Powered by Blogger.

Tuesday, January 11, 2011

"செங்கடல்" தமிழர்களின் ரத்தத்தையும் உணர்வுகளையும் வைத்து நடாத்தப்படவிருக்கும் அடுத்த வியாபாரம்.

புலி எதிர்ப்பு ஆதரவாளர்களால் இயக்கப்ட்ட "செங்கடல்" திரைப்படம்,சிறிலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருப்பதால் தணிக்கை குழுவின் தடைவிதிக்கப்ட்டடுள்ளது என்ற பிரச்சாரம் விளம்பர நோக்கமுடையது. சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனம் செய்யமுடியாது என மைக்கைப் பிடுங்கியவர் சிறிலங்கா அரசுக்கு எதிரான கருத்தோடு படம் செய்துள்ளார் என்ற பிரச்சாரம் ஈழத்தமிழரிடத்தில் எடுபடாது. எப்படி தான் படம் இருந்தாலும் விடுதலைப்புலிகள் மீதான அவர்களின் காழ்ப்புணர்வு அந்தப்படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..


"செங்கடல்" திரப்படம் பற்றிய பேச்சிற்கு சில தமிழ் இணைய தளங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. யார் செய்தி எழுதிப்போட்டாலும் அதன் பின்னணி பற்றி அறியாமல் அப்படி செய்தியை பிரசுரிக்கும் சில பொறுப்பற்ற இணையங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய "றோ" அமைப்புடன் உறவு பேணிவரும் சில ஈழசெய்தி இணையங்கள் இந்த தவறை மீள மீள செய்து வருகின்றன.


இந்த திரைப்படத்தை பொறுத்தவரை இதை இயக்கிய லீனா மேகலை மற்றும் அவருடன் பணியாற்றிய ஷோபா சக்தி என்ற இருவரும் தமிழ்மக்களுக்கு தமிழீழம் தேவையில்லை என்ற கருத்தை எழுத்துகளினூடாக விதைத்து வருபவர்கள்.தமிழீழ போராட்ட தார்ப்பரியத்தை பக்கச்சார்பாக விமர்சித்து வருபவர்கள்.  தமிழீழ மக்கள் கொத்துக்கொத்தாய் பிணங்களாக சிறிலங்கா அரசால் கொன்றுகுவிக்கப்ட்ட பின் புலிகளுக்குபின் புலிகளுக்கு முன் என்று அர்தமற்ற அரசியல் எழுதி வியாபாரம் பெருக்கிறவர்கள். உச்சக்கட்ட போர் நடந்து  கொண்டிருந்த வேளையில் போரை நிறுத்தக்கோரி நடாத்தப்பட்ட மாபெரும் பேரணி ஒன்றில் சிறிலங்கா அரசையோ இந்திய அரசையோ கண்டிக்கும் வகையில் பேசக்கூடாது என்று ஒலிவாங்கியை பிடுங்கி எடுத்தவர்தான் லீனாமேகலை.


விடுதலைப்புலிகளை எழுத்து நாகரிகமற்று, நடுநிலையற்று விமர்சிக்கும் இவர்கள் ஒருபோதுமே ஈழத்தமிழ் மக்களின் சுயாட்சி நிலைகுறித்து பேசியது கிடையாது. சிங்கள அரசோடு இரண்டாம் தரப்பு மக்களாக வாழ்வதே சாலச்சிறந்தது என்று எழுதி எழுதி தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் சிறிலங்கா அரசை விமர்சிக்கும் திரைப்படத்தை எடுத்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படியே பேசியிருந்தாலும் திரைப்படத்தின் மூலம் தமிழீழத்திற்கான போராட்டத்தால் தான் இவை நடந்தது என்று கூறி மக்கள் விடுதலைப்போராட்டத்தின் மீது பழி போடப்படுவதாயே இருக்கும் என்பது அவர்களின் கடந்த கால படைப்புகளில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.


தமிழீழ மக்களின் விடுதலை குறித்து எந்த அக்கறையுமற்று வெறுமனே வியாபார நோக்கத்திற்காக இலக்கியம் செய்யும் இவர்கள் தமது வருவாய்க்காய், விளம்பரத்திற்காய் தமிழீழ மக்களின் வேதனைகளை தமது படைப்புகளின் இணைத்துக்கொள்வது அருவருக்கத்தக்கது. ஈழத்தமிழ் மகள் தமிழ் நாட்டு பொலிஸ்காரனால் கற்பழிக்கப்டதற்கு கூட எந்தவொரு கண்டன நிலைகளையும் தமது தளங்களில் பேசாத இந்த பெண்ணிய வாதிகளின் பின்புலமும் வெறுக்கத்தக்கதாக கூட இருக்கலாம். பரவாயில்லை அதை விடுவோம்.


இந்த திரைப்படம் தணிக்கை குழுவிற்கு சென்று சில தடைகளை சந்தித்த போது "பெண்ணால் இயக்கப்ட்ட படம்... இதற்கு தடைவிதிக்கப்படுவதானது ஆணாதிக்க போக்கு" என அர்த்தமற்ற வகையில் ஆதரவு தேட நினைத்த போது அது மிகுந்த பலனளிக்கவில்லை. அதனால் தான் இந்த தமிழீழ போராட்ட எதிர்பாளர்கள் இந்த திரைப்படம் "சிறிலங்கா அரசிற்கு எதிரான கருத்துகளை" கொண்டிருப்பதாக பொய்பிரச்சாரம் செய்து படத்திற்கான இலவச விளம்பரம் செய்கிறார்கள்.


ஒரு இனத்தின் விடுதலை உணர்வுகளை பேசுவதாக கூறி செய்யப்படும் வியாபாரம் அவர்களது உச்சக்கட்ட ஈனத்தனத்தையே காட்டும். 
இறுதியாக ஒன்றை மட்டுமே சொல்லிக் கொள்ள முடியும்... "செங்கடல்" திரைப்படத்தை இயக்கும் குழு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிரானது. இதற்கு சான்று அவர்களின் கடந்த கால வியாபார இலக்கியங்கள். இவர்கள் சிறிலங்கா அரசை திரைப்படத்தில் விமர்சித்திருந்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப்புலிகளையும் விமர்சித்து அது தேவையில்லை என்ற வகையிலும் பேசியிருப்பார்கள். அதனால் இது குறித்த பார்வை வாசகர்களை சார்ந்தது.


ஆதி
12-01-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP