய்த போரும் ஒன்று. 
இந்த நிலையில் தமிழ்ர்கள் மீதான முழுவீச்சுடனான இனப்படுகொலைக்கான போர் மீண்டும் மாவிலாற்றில் இருந்து ஆரம்பிப்பட்டது. மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான போரில் மாத்திரம் 100இ000 ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காரணம் உக்கிர போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் கொல்லப்பட்டவர்கள் குறித்த எல்லா தகவல்களும் தகவல்கள் சேகரிக்கும் குழுவினருக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தவிர இந்த போரில் கொல்லப்ட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். அங்கங்களை இழந்தனர்.


காயமடைந்தவர்களையும் கடத்திக்கொன்ற சிறிலங்கா அரசு
போர் முல்லைத்தீவுக்குள் குறுகிக்கிடந்த காலப்பகுதிகளில் கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவை சங்க உள்ளுர்பிரதிநிதிகளின் உதவியுடன் காயப்படும் ஒரு தொகுதியினர் திருகோணமலை புல்மோட்டைக்கும் மற்ற ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கும் அனுப்பப்ட்டனர். ஏராளமானோர் வெளியேற்றப்படுவதற்கான வாகன வசதியோ பாதுகாப்பு வசதியோ எதுவுமின்றி செத்துக் கொண்டே இருந்தனர். இந்த காலப்பகுதிகளில் காயமடைந்து வந்தவர்களையும் சிறிலங்கா அரசு தரம் பிரித்தது. வயது பாகுபாட்டில் தரம்பிரித்த அரசு பின் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்ற வகையில் தரம்பிரித்தது. தரம்பிரிக்கப்ட்டவர்கள் மேலதிக சிகிச்சை என்ற பெயரில் அனுராதபுரம் மற்றும் சிங்கள பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்ட்டனர். அப்படி மாற்றப்ட்ட யாருமே அந்த காலப்பகுதிகளில் திரும்பிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயப்பட்டு வருபவர்களுடன் உறவினர்கள் பெரும்பாலும் வருவதில்லை. உறவினர்கள் வருவதற்கு வாகனத்தில் இடம் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படி யாருமற்று காயப்பட்டு வந்த  உறவுகள் குறித்த தகவல்கள் யாருக்கும் தெரியாது. அதனால் சிங்கள அரசு கச்சிதமாக தனது படுகொலை நடாத்தியது.

காயப்பட்டு மக்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் சிறிலங்கா ராணுவம் வவுனியா பிரதேசத்தில் மணல் ஏற்றும் டிப்பர் உரிமையார்கள் சிலரை தமக்கு சில பொருட்கள் ஏற்றுவதற்கென்று அவர்களை அழைத்துச் சென்றனர். கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் பின் இரவு நேரங்களில் காடுகளுக்கூடாக தமது டிப்பர் பணயித்ததாகவும் தாம் சொன்ன அவர்கள் தாம் வீடு திரும்பி டிப்பரை பார்த்த போது டிப்பரில் இருந்த மணலில் எல்லாம் ரத்தம் இருந்ததாக அந்த வாகன உரிமையாளர்கள் சொன்னார்கள். ஆக படுகொலை செய்யப்ட்ட பலர் காடுகளுக்குள் எரித்து அழிக்கப்ட்டுள்ளனர். 

தவிர சிறு காயப்பட்டு வந்த பலரின் அங்கங்கள் முழுமையாக அகற்றப்ட்டன. வவுனியா மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் அப்போது வெளிடப்பட்டபோதும் ஓரிரு நாட்களில் பலர் அந்த வைத்தியசாலைகளில் இருக்கவில்லை. பலரை சிவில் உடையில் வந்து அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதை பார்த்தாக வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தார்கள். தமிழ் மக்கள் மீது நாடாத்தப்பட்ட இன அழிப்பின் உச்சக்கட்டம் இப்படி பல வழிகளிலும் நடந்தேறியிருக்கிறது.

முகாம்களின் நிலை
எந்த வசதியுமற்று வெட்டவெளிப்பிரதேசத்தில் முட்கம்பிகளால் வேலியிடப்பட்டு முழுநேர ஆயுதப் படையினரின் பாதுகாப்புடன் மக்கள் அடைக்ப்பட்டனர். வெளிமக்களின் நேரடித் தொடர்பை துண்டித்து இடம்பெயர்ந்து வந்த மக்களை தனிமைப்படுத்துவதில் சிறிலங்கா படையினர் முழுநேர கண்காணிப்பில் இருந்தனர். இராணுவ துணைக்குழுக்களின் உதவியுடன் இடம்பெர்ந்து வந்த மக்களை வடிகட்டிபிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா புலானாய்வுப் பிரிவினர் பகிரங்கமாக ஒலிபெருக்கிகளில் புலிகளின் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் சரணடையுமாறும் ஒரிரு நாட்களில் விசாரணை முடிந்துவிடும் என்றும் பின் அனைவரும் விடுவிக்கப்டுவர் என்றும் அறிவித்தனர். இதை நம்பிய மக்கள் மாணவர் முதலுதவிப் படையில் இருந்து எல்லைப்படைவரை அனைவரும் சரணடைந்தனர். ஏறத்தாள எல்லா இளைஞர் யுவதிகளுமே சிறிலங்கா புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு தம்மை பதிவு செய்தனர்.
தம்மை முதலே விடுதலைப்புலிகள் என இனம்காட்டிய ஒரு தொகுதியினரை சிறிலங்கா ராணுவம் பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி வளாகத்தில் இருந்த முகாமில் அடைத்து வைத்திருந்தது. மற்றய ஒரு தொகுதியினரை ரஜரட்ட பிரதேச காட்டுப்பகுதிக்கு சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் மாற்றியதாக அங்கிருந்த சில பொலிஸ் அதிகாரிகள் கூறினர் ஆனால் அப்படி மாற்றப்பட்டவர்களின் பெயர்விபரங்களோ எண்ணிக்கையோ யாருக்கும் தெரியாது. 

தவிர முகாம்களில் தமது பெயரை பதிவு செய்தவர்களை கைது செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறை அதில் இனங்காணப்பட்ட சில ஆயிரக்கணக்கானோரை ரகசிய முகாம்களுக்கு மாற்றியதோடு மிகுதி ஆயிரக்கணக்கானோரை புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் சிறைவைத்தனர். இதில் ரகசிய முகாம்களுக்கு மாற்றப்ட்டவர்கள் குறித்த எந்த தகவல்களும் இப்போது இல்லை. 

இப்படி இடம்பெயர்ந்து வந்த மக்களை பல வழிகளில் பிரித்துவிட்டு தனது அழிப்பு வேலையை முடக்கிவிட்டது சிறிங்கா அரசு. வுpசாரணை என்ற பெயரில் இளைஞர் யுவதிகளை கைது செய்வதும் பின் “அவர்கள் கைது செய்யப்படவில்லை”இ “நாங்கள் அவர்களை காணவே இல்லையே” என்று சொல்வதுமாய் பல சம்பவங்கள் நடந்தேறியது இந்த முட்கம்பி முகாம்களில்.

முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு வந்த நண்பனொருவனோடு பேசும் போது முகாமிற்குள் நடக்கும் பல வன்முறைகள் பற்றி சொன்னான். ஒரு நாள் இரவு கடும் வெட்கையாக இருந்ததால் தான் நீர்த்தொட்டியடிக்கு சென்றதாகவும் அப்போது இரண்டு கொட்டகைகள் கழித்து ஒரு கொட்டகையில் அழுகுரல் கேட்டதாகவும் தான் குளிக்கும் நீர்த்தொட்டியை மறைத்து கட்டப்பட்டிருந்த கிடுகுவேலிக்குள் ஒழிந்து நின்றதாகவும் அந்த நேரம் அந்த கொட்டகைக்குள் இருந்து ஒரு பெண்ணை ஆயுதம் தாங்கிய இரண்டு படையினர் கையை பிடித்து கொண்டு சென்றதாகவும் சொன்னான். ஆனால் கொண்டு செல்லப்பட்ட பெண் யார் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்று மற்றவர்களிடம் விசாரிக்க முடியாதெனவும் அப்படி விசாரித்தால் தனக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும் சொன்னான். இப்படி முகாம்களுக்குள் நடந்தேறிய பல வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளும் வெளி உலகிற்கு தெரியவரவில்லை. 
ஒருதடவை சிறிலங்கா துணைராணுவக் குழுவொன்றால் முகாமிலிருந்து கூட்டிச்செல்லப்பட்ட இரண்டு தமிழ் பெண்கள் இரண்டு நாட்களின் பின் விடுவிக்கப்ட் நிலையில் அவர்கள் முகாமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரையும் விசாரணை என்று அழைத்துச் சென்ற அந்த துணைராணுவக் குழு சிறிலங்கா புலனாய்வு படையதிகாரிகளுடன் இணைந்து அவர்களை கற்பழித்து அதை வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த தகவலை தமக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு சொல்லிவிட்டு தற்கொலை செய்துள்ளனர் அந்த யுவதிகள்.
நீதி கேட்டு முறையிட எந்த இடமும் இல்லாமலும் மீறி வெளியுலகத்திற்கு நடந்தஇ நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை வெளிப்படுத்தினால் அதனால் தமது குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய உயிர் அச்சுறுத்தலாலும் பல உண்மைகள் வெளிப்படாமல் இந்த மக்களுக்குள் புதைந்து கிடக்கிறது.




போர்க்குற்றம் தொடர்பான அறிக்கைகளும் உலகத்தின் பார்வையும்
சிறிலங்கா அரசானது ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நடாத்தி முடித்துள்ள இனப்படு கொலையானது இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மேல் மேற்கொள்ளப்ட்ட மினப்பெரிய படுகொலை நிகழச்சி என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மாறிவருகிறது என்பதே இந்த ஜ.நா நிபுணர்குழு அறிக்கை.

உலகத்தின் ஓர் மூலையில் நடந்தேறிய மிகப்பெரிய படுகொலையின் ஆதாராங்களை திரட்டி பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் வெளியிட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பியதில் சனல்4 மற்றும் அல்ஜசீரா ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது என்றே கூறலாம். கூப்பிடு தூரத்தில் இருக்கும் இந்தியாவின் ஊடகங்களுக்கு தெரியாத பல உண்மைகளை இந்த ஊடகங்கள் வெளிப்படுத்தி தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு நடாத்திய படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

வெளி அழுத்தங்கங்கள் அதிகரிக்கவே பெயரளவில் ஜ.நா செயலாளரால் உருவாக்கப்ட்ட நிபுணர்குழு சில விடையங்களை மிக தெளிவாக ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டிருந்தது. பாரபட்சமற்று வெளிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையானது சிறிலங்காவிற்கு பலவழிகளிலும் அழுத்தத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்த நிபுணர்குழு அறிக்கையானது முழுமையானதல்ல என்பதை தமிழர்கள் ஆகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் ஆரம்பமே. இந்த நல்ல ஆரம்பத்தினூடாக எல்லாவற்றையும் வெளிப்படுத்தக்கூய சந்தர்ப்பம் பிறந்துள்ளது. போர்ப்பிரதேசத்தில் நடந்த சில குற்றங்களை மட்டுமே பேசியுள்ள நிபுணர்குழு அறிக்கை போர்க்காலங்களில் கைது செய்யப்ட்டவர்கள் காணமல் போனவர்கள் பற்றி பேசவேயில்லை என்றேபடுகிறது. ரகசிய முகாம்களில் சிறைவைக்கப்ட்டவர்கள் குறித்த வாதங்களை இந்த நிபுணர்குழு வைக்கவில்லை என்றே தெரிகிறது. தவிர 40 000 ற்கும் அதிகமாவர்கள் இறுதிக்கட்ட போரில் கொல்லப்ட்டிருக்கலாம் என கூறியிருக்கும் நிபுணர்குழு அறிக்கை அதை இனப்படுகொலை என்ற சொல்லினூடாக வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டியுள்ளது.

பிராந்திய வல்லாதிக்கங்களின் மீது ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே “இனப்படுகொலை” என்ற சொல்லாடலை நிபுணர்குழு தவிர்த்திருப்பதாக தெரிகிறது. 
மேற்குலகினால் சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான ராஜதந்திர முரண்பாடுகள் மற்றும் போர்க்குற்ற நிலைப்பாடு தொடர்பான பனிப்போரும் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. 


சிறிலங்காவில்  விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதோடு சிறிலங்காவை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என இந்தியா வெகுவாகவே நம்பி இருந்தது. அதனால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்பாக எழுத்த அத்தனை அழுத்தங்களையும் போர்க்காலத்தில் சமாளித்து சிறிலங்காவின் இனப்படுகொலைப் போரை விரைவுபடுத்தியிருந்தது இந்தியா. தனது முகவர்கள் ஊடாக தமிழினத்தின் மீதான போரை கண்காணித்து கொண்டிருந்த இந்தியா தொழினுட்ப மற்று சிறப்பு படைப்பிரிவின் உதவியையும் நேரடியாக சிறிலங்காவிற்கு வழங்கியிருந்தது. அது போக போர் தொடர்பான சில கட்டளைகளையும் தனது முகவர்களினூடாக சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கியிருந்தது. இதன் வெளிப்பாடாகவே போர் முடிந்தவுடன் ஒரு செவ்வியில் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ “நாங்கள் இந்தியாவின் போரையே செய்து முடித்திருக்கிறோம்” என்று சொல்லியிருந்தார்.


இப்படி இந்தியாவின் மேற்பார்வையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை செய்து முடித்துவிட்ட சிறிலங்கா ராஜதந்திர ரீதியில் இந்தியாவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது. போர் முடிந்த கையுடன் போர்க்குற்றவாளி என்ற பெயரில் மகிந்தவை கூண்டில் ஏற்றிவிட்டு இலங்கையை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பெரிதும் தீர்மானித்திருந்ததாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் போர்க்குற்ற ஆதாரங்களைவிட பல போர்க்குற்ற ஆதாரங்கள் இந்திய அரசிடம் இருப்பதாகவும் ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்த முடியாத நிலையில் இந்தியா இருப்பதாகலுவம் சொல்லப்படுகிறது. இந்திய அரசு சிறிலங்காவிற்கு போர்க்காலத்தில் வழங்கிய கட்டளைகள் அறிவுறுத்தல்கள் என்பவற்றை சிறிலங்கா அரசு வைத்திருப்பதாகவும் இந்திய அரசு சிறிலங்கா மீது போர்க்குற்ற குற்றச்சாட்டை வைக்குமிடத்து தமிழினப்படுகொலையில் இந்தியாவிற்கிருக்கும் பங்கை சிறிலங்கா வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தினாலையே இந்தியா இன்று சிறிலங்காவை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்தியா தொடரந்து இருக்கவிரும்புமா என்பது சந்தேகத்திற்குரியதே. சிறிலங்காவிற்கெதிரான போக்கை கடைப்பிடிக்காவிட்டாலும் சிறிலங்கா மீதான அழுத்தங்களுக்கெதிராய் இந்தியா செயற்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும.
  

புலம்பெயர்தமிழர்களின் போராட்டங்களின் வெற்றியும் தொடரந்து செய்ய வேண்டியவையும்  
சிறிலங்கா மீது மேற்குலகத்தின் பார்வையை இயன்ற அளவு தெளிய வைத்ததோடு கடும் தொனியிலான நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள வைத்ததில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பென்பது அழப்பரியது. சுpறிலங்கா அரசுக்கெதிரான பிரச்சாரங்கள் போர்க்குற்றங்களை சேகரித்து சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தமை அரசியல் அதிகாரிகளை தெளிவடைய வைத்தமை இப்படி புலம்பெயர் தமிழர்கள் இன்றுவரை செய்த போராட்டங்களின் ஒரு பலன்தான் இந்த ஜ.நா அறிக்கை என்று சொன்னால் மிகையாகாது.


இந்திய புலனாய்வு துறையினரின் கண்காணிப்பு சிறிலங்கா புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இப்படி பல தடைகளை வென்று புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் நகர்ந்து இன்று ஜ.நா அறிக்கை வெளியிடக்கூடிய அழுத்தங்ளை பிரயோகிக்க கூடிய பெரும் சக்தியாக வளர்ந்து நிக்கிறது. 


ஓன்றுபட்ட தமிழினமாய் புலம்பெயர்தமிழர்கள் ஒருங்கிணைந்து ராஜதந்திர ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அரசியல் ரீதியான விடுதலைக்கு தொடர்ந்து போராடுவதுதான் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்ட்ட இனப்படுகொலையில் படுகொலை செய்யப்ட் உறவுகளுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும். ஓன்று திரண்ட மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் உணர்த்துவோம்…. தமிழினமாய் எல்லோரும் ஒன்றுபடுவோம் தமிழர்களே.


ஆதி
 13-06-2011

    


Thursday, April 21, 2011

உலக கிண்ண கிரிக்கட் போட்டியும் சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியயலும்


உலக கிண்ண கிரிக்கட் போட்டியும் சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியயலும்

நடந்து முடிந்த உலக கிண்ண கிரிக்கட் போட்டியினூடாக சிறிலங்கா அரசு மிகப்பெரிய அரசியல் நகர்வை தமிழ் மக்களிடையில் பலவழிகளிலும் நகர்த்தி முடித்திருக்கிறது. புலம் பெயர் தமிழர்களை விட ஈழத்தில் உள்ள தமிழ் மக்களிடையில் தனது அரசியல் நிலைப்பாட்டை நகர்த்துவதற்று உலக கிண்ண கிரிக்கட்டை பெரிதும் சிறிலங்கா அரசு பாவித்தது என்பது மறுக்கப்பட்வியலாத ஒன்று. எந்த அளவிற்கு அது வெற்றியளித்தது என்பதற்கப்பால் சிறிலங்கா அரசு விளையாட்டினூடாக  நகர்த்திய அரசியல் என்பது சாதாரணமாக எடைபோட முடியாது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.                        

"விளையாட்டும் அரசியலும் வேறு வேறு" என்ற தொனிப் பொருளினூடு சிறிலங்கா அரசு தனது அரசியல் நகர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதை சில தமிழர்கள் ஆமோதித்ததோடு சிறிலங்கா கிரிக்கட்டை ஆதரிப்பதற்கான தமது நிலைப்பாட்டை "விளையாட்டும் அரசியலும் வேறு வேறு " என்ற கொள்கையினூடு நியாயப்படுத்தியும் இருந்தனர். அவர்களின் அரசியல் புரிதலின்மை மற்றும் தூரநோக்கற்ற சிந்தனைகளால் சிறிலங்கா அரசின் நிலைப்படு பல வழிகளிலும் தமிழ் மக்களிடையில் திணிக்கபட்டது. எப்படி திணிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள முன் விளையாட்டுகளினூடு தமது தேசிய இனத்திற்காய் போராடிய தேசிய அணி வீரர்களை பற்றி நாம் கட்டாயம் அறிந்து வைத்திருத்தல் அவசியம். சிம்பாவே கிரிக்கட் அணியின் முக்கிய வீரர் ஹென்றி ஒலங்காவினதும் குத்துச்சண்டை வீரர் முகமது அலி அவர்களிருவரினதும் வரலாறுகள் இதற்கு சிறந்த உதாரணம் என்று கருதுகிறேன். 2003ம் ஆண்டு நடந்த உலக கிண்ண கிரிக்கட் ஆட்டத்தில் ஹென்றி ஒலங்கா தனது இனத்திற்காக தன்னால் இயன்ற முற்று முழுதான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த நாட்களில் அவர் கூறிய வசனங்கள் இன்றும் எப்படி விளையாட்டினூடு அரசியல் நகர்த்தப்படுகிறது என்பதற்கு மிகப்பபெரிய எடுத்துக்காட்டாகும்.

நாங்கள் தொழில்ரீதியான மட்டைப்பந்து(ஊசiஉமநவ) ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும்இ எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களைஇ படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம் இ எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னிஇ இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பைஇ உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம்.

ஹென்றி ஒலாங்கா (முன்னாள் சிம்பாவே ம‌ட்டைப்ப‌ந்து வீர‌ர்)

என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” .”என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுதுஇஇ பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்”.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்படஇ ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

—– முக‌ம‌து அலி (உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்)

இந்த வீரர்கள் தமது இனத்துக்கெதிரான அரசின் நிலைப்பாட்டை,அடக்குமுறைகளை தத்தமது ஸ்தானத்தில் இருந்து எதிர்த்தார்கள். தம்மால் இயன்றவரை போராடினார்கள். இன்று நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு தமக்கெதிரன அரசின் அடக்குமுறைகளை வெளிக் கொணர்ந்தார்கள். இந்த போராட்டம் விளையாட்டினூடாகத் தான் நடந்தேறியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சிம்பாவேயில் ஒரு இனத்திற்கெதிராக மாபெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பிட்டிருக்கின்றது என்ற சேதியை, அந்த வீரன் போட்டியில் கறுப்பு பட்டி அணியும் வரை அறிந்திராத அனைவருக்கும் சொன்னான். அது தான் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம். தனது இனத்திற்கெதிரான ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு அந்த வீரன் எடுத்துக் கொண்ட ஆயுதம் விளையாட்டு என்பது மட்டும் போதுமானது அரசியல் எப்படியெல்லாம் செய்யமுடியும் என்பதற்கு.

அரசியல் என்பது தேர்தல்களின் போதும் நாடாளுமன்றத்திலும் மட்டும் தான் செய்வதன்று. அப்படிப்பட்ட அரசியல்கள் அரசியல்வாதிகளால் செய்யபட்டும் அரசியல். மக்கள் மயப்படுத்தப்ட்ட அரசியல் வித்தியாசமானது. தமது அபிலாசைகளை எந்தவழிகளிலெல்லாம் சொல்ல முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது தான் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல். தமிழ் மக்களுக்கு இன்று தேவையானது மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல். "விளையாட்டும் அரசியலும் வேறு வேறு" என்று சொல்லப்படுவதே ஒரு அரசியல் தான் என்று புரிந்து கொள்ளும் மக்களின் அரசியல் தான் இன்று தமிழ் மக்களுக்கு தேவை.

சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியல்
சிறிலங்கா அரசானது உலக கிண்ண கிரிக்கட் காலப்பகுதியில் தமிழ் ஊடகங்கள், பேஸ்புக் மற்றும் ருவீட்டர் என்பவற்றினூடாக தனது நகர்வுகளை விஸ்தரித்திருந்தது. சிறிலங்காவை பொறுத்தவரை சிறிலங்காவின் அத்தனை தமிழ் ஊடகங்களையும் இந்த நடவடிக்கைக்கு பாவித்திருந்தது சிறிலங்கா அரசு. வானொலி, தொலைக்காட்சி,தினசரிப்பத்திரிகைகள் வாராந்த மற்றும் மாதாந்த எழுத்து ஊடகங்களை மட்டுமல்லாது வலைப்பதிவுளிலும் தமது செயற்பாட்டை விரிவுபடுத்தியிருந்தனர். "I am Sri lanka" என்ற வசனமும் சிங்க கொடியும் எல்லா இடங்களிலும் பொறிக்கபட்டிருந்தன. சிறிலங்கா எமது தாய்நாடு, அரசியலும் விளையாட்டும் வேறு வேறு என்று எல்லா இடங்களிலும் திரும்ப திரும்ப சொல்லப்பட்டடுக்கொண்டிருந்தன. தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கபட்டுக்கிடக்கும் தேசத்தில். சிறிலங்கா எமது தாய்நாடு என்பது திணித்தலினூடாக மாபெரும் அரசியல் நகர்வை சிறிலங்கா அரசு திட்டமிட்டிருந்தது என்பது தான் வெளிப்படை உண்மை. தமிழ் மக்களை கொன்று குவித்து வெற்றி விழா கொண்டாடியபோது தமிழ் மக்கள் புறக்கணித்த சிங்க கொடியை தமிழ் மக்களை கொண்டாட வைத்தல் என்பது அரசியல் அன்று வேறெதாய் இருக்க முடியும்? விடுதலைப்புலிகள் களத்தில் இருந்தபோது கொண்டாடப்படாத உலக கிண்ணங்கள்,தேசிய கொள்கைகள் ஏன் இப்பொழுது தமிழ் மக்களிடத்தில் கொண்டாடப் பண்ணுவதற்காக அரும்பாடுபடவேண்டும்? சிறிலங்கா என்ற தேசத்தில் எது நடந்தாலும் அது உள்வீட்டுப்பிரச்சினை, தவிர எல்லா மக்களும் சிறிலங்கா தேசியத்தை கொண்டாடுகிறார்கள் என்ற செய்தி உலக நாடுகளுக்கு சொல்லப்பட் வேண்டும் என்பதிலையே சிறிலங்கா அரசு இந்த உலக கிண்ண கிரிக்கட்டில் முற்று முழுதாக ஈடுபட்டது என்பதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.   

மனித உரிமை மீறல்கள்,தமிழர் தாயகப்பகுதியில் நடக்கும் நிலப்பறிப்புகள், கைதுகள்,கடத்தல்கள், கப்பம் கோரல்கள், பாலியல் பலாத்காரங்கள் இப்படி சிறிலங்கா அரசு செய்துவரும் அனைத்து அடாவடித்தனங்களும் இந்த உலககிண்ண கிரிக்கட் காலத்தில் மக்களை சென்றடையாது தடுத்து மக்களின் மனநிலையை திசைதிருப்புவதினூடாக அரசுக்கெதிரான மக்களின் போக்கை கணிசமான அளவு தடுத்துவிடலாம் என்றே அரசு நம்பியது. அது சிறிதளவேனும் வெற்றியளித்திருக்க வேண்டும். காரணம் போர்க்குற்ற ஆதாராங்கள், கடந்த சில நாட்களுக்குள் நடந்தேறிய படுகொலைகள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படாமல் நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்ட சட்டவாக்கல்கள் இப்படி தமிழ் மக்களுக் கெதிரான பாரிய செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் தமிழ் மக்களில் பலர் "சிறிலங்கா கிரிக்கட்ட தோற்பதற்கு சூதாட்டம் காரணமா"என்ற விவாதத்தை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். 

எதிரிக்கு சிறிது இடைவெளிவிட்டாலும் அவன் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டுவிடுவான். அது ஆயுதப்போராட்டம் என்றாலும் சரி அரசியல் போராட்டம் என்றாலும் சரி. சலுகைகள் இலவசங்கள் இப்படி பலவற்றை வழங்கியும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் அரசுக்கெதிரான நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியிருந்தனர். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களால் செய்யப்பட்ட மிக்பெரிய அரசியல் அது. அதை விட இந்த மக்களால் எதுவும் செய்யமுடியாது. தமிழ் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ளாவிடினும் இராணுவ வேலிக்குள் தனக்கெதிராய் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அரசிற்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் அரசிற்கு இப்போதுள்ள பிரச்சினை புலம்பெயர் தமிழர்கள் செய்யும் அரசியல் நகர்வுகளை சிதைப்பது. அல்லது தற்காலிகமாகவேனும் புலம்பெயர் தமிழர்களின் அரசியலை திசை திருப்பி தன்னை சுதாதரித்துக் கொள்வது. அரசு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை புலம் பெயர் தமிழ்மக்களின் மனநிலையை மாற்றுவதுடன் எடுத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது. 

"சிறிலங்கா கிரிக்கட்டை எதிர்ப்பதனால் தமிழீழத்தை பெற்றுவிடலாம் என நாடுகடந்து ஒப்பாரி வைக்கும் தமிழர்கள்" என்று சிறிலங்கா வானொலி ஒன்றின் மிகப்பிரபலமான தமிழ் அறிவிப்பாளர் ஒருவர் தனது பேஸ்புக் மற்றும் ருவீட்டர் நிலைச் செய்தியல் போட்டிருந்தார். இது தான் அரசு எதிர்பார்த்த அரசியல். தமிழ் மக்களின் அரசியல் சிந்தனைகளை சிதைப்பது இப்படியான சொல்லாடல்களினூடுதான்.சிறிலங்கா கிரிக்கட்டை எதிர்த்தல் என்பது, உலக கிண்ண கிரிக்கட் எனும் உலக அரங்கில் சிங்கள அரசால் நசுக்கபடும் தமழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் உரிமைகள் குறித்து பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் மட்டுமே. தவிர சிறிலங்கா கிரிக்கட்டடை எதிர்பதால் தமிழீழம் கிடைக்கும் என்பதல்ல. "நான் சிறிலங்கா கிரிக்கட்டை எதிர்க்கிறேன்" என்று சொன்னால் நீ சிறிலங்கன் தானே ஏன் உனது நாட்டின் கிரிக்கட்டை எதிர்க்கிறாய் என்று இன்னொரு நாட்டு நண்பன் என்னிடம் கேட்பான். அவனுக்கு நான் காரணத்தை சொல்வேன். "ஓ... இப்படியெல்லாம் சிறிலங்கா அரசு செய்கிறதா" என்று ஏங்கிப்போவான். நாளை "உன் வீட்டுக்காரர் நலமாக இருக்கிறார்களா" என்று கேட்பான். இது தான் விளையாட்டினூடாக நாங்கள் உலகிற்கு சொல்ல வேண்டிய செய்தி. விளையாட்டை மட்டுமல்ல சிறிலங்காவின் பிரபலமான எதை புறக்கணிக்கும் போதும் எம்மீதான அடக்குமுறைகள் குறித்து இன்னொரு நாட்டுக்காரனுடன் பேசும் வெளியொன்று உருவாகிறது. எமது பிரச்சினைகளை உலக மயமாக்க வேண்டும். எமது உரிமைகளை பெற்றுத்தாருங்கள் என்று எங்கெங்கெல்லாம் இருக்கிறோமோ அங்கங்கெல்லாம் வீதிக்கிறங்கும் போது அந்த நாட்டுமக்கள் எம்மோடு கை கோர்க்க வேண்டும். அந்த மக்கள் மயப்படுத்தப்ட்ட அரசியல் தான் இன்று தமிழ் மக்களுக்கு தேவை.


தமிழ் மக்களை எண்ணுக்கணக்கற்று கொன்று குவித்து பிணங்களின் மேல் ஏறி நின்று வெற்றி விழாக் கொண்டாடிய போது எல்லா சிங்களவர்களும் நெஞ்சினில் குற்றியிருந்த சிங்க கொடியினை தான் எங்களில் பலர் உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் போது குற்றியிருந்தார்கள். எப்படி முடிகிறது இந்த மனிநிலை? இனத்திற்காய் ஆக குறைந்தது ஒரு விளையாட்டை கூட நிராகரிக்க திராணியற்ற இனமா நாம்? இலங்கையன் என்று சொல்வதற்கு சமஉரிமை தகுதி கூட இல்லாத தமிழர்கள் ஏன் சிங்க கொடியினை கொண்டாட வேண்டும்? அது அருவருப்பாக இல்லையா? மாத்தறையில் ஒருவனுக்குள்ள உரிமையின் எல்லை வன்னியில் இருக்கும் எனக்கும் வேண்டும். அதுவரை சிங்க கொடியை நிராகரித்துக் கொண்டே இருப்போம்.யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார்,மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை இப்படி எல்லா இடங்களிலும் நிராகரித்துக் கொண்டே இருப்போம். அந்த கொடியை கொண்டாடும் எல்லோருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்ல் வேண்டும். உரிமைகளே வழங்கப்படாத போது அவனது கொடியினை கொட்டாடுவது வெட்கமாயிராது?சிறிலங்கா அரசால் ஏதிலிகளாக்கப்ட்டு இன்னொரு நாட்டின் தயவுடன் வாழும் புலம் பெயர் தமிழர்களில் பலரும் சிங்கக் கொடியை தூக்கியவாறு சிறிலங்கா கிரிக்கட் என்று அலைந்து திரிந்தது பெரும் வியப்புக்குள்ளாக்கியிருந்தது. சிறிலங்கா கொடியினை பாடசாலையில் வைத்து எரித்து தான் தமிழர்களுக்கான போராட்டம் புதிய பரிமானம் பெற்றது. பாடசாலை மாணவனாக இருந்தபோதே பாடசாலையில் வைத்து சிங்க கொடியை கொழுத்தும் அளவிற்கு சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது எப்படிப்பட்ட வன்முறைகளை கட்டவிழ்த்திருற்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். 


எமது அரசியல் அபிலாசைகள் நிறைவேறும் வரை,எமக்கு நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை யாராவது தட்டிக் கேட்கும் வரை,எம்மால் முடிந்த அளவு நாங்கள் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதை தவிர வேறெந்த வழிகளிலும் தமது அரசியல் அபிலாசைகளை பேசமுடியாத அளவிற்கு ஈழம் வாழ் தமிழ் மக்கள் தள்ளபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்த போராட்டங்கள் புலம் பெயர் தமிழ் மக்களினூடாக தான் நகர்த்தப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தை புலம்பெயர் தமிழ்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் சிறிலங்கா மீதான நிராகரிப்புகளை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் ஏன் நிராகரிக்கிறோம் என்ற காரணம் உலகமயப்படுத்தப்பட வேண்டும். எமது காரணங்கள் எல்லா மக்களுக்கும் தெரியுமிடத்து எமது போராட்டங்களுக்கு பெரும் பக்கபலமாக அது அமையும். சிறிலங்கா கிரிக்கட்டை நிராகரிப்பதால் தமிழீழம் கிடைக்குமா என்ற முட்டாள்த்தனமான விவாதங்களை விடுத்து இப்படியான சந்தர்ப்பங்களில் எமது அரசியலை பேசக்கூடிய வெளிகளை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். மற்றய இனங்கள் எப்படி தமது அரசியல் போராட்டங்களை நகர்த்தி வெற்றிகண்டன என்று நாங்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் மயப்படுத்த போராட்டங்களிற்கு எந்த ஆதிக்க சக்தியும் ஆட்டம் காணும். சிறிலங்கா அரசை தொடர்ந்து நாங்கள் நிராகரிப்பதினூடு உலகம் நிட்சயமாக ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். அதை யாராலும் மறுக்க முடியாது. இனத்திற்காய் எம்மால் இயன்றவரை போராடுவோம். போராடும் வழிகளாக எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்வோம்.  அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் இனத்திற்காக அதன் மக்கள் உலகெல்லாம் இருந்து போராடினார்கள் என்ற வரலாற்றை பதிவு செய்வோம்.

ஆதி

Monday, March 28, 2011

உள்ளுராட்சி தேர்தல்- மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் சொல்லும் பதில்


தமிழ் மக்களின் மனநிலை மாறிவிட்டது தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு மாறிவிட்டது என்று கூப்பாடு போட்டு திரிந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் வழங்கிய பதிலே உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள். அதிலும் குறிப்பட்ட விகித தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுபோக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடை நிறுத்துவதில் அரசு வெற்றி கண்டதையும் இங்கு ஞாபகப்படுத்தியாக வேண்டும்.

தமிழ் மக்களை பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் அரசியலை தவிர்த்த எந்த அரசியலும் நிதந்தர விடிவைத் தராது என்பதில் குறியாய் இருக்கிறார்கள் என்று பல தடவை நிரூபித்துவிட்டார்கள். சலுகை அரசியல்களும் சுகபோக வாழ்வாதாரங்களுக்கும் அப்பால் அரசியல் நிலைப்பாடு என்பது வித்தியாசமானது என்பதை திரும்ப திரும்ப கூறிவருகிறார்கள். ஆயுதப்போராட்டத்தின் பரிமானங்களில் இறுதி கால நிகழ்வுகள் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரித்துவிட்டது என்று அரசியல் கனவு கண்டு மக்களை திசை திருப்ப முனைந்தவர்களுக்கு போருக்கு பின்னரான இரண்டு தேர்தல்களிலும் மக்கள் சாட்டையடிகா தமது பதிலை வழங்கியிருக்கிறார்கள். அரசு செய்யும் சலுகைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்  காரணம் அது அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. ஆனால் அரசின் சலுகைகளை பெறுவதென்பது தமது அரசியல் நிலைப்பாட்டை இல்லாது செய்து அரசிடம் மண்டியிடுவதல்ல என்பதை தெளிந்த மனிநிலையோடு மக்கள் நிரூபித்திருப்பது,விடுதலைப்புலிகள் மீதும் தமிழின விடுலை மீதும் நம்பிக்கை வைத்து களத்தில் நிற்கும் மக்கள் உலகிற்கு சொல்லியிருக்கும் செய்தி.

தமிழினத்தின் பல அரசில் கட்சிகள் இணைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஆதரத்தார்கள் என்பது அவர்கள் கொள்கையில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த நம்பிக்கை. விடுதலைப்புலிகள் காரணமின்றி தமது ஆதரவு நிலைப்பாட்டை  தெரிவிக்க மாட்டார்கள் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருப்பதென்பது விடுதலைப்புலிகளின் அரசியல் மேல் மக்கள் வைத்திருக்கும் அளப்பரிய மதிப்பும் உயிரிலும் மேலான நம்பிக்கையும் தான். அரசுடன் இணைந்திராத இந்த கூட்டமைப்பு தமக்கு சலுகைகளை பெற்றுத்தரமாட்டார்கள் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தும் தமிழ் கூட்டமைப்பை மக்கள் வெற்றி பெறச் செய்ததென்பது மக்களின் உள்மனக்கிடைக்கைளின் வெளிப்பாடு. புலம் பெயர் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமது கட்டுமானத்தில் பங்களிப்பார்கள் என்ன நம்பிக்கை தான் களத்தில் இருக்கும் மக்களை போராட்டத்தில் சோரவிடாது வைத்துள்ளது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி பேசிய அரசியல் கட்சி இன்று தனது சொந்த நிலத்தில் தனியாக போட்டியிட முடியாத நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளியிருக்கிறது. சிறிலங்கா அரசு தள்ளியிருக்கிறது என்பதற்கப்பால் அவர்களால் தமிழ் மக்களிடம் தனியாக நின்று அரசியல் பேசும் தைரியம் இல்லை என்பதோடு அவர்களிடம் தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்கான தகுதி இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். ஆளும் வர்க்க அதிகாரத்தினால் ஆயுத முனையில் சில தலமைப்பதவிகளை பறித்து வைத்தபடி இந்த அரசியல் கட்சிகளும் ஆளும் வர்க்கமும் செய்யும் அராஜகங்களை சொல்லமுடியாது தவிப்பதை தேர்தலூடாக மக்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவேபடுகிறது. யாழ் மாநகர சபையில் ஈபிடிபியும் சிறிலங்கா அரசும் மேற்கொண்டு வரும் அராஜக போக்கு இதற்கு சிறிய உதாரணம். தவிர வன்னிப்பகுதியில் சிவில் நிர்வாக அனுமதிகளுக்கு முதல் ராணுவ அனுமதிகள் தேவையென்பதும் ராணுவ பிரசன்னம் முக்கியம் என்பதையும் ஆக குறைந்தது தட்டிக்கேட்க கூட முடியாதவர்களெல்லாம் தமிழ் மக்களிடல்தில் அரசியல் செய்வதை என்னவென்று சொல்ல தெரியவில்லை.

சிறிலங்கா அரசின் இன்றைய நிலைப்பாடு

சிறிலங்கா அரசு இன்று தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சிதைப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகிறது. சலுகைகளை வழங்குதல் மக்கள் ஆதரவாக செயற்படுவது போல் காட்டிக் கொள்ளல் இப்படி பல முகங்களோடு களம் இறங்கியும் தமிழ் மக்கள் அந்தந்த முகங்களை கண்டுபிடித்து தேர்தலில் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எப்படி தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சிதைப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது அரசு.

இதன் அடிப்படையில் தான் இன்று எழுத்தாளர்களினூடாக அரசு மாபெரும் உளவியல் அரசியலை நடாத்திக் கொண்டிருக்கிறது. அதாவது நடுநிலை எழுத்தாளர்கள் போன்று செயற்படுவதற்கு பல எழுத்தாளர்களளை விலைக்கு வாங்கியுள்ளது அல்லது உக்குவித்து வருகிறது. சிறிலங்கா அரசை விமர்சிக்கும் அதேவேளை விடுதலைப்புலிகளை தாறுமாறாக விமர்சிக்க வேண்டும். சிறிலங்கா அரசை விமர்சிக்குமிடத்து தமிழ் தேசியத்தின் பால் பற்றுள்ள ஒருவனுக்கு அந்த எழுத்தாளன் மேல் நம்பிக்கை வரும்..அதே நேரம் விடுதலைப்புலிகளையும் தாறுமாறாக விமர்சிக்கும் பொழுது விடுதலைப்புலிகள் பற்றிய பொய்களையும் அவர்களுக்கெதிரான கருத்துகளையும் உள்வாங்கி கொள்ளவேண்டிய மனநிலை அதை வாசிப்பவர்களுக்கு உருவாகும். இதனூடாக நாளடைவில் விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாட்டில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்து விடுதலைப்புலிகள் பற்றியதான அரசியலை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றிவிடலாம் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறையும் அரசியல் அனுமானிகளும் பெரிதாக நம்புகிறார்கள். அந்த அடிப்படையில் தான் இன்று "சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தது...  அதற்கு காரணம் விடுதலைப்புலிகள்" தான் என்பதும்... விடுதலைப்புலிகளின் தலைமை தவறு செய்தது என்பதும். விடுதலைப்புலிகள் மீது அவதூறு செய்து எழுத்து உலகில் ஒரு சலசலப்பை உருவாக்கி ஊடகங்களினூடாக தமது நீண்ட கால அரசிலை செய்து விடுதலைப்புலிகள் பற்றிய அரசியலை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றிவிடலாம் என்று சிறிலங்கா அரசு பெரிதாக நம்பி வருகிறது. இது களத்தில் நிற்கும் மக்களிடம் செல்லுபடியாகாது என்ற உண்மையை ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் சொல்லிவருவது இவர்களுக்கு பெரிய அவமானமே.


"பெடியள் இருந்தா இந்த ஆட்டம் ஆடுவினமோ" என்று தமிழர் பிரதேசங்களில் முணுமுப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது. இதுதான் விடுதலை குறித்த அரசியல்.இதுதான் விடுதலைப்புலிகளுக்கு மக்கள் வழங்கிய அங்கிகாரம்...விடுதலைப்புலிகளின் அரசியல் மீது தியாகங்களின் மீது இலட்சிய கொள்கை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மரியாதையும். பேச்சிற்கு வந்து தீர்வை வழங்காத வரை மக்கள் தமது பதிலை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எல்லா நேரமும் ஒரே பாணியில் தான் பதில் அளிப்பார்கள் என்று எதிர்வு கூற முடியாது. போராட்டங்களின் பாதையை காலம் தான் தீர்மானிக்கிறது.

ஆதி
25-03-2011

Thursday, March 17, 2011

தொழிலாளர் நிலங்களை சூறையாடும் முதலாளிகள் - இலங்கை

இன்று பெரும்பான்மை ஆசிய நாடுகளில் தொழிலாளிகளை சுரண்டிச் சுரண்டியே பல அரசுகளும் முதலாளிகளும் தமது இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அதில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில், ஆழும் வர்க்கம் மாபெரும் கொள்ளைக்காரர்களாகவும் மனிதாபிமானமற்ற மிருகங்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் நோக்கம் இவர்கள் ஆட்சி செய்யும் காலப்பகுதியில் இயலுமானவரை பாமர மக்களின் சொத்துகளை சூறையாடுதல் சூறையாடிய செல்வத்தின் மூலம் இருப்பை தக்க வைத்து கொள்ளல்.

இந்த கொள்கையடிப்படையில் சிறிலங்காவின் அரசு மிகப்பெரும் அட்டூழியங்களை செய்து வருகிறது. தட்டிக் கேட்க முடியாத நிலையில் பாமர மக்களும் எதிர்க்கட்சியகளும் காணப்படுகின்றன. தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசு மற்றய நாடுகளுக்கு தாரைவார்த்துவரும் நிலங்கள் பாமர மக்களுடைய நிலங்கள் என்று எத்தனையோ தடவை ஒப்பாரி வைத்தாகிவிட்டது. ஆனால் சிறிலங்கா அரசோ அதில் இருக்கும் பண முதலைகளோ மக்களின் நலன் குறித்து எந்த அக்கறையுமற்று தமது வருமானங்களில் மட்டும் குறியாய் இருக்கின்றனர்.

போர் முடிந்த பிறகு வன்னியில் எத்தனையோ ஆயிரம் ஏக்கர் மக்களின் நிலம் அமைச்சர்மார்களின் பலவந்த பிடிகளுக்கு உள்ளாகியுள்ளது. அது போக தமிழர் தாயக பகுதிகளில் ஏனைய பகுதிகளும் இப்படியான பலவந்தங்களுக்கு உள்ளாகி வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒரு சம்பவம் தான் நுரைச்சோலை அனல் மின்னிலையம். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய கிராமத்தில் இந்த அனல் மின்னிலையம் அமைக்கப்ட்டுள்ளது. மீன் பிடித்தொழில் மற்றும் விவசாயத்தை ஜீவனோபாயமாக செய்து வரும் இந்த மக்களின் நிலம் செழிப்பானது. தென்னந் தோட்டங்களாலும் மரக்கறி தோட்டங்களாலும் நிறைந்த இந்த பிரதேசசத்தின் ஒரு பகுதி இன்று சிறிலங்கா அரசால் பலவந்தமாக பறிக்கபட்டடு சீன அரசாங்கத்திடம் கொடுக்கபட்டுள்ளது.

இந்த அனல் மின்னிலைய கட்டுமானத்திலும் அதற்கு தேவையான அரைவாசி நிதியினை சம்மந்தபட்ட அமைச்சர்கள் சுருட்டிவிட்டதாக விடயம் அறிந்த சிலர் சொல்கின்றனர்.இதனால் இந்த அனல் மின்னிலைய கட்டுமானத்தின் தரம் குறைவாகவே காணப்படும் என்பது வெளிப்படை உண்மை. அது போக அதில் இருந்து வெளியாகும் புகை அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களின் செழிப்பை இல்லாது செய்யப்போவதோடு எதிர்காலத்தில் மக்களின் உடல் நலத்திலும் செய்லாவக்கு செலுத்தப்போவது உண்மை. சிறிலங்காவில் மக்கள் பாவனையற்ற எத்தனையோ நிலங்கள் இருந்தும், கடற்கரைகள் இருந்தும் அவற்றை எப்படி தொழிற் பேட்டைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவது.. அல்லது அதை எப்படி பாவிப்பது என்று ஆய்வுகள் செய்வதை விடுத்து மக்களின் நிலங்களை பறிப்பதும் அதன் வழங்களை சிதைத்து குறுகிய காலத்தில் தமது செல்வத்தை பெருக்குவதிலும் குறியாக இருக்கும் இந்த முதலாளி வர்கங்களை எப்படி அடக்குவது??? இந்த அதிகாரப் போக்கிற்கு எதிராக எப்படி மக்கள் திரண்டெழுவது???? இந்த அதிகார போக்குகள் கட்டுப்படுத்தாவிடில் எதிர்காலத்தில் பாமர மக்கள் வறுமையால் சாகும் நிலை உருவாகும்....

ஆதி
17-03-2011

Friday, March 4, 2011

விடுவிக்கப்பட்ட போராளிகள் - சமூகத்தில் பின்தள்ளப்படும் கதை

இன்று விடுவிக்கப்பட்டும் போராளிகள் சமூகத்தில் பின் தள்ளப்படுவதாகவும் அதனால் சமூக மற்றும் வாழ்வாதரப் பிரச்சினைகள் அந்த போராளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் ஆதரவுக் கூலிகள் முதலைக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளன. இந்த விடையங்களை நாங்கள் நிதானமாகவும் விரைவாகவும் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமது உயிர்களை துச்சமென மதித்து போராடிய அனைத்து வீரர்களுமே மரியாதைக்குரியவர்கள் என்பதை எந்த சமூகமும் மறந்துவிடக் கூடாது. தமது அவயங்களை இழந்து தமது வாழ்க்கையின் பல முக்கிய படிகளை இழந்து இன்று தமிழ் மக்களின் போராட்டம் உலகமயப்படவதற்கு களத்தில் நின்ற போராளிகள் தான் முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் கட்டளைகளுக்கமைய செயற்பட்டு சரணடைந்த பல போராளிகள் சர்வதேச விதிகளுக்கு மாறாக சிறிலங்கா அரச படகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது போக சில ஆயிரம் போராளிகளையே முகாம்களில் அடைத்து புனர்வாழ்வு என்ற பெயரில் பல திணிப்புகள் மற்றும் மன உழைச்சல்களுக்கு உள்ளாக்கி பின் அவர்களின் கண்காணிப்பில் வெளியில் விடப்படுகின்றனர். அவர்களில் சிலர் நேரடியாக சிறிலங்கா புலனாய்வு துறையினரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள போதும் பலர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்ட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த போராளிகளுக்கு எம்மால் இயன்ற வழிகாட்டல்கள் மற்றும் சந்தர்பங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். வீரியம் மிக்க நாற்றுகள் அவர்கள். தயா மாஸ்டர் உட்பட பல ஊடக புள்ளிகள் வெளிப்படையாகவே தமிழ் இன விடுதலை போருக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் அவர்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்ள தேவையில்லை. சாதாரண போராளிகளாக களமாடி தமது வாழ்வை தொலைத்த போராளிகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் மேல் மக்களுக்குள்ள அன்பு விடுவிக்கப்படும் போராளிகளை அரவணைக்க தூண்டியது. இந்த சந்தர்பத்தில் தான் சிறிலங்கா அரசும் சில ஒட்டுக் குழுக்களும் தமது கைங்கரியங்களை காட்ட ஆரம்பித்தனர். விடுவிக்கப்படும் போராளிகளில், கரிசனை உள்ள மக்களை நேரடியாகவும் மறை முகமாகவும் மிரட்டினர். சிலர் கொலை கூட செய்யப்ட்டனர். விடுவிக்கபட்ட போராளிகளை சமூகத்தில் இருந்து ஓரங்கட்டி விடுதலைப் புலிகள் மேல் வெறுப்பு ஏற்படச் செய்வதற்கான உளவியல் நடவடிக்கைகளை எதிரி விடுவிக்கப்பட்ட போராளிகள் விடையத்தினூடாக செலுத்தும் உத்தியை கண்டு பிடித்துள்ளான். விடுதலைப்புலிகளை பழி கூறும் ஊடக மற்றும் இலக்கிய யுத்தத்தை பல புலம்பெயர் எழுத்தாளர்களினூடு ஆரம்பித்துள்ளான். அதற்காக பிரித்தானியா உட்டபட பல இடங்களில் இருந்து சில எழுத்தாளர்களை கூட்டி ஊக்கப்படுத்தி அனுப்பி வைக்கப்ட்டுள்ளனர்.

இந்த சதி யுத்தத்தில் மாண்டு போகாது விடுவிக்கப்படும் போராளிகளின் வாழ்வியலை எப்படி வளமாக்க முடியும் என்று உள்நாட்டு மற்றும் புலம் பெயர் மக்கள் சிந்திக்க வேண்டும். விடுவிக்கப்படும் போராளிகளுக்கு நேரடியாக புலம் பெயர் தமிழர்கள் தொடர்பேற்படுத்தி தம்மால் இயன்ற உதவிகளை செய்து அவர்களை வளப்படுத்துவது பாதுகாப்பு பிரச்சினை என்று கருதினால், நிறுவனங்களினூடாக பொது அமைப்புகளினூடாக செய்யவேண்டும். எமது குரல்கள் புலத்தில் பலமாய் ஒலிப்பதற்கு களத்தில் ரத்தம் சிந்திய போராளிகளை கைவிடமுடியாது அவர்கள் குறித்த அக்கறையின்மை என்பது எமது போராட்டத்தை நசுக்குவதற்கு ஒப்பானது. புலிஎதிர்பு கோசங்களுக்கு விலைபோய் தமிழீழ தாகத்தை இல்லாது செய்து தமிழர் இரண்டாம் தரப்பு பிரஜைகள் அவர்களுக்கு உரிமை தேவையில்லை என்ற சிறிலங்கா அரச செயற்பாட்டிற்கு பக்க பலமாக மாறியிருக்கும் பழைய புலி உறுப்பினர்கள் குறித்து நாம் எந்த அக்கறையும் கொள்ள தேவையில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பில் பெரிய பொறுப்புகளில் இருந்து களம் சந்திக்காது வாழ்ந்த சில ஈனப்பிறவிகளே இன்று களத்தில் நின்ற புலிகளை வேட்டையாட புறப்பட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர்களாகவும் ஒட்டுக்குழுக்களின் சில பொறுப்பாளர்களாகவும் உருவெடுத்துள்ள இவர்கள் களத்தில் நின்ற எம் போராளிச் செல்வங்களை ஓரங்கட்டுவதற்கு கங்கணம் கட்டி நிற்கின்றனர். இதற்கு மக்கள் இடம் அளிக்க கூடாது. வேலையின்றி இருக்கும் விடுவிக்கப்ட்ட போராளிகளுக்கு வழிகாட்ட வேண்டும். நம்பிக்கை தரவேண்டும். இதற்கு உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என அனைவரிடமும் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளின் செய்தி மற்றும் இலக்கிய ஊடகப்பிரிவுகள் விளையாட்டுப் பிரிவுகள் என பெரிதளவில் களம் சந்திக்காது இயல்பாக வாழ்ந்த சில ஈனப்பிறவிகள் தான் இன்று சிங்கள படைகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் இணைந்து விடுவிக்கபட்ட போராளிகளையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் வேட்டையாடி விடுதலைப்புலிகள் பற்றிய அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றுவதற்கு மாபெரும் உளவியல் சதியுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு களமுனையில் ரத்தம் வியர்வை சிந்தி போராடி அங்கங்களை இழந்தும் வாழ்வினை தொலைத்தும் அல்லலுறும் விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு உடனடியாக உதவ அனைவரும் கை கோர்க்க வேண்டும்.

ஆதி
05-03-2011

Tuesday, February 22, 2011

தமிழர் பகுதிகளில் தலைவிரித்தாடும் சிங்கள ஆதிக்கம்....புலிகளை விரைவாக வருமாறு மக்கள்

யுத்தத்தை வென்ற சிறிலங்கா அரசு தமிழர் பிரதேசங்களை ஆக்கரமிப்பதையும் தமிழர்களை அடிமைகளாக நடத்துவதிலும் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறையை சேர்ந்த பெரும் பகுதியை சிங்கள மயமாக்கிவிட்ட அரசு இப்போது வடக்கில் தனது வேலைளை திசை திருப்பியுள்ளது.

வடக்கில் முக்கிய நிர்வாக நகரமாக காணப்படும் யாழ்குடாநாட்டை சிங்கள கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. சட்டவிரோதமான அத்துமிறல்கள், வெளிப்படையான இனவாத நடவடிக்கைகள், இராணுவ மற்றும் பொலிஸ் அச்சுறுத்தல்கள், நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் என சிறிலங்கா அரசின் சிங்கள மேலாதிக்க போக்கு விபரிக்க முடியா த அளவு தலைவிரித்தாடுகிறது.

அரச பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பி சிங்கள அத்து மீறல்களை கூட கேட்க முடியாத ஒரு கோழைக் கட்சியாக இருந்து கொண்டு அப்பாவி தமிழ் மக்களை மிரட்டி தமது அரசியல்களை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வருடம் ஆரம்பித்து கடந்த இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் பல்வேறு வகையான சிங்கள ஆதிக்க நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. யாழ் மாநாகர சபையின் உப தலைவராக செயற்படும் றீகன் என்பவர் சாவகச்சேரி நீதிமன்றினால் இனங்காணப்பட்ட கொலை சந்தேக நபர். அவரை சிறையில் இருந்து பிணையில் விடுவிப்பதில் நேரடியாக அரசின் அழுத்தம் பாவிக்கப்பட்டது மட்டுமல்லாது உப தலைவர் பதவியையும் செயற்குழு எடுத்த முடிவுக்கு மாறாக அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. உப தலைவர் பதவியை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கு வழங்க செயற்குழு முடிவெடுத்திருந்தது. அதன் பிரகாரம் நடப்பு 2011 ற்கான உப தலைவர் (மேயர்) பதவி ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தும் செயற்குழு அறிக்கையில் றீகனின் பெயரே வந்துள்ளது. இது சிறிலங்கா அரசின் நேரடி தலையீடு என விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே போல்.... யாழ் நகர் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டியது யாழ் மாநகர சபை. கட்டிடம் கட்டுவதற்கான நிலம் மற்றும் சூழலை கருத்தில் கொண்டே அனுமதிகள் வழங்கப்பட்டுகின்றன. ஆனால் புல்லுக்குளம் மூடப்பட்டுள்ள பகுதியில் எந்த பரிசோதனையோ  அனுமதியோ இன்றிஅவசர அவசரமாக 5 மாடிக்கட்டிடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பித்துள்ளன. அந்த கட்டடத்தை கட்டும் நிறுவனம் பசீல் ராஜபக்ஷவின் நிறுவனமாம். மாதாந்த கூட்டத்திற்கு 2 நாட்களுக்கு முன்னர், எதிர்கட்சிகளால் ஏற்படும் சில விவாதங்களை தடுப்பதற்காக வேலை ஆரம்பித்த பின்னர் அந்த நிறுவனத்தை யாழ் மாநகர சபையில் பதிவு செய்துள்ளது மட்டுமல்லாது அனுமதி பத்திரத்தையும் தயாரித்து எடுத்துள்ளது. அந்த கட்டிடம் கட்டி முடிந்த பின்னர் மக்கள் பாவனைக்கு வரும் பொழுது அது எப்போது இடிந்து விழும் என்று யாராலும் கணிக்க முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இத்தனை நடவடிக்கையும் சிங்கள மேலலாதிக்க போக்கே தவிர வேறொன்றுமாய் இருக்க முடியாது.

இது போக நேற்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை ஆசிரியர் வளையாட்டுப் போட்டியில் சிங்கள மேலாண்மை ஆதிக்கமும் சிங்கள இனவாதமும் தலைவிரித்தாடியது. தமிழ் நடுவர்களால் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை ஏற்க முடியாது என மறுத்த சிங்களவர்கள் அதை ஆட்சேபித்து அரசியல் தலையீடுகளையும் புகுத்தினர். இதனால் விரக்தியடைந்த பல தமிழ் ஆசிரியர்கள் விளையாட்டு நடுவர் நிலையில் இருந்தும் விளையாடுவதில் இருந்தும் விலகினர். இயக்கம் இல்லாததால தானே இந்த ஆட்டம் ஆடுறீங்கள் என வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர். உச்சக்கட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கெதிரான புள்ளி சேர்ப்பிற்காக இராணுவத்தினரை ஆசிரியர்கள் போல் விளையாட களம் இறக்கினர் சிங்கள மாகாணங்கள். இருந்தும் வடமாகாணங்களை சேர்ந்த வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண ஆசிரியர்கள் இது தமிழ் சிங்கள பிரச்சினை என வெறிகொண்டு விளையாடியது அனைத்துப் போட்டிகளிலும் தெரிந்தது. இறுதியில் வடமாகாணம் பாரிய புள்ளி வித்தியாசத்துடன் வெற்றி பெற்றது பலருக்கு சங்கடத்தையும் உருவாக்கியிருந்தது. போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்களர் ஒருவரை மாத்தறையில் இருந்து தொலைபேசிமூலம் யாழில் விளையாடவைக்க சிங்களனால் முடியுது ஆனால் தமிழ் அரசியல்வாதிகளால் எதுவும் முடியாது என எல்லா தமிழர்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர். புலிகள் இருந்திருந்தால் இப்படி இவர்களால் செய்யமுடியுமா என்ன என குமுறிக் கொண்டிருந்தனர்.
அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுபோட்டியில் வழங்கப்ட்ட மடல் தனிச் சிங்களத்தில்

தவிர நேற்று தமிழீழ தாய் பார்வதி அம்மாவினுடைய இறுதிக்கிரிகைகளுக்கு புறப்பட தயாராக இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை மறித்த சிறிலங்கா அரசு பலரை துப்பாக்கி முனையில் மிரட்டியுமுள்ளது. ஆண்கள் பெண்கள் என பலரும்  இறுதிக் கிரியைக்கு செல்ல தயாராக இருந்த வேளை இந்த சிங்கள இனவாதப்போக்கும் சிறிலங்கா ராணுவத்தின் ஆயுத அச்சுறுத்தலும் புலிகளின் வருகை குறித்த தேவையை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக இளைஞர்கள் முதல் வெளி இளைஞர்கள் வரை "இயக்கம் வராட்டிசரிவராது" என்று பேசும் அளவிற்கு தமிழ் பிரதேசங்களில் சிங்கள மேலாதிக்கம் புற்று நோய் போல் வளர்ந்து கொண்டிருக்கிறது.

யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 கல்விகற்கும் மாணவன் ஒருவன் பல கெட்டபழக்கங்கள் கொண்டவனாயும் அடாவடித்தனம் மிக்கவனாகவும் இருப்பததோடு மற்றய மாணவர்களுக்கும் இடையூறு விழைவித்துக் கொண்டிருக்கிறானாம். வெளிநாட்டுப்ப பணம் அவனுக்கு வருவதால் எப்போதும் பெரும் பணத்தொகையை தன்னோட வைத்துன் கொண்டிருக்கும் அந்த சிறுவன் ஆசிரியர்களையே மிரட்டுகிறானாம். அதனால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு பாடசாலையை விட்டு நீக்கியது நிர்வாகம். அடுத்த நாள் காலை ஈ.பி.டி.பி முக்கியஸ்தருடன் பாடசாலை வந்த சிறுவன் எந்த மறுதலிப்புமின்றி பாடசாலையில் சேர்க்கப்ட்டுள்ளான்.
இயக்கம் இருந்திருந்தா இந்த மாதிரி காவாலிகளையெல்லாம் வடிவா திருத்தி போட்டு அனுப்புவாங்கள் இப்ப என்ன செய்யிறது என்று புலிகள் பற்றிய வெற்றிடத்தை மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த செய்தி சிறிலங்கா அரசின் சிங்கள மேலாதிக்கத்திற்கு தமிழ் மக்களால் வழங்கப்பட்டிருக்கும் ஒரு சமிஞ்சையே. புலிகளின் மீள் பிரவேசம் எந்தவழியிலும் வரலாம் என்று தமிழ் மக்கள் சிங்கள அரசிற்கு கூறியுள்ள செய்திதான் இந்த உச்சக் கட்ட பொறுமை.

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... "

தேசியத் தலைவர் வே.பிரபாகரன்


ஆதி
23-02-2011

Wednesday, February 16, 2011

தமிழ் பாடசாலைகளில் சிங்கள புலனாய்வாளர்கள்

இது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி மட்டுமன்றி ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழீழ போராட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பங்களிப்பபு காலாகாலமாக பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. விடுதலைப்போராட்டத்தில் போராளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளில் இருந்து களத்திற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் வரை மாணவர்களின் பங்களிப்பு இருந்ததது. சாத்வீக போராட்டங்கள் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு என எல்லா வகையான புரட்சிகர போராட்டங்களிலும் மாணவர்கள் நேரடியாக ஈடுபட்டுவந்தனர்.

விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிக்க போராளிகள் பாடசாலையிலிருந்தே உருவாகிவிடுகிறார்கள் என்ற உண்மையை அறிந்த சிங்கள அரசு தனது புலனாய்வாளர்களை சிங்களம் கற்பிக்கும் பிக்குகளாக வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கு அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடவேண்டும் என்று எழுந்த சர்ச்சையின் பின் நடந்த சில விடையங்களை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசினால் பணம் போட்டு வளர்க்கப்படும் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா சிங்களத்தில் தான் தேசிய கீதம் பாட வேண்டும் என அச்சுறுத்தி பணிய வைத்ததார். அதே போல் அரச அதிபர் இமட்டா சுகுமாரும் பாடசாலை மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து சிறிலங்கா ராணுவத்தின் மேற்பார்வையுடன் சிங்கள தேசிய கீதத்தை பழகத்திணித்தனர். இந்த சிங்கள தேசிய கீதத்திற்கு பான்ட் அடிப்பதற்கு யாழ் இந்து கல்லூரி மாணவர்களே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சிங்கள தேசிய கீதத்திற்கு இசை வழங்க அந்த மாணவர்கள் தமக்கு விருப்பம் இல்லை என்று பாடசாலை வரவுகளில் ஒழுங்கின்மையை காட்ட ஆசிரியர்களும் அதை பொருட்டாக எடுக்காமல் வீட்டுவிட்டனர். ஆனால் இமல்டா சுகுமாரின் அழுத்தத்தினால் மீண்டும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து பயிற்சிக்கு அனுப்பினார்கள்.

இந்த நடவடிக்கைக்கு பாடசாலை சமூகத்திடம் இருந்து வெறுப்புணர்வு வந்தும் சிங்கள பிக்கு இருப்பதனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டி உள்ளதாக பாடசாலை சமூகம் அங்கலாத்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஆசிரியருக்கு பயந்து தம்மை சிங்கள தேசிய கீதத்திற்கு இசையமைக்க அனுப்பிவிட்டார் என்று அதிபர் மேல் மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அதிபர் தலையிடமாட்டார் என்றால் சிங்கள பிக்குவை தாம் அடித்து விரட்டுவோம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாணவர்கள். அந்த பான்ட் குழுவில் இருந்த தரம் 11 மாணவன் சொல்கிறான் " ஏ.ல் அண்ணாக்கள் சிங்களாத்தில பாடப் போனதுக்கு எங்களுக்கு தான் பேசப்போறாங்கள். இந்த பிக்கு ஆமியாம். அதாலதான் ரீச்சர் மாரும் சிங்களத்தில பாட எங்கள பிள்ளைகள அனுப்ப வேண்டாம் என்டு அதிபருக்கு சொல்ல பயப்பிடினும்.... அதிபர் தலையிட மாட்டார் என்டா பிக்குவிக்கு நாங்களே சொட்ட போட்டு அனுப்பிருவம்" என்று .

ஆயுதப்போராட்டத்தையோ அல்லது சாத்வீக போராட்டங்களையோ நேரடியாக சந்திக்காத அடுத்த தலைமுறையிடம் விடுதலைப்போராட்ட வீச்சு மிக ஆழமாக செலுத்தப்பட்டுள்ளது. இயலாமை இருந்தாலும் அந்த சிறுவனின் அடி மனதின் கிடக்கை சிங்கள பிக்குவை அடித்தேனும் விரட்ட வேண்டும் என்பதாய் இருக்கிறது.

அது போக.... ஆண்கள் பெண்கள் என எல்லா பாடசாலைகளிலும் சிங்களம் கற்பிக்கவென பிக்குகள் நியமிக்கப்ட்டுள்ளனர். சிங்கள பாடசாலைகளில் தமிழ் கற்பிப்பதற்கு யாருக்கும் நியமனம் வழங்காத அரசாங்கம் தமிழ் பாடசாலைகளில் வலுக்கட்டாயமான மொழித்திணித்தலோடு சிங்கள பெளத்த கோட்பாடுகளையும் திணிக்கிறது. இதற்கு எதிப்பு தெரிவிப்பவர்கள் மற்றும் தமிழீழ விடுதலை கருத்தை கொண்டிருக்கும் பாடசாலை மட்டங்கள் என்பவற்றை அறிந்து கொள்வதற்காக பிக்கு வேடம் தரத்த சிறிலங்கா புலனாய்வாளர்கள் தமிழ் பிரதேச பாடசாலைகளில் ஊடுருவியுள்ளனர்.

ஆதி
2-17-2011

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP