Powered by Blogger.

Wednesday, December 31, 2014

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலும் தமிழர் தரப்பு அரசியலும் - இது மோசமான விமர்சனமாக கூட இருக்கலாம்

2015 இல் நடைபெற இருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் குறித்து வடக்கு கிழக்கு தமிழீழ மக்களுக்கு மூன்றுவிதமான கோரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன:

அ) தேர்தலை புறக்கணிக்க வேண்டும் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (தமிழக மே17 அமைப்பு உட்பட சில பிரமுகர்களும் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக அறிய முடிகிறது)

ஆ) தேர்தலில் இருவருக்கும் வாக்களித்து சிறிலங்கா வாக்குரிமையை செல்லுபடியற்றதாக மாற்ற வேண்டும் - சிவில் சமூகம்

இ) மைத்திரி தலமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு


இந்த மூன்று தரப்புகள் குறித்து பேசுவதற்கு முன்னர் இன்றைய காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழீழ மக்களிடையில் (மண்ணில் இருக்கும் மற்றும் புலம்பெயர்)  காணப்படும் அரசியல் தளங்கள் குறித்து நுணுக்கமாக பார்க்க வேண்டும்

1) 2009 ற்கு முன்னரே புலத்தில் செயற்பட்டுவந்த அமைப்புகள். - இந்த அபை்பில் இன்று தலமையில் இருப்பவர்கள் போரை சாக்காக வைத்து விடுதலைப்போராட்டத்தில் நேரடியாக பங்களிப்பு செய்யாமல் சுயபாதுகாப்பிற்காக நாட்டைவிட்டு தப்பி ஓடி குடும்பங்களுடன் இருப்பவர்கள். (தமிழக அமைப்புகளும் பெரும்பாலும் இந்த புலம்பெயர் அமைப்புகளுடன்தான் தொடர்பில் இருந்து வேலை செய்கின்றன)


2) 2009ற்கு பிறகு புலம்பெயர்ந்து சென்ற போராளிகள் மற்றும் மக்கள் - இவர்கள் மீது சந்தேகத்தை உருவாக்கி புலம்பெயர் அமைப்புகள் இவர்களை உள்வாங்குவதை தவிர்த்து வருகிறது


3) ஆண்டாண்டு கால போரை தங்களின் தோழ்களில் சுமந்தபடி இன்னமும் மண்ணில் இருக்கும் மக்கள் - இவர்கள் தங்களுக்கு யார் சரியென்று தெரிகிறார்களோ அவர்களையே தங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
..............................................................................................................................................
1) 2009 ற்கு முன்னரே புலத்தில் செயற்பட்டுவந்த அமைப்புகள்
இதில் முதலாவது தரப்பு அதாவது விடுதலைப்புலிகள் தமிழீழப் பரப்பில் நிர்வாகத்தில் இருந்த வேளையில் குடும்பத்தோடு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் குடியுரிமைபெற்று வாழும் இன்றைய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றுபவர்கள் தமிழீழ விடுதலைக்கு தமது உடல் ரீதியான எந்த பங்களிப்பும் செய்யப்போவதில்லை.

விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்து விலகிய பின்னர் புலம்பெயர் நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களை மதிக்காமல் வன்முறைகளை மேற்கொண்டு காட்டிக் கொடுப்புகளை செய்து அதிகாரப் போக்கில் சண்டைகள் போட்டு வெளிநாடுகள் மத்தியில் அமைப்புகள் குறித்த நல்ல பார்வையை இல்லாமல் செய்ததில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

எந்தவொரு கட்டுக்கோப்புமற்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பெயர்களை சொல்லி கோஸ்டி மோதல் பணப்பறிப்பு என அந்ததந்த நாடுகளில் காவல் துறைகளிடம் நல்ல பெயர் இல்லாமல் செய்தது மட்டுமல்லாது தமிழ் நாட்டு செயற்பாட்டாளர்களையும் தத்தமது விருப்பு வெறுப்புக்கேற்றவாறு பிரித்ததில் இந்த அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

இவர்களைப் பொறுத்தவரை சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கும் அரசியின் அறிவானது செய்திகளில் படிப்பது மட்டுமே. முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து இன்று 5 வருடம் கடந்துவிட்ட நிலையில் புலம்பெயர் தளத்தில் தமிழீழ விடுதலை நோக்கி ஒரு எப்பனும் நகர்த்தப்படவில்லை.

தமிழீழ விடுதலைக்காய் தமது நாடுகளில் அரச மட்டங்களில் அழுத்தங்களையோ அல்லது விளக்கங்களையோ கொடுக்கும் அளவிற்கு நுண்ணறிவற்ற செயற்பாடுகளே காணப்படுகின்றன. தமிழீழ விடுதலையில் முழுவீச்சான அக்கறை கொண்ட நபர்கள் புறந்தள்ளபட்டு வெறும் பதவி தக்கவைப்பாளர்களே இன்று அந்த அமைப்புகளில் இருப்பதாக தெரிகிறது.

மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளில் சம்மந்தமே இல்லாத பிற கலாச்சார இசை பிற கலாச்சார நிகழ்ச்சிகள் என தங்கள் வாழ்வு முறைமைக்கேற்றவாறு தமிழீழ நிகழ்வுகளை மாற்றியமைக்கப்பழகிவிட்டார்கள். இவர்கள் ஒருபோதும் தமிழீழ விடுதலைக்காய் தங்கள் பிள்ளைகளை போராட அனுப்பபோவதோ இல்லை தாங்களே இங்கு வந்து போராடப்போவதோ இல்லை.

ஜனாதிபதி தேர்தல் என்பது என்னவென்றே தெரியாதவர்கள் அதை புறக்கணிக்கும்படி கோருவது ஒன்றும் அதிர்ச்சிகரமான செய்தி இல்லை.


2) 2009ற்கு பிறகு புலம்பெயர்ந்து சென்ற போராளிகள் மற்றும் மக்கள் -

இவர்களை முதல்கூறிய அமைப்பினர் ஒதுக்கி வைத்துள்ளார்கள். 2009ற்கு பிறகு சென்றவர்கள் விடுதலைப்புலிகளின் தலமையின் நோக்கம் மற்றும் விடுதலையில் எப்போதும் உறுதியான நிலைப்பாடு காணப்படுவதாகவும். புலம்பெயர் அமைப்புகளின் உள் கூத்துகளை சகித்துக் கொள்ள கூடிய மனநிலையில் இல்லாதிருப்பதாலும் இவர்கள் மீது புலம்பெயர் அமைப்புகளுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. இவர்கள் பதவிக்கு வந்தால் தங்களின் பெயர் கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சமே தவிர தமிழீழ விடுதலைகுறித்த அக்கறை கிடையாது.

2009 ற்கு பிறகு புலம்பெயர்ந்த போராளிகள் மற்றும் மக்களிடம் சரியான சிந்தனை இருந்தாலும் அவர்களிடம் புலம்பெயர் தமிழர் அரசியல் செய்வதற்கு பணமும் பதவியும் இல்லை. எதிர்காலத்தில் ஆயுதப்போராட்டம் சாத்தியப்பட்டால் இவர்கள் இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கலாம்.

 3) ஆண்டாண்டு கால போரை தங்களின் தோழ்களில் சுமந்தபடி இன்னமும் மண்ணில் இருக்கும் மக்கள் 

இந்த மக்கள்தான் இந்த மண்ணுக்கான சொந்தக்காரர்கள். இந்த மக்கள்தான் இங்கு நடக்கும் எந்த அரசியலையும் தீர்மானிப்பவர்கள். இந்த மக்களுக்கு உருத்திரகுமாரோ, ரூட்ரவியோ, தனமோ, நெடியவனோ தலைவனாக இருக்க முடியாது. இந்த மண்ணில் நின்று இந்த மக்களுக்காக போராடத எவனையும் இந்த மக்கள் தமக்கான தலைவர்களாக நினைத்ததே கிடையாது.

எல்லா போராளி அமைப்பு தலைவர்களும் இந்தியாவில் நிற்கும் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இந்த மக்களோடு நின்று எதிரகளோடு போராடினார். அதனால்தான் அவர் தமிழீழ தேசியத்தலைவராக இன்றுவரை இருக்கிறார்.

இந்த மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சொல்ல தேவையில்லை. தேர்தல் புறக்கணிப்பால் தமிழீழ விடுதலைக்கான கோரிக்கையை ஒரு படி முன்னேற்ற முடியும் என்ற வேலைத்திட்டம் புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்தால் அதை முதலில் செய்ய வேண்டும்.


இந்த தேர்தலில் ஏன் மாற்றம் வேண்டும்

மைத்திரி தலமையிலான அரசியல் கூட்டணி மோசமான கூட்டணி என்பது அறிந்ததே.

கடந்த 10 வருடத்தில் ராஜபக்ச அரசால் அணுவணுவாக வாழ்வாதாரங்களை இழந்து இன்று சொந்த மண்ணில் கூட தொழில் கூட செய்ய முடியாத நிலையில் 90வீதத்திற்கும் அதிகமான தமிழீழ மக்கள் இருக்கிறார்கள்.

கடலில் சிங்களவர்கள் ஒருபுறம் சீனனர்கள் மறுபுறமாகவும். வளமிக்க நிலங்களை ராஜபக்ச ஆதரவு சக்திகள் பறிப்பதாக இன்னொரு புறமும் தொழில்துறைகளை தமிழர்கள் நடத்த முடியாத அளவிற்கு எல்லாப்புறமுமாக ராஜப்ச அரசு தமிழர்களை முடக்கி வைத்திருக்கிறது.

முன்னாள் போராளிகள் காயப்பட்ட ஊனமுற்ற போராளிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாவீரர் போராளி குழும்பங்கள் இன்னமும் அச்ச மனநிலையில் இருந்து விடுபடாமலும் ஏராளமானவர்கள் வறுமையிலும் இருக்கிறார்கள். "ரப் சாங்" போட்டு மாவீரர் தினத்தை நடாத்தும் புலம்பெயர் அமைப்புகள் இங்குள்ள மாவீரர் குடும்பங்களை கவனிப்பது கிடையாது.

இப்படி எந்தப்பக்கம் திரும்பினாலும் ராஜபக்ச அரசின் கரங்கள் போரில் உயிர் தப்பிய தமிழ் மக்களின் குரல்வளையை நெரித்தபடியே இருக்கிறது. இதலிருந்து தப்பி எப்போது மூச்சுவிடப்போகிறோம்?

மருத்துவப்பிரிவில் இருந்த போராளி இன்று பகுதிநேரமாக கழிவகற்றல் வேலை செய்கிறான். இவன் குறித்த மன அழுத்தத்தால் அந்த குடும்பம் இன்னமும் சந்தோசமாக சிரிக்க கூட முடியாமல் இருக்கிறது.

"எங்களை ஏன் இயக்கம் சாக விடேல்ல" என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் பழைய போராளிகள் நிறைய இருக்கிறார்கள். இவர்களுக்கு மூச்சு விடுவதற்காகவாவது ஒரு மாற்றம் தேவை.

 இன்று பெயர் போன புலம்பெயர் அமைப்புகளை நடத்துபவர்கள் இந்த மக்களுக்காக ஒரு நேரமும் தங்கள் உயிர்களை துறக்க தயாராக இல்லை. புலம்பெயர் அமைப்புகளை நடத்துபவர்கள் போராளிகள் கிடையாது. அவர்கள் தங்கள் குடும்பங்களோடு வெளிநாடுகளில் வாழ்பவர்கள். ஆனால் தமிழீழ விடுதலைக்கான அரசியலைக் கூட சரியான முறையில் நகர்த்த வக்கற்ற நிலையில் இருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்து விலகி 6 வருடமாகியும் புலம்பெயர் அமைப்புகளால் தங்களுக்குள் சண்டை போட்டதைத் தவிர ஒரு மயிரையும் பிடுங்க முடியவில்லை. இவர்கள் என்ன இழவிற்கு சிறிலங்கா அரசியல் குறித்து பேசுகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை.


விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் தமிழர்களின் உரிமையை ராஜபக்ச அரசும் தரவில்லை மைத்திரி தலமையிலான கூட்டணி அரசும் தரவில்லை எனவே தமிழர்கள் மீண்டும் போராடித்தான் தமிழீழத்தை பெயற வேண்டும் என்ற செய்தியை அடுத்த தலைமுறைக்கு சொல்வதற்காகவாவது சிறிலங்கா அரசு மாறியே ஆக வேண்டும். 

விடுதலைப்புலிகளிடனம் இனப்பிரச்சினைத் தீர்வு என்பது என்போதும் இரண்டு வகைப்படுத்தலில் இருந்தது
1. அன்றாட பிரச்சினை
2. அடிப்படைப் பிரச்சினை
1994 விடுதலைப்புலிகள் பத்திரிகை

தமிழீழ விடுதலைக்கு இந்த மண்ணில் உள்ள மக்களிடம் பொருளாதாரமும் மன எழுச்சியும் இருக்க வேண்டும். அதற்கு மாற்றம் அவசியம். 

ஆதி
31-12-2014




No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP