Powered by Blogger.

Thursday, March 28, 2013

எனக்கு சீமான் யார் என்று காட்டு# அடம்பிடித்த பாட்டி


தமிழ்நாடெங்கும் தமிழீழ விடுதலைத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 

தமிழீழ தனி அரசிற்கான பொது வாக்கெடுப்பை நடாத்தும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். நேர்த்தியாக ஒழுங்கமைக்கபட்டு உலக அரசியல் ராஜதந்திர தரத்தில் கோப்புகள் எழுதப்பட்டு தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்கிறது. 

கருணாநிதியின் அரசியல் நாடக வார்த்தைகள் போலல்லாமல் சிறந்த சட்டவாக்கல் மொழி மூலம் தீர்மானம் ஒழுங்கமைக்கபட்டிருப்பது ஜெயலலிதா அம்மையார் மீது நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

" இவ்வளவு நாளா ஜெயலலிதாவிற்கு பிழையான தகவல்களை வழங்கி தமிழீழ விடுதலை மீது வெறுப்பை ஏற்படுத்திய கள்ள வேலைகள் பார்த்தது கருணாநிதி போலத்தான் இருக்கு.. இப்பதான் ஜெயலலிதாவுக்கு உண்மைகள யாரோ சொல்லினம். ஆள் கெட்டிக்காரி லேசில இந்த பிரச்சினைய விடமாட்டா அதால நம்பிக்கை இருக்கு. கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றி இருந்தா தமிழ்ச் சனத்துக்கு ஏதோ பெரும் அழிவெண்டுதான் அர்த்தம்.. நல்லகாலம் தமிழ்நாட்டுச் சனம் அந்த தரித்திரத்த கலைச்சிட்டினம் " என்று தமிழீழ மக்களிடையில் பெரும் புத்ததுணர்ச்சி நிரம்பிய நிலையில் பேச்சுகள் பரவலாக அடிபடுகிறது. 

சரி இனி விடையத்துக்கு வருகிறேன். 

இன்று கடைக்கு வந்த பாட்டி ஒருவர் சீமானை பற்றி விசாரித்தார். அவருடைய பேரன்கள் பாடசாலையில் கற்பவர்கள். எப்பொழும் "சீமான் அப்பிடிக் கதைக்கிறார்.. சீமான் அங்க அப்பிடி கதைச்சிருக்கிறார்.. கருணாநிதி நாக்க புடுங்கிட்டு சாகலாம்" என்று சீமான் புராணம் பாடுறாங்கள். ஆரப்பன் அந்த சீமான் என்று கேட்டார். பாட்டியினுடைய பேரன்கள் இருவரும் போர் வலி காணதாவர்கள். வரிச் சீருடையணிந்த புலிகளை நேரில் காணதவர்கள். அந்த சிறுவர்கள் புலிகளை பற்றி தேடுகிறார்கள். நண்பர்களுடன் பேசுகிறார்கள். அதனால் தான் இத்தனை பேச்சுகள் வீடுகளில் அடிபடுகின்றன. 

பாட்டியை இருக்க சொல்லிவிட்டு "யூ டியுப்பில்" சீமானின் இரண்டு உரைகளை எடுத்து காட்டினேன். பாட்டி உணர்ச்சிவசப்பட்டிற்றா. மகன் இந்த பெடியன் "செல்வம் மாமா" ட்ட ரெயினிங் எடுத்துருக்கு. எல்லாராலையும் இப்பிடி கதைக்கேலாது. இண்டைக்கு தமிழகத்தில இவ்வளவு மாற்றம் நடந்திருக்கெண்டா இந்த மாதிரி கதைச்சதால தான் சாத்தியப்பட்டிருக்கும். என்று நிறைய கதைகள் சொன்னார்.  மே 17 இயக்க திருமுருகனுடைய ஒரு உரையையும் போராட்டம் ஒன்றின் போது பேசியவற்றையும் காட்டினேன். 

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம், முத்துக்குமார் அண்ணா, தங்கை செங்கொடியின் நடனம் என எல்லா வற்றையும் காட்டினேன். 

"செத்த சனம்.. பெடியளின்ட ஆவிதான் தமிழ்நாட்டு பிள்ளைகளுக்குள்ள புகுந்திருக்கு... தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ சிங்களவன் துலைஞ்சான்...  உந்த ஆணையிறவ பிடிக்கிற நேரத்தில இப்பிடி தமிழ்நாட்டில இருந்திருந்தா கட்டாயம் 2003க்குள்ள தம்பி தமிழீழத்த பிடிச்சிருப்பான்.  " என்று நிறைய சொன்னார். ஏனோ தெரியவில்லை உடம்பு புல்லரித்தது.

ஆணையிறவை பிடித்து யாழ்ப்பாண மீட்ப்பு போர் கைதடியையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் பொழுது இந்தியா தான் புலிகள் மீது அழுத்தம் பிரயோகித்து போரை நிறுத்தியது. இனியொரு தடவை இந்திய படைகளுடன் மோதல் வேணாம் என்ற நோக்கத்திற்காக தலைவர் போரை நிறுத்தி புலிகள் அணியை முகமாலைக்கு எடுத்திருந்தார் என்று அப்பொழுது பேசப்பட்டது. பாட்டி சொன்னவுடன் நினைத்துப் பார்த்தேன் உண்மைதான். இந்த எழுச்சி அன்று தமிழகத்தில் இருந்திருந்தால் அன்று இந்தியா சிங்கள ராணுவத்தை காப்பாற்ற தனது படையை அனுப்புவோம் என்ற எச்சரிக்கையை விடுத்திருக்க முடியாது. 


சரி செல்வம் மாமா யார் என்று சொல்லி விடுகிறேன். 

செல்வம் மாமா ஒரு பிரச்சார பீரங்கி. சம்பவங்களை தனது பேச்சாற்றலால் கண்முன் கொண்டுவரக்கூடிய அதி திறமைசாலி. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு பிரச்சாரங்களிற்கு "செல்வம் மாமா" போனால் அவர் பேசி முடிய நிறைப்பேர் தம்மை போராளிகளாக இணைப்பார்கள். 

யாழ்ப்பாணத்தில் "கிருசாந்தி" என்ற உயர்தர வகுப்பு மாணவி சிங்கள ராணுவத்தால் மிலேச்சத்தனமான பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டு படுகொலை செய்யப்ட்டார். தமிழீழ மக்களையே உலுக்கியெடத்த படு பயங்கரமான கற்பழிப்பு படுகொலை அது. அந்த சம்பவத்தை வன்னியில் இளைஞர் யுவதிகளுக்கு செல்வம் மாமா விளங்கப்படுத்த ஒரு வகுப்பில் இருந்த அத்தனை மாண மாணவியரும் போராட்டத்தில் இணைந்த சம்பவங்களும் இருக்கின்றது. 



எத்தனையோ வலிகளையும் கொடுமைகளையும் தாண்டி.. பேச முடியாத ஏராளமான கதைகளுடன் என்றோ ஒரு நாள் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையில் புலிகளின் வரவை மட்டுமே எதிர்பார்த்திருந்த சனங்களுக்கு தமிழக மாற்றம் பெரும் புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. எல்லா வீடுகளிலும் தமிழக மாணவர்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். 


ஆதி
28-3-13

Wednesday, March 6, 2013

அன்பான தமிழக உறவுகளே!!!

அன்பான தமிழக உறவுகளே!!!

2009 ற்கு பிறகு வரலாறு காணத அளவு தமிழகம் இன்று தமிழீழம் வேண்டி எழுச்சி கொண்டிருக்கிறது.

தமிழீழம் தான் இறுதி இலக்கு என்பதில் தமிழக மக்கள் கொண்டிருக்கும் உறுதியும் அதற்காக தமிழக மக்கள் கொடுத்திருக்கும் விலையும் செய்து கொண்டிருக்கும் உழைப்பும் இந்திய வல்லரசிற்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தமிழக மாற்றத்தையும் எழுச்சியையும் சிதைப்பதற்கு இந்திய மத்திய அரசு பாரிய வேலைத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறது. அதன் முதல் கட்டம் தான் "டெசோ" அமைப்பு தூசி தட்டப்பட்டது.

கருணாநிதி மதல்வராக இருக்கும் பொழுது 2009 இல் பல கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாது இந்திய ராணுவத்தை விடுதலைப்புலிகளுடனான நேரடி மோதலுக்கு நதமிழகம் ஊடாக சிங்கள தேசத்திற்கு அனுப்பி வைத்தவர் தான் கருணாநிதி. தவிர வன்னிக்கு கொண்டு செல்ல தமிழக மக்கள் கொடுத்த அத்தனை உணவுப் பொருட்களையும் தடுத்து பெரும் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி சிங்கள அரசிற்கு உதவி செய்தவர்.

கருணாநிதியின் உழைப்பிற்கு சிங்கள அரசு தேயிலைத் தோட்டங்களையும் பெற்றோலிய அகழ்வு நிறுவன ஒப்பந்தத்தையும் மற்றும் சில பெரும் வர்த்தக நடவடிக்கைகளையும் குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.

கருணாநிதி புலிகளை அழித்து தமிழர்களை அடிமைகளாக தன்னிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எப்படியெல்லாம் செயற்பட்டார்.. போர்க்காலத்தில் என்ன நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை விக்லீஸ் வெளிக் கொணர்ந்திருந்தது அனைவருக்கும் தெரியும்.

போர்க்காலத்தில், வைக்கோ அய்யா.. நெடுமாறன் அய்யா.. சீமான் உள்ளிட்ட பல தமிழீழ ஆதரவுச் சக்திகளை சிறையில் அடைத்து தமிழகத்தில் மக்கள் விழிப்படைந்து எழுச்சியுறும் நிலையை தடுத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அண்ணன் முத்துக்குமார் வைத்த தீயை தனது அதிகாரத்தால் அணைத்து மத்திய அரசின் இன அழிப்பு அத்தியாத்தில் முக்கிய இடம் பிடித்தவர் இந்த கருணாநிதி.

2009 இற்கு பிறகு தமிழீழ மக்கள் யாருமே கருணாநிதியிடம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தருமாறு கேட்கவேயில்லை. இந்த நிலையில் தமிழக மக்கள் கருணாநிதியை அரசியலில் இருப்பை இல்லாது செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இன்று என்றும் இல்லாதவாறு தமிழக இளைஞர்கள் தெளிவடைந்து எழுச்சியுற்று எதையும் எதிர்க்க கூடிய போராட்ட குணத்திற்கு மாறியிருக்கின்றனர். இதை சிதைத்து தமிழக மக்களை திசை திருப்புவதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் அங்கம் தான் "டெசோ" கூத்தடிப்புகள் என்பதை தமிழக மக்களுக்கு தெளிவடைய செய்யுங்கள்.


4 நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த தலைவர் என்று தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டிய கருணாநிதி பிரணாப் தவறான தகவல் தந்ததாக சொல்லியிருந்தார். இவர் போஸ்டர் அடித்து ஒட்டிய காலப்பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் லட்சக்கணக்கில் வீதியில் நின்று போராடிக் கொண்டிருந்தார்கள்.

தன்னைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள ஒரு குழுவோ அல்லது முகாமைத்துவமோ இல்லாத கருணாநிதிக்கு ஏன் முதலமைச்சர் பதவி?? நாளை தமிழக மக்களுக்கு எங்காவது ஒரு நாட்டில் பெரும் அழிப்பு நடந்தால்.. அப்படியொன்றும் நடக்கவில்லை என்று மத்திய அமைச்சர் சொன்னால் இந்த கருணாநிதி நம்புவாரா?? தமிழர்களை முட்டாள்களாகவும் வெறும் சினிமா ரசிகர்களாகவும் நினைத்து தொடர்ச்சியாக செய்யும் அயோக்கியத்தனத்தை தட்டிக் கேழுங்கள்.

தமது வியாபாரத்தையும்.. ராஜபக்ச குடும்பத்தையும் பார்க்க  தொடர்ச்சியாக கொழும்புவரை கருணாநிதியின் கும்பலை யாழ்ப்பாணம் வரை சிங்கள சிப்பாய்களினதோ சிங்கள பொலிசாரினதோ பாதுகாப்பில்லாமல் வரச்சொல்லுங்கள். நிட்சயமாக அடித்துக் கொல்வோம்!!

தமிழீழ பயணத்தில் ஒன்று திரண்ட பெரும் சக்தியாக தோள் கொடுக்கும் சக்தியாக ஒட்டு மொத்த இனத்தின் விடுதலைக்காக எழுச்சி கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களை சதிவலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த தமிழனத்தை முடமாக அடிமைகளாக மாற்றுவதற்கான பெரும் சதியில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.


போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு கருணாநிதி போட்ட பெரும் சதி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. அதாவது தமிழகத்தில் கருணா குழுவிற்கு அடைக்கலம் கொடுத்திருந்த கருணாநிதி ஜெயலலிதாவின் முக்கிய கட்சி உறுப்பினர்கள் சிலரை போட்டு தள்ளிவிட்டு அதை ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுவதனால் புலிகள் தான் செய்தனர் என்று கதையை மாற்றி தமிழகத்தில் புலிகள் மீதான ஆதரவை சிதைப்பது.
எது எப்படியோ இந்த கதை அம்பலமாகியது.


தமிழீழம் தேவையா இல்லையா என்பதை தமிழீழ மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணை சர்வதேச மனித உரிமை சரத்துக்களின் படி நடக்கட்டும். அதற்கான தண்டனையை சட்டம் செய்யட்டும். அது தமிழினத்தின் விடிவல்ல.

தமிழீழம் தான் இலக்கு. அதற்கு சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை எல்லா பக்கத்தாலும் வலியுறுத்துங்கள்.

டெசோ என்பது தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று தமிழக மக்கள் கொண்டிருக்கும் எழுச்சியை திசை திருப்புவதற்கான அல்லது தடை செய்வதற்கான மத்திய அரசின் செயற்திட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முடிந்தால் டெசோ தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பு அய்.நா முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கட்டும் பார்க்கலாம்.
கருணாநிதி தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை அய்.நா முன்னின்று நடாத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கட்டும் பார்க்கலாம்.

அன்பான தமிழக உறவுகளே!!

நாற்பதுனாயிரத்திற்கும் மேலான மாவீரர்களையும் லட்சக்கணக்கில் மக்களையும் இழந்து ரத்த சகதியில் எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அங்கங்களை இழந்து ஆயிரமாயிரம் போராளிகளும் மக்களும் இன்று வலிகளோடும் தமிழீழ கனவை சும்ந்து கொண்டிருக்கின்றனர்.

வாழ்வாதரங்களை இழந்தும் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பயம் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழீழம் முற்று முழுதாக அரச பயங்கரவாதத்திற்குள் சிக்குண்டு அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தமிழக மாற்றமும் எழுச்சியும் மிக முக்கியமான ஒன்று. சதிகளில் சிக்கிவிடாது போராடுங்கள்.
இதை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.


மே17 இயக்கம், நாம்தமிழர் கட்சி தொடர்பாக தமிழீழ மக்கள் ஆவலாக செய்தி படிக்கிறார்கள். வைகோ அய்யாவில் நீண்டகால மரியாதையும் உரிமையும் தொடர்ந்தும் இருக்கிறது.


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று உலகமெங்கும் ஒலிக்கட்டும்.


ஆதி
6-3-13

Sunday, March 3, 2013

நாம் தோற்றுக் கொண்டு இருக்கிறோமா!!!

முள்ளிவாய்க்கால் வரை நடந்த இன அழிப்பு ஆதாரத்தை மட்டும் எடுத்து அது குறித்து மட்டுமே பேசி நான்கு வருடங்களை வீணடித்துக் கொண்டும் சர்வதேசத்திற்கு 2009 ற்கு பிறகு தமிழர் தாயகத்தில் நடக்கும் இன அழிப்பு வடிவம் தெரியவில்லையா!!! ஆதாரங்கள் இல்லையா!!!

2009 ற்கு பிறகு நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பு பற்றி இது வரை ஏன் அய்.நா மன்றத்தில் பேசப்படவில்லை!!! அமெரிக்கா ஏன் கண்டு கொள்ளவில்லை!!!

தமிழரை மீண்டும் ஒரு பொறிக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழீழ தேசத்தை அணு அணுவாக தடயமற்று அழிப்பதற்கான கால அவகாசத்தை சிங்கள தேசத்திற்கு சர்வதேசம் திட்டமிட்டு வழங்கிக் கொண்டிருக்கிறதா!!

# தமிழினத்தின் மீதான இன அழிப்பு முள்ளிவாய்காலுடன் முடிவடைந்து போலும்.. அதற்கு தீர்வு கண்டால் எல்லாம் சரி என்பது போலும் ஏன் சோடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!!!

உலகத் தமிழினமே!!!! எமது விடுதலைப்போராட்ட சிந்தனைகள் குறுகிவிட்டதா!!! 2009 ற்கு பிறகும் மோசமான இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழீழம் தான் எமது இலக்கு என்றும் வீதிக்கு இறங்கி கத்து...
 
3-3-2013

தமிழீழத்தின் 2009 இல் இருந்து 2013 வரை # அழிப்புகளும் மாற்றங்களும்

உலக நாடுகள் இன அழிப்பை முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி நான்கு வருடங்கள் கடக்கவுள்ள நிலையில் தமிழீழ நிலப்பரப்பின் புவியியல் மற்றும் மக்கள் நிலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அழிப்புகளையும் மாற்றங்களையும் இந்தப்பதிவில் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதற்கு முதல் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதற்கு சமாதான காலத்தில் நோர்வே உள்ளிட்ட வெளிநாடுகள் போட்ட சதி பற்றி சற்று புரிந்து கொண்டு நகரவோம்.

விடுதலைப்புலிகள் தமது அமைப்பிற்கு ஆட்களை இணைக்கும் பொழுது மிகக்கவனமாக கையாளும் பொறிமுறையை ஆரம்பத்தில் இருந்தே வைத்திருந்தார்கள். யார் வேணும் என்றாலும் அமைப்பில் இணைய முடியாதவாறு இறுக்கமாக இருந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவுவது சிம்மசொப்பனமாக இருந்தது.

இதை நாடிபிடித்த உளவு நிறுவனங்கள் சமாதான காலத்தில் திட்டம் தீட்டின. தீர்வு எட்டப்படாமல் சமாதான ஒப்பந்தம் குழப்புப்பட வேண்டும் அதே நேரத்தில் போர் தொடங்க முன் புலிகளுக்குள் ஊடுருவ வேண்டும்.

சமாதான காலத்தில் வெளிநாட்டு அரச நிர்வாக அலுவல்கள் பற்றி விடுதலைப்புலிகள் அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தான் வெளிநாடுகளில் இருக்கும் "கட்டாய இராணுவ பயிற்சி" பற்றிய தகவல்களும் புலிகளுக்கு அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது.
கட்டாய ஆட்சேர்ப்பு இராணுவ நடைமுறையிலோ அரச நடைமுறையிலோ ஒரு குற்றமல்ல என்று அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை உறவு முறைகளில் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது ஏதாவது வன்முறை பாவிக்கப்படின் உணர்ச்சிவசப்பட்டு தமது எதிர்பபையும் வெறுப்பையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்துபவர்கள். அதனால் கட்டாய ஆட்சேர்ப்பு புலிகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் என்ற உளவியலை பெரிதும் நம்பியது வெளிநாட்டு நிறுவனங்கள்.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அண்ணையின் இழப்பிற்கு பின்னர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணையினூடாகவே விடுதலைப்புலிகள் வெளிநாட்டு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் உறவு நிலை பற்றி கவனம் செலுத்தி வந்தார்கள். இந்த நிலையில் தமிழ்ச் செல்வன் அண்ணையை கொலை செய்யும் படி ஆலாசனை வழங்கியதும் இந்த நோர்வே கூட்டம் தான் என்று தெரிகிறது.

உச்சக்கட்ட போர் தொடங்கப்பட முதல் தமிழ்ச்செல்வன் அண்ணை கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி விடையத்திற்கு வருகிறேன்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் முள்வேலி இன அழிப்பு முகாம்கள் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆதாரங்களுடன் பல மட்டங்களில் எழுதியாகிவிட்டது. தவிர சனல் 4 ஊடகம் இனப்படுகொலையை அக்குவேறாணிவேராக பிரி்த்து அம்பலப்படுத்திவிட்டது.

ஆனால் இன்று முகாம்களில் இருந்து காடுகளுக்கும் சில வீடுகளுக்கும் துரத்தப்பட்டிருக்கும் மக்கள், மக்களின் நிலங்கள், வாழ்வாதாரங்கள், இனத்தின் இருப்புகள் என்ன நிலையில் இருக்கின்றன.. எப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன பற்றி தமிழ் ஊடகங்களே தொடர்ச்சியாக பதிவு செய்ய மறுக்கின்றன.

ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இன்னமும் பிரிக்கப்ட்ட நிலையில் தான் இருக்கிறது. விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக சிங்கள தேசம் அறிவித்து நான்கு வருடம் ஆகியும் இன்னமும் புளியங்குளம் சோதனைச்சாவடி அதே இடத்தில் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

சிங்கள மயமாக்கல் உத்தி

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த புளியங்குளம், கனகராயன் குளம், மாங்குளம், முறுகண்டி, கிளிநொச்சி, பரந்தன், ஆணையிறவு, பளை,இயக்கச்சி, முகமாலை  வரையிலான ஏ9 பாதை அணு அணுவாக சிங்கள தேசமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.தவிர முகமாலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான ஏ9 பாதை ஏற்கனவே இராணுவ முகாம்களால் சிங்கள மயமாக்கப்பட்டிருக்கிறது.

புளியங்குளம் தொடக்கம் முகமாலை வரை ஏ9 பாதையை அண்டி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டு புத்தர் குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அரச காணிகள் ராணுவ முகாம்களாகவும் நிலத்தை பார்க்க வரமுடியாமல் இருக்கும் தனியார் காணிகள் புத்தர் விகாரைகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் குடியேற்றப்பட்ட கையுடன் இராணுவ குடும்பங்கள் குடியேற்றப்பட்டுகின்றன.

விரைவாக கட்டி முடிக்க கூடிய கட்டட தொழினுட்பத்திலான (டியுறா போட் வீடுகள்) வீடுகள் அவசர அவசரமாக கட்டப்பட்டு சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன. சிறிது காலத்தின் பின் அத்திவாரம் போட்டு நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன.


ஏன் ஏ9 பாதை சிங்கள மயமாக்கலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது

சந்திரிகா ஆட்சியில் அனுரத்த ரத்வத்தை தலமையிலான ராணுவம் "ஜெயசிக்குறு" ஆக்கிரமிப்பு போரை தொடங்கியிருந்தது. அதன் பிரதான நோக்கம் ஏ9 பாதையை கைப்பற்றுவது. காரணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை கூறுபோடுவது, விநியோக பாதையை பிளவுபடுத்துவது, ஆட்பலத்தை பிளவுபடுத்துவது, திசை திருப்பல் தாக்குதல்களை மேற்கொள்ளுவதன் மூலம் மக்களை குழப்புவது.

புலிகளின் முறியடிப்பு சமரில் தோற்றுப்போன அந்த திட்டத்தை இப்பொழுது கோத்தபாய தலமையிலான சிங்கள ராணுவம் விரைவாக நிறைவேற்றி வருகிறது.

ஏ9 பாதை முற்று முழுதாக சிங்களமயமாக்கப்படும் பட்சத்தில் வடக்கு மாகாண மக்கள் இரு பகுதியினராக பிரிக்கப்படுவார்கள். பெருமளவிலான கடற்கரைகள் இராணுவ முகாம்களாலும் சிங்கள மீனவ குடும்பங்களாலும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் ஏ9 பாதை நேர்த்தியான சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுவருகிறது.

இன்னமும் சிறிது காலத்தில் ஏ9 ற்கு கிழக்கே உள்ள மக்களை சுற்றி சிங்கள இராணுவமும் சிங்கள மக்களும் இருப்பார்கள் அதே போல் மேற்கிலும் இருப்பார்கள்.

இன்று ஏ9 கிழக்கில் இருந்து மேற்கிற்கு யார் செல்வதென்றாலும் ஒரு ராணுவ முகாமையாவது தாண்டித்தான் சென்றாக வேண்டிய நிலையிருக்கிறது.


தமிழர் காலாச்சார விழுமிய அழிப்புகள்

ஏ9 வீதியை அண்டி பெரிய அளவிலான கோயில்கள் குறைவு,தேவாலையங்கள் குறைவு . ஏ9 பாதையில் இருக்கும் கோயில்களின், தேவாலையங்களின் எண்ணிக்கையை விட புத்த விகாரைகளின் எண்ணிக்கையே அதிகம். ஏ9 வீதிக்கருகில் மக்கள் இருக்கும் வீடுகளைவிட இராணுவத்தின் முகாம்களும் இராணுவம் தங்கும் விடுதிகளும் தான் அதிகம்.

கட்டட அமைப்புகள், பெயர்பலகைகள், வர்ணப்பூச்சுகளின் நிறங்கள் எல்லாமே வேகமாக சிங்கள மயமாக்கபட்டுக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டப்படும் கட்டங்களில் சிங்கள கலாச்சார சாயல் கட்டாயமாக உருவாக்கப்படுகிறது.

அசோக சக்கரத்தையும் பெளத்த கொடியையும் கொண்ட துணிகளில் சிறிலங்கா தேசிய கொடி பொறிக்கப்பட்டு தமிழர் தேசமெங்கும் பறக்கவிடப்படுகிறது. பொதுமக்கள் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் வங்கிகள் கடைகள் என எல்லா இடங்களிலும் இது பறக்கவிடப்பட்டிருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் பேரூந்துகளில் சிங்களவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.. கட்டாயமாக சிங்கள பாடல்கள் ஒலிக்கவிடப்படுகிறது.


திட்டமிடப்பட்ட உளவியல் போர்

புலம்பெயர் தமிழர்கள் மட்டத்தில் இன்னமும் புரியப்படாத இந்தப் போர் தமிழீழ தாகயக்கில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது மற்றும் விடுதலை தொடர்பில் பகிரங்கமாக வெளிப்பட்ட இன ஒடுக்குமுறையை வெளிநாட்டு அமைப்புகள் திறம்பட கையாளத் தவறியிருக்கின்றன. அது பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.

யாழ் நகர் உள்ளிட்ட மாணவர்கள் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமான மலையாள திரைப்படங்களில் குறுந்தகடுகள் தாராளமாக கிடைக்கின்றன. வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகின்றன.

போராட்டம் பற்றியும் படிப்பை பற்றியும் பேசித்திரிந்த மாணவர்களிடையில் இன்று சினிமா பற்றி கதைக்கும் கலாச்சாரம் திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டிருக்கிறது.

இந்திய சாமிகளின் பெயரில் மக்களை வரவழைத்து சமூகம் பற்றிய அக்கறையை இல்லாது செய்து சுயநல போதனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தவிர அச்சமூட்டும் நடவடிக்கைகள், பழிவாங்கல்கள், பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் மிரட்டல்கள் என தமிழினம் தன்னை பலவற்றிற்கு தன்னை பாதுகாக்க வேண்டும் என்ற வெறுப்பு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.



தமிழீழ அடிப்படைப் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எப்படி தமிழனம் அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த முன் வடக்கு மாகாணத்தில் என்ன மாற்றத்தை செய்ய சிங்கள தேசம் அவசரமாக வேலை செய்கிறது என்பது பற்றியும் தொடரும் பதிவில் தருகிறேன்.


தொடரும்..


ஆதி
21-02-2013

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP